TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வெள்ளைக்கொடி விவகாரம்! நடந்தது என்ன? தொடக்கம் முதல் கடைசி வரை ஒரு நேரடி ரிப்போர்ட்

2 posters

Go down

வெள்ளைக்கொடி விவகாரம்! நடந்தது என்ன? தொடக்கம் முதல் கடைசி வரை ஒரு நேரடி ரிப்போர்ட் Empty வெள்ளைக்கொடி விவகாரம்! நடந்தது என்ன? தொடக்கம் முதல் கடைசி வரை ஒரு நேரடி ரிப்போர்ட்

Post by sakthy Sun May 18, 2014 10:14 pm

வெள்ளைக்கொடி விவகாரம்! நடந்தது என்ன? தொடக்கம் முதல் கடைசி வரை ஒரு நேரடி ரிப்போர்ட்
வெள்ளைக்கொடி விவகாரம்! நடந்தது என்ன? தொடக்கம் முதல் கடைசி வரை ஒரு நேரடி ரிப்போர்ட் Naa10

இறுதிக்கட்ட போரின்போது வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடக்கம் முதல் கடைசி வரை நடந்த விடயங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இராணுவத்தினருடனான இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவர் நடேசன் உள்ளிட்டோர் வெள்ளைக் கொடியுடன் இராணுவத்தினரிடம் சரணடைநதிருந்தனர். நடேசன், அவரது மனைவி வினீதா, சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் உள்ளிட்ட சுமார் 3 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் வெள்ளைக் கொடி ஏந்தி இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர்.

இவர்களின் உயிருக்கு உத்தரவாதமளித்து, அவர்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச ஊடகவியலாளர்கள் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அமைச்சர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் ஊடாக சரணடையும் விடுதலைப் புலி உறுப்பினர்களின் உயிருக்கு உத்தரவாதத்தைப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்போது ஆரம்பத்தில் சரணடையும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட மாட்டார்கள் என்பதில் இராஜதந்திரி பாலித கொஹொன, அமைச்சர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்திருந்தனர். அதற்கான முயற்சிகளும் ஓரளவுக்கு நேர்மையாக மேற்கொள்ளப்படடன.

இதன் ஆரம்பம் தொடக்கம் கடைசி வரை அனைத்தையும் அறிந்துள்ள அரச தரப்பின் ஒரு முக்கிய அதிகாரி ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் நடந்த சம்பவங்களை மனம் திறந்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

இவர்களின் சரணடைவு தொடர்பான விடயங்கள் 2009ம் ஆண்டின் மே மாதம் 16ம் தேதி பின்னிரவில் இருந்து ஆரம்பிக்கின்றது. அதுவரை இந்தியத் தேர்தல் முடிவுகளின் ஊடாக ஏற்படும் அதிகார மாற்றத்தின் மூலம் விடுதலைப் புலிகளை பாதுகாப்பதாக தமிழக அரசியல்வாதிகள் சிலர் உறுதியளித்திருந்தனர்.

வெள்ளைக்கொடி விவகாரம்! நடந்தது என்ன? தொடக்கம் முதல் கடைசி வரை ஒரு நேரடி ரிப்போர்ட் Nadesa11
எனினும் தாங்கள் எதிர்பார்தத மாற்றம் வராதபோது தொலைபேசிகளை அணைத்துவிட்டு தங்கள் உத்தரவாதத்தைக் காற்றில் பறக்கவிட்டனர். அதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட வேறோர் முயற்சியையும் அவர்கள் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

அதன் காரணமாக விடுதலைப் புலிகளைப் பொறுத்தமட்டில் மீண்டுமொருமுறை இன்னொரு தரப்பை நாடுவதற்கான வழிகள் அடைக்கப்பட்டிருந்தது. ஒருசில அரசியல் தலைவர்களை நம்பியிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பு நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றது.

இந்தநிலையில் தான் விடுதலைப் புலிகள் அமைப்பு சர்வதேச ஊடகவியலாளரான மாரி கொல்வினின் தலையீட்டை இந்த விடயத்தில் பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கின்றது. 2009ம் ஆண்டின் மே மாதம் 16ம் பின்னிரவு வேளையில் அவரின் தொலைபேசிக்கு அழைப்பு எடுக்கப்படுகின்றது. இதனையடுத்து சில முயற்சிகள் துரித கதியில் முன்னெடுக்கப்படுகின்றன.

கொழும்பு மற்றும் ஐரோப்பாவில் உள்ள சிலரின் தொலைபேசிகள் ஓயாது அலறத் தொடங்குகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் முக்கிய பொறுப்பில் இருந்த விஜய் நம்பியார், இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பாலித கொஹொண ஆகியோருடன், தமிழ்த் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரொஹான் சந்திரநேருவும் இந்த முயற்சிக்குள் உள்வாங்கப்படுகின்றனர்.

இந்தத் தகவல்கள் அப்போது ஜோர்தானில் நடைபெற்ற ஜீ - 11 நாடுகளின் உச்சி மாநாடொன்றில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதிக்கு உடனடியாகத் தெரியப்படுத்தப்படுகின்றது. இதனையடுத்து அவர் அவசரமாக நாடு திரும்ப முடிவெடுக்கின்றார்.
வெள்ளைக்கொடி விவகாரம்! நடந்தது என்ன? தொடக்கம் முதல் கடைசி வரை ஒரு நேரடி ரிப்போர்ட் Puleth10

இதற்குள்ளாக அவரது பணிப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த அதிகாரியொருவர் சரணடையும் விடுதலைப் புலிகள் தரப்பின் தகவல்களை உடனுக்குடன் தெரியப்படுத்துவற்கான மொழிபெயர்ப்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்படுகின்றார்.

மே 17 அதிகாலை ஆறுமணியளவில் அவரும் அவருடைய பிரதான பாதுகாப்பு அதிகாரியும் இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து வவுனியா நோக்கி விமானமேறுகின்றனர். வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பாலித கொஹொன மற்றும் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் அவரது தொடர்பில் இருக்கின்றனர். அவர்கள் அந்த அதிகாரிக்கு பல கட்டளைகளைப் பிறப்பிக்கின்றனர்.

மறுபுறத்தில் மேரி கொல்வினின் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சர்வதேச இராஜதந்திரிகள் சிலருக்கும் தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

இதற்கிடையே அரச தரப்பு அதிகாரி வவுனியா சென்றடைந்து அங்கிருந்து முள்ளிவாய்க்கால் அழைத்து செல்லப்படுகின்றார். அந்த தகவல் உடனடியாக பாதுகாப்புச் செயலாளருக்கும், பாலித கொஹொனவுக்கும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து விடுதலைப் புலிகள் தரப்பு சரணடைவதற்கான வழிகாட்டுதல்களை பாலித கொஹொன வழங்க ஆரம்பிக்கின்றார்.

நேரம் காலை 08.45 அளவில் – பாலித கொஹொனவிடமிருந்து மாரி கொல்வினுக்கு குறுந்தகவல் ' அவர்களை மெதுவாக நடந்து செல்லுமாறு ஆலோசனை கூறுங்கள். தரப்பட்டுள்ள ஆலோசனைகளை கவனமாக பின்பற்றவும். தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்புப் படையினர் அச்சத்துடன் உள்ளனர்' என்பதாக அனுப்பப்படுகின்றது.

இதுதான் அரச தரப்பினரிடம் இருந்து அனுப்பப்பட்ட முதலாவது தகவல். அதனைத் தொடர்ந்து இடைப்பட்ட நேரத்தில் விடுதலைப் புலிகள் தரப்பு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு, ஊடகவியலாளர் மாரி கொல்வின் ஆகியோருக்கிடையிலான தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது.

இதற்கிடையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவசர கதியில் ஜோர்தானிலிருந்து நாடு திரும்பினார். விடுதலைப் புலிகளின் சரணடைதல் தொடர்பான விபரங்கள் அவருக்கு விளக்கமாக தெரியப்படுத்தப்படுகின்றது. அவரும் தன் பங்குக்கு சில ஆலோசனைகள் வழங்குகின்றார்.

இதனையடுத்து அன்று மாலை விடுதலைப் புலிகளின் தரப்பில் இருந்து தாங்கள் சரணடைய தயாராகி விட்டதாக இராணுவத் தரப்பிற்கு உத்தியோகபூர்வ தகவல் அனுப்பப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு இது தொடர்பாக பசில் ராஜபக்சவுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்துகின்றார். இது தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசி விட்டதாகவும், சரணடைகின்றவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் பசிலிடமிருந்து சந்திரநேருவுக்கு தொலைபேசித் தகவல் கிடைக்கின்றது.

இடைப்பட்ட நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு பல மேற்கத்தேய நாடுகளின் இராஜதந்திரிகளைத் தொடர்பு கொள்கின்றார். அவர்களுக்கும் தகவல் எத்தி வைக்கப்படுகின்றது. இத்தகவல்கள் சந்திரநேருவிடமிருந்து நடேசனுக்குத் தெரியப்படுத்தப்படுகின்றது.

இதற்கிடையே அரச தரப்பில் தேவையான உதவிகளை வழங்க மொழிபெயர்ப்பாளர் ஒருவர் அனுப்பப்பட்டுள்ள விபரம் ஐரோப்பிய தரப்பின் ஊடாக விடுதலைப் புலிகளுக்கும், மறுபுறத்தில் சந்திரநேருவுக்கும் தெரியப்படுத்தப்படுகின்றது. அச்சமின்றி அவர்கள் சரணடையலாம் என்ற நம்பிக்கை ஏற்படுத்தப்படுகின்றது.

அதன் பின் வந்த இரவு (மே 17ந் தேதி இரவு)  பலர் தூக்கத்தைத் தொலைத்த இரவாக மாறிப்போனது. பல பக்கங்களில் இருந்தும் தகவல் பரிமாற்றங்களும், கட்டளைகளும் பறக்கின்றன. சரணடையும் விடுதலைப் புலிகளை ஏற்றி வருவதற்கான பஸ்களும் தயார் நிலையில் வைக்கப்படுகின்றன. எனினும் விடுதலைப்புலிகள் சரணடையும் போர்வையில் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற அச்சத்தில் கமாண்டோ படைப்பிரிவின் அல்பா பிரிவினர் முள்ளிவாய்க்கால் முன்னரங்குக்கு நகர்த்தப்படுகின்றனர். ஆளில்லா உளவு விமானங்களும் அப்பகுதிக்கு நகர்த்தப்படுகின்றது.

இப்படியாக அன்றைய தினம் கழிந்து போன நிலையில் மே மாதம் 18ந் தேதி பொழுது விடிகின்றது. காயம்பட்டவர்களின் அவலக்குரலும், வழியும் இரத்தமும் முள்ளிவாய்க்கால் பகுதியை இரத்தக்காட்டேறியின் காலடிக்குள் நசுங்குண்ட தவளை போல மாற்றி விட்டிருந்தன. இடையே அரச தரப்பு அதிகாரி முள்ளிவாய்க்கால் யுத்தகளத்தின் பின்னரங்குக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார். இந்நிலையிலும் இராணுவத்தினரின் ஷெல் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து ஆட்சேபம் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சரணடைதல் ஏற்பாடு தொடர்பில் அரசாங்கத்தின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பப்படுகின்றது. இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு ஜனாதிபதி மஹிந்தவை நேரடியாகத் தொடர்பு கொள்கின்றார்.

அவரோ, எந்தவித அச்சமும் இன்றி சரணடையுமாறும், தேவையான அனைத்து உத்தரவுகளையும் தான் கோத்தபாயவிற்கு பிறப்பித்துள்ளதாகவும் உறுதியளிக்கின்றார். இத்தகவல் பரிமாற்றம் நிகழும் போது மாலை இருட்டத் தொடங்கிவிட்டிருந்தது. இது தொடர்பான தகவல்கள் போரின் பின்னரங்கு முனையில் நின்றிருந்த அரச தரப்பு அதிகாரிக்கும் தெரிய வருகின்றது.

இதற்கிடையே இராணுவத்தினரின் தொலைபேசி இடைமறிப்புக் கருவிகள் வழியாக விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய தரப்பினர் உடனான தகவல் பரிமாற்றங்க்ள செவிமடுக்கப்படுகின்றது. அரச தரப்பு அதிகாரி இதனை உடனடியாக பசில் ராஜபக்சவிற்கு தெரியப்படுத்துகின்றார். அப்போது நேரம் மாலை 6.30 ஐ தாண்டிவிட்டது.

அவரது அழைப்பை அப்படியே வைத்துக் கொண்டு இன்னொரு தொலைபேசி ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவைத் தொடர்பு கொண்ட பசில் ராஜபக்ச, இந்த விடயம் தொடர்பாக விடுதலைப் புலிகளோ, சந்திரநேரு தரப்போ வெளியாட்களைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கின்றார். உங்கள் வாய்களை மூடிக் கொண்டிருந்தால் மாத்திரமே இதனை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் அறிவுறுத்துகின்றார்.

அத்துடன் விடுதலைப் புலிகள் ஏன் இன்னும் ஷெல் தாக்குதல்களை மேறகொள்கின்றனர் என்று சந்திரநேருவிடம் கடுமையான தொனியில் பசில் வினவுகின்றார். இதனை அடுத்த லைனில் கேட்டுக் கொண்டிருந்த அரச தரப்பு அதிகாரி அதிர்ச்சியடைகின்றார். ஏனெனில் அப்படியான தாக்குதல்கள் ஏதும் நடைபெறவில்லை. மாறாக அரச படையினர் தான் தொடர்ந்தும் ஷெல்களை ஏவிக்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து நடேசனின் செய்மதித் தொலைபேசி இலக்கம் சந்திரநேருவினால் பசிலுக்கு வழங்கப்படுகின்றது. அவருடன் ஆங்கிலத்தில் கதைக்குமாறு பசில் கேட்டுக் கொள்ளப்படுகின்றார். இதையனைத்தையும் இன்னொரு லைனில் அரச தரப்பு மொழிபெயர்ப்பு அதிகாரி செவிமடுத்துக் கொண்டிருக்கின்றார்.

இதற்கிடையே விடுதலைப் புலிகள் தரப்பினர் உயர ஏந்திய வெள்ளைக் கொடியுடன் இராணுவ தரப்பினரால் அறிவுறுத்தப்பட்டிருந்தபடி குறிப்பிட்ட பாலம் ஒன்றை நெருங்கி வருகின்றனர். முன்னணியில் புலித்தேவன் மற்றும் நடேசன் வருகின்றனர். இராணுவத்தின் கமாண்டோ படைப்பிரிவும், அரச தரப்பு மொழிபெயர்ப்பாளரும் அவர்களை எதிர்கொள்கின்றனர். நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோருடன் கைகுலுக்கி வரவேற்ற அரச தரப்பு அதிகாரி, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கின்றார். அனைவரும் பாதுகாப்புத் தரப்பின் கடுமையான உடல் பரிசோதனைக்குப்பின் முன்னோக்கி அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இத்தகவல்கள் பாலித கொஹொன, பசில் ராஜபக்ச, கோத்தபாய, மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு அரசதரப்பு அதிகாரி மூலமாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் யுத்த களத்தில் இருந்தவர்களுக்கு நேரடியாக உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் குரூர மனம் வேறு விதமாக சிந்தித்தது. விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் உயிருடன் விடடு வைக்கப்பட்டால், பின்னாளில் இன்னொரு விடுதலைப் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சம் அவரது மனதை ஆட்டிப்படைத்தது.

அதன் காரணமாக சர்வதேச நெறிமுறைகளுக்கும், மனிதாபிமானதுக்கும் முரணாக அவர் ஒரு முடிவை எடுத்தார். மே 18ம் தேதி, சரியாக மாலை ஏழு இருபது மணிக்கு வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களை படுகொலை செய்யும்படி அவரது உத்தரவு கர்ண கடூர குரலில் தொலைபேசி வாயிலாக ஒலிக்கிறது.

சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் இதை எல்லாம் அறியாத நிலையில் தங்களுக்கான மொழிபெயர்ப்பாளராக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசாங்கத்தின் முக்கிய அதிகாரியும், அரச தரப்பின் முக்கிய ஊடகத்துறை அதிகாரியுமான ஒருவருடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த அதிகாரி இராணுவ மட்டத்தில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தனக்கும், நடேசன், வினீதா மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட ஒரு சிலருக்கும் தேநீர் தருவித்துக் கொண்டிருந்தார்.

அரசதரப்பின் அதிகாரியின் சிநேகபூர்வ அணுகுமுறை, காயமடைந்தவர்கள் மீது அவர் காட்டிய கரிசனம், அந்தப் பகுதிக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியை அவர் அதட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்த அதிகாரம் என்பவற்றைப் பார்த்து நடேசனும், புலித்தேவனும் இறுக்கம் மறைந்து நட்பு நிலைக்கு மாறுகின்றனர்.

தங்களை நம்பி வந்த புலி உறுப்பினர்களின் உயிருக்கு ஆபத்தில்லை என்ற நிம்மதிப் பெருமூச்சு அவர்களிடம் இருந்து வெளியாகின்றது. 'தம்பி, கொழும்புக்கு நாங்கள் அழைத்துச் செல்லப்படும் வரை எங்கள் கூடவே கடைசி வரை இருங்கோ..' நடேசன் நட்பாக ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றார். 'அண்ணா, அதற்காகத் தான் நான் வந்திருக்கேன்...' அந்த அதிகாரி பதிலளிக்கின்றார். 'ஓமோம்..தம்பியைப் பார்த்தா நம்பிக்கையாத் தானிருக்கு...இது புலித்தேவன். இப்படியாக அவர்கள் உரையாடல் தொடர்கிறது.

உரையாடலுக்கிடையே காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவப் பிரிவினரின் வருகை மற்றும் நடேசன், புலித்தேவன் ஆகியோர் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கான ஹெலிகொப்டரின் வருகை இரண்டையும் எதிர்பார்த்திருக்கின்றார்கள். இதற்குள்ளாக ஏராளமான விடுதலைப் புலி உறுப்பினர்கள் நிராயுதபாணிகளாக சரணடைந்த நிலையில் அப்பகுதிக்கு அழைத்து வரப்படுகின்றனர். கடைசி உறுப்பினர் சரணடையும் வரை எல்லாம் நல்லபடியாகத் தான் போய்க்கொண்டிருந்த்து.

அப்போது அவர்கள் தேநீர் அருந்தியபடி பேசிக் கொண்டிருந்த இடத்துக்கு அரச தரப்பு மொழிபெயர்ப்பு அதிகாரியிடம் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் வேகமாக வருகின்றார். பாதுகாப்புச் செயலாளர் அவரை தொலைபேசியில் அழைப்பதாக தெரிவிக்கின்றார்.
வெள்ளைக்கொடி விவகாரம்! நடந்தது என்ன? தொடக்கம் முதல் கடைசி வரை ஒரு நேரடி ரிப்போர்ட் Pulian10
பாதுகாப்புச் செயலாளரின் தொலைபேசி அழைப்பை செவிமடுத்த போது, 'நீ உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு வா' என்ற உத்தரவு அவருக்கு கிடைக்கிறது. 'ஸேர்...சரணடைந்தவர்களில் காயமடைந்தவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். இராணுவ மருத்துவப் பிரிவினருடன் தொலைபேசியில் கதைத்துள்ளேன். அவர்கள் வந்த பின் இவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை ஏற்பாடு செய்துவிட்டு நான் வரட்டுமா?' அந்த அதிகாரி பவ்வியமாக கேட்கிறார். 'முட்டாளே...சொன்னதை செய்...உடனடியாக அங்கிருந்து வெளியே வா..'பாதுகாப்புச் செயலாளர் அலறுகின்றார்.

தொலைபேசி உரையாடலின் பின் அந்த அதிகாரி திரும்பிச் சென்று நடேசன் மற்றும் புலித்தேவனிடம் விடைபெற முயல்கையில், கமாண்டோ படைப்பிரிவின் மேஜர் சமந்த என்பவரால் தடுக்கப்படுகின்றார். 'உங்களுக்கு மீண்டும் அங்கு செல்ல இடமளிக்க முடியாது. உங்கள் பணி முடிவடைந்து விட்டது. நீங்கள் செல்லலாம்..' அதுவரை மரியாதையுடன் உரையாடிய மேஜர் சமந்த, அதிகாரத் தொனிக்கு மாறியிருந்தார். இந்நேரத்தில் அங்கே கனரக ஆயுதங்களுடன் இன்னொரு கமாண்டோ படைப்பிரிவினர் சடுதியில் ஆஜராகின்றனர். அவர்களின் கைகளில் அதுவரை கண்டிராத நவீன ஆயுதங்கள் மற்றும் கருவிகள் இருந்தன.

ஆனாலும் விடுதலைப் புலி முக்கியஸ்தர்கள் கொல்லப்படப் போகின்றார்கள் என்ற சந்தேகம் சிறிதளவும் அரச தரப்பு அதிகாரி மனதில் ஏற்படவில்லை. தான் அங்கிருந்தபடி விடுதலைப் புலி முக்கியஸ்தர்களுடன் நட்பாக பழகுவது இராணுவத்தினருக்குப் பிடிக்கவில்லை போலும் என்ற நினைப்பில் அவர் தன் பாதுகாப்பு அதிகாரியுடன் வாகனத்தை நோக்கி நடக்கின்றார். உடன் சில கமாண்டோ வீரர்கள் துணைக்கு வருகின்றனர். அப்போது நேரம் சரியாக ஏழு இருபது அளவில் இருக்கும். இந்தக்குழுவினர் சற்று தூரம் நகர்ந்த நிலையில் முதலாவது துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்கிறது. வினீதா சிங்களத்தில் 'சுடாதே...சுடாதே....நாங்கள் உங்களை நம்பித்தானே சரணடைந்தோம் என்று அலறும் குரலும் கேட்கிறது. அதே நேரம், ஒரு இராணுவ வீரன் கெட்ட வார்த்தையால் அவரை அர்ச்சனை செய்யும் ஒலியுடன் , ஒரே நேரத்தில் பல துப்பாக்கிகளின் படபடவென்ற ஒலி கேட்கத் தொடங்குகின்றது.

ஏதோ தவறு ஒன்று நடந்து விட்டதாக பதறிப் போகும் அரச தரப்பு அதிகாரி, திரும்பிச் செல்ல முயலும்போது கமாண்டோ வீரர்களால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்படுகின்றார். அவரது பாதுகாப்பு அதிகாரியான கமாண்டோ வீரருக்கும் ஏனைய கமாண்டோக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடக்கின்றது. இதற்கிடையே அவர்கள் பலவந்தமாக அங்கிருந்து நகர்த்தப்பட்டு வண்டியில் ஏற்றப்படுகின்றனர். தூரத்தில் துப்பாக்கி ரவைகளின் முன்னால் உயிரை இழக்கும் நிராயுதபாணிகளின் ஓலம் கேட்டுக் கொண்டிருக்கின்றது.

இதனையடுத்து அவர் உடனடியாக பசில் ராஜபக்ச மற்றும் அரச உயர்மட்டத்தினரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது பலன் கிட்டவில்லை. அந்தச் சமயத்தில் ஜனாதிபதி செயலகத்தின் உள்ளே இருந்த அவரது நண்பரும் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு அவர் தகவலைத் தெரிவிக்கின்றார். அமைச்சர் ஜோன்ஸ்டனும் விடுதலைப் புலிகளுடன் மறைமுக உறவைக் கொண்டிருந்ததுடன், சரணடைந்து அழைத்து வரப்படும் புலிகளை நேரடியாக சந்திக்கவே ஜனாதிபதி செயலகத்திற்கு வந்திருந்தார். இந்நிலையில் புலிகள் தரப்பு முக்கியஸ்தர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகும் தகவலை உரிய தரப்புக்கு எத்தி வைக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொள்ளப்படுகின்றார். ஆனால் அதற்குள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டிருந்தன.

விடுதலைப் புலிகளின் நன்னம்பிக்கையைப் பெற்றிருந்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியாகத் தானிருந்த்து. ஆனாலும் அதிகாரமிக்க அரச தரப்பை பகைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை. தொடர்ந்தும் அவர் அரச தரப்புடன் ஒட்டி உறவாடி தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்தச் சம்பவங்களின் நேரடி சாட்சியான அதிகாரியோ தற்போது நாட்டை விட்டே வெளியேறி தலைமறைவு வாழ்க்கையில் உள்ளார்.

இப்படியாக மனிதாபிமானம், சர்வதேச நெறிமுறைகள் அனைத்தும் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட நிலையில் தான் தமிழ் மக்களின் உரிமைப்போர் கொடூரமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஜனநாயக வழி தோற்றுப் போய் ஆயுத வழிமுறையை நாடிய அப்பாவிகள் அதிலும் தோற்றுப் போய் வித்துடல்களாக மண்ணில் வீழ்ந்தனர். வாழ்வின் வாலிப வயதை தம்மினத்துக்காக அர்ப்பணித்த அவர்கள் அநாதைகளாக கொன்றொழிக்கப்பட்டனர். இறுதிக் கிரியைகள் செய்வதற்கு அவர்களின் உறவுகளோ, அல்லது அதற்காக அவர்களின் உடல்களோ விட்டுவைக்கப்படவில்லை. கனவுகளுடன் களமாடிய அவர்களின் உயிர்ப்பறவைகள் காற்றுவெளியினில் கலந்து கரைந்துபோக, உடல்கள் மட்டும் அங்கே ஆயிரக்கணக்கில் அநாதைகளாக வீழ்நது கிடந்தன.

தங்கள் இனத்தின் விடுதலைக்காக களமாடி மடிந்தவர்களையும், அவர்களுக்கு அரணாக நின்று அழிக்கப்பட்ட பொதுமக்களையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக்கள் இன்றளவும் தடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் நெறிமுறைகள் தாண்டிய இனவழிப்பை மேற்கொண்டவர்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் இன்று திளைத்து கொண்டிருக்கின்றனர்.

யாரைத் தான் நொந்து கொள்வது என்று அறியாத நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் சிந்தும் கண்ணீருக்கு யார் தான் இனி பதில் சொல்வது? அவர்களின் கண்ணீரை யார் தான் துடைப்பது? மாற்றங்கள் இனி அவர்கள் வாழ்வில் மலருமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

வெள்ளைக்கொடி விவகாரம்! நடந்தது என்ன? தொடக்கம் முதல் கடைசி வரை ஒரு நேரடி ரிப்போர்ட் Empty Re: வெள்ளைக்கொடி விவகாரம்! நடந்தது என்ன? தொடக்கம் முதல் கடைசி வரை ஒரு நேரடி ரிப்போர்ட்

Post by logu Mon May 19, 2014 6:53 am

மக்கள் சிந்திய கண்ணீரும் ,குருதியும் அவர்களை தீயாக பின்தொடர்ந்து அவர்களை கொள்ளும்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» கொளத்தூர் தொகுதியில் கடைசி நேரத்தில் நடந்தது என்ன?
» 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: மொரீஷியஸ் போன்ற நாடுகளில் நடந்தது என்ன?
» கூடங்குளம் கலவரம் TIMELINE: காலை 6 முதல் மாலை 6 வரை நடந்தது என்ன?
» வெள்ளைக்கொடி விவகாரம் நாட்டிற்கு துரோகம் இராணுவ வெற்றிவிழாவில் - மஹிந்த
» ஏன் தீக்குளித்தாய் செல்வி? – நேரடி ரிப்போர்ட்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum