Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 3:00 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
எகிப்து மம்மிகள் உருவான காரணம்
Page 1 of 1
எகிப்து மம்மிகள் உருவான காரணம்
கேள்வி: நமது
பண்பாட்டின் சிறப்பும் அதன் தொன்மையான வயதும் ஆதாரங்களும் எனக்கு வியப்பை
தருகிறது. இதே போன்று உலகம் முழுமைக்கும் உள்ள மக்களின் ஆதிகால சமய
வரலாற்றை தெரிந்து கொள்ள ஆசைபடுகிறேன். சரித்திர ஏடுகளில் கிரேக்கர்களை
பற்றியும், ரோமர்களை பற்றியும் நிறைய படித்து இருக்கிறேன் ஆனால் அவர்களின்
சமய உணர்வு எப்படி இருந்தது என்பது பற்றி எனக்கொன்றும் தெரியாது அதை
தாங்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
குருஜி:
பண்டையக்கால சரித்திரத்தை புரட்டி பார்த்தோம் என்றால் அதில்
கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களின் வரலாற்று நிகழ்வுகள் பெரும் பகுதியாக
நிறைந்திருக்கும் அதற்கு காரணம் அந்த மக்கள் வரலாற்று நிகழ்வுகளையும்
மற்றும் பல முக்கிய நிகழ்ச்சிகளை ஒழுங்கு முறையோடு குறித்து வைத்திருப்பதே
காரணம் எனலாம். கிரீஸ் என்னும் கிரேக்கர்களை பற்றிய குறிப்புகள் நமது
நாட்டில் யவணர்கள் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. நமக்கும்
கிரேக்கர்களுக்கும் வர்த்தக துறை, அரசியல் துறை என்று பல மார்கங்களிலும்
தொடர்பு இருந்திருக்கிறது. இதனால் தான் இந்திய தத்துவங்களில் தாக்கம்
குறிப்பாக உபநிஷத கருத்துகளின் தாக்கம் கிரேக்க தத்துவத்தில் மிக அழமாக
படிந்திருப்பதை காண முடிகிறது.
கியாம்பிளிக்ஸ்
என்னும் கிரேக்க தத்துவ ஞானி அன்றைய கால கட்டத்திலேயே சோதனை மிகுந்த
அறிவுச் சுற்றுலா பல செய்து இருக்கிறார் அவர் தான் சென்ற நாடுகளை
பற்றியும் அதன் கலாச்சார பண்பாடுகளை பற்றியும் குறிப்புகள் பல எழுதி
வைத்திருக்கிறார் அவர் தமது குறிப்புகளில் எகிப்தியர், மொசபடோமியர்,
பிராமணர் ஆகியவர்களின் உபதேச மொழிகள் தான் கற்றிருப்பதாக குறிப்பிடுகிறார்
அதுமட்டுமல்ல புருஷோத்தமன் என்ற இந்திய மன்னர் கி.மு.20-ம் நூற்றாண்டில்
ஏதென்ஸ் நகரத்திற்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பியதாகவும் அந்தக்குழுவில் சாது
ஒருவர் இருந்ததாகவும் அந்த சாது ஏதென்ஸ் நகர வணிகர்களின், பிரபுக்களின்
அதிகார வேட்கையை எதிர்த்து தன்னை தானே தீயிட்டு கொளுத்திக்கொண்டதாகவும்
வரலாறு கூறுகிறது.
இத்தாலி நாடு கிரேக்கர்களின் அடிமையாக இருந்ததினால் ரோமர்களின்
மதத்திற்கும் கிரேக்க மதத்திற்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை காரணம்
ரோமர்கள் நிர்வாகத் துறையில் பெற்றிருந்த அறிவைப்போல் சிந்தனை துறையில்
அறிவை பெற்றிருக்கவில்லை அதனால் மதம் மற்றும் நுண்கலைகளில் கிரேக்கர்களையே
பின்பற்றினார்கள். மகா அலெக்சாண்டரின் படையெடுப்பும் வெற்றிகளும் அரசியல்
முக்கியத்துவம் வாய்ந்தவைகள் மட்டுமல்ல அலெக்சாண்டர் தனது நாட்டின்
புராதனமான மதக்கொள்கைகளை தமது நாட்டின் ஒரு பகுதியிலிருந்து தனது
சாம்ராஜ்ஜியம் பரவி உள்ள அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் சென்றார்.
அரசியல் மூலமாக மதங்களை பரப்பலாம் என்பதை உலகிற்கு முதன் முதலில்
அறிமுகபடுத்தியது மகா அலெக்சாண்டரே ஆகும். அவரை பின்பற்றிதான் அசோக
சக்கரவர்த்தியும் புத்த மதத்தை பல நாடுகளில் பரப்பினார் அலெக்சாண்டரின்
கொள்கையை அன்பு வழியில் கையாண்ட அசோகரிலிருந்து மாறுபட்டு அராஜக வழியில்
அரேபியர்கள் தங்கள் மதத்தை பரப்பினார்கள் என்பது மிகவும் குறிப்பிட தக்க
விஷயமாகும்.
ஆதிகால கிரேக்கர் மற்றும் ரோமர்களின் சமய சிந்தனை என்பது முழுமையான
வளர்ச்சி பெற்றதாக இல்லையென்றே சொல்ல வேண்டும் தங்களது சின்னச்சின்ன
அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள குட்டி தேவதைகளையே அவர்கள் வழிபட்டு
வந்தார்கள். இதை மாபெரும் தத்துவ ஞானியான சாக்ரடீஸ் தான் விஷம் கொடுத்து
சாகடிக்கப்படுவதற்கு முன் தனது சீடர்களில் ஒருவனை அழைத்து குறிப்பிட்ட ஒரு
சிறு தேவதைக்கு தாம் சேவல் கோழி வாங்கி பலியிடுவதாக நேர்த்தி
செய்திருப்பதாகவும் கூறி அதை அந்த சீடனே நிறைவேற்றச் சொல்லி வேண்டுதல்
வைப்பதில் நாம் அறியலாம்.
ஆதிகால இந்தியர்களை போலவே கிரேக்கர்களும் உணவுக்கு ஒரு கடவுள், கனவுக்கு
ஒரு கடவுள், போதை தரும் மதுவுக்கு ஒரு கடவுள் என்று வைத்திருந்தார்கள்.
பிளாட்டோ, சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் போன்ற தத்துவ ஞானிகள் தோன்றிய பிறகும்
ஹோமர் போன்ற கவிதாவிலாசமுள்ள கவிஞர்கள் தோன்றிய பிறகும் கிரேக்கர்களின்
வழிபாட்டு சமயத்தில் புரட்சிகரமான மாறுதல்கள் பல ஏற்பட்டன.
அரிஸ்டாட்டிலின் மருத்துவம் மற்றும் வானியல் ஆராய்ச்சி கிரேக்க
பண்பாட்டின் மணி மகுடம் எனலாம்.
உலக உற்பத்தி பற்றியும் மனிதர்களின் மறுமை வாழ்வு பற்றியும் கிரேக்கர்கள்
சிந்திக்க ஆரம்பித்து ஜோதிடம், வைத்திய சாஸ்திரம், மாந்திரீகம்
போன்றவைகளில் பல உண்மைகளை கண்டறிந்தார்கள் எனினும் சுட்டுப் போட்டாலும்
சுய புத்தி போகாது என்பதுபோல் பெண் சுகத்திற்காகவும் மது
மயக்கத்திற்காகவும் கிரேக்கர்கள் தெய்வங்களை வழிபடுவதை விடவில்லை.
கேள்வி:
கிரேக்கர்கள், ரோமர்களின் சமயச்சிந்தனையை ஓரளவு புரிந்து கொள்ள
முடிகிறது. இவர்கள் அளவிற்கு எகிப்தியர்களும் சரித்திரத்தால்
பேசப்படுகிறார்கள் அவர்களது மதச்சிந்தனையை பற்றி விளக்கமுடியுமா?
குருஜி:
நீலநதியின் ஓரத்தில் அமைந்த வளமான தேசம் எகிப்து ஆகும். இங்குள்ள
பிரமிடுகள் உலக அதிசயம் மட்டுமல்ல அதில் பல அமானூஷ்ய விஷயங்களும் வேற்று
கிரக வாசிகள் பூமியோடு தொடர்பு கொள்ளும் சமிக்கை விஷயங்களும்
அடங்கியுள்ளது. நாம் பிரமீடுகளை பற்றி வேறொரு சமயத்தில் பேசலாம். இப்போது
எகிப்தின் மத விஷயத்திற்கு வருவோம். ரோம் சாம்ராஜ்ஜியத்தின் எகிப்து ஒரு
பகுதியாக இருந்ததினால் கிரேக்கர்களின் மத சிந்தனையின் தாக்கம் எகிப்திலும்
இருந்திருக்கிறது.
ஆயினும் கிரேக்கர்கள் ரோமர்கள் இவர்களை விட ஆதிகால எகிப்து மக்கள்
மகாபுத்திசாலிகள் திறமை மிகுந்தவர்கள் அவர்களின் திறமைக்கு மருத்துவ
அறிவுக்கு எடுத்துகாட்டாக பல ஆயிரம் வருடங்கள் ஆனாலும் இறந்துபோன மனித
உடல்களை கெட்டுபோகாமல் பாதுகாக்கும் மம்மிமுறையை சொல்லலாம்.
உடல்களை பாதுகாப்பாக வைப்பதற்கு அவர்கள் கண்டுபிடித்த விஞ்ஞான முறைக்கு அவர்களின் சமயசிந்தனையே மூலகாரணம் ஆகும்.எகிப்தியர்கள்
இறந்துபோன மனிதர்கள் தங்களது மேல் உலக வாழ்கையை முடித்துவிட்டு ஒரு
காலத்தில் பூமிக்கு வருவார்கள் அப்படி வரும்போது அவர்களின் உயிர்கள்
தங்குவதற்கு பழைய உடம்புகள் கண்டிப்பாக தேவை அதில்தான் அந்த உயிர்கள்
மீண்டும் உயிர் பெற்று எழும் என்று நம்பினார்கள்
இதற்காக இறந்துபோன தங்களது அன்பிற்குரியவர்களின் உடல்களை கெட்டுப்போகாமல்
பாடம் செய்து பிரமீடுகளுக்குள் அடைத்து வைத்தார்கள் அப்படி
பாதுகாக்கபட்டது அரசர்களின் உடல்கள் மட்டுமல்ல சாதாரண பிரஜைகளின்
உடல்களும் தான். 18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொழில் புரட்சி
ஏற்பட்டபோது இத்தகைய எகிப்து மம்மிகள் குவியல் குவியலாக கப்பல்களில்
ஏற்றப்பட்டு பிரிட்டிஷ் தொழிற்சாலைகளில் எரிபொருட்களாக பயன்படுத்தப்பட்டது.
அந்த மம்மிகளில் சுத்தப்பட்டிருந்த துணிகள் பல ஆயிரம் டன்களாக இருந்தது.
செத்தவர்கள் உயிர்தெழுவார்கள் என்ற நம்பிக்கை எகிப்தியர்களிடமிருந்தே
யூதர்களுக்கு பரவி ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த கதை
உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் வரலாற்று ஆய்வாளர்களிடம் பரவலாக
உள்ளது.
கிரேக்கர்களை போன்றே எகிப்தியர்களும்
பறவைகள், மிருகங்கள், பாம்புகள் என்று பல தரபட்ட வழிபாட்டு முறையை
மேற்கொண்டு இருந்தாலும் வாழ்க்கையை நெறிபடுத்துவதற்கான நல்ல பல வழிமுறைகளை
தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதை அந்த நாட்டில் கிடைக்கும்
சிலாசாசனங்கள் பல நமக்கு தெளிவுபடுத்துகிறது.
நல்ல வழியில் நடப்பது உத்தம மார்க்கம் மட்டுமல்ல திருப்திக்கும் சொந்த
நலத்திற்கும் உடல்நலத்திற்கும் கூட நல்லது என்று அவர்கள் எழுதி
வைத்திருக்கிறார்கள் ஆனால் தீய வழியை துறந்து நல்ல வழியில் நடப்பதே
ஆண்டவனுக்கு பிடித்தமானது என்று அவர்கள் கருதினார்கள் அவர்கள் ஏழ்மையை
சாபக்கேடு என்று கருதவில்லை பணக்காரனாக மாளிகை வீட்டில் வசிப்பதைவிட ஏழையாக
கடவுளின் அருளைப்பெற்று வாழ்தலே மேன்மையானது என்று கருதினார்கள் ஆடம்பர
பிரியர்களாகவும் உல்லாச வித்தகர்களாகவும் இருந்த ரோமானியர்களின் ஆட்சிக்கு
கீழ் இருந்தபோது கூட எகிப்தியர்கள் ஆடம்பரத்தை வெறுத்து வந்தது விந்தை
ஆகும்.
இவர்களிடத்தில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம் இருந்தது. கட்டிடக்கலையில்
நிபுணத்துவம் மிக்க எகிப்தியர்கள் தங்களது வழிபாட்டு இடங்களை இந்திய
கட்டிடக்கலை பாணியில் அதாவது இந்து கோவில்கள் போன்றே அமைத்திருப்பது நமது
கலாச்சாரத்தின் பெருமைகளையும் அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள் என்பதை
நம்மால் உணர முடிகிறது. நல்ல சிந்தனை, நல்ல செயல், நல்ல பண்பாடு என்று
ஒன்று உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அது இந்தியாவிலிருந்துதான்
சென்றிருக்க வேண்டும் என்று இதன் மூலம் நிரூபணம் ஆகிறது.
தொடரும் ..................
source http://ujiladevi.blogspot.com/2010/09/blog-post_06.html
சந்திப்பு சதீஷ் குமார்
Similar topics
» இந்திய நீர்மூழ்கி கப்பலை காப்பாற்றிய எகிப்து இராணுவம்
» ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் பின்னணி
» 2600 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்து குழந்தை மம்மி ...
» 3000 ஆண்டுளாக கடல் நீரால் பாதுகாக்கப்பட்ட எகிப்து மம்மி...
» எகிப்து மாஜி அதிபர் மீது விசாரணை துவங்கியது : குற்றச்சாட்டுகளை மறுத்தார் முபாரக்
» ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் பின்னணி
» 2600 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்து குழந்தை மம்மி ...
» 3000 ஆண்டுளாக கடல் நீரால் பாதுகாக்கப்பட்ட எகிப்து மம்மி...
» எகிப்து மாஜி அதிபர் மீது விசாரணை துவங்கியது : குற்றச்சாட்டுகளை மறுத்தார் முபாரக்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|