TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறீர்களா ?

Go down

குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறீர்களா ?  Empty குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறீர்களா ?

Post by அருள் Sun Jan 15, 2012 1:54 pm






[You must be registered and logged in to see this image.]த்தெடுத்தல் என்பது உணர்வு பூர்வமான முடிவு மட்டுமல்ல வாழ்வு முழுமைக்குமான பிணைப்பு...


நீங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறீர்களா?

ஆமாம்
எனில்; கீழே வரிசைப் படுத்தப்பட்டிருக்கும் மருத்துவத் தகவல்களை எல்லாம்
ஒரு முறை சரிபார்த்துக் கொள்வது உங்களுக்கும் குழந்தைக்கும் நல்லது.

· தத்துக் கொடுக்கும் குடும்பத்தின் ஒட்டுமொத்த மெடிகல் பின்னணி .

· தத்தெடுத்துக் கொள்ளப் போகும் குழந்தை[You must be registered and logged in to see this image.]யின் உடன் பிறந்த மற்ற குழந்தைகளின் உடல் நலம்.

· கர்ப்பிணியாய்
இருக்கும் போது குழந்தையின் அம்மாவுக்கு ஏதேனும் நோய்கள் வந்து அதற்கு
ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்ளப்பட்டதா எனும் தகவல்.

· குழந்தையின் அம்மா கர்ப்ப காலத்தில் மருத்துவர் அனுமதியின்றி தன்னிச்சையாக ஏதேனும் மருந்துகள் உட்கொண்டாரா எனும் தகவல்.

· குழந்தையை பாதிக்கும் அளவுக்கு அதன் அம்மாவுக்கு பால்வினை நோய்கள் ஏதாவது இருந்திருந்தால் அதைப் பற்றிய தகவல்கள்.

· கர்ப்ப காலத்தில் தாய்க்குக் கிடைத்த போஷாக்கு பற்றிய விவரங்கள்.

· கர்ப்ப காலத்தில் எடுக்கப்பட்ட மருத்துவ சோதனைகள் பற்றிய தகவல்கள்.

· பிரசவ காலத்திலோ, குழந்தை பிறப்பிலோ ஏதாவது தடங்கல் ஏற்பட்டிருந்தால் அதைப் பற்றிய தகவல்கள்.

· குழந்தை பிறக்கும்போது இருந்த அதன் சரிவிகித எடை உயரம் பற்றிய தகவல்கள்.

· குழந்தை பிறந்த பின் செய்யப்பட்ட அனைத்து மருத்துவச் சோதனைகளுக்கான சான்றுகள்

· வளர்ந்த
குழந்தையை தத்தெடுப்பது என்றால் அந்தக் குழந்தை முதல் முறையாக தவழ
ஆரம்பித்த நாள், உட்காரப் பழகிய நாள், நடக்க ஆரம்பித்த நாள் என்பது போன்ற
தகவல்கள்.

· குழந்தை பிற குழந்தைகளுடன் பழகும் திறன் மற்றும் அதன் செயல்பாடுகள்.

· பிறந்த நாள் முதல் குழந்தையின் ஹெல்த் தொடர்பான முழுமையான தகவல்கள்.

· உடல் ரீதி[You must be registered and logged in to see this image.]யாகவோ, உணர்வு ரீதியாகவோ குழந்தைக்கு பாலியல் துஷ்பிரயோகங்கள் இருந்திருப்பின் அதைப் பற்றிய தகவல்.

இந்தத்
தகவல்களை எல்லாம் அவற்றிற்கு உரிய ஆவணங்களுடன் முழுமையாகத் தெரிந்து
வைத்துக் கொள்வது தத்துக்குழந்தைக்கும் தத்துப் பெற்றோருக்கும் எல்லா
வகையிலும் பயனுள்ளதாக இருக்கக் கூடும்.

சில வருடங்களுக்கு முன்பு
இந்தியா டுடே வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றில் கார்ப்பரேட்
நிறுவனங்களில் பணிபுரியும் தாமதமாய் திருமணம் செய்து கொள்ளும்
தம்பதிகளில் சிலர் 40 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்வது சிரமம்
என்று கருதி சொந்தமாய் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைத் தவிர்த்து
விட்டு காப்பகங்களில் அல்லது ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து
அதிகாரபூர்வமாக தங்களது வாரிசாக ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள
விரும்புகிறார்கள் எனும் செய்தியை கள ஆய்வுச் சான்றுகளோடு
குறிப்பிட்டிருந்தார்கள்.

இவர்களைப் போல அல்லாது சில தம்பதிகளுக்கு
மரபியல் காரணங்கள், விபத்து, அல்லது நோய் காரணமாக குழந்தைப் பேறற்ற
சூழல் இருக்கக் கூடும். இவர்களுக்கு ஒரு குழந்தைக்குப் பெற்றோராகும் ஆசை
இருந்தால் அதற்கான வாய்ப்பு - தத்தெடுத்தல் மூலம் மட்டுமே கிடைக்கக்
கூடும்.

.ஒரு குழந்தையை நமக்கே நமக்கென்று தத்தெடுத்து வளர்ப்பது
என்பது சினிமாக்களிலும், மெகா சீரியல்களிலும் போகிற போக்கில் காண்பிப்பது
போல அத்தனை எளிதான காரியமில்லை. அதற்கான சட்டங்கள் முன்னெப்போதையும் விட
இப்போது சற்று கடுமையாக்கப் பட்டிருக்கிறது .

சமீபத்திய வருடங்களில்
ஆதரவற்ற குழந்தைகள் மட்டுமல்லாது பிறந்த குழந்தை முதல் 15 வயது வரையிலான
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைக் கணக்கில் கொண்டு அரசு இந்து
தத்தெடுத்தல் மற்றும் பராமரிப்புச் சட்டங்களை 2010-ம் ஆண்டில்
முன்னெப்போதையும் விட மேலும் கடுமையாக்கி இருக்கிறது. இந்த சட்டத்திற்கு
உட்பட்டு நடைபெறும் தத்தெடுப்பே முறையான தத்தெடுத்தல் என உயர் நீதிமன்றம்
அங்கீகரிக்கும் என்பதால் இந்த இதழில் ‘குமுதம் ஹெல்த்’ வாசகர்களுக்கு
தத்தெடுத்தலைப் பற்றிய எளிய அறிமுகம் மற்றும் அரசின் அங்கீகாரம் பெற்ற
தத்தெடுத்தல் மையங்கள் பற்றிய தகவல்களை அளிக்கிறோம்.

தத்தெடுத்தல் என்றால் என்ன?

சட்டப்படி
குழந்தையை தத்துக் கொடுப்பதன் மூலம் அந்தக் குழந்தை அதன் தத்துப்
பெற்றோருக்கு அதிகார பூர்வ வாரிசாகிறது. தத்துக் கொடுக்கப் பட்ட பிறகு
குழந்தை அதன் ரத்தத் தொடர்புடைய பெற்றோருக்கு[You must be registered and logged in to see this image.]உரிமையானதல்ல.
குழந்தை மீதான உரிமை அதன் தத்துப் பெற்றோர்களுக்கே முழுமையாக
அளிக்கப்படுகிறது. இதனால் குழந்தை வளர்ந்த பிறகு தனது வளர்ப்புப்
பெற்றோர்களின் சொத்துகளோடு சொந்தப் பெற்றோர்களிடம் சென்று விடக்கூடும்
எனும் சந்தேகத்திற்கு இடமில்லை.தத்தெடுப்பது தத்துக் குழந்தை மற்றும்
தத்துப் பெற்றோர் இருவருக்கும் பரஸ்பர நன்மை தரக்கூடிய விஷயமாக இருக்க
வேண்டுமென்பதற்கு ஏற்ப சட்ட விதிகள் தற்போது திருத்தப்ப ட்டுள்ளன.

யாரெல்லாம் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள்?

· பல வருடங்களாக குழந்தைப் பேறு இல்லாதவர்கள்.

· விபத்தாலோ மருத்துவ காரணங்களாலோ தம்பதிகளில் ஒருவர் குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை இழந்தவர்கள் .

· திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ விரும்பும் பெண்களும் ஆண்களும்.

· சொந்தக்
குழந்தைகள் இருந்தாலும் கூட தங்களது சுய விருப்பத்தின் பேரில் அநாதரவாக
இருக்கும் குழந்தைகளுக்கு வாழ்வளிக்க விரும்பும் சேவை மனப்பான்மை கொண்ட
நபர்கள்.

· குழந்தை பெற்றுக் கொள்ளும் வயது கடந்த பிறகு தாமதமாக திருமணம் செய்து கொள்வோர்.

· சொந்தக்
குழந்தைகள் இருந்தாலும் கூட தங்களது புகழ் மற்றும் பணத்தின் மூலம் தத்துக்
குழந்தைகளுக்கும் குடும்ப அமைப்பை உருவாக்கித் தர இயலும் என்ற சமூக
ஆர்வம் கொண்ட பிரபலங்கள் போன்றோர் தத்தெடுத்தலில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

யாரெல்லாம் தத்துக் கொடுக்கப்படுகிறார்கள்?

· சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீரழிவுகள் மற்றும் மதக் கலவரங்களால் அநாதரவாக்கப்பட்ட குழந்தைகள்.

· முறையற்ற வழியில் பிறந்து அரசின் தொட்டில் குழந்தை காப்பகங்களில் அடைக்கலமான குழந்தைகள்.

· தாய், தந்தையரை இழந்து உறவினர்களாலும் புறக்கணிக்கப் பட்ட
குழந்தைகள்.

· வறுமை
மற்றும் ஏழ்மையால் குழந்தையை வளர்க்க முடியாத சூழலில் சொந்தப்
பெற்றோர்களால் தத்துக் கொடுக்கப்படும் குழந்தைகள் போன்றோர் அரசின் பதிவு
பெற்ற சேவை மையங்கள் மற்றும் காப்பகங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

உதாரணங்கள் ...

தத்தெடுத்தல்
அல்லது தத்துக் கொடுத்தல் என்பது தமிழ்க் கலாச்சாரத்திற்கு புதிய விஷயம்
ஒன்றுமில்லை. நகரத்தார் வழக்கங்களில் தொன்று தொட்டு நடந்து வரும் ஒரு
சம்பிரதாய முறை தான். காரைக்குடி நகரத்தார் பாரம்பரியப்படி திருமண வயதில்
இருக்கும் பெண்ணையோ ஆணையோ கூட தத்துக் கொடுத்தலும் தத்தெடுத்தலும்
அவர்களது சமுதாய முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட விஷயமே.

இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக கவிஞர் கண்ணதாசனைக் கூறலாம் .

நமது இந்தியாவில் புராண காலம் தொட்டே தத்தெடுத்தலும் தத்துக் கொடுத்தலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள்;

· கிருஷ்ணனும் [You must be registered and logged in to see this image.]

· கர்ணனும்

கிருஷ்ணனை
கம்சன் கொன்று விடுவான் என்று அஞ்சி அவனது அப்பா வசுதேவர் கோகுலத்தின்
அரசன் நந்தகோபனுக்கு தத்துக் கொடுக்கிறார். மகாபாரதத்தின் இறுதி வரை
கிருஷ்ணன் நந்தகோபனின் சொத்தான துவாரகைக்கு மன்னனாகவே அறியப்படுகிறான்.
தேவகிக்கோ, வசுதேவனுக்கோ இருக்கும் உரிமையைக் காட்டிலும் யசோதைக்கும்
நந்தகோபனுக்கும் கிருஷ்ணன் மீதிருக்கும் உரிமை அதிகாரபூர்வமானது.

இந்துக்களின் தத்தெடுத்தலை, அதன் விதிகளை, சட்டங்களை மிக எளிதாக உணர்த்திச் சொல்லும் இதிகாசக் கதை இது.

கிருஷ்ணனைப்
போலவே கர்ணனையும் சொல்லலாம். கர்ணன் பாண்டவர்களின் அன்னையான குந்தியின்
மூத்த மகன். ஆனால் அவன் குந்தியின் மகனாக ஒருநாளும் அடையாளம்
காணப்படவில்லை. குந்தி அவனை ஆற்றில் விட்டதனால் அவனை கண்டெடுத்து வளர்த்த
தேரோட்டியே கர்ணனின் அதிகாரபூர்வ அப்பாவாகிறார்.

ஆக புராண
காலத்திலும் கூட இந்து சட்டங்களின்படி ஒரு குழந்தை அதிகாரபூர்வமாக தத்துக்
கொடுக்கப்பட்டால் அதன் ரத்த உறவு கொண்ட பெற்றோர் அந்தக் குழந் தையின் மீதான
உரிமைகளை இழக்கிறார்கள்.தத்துக் கொடுத்த பின் குழந்தையின் மீதான முழு
உரிமையும் தத்தெடுத்துக் கொண்ட பெற்றோர்களுக்கு என்றாகிறது .
இந்து -
திருமணம் ஆன தம்பதிகள் அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழும்
ஆணோ, பெண்ணோ ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வி ரும்பினால் அதற்கான
சட்ட விதிமுறைகள் என்ன என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதாவிடம்
கேட்டோம். அவர் கூறிய சட்ட விதிமுறைகள் கீழே;

ஆண்களுக்கென்று மேலே
சொன்ன விதிமுறைகள் அனைத்தும் இப்போது பெண்களுக்கும் பொருந்துமாறு 2010ஆம்
ஆண்டில் இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தில் திருத்தங்கள்
மேற்கொள்ளப்பட்டன. இதே விதிமுறைகள் இப்போது தத்தெடுக்க விரும்பும்
பெண்ணுக்கும் பொருந்தும்.

இன்று தத்தெடுக்க விரும்புபவர்கள்
எவராயினும் இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்ட விதியின்படி ஒரு
குழந்தையை தத்தெடுத்து வளர்க்க தங்களுக்கு சட்ட விதிகளுக்குட்பட்டு தகுதி
உள்ளதா எனத் தெரிந்து கொண்டு அவர்கள் அரசின் பதிவு பெற்ற காப்பகங்கள்
அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் குழந்தைக்காகப் பதிவு செய்து
வைத்துக் கொள்ள வேண்டும். இங்கே பதிவு செய்து வைத்தாலும் அரசின் சமூக
நலத்துறையின் கீழ் இயங்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல காப்பகத்
துறையின் ஒப்புதல் பெற்ற பிறகே, தமிழகத்தின் எந்தக் காப்பகங்களில்
இருந்தும் இனி குழந்தைகளை தத்தெடுக்க முடியும் எனும் வகையில் தத்தெடுத்தல் ச
ட்டம் இப்போது சற்றே இறுக்கப்பட்டிருக்கிறது. தேவையற்ற முறைகேடுகளை
தவிர்க்கவே இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறதாம்.

தத்தெடுக்க
விரும்பும் பெற்றோர்களுக்கு அவர்களது விருப்பத்திற்கேற்ற வயதில் குழந்தை
கிடைக்கும் பட்சத்தில் அந்த நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். அதன்
பின் அவர்கள் கேட்கும் தகவல்களை எல்லாம் அளித்து ஊர்ஜிதம் செய்து சட்டப்படி
குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளும் ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும். இதன்
பிறகு உயர் நீதி மன்ற ஆணையின்பின் தத்தெடுத்தல் செல்லுபடியாகும்.

தத்தெடுப்பதன்
மூலம் அந்தக் குழந்தைக்கு ஒரு அன்பான குடும்பம் அமையும் என்பதோடு தத்துப்
பெற்றோர்களுக்கும் ஒரு குழந்தைக்கு அதிகாரபூர்வ பெற்றோராகும் ஆசை
நிறைவேறும். ஆக தத்தெடுத்தல் என்பது தத்துக் குழந்தை மற்றும் தத்துப்
பெற்றோர் என இருபுறமும் பரஸ்பர நலம் நாடும் செயல் என்பதால், தயக்கமின்றி
நண்பர்கள் மற்றும் உறவினர் வட்டத்தில் குழந்தைகளற்றோர் இருப்பின்
தத்தெடுத்தலை ஊக்குவிப்போம்.

தத்துக் குழந்தைகளோடு வாழும் வி.ஐ.பி.கள்

கடந்த
மாதம் யாகூ இணைய தளம் தத்துக் குழந்தைகளோடு வாழும் பிரபலங்களின்
புகைப்படங்களையும் தகவல்களையும் வெளியிட்டிருந்தது . இதோ உங்களுக்காக
அந்தத் தகவல் இங்கே ...

மிஸ் யூனிவர்ஸ் சுஷ்மிதா சென்

1994 ஆம் வருடம் மிஸ் யூனிவர்ஸ் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட சுஷ்[You must be registered and logged in to see this image.]மிதா சென் திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வதோடு இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

பாப் ஸ்டார் மடோனா

பாப்
இசை உலகின் கனவுக்கன்னி மடோனா, ஏற்கெனவே சொந்தக் குழந்தைகள் 2
இருந்தபோதும் மேலும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார் .

நிகோல் கிட்மேன் &டாம் குரூயிஸ் ஜோடி

ஆங்கிலப் படம் பார்ப்பவர்கள் எனில் இவர்களைத் தெரியாமலிருக்க முடியாது. பிரபல ஹாலிவுட் தம்பதிகளான இவர்களுக்கு[You must be registered and logged in to see this image.]இரண்டு தத்துக் குழந்தைகள் உண்டு. இவர்களின் விவாகரத்துக்குப் பின்பு குழந்தைகள் இருவரும் டாம் குரூயிஸுடன் வாழ்கிறார்கள் .

நடிகை ஷோபனா

தேசிய
விருது பெற்ற நடிகை ஷோபனா திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வரும்
சூழலில் சமீபத்தில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து அனந்த நாராயணி என்று
பெயர் சூட்டி வளர்த்து வருகிறார்.

நடிகை லக்ஷ்மி

ஏற்கெனவே மகள் ஐஸ்வர்யா இருந்தபோதும் இரண்டாவதாக ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார்.

நடிகை சீதா

இயக்குநர்
& நடிகர் பார்த்திபனுக்கும் சீதாவுக்குமான விவாகரத்தின் முன் இரண்டு
பெண் குழந்தைகள் இருந்த போதும் இவர்கள் இருவரால் தத்தெடுக்கப்பட்ட ஆண்
குழந்தை ராக்கி என்ற ராதாகிருஷ்ணன். இவர் இப்போது வசிப்பது அவரது அம்மா
சீதாவுடன் என்பதாக செய்தி.

இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின்படி;
ஒரு ஆண் ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்பினால்


அந்த ஆண் மனநிலை சரியானவராக இருக்க வேண்டும்.
தத்தெடுப்பவருக்கும் தத்தெடுக்கப்படுபவருக்கும் இடையே 15 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருக்க வேண்டும்.

கணவனும் மனைவியும் இணைந்து மனமொத்து தத்தெடுக்க முன்வர வேண்டும். இருவரில் ஒருவருக்கு சம்மதம் இல்லையென்றாலும் தத்தெடுக்க இயலாது.

தத்தெடுக்க விரும்பும் ஆணின் மனைவி, மனநிலை சரியில்லாதவ[You must be registered and logged in to see this image.]ராக
இருந்தாலோ, துறவறம் மேற்கொண்டு கணவரை விட்டுப் பிரிந்திருந்தாலோ கூட
முறையாக அரசுப் பதிவு பெற்ற சமூக நல வாரியங்களின் உரிய விசாரணைகளின் பின்
இந்த ஆணுக்கு தத்தெடுக்கும் உரிமை வழங்கப்படுகிறது.

· முன்பு,
திருமணமாகாத ஆண் பெண் குழந்தையை தத்தெடுக்க சட்டத்தில் இடமில்லை. ஆனால்
2010ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சில சட்டத் திருத்தங்களின் பின் இந்து
தத்தெடுத்தல் மற்றும் பராமரிப்புச் சட்ட விதிகளின்படி திருமணம் ஆகாத
பிரம்மச்சாரி ஆண் தனக்கென வாரிசை தத்தெடுத்துக் கொள்ள முடியும்.
தத்தெடுத்த பின் அவர் திருமணம் செய்து கொள்ளும் சூழல் வந்தால் அவர் மணந்து
கொள்ளும் பெண் வளர்ப்புக் குழந்தைக்கு அம்மாவாக சட்டத்தில் இடமி ல்லை. அவர்
மாற்றாந்தாய் என்றே அடையாளப்படுத்தப்படுவார்.

· தத்தெடுக்க
விரும்பும் பெற்றோருக்கு முதல் குழந்தை ஆணாக இருக்கும் பட்சத்தில் அடுத்த
குழந்தையை தத்தெடுக்க விரும்பினால், ஆண் குழந்தையை தத்தெடுக்க சட்டத்தில்
இடமில்லை. அவர்கள் ஒரு பெண் குழந்தையையே தத்தெடுக்கலாம். இதே விதமாக முதல்
குழந்தை பெண் குழந்தை எனில் அடுத்த குழந்தையை தத்தெடுக்க விரும்பினால் அது
ஆண் குழந்தையாக இருக்க வேண்டும். பெண் குழந்தையை தத்தெடுக்க முடியாது.
thanks:tamilsoures
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum