TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மிஸ்டர் கழுகு : இரண்டும் ஒரே இடத்தில்? தி.மு.க – காங்கிரஸ்

Go down

மிஸ்டர் கழுகு : இரண்டும் ஒரே இடத்தில்? தி.மு.க – காங்கிரஸ் Empty மிஸ்டர் கழுகு : இரண்டும் ஒரே இடத்தில்? தி.மு.க – காங்கிரஸ்

Post by Tamil Sat Apr 02, 2016 6:44 am

மிஸ்டர் கழுகு,
மிஸ்டர் கழுகு விஜயகாந்துக்காக காத்திருக்கும் ஜெயலலிதா,
மிஸ்டர் கழுகு ஈழத்தாய் இமேஜ்,
மிஸ்டர் கழுகு நடுக்கத்தில் மாஜி மந்திரிகள்,
மிஸ்டர் கழுகு 50தான் தரமுடியும்,
மிஸ்டர் கழுகு 20 நிமிடங்கள் பேசிய வெங்கய்ய நாயுடு - பி.ஜே.பி. நெருக்கடி,
மிஸ்டர் கழுகு கூட்டணிகளை உடைக்கும் ஆபரேஷன் ஆரம்பம்,
மிஸ்டர் கழுகு தி.மு.க. ஓ.கே. - ராகுல் சிக்னல்,
மிஸ்டர் கழுகு பாதுகாப்பு அதிகாரிகள் பந்தாடப்பட்டது ஏன்,
மிஸ்டர் கழுகு விஜயகாந்த் மூவ்... தி.மு.க. திகில்,

மிஸ்டர் கழுகு : இரண்டும் ஒரே இடத்தில்? தி.மு.க – காங்கிரஸ்
மிஸ்டர் கழுகு
ன்று போய் நாளை வா – என்ற கதையாக சென்றுகொண்டுள்ளது…  தி.மு.க – காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை” என்றபடியே உள்ளே வந்தார் கழுகார். அவருக்கு வழிவிட்டு அமைதியாக இருந்தோம்.
‘‘ஆமாம். இரண்டு தரப்பிலும் இறங்கி வர யோசிப்பதால்தான் இந்த நிலை. சென்னையில் இருந்து டெல்லிக்குச் சென்ற சிதம்பரமும், தங்கபாலுவும் ராகுலைச் சந்தித்து, ‘50  தொகுதிகளுக்குக் குறைவாக நாம் பெறக் கூடாது’ என்று தூபம் போட்டு வந்துள்ளார்கள். அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட ராகுல் டெல்லி வந்த

இளங்கோவனிடம் இந்த எண்ணிக்கையைச் சொல்லியுள்ளார். இளங்கோவன் நிலைதான் திரிசங்காக உள்ளது. தி.மு.க-வுடன் கூட்டணி அமையும் என்ற கணக்கில் இருந்த அவருக்கு இப்போது விழுந்த இடைவெளி மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க தரப்பு 35  தொகுதிகளுக்கு இறங்கிவந்துள்ளார்கள். நாம் 40 தொகுதிகளுக்குப் பேசினால்கூட முடிந்துவிடும் என்று சொல்லியுள்ளார். ஆனால், ராகுல் அதற்குச் சம்மதிக்கவில்லையாம். இரண்டு நாட்கள் கழித்து தி.மு.க தரப்பில் இருந்து 40 தொகுதிகள் தரலாம் என்று இளங்​கோவனுக்குத் தகவல் வந்துள்ளது. அவர் இந்தத் தகவலை குலாம் நபி ஆசாத்திடம் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 2-ம் தேதி குலாம் நபி சென்னை வரலாம் என்று சொல்கிறார்கள். 40 தொகுதிகள் என்றால், அக்ரிமென்ட் முடிந்துவிடும் என்கிறார்கள்.”
[You must be registered and logged in to see this image.]‘‘தி.மு.க தரப்பு என்னதான் நினைக்கிறது?”
‘‘தி.மு.க தரப்பில் இறுதியாக 35 தொகுதிகளில் இருந்து 40 தொகுதிகள் வரை கொடுக்கலாம் என்று கருணாநிதி நினைக்கிறாராம். முடிந்த அளவுக்கு தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கிறாராம் ஸ்டாலின். இந்த முறை தி.மு.க-வே அதிக தொகுதிகளில் நிற்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதிக தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்கும் என்று கணித்த தி.மு.க.,  குலாமுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் த.மா.கா-வும் கூட்டணிக்கு வரும் என்று செக் வைத்து உள்ளார்கள்.”
‘‘த.மா.கா-வைச் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு சம்மதமா?”
‘‘ராகுல் இதற்கு சம்மதிக்க மாட்டார் என்றே காங்கிரஸில் சொல்கிறார்கள். ‘காங்கிரஸுக்குத் துரோகம் செய்துவிட்டுப் போனவருடன் நாம் சேர்ந்து நிற்கக் கூடாது’ என்று அவர் நினைக்கிறாராம். ஆனால், காங்கிரஸில் இளங்கோவன், திருநாவுக்கரசு போன்றவர்கள் இதனை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.
‘40 தொகுதிகளை வாங்கிப் போட்டியிடுவதும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் தி.மு.க-வைத் தக்க வைத்துக் கொள்வதும்தான் நம்முடைய இலக்காக இருக்க முடியும்’ என்று சிலர் சொல்கிறார்கள்.”
‘‘தங்கபாலு, ப.சிதம்பரம் போன்றவர்கள் என்ன நினைக்கி றார்களாம்?”
‘‘இந்தத் தேர்தலில் இளங்கோவன் பதவியை எப்படியாவது காலி செய்துவிட வேண்டும் என்று சிலர் துடிக்கிறார்கள். அதனால், இளங்​கோவனுக்கு சாதகமான விஷயங்கள் நடந்துவிடாமல் பலரும் பார்த்துக்கொள்கிறார்கள். 40 தொகுதிகள் வாங்கிக் கணிசமான இடங்களில் காங்கிரஸ் வென்று விட்டால் இளங்கோவன் தனது பதவியை நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் தக்க வைத்துக்கொள்வார் என்பதுதான் பலரது கடுப்பு. தனியாக நின்றால், என்ன என்று இப்போதே சிலர் ஆலோசனை சொல்கிறார்களாம். அதில், முக்கியமானவர் தங்கபாலு என்கிறார்கள்.”

[You must be registered and logged in to see this image.]

‘ஓ! அவ்வளவு தைரியசாலியா?”
‘‘தங்கபாலு, ‘தொகுதிக்கு ரூ.3 கோடி செலவு செய்யும் அளவுக்கு 80 வேட்பாளர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்கள். எனவே, தைரியமாக நாம் தனித்துப் போட்டியிடலாம்’ என்கிறாராம். ப.சிதம்பரத்தை பொறுத்தவரை அவர் எதிலும் ஒட்டாமல் இருக்கிறார். இளங்கோவனை பதவியில் இருந்து தூக்க முயற்சித்தார்கள். ஒரு மாதத்துக்கு முன் இவர்களைச் சந்தித்த ராகுல், ‘இந்த சட்டமன்றத் தேர்தல் வரை தலைமையில் மாற்றம் இல்லை’ என்று சொல்லிவிட்டார். அதனால், சிதம்பரம் சைலன்ட். ராகுலை சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது தமிழகப் பிரமுகர் ஒருவர், ‘எப்ப சென்னை வர்றீங்க?’ என்று சிதம்பரத்திடம் கேட்க, ‘இனிமே அங்க என்ன சார் வேலை இருக்கு?’ என்று சலித்துக்கொண்டாராம். எனவே, அவர் இனி தீவிர அரசியல் செய்வார் என்ற நம்பிக்கை அவரது ஆதரவாளர்களிடமே இல்லையாம்.”
‘‘ஆக..?”
‘‘காங்கிரஸ் கட்சி கலகலத்துக்கொண்டு இருக்கிறது. எப்படியாவது தி.மு.க-விடம் கணிசமான தொகுதிகளை வாங்கி நிம்மதியாகத் தேர்தல் வேலைகளைத் தொடங்க வேண்டும் என்ற தெளிவில் இருக்கிறார் இளங்கோவன். த.மா.கா வரப் போகிறது என்று சொல்வது காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளைக் குறைக்கும் தந்திரமாக மட்டுமே இளங்கோவன் பார்க்கிறாராம்.”
‘‘த.மா.கா-வுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று ஸ்டாலினும் சொல்லி இருக்கிறாரே?”
‘‘விஜயகாந்த்துடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று சொல்லிச் சொல்லி அவர் வரவில்லை. அதனால், இனி யார் பற்றியும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம் என்று அவர் நினைத்து இருக்கலாம்.”
‘‘த.மா.கா. – அ.தி.மு.க பேச்சுவார்த்தை என்ன நிலைமையில் உள்ளது?”
‘‘அங்கும் எண்ணிக்கைதான் சிக்கல் நீடிக்கிறதாம். குறைந்தபட்சம்  20 முதல் 25 தொகுதிகளாவது பெற்றுவிடலாம் என்று நம்புகிறார். மக்கள் நலக் கூட்டணி தரப்பில் இருந்தும் தொடர்ந்து  அழைப்பு வருவதால், முடிவு எடுக்க முடியாமல் வாசன் திணறி வருகிறாராம்.”
‘‘தி.மு.க. கூட்டணியில்..?”
‘‘காதர் மொய்தீன் 5 இடங்களை வாங்கிவிட்டார். ஜவாஹிருல்லாவும் 5 தொகுதிகளை வாங்கிவிட்டார்.
சிவகாமி, தனபாலன், பொன்.குமார் ஆகியோர் தலா ஒரு தொகுதியை வாங்கிவிட்டார்கள். புதிய தமிழகம் 6 தொகுதிகள் கேட்கிறதாம். ஆனால் 3 தொகுதிகள்தான் தரத் தயாராக இருக்கிறதாம் தி.மு.க.”
‘‘கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளிவருமாம்?”
‘‘அநேகமாக முழுப் பட்டியலை ஏப்ரல் 11-ம் தேதி அ.தி.மு.க வெளியிடலாம் என்கிறார்கள். ஏப்ரல் 7-ம் தேதி அன்று அமாவாசை தினம் என்பதால் அன்று மட்டும், ஆறு ஆன்மிகத்தலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதா வெளியிட உள்ளார். அதன் பிறகு 11-ம் தேதி பஞ்சமி தினத்தன்று மீதம் உள்ள வேட்பாளர்களின் பட்டியலை அவர் வெளியிட உள்ளார். அதன் பிறகு பிரசாரத்தில் தீவிரம் காட்ட உள்ளார் ஜெயலலிதா என்கிறார்கள்!”
‘‘பிரசாரத்துக்கு அவர் தயாரா?”
‘‘இப்போது தயார் செய்துள்ள பட்டியல்படி ஆறு இடங்கள் மட்டும் முடிவாகி உள்ளன. கோவையில் தொடங்கி, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், சென்னை ஆகிய ஆறு இடங்களைக் குறித்துவைத்து உள்ளார்கள். ஒவ்வொரு கூட்டத்துக்கு இடையேயும் இரண்டு நாட்கள் ஓய்வு. நாடாளுமன்றத் தேர்தல்போல, விமானத்தில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் பொதுக்கூட்ட இ்டத்துக்குச் செல்ல உள்ளார். மேடையில் ஏற ஹைட்ராலிக் லிஃப்ட், உட்கார்ந்து பேசும் வகையில் சிறப்பு போடியம் உள்ளிட்டவை இந்தப் பயணத்தில் இடம்பெற உள்ளன. அதைத் தாண்டி சில இடங்களில் வேனில் பிரசாரம் செய்யும் திட்டம் இருப்பதால், அதற்காக ஹைடெக் வேனும் தயாராகி உள்ளது. லிஃப்ட் வசதியுடன், கூடிய இந்த வேனும் பயன்படுத்த உள்ளார்கள்.”
‘‘தி.மு.க-வில் எப்போது வேட்பாளர் பட்டியல் வருமாம்?”
‘‘ஏப்ரல் 15-ம் தேதி வேட்பாளர் பட்டியல் வரலாம் என்று சொல்கிறார்கள்” என்றபடி எழுந்த கழுகார், ‘‘ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று தி.மு.க. அறிவித்துள்ளது. மக்கள் நலக் கூட்டணி கட்சியினரும் இதே கருத்தைச் சொல்கிறார்கள். இந்த நிலையில், அ.தி.மு.க மட்டும்தான் மதுவிலக்கு விவகாரத்தில் இதுவரை வெளிப்படையான கருத்துச் சொல்லவில்லை. ஒருவேளை மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், தமிழகத்தில் உள்ள 11 மதுபானத் தொழிற்சாலைகள், பீர் தொழிற்சாலைகள், ஒயின் தொழிற்சாலை ஆகியவற்றை மூட வேண்டி வரலாம். மது ஆலை அதிபர்கள் பாடு திண்டாட்டம்தான். அதனால், தங்களுக்குச் சாதகமான முடிவுகளை எடுக்கும் அரசைக் கொண்டுவரும் முடிவில் அவர்கள் சில திட்டங்களைப் போட்டு வருகிறார்கள். தி.மு.க-வுடன் முடிந்தவரை யாரையும் சேரவிடக் கூடாது என்பதுதான் அவர்களது திட்டமாம்” என்றபடி பறந்தார்.
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ப.சரணவகுமார், மீ.நிவேதன்



ஸ்டாலினுக்கு பொறுப்பு!
தி.மு.க தொண்டர்கள் மத்தியில் ஒரு பேச்சு உலவுகிறது. ‘தலைவர்தான் அடுத்த முதலமைச்சர் என்பது இருக்கட்டும். ஆனால், தளபதியை இந்தத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத் தலைவராக அறிவிக்க வேண்டும்.

[You must be registered and logged in to see this image.]
பி.ஜே.பி-யில் மோடியை அறிவித்தார்கள் அல்லவா, அதைப்போல. அப்படி தளபதியை அறிவித்து நாடு முழுக்க அனுப்பினால்தான் தொண்டர்​களுக்கு உற்சாகம் பிறக்கும்” என்று சொல்லி வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சர் ஒருவர், ‘‘நாம் தனித்துப் போட்டியிட்டாலே ஜெயிக்கலாம்” என்று சொன்னாராம். அதற்கு இன்னொரு முன்னாள், ‘‘நாம நல்லவங்கன்னு சொல்றதுக்கு நாலு பேரு வேணுங்க. அதை நாம் மட்டும் சொன்னா மக்கள் நம்ப மாட்டாங்க. அதுனால முடிஞ்ச அளவுக்குக் கூட்டணி சேர்க்கணும்” என்றாராம்.

கருணாநிதி ‘டெஸ்ட் ட்ரைவ்’!

[You must be registered and logged in to see this image.]
பலவிதமான சொகுசு வசதிகளுடன் பிரத்யேகமாக வடிமைக்கப்பட்ட பிரசார வேனில் டெஸ்ட் ட்ரைவ் போனார் தி.மு.க தலைவர் கருணாநிதி. ‘வைஃபை’, ஹோம் தியேட்டர், எல்.இ.டி. டி.வி., சாய்தள மெத்தை, டைனிங் டேபிள் உட்பட பல வசதிகள்கொண்ட அந்த சொகுசு வேன், கடந்த 30-ம் தேதி கோபாலபுரத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அதில் ஏறிய கருணாநிதி, பாலவாக்கம்வரை பயணம் செய்தார். மு.க.ஸ்டாலின், துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோர் உடன் சென்றனர். சக்கர நாற்காலி ஏறுவதற்கு வசதியாக சாய்தள வசதி அந்த வேனில் உள்ளது. இந்த வேனில்தான் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்யவிருக்கிறார் கருணாநிதி.
அன்புமணியை அலறவைத்த இளைஞர்!

[You must be registered and logged in to see this image.]
மதுரை தொழில் வர்த்தக சங்கக் கட்டடத்தில் நடந்த, ‘உங்கள் ஊர்… உங்கள் அன்புமணி’ என்ற நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். அப்போது ஓர் இளைஞர், ‘‘இதுவரை நீங்கள் தென் மாவட்​டங்களுக்கு  எட்டிப்பார்த்த​து உண்டா?” என்று கேட்டார். ‘‘நீங்கள் வன்னியர்​களுக்குத்தானே ஆதரவாகப் பேசி வருகிறீர்கள்? எல்லா சமுதாயத்து மக்களுக்கும் சமமாக நடப்பீர்களா?” என்றும் கேட்டார்.
திகைத்துப்போன அன்புமணி, ‘‘ இது வேற யாரோ கேட்கச் சொன்ன கேள்விகளைக் கேட்கிறீர்கள். தவறாகப் புரிந்துகொண்டு இருக்கிறீர்கள். பா.ம.க என்றுமே அப்படி இருந்ததே இல்லை” என்று சமாளித்தார்.

பதவியை பிரித்துக் கொடுத்த சுதீஷ்!

கடந்த 29-ம் தேதி கோவில்பட்டியில் தே.மு.தி.க – மக்கள் நலக் கூட்டணி சார்பில் பிரசாரப் பொதுக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, கம்யூனிஸ்ட் தலைவர்கள் ராமகிருஷ்ணன், முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் எனக் கூட்டணி பட்டாளமே கலந்துகொண்டது.

[You must be registered and logged in to see this image.]
அப்போது பேசிய சுதீஷ், ‘‘கேப்டனை நீங்கள்லாம் சேர்ந்து முதல்வர்னு அறிவித்திருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம். கேப்டன் முதல்வராக வரும்போது, அண்ணன் வைகோதான் துணை முதல்வர் ஆக்கப்படுவார்” என அறிவித்தார். இதைச் சற்றும் எதிர்பாராத வைகோ, சிரிக்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் திகைத்துப்போனார். அடுத்ததாக ‘அண்ணன் திருமாவளவன் கல்வித் துறை அமைச்சர் ஆவார், அதேபோல் ராமகிருஷ்ணன், முத்தரசன் இவங்கள்லாம் உள்துறை, நிதித்துறை எனப் பலரும் பதவிகளைப் பெறுவார்கள்” எனப் படபடவெனச் சொன்னார். இதைப் பார்த்த வைகோ, ‘இப்பவே எல்லாருக்கும் மந்திரி பதவி கொடுத்தாச்சு’ என திருமாவளவன், முத்தரசனைப் பார்த்துச் சிரித்ததுபோல் முகத்தை வைத்துக்கொண்டு செய்கை காட்டினார். இந்த நேரத்தில் இப்படிப் பேசலாமா என்பதுபோல் முத்தரசன் முணுமுணுத்தார்.
அதோடு விடாத சுதீஷ், ‘‘இந்தக் கூட்டணி ஒரு வருடத்துக்கு முன்பே முடிவு செய்ததுதான். அந்த ஏற்பாட்டை அண்ணன் திருமாவளவன்தான் செய்தார். அவர் தினசரி காலையில் எங்க வீட்டுக்கு வந்துவிடுவார். கொஞ்ச நாட்களாக அவரது காலை உணவு எங்க வீட்டில்தான்’’ என்றவர், இந்தக் கூட்டணியின் பெயர்ல குழப்பம் இருக்கிறதா சொல்றாங்க. இன்னமும் இந்தக் கூட்டணியின் பெயரில் மாற்றம் வரும். அதாவது, ‘வி’ கூட்டணி என அழைக்கப்படும். ‘வி’ என்றால் விஜயகாந்த்; ‘வி’ என்றால் வைகோ; ‘வி’ என்றால் விடுதலைச்சிறுத்தை; ‘வி’ என்றால் வெற்றி. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்’’ என்று சுதீஷின் சுதந்திரமான பேச்சு தே.மு.தி.க தொண்டர்களை குஷிபடுத்தியது. ஆனால், கூட்டணிக் கட்சித் தொண்டர்களை சங்கடப்படுத்தியது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum