TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மிஸ்டர் கழுகு: சேஞ்ச்… சேலஞ்ச்… ஜெ.!

Go down

மிஸ்டர் கழுகு: சேஞ்ச்… சேலஞ்ச்… ஜெ.! Empty மிஸ்டர் கழுகு: சேஞ்ச்… சேலஞ்ச்… ஜெ.!

Post by Tamil Fri May 27, 2016 9:05 am

மிஸ்டர் கழுகு: சேஞ்ச்… சேலஞ்ச்… ஜெ.!
சேலஞ்ச்
தமிழக முதல்வராக ஜெயலலிதா ஆறாவது முறையாகப் பதவி ஏற்கும் வைபவத்துக்குச் சென்றுவிட்டு நேராக ஆபீஸில் ஆஜரானார் கழுகார். டேபிளில் இருந்த நோட்புக்கில் தனது பேனாவால் ஸ்டார் குறியீடு ஒன்றை வரைந்தார். நாம் ஒன்றும் புரியாமல் அதைப் பார்த்துகொண்டிருந்தோம். நம் குழப்பத்தைப் புரிந்துகொண்ட கழுகார், ‘‘வர்த்தக விளம்பரங்களில்  எல்லாவற்றையும் சொல்லிவிட்டுக் கடைசியாக, ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ என்பார்கள். அதைக்
குறிப்பிடுவதற்காக ஸ்டார் குறியீடு போடுவார்கள். அதுபோலத்தான், முதல்வர் ஜெயலலிதா அறிவித்த புதிய அறிவிப்புகள் அனைத்தும் கண்டிஷன்களுக்கு உட்பட்டவை” என்று சிரித்தபடி சப்ஜெக்ட்டுக்குள் போனார்.

மிஸ்டர் கழுகு: சேஞ்ச்… சேலஞ்ச்… ஜெ.! %E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1
‘‘சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில், ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்…” என்று தொடங்கி, 28 அமைச்சர்களுடன் முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா, அங்கிருந்து தலைமைச்செயலகம் சென்றார். கட்அவுட்கள், பேனர்கள் இல்லாமல்  நடந்த விழாவில் ஜெ.-விடம் சேஞ்ச் தெரிந்தது. புதிய ஆட்சியில் சேலஞ்சும் இருக்கிறது. முதல்நாள் அன்று, தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். முதலில், டாஸ்மாக் விவகாரத்தைப் பற்றிச் சொல்கிறேன். மதுவிலக்கைப் படிப்படியாகக் குறைப்பேன் என்று தேர்தல் வாக்குறுதியில் சொன்ன ஜெயலலிதா, “மதுக்கடைகள் திறக்கும் நேரத்தை 10 மணி என்பதை மாற்றி, 12 மணி முதல் திறக்கப்படும்; முதற்கட்டமாக 500 கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளார்.’’
“இந்த அறிவிப்புகள் மூலம், டாஸ்மாக் விவகாரத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா?”
“முதல்வர்  ஜெயலலிதா, மதுக்கடைகள் தொடர்பாக அறிவித்துள்ள இந்த இரண்டு அறிவிப்புகளால், எந்த மாற்றமும் நிகழாது. டாஸ்மாக் வருமானமும் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. தமிழகத்தில் 6 ஆயிரத்து சொச்சம் டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இவற்றில் ஒரு நாளைக்கு, 65 கோடி ரூபாய் முதல் 68 கோடி ரூபாய் வரை விற்பனை நடக்கிறது. அரசாங்கம் முதற்கட்டமாக, குறைப்பதாக அறிவித்துள்ள 500 கடைகள், விற்பனை மிக மிக மந்தமாக உள்ள கடைகள். அது வெறும் கண்துடைப்பு நடவடிக்கைதான். அதனால், அரசாங்கத்துக்கு எந்த நஷ்டமும் பெரிதாக ஏற்படாது. அதுபோல, 2 மணி நேரத்தைக் குறைப்பதால், எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. காலை 10 மணி முதல் 12 மணிவரை ஒரு மதுக்கடையில் சராசரியாக 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகத்தான் மது விற்பனையாகும். அந்த நேரத்தில் கடை திறக்கப்படாமல் இருப்பதால், மிகப் பெரிய நஷ்டமோ, மாற்றமோ ஏற்படப்போவதில்லை. 12 மணிக்குக் கடையைத் திறக்கும்போது, இரண்டு மணிநேரம் தடைப்பட்ட விற்பனை ஜெகஜோதியாய் களைகட்டும். அதனால், வருமானம் ஈடுகட்டப்படும். மது விவகாரத்தைப் பொறுத்தவரை, ஜெயலலிதாவின் இந்தப் புதிய அறிவிப்புகளால், எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. ஒரே ஒரு ப்ளஸ் பாயின்ட்… அதிகாலை முதலே டாஸ்மாக் வாசலில் கைநடுக்கத்துடன் காத்துக்கிடக்கும் குடிமகன்களை இனி காணமுடியாது. பிஸியான காலை 10 மணிக்கெல்லாம் சுதியை ஏற்றிக்கொண்டு சாலையில் கிடக்கிற காட்சிகளை இனி காண்பது அரிதாக இருக்கும்.”
“100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவித்துள்ளாரே?”
“ஆமாம். 100 யூனிட் மின்சாரம் இலவசம்தான். ஆனால், அந்த 100 யூனிட் என்பது 2 மாதங்களுக்கு என்ற கண்டிஷன் அப்ளை ஆகிறது. அப்படியானால், மாதம் ஒன்றுக்கு 50 யூனிட். அதற்கும் மேலாக 1 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தினால்கூட, இலவசம் என்ற சலுகையை இழந்துவிடுவோம். அதாவது, 100 யூனிட்களுக்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை. 101 யூனிட் என்ற அளவைத் தொட்டுவிட்டாலும், இலவசம் என்ற சலுகை கிடையாது. சாதாரணமாக இரண்டு ட்யூப் லைட்கள், இரண்டு மின்விசிறிகள் பயன்படுத்தினாலே ஒரு நாளைக்கு ஒன்றரை யூனிட் செலவாகும். மாதம் ஒன்றுக்கு 45 யூனிட்களும், இரண்டு மாதங்களுக்கு 90 யூனிட்களும் ஆகும். இவைதவிர கூடுதலாக ஏதாவது ஒரு மின் சாதனத்தைப் பயன்படுத்தினால், 100 யூனிட்களை ஒரு நுகர்வோர் தாண்டிவிடுவார். அதனால், இரண்டு ட்யூப் லைட்கள், இரண்டு மின்விசிறிகளை மட்டும் பயன்படுத்துவோர் இந்தத் திட்டத்தால் பயனடையலாம். மற்றவர்களுக்கு எந்தப் பயனும் இருக்காது.”
‘‘ஓஹோ!”
“இந்தத் திட்டத்தின் மூலம் 70 முதல் 75 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று மின்சார வாரியம் கணக்குக் காட்டுகிறது. ஆனால், உண்மையான பயனாளிகளின் எண்ணிக்கை அதைவிடக் குறைவாகத்தான் இருக்கும். ஒரு யூனிட் மின்சாரம் 1 ரூபாய் 10 பைசா. அப்படியானால், 70 லட்சம் பேருக்கு தலா 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகக் கொடுத்தால், அதன் மூலம் அரசாங்கத்துக்கு வருடத்துக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். அதுபோல விசைத்தறிகள், கைத்தறிகளுக்கு ஏற்கெனவே, 500 யூனிட் வரை இலவச மின்சாரம் கொடுக்கப்படுகிறது. இந்த முறை அதை 750 யூனிட் ஆக உயர்த்தி இருக்கிறார்கள். அதற்கு எப்படிப் பார்த்தாலும் வருடத்துக்கு 10 முதல் 20 கோடி ரூபாய் வரை மட்டுமே செலவாகும். மொத்தமாக இந்த இலவச மின்சாரத்துக்காக வருடத்துக்கு 95 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. மொத்தமாக 5 வருடங்களுக்குக் கணக்கிட்டால், அரசாங்கத்தின் நஷ்டம் 500 கோடி ரூபாயைத் தாண்டாது. டாஸ்மாக் வருமானத்தோடு கணக்கிட்டால், இது கொசுறுத் தொகை. அதனால், இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசாங்கத்துக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது.”
‘‘ம்…’’
“ஏற்கெனவே, தாலிக்கு 4 கிராம் தங்கம் கொடுக்கப்படுகிறது. இப்போது, கூடுதலாக 4 கிராம் சேர்த்து ஒரு சவரன் இலவசமாக வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். 4 கிராம் கொடுக்கப்பட்டபோது, ஒரு வருடத்துக்கு இந்தத் திட்டத்துக்காக அரசாங்கத்துக்கு ஆன செலவு 580 கோடி முதல் 680 கோடி ரூபாய் வரை. தற்போது, இந்தத் தொகையின் அளவு இரண்டு மடங்காகி இருக்கிறது. அதனால், அதை ஈடுகட்ட பயனாளிகளுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கி, ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ என்கிற முறையில் பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.”
‘‘ஸ்டார் திட்டம்தான்.’’
“5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதிலும் பெரும்பாலான விவசாயிகள் பயன்பெற முடியாது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.”
“அதில் என்ன சிக்கல்?”
“சிறு குறு விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி என்று அறிவித்துள்ளார்கள். இதனால், அரசுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்கின்றனர். 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் ஒரு விவசாயிதான் சிறு குறு விவசாயி. ஒரு விவசாயி அவரது பெயரில் 5 ஏக்கருக்கும் கூடுதலாக ஒரு சென்ட் நிலம் வைத்திருந்தாலும், அவர் சிறு குறு விவசாயி என்று கருதப்படமாட்டார். அதனால், அவருடைய கூட்டுறவுப் பயிர்க் கடன் தள்ளுபடி ஆகாது. இந்த முறையில் பார்த்தால், மேற்கு மண்டலத்தில் மிகக் குறைவான விவசாயிகளே இதன் மூலம் பயன் அடைவார்கள். கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் பூதக்கண்ணாடி கொண்டு பார்த்து கட்சிக்காரர்களுக்கு மட்டுமே கடன் கொடுப்பார்கள். அந்த மாதிரி கடன் பெற்றவர்கள்தான் இந்த அறிவிப்பின் மூலம் பெரும்பாலும் பயனடைவார்கள். பயனாளிகளில் சாதாரண விவசாயிகள் பலன் பெறுவது மிகக் குறைவுதான்.”

‘‘உண்மையான நலத்திட்டமாக மாறினால் சரிதான்.’’
‘‘இதே நேரத்தில் இன்னும் இரண்டு தொகுதிகளுக்கான தேர்தலை நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் புதிய அரசு நலத்திட்டங்களை அறிவிப்பது சரிதானா என்ற சர்ச்சையும் தேர்தல் ஆணையத்தில் கிளம்பியிருக்கிறதாம்’’ என்றபடி பறந்தார் கழுகார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum