TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.4,000 உதவித் தொகை : மத்திய அரசு அறிவிப்பு

Go down

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.4,000 உதவித் தொகை : மத்திய அரசு அறிவிப்பு Empty கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.4,000 உதவித் தொகை : மத்திய அரசு அறிவிப்பு

Post by அருள் Thu Oct 21, 2010 1:59 pm

கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகையாக, 4,000 ரூபாய் வழங்குவதற்கு, நேற்று நடந்த மத்திய அமைச்சரவையின் பொருளாதாரப் பிரிவு கூட்டத்தில், 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. "இந்திரா காந்தி சகயோக் திட்டம்' மூலம், நாட்டின், 52 பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில், இத்திட்டம் செயல்படுத்தப்படும் என, உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி, தானிய கொள்முதல் விலை உயர்வு, பொருட்களை தெருக்களில் சென்று விற்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு உட்பட, பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் பேசிய சிதம்பரம் கூறியதாவது: கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவும் இத்திட்டத்தால், 14 லட்சம் கர்ப்பிணிகள் பயனடைவர். உதவித் தொகையான, 4,000 ரூபாய், கர்ப்பிணிப் பெண்களுக்கு, குறிப்பிட்ட காலத்தில், மூன்று தவணைகளாக வழங்கப்படும். வங்கிகள் மூலமோ அல்லது அஞ்சல் அலுவலகம் மூலமோ பணப் பட்டுவாடா இருக்கும். மத்திய அரசால் உருவாக்கப்பட்ட இத்திட்டத்திற்கு, இந்த ஆண்டு, 391 கோடி ரூபாயும், அடுத்த ஆண்டு, 610 கோடி ரூபாய் ஒதுக்கவும், அமைச்சரவை முடிவு செய்தது. கிராமப்புறங்களில் அமைந்துள்ள அங்கன்வாடிகள் மூலம், இத்திட்டம் அமல்படுத்தப்படும். பயனாளிகள், 19 வயதிற்கு மேற்பட்டிருக்க வேண்டும். முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும். கர்ப்ப காலத்தில், மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை என்று வழங்கப்படும் இத்தொகை, அரசு வேலை மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் குடும்பத்திற்கு பொருந்தாது. குறிப்பிட்ட சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறந்ததும் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்னைகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர் என்ற அடிப்படையில், இத்திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், மத்திய அரசு நிறைவேற்றும் எந்த திட்டத்திற்கும் தலைவர்கள் பெயர் வைக்கக் கூடாது என்ற முடிவை எடுத்தனர்.ஆனால், இத்திட்டத்திற்கு, "இந்திரா' பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம், முன்பே இத்திட்டம் அரசின் பரிசீலனையில் இருந்ததால், இந்திரா பெயருடன் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
கொள்முதல் விலை உயர்வு: நெல்லை தவிர மற்ற உணவு தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்களின் கொள்முதல் விலையை, மத்திய அரசு நேற்று கணிசமாக ஏற்றியுள்ளது. வரும், "ரபி' பருவத்தில், விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், கொள்முதல் விலைகளை ஏற்ற, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. கோதுமை கொள்முதல் விலை, குவிண்டால் ஒன்றுக்கு, 20 ரூபாயும், பார்லி 30 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உற்பத்தி குறைந்ததால், பருப்பு விலைகள் தாறுமாறாக ஏறியுள்ளதை கணக்கில் எடுத்து கொண்டு, கடலையின் கொள்முதல் விலையை, குவிண்டால் ஒன்றுக்கு, 340 ரூபாயும், மைசூர் பருப்பின் விலை, 380 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. கடுகு எண்ணெய் விலை, 20 ரூபாயும், சனோலா சமையல் எண்ணெய் கொள்முதல் விலை, 120 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
உணவு தானியங்களை, உணவு கார்ப்பரேஷனும், பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெயை, "நாசெட்'டும் கொள்முதல் செய்யும் வேலையில் தொடர்ந்து ஈடுபடும். நெல் விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கைகளை வைத்தும், கடந்த ஆண்டில் தான் நெல்லின் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் அளவை தொட்டது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் நெல்லின் கொள்முதல் விலை, 700 ரூபாயாகவும், ஊக்கத்தொகையாக, 100 முதல் 200 ரூபாய் வரையும் மத்திய அரசு கொடுத்து வந்துள்ளது. இத்தடவை, நெல் பற்றி தகவல் இல்லை. தவிரவும், தெருக்களில் வந்து வியாபாரம் செய்பவர்கள் நலன் காக்கும் வகையில், இன்சூரன்ஸ் திட்டமும் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு, "ராஷ்டிரிய ஸ்வஸ்தியா பீமாயோஜனா' என்று பெயர்.
நாடு முழுவதும் உள்ள 42 லட்சம் பேர் பயனடையும் இத்திட்டத்தில், மருத்துவ வசதி பெற, 30 ஆயிரம் ரூபாய் வரையில் கிடைக்கும் இத்திட்டத்திற்கு, நடப்பாண்டில் முதல்கட்டமாக அரசு, 20 கோடி ரூபாய் செலவழிக்கும். இதற்காக, 27 மாநிலங்களில் கணக்கெடுப்பு நடத்தி நடைமுறைப்படுத்தப்படுவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேலும், "எதிரிகள் சொத்து' என்றழைக்கப்படும் பாகிஸ்தானியர், இந்தியாவில் தங்கி விட்டுச் சென்ற சொத்து உரிமை பற்றிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முதியோர் உதவித் தொகை 13.65 லட்சம் பேர் போலியான பயனாளிகள்:அரசு
» ஈழத்தமிழர்களுக்கான உதவித் தொகை 1000 கூட்டிக் கொடுத்த ஜெயலலிதா!
» ஆவணப் படம் தயாரிக்க உதவித் தொகை !
» மாவோயிஸ்ட் தாக்குதல்: உயிரிழந்த படைவீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.38 லட்சம் உதவித் தொகை
» நாளை சர்வகட்சி கூட்டம் : மத்திய அரசு திடீர் அறிவிப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum