TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:04 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 01, 2024 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்)

Go down

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Empty பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Mon May 31, 2021 12:00 pm

‘வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுததத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் பரவலாக மழை இருக்கலாம்‘ என்று டிவி அல்லது ரேடியோவில் வானிலை அறிவிப்பின் போது தெரிவிப்பார்கள்.

அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Weather+high+low

தரையிலிருந்து தொடங்கி வானில் பல கிலோ மீட்டர் உயரம் வரை காற்று வியாபித்துள்ளது.காற்றுக்கு எடை உண்டு. ஆகவே மேலிருந்து கீழ் வரை உள்ள காற்று நம்மை அழுத்துகிறது. எந்த ஒருவரையும் காற்றானது கடல் மட்டத்தில சதுர செண்டி மீட்டருக்கு ஒரு கிலோ வீதம் அழுத்துகிறது. ஒரு புறத்திலிருந்து மட்டும் அழுத்தம் இருந்தால் நம்மால் உணர முடியும்.

ஆனால் காற்று நம்மை எல்லாப் புறங்களிலிருந்தும் அழுத்துவதால் காற்று அழுத்துவதை நம்மால் உணர முடிவதில்லை.


ஓர் இடத்துக்கு மேலே இருக்கின்ற மொத்தக் காற்றின் அளவு இடத்துக்கு இடம் வித்தியாசப்படும். ஆகவே காற்றழுத்தமும் வித்தியாசப்படும். ஓரிடத்தில் காற்றழுத்தம் மிக் அதிகமாக இருக்கும்.வேறிடத்தில் குறைவாக இருக்கும்.இதற்கு சூரியனும் காரணம்.

காற்றழுத்தம் அதிகமாக உள்ள இடத்திலிருந்து காற்றழுத்தம் குறைவாக உள்ள பகுதியை நோக்கி காற்று வீசும். காற்றுடன் மேகங்களும் நகரும். ஆகவே காற்றழுத்த நிலைமைகள் வானிலைத் துறையினருக்கு மிக் முக்கியம்.

வானிலைத் துறையினர் காற்றழுத்தத்தை அளக்க மேலே சொன்ன (சதுர செண்டிமீட்டருக்கு இவ்வளவு என்ற) கணக்கை பின்பற்றுவதில்லை.அவர்கள் கணக்குப்படி கடல் மட்டத்தில் சராசரி காற்றழுத்தம் 1013 மில்லி பார். காற்றழுத்தம் இடத்துக்கு இடம் மாறுபடுவதால் ஆங்காங்கு காற்றழுத்த அளவு மானி வைக்கப்படுகிறது.

காற்றழுத்தமானிகள் தெரிவிக்கின்ற எண்ணற்ற தகவலகளை வைத்து காற்றழுத்த நிலவரப் படம் தயாரிப்பார்கள். எந்தெந்த இடங்களில் ஒரே மாதிரி அழுத்தம் இருக்கிறதோ அந்த இடங்களை எல்லாம் சேர்த்து கோடு போடுவார்கள். இதற்கு Isobar  என்று பெயர்.அருகே உள்ள படத்தில் L என்ற எழுத்து Low  என்பதைக் குறிப்பதாகும்.H என்பது High  என்பதைக் குறிப்பதாகும்.படத்தில் 1008 என்று குறிப்பிடப்பட்ட கோட்டைக் கவனிக்கவும்.அக் கோடு அமைந்துள்ள இடங்கள் அனைத்திலும் காற்றழுத்தம் அந்த அளவில் இருக்கிறது என்று அர்த்தம்.

ஓரிடத்தில் காற்றழுத்தம் குறைவாக இருக்க, அதைச் சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் அதிகமாக இருக்க நேரிடலாம். நட்ட நடுவே காற்றழுத்தம் குறைவாக உள்ள இடத்தை Low என்று குறிப்பிடுவார்கள். நேர் மாறாக நட்ட நடுவே ஓரிடத்தில் அதிகமாக இருந்தால் அது High.

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Isobars+America

மேடாக இருக்கும் இடத்திலிருந்து தண்ணீர் பள்ளமாக இருக்கின்ற இடத்தை நோக்கிப் பாய்வது போலவே காற்றும் செயல்படுகிறது. வடகிழக்குப் பருவ மழைக் காலத்தின் போது காற்று வட கிழக்கிலிருந்து வீசுகிறது. கடல் மீதாக வருகின்ற மேகங்கள் ஆவி வடிவிலான நீரைத் தாங்கியவையாக வருகின்றன். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அந்த மேகங்களை ஈர்க்கும் போது மழை பொழிகிற்து.. ஆகவே கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தோன்றினால் மழை பெய்யும் வாய்ப்பு தோன்றுகிறது.

(இணையம்)


Last edited by வாகரைமைந்தன் on Tue Jul 20, 2021 11:22 pm; edited 1 time in total
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1706
Join date : 23/05/2021

Back to top Go down

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Empty எரிமலை நுழைவாயில்- storm chaser

Post by வாகரைமைந்தன் Sat Jul 17, 2021 3:09 pm

ஜார்ஜ் கூரூனிஸ் (George Kourounis). யாரும் செல்லத் துணியாத இடங்களுக்குச் சென்று சாதனை புரிவது தான் அவருடைய தொழில். சில நாட்களுக்கு முன்பு அவர்  எரிமலை வாய்க்குள் இறங்கி சாதனை புரிந்துள்ளார்.
சுயபடம் - செல்பி எடுத்துக் கொண்ட கூரூனிஸ்

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Man-takes-incredible-selfie-inside-active-volcano

இப்படி ஆபத்தான எரிமலை வாயில் செல்வது,புயல்,சூறாவளி ..போன்ற இடங்களுக்கு சென்று படம் பிடிப்பது என சாதனை செய்வோர் storm chaser எனப் படுகிறார்கள். ஆபத்தில்லாத காட்டுக்குள் ஒரு பெரிய கூட்டத்துடன் சென்று சாதனை? செய்த பிரபலங்கள் நம் நாட்டிலும் சமீபத்தில் செய்தியாக வந்ததை அறிவீர்கள்.

குனிந்து பார்த்தால் சுமார் 370 மீட்டர் ஆழமான கிடுகிடு பள்ளம். அதன் அடியில் தள தள என்று கொதிக்கும் நெருப்புக் குழம்பு. அந்த எரிமலைக் குழம்பின் வெப்பம் 1200 டிகிரி செண்டிகிரேட். எனவே கடும் அனல். நடு நடுவே எரிமலைக் குழம்பு சீறுகிறது. நெருப்பு உருண்டைகள் தூக்கியடிக்கப்படுகின்றன.

 பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Volcano%20cross%20section
                                                                                     
நெருப்புக் குழம்பிலிருந்து ஆபத்தான குளோரின் வாயு, கந்தக வாயு ஆகியன வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உள்ளேயிருந்து எரிமலைச் சாம்பலும் மெல்லிய புகை போல மேல் நோக்கி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பசிபிக் கடலின் தென் பகுதியில் வனூவாடு (Vanuatu) என்ற தீவு நாடு உள்ளது. சின்னச் சின்னதாக மொத்தம் 80 தீவுகள். அவற்றில் 20 தீவுகளில் ஆளே கிடையாது. வனூவாடு நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் இரண்டரை லட்சம்.

இந்தத் தீவுகளில் ஒன்றான அம்ரிம் தீவில் தான் பெரிய எரிமலை உள்ளது. 12 மீட்டர் அகலம் கொண்ட அந்த எரிமலை வாய்க்கு மாரும் என்று தனிப் பெயர் உண்டு.

ஜார்ஜ் கூரூனிஸ் எரிமலைக் குழம்பின் வெப்பம் தாக்காதபடி இருக்க விசேஷ காப்பு உடை அணிந்திருந்தார். சுவாசிப்பதற்கு காற்றை அளிப்பதற்கான சுவாசக் கருவியையும் அணிந்திருந்தார். கால் தவறினால் ஆபத்து என்பதற்காக இடுப்பில் கம்பி இணைப்பு இருந்தது.

ஜார்ஜ் கூரூனிஸுடன்  சென்ற காஸ்மான் என்ற போட்டாகிராபர் தான் அப்படங்களை எடுத்தவர்.

கனடாவைச் சேர்ந்த 44 வயதான ஜார்ஜ் ஏற்கெனவே மூன்று ஆபத்தான எரிமலைகளின் வாய்க்குள் இறங்கி சாதனை புரிந்துள்ளார். புயல்களும் அவருக்குப் பிடிக்கும். பல கடும் புயல்களின் நடுவே இருந்து படம் எடுத்துள்ளார்



வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1706
Join date : 23/05/2021

Back to top Go down

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Empty பூகம்பம்,எரிமலை, சுனாமி

Post by வாகரைமைந்தன் Sat Jul 17, 2021 3:18 pm

ஓடும் ரயில் வண்டியில் ஒரு காட்சி. உட்கார்ந்த நிலையில் உறங்கும் வெள்ளைச் சட்டைக்காரார் தமக்கு அருகே அமர்ந்தபடி உறங்கும் பெரிய மீசைக்காரர் மீது தம்மையும் அறியாமல் மெல்லச் சாய்கிறார். மேலும் மேலும் சாய ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் எடையைத் தாங்க முடியாமல் மீசைக்காரர் உடலை உலுக்கியபடி விழித்துக் கொள்கிறார். வெள்ளைச் சட்டைக்காரகும் விழித்துக் கொண்டு சுதாரித்துக் கொள்கிறார்.

பூகம்பம் கிட்டத்தட்ட இப்படித் தான் ஏற்படுகிறது. ஒரு சில்லு அடுத்த சில்லை மேலும் மேலும் நெருக்குகிறது. அடுத்த சில்லு ஒரு கட்டம் வரை இதைத் தாங்கிக் கொண்டே இருக்கிறது. நெருக்குதல் ஒரு கட்டத்தை எட்டும் போது சில்லுக்கு அடியில் உள்ள பாறைப் பாளம் பெரிய உலுக்கலுடன் நகருகிறது. அதுவே பூகம்பம்.

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Earthquakes+HimalayaHazardScienceFig

இமயமலை அடிவாரத்தில் பூகம்பம் நிகழக்கூடிய இடங்கள்

இந்திய துணைக் கண்ட சில்லு ஆண்டுக்கு 5 செண்டி மீட்டர் விகிதம் வட கிழக்கு திசையில் நகருகிறது. யுரேசிய சில்லு மிக மெதுவாக வடக்கு நோக்கி நகருக்கிறது. எனவே இந்தியச் சில்லு யுரேசிய சில்லுவை மேலும் மேலும் நெருக்குகிறது. இதன் விளைவாகவே பாகிஸ்தானின் வட பகுதியில் தொடங்கி அஸ்ஸாம் வரையில் இமயமலை அடிவாரத்தில் உள்ள பகுதிகளில் அடிக்கடி பூகம்பம் நிகழ்கிறது. துருக்கியிலும் இவ்விதம் நிகழ்கிறது. ஆகவே துருக்கி நாட்டில் பூகம்பம் அதிகம்.

சில்லுகள் உரசும் இடங்களிலும் பூகம்பம் நிச்சயம். அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதியில் இரண்டு சில்லுகள் எதிரும் புதிருமாக உரசிச் செல்கின்றன. ஆகவே அங்கு பூகம்பங்கள் நிக்ழ்கின்றன.

ஒரு சில்லு மற்றொரு சில்லுக்கு அடியில் புதையும் இடங்களிலும் பூகம்பங்கள் ஏற்படுகின்றன. இந்தோனேசியாவுக்கு அருகே கடலுக்கு அடியிலும், ஜப்பானுக்கு கிழக்கே கடலுக்கு அடியிலும் இவ்விதம் சில்லுகள் புதைகின்றன. நியூசிலந்திலும் இதே காரணத்தால் பூகம்பங்கள் ஏற்படுகின்றன.

நீங்கள் மாவு மில்லில் அரைபட்டு வந்து டின்னில் வந்து விழும் மாவைத் தொட்டால் மாவு மிகவும் சூடாக இருக்கும். சில்லுகளின் விளிம்புகள் புதையுண்டு போகும் போது பிரும்மாண்டமான பாறைப் பாளங்கள் இதே போல அரைபட்டு பூமிக்குள் செல்கின்றன. பாறைப் பாளங்கள் இப்படி அரைபடும் போது அவை பயங்கமாகச் சூடேறி நெருப்புக் குழம்பாக மாறுகின்றன. இந்த நெருப்புக் குழம்புதான் எரிமலை வாய் வழியே வெளியே வருகிறது.

இந்தோனேசியத் தீவுகளில் உள்ள எரிமலைகள்

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Volcanoes+indonesia

பூமியில் மிக ஆழத்தில் நெருப்புக் குழம்பு உள்ளது. ஆனால் எரிமலைகள் வழியே வெளி வருவது பூமியில் ஆழத்தில் உள்ள குழம்பு அல்ல. சில்லுகள் அரைபடும் போது தோன்றும் நெருப்புக் குழம்புதான் எரிமலைகள் வழியே வெளிப்படுகிறது. ஆகவே சில்லுகள் புதையுண்டு போகும் இடங்களில் எரிமலைகள் உண்டு.

சில்லுப் பெயர்ச்சி விஷயத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடு இந்தோனேசியா என்று சொல்லலாம். இந்த நாட்டில் பூகம்பம், எரிமலை, சுனாமி ஆகிய மூன்றுமே உண்டு. இந்தோனேசியாவின் தென் பகுதியில்(இந்திய) ஆஸ்திரேலிய சில்லு யுரேசிய சில்லுக்கு அடியில் புதைகிறது. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் பசிபிக் சில்லு இதே போல யுரேசிய சில்லுக்கு அடியில் புதைகிறது. 17,600 தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் 150 எரிமலைகள் உள்ளதில் வியப்பில்லை.ஜப்பானுக்கு கிழக்கே உள்ள கடல் பகுதியிலும் இதே நிலைமை தான். ஆகவே ஜப்பானிலும் பூகம்பம், எரிமலை, சுனாமி ஆகிய மூன்றும் உள்ளன.

ஜப்பானில் மட்டுமன்றி அலாஸ்கா, வட அமெரிக்காவின் மேற்குக் கரை, தென் அமெரிக்காவின் மேற்குக் கரை, நியூசிலந்து ஆகியவற்றில் எரிமலைகள் உள்ளன. வேறு விதமாகச் சொல்வதானால் பசிபிக் கடலைச் சுற்றி உள்ள நிலப் பகுதிகளில் எரிமலைகள் உள்ளன. இதை நெருப்பு வளையம் (Ring of Fire)  என்று சொல்வதுண்டு (கீழே படம் காண்க).

பசிபிக் கடலைச் சுற்றி எரிமலைகள் அமைந்துள்ளதைக் காட்டும் வரைபடம்

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Ring+of+fire

நிலப் பகுதியில் மட்டுமன்றி கடலுக்கு அடியிலும் பூகம்பங்கள் உண்டு. இந்த கடலடி பூகம்பங்கள் தான் சுனாமியைத் தோற்றுவிக்கின்றன. 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் தமிழகத்தைத் தாக்கிய சுனாமி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஏற்பட்டதே.

2004 ஆம் ஆண்டில் தமிழகத்தைத் தாக்கிய சுனாமியின் மையம்.

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) 2004+dec+tsunami+map

பூகம்பத்திலிருந்து மனிதன் ஓடி ஒளிய வாய்ப்பில்லை. ஆனால் கடும் பூகம்பத்தையும் தாங்குகின்ற கட்டடங்களைக் கட்டுவதற்கான தொழில் நுட்பத்தை மனிதன் உருவாகியிருக்கிறான. ஆகவே உயிர்ச் சேதம் பொருட்சேதத்தைப் பெரிதும் குறைத்துக் கொள்ள இயலும்.

பூகம்பத்தை முன்கூட்டி திட்டவட்டமாக அறிய இதுவரை வழி கண்டுபிடிக்கப்படவில்லை. குறிபிட்ட பிராந்தியத்தில் தோராயமாக சில ஆண்டுகளில் பூகம்பம் ஏற்படலாம் என்று இப்போது அறிய முடிகிறது. எதிர்பார்க்கப்படுகின்ற அந்த பூகம்பம் சில ஆண்டுகளில் நிகழலாம் அல்லது 40 அல்லது 50 ஆண்டுகள் கழித்தும் ஏற்படலாம். இப்போதுள்ள தொழில்நுட்பத்தைக்கொண்டு என்றைக்கு, எப்போது, எந்த அளவுக்குக் கடுமையான பூகம்பம் தோன்றும் என்று அறிவதற்கு வாய்ப்பே இல்லை.

எரிமலை எப்போது நெருப்பைக் கக்கும் என்பதும் தெரியாது. ஆனால் நோயாளியின் மார்பில் டாக்டர் ஸ்தெதாஸ்கோப் வைத்துப் பார்ப்பது போல எரிமலைச் சரிவுகளில் உணர் கருவிகளைப் பதித்து உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். எரிமலைகள் அனைத்தும் தொடர்ந்து நெருப்பைக் கக்கிக் கொண்டிருப்பதில்லை.(இத்தாலியில் உள்ள ஸ்டிராம்போலி எரிமலை இதற்கு விதிவிலக்கு). எரிமலைகள் நீண்ட காலம் ஓய்ந்திருக்கும். பின்னர் உறுமல்களுடன் நெருப்பைக் கக்க ஆரம்பிக்கலாம். அப்படி நெருப்பைக் கக்கினாலும் அந்த நெருப்புக் குழம்பு மனிதன் நடக்கின்ற வேகத்தில் தான் வழிந்தோடும். தப்பி ஓட அவகாசம் உண்டு. மிக அபூர்வமாக எரிமலைகள் மிக பயங்கரமாக வெடித்து பெரும் உயிர்ச் சேதத்தை உண்டாக்கும்.

சுனாமிக்களைப் பொருத்தவரையில் ஒரு விசித்திர நிலைமை உள்ளது. சுனாமி தாக்கலாம் என்று கண்டறிந்து கூற முடியும். கடலில் இதற்கான கருவிகளை நிறுவுகின்றனர். சுனாமிக்குக் காரணமான கடலடி பூகம்பம் ஏற்பட்டால் அந்த இடத்திலிருந்து மிகத் தொலைவில் உள்ளவர்கள் எளிதில் உயிர் தப்ப இயலும். அதாவது இந்தோனேசியா அருகில கடலடி பூகம்பம் ஏற்பட்டால் சுனாமி அலைகள் தமிழகத்தின் கரைக்கு வந்து சேர சுமார் 2 மணி நேரம் ஆகும். ஆகவே தக்க நேரத்தில் எச்சரிக்கை வந்தால் தமிழகத்தின் கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிச் செல்ல போதுமான அவகாசம் கிடைக்கும். 2004 ஆம் ஆண்டில் இவ்வித எச்சரிக்கை ஏற்பாடு இல்லாமல் போய் விட்டது.

ஆனால் கடலடி பூகம்பம் நிகழும் இடத்துக்கு மிக அருகில் வாழ்பவர்களைப் பொருத்த வரையில் எச்சரிக்கை விடப்பட்ட சில நிமிஷங்களில் சுனாமி அலைகள் வந்து தாக்கும் நிலை உள்ளது. மக்கள் தப்பிச் செல்வதற்கு போதுமான அவகாசம் கிடைக்காமல் போய் விடுகிறது. 2004 ஆம் ஆண்டு சுனாமியின் போது இந்தோனேசியாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததற்கு இதுவே முக்கிய காரணம்.

சில்லுகள் சந்திக்கும் இடங்களில் பூகம்பம் ஏற்படுவதாகக் கூறினோம். ஆனால் ஒரு சில்லின் நடுவே பூகம்பங்கள் நிகழத்தான் செய்கின்றன. 2001 ஆம் ஆண்டில் குஜராத்தில் பூஜ் என்னுமிடத்தில் ஏற்பட்ட பூகம்பம் இதற்கு உதாரணம். இந்த இடம் சில்லுகள் சந்திக்கும் இடத்திலிருந்து தொலைவில் உள்ளது. இவ்வித பூகம்பங்கள் Mid-Plate Earthquakes  எனப்படுகின்றன. நிபுணர்கள் இதற்கான காரணங்கள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர். எனினும் இதுவரை பூகம்பத்திற்கான திட்டவட்டமான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.

சில்லுகள் புதையுண்டு போகிற இடங்களில் எரிமலைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டோம். ஆனால் சில்லுகள் சந்திக்காத, புதையுண்டு போகின்ற நிலைமை இல்லாத, இடங்களிலும் அபூர்வமாக எரிமலைகள் உண்டு. பசிபிக் சில்லின் நட்ட நடுவே அமைந்திருக்கும் ஹவாய் தீவுகளில் இப்படியான எரிமலைகள் உள்ளன.

இவை Intra-plate volcanoes அல்லது Hot Spots  என வருணிக்கப்படுகின்றன. பூமியில் மிக ஆழத்திலிருந்து நெருப்புக் குழம்பு செங்குத்தாக மேலே வருவதால் இவை உண்டாவதாகக் கூறப்படுகிறது. இவ்வித எரிமலைகள் பற்றியும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவில் உள்ள Yellowstone எரிமலையும் இந்த வகையைச் சேர்ந்ததே.

சில்லுப் பெயர்ச்சியின் விளைவாக ஏற்படும் பூகம்பங்கள், எரிமலைகள், சுனாமிக்கள் ஆகியவை பூமியில் மனிதனை அடியோடு அழித்து விடுமோ என்று அஞ்சத் தேவையில்லை.அப்படி நடப்பதாக இருந்தால் மனித இனம் என்றோ அழிந்து போயிருக்க வேண்டும். கால்ம காலமாக பூகம்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. எரிமலைகளில் ஏதோ ஒன்று தான் எப்போதாவது பெரிய அளவில் பொங்கி நாசத்தை உண்டாக்குகிறது. 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்டது போன்ற சுனாமிக்கள் மிக அபூர்வமாகவே நிகழ்கின்றன.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1706
Join date : 23/05/2021

Back to top Go down

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Empty நிலவின் மறுபக்கம்

Post by வாகரைமைந்தன் Sun Jul 18, 2021 5:26 pm

பூமி தனது அச்சில் சுழல்கிறது. பூமி ஒரு தடவை சுற்றி முடித்தால் அதை ஒரு நாள் என்கிறோம்.  சந்திரனும் தனது அச்சில் சுழல்கிறது. ஆனால் சந்திரனில் பகல் என்பது சுமார் 14 நாள். இரவு என்பது சுமார் 14 நாள். பூமியுடன் ஒப்பிட்டால் சந்திரன் தனது அச்சில் மிக மெதுவாகச் சுழல்கிறது.

சூரியனை பூமி எந்தவிதமாக சுற்றுகிறது என்று கேட்டால் பூமி anticlockwise பாணியில் சூரியனை சுற்றுகிறது.

சந்திரன் தனது அச்சில் சுழன்றாலும் எப்போதும் சந்திரனின் ஒரு புறத்தைத் தான் நாம் காண்கிறோம். சந்திரனின் மறுபுறத்தைக் காண முடிவதில்லை.

வீட்டில் குளோப் இருந்தால் அல்லது ஏதாவது உருண்டையான பொருள் இருந்தால் அதை லேசாக சுழலும்படி செய்யுங்கள். அது ஒரு தடவை சுற்றி முடிக்கும் போது அந்த உருண்டையின் எல்லாப் புறங்களையும் நம்மால் பார்த்து விட முடியும்.

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Moon%2Borbital%2Bmotion%2Baug%2B2014

ஆனால் சந்திரன்  தனது அச்சில் சுழன்றாலும் அதன் ஒரு புறத்தைத் தான் நம்மால் காண முடிகிற்து. இதற்கு  பூமி தான் காரணம்.

சந்திரனை விட பூமி வடிவில் பெரியது. ஆகவே பூமிக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். இதன் விளைவாக பூமியானது சந்திரன் தனது அச்சில் வேகமாக சுழல முடியாதபடி தடுத்து வருகிறது.

ஒரு கார் நான்கு அடிக்கு ஒரு தடவை பிரேக் போட்டபடி சென்றால் எப்படி இருக்கும்? அந்த மாதிரியில் சந்திரன் பிரேக் போட்டபடி தனது அச்சில் சுழல்கிறது. இந்த நிலையில் சந்திரன் தனது அச்சில் ஒரு தடவை சுற்றி முடிக்க 27.322 நாட்கள் ஆகின்றன. சந்திரன் பூமியை ஒரு தடவை சுற்றி முடிப்பதற்கும் அதே போல 27.322 நாட்கள் ஆகின்றன. ஆகவே சந்திரன் எப்போதும் தனது ஒரு புறத்தை மட்டும் காட்டுவதாகிறது.

சோவியத் யூனியன் 1959 ஆம் ஆண்டில் செலுத்திய லூனா-3  விண்கலம் சந்திரனை சுற்றிய போது சந்திரனின் மறுபுறத்தைப் படம் எடுத்து அனுப்பியது. சந்திரனை சுற்றிய முதல் விண்கலம்  அதுவேயாகும். அதன் பின்னர் சந்திரனுக்கு அமெரிக்கா அனுப்பிய விண்வெளி வீரர்கள் சந்திரனின் மறுபுறத்தைப் படம் எடுத்தனர்.சீனா,அமெரிக்காவின் வேறு விண்கலங்களும் சந்திரனின் மறுபுறத்தைப் படம் எடுத்து அனுப்பின.

சந்திரனின் மறுபுறம் உண்மையில் வித்தியாசமாகத்தான் உள்ளது. இடது புறத்தில் உள்ள படத்தைக் கவனித்தால் கருமையான திட்டுகள் அதிகம் காணப்படும். வலது புறம் உள்ள படத்தில் அதாவது சந்திரனின் மறுபுறத்தில் கருமைத் திட்டுகள் அனேகமாக இல்லை.

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Far-side-of-the-moon-FI-facebook-2-e1491717023884

கருமைத் திட்டுப் பகுதிகள் ஓரளவில் சமதரைகள். சந்திரனில் வட்ட வடிவப் பள்ளங்கள் நிறையவே உள்ளன. இவை ஏதோ ஒரு காலத்தில் விண்கற்கள் தாக்கியதால் ஏற்பட்டவை. சந்திரனின் முன்புறத்தை விட சந்திரனின் பின் புறத்தில் வட்ட வடிவப் பள்ளங்கள் அதிகமாக உள்ளன.

சந்திரனின் மறுபுறத்தில் விண்வெளியை ஆராய்வதற்கென பெரிய ரேடியோ டெலஸ்கோப்பை நிறுவினால் அது சிறப்பாக செயல்படும் என்று வானவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பூமியில் உள்ள பல எலக்ட்ரானிக் கருவிகள் வெளிப்படுத்தும் சிக்னல்களின்  இடையூறு அதற்கு இராது என்று அவர்கள் கூறுகின்றனர்.

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Moon_craters

சந்திரன் பூமிக்குத்தான் தனது மறுபுறத்தைக் காட்டுவதில்லையே தவிர, சூரியனுக்கு தனது இரு புறங்களையும் காட்டுகிறது. அமாவாசையன்று சந்திரனின் ( நாம் காணாத ) மறுபுறம்  சூரியனை நோக்கியபடி அமைந்திருக்கும்.

அமெரிக்காவுக்கும்  சோவியத் யூனியனுக்கும்  இடையே  கடும்  விரோதம் நிலவிய  காலத்தில்  சந்திரனின்  மறுபுறத்தில்  ரகசியமாக  அணுகுண்டுகளை  வெடித்து  சோதனை  நடத்துவது  பற்றி   அமெரிக்காவில் சிந்திக்கப்பட்டது .  பூமியில்  அணுகுண்டு வெடித்து  சோதனை  நடத்தினால் கண்டுபிடித்துவிட முடியும் என்ற காரணத்தால் இவ்விதம் சிந்திக்கப்பட்டது . ஆனால் நல்ல வேளையாக அந்த எண்ணம்  கைவிடப்பட்டது.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1706
Join date : 23/05/2021

Back to top Go down

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Empty புயல் எந்தப் பக்கமாக சுற்றுகிறது?

Post by வாகரைமைந்தன் Tue Jul 20, 2021 11:19 pm

வங்கக் கடலில் உருவாகின்ற புயல்கள அனைத்துமே வலப்புறத்திலிருந்து இடப்புறமாக சுழல்வதாக (Anti Clockwise) இருக்கும்.

அட்லாண்டிக் கடலிலும் இவ்விதம் புயல்கள் தோன்றி அமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதியைத் தாக்குகின்றன. ஜப்பானை யொட்டிய கடல் புகுதியிலும் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அருகில் உள்ள கடலிலும் இது போன்று புயல்கள் உருவாகின்றன. சீனாவின் கிழக்குக் கரையை ஒட்டிய கடலிலும் புயல்கள் தோன்றுகின்றன.

சொல்லி வைத்தாற் போல இந்த அத்தனை புயல்களும் வலமிருந்து இடமாகத் தான் சுழலும். பூமியின் நடுக்கோட்டுக்கு(Equator) வடக்கே எந்தப் புயலும் இப்படியாகத் தான் சுழலும்.

   பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) AdobeStock_71739700.jpg?width=600&name=AdobeStock_71739700

இதற்கு நேர் மாறாக நடுக்கோட்டுக்கு தெற்கே தோன்றும் புயல்கள் அனைத்தும் இடமிருந்து வலப்புறமாகச் சுழலும். கீழே உள்ள படத்தில் புயல் இடமிருந்து வலப்புறமாக (Clockwise) சுழல்வதைக் கவனிக்கவும். இப்புயல் தென் கோளார்த்தத்தில் உருவானதாகும்.தென் கோளார்த்தத்தில் புயல்கள் அனைத்தும் இவ்விதமாகத் தான் சுழலும்.

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) An-Anticyclone-like-a-cyclone-rotates-in-a-horizontal-plane-around-the-center-with

வட கோளார்த்தப் புயல்கள் ஒரு விதமாகவும் தென் கோளார்த்தப் புயல்கள் வேறு விதமாகவும் சுழல்வதற்கு கொரியாலிஸ் விளைவு(Coriolis Effect) காரணம். பிரெஞ்சு விஞ்ஞானியும் கணித நிபுணருமான குஸ்டாவ் கொரியாலிஸ் (Gaspard-Gustave de Coriolis) 1835 ஆம் ஆண்டில் அறிவித்த கொள்கை புயல்களின் இப்போக்குக்கான அடிப்படையை விளக்கியது. ஆகவே இதற்கு அவரது பெயர் வைக்கப்பட்டது.

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Cyclones_and_anticyclones1322859004780

பூமியானது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சுழல்கிறது. ஆகவே வட கோளார்த்தத்தில் புயல் உருவாகி மேகக் கூட்டங்கள் சுழல ஆரம்பிக்கும் போது வட திசையிலிருந்து தெற்கு நோக்கி வீசும் காற்றும் அத்துடன் மேகங்களும் பூமி சுழலும் திசையை நோக்கி அதாவது வலப் புறமாக சற்று திருப்பப்படுகின்றன. ஆகவே அவை வலப்புறத்திலிருந்து இடப்புறமாகச் சுழல ஆரம்பிக்கின்றன.

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Hurricanesspincounterclockwise

தென் கோளார்த்ததில் இதற்கு நேர் மாறான விளைவு ஏற்பட்டு புயல் மேகங்கள் இடமிருந்து வலப்புறமாகச் சுழல முற்படுகின்றன.

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Difference-in-directions-of-hurricanes-in-northern-hemisphere-and-southern-hemisphere

கொரியாலிஸ் விளைவு புயல்கள் சுழலும் பாணியை மட்டுமன்றி பீரங்கிக் குண்டுகள் செல்லும் பாதையிலும் விளைவை உண்டாக்குகின்றன. தரைப் படை மற்றும் போர்க்கப்பல்களில் உள்ள பீரங்கிகளின் குண்டுகள் பல கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடியவை.

பூமியின் வட கோளார்த்தத்தில் வடக்கு நோக்கி பீரங்கிக் குண்டுகளைச் செலுத்தும் போது கொரியாலிஸ் விளைவு காரணமாக சற்றே வலப்புறம் விலகும். ராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல் நடத்தும் போது இதனை மனதில் கொண்டு குண்டுகளைச் செலுத்துவர். அப்போது தான் அவை இலக்கை சரியாகத் தாக்கும்.

ஆனால் முதல் உலகப் போரின் போது பிரிட்டிஷ் படைக்கும் ஜெர்மன் படைக்கும் பூமியின் நடுக்கோட்டுக்குத் தெற்கே கடற் போர் நடந்தது. போரின் ஆரம்பக் கட்டத்தில் பிரிட்டிஷ் கடற் படையின் பீரங்கிக் குண்டுகள் மிகவும் தள்ளிப் போய் விழுந்தன. அவர்கள் கொரியாலிஸ் விளைவை (வட கோளார்த்தத்தில் ஏற்படுகின்ற விளைவை)  மனதில் கொண்டு அத்ற்கேற்பத் தாக்கினர். ஆனால் தென் கோளார்த்தத்தில் பீரங்கிக் குண்டுகள் இடது புறம் விலகும் என்பதை  தாமதமாகவே உணர்ந்தார்கள்.

பூமியில் காற்றழுத்தம் மிகக் குறைவாக உள்ள பகுதி உண்டு. காற்றழுத்தம் மிக அதிகமாக உள்ள பகுதியும் உண்டு. காற்றழுத்தம் மிகக் குறைவாக உள்ள பகுதியை மையமாக் கொண்டவை தான் cyclones. காற்றழுத்தம் மிகுதியாக உள்ள இடத்தை மையமாகக் கொண்டவை Anticyclones( எதிர்புயல் என்றும் சொல்ல்லாம்) இந்த Anticyclones வடகோளார்த்தத்தில் இடமிருந்து வலமாக -Clockwise சுழலும். தென் கோளார்த்ததில் வலமிருந்து இடமாக சுழலும். anticyclones நல்ல வானிலையைக் கொண்டு வருபவை

வியாழன் கிரகத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக வீசிவரும் புயல் இதற்கு நேர்மாறான திசையில் சுழல்கிறது. வியாழன் கிரகத்தில் உள்ள Great Red Spot மேற்கூறிய Anticyclone வகையிலானது. ஆகவே தான் அது வலமிருந்து இடமாக நேர்மாறான திசையில் சுழல்கிறது.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1706
Join date : 23/05/2021

Back to top Go down

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Empty கார்த்திகை விண்மீன்

Post by வாகரைமைந்தன் Wed Jul 21, 2021 4:02 pm

கார்த்திகைப் பண்டிகை தமிழகத்தில் கொண்டாடப்படுகின்ற முக்கிய பண்டிகைகளில் ஒன்று. எந்த ஆண்டாக இருந்தாலும் சரி, கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியையொட்டித் தான் இப்பண்டிகை வரும். அனேகமாக அன்றைய தினம் கார்த்திகை நட்சத்திரமாக இருக்கும்.  இது வானவியல் (Astronomy) பற்றியது. அதாவது கார்த்திகைப் பண்டிகை கொண்டாடப்படுவதற்கு எவ்விதம் வானவியல் அம்சங்கள் காரணமாக உள்ளன என்பதை விளக்குவது.

பூமியைச் சந்திரன் சுற்றி வருவதை நாம் அறிவோம். பௌர்ணமியன்று சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் இதே வரிசையில் நேர்கோட்டில் இருப்பதாகச் சொல்லலாம். அந்த நேர்கோட்டை நாம் நீட்டிக் கொண்டே போனால் கோடானு கோடி கிலோ மீட்டருக்குப் பிறகு கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் இருக்கின்ற இடத்துக்குப் போய்ச் சேரும். அதாவது சூரியன் - பூமி - சந்திரன் - கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் ஆகிய நான்கும் கிட்டத்தட்ட ஒரே வரிசையில் இருக்கும்.

டிசம்பர் 10 ஆம் தேதி இவ்விதமாகத்தான் இருக்கும். ஆண்டில் ஒரு முறை தான், அதாவது கார்த்திகைப் பௌர்ணமியன்று தான், இந்த நான்கும் ஒரே வரிசையில் இருக்கும். இதை அடிப்படையாக வைத்தே கார்த்திகைப் பண்டிகை.கொண்டாடுகிறார்கள். வானில் ஆண்டில் ஒரு முறை காணப்படுகின்ற ஓர் ‘அணிவகுப்பை’  பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள் எனலாம்.

தமிழகத்தின் பல பண்டிகைகள் இவ்விதம் வானவியல் அடிப்படையிலானவை. பண்டைக்காலத்தில் தமிழர்கள் வானவியலில் வல்லுநர்களாக இருந்ததை இவை காட்டுவதாகச் சொல்லலாம். சங்க இலக்கியங்களிலும் வானவியல் பற்றிய குறிப்புகள் உள்ளன.

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) 2012%2BEarth%2BMoon%2BSun%2BPleiades%2BAlignment

வானவியல் நிபுணர்கள் வானத்தை 12 ராசிகளாகப் பிரித்துள்ளனர். அவற்றில் ரிஷப ராசியும் ஒன்று. இந்த ரிஷப ராசியில் அடை போன்று பல நட்சத்திரங்கள் காணப்படும். இந்த நட்சத்திரக் கூட்டத்துக்கு நமது முன்னோர்கள் கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்று பெயர் வைத்தனர்.

சந்திரன் ஓயாது பூமியைச் சுற்றி வருகின்றது. ஆண்டில் சுமார் 12 அல்லது 13 பௌர்ணமிகள் வரும். ஏற்கெனவே குறிப்பிட்டபடி கார்த்திகை மாதப் பௌர்ணமியில் மட்டுமே சூரியன், பூமி,பௌர்ணமி சந்திரன், கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் ( ரிஷப ராசி) ஆகிய நான்கும் ஒரே நேர் கோட்டில் இருக்கும். மற்ற மாதங்களில் வருகின்ற பௌர்ணமிகளில் சந்திரனுக்குப் பின்னால் ரிஷப ராசிக்குப் பதில் வேறு ராசி அமைந்திருக்கும்.

வேடிக்கை என்னவென்றால், கார்த்திகைப் பண்டிகையன்று கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தை வானில் காண இயலாது. வானில் சந்திரனுக்கு அருகில் கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் இருக்கும் என்பதால் பௌர்ணமி நிலவின் பிரசாகத்தின் காரணமாக அது புலப்படாது. ஆனால் ஜனவரி மாதத்தில் கிழக்கு வானில் இரவு 8 மணிக்கு மேல் காண முடியும். பின்னர் ஏப்ரல்-மே மாதங்களில் மேற்கு வானில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தைக் காண முடியும்.

இந்த நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள Alcyone எனப்படும் நட்சத்திரமே கார்த்திகை நட்சத்திரமாகக் அழைக்கப்படுகிறது. வானவியலில் இந்த நட்சத்திரம் Eta Tauri என்று அழைக்கப்படுகிறது. இது சூரியனை விட 1000 மடங்கு பிரகாசம் கொண்டது. வட மொழியில் கார்த்திகை நட்சத்திரம் க்ருத்திகா எனப்படுகிறது. இந்தியாவில் ஆண்களில் பலர் கார்த்திக், கார்த்திகேயன் என்று தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கிறார்கள். பெண்களாக இருந்தால் க்ருத்திகா என்று பெயரிடுகின்றனர்

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Pleiades+nasa+esa+aura+caltech+credit
படத்தில் இடமிருந்து இரண்டாவதாக உள்ளது தான் கார்த்திகை (Alcyone) நட்சத்திரம்.

முருகன் பற்றிய புராணக் கதையில் கார்த்திகைப் பெண்டிர் அறுவர் முருகனை வளர்த்ததாகக் கூறப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள ஆறு நட்சத்திரங்களும் அவர்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இக்காரணத்தால் தான் முருகனுக்குக் கார்த்திகேயன் என்றும் ஒரு பெயர் உள்ளது.

ஜப்பானிய மொழியில் இந்த நட்சத்திரக் கூட்டதுக்கு சுபாரு என்று பெயர். ஜப்பானிய கார் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்துக்கு சுபாரு என்று வைத்ததுடன் நில்லாமல் அதன் லோகோவில் ஆறு நட்சத்திரக் குறிகளைப் போட்டுக்கொண்டுள்ளது. அரபு மொழியில் கார்த்திகை நட்சத்திரத்துக்கு அல் துராயா என்று பெயர். இப்பெயரில் சேடிலைட் டெலிபோன் நிறுவனம் ஒன்று உள்ளது.

கார்த்திகை என்பது ஒரு விண்மீன் கூட்டத்திற்கு பெயர். அறிவியல்படியும் Pleiades வானத்தில் நட்சத்திரக் கூட்டம்.

 பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Alcyone+1

இந்த நட்சத்திரக் கூட்டத்துக்கு ஆங்கிலத்தில் Pleiades என்று பெயர். ஏழு சகோதரிகள் என்பது அதன் பொருள். கிரேக்க புராணத்தில் வரும் ஏழு சகோதரிகளின் பெயர்கள் இந்த நட்சத்திரங்களுக்கு வைக்கப்பட்டன.

வெறும் கண்ணால் பார்த்தாலே இந்த நட்சத்திரக் கூட்டத்தில் ஆறு நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரியும். பார்வை கூர்மையாக உள்ளவர்களால் ஏழு நட்சத்திரங்களைக் காண இயலும்.

அரேபியர் பல நூற்றாண்டுகளாக கடல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர்கள்.  திசைகாட்டும் கருவி கூட இல்லாத காலத்தில் இரவில் நட்சத்திரங்க்ளை வைத்தே திசை அறிந்தனர். ஆகவே பார்வைக் கூர்மை முக்கிய அம்சமாக இருந்தது. எவர் ஒருவரால் வெறும் கண்ணால் கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தில் ஏழு நட்சத்திரங்களைக் காண முடிந்ததோ அவர்களே மாலுமிகளாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர் என்று சொல்வார்கள். பல நட்சத்திரங்களுக்கு அரபு வானவியலார் வைத்த பெயர்கள் இன்றளவும் வானவியல் துறையில் அப்படியே பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வானவியலின்படி கார்த்திகை நட்சத்திரக் கூட்டமானது Open Cluster வகையைச் சேர்ந்தது. தமிழில் இதை நட்சத்திரத் திரள் எனலாம். கார்த்திகை நட்சத்திரத் திரள் சுமார் 450 ஒளியாண்டு தொலைவில் உள்ளது (ஒரு ஒளியாண்டுத் தொலைவு என்பது 9 லட்சத்து 50 ஆயிரம் கோடி கிலோ மீட்டர்).

இந்த நட்சத்திரக் கூட்டம் தோன்றி சுமார் 10 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இன்னும் சுமார் 25 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் கார்த்திகைக் கூட்டத்தில் உள்ள நட்சத்திரங்கள் வெவ்வேறு திசையில் நகர்ந்து சென்று விடலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Dec+10+2011+sky+chart

இது டிசம்பர் 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வான்காட்சி எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் படமாகும்.வலது ஓரத்தில் வெண்மை நிற வட்டம் பௌர்ணமி சந்திரன். அதற்கு அருகே Alcyone இருப்பதைக் காணலாம்

வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி வேறு ஒரு வகையிலும் விசேஷமானது. அன்று சந்திர கிரகணம். சூரியன் - பூமி - சந்திரன் ஆகிய மூன்றும் நேர் கோட்டில் இருப்பதால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழுகிறது. இதன் விளைவாக சந்திர கிரகணம் நிகழ்கிறது.

சந்திரனின் சுற்றுப்பாதை சாய்வான தளத்தில் உள்ளது. ஆகவே பல பௌர்ணமிகளில்  சந்திரன்  பூமியின் நிழலுக்குள் இல்லாமல் அதற்கு மேலே அல்லது கீழே அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பௌர்ணமியிலும் சந்திர கிரகணம் ஏற்படாததற்கு இதுவே காரணம்.அபூர்வமாக சந்திரன் தனது சுற்றுப்பாதையில் பூமியின் நிழலுக்குள் அமைந்து விடும். அப்போது சந்திர கிரகணம் நிகழும்.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1706
Join date : 23/05/2021

Back to top Go down

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Empty கார்த்திகை -நம்பிக்கைகள்

Post by வாகரைமைந்தன் Wed Jul 21, 2021 4:06 pm

வரலாற்றுத் தகவல்களின்படி..கல்வெட்டுகளின் தகவலின்படி..
தமிழர்கள் இந்துக்கள் அல்லர்.இந்து மதத்தின் ஆக்கிரமிப்பை மூடநம்பிக்கைகளை எதிர்த்து உருவானது சைவம். தமிழர்கள் வானவியலில் சங்ககாலத்திற்கு  முன்னர் இருந்தே சிறந்து விளங்கினர் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உண்டு.வானவியலையும் பண்டிகைகளையும் இணைத்து கொண்டாடினார்கள்.அந்த நிலையில் ஒரு பண்டிகை…..

இந்துக்களின் கதைப்படி…
சிவபெருமானுடைய வீரியத்தை அற்புதமான விதத்தில் அக்கினி தேவனுடைய தலையீட்டினால் ஏழு மகரிசிகளில் ஆறு ரிசிகளுடைய மனைவிகள் பெற்றுக்கொள்ளும்படி நேர்ந்தது. அவர்களுக்குப்பிறந்த ஆறு குழந்தைகளும் ஒன்று சேர்ந்து சண்முகன் என்ற ஒரு குழந்தை ஆயிற்று. இந்த ஆறு மனைவிகளுடைய கணவர்கள் அவர்களுக்குக் கொடுத்த சாபப்படி அவர்கள் ஆறு நட்சத்திரங்களாகி விட்டார்கள். அந்த நட்சத்திரக் கூட்டம் தான் கார்த்திகை. வெறுங்கண்ணாலேயே நாம் 6 நட்சத்திரங்களைப்பார்க்கலாம்.

அதுமட்டுமல்லாது ஆதித் தமிழர்கள் இதை வைத்து நேரத்தைக் கணித்தார்களாம்.

கிரேக்கர்கள்…
இந்த கார்த்திகை விண்மீன்கூட்டத்தைக் கிரேக்கக் கதைகளிலுள்ள ‘ஏழு சகோதரிகள்’ என்று சொல்வதுண்டு. அவர்களுடைய பெயர்கள்: Alcyone, Electra, Maia, Merope, Taygete, Celaeno and Asterope; அவர்களுடைய பெற்றோர்கள் Pleione and Atlas ம் இந்தக் கூட்டத்தில் சேர்ந்தவர்கள். அதில் உள்ள அல்சியொன் பற்றி...

கிரேக்கர்கள் நம்பிக்கைகளில் பெயர் பெற்றவர்கள் எனலாம்.கார்த்திகை பற்றி என்ன சொல்கிறார்கள் ஆதி கிரேக்கர்கள்…

கிரேக்க புராணங்களில் Alcyone என்ற பெண் (கார்த்திகை) Aeolus  + Enarete (Aegiale) என்பவர்களின்  மகள் எனவும்,  Phosphorus இன் மகன் Ceyx கார்த்திகையின் (Alcyone) கணவன் எனவும் சொல்லப்படுகிறது.Alcyone  ம்  Ceyx உம் தங்களை  "Zeus" – "Hera“ ( "ஜீயஸ்" மற்றும் "ஹேரா")எனச் சொல்லிக்கொண்டனர்.இது கடவுள்களின் கடவுளை கோபப்படுத்தியது. இதற்குத்  தண்டனையாக, ஜீயஸ் சீக்ஸ் கப்பலை இடிமின்னலைக் கொண்டு எரித்துக் கொலை செய்தார்.

பேய் வடிவத்தில் சீக்ஸ் அல்லது கனவுகளின் கடவுள் மார்பியஸ் சீக்ஸின் வடிவத்தை எடுத்து அல்சியோனுக்கு முன்னால் தோன்றி, என்ன நடந்தது என்பதை அவளுக்குத் தெரிவித்தது.

அல்சியோன் துக்கத்தால்  கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். தெய்வங்கள், தம்பதியினரின் தலைவிதியைப் பற்றி வருத்தப்பட்டு, அவற்றை ஹால்சியான் பறவைகளாக மாற்றின.
புராணம் என்னவென்றால், கடல் அமைதியாக இருக்கும்போது ஹால்சியான் பறவைகள் கூடுகளை உருவாக்குகின்றன, ஏனெனில் அல்சியொன் கடலில் விழுந்து  இரண்டும் கடலில் மூழ்கிவிட்டதால்,அதற்காக கூடுகள் கட்டுகின்றன..

இந்துக் கதைகள் பற்றி விவேகானந்தர், அவை புனை கதை எனச் சொல்லியபின் மேலும் அதுபற்றி தெரிந்துகொள்ள அவசியம் இருக்காது.

தமிழர்களின் வானியல் அறிவியலை மதத்திற்க்குள் புதைத்து அறிவியலை கேக்கூத்தாகியதன் விளைவு,….
தமிழர்களின் அறிவியல் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படாமல்,மேல்நாட்டவர்களின் அறிவியலே உலகின் கண்ணுக்குள் தெரிகிறது.ஒரு மின் அஞ்சலை கண்டுபிடித்தது தமிழன் தான் என்பதை நிரூபிக்கவே எவ்வளவு பாடுபட்டோம் என்பதை உலகம் அறிந்தாலும் தமிழன் அறியவில்லை.வட நாட்டவர்களின் சதி என்பதா அல்லது தமிழனின் அலட்சியம் அடிமைத்தனம் என்பதா?விதி செய்த சதியோ தமிழா..?
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1706
Join date : 23/05/2021

Back to top Go down

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Empty மூலகங்களின் பட்டியல் (Periodic Table)

Post by வாகரைமைந்தன் Thu Jul 22, 2021 7:52 pm

பள்ளியில் வேதியல் பாடம் படித்தவர்களுக்கு மூலகங்களின் பட்டியல் (Periodic Table) பற்றித் தெரிந்திருக்கும். பூமியில் எவ்வளவு வகையான மூலகங்க்ள் (Elements) உள்ளன என்பதை இப்பட்டியல் வரைபட வடிவில் காட்டும். அந்தந்த மூலகத்துக்கு உரிய எண், அதன் சுருக்கமான அடையாளப் பெயர் ஆகியவை அந்தப் பட்டியலில் காணப்படும்.

ஆனால் அணு எண் 57 ல் தொடங்கி அணு எண் 71 வரையிலான மூலகங்க்ள் பிரதான பட்டியலில் காணப்படமாட்டாது. அவற்றை மூலகங்களின் பட்டியலுக்கு கீழே தனி வரிசையில் அளித்திருப்பார்கள். இந்த மூலகங்களுக்கு Lanthanides  என்ற பெயரும் உண்டு. லாந்தானம் வகையறா என்பது இதன் பொருள்.

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) 9554062_orig

லாந்தனம் வகையறா கிடைப்பதற்கு அரியவை என்ற பொருளில் இந்த மூலகங்களுக்கு அருமண் உலோகங்கள்(Rare Earth Metals) என்ற பொருந்தாப் பெயரும் உண்டு.   இந்த மூலகங்களைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நடந்த காலகட்டத்தில் இவை கிடைப்பதற்கு அரியவையாக இருந்தன. தவிர, ஒரு காலத்தில் ஆக்சைடுகள்(Oxide) மண் என்றும் குறிப்பிடப்பட்டது.  ஆகவே அருமண் உலோகம் என்ற பெயர்.

உண்மையில் இந்த உலோகங்கள் அரியவையும் அல்ல, இவை மண்ணும் அல்ல. சொல்லப்போனால் பூமியின் மேற்பரப்பில் தங்கத்தை விட நியோடைமியம் உலோகம் அதிகமாக உள்ளது. இந்த வகை உலோகங்கள் இப்போது டன் கணக்கில் நிறையவே உற்பத்தி செய்யப்படுகின்றன.

லாந்தானம் வகையறா உலோகங்கள் பலவும் வாயில் நுழையாப் பெயர்களைக் கொண்டவை. பிராசியோடைமியம், நியோடைமியம், டிஸ்புரோசியம், இட்டர்பியம், லூடேஷியம் முதலியவற்றை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இவை அல்லாமல் அருமண் உலோகங்களின் பட்டியலில் லாந்தானம், செரியம், புரோமிதியம், சமாரியம், யூரோப்பியம், கடோலினியம், டெர்பியம், ஹோல்மியம், எர்பியம், தூலியம் ஆகியவையும் அடங்கும்.

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) 640px-Rareearthoxides

Actinides எனப்படும் கதிரியக்கம் கொண்ட 15 உலோகங்கள் actinium முதல் lawrencium வரை உள்ளவற்றில் (89-103) பல மனிதனால் உருவாக்கப்பட்டவையாகும்.

 பிரதான மூலகப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஸ்காண்டியம் (அணு எண் 21) இட்ரியம் (அணு எண் 39) ஆகியவையும் அருமண் உலோகங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளன. (இட்டர்பியம் வேறு, இட்ரியம் வேறு).  பலருக்கும் இப்படியான உலோகங்கள் உள்ளன என்பது தெரியாது (அருமண் உலோகங்கள் பட்டியலில் அடங்கிய புரோமிதியம் இயற்கையில் கிடைப்பது இல்லை).

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Position-of-the-lanthanoids-lanthanides-and-rare-earths-in-the-Periodic-Table-with

நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற பொருட்கள் பலவற்றில் அருமண் உலோகங்களில் ஏதாவது ஒன்று அடங்கியுள்ளது. வீடுகளில் காஸ் அடுப்பைப் பற்ற வைப்பதற்குப் பயன்படுத்தும் காஸ் லைட்டரில் தீப்பொறியை தோற்றுவிப்பது செரியம் உலோகம். சிகரெட் லைட்டரிலும் செரியம் அடங்கியுள்ளது. பட்டி தொட்டிகளிலும் பயன்படுத்தப்படும் செல் போன்களிலும் அருமண் உலோகங்கள் சிறு அளவில் அடங்கியுள்ளன.

வர்த்தகத் துறையிலும் ராணுவத் துறையிலும் இவற்றுக்கு நூற்றுக் கணக்கான உபயோகங்கள் உள்ளன. காந்தங்கள், லேசர்கள், இழை ஒளியியல், பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆகிய துறைகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

கம்ப்யூட்டர் டிஸ்க் டிரைவ், சி.எப்.எல். பல்புகள், சார்ஜ் செய்யத்தக்க பாட்டரிகள், கம்ப்யூட்டர் மெமரி சிப், எக்ஸ்ரே டியூப், கம்ப்யூட்டர் மானிட்டர்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள், மின்சாரம் உற்பத்தி செய்யும் காற்றாலைகள், சூரிய மின்பலகைகள் என பல்வேறான பொருட்களைத் தயாரிப்பதற்கு இவை அத்தியாவசியமானவை. ராணுவத் துறையில் இவை பயன்படுத்தப்படுகின்ற கருவிகளின் பெயர்கள் வெளியிடப்படுவதில்லை. அணுசக்தித் துறையிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் தமிழக மற்றும் கேரளக் கரையில் கிடைக்கும் மோனசைட் மணலில் பலவகையான அருமண் உலோகங்கள் அடங்கியுள்ளன. இந்திய அரசு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆலைகளை அமைத்து இவற்றைப் பிரித்து எடுத்து வருகிறது. ஒரிசாவிலும் இவை கிடைக்கின்றன. ஆனால் இந்தியா 2004 ஆம் ஆண்டிலிருந்து இவற்றை ஏற்றுமதி செய்வது கிடையாது.

உலகில் அருமண் உலோகங்களின் உற்பத்தியில் 95 சதவிகிதம் சீனாவின் கையில் உள்ளது. கடந்த ஆண்டில் ஜப்பானுடன் ஏற்பட்ட ஒரு தகராறைத் தொடர்ந்து ஜப்பானுக்கு அருமண் உலோகங்களின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது. இதனால் ஜப்பானில் கார் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.

மின்சாரத்தால் இயங்கும் கார்களில் இடம் பெறும் காந்தங்களின் உறபத்திக்கு நியோடைமியம், டிஸ்புரோசியம் ஆகிய அருமண் மூலகங்கள் அவசியம். அமெரிக்காவுக்கான அருமண் உலோக ஏற்றுமதி மீதும் சீனா தடை விதித்தது. இத்தடை சில மாதங்களே நீடித்தது. அத்துடன் சீனா இவற்றின் ஏற்றுமதி கோட்டாவை ஒரேயடியாகக் குறைத்தது.

ஆகவே சீனாவை இனி முற்றிலுமாக நம்ப முடியாது என்று அமெரிக்காவும் ஜப்பானும் முடிவெடுத்தன. சீனாவின் நடவடிக்கையைத் தொடர்ந்து உலக மார்க்கெட்டில் அருமண் உலோகங்கள் பலவற்றின் விலை ஒரு கட்டத்தில் பத்து மடங்கு உயர்ந்தது.

சீனாவின் தடை நடவடிக்கையைத் தொடர்ந்து ஜப்பானுக்கு அருமண் உலோக ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் ஜப்பானிய உதவியுடன் புதிய அருமண் பிரிப்பு ஆலை ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்தியா தனது அருமண் உலோக உற்பத்தியை மூன்று மடங்காக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

இவ்விதப் பின்னணியில் தான் கடலடி உலோக உருண்டைகளை எடுப்பதில் மேற்கத்திய வட்டாரங்கள் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளன. இந்த உலோக உருண்டைகளில் அனேகமாக எல்லா அருமண் உலோகங்களும் சிறு அளவுக்கு அடங்கியுள்ளன. ஆனால் இவற்றை மேலே எடுத்து அருமண் உலோகங்களை வர்த்தக ரீதியில் பிரித்தெடுப்பதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1706
Join date : 23/05/2021

Back to top Go down

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Empty சனிப் பெயர்ச்சி

Post by வாகரைமைந்தன் Sat Jul 24, 2021 3:14 pm

சூரிய மண்டலத்தில் சூரியனை சுற்றும் கிரகங்களில் சனி முக்கியமான ஒன்றாகும். மொத்தமுள்ள எட்டு கிரகங்களில் வியாழன் தான் மிகப் பெரியது. சனி அதற்கு அடுத்த இடத்தை வகிக்கிறது.

சனி கிரகத்தை வானில் காண்பதற்கு டெலஸ்கோப் அல்லது பைனாகுலர்ஸ் தேவையில்லை. வெறும் கண்ணால் எளிதில் காணலாம். ஆனால் அது ஒளிப்புள்ளியாகத் தான் தெரியும். சனி கிரகத்தின் வளையங்கள் தெரியாது.

மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்து வானில் தெரிகின்ற கிரகங்களை ஆராயத் தொடங்கினான். வானில் ஓர் இடத்தில் தென்படுகின்ற ஒரு கிரகம் அதே இடத்துக்கு மறுபடி வந்து சேர எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன என்பதைக் கணக்கிடலானான்.

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Planet10

வெறும் கண்ணால் பார்த்தால் தெரிகின்ற புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் வானில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும். இவற்றில் சனி கிரகம் தான் மிக மெதுவாக நகருகிறது என்று ஆதி நாட்களில் கண்டறிந்தார்கள். ஆகவே சனி கிரகத்துக்கு சனைச்சர  என்று பெயர் வைத்தன்ர். இது சம்ஸ்கிருத மொழியிலான சொல். அதற்கு ‘மெதுவாகச் செல்கின்ற(து)வன்’ என்று பொருள். அப்பெயர் காலப்போக்கில் சனைச்சரன் ஆகியது. பின்னர் சுருக்கமாக சனி என்று அழைக்கப்படலாயிற்று.

சனி கிரகம் சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க 29.5 ஆண்டுகள் ஆகின்றன. இத்துடன் ஒப்பிட்டால் வியாழன் கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 11.86 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது. கெப்ளர் (Kepler) என்ற ஜெர்மன் வானவியல் நிபுணர் கண்டறிந்து கூறிய விதிகளின்படி ஒரு கிரகம் எந்த அளவுக்கு சூரியனிலிருந்து மிக அப்பால் உள்ளதோ அந்த அளவுக்கு அது தனது சுற்றுப் பாதையில் மெதுவாகச் செல்லும். சூரிய மண்டலத்தில் சனி கிரகம் வியாழனுக்கு அப்பால் ஆறாவது வட்டத்தில் அமைந்துள்ளது.

நாம் காணும் வானில் சூரியனும் சந்திரனும் செல்கின்ற பாதையில் தான் கிரகங்களும் நகர்ந்து செல்கின்றன. இப்பாதைக்கு வான் வீதி (zodiac) என்று பெயர். அடையாளம் காண்பதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த நாளிலேயே வானவியலார் இதை 12 ராசிகளாகப் பிரித்தனர். இந்த ராசிகள் நட்சத்திரங்கள் அடங்கியவை. இந்த ராசிகளின் எல்லைகள் நாமாக கற்பனையாக ஏற்படுத்திக் கொண்டவை. கிரகங்கள் நகர்ந்து செல்லும் போது இயல்பாக இடம் மாறிக் கொண்டிருக்கும். ஒரு கிரகம் சிம்ம ராசியில் இருப்பதாக வைத்துக் கொண்டால் அக்கிரகத்துக்குப் பின்னால் பல கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் சிம்ம ராசி நட்சத்திரங்கள் இருக்கும்.

இன்று (24.07.2021) வானில் கிரகங்களின் நிலை மேற்கத்திய முறையில் ராசிகளும்
பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Planet10

உதாரணமாக,வானில் கன்னி ராசி எனப்படும் பகுதி வழியே இதுவரை நகர்ந்து கொண்டிருந்த சனி கிரகம் கன்னி ராசியின் கற்பனையான எல்லையைக் கடந்து துலா ராசி வழியே நகர்ந்து செல்லத் தொடங்கியுள்ளது. இதுவே சனிப் பெயர்ச்சி ஆகும். இதிலிருந்து எந்த கிரகமும் ஒரு ராசியில் ஒரே இடத்தில் நிலையாக இருப்பது கிடையாது என்பதைப் புரிந்து கொண்டிருக்கலாம்.

இன்று (24.07.2021) இந்திய முறைப்படி வானில் கிரகங்களும் ராசிகளும்
பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Planet12

செவ்வாய், வியாழன் ஆகிய கிரகங்களை நீங்கள் டெலஸ்கோப் மூலம் பார்த்தால் ஒளி வட்டமாகத் தெரியும்.  ஆனால் சனி கிரகம் மட்டும் அலாதியானது. அதற்கு சனி கிரகத்தின் வளையங்களே காரணம். டெலஸ்கோப் மூலம் பார்த்தால் சனி கிரகமானது ஒரு வாஷர் நடுவே உள்ள கோலிக்குண்டு மாதிரியாகக் காட்சி அளிக்கும்.

வியாழன், யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றுக்கும் வளையங்கள் உள்ளன என்றாலும் அவை மெல்லியவை. ஆகவே அவை எடுப்பாகத் தெரிவதில்லை. ஆனால் சனி கிரகத்தின் வளையங்கள் கண்ணைக் கவர்கின்றன.

சனி கிரகத்தை வடிவில் சிறியவையான கோடானு கோடி பனிக்கட்டி உருணடைகள் சுற்றி வருகின்றன. இவை தான் வளையங்களாகக் காட்சி அளிக்கின்றன. பூமியும் சனியும் எந்தெந்த இடங்களில் உள்ளன, அத்துடன் இரண்டும் சம தளத்தில் உள்ளனவா என்பதைப் பொருத்து சனி கிரகம் தனது வளையங்களுடன் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு விதமாகக் காட்சி அளிக்கிறது. இந்த பனிக்கட்டி உருண்டைகள் அனைத்தும் வியக்கத்தக்க ஒழுங்குடன் சனி கிரகத்தைச் சுற்றி வருவது அற்புதமான காட்சியாகும்.

பூமிக்கு ஒரு சந்திரன் தான் உண்டு. ஆனால் சனி கிரகத்துக்குப் பெரியதும் சிறியதுமான 62 சந்திரங்கள் உள்ளன. இவற்றில் பலவும் வடிவில் சிறியவை. சனி கிரகம் சூரியனிலிருந்து சுமார் 140 கோடி கிலோ மீட்ட்ர் தொலைவில் உள்ளது.  அவ்வளவு தொலைவில் சூரியனின் வெப்பம் உறைக்காது. ஆகவே சனி கிரகம் உறைந்த பனிக்கட்டி உருண்டையாக உள்ளது (சூரியனிலிருந்து பூமி உள்ள தூரம் சுமார் 15 கோடி கிலோ மீட்டர்).

1979 ஆம் ஆண்டில் தொடங்கி பயனீர்--1, வாயேஜர்-1, வாயேஜர்-2 ஆகிய ஆளில்லா விண்கலங்கள் சனி கிரகத்தை ஆராய்ந்தன. 1997 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டு 2004 ஆம் ஆண்டில் சனி கிரகத்தை சென்றடைந்த காசினி-ஹைகன்ஸ் (Cassini-Huygens) விண்கலம் தொடர்ந்து சனி கிரகத்தை ஆராய்ந்து படங்களை அனுப்பி வருகிறது.

ரோமானிய புராணத்தில் சனி விவசாயத்தின் கடவுளாகக் கருதப்படுகிறார். இந்திய ஜோசிய முறையில் சனி கிரகம் பாபக் கிரகமாக, கெடுதல் செய்வதாகக் கருதப்படுகிறது.

ஜோசியத்தில் நம்பிக்கை வைப்பது அவரவர் விருப்பம். ஆனால் ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளவர்களும் சரி, நம்பிக்கை இல்லாதவர்களும் சரி, சனி கிரகத்தின் பெயரையே வசைச் சொல்லாக ஆக்கி விட்டனர். ‘சனியன் பிடித்த பஸ் தினமும் லேட்டா வருது’. ’சனியன் பிடித்த மழை எப்ப நிக்குமோ தெரியல?’. இப்படியாக எதற்கெடுத்தாலும் சனி கிரகத்தைத் திட்டித் தீர்ப்பது வேதனைக்குரியதாகும்.

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Night_10

சனி கிரகத்தை டிசம்பர் 22 ஆம் தேதி தென் கிழக்கு வானில் அதிகாலை 5 மணி வாக்கில் காணலாம் . அடிவானில் சந்திரன் பிறையாகத் தெரியும். அதற்கு மேலே பக்கம் பக்கமாக இரு ஒளிப் புள்ளிகள் தெரியும். இடது புறம் இருப்பது சனிக் கிரகம். வலது புறம் இருப்பது சித்திரை (Spica) நட்சத்திரமாகும்.

 இது சனி கிரகத்தின் அரிய படமாகும். சனி கிரகம் சூரியனை மறைத்தபடி
இருந்த கட்டத்தில் காசினி விண்கலம் மறு புறத்திலிருந்து இப்படத்தை
எடுத்தது. சனி கிரகத்தின் வளையங்கள் ஒளிருவதைக் கவனிக்கவும்.
பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Saturn+cassini+nasa

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1706
Join date : 23/05/2021

Back to top Go down

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Empty காசினி

Post by வாகரைமைந்தன் Sat Jul 24, 2021 3:21 pm

கி.பி. 1670-ம் ஆண்டு வாக்கில் ஜியோவன்னி டாமினிகோ காசினி (Giovanni Domenico Cassini) என்னும் இத்தாலிய அறிவியலாளர், சனி கிரகத்தின் ஐந்து புதிய துணைக்கோள்களைக் கண்டுபிடித்தார். அத்துடன், சனி கிரகத்தைச் சுற்றியுள்ள வளையங்களில் இடைவெளி உள்ளது என்றும் கண்டுபிடித்தார். ஹுய்ஜன்ஸ் (Christiaan Huygens ) என்னும் டச்சு விஞ்ஞானி சனியைச் சுற்றும் டைட்டான் என்னும் பெரிய துணைக் கோளை 1655-ல் கண்டுபிடித்தார். ஆகவே, அவர்களது பெயர்களை இணைத்து காசினி - ஹுய்ஜன்ஸ் ஆய்வுக் கலம் என்று இந்த விண்கலத்துக்கு பெயர் வைக்கப்பட்டது.
காசினி விண்கலம் (Cassini – Huygens) என்ற பெயர் காரணம்…

Oct. 15, 1997 இல் அனுப்பப்பட்ட காசினி சனிச் சுற்றில் Jan. 14, 2005  சென்றைடைந்தது.காசினி சனியை சுற்றி வலம் வரும் அதேசமயம்,Huygens , Titan இல் தரை இறங்கும்.
( Cassini: Saturn orbiter   /Huygens: Titan lander)                                                                                                                                

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) 1518

காசினி விண்வெளி விண்கலம்  மற்றும் ESA இன் ஹ்யூஜென்ஸ் லேண்டர், இது சனியின் மிகப்பெரிய சந்திரனான டைட்டனில் ஜனவரி 14 2005 இல் தரையிறங்கியது.  
                                                                                                                               
காசினி-ஹைசென்(Cassini–Huygens ) என்பது சனி கோளை ஆராய 1997 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று அமெரிக்காவின் கேப் கெனவரல் விண்வெளிக் கேந்திரத்திலிருந்து அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலமாகும். இது நாசா, ஈசா, ஆசி ( NASA, European Space Agency (ESA), Italian Space Agency (ASI )  ஆகியவற்றின் கூட்டு் முயற்சியில் உருவான தனித்துவமிக்க தானியிங்கி விண்கலம் ஆகும்.காசனி சனி கோளை ஆராய அனுப்பப்பட்ட நான்காவது விண்கலமும் சனியின் சுற்று வட்டத்திற்குள் சென்ற முதலாவது விண்கலமும் ஆகும்.. இது சனி கோளையும் அதன் நிலவுகளையம் 2004 ஆம் ஆண்டிலிருந்து ஆராய்கிறது.

இந்த விண்கலத்தின் எடை சுமார் 5 டன். அதன் உயரம் சுமார் ஏழு மீட்டர். அகலம் நான்கு மீட்டர். அதில் 14 வகையான ஆராய்ச்சிக் கருவிகள் இடம்பெற்றிருந்தன. காசினியின் உறுப்புகளின் எண்ணிக்கை 1,700. காசினி சனியின் நிலவுகளில் ஒன்றாகிய குளிர்ந்த நிலவான என்செலடசை கண்டறிந்தது, இதன் மேற்பரப்புக்கு அடியில் உப்புக்கடல் இருக்கலாமென்றும் உயிரினங்கள் வாழ இது துணைபுரியலாமென்றும் கருதப்படுகிறது.

காசினி சனி கிரகத்தின் காற்று மண்டலத்தை ஆயவு செய்தது. காசினியில் உள்ள கருவிகள் செயல்படவும், குளிர் தாக்காமல் வெப்பத்தை அளிக்கவும் காசினியில் அணுசக்தியால் இயங்கும் மின்கலம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த மின்கலத்தில் புளுட்டோனியம்-238 எனப்படும் அணுசக்திப் பொருள் 32 கிலோ வைக்கப்பட்டிருந்தது. இந்த அணுசக்திப் பொருளிலிருந்து வெளிப்பட்ட வெப்பம் மின்சாரமாக மாற்றப்பட்டது.

2017 செப்டம்பர் 15 அன்று தனது பணிகளில் ஒன்றாக அதி வேகத்தில் சனி கிரகத்தை நோக்கிப் பாய்ந்தபோது, பல துண்டுகளாக உடைந்து தீப்பிடித்து அழிந்துபோய் தன் பணிகளை முடித்துக்கொண்டு அழிவுற்றது.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1706
Join date : 23/05/2021

Back to top Go down

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Empty பால்வெளி ஆண்டு

Post by வாகரைமைந்தன் Mon Jul 26, 2021 7:28 pm

பால்வெளி ஆண்டு (Galactic year or cosmic year): சூரியன் ஒரு விண்மீன் (star) ஆகும். விண்வெளியில் சூரியனைப் போன்ற விண்மீன்கள் பல உள்ளன. கோடிக்கணக்கான விண்மீன்கள் சேர்ந்த ஒரு கூட்டம் விண்மீன் மண்டலம் (galaxy) என்று அழைக்கப்படுகின்றது. நம்முடைய சூரியனும் அப்படிப்பட்ட ஒரு விண்மீன் மண்டலத்தில் தான் அடங்கி உள்ளது. அந்த மண்டலத்தின் பெயர் பால்வெளி (milky way) மண்டலம்.இந்தப் பால்வெளி மண்டலம் வட்ட வடிவமாக இருக்கும். அதன் அகலம் 120,000 ஒளி ஆண்டுகள். அதனுடைய மையம் நம் சூரியனிலிருந்து 27,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. பால்வெளி மண்டலத்தில் ஏறத்தாழ 40,000 கோடி விண்மீன்கள் இருப்பதாகச் சொல்லப் படுகின்றது. அதன் மையத்தில் நம்மால் காணவியலாத கரும் பொருள் (dark matter) உள்ளதாகவும் சொல்லப் படுகின்றது. நம் சூரிய மண்டலம் பால்வெளி மையத்தில் உள்ள கரும் பொருளைச் சுற்றி மிகப் பெரிய வட்டப்பாதையில் வந்து கொண்டு இருக்கின்றது. நம் சூரிய மண்டலம் அந்த வட்டப்பாதையில் ஒரு சுற்று சுற்றி வர 2,250 இலக்கம் ஆண்டுகள் ஆகும். இதை ஒரு பால்வெளி ஆண்டு (galactic year) என்று சொல்வார்கள்.இதை வைத்துக் கொண்டு கீழ்க் கண்ட கணக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன.

   • 61 பால்வெளி ஆண்டுகளுக்கு முன்னால் நம் புடவி (universe) தோன்றியது.
   • 54 பால்வெளி ஆண்டுகளுக்கு முன்னால் நம் பால்வெளி மண்டலம் தோன்றியது.
   • 18.4 பால்வெளி ஆண்டுகளுக்கு முன்னால் நம் புடவியில் சூரியன் தோன்றியது.
   • 17 பால்வெளி ஆண்டுகளுக்கு முன்னால் நம் பூமியில் கடல் உருவாகியது.
   • 15 பால்வெளி ஆண்டுகளுக்கு முன்னால் நம் பூமியில் உயிரினங்களுக்கான அடிப்படை மூலக்கூறுகள் தோன்றின.
   • 13 பால்வெளி ஆண்டுகளுக்கு முன்னால் நம் பூமியில் பாக்டீரியாக்கள் தோன்றின.
   • 10 பால்வெளி ஆண்டுகளுக்கு முன்னால் நம் பூமியில் கண்டங்கள் தோன்றின.
   • 0.001 பால்வெளி ஆண்டுகளுக்கு முன்னால் நம் பூமியில் இன்றைய மனிதன் தோன்றினான்.
(விக்கிபீடியா)
   

 பூமியானது தனது பாதையில்  சூரியனை ஒரு முறை சுற்றி முடித்தால் அதை ஓர் ஆண்டு என்று கணக்கு வைத்திருக்கிறோம்.இது சாதாரண ஆண்டுகளில் 365 நாட்கள். லீப் ஆண்டு என்றால் 366 நாட்கள். என்றும் வைத்துக் கொண்டுள்ளோம்.  உண்மையில் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க பூமியானது 365. 242199  நாட்களை எடுத்துக் கொள்கிறது.

சூரியன் ஏதோ நிலையாக ஒரே இடத்தில் இருப்பதாகவும் பூமி உட்பட கிரகங்கள் சூரியனை சுற்றி வருவதாகவும் சிலர் நினைக்கலாம். அது அப்படி அல்ல. சூரியன் எல்லா கிரகங்களையும் அந்த கிரகங்களை சுற்றுகின்ற துணைக்கோள்களையும் இழுத்துக் கொண்டு நமது அண்டத்தின் (Galaxy)  மையத்தைச் சுற்றி வருகிறது. விண்வெளியில் எதுவுமே நிலையாக ஓரிடத்தில் இருப்பது கிடையாது.

ஆகாய கங்கை எனப்படும் நமது அண்டத்தில் தான் சூரியன் அடங்கியுள்ளது. இந்த அண்டத்தில்  10 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் அடங்கியுள்ளதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.(சூரியனும் ஒரு நட்சத்திரமே).

நமது அண்டத்தில் நட்சத்திரங்கள் மட்டுமன்றி நட்சத்திரங்களுக்கு இடையில் வாயு, அண்டவெளித் தூசு ஆகியவையும் அடங்கியுள்ளன.

  பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) 800px-Milky_Way_Arms_ssc2008-10.svg

நமது சூரியன் கிட்டத்தட்ட நமது அண்டத்தின் விளிம்பில் உள்ளது.  அண்டத்துக்கு மையப் பகுதி உள்ளது. இந்த மையப் பகுதியை சூரியன் தனது பரிவாரங்களுடன் அதி வேகத்தில் சுற்றி வருகிறது. சூரியனின் வேகம் குறித்து வெவ்வேறு மதிப்பீடுகள் உள்ளன. எனினும் சூரியன் மணிக்கு சுமார் 90 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருப்பதாகக் கூறலாம்.

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Main-qimg-64ae2fe62bb01464a400077a5c88621b-c
   
சூரியன் நமது அண்டத்தை ஒரு முறை சுற்றி முடிக்க சுமார் 24 கோடி ஆண்டுகள் ஆவதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது. சூரியன் இவ்விதம் ஒரு முறை சுற்றி முடிப்பதைத் தான் ”காஸ்மிக் ஆண்டு” (Cosmic Year -galactic year -kcosmic year என்கிறார்கள். சூரியன் தோன்றி 500 கோடி ஆண்டுகள் ஆவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் அண்டத்தின் மையத்தை சூரியன் இதுவரை சுமார் 20 தடவை சுற்றி முடித்துள்ளது.

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) OSC_Astro_01_09_Cosmic

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) 1200px-Cosmic_Calendar
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1706
Join date : 23/05/2021

Back to top Go down

பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்) Empty Re: பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum