TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


எம்.ஆர்.ஐ ஸ்கான் – பாகம் 1

Go down

எம்.ஆர்.ஐ ஸ்கான் – பாகம் 1 Empty எம்.ஆர்.ஐ ஸ்கான் – பாகம் 1

Post by அருள் Wed Jun 02, 2010 7:59 am


  1. எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுக்கும் கருவியின் விலை என்னவாக இருக்கும். எத்தனை க’ஷ்’டமர்கள் MRI எடுத்த பிறகு break-even ஆகும்.
  2. இப்பொழுதெல்லாம் பல மருத்துவர்கள் எக்ஸ்-ரே (X-ray) படம் எடுத்துப்
    பார்பதற்கு முன்னையே எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுத்து வரச் சொல்கிறார்களே.
  3. அதிகமாக உள்ள எம்.ஆர்.ஐ ஸ்கான் விலை குறைய வாய்ப்புள்ளதா.


ட்விட்டர் மக்களிடம் உங்களுக்கு எம்.ஆர்.ஐ
பற்றி கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால் சொல்லுங்கள், அதற்கும் விடை
அளிக்க முயற்சிக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். பல நல்ல கேள்விகளை
கேட்டார்கள்.



எம்.ஆர்.ஐ ஸ்கானை பற்றி பரவலாக மக்கள் மத்தியில் இருக்கும் சில சந்தேகங்களையும் கேள்வி பதில் வடிவத்தில் எழுத முயற்சிக்கிறேன்.

எம்.ஆர்.ஐ ஸ்கான் என்றால் என்ன?

[விளக்கத்தில் அறிவியல், குறிப்பாக பௌதீகச்
சொற்கள் அதிகமாக உள்ளதைப் பார்த்து பயந்து விடாதீர்கள். எனக்கும் இவை
பற்றி அதிகம் தெரியாது. பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனுக்கு
புரியும்படியாகத்தான் எழுதியிருக்கிறேன்]

எம்.ஆர்.ஐ (MRI) என்பது மாக்னேடிக் ரெசனன்ஸ் இமேஜிங் (Magnetic Resonance Imaging) என்கிற சொற்றொடரின் சுருக்கம்.
“எம்.ஆர்.ஐ ஸ்கான்” தமிழாக்கம் என்ன என்று ட்விட்டரில் கேட்டதற்கு நண்பர்கள் மருத்துவர் புருனோ, வானம்பாடி, TBCD ஆகியோர் கொடுத்த பதில்கள்: காந்த மீளதிர்வு படம் / படமாக்கல்; காந்த அதிர்வு சோதனை/பரிசோதனை.
எம்.ஆர்.ஐ ஸ்கான் என்பது எக்ஸ்-ரே (X-ray), சி.டி. ஸ்கான் (CT scan),
அல்ட்ராசவுண்ட் ஸ்கான் (Ultrasound scan), நியூக்ளியர் ஸ்கான் (Nuclear
scan) போன்ற மற்ற உடல் அங்கங்களை படம் பிடித்துக்காட்டும் ஸ்கான்
வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
எம்.ஆர்.ஐ ஸ்கானின் முக்கிய அங்கம் ஒரு பெரிய காந்தம் (magnet) ஆகும்.
இது நம் குழந்தைகள் விளையாடும் நிரந்தர காந்தத்தன்மை வாய்ந்த உலோக
காந்தமாகவும் (permanent magnet) இருக்கலாம், அல்லது மின்சக்தியினால்
செயற்கையாக காந்தத்தன்மை பெரும் உலோகத்தால் ஆன அல்லது உலோகக்கலவையிலான
(alloy) காந்தமாகவும் (superconducting magnet) இருக்கலாம். இந்த
காந்தத்திற்கு நம் விளையாட்டுக்கு உபயோகிக்கும் காந்தத்தைவிடவும்,
பூமியில் இயற்கையாக உள்ள கந்தப்புலனையும்விட (Earth’s natural magnetic
field) பல ஆயிரம் மடங்கு சக்தி அதிகம். காந்தப்புலனின் சக்தி / அளவு
டெஸ்லா (Tesla = T) கணக்கில் குறிக்கப்படும். பூமியில் இயற்கையாக உள்ள
கந்தப்புலனின் அளவு 0.00003 டெஸ்லா. மருத்துவத்தில் பயன்படும் மிகச்சிறிய
எம்.ஆர்.ஐ ஸ்கான் இயந்திரங்களின் காந்தப்புலன் அளவு 0.2 மற்றும் 0.3
Tesla, அதிகபடியான அளவு 3 Tesla. அதாவது இயற்கை காந்தப்புலனைவிட சுமார்
பத்தாயிரம் மடங்கிலிருந்து ஒரு லட்சம் மடங்கு அதிகம் சக்திவாய்ந்த
காந்தங்களை உபயோகிக்கிறோம்.
இந்த பெரிய காந்தம் ஒரு உளுந்துவடை போன்று நடுவில் ஓட்டை உள்ள உருவம்
கொண்ட வட்டமான இயந்திரத்தினுள் பொருந்தியிருக்கும் (அதன் பெயர் gantry).
இந்த வட்ட இயந்திரத்தினுள் ஒருவரை படுக்க வைத்து இயந்திரத்தை இயக்கினால்,
அவருடைய உடல் அந்த இயந்திரத்திலிருக்கும் பெரிய காந்தத்தின்
காந்தபுலணிற்கு (magnetic field) உட்படும். அப்படி சக்திவாய்ந்த
காந்தபுலணிற்கு உட்பட்டிருக்கும் உடலுக்கு வெளியில் இருந்து வானொலி
அதிர்வெண்கள் (radio frequency waves / RF waves) மூலம் அதிர்வு
ஏற்படுத்தப்படும் (excitation). இந்த அதிர்விலிருந்து மெதுவாக உடல்
மறுபடியும் தளர்ந்து இயந்திரத்தின் காந்தத்தன்மையை அடையும் (relaxation to
original magnetic field). அதிர்வினால் ஏற்பட்ட கூடுதல் சக்தி (energy)
இந்தத் தளர்ச்சி ஏற்படும் பொழுது உடலிலிருந்து வானொலி அதிர்வெண்கள் மூலம்
வெளிபடும். வெளிபடும் வானொலி அதிர்வேன்களை (emitted RF waves) வைத்து உடலை
படம் பிடிப்பதுதான் எம்.ஆர்.ஐயின் ரகசியம்.
எம்.ஆர்.ஐ ஸ்கான் முறையில் எக்ஸ்-ரே (X-ray), சி.டி. ஸ்கான் (CT
scan) போன்ற ஸ்கான் முறைகளில் உபயோகப்படுத்தப்படும் உடலுக்கு பாதகம்
விளைவிக்கக்கூடிய ஊடுகதிர்கள் (ionizing radiation, ie, X-rays) கிடையாது.
எம்.ஆர்.ஐ. ஸ்கானில் இருக்கும் காந்தத்தன்மையால் நம் உடலுக்கு எந்தவிதமான
பிரச்சினையும் ஏற்படாது. காந்தத்திலிருந்து வெளியே எடுத்ததும், ஸ்கான்
செய்யப்பட்டவரின் உடல் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.


மருத்துவத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கான் எப்படி உபயோகிக்கப்படுகிறது?
இன்றைய நிலையில், எம்.ஆர்.ஐ ஸ்கான் உச்சி முதல் பாதம் வரை எல்லா மனித
உறுப்புகளையும் துல்லியமாகப் படம் பிடிக்கும் வல்லமையுடன் இருக்கிறது. பல
மருத்துவத்துறை நிபுணர்களால் எம்.ஆர்.ஐ ஸ்கான் இல்லாமல் சரியான சிகிச்சை
கொடுக்கவே முடியாது என்கிற நிலைதான் உள்ளது.
ஆங்கிலத்தில் soft tissues என்று சொல்லப்படும் உடலின் மென்
உறுப்புகளையும் (உதாரணமாக மூளை, முதுகுத்தண்டு, கண்கள், இருதயம், ஈரல்,
கணையம்) மற்றும் மூட்டுகளையும் (joints), தசைகளையும் (muscles)
துல்லியமாகப் படம் பிடிக்க எம்.ஆர்.ஐ. தான் சிறந்த ஸ்கான் முறை.
கர்பிணிப் பெண்களுக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கான் (Ultrasound scan) செய்து
குழந்தையின் வளர்ச்சியையும் உறுப்புக்களையும் படம் பிடிப்பது
எல்லோருக்கும் தெரிந்த விஷயம். கருவிலிருக்கும் குழந்தைக்கு உறுப்புகளில்
கோளாறு இருப்பின் அதை அல்ட்ராசவுண்ட் ஸ்கானைவிடத் துல்லியமாகப் படம்
பிடித்துக் காட்ட எம்.ஆர்.ஐ ஸ்கான் உதவும்.
அண்மையில் சில வருடங்களாகப் பிரபலமாயிருப்பது மூளையின் செயல்பாட்டை
ஸ்கான் செய்யக் கூடிய ஃபன்க்ஷனல் எம்.ஆர்.ஐ ஸ்கான் (functional MRI, also
known as fMRI).


எம்.ஆர்.ஐ. ஸ்கான் பெரியதா / நல்லதா அல்லது சி.டி. ஸ்கான் (CT scan) பெரியதா / நல்லதா?
இது சாதாரண மக்களுக்கு மட்டுமில்லை, மருத்துவத்துறையிலே உள்ள
பலருக்கும் உள்ள சந்தேகம். பரவலாக சி.டி. ஸ்காணைவிட எம்.ஆர்.ஐ ஸ்கானுக்கு
விலை அதிகம், அதானாலையே இந்தக் கேள்வி மக்களின் மத்தியில் பரவி விட்டதோ
என்று எனக்கொரு சந்தேகம்.
முதல் கேள்விக்கான பதிலில் நான் குறிப்பிட்டிருந்தேன், இவ்விரண்டு
ஸ்கான்களும் வெவ்வேறு முறைகளை உபயோகித்து உடலைப் படம் பிடிக்கின்றன என்று.
ஒவ்வொரு ஸ்கான் முறைக்கும் சில பிரத்தியேகமான உபயோகங்கள் உள்ளன.
உதாரணமாக நுரையீரலை படம் பிடிக்க சி.டி.ஸ்கான் தான் உசிதம்,
மூட்டுகளினுள்ளே உள்ள மென் தசைகளை (ligaments, tendons) படம் பிடிக்க
எம்.ஆர்.ஐ தான் உசிதம். சில/பல இடங்களில் இரண்டில் எதை உபயோகித்தாலும்
தப்பில்லை (உதாரணம்: மூளை). பல நேரங்களில் எந்த ஸ்கான் முறையை
உபயோகிக்கலாம் என்பதை அந்த மருத்துவமனையிலோ அந்த ஊரிலோ எது வசதியாக உள்ளது
என்பதைப் பொறுத்தே மருத்துவர்கள் முடிவு செய்கிறார்கள்.


thanks:http://nilalgal.wordpress
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum