TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மிஸ்டர் கழுகு : கதறும் காங்கிரஸ் – தவிக்கும் த.மா.கா.

Go down

மிஸ்டர் கழுகு : கதறும் காங்கிரஸ் – தவிக்கும் த.மா.கா. Empty மிஸ்டர் கழுகு : கதறும் காங்கிரஸ் – தவிக்கும் த.மா.கா.

Post by Tamil Tue Mar 29, 2016 8:25 pm

மிஸ்டர் கழுகு : கதறும் காங்கிரஸ் – தவிக்கும் த.மா.கா.
மிஸ்டர் கழுகு
‘‘கதர் சட்டைகள் இரண்டும் கலங்கு கின்றன” என்றபடி உள்ளே வந்தார் கழுகார். அவருக்கு வழிவிட்டு அமைதி காத்தோம்.
‘‘தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சேர்ந்துவிட்டது. அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா சேரத் துடிக்கிறது. இரண்டு கட்சிகளையும் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் வறுத்து எடுக்கின்றன” என்றார்.

[You must be registered and logged in to see this image.]‘‘குலாம்நபி ஆசாத்துக்கும் கருணாநிதிக்கும் நடந்த பேச்சுவார்த்தையை எமது நிருபர் எழுதி இருக்கிறார்.”
‘‘அதன் இறுதிக்கட்ட சாராம்சங்களை மட்டும் நான் சொல்கிறேன். பழைய முறைப்படி 63 தொகுதிகளைக் கேட்டு ஆரம்பித்தது காங்கிரஸ். ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒன்று என்ற விகிதத்தில் 30 தொகுதிகளை வாங்க காங்கிரஸ் திட்டம் போடுகிறது. கருணாநிதியின் கணக்கு காங்கிரஸ் கட்சிக்கும் த.மா.கா-வுக்கும் சேர்த்து 70 தொகுதிகளாம்.”
‘‘இரண்டு கட்சிகளும் ஒரே அணியில் இருக்க முடியுமா?”
‘‘அதில்தான் இரண்டு பேருக்கும் குழப்பமே. ஜி.கே.வாசன் இருந்தால், இருந்துவிட்டுப் போகட்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ராகுல் காந்திக்கு இதில் விருப்பம் இல்லை என்கிறார்கள்.
த.மா.கா-விலும் ஒரு தரப்பு, ஓ.கே என்கிறது. இன்னொரு தரப்பு, வேண்டாம் என்கிறது.”
‘‘ஓஹோ!”
‘‘காங்கிரஸைப் பொறுத்த வரை கருணாநிதியிடம் முழுமையாகக் கறந்துவிட நினைக்கிறது. ஆனால், தி.மு.க 25-தொகுதிகளுக்கு மேல் ஏறி வராமல் அப்படியே இருப்பது காங்கிரஸ் தலைவர்களுக்குக் கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.”
‘‘த.மா.கா-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் நடந்த பேச்சுவார்த்தை என்ன ஆச்சு?”
‘‘அதாவது, 32 தொகுதிகளைக் கேட்டிருக்கிறார் ஜி.கே.வாசன். ஆனால், 7 தொகுதிகள்தான் தரமுடியும் என்றதாம் போயஸ் கார்டன். 23 தொகுதிகளுக்குக் குறையாமல் வேண்டும் என்று இறுதியாகச் சொல்லிவிட்டாராம் வாசன். 10 தொகுதிகளுக்கு மேல் வாய்ப்பு இல்லை என்று தோட்டத்தில் இருந்து சொல்லி அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.”
‘‘அப்படியானால், 200-க்கு மேல் அ.தி.மு.க போட்டியிடப் போகிறதா?”
‘‘இருக்கலாம்.”
‘‘அ.தி.மு.க நேர்காணலில் என்ன நடக்கிறதாம்?”
‘‘21-ம் தேதி தொடங்கிய நேர்காணலில் முதல் நாள் மட்டும்தான் அனைவரையும் சந்தித்தாராம் ஜெயலலிதா. 22-ம் தேதி அழைக்கப்பட்டு இருந்தவர்களை மறுதினம் வாருங்கள் என்று நேரம் கொடுத்துள்ளார். ஆனால், நான்கு நாட்கள் தொடர்ந்துவந்த பின்னர்தான் ஜெயலலிதாவின் சந்திப்பே நடந்திருக்கிறது.

[You must be registered and logged in to see this image.]

நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு இருப்பவர்களின் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு பெயர் உள்ளவர்களை மட்டும்தான் போயஸ் கார்டன் தெருவுக்குள்ளேயே அனுப்புகிறவர்கள் காவல் துறையினர். பட்டியல்படி உள்ளே செல்பவர்களை முதலில் போர்ட்டிக்கோவில் உட்காரச் சொல்லி, இரண்டாவது முறை ‘செக்’ பண்ணுகிறார்கள். அங்கிருந்து 35 பேரை மட்டும் வீட்டின் முதல் தளத்தில் உள்ள ஹாலில் உட்காரச் சொல்கிறார்கள். அதற்கு அடுத்த அறையில் ஜெயலலிதா இருக்கிறார். பூங்குன்றன் ஒவ்வொரு நபரின் பெயரைச் சொல்லி அழைத்ததும், அவர்கள் அறைக்குள் செல்கின்றனர். பூங்குன்றனும் அறையில் இருந்து வெளியே வந்துவிடுகிறார்.”
‘‘ஓ!”
‘‘செல்போனைக் கீழே உள்ள அறையில் வைத்துவிட வேண்டும். கையில் எந்த பேப்பரையும் கொண்டு செல்ல அனுமதி இல்லை. ஒவ்வொரு நபரிடமும், இரண்டு நிமிடங்கள் முதல் நான்கு நிமிடங்கள் வரைதான் நேர்காணல் நடைபெறுகிறது. என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள்?… உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?… எவ்வளவு செலவு செய்ய முடியும்? என்ற கேள்விகளைத்தான் பெரும்பாலோரிடம் ஜெயலலிதா கேட்டுள்ளார். சில மூத்த உறுப்பினர்களிடம் மட்டும் ஜெ. – ஜா. அணி பிரிந்தபோது எந்த அணியில் இருந்தீர்கள் என்ற கேள்வியையும் கேட்டுள்ளார். 60 வயதைத் தாண்டியவர்களிடம், ‘உங்கள் உடம்பு எப்படி உள்ளது? பீ.பி இருக்கிறதா? உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றும் கரிசனம் காட்டியுள்ளார். ‘அம்மாவின் சாதனைகளே எங்கள் வெற்றியை உறுதிசெய்யும்’ என்று அனைவருமே ஒரே பதிலை மட்டும் ஒப்பித்துள்ளனர்.  ‘குட் லக், டோன்ட்வொர்ரி, அம்மா பார்த்துக்கிறேன்…’ இது ஜெயலலிதா வாயில் இருந்து வந்த வார்த்தைகள்.”
‘‘நேர்காணலுக்கு வருகிறவர்களை ஜெயலலிதா சந்திப்பது இல்லை. இன்டர்காமில்தான் பேசுகிறார் எனச் செய்தி வந்ததே?”
‘‘ஒருநாள் மட்டும் அப்படி நடந்துள்ளது. மேல் அறையில் இருந்து இன்டர்காமில் கேள்வி கேட்டு, அதற்கு நேர்காணலுக்கு வந்தவர்கள் மைக்கில் பதில் சொல்லியுள்ளனர். ஆனால், வந்தவர்கள் அனைவரிடமும், இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக் கூடாது என்ற உத்தரவோடுதான் வெளியே அனுப்பினர். நேர்காணலுக்குப் போனவர்களுக்கு வாய்ப்பு இருப்பதும் சந்தேகம் என்பதால், நேர்காணலுக்கு வந்தவர்கள் முகங்களில் மகிழ்ச்சி இல்லை.

[You must be registered and logged in to see this image.]
ஜெ-வைச் சந்திக்க வந்து காத்துக்கிடப்பவர்களில் பெரும்பாலானோர் திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயிலுக்கு விசிட் செய்துவிடுகிறார்கள். கடந்த ஒரு வாரமாக பார்த்தசாரதி ஆலயத்தில் கரைவேட்டிகள் அதிகம் தென்படுவதால், பரபரப்பாக உள்ளது திருவல்லிகேணி.”
‘‘ம்!”
‘‘கார்டனில் தோழிக்குத் தோழியாக இப்போது ஓர் அதிகாரி இருந்து வருகிறாராம். தென்மாவட்டத்தைச் சேர்ந்த அவர், குரூப்-1 அதிகாரியாகப் பணிக்குச் சேர்ந்தவர். தோட்டத்து வீட்டுக்கு அடிக்கடி வந்து போகிறார். இவருக்கும் தோழிக்கும் நெருக்கம் அதிகமாக உள்ளதாம். வேட்பாளர் பட்டியலில் அந்தப் பெண், தனக்கு வேண்டப்பட்ட சிலரது பெயர்களையும் சேர்த்துவிட்டாராம். அவருடைய ஆசியால்தான் பெண் அமைச்சர் ஒருவர் பவர்ஃபுல்லாக இப்போது வலம் வருகிறார் என்று சொல்கிறார்கள்.”
‘‘பணம் நிறைய மாட்டுகிறது என்கிறார்களே?”

‘‘நாமக்கல் மாவட்டம் பேளூக்குறிச்சி அருகே உள்ள கல்குறிச்சி, குறுக்கல் தோட்டத்தில் உள்ள அத்தியப்பன் தோட்டத்தில் இரண்டு மூட்டைகள் இருந்தன. பேளூக்குறிச்சி போலீஸார் மூட்டையை அவிழ்த்துப் பார்த்திருக்கிறார்கள். உள்ளே கட்டுக்கட்டாக 500, 1,000 ரூபாய் பணம் இருந்துள்ளது. ‘இதுபற்றி வெளியில் மூச்சு விட்டீர்களேயானால் நீங்கள்தான் மாட்டுவீர்கள்’ என்று கூறிவிட்டு, அந்த இரண்டு மூட்டைகளையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். நிலத்துக்குச் சொந்தக்காரரான ஆசிரியருக்கு மனச்சாட்சி உறுத்தியது. வெளியில் சொல்லிவிட்டார். ‘சிலநாட்களுக்கு முன்பு வி.வி.ஐ.பி-க்களின் வீடுகளில் ரெய்டு நடந்தது அல்லவா? அவர்கள்தான் இப்படிக் கொண்டுவந்து போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்’ என்று சொல்கிறார்கள். இதனிடையே அமைச்சர் ஒருவரின் மாமா பெயரில் ஈரோட்டில் இருந்த சொத்தை, மன்னார்குடி குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவருக்குப் பத்திரம் செய்துள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது” என்ற கழுகார், அழகிரி மேட்டருக்கு வந்தார்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
‘‘தி.மு.க-வில் இருந்து ஓரம்கட்டப்பட்ட அழகிரியை மீண்டும் அழைத்துப்பேசி இருக்கிறார் கருணாநிதி. அப்பா – மகன் என்கிற உறவைத் தாண்டி இந்தச் சந்திப்பு தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. சென்னையில் முகாம் இட்டுள்ள அழகிரிக்கு மீண்டும் தி.மு.க-வில் பதவி கொடுத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் தேர்தல் வேலைகளுக்குத் தயாராகி வருகின்றனர் அழகிரியின் மதுரை ஆதரவாளர்கள். ‘மிகவும் சந்தோஷமான விஷயம் நடந்திருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தலைவரும் – அழகிரியும் சந்தித்து, மனம்விட்டுப் பேசியது மகிழ்ச்சியான செய்தி. இப்போதே தேர்தல் வேலைகளைப் பார்க்கத் தயாராகி வருகிறோம். தென் மாவட்டங்களில் பூத் கமிட்டி மெம்பர் போடுவதில் இருந்து மற்ற வேலைகளைச் செய்ய குஷியாகக் களத்தில் இறங்கி இருக்கிறோம். தேர்தல் நெருங்கிவிட்டதால், தி.மு.க-வின் எதிர்காலம் குறித்து சில கசப்பான சம்பவங்களை மறந்து வேலை செய்யத் தயாராகிவிட்டோம்’ என்று உற்சாகமாக இருக்கிறார்கள். ஆனால்?’’
‘‘என்ன ஆனால்..?”
‘‘இந்த உற்சாகம் ஸ்டாலின் ஆட்களிடம் இல்லை. ‘அழகிரி வரட்டும்; அப்பாவைப் பார்க்கட்டும்; அம்மாவைப் பார்க்கட்டும்; அதற்கு மேல் எதுவும் வேண்டாம்’ என்பதுதான் ஸ்டாலினின் நிலைப்பாடு. கருணாநிதியைப் பார்த்துவிட்டு வந்த அழகிரி, ‘நீங்க சொன்ன மாதிரி தலைவரைப் பார்த்துட்டேன், போதுமா?’ என்று மதுரை பிரமுகர் ஒருவருக்கு போன் செய்து சொல்லி இருக்கிறார். இதைவைத்துப் பார்க்கும்போது தனது ஆட்களைத் திருப்திப்படுத்தவே கருணாநிதியைப் போய் பார்த்ததாகத் தெரிகிறது!” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,
‘‘தே.மு.தி.க-வின் சார்பில் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி கேப்டன் டி.வி தொடங்கப்பட்டது. சேனல் உருவானதில் பக்கபலமாக இருந்தவர்கள் தே.மு.தி.க-வின் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களான விருதுநகர் மாஃபா பாண்டியராஜன், ராதாபுரம் தொகுதி மைக்கேல் ராயப்பன், திண்டுக்கல்லைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரியின் அதிபர் முத்துவேல்ராஜ் ஆகியோர். டி.வி-க்காக பெரும் தொகையை செலவு செய்தார்களாம். அதற்காக கேப்டன் டி.வி-யின் கணிசமான பங்குகளை இவர்கள் வாங்கிவைத்துள்ளனர். விஜயகாந்த்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இவர்கள் கட்சியிலிருந்து விலகினார்கள். மைக்கேல் ராயப்பன், திண்டுக்கல் முத்துவேல் ராஜ் ஆகியோருக்கு செட்டில் செய்தார் விஜயகாந்த். ஆனால், மாஃபா பாண்டியராஜனுக்கு செட்டில் செய்யவில்லை. சட்டரீதியாக  நோட்டீஸ் அனுப்பினார் மாஃபா பாண்டியராஜன். பிறகே பணத்தை செட்டில் செய்தார்களாம். பணத்தை வாங்குவதற்குள் முழிபிதுங்கி விட்டது எனப் புலம்பித் தள்ளுகின்றனர் வெளியே வந்தவர்கள்” என்றபடி பறந்தார் கழுகார்.




“வழக்கை சந்திக்கத் தயார்!’’
[You must be registered and logged in to see this image.]
மதுரை ஓபூளா படித்துறையில் நடந்த தே.மு.தி.க தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில், பிரேமலதா பேசினார். “நான் மற்ற ஊர்களுக்குச் செல்லும்போது வராத தைரியம் மதுரைக்கு வந்தால் வந்துவிடும். மதுரையின் மருமகள் என்று எல்லா மக்களும் அழைக்கும்போது, எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். எங்கள் கட்சியின், குடும்பத்தின் அனைத்துத் தொடக்கமும் மதுரையில்தான் நடைபெற்றன. அதனால், கேப்டன் முதல்வர் பதவி ஏற்கும் விழா மதுரையில்தான் நடக்கும். ஓட்டுக்கு பணம் வாங்கும்படி நெல்லையில் நான் கூறியதாக வழக்குப் போட்டுள்ளார்கள். இதற்குப் பயப்பட மாட்டேன். சரி, ஓட்டுக்கு பணம் வாங்குங்கன்னு சொன்ன என் மீது வழக்குன்னா, பணம் கொடுக்கும் கட்சி மீது எத்தனை வழக்குப் போடுவீர்கள்? பணம் வாங்குவோர் மீது எப்படி வழக்குப் போடுவீர்கள்?” என்று ஆவேசம் காட்டினார்.
பிரேமலதாகூடவே ஒரு பெண் வந்திருந்தார். அவரை சின்னம்மா என்று தே.மு.தி.க-வினர் சொன்னார்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum