TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மிஸ்டர் கழுகு: மூன்று பேரங்கள்… முறுக்கிக்கொண்ட விஜயகாந்த்!

Go down

மிஸ்டர் கழுகு: மூன்று பேரங்கள்… முறுக்கிக்கொண்ட விஜயகாந்த்! Empty மிஸ்டர் கழுகு: மூன்று பேரங்கள்… முறுக்கிக்கொண்ட விஜயகாந்த்!

Post by Tamil Fri Mar 11, 2016 10:17 pm

தனித்துப் போட்டி… முடிவின் பின்னணி!
‘‘தே.மு.தி.க. மகளிர் தினப் பொதுக்கூட்டம் முடிந்தபிறகு வருகிறேன்” என்று கழுகார் செய்தி அனுப்பி இருந்தார். கழுகார் செல்கிறார் என்றால், அந்தக் கூட்டத்துக்கு ஏதோ முக்கியத்துவம் இருக்கிறது என்பதால் காத்திருந்தோம். எதிர்பார்த்தது மாதிரியே தனது முடிவை அறிவித்துவிட்டார் விஜயகாந்த். தனித்துப் போட்டியிடப் போவதாக விஜயகாந்த் அறிவித்தார். அந்த அறிவிப்பைக் கேட்டதுமே அலுவலகம் நோக்கிப் பறந்து வந்தார் கழுகார்.

‘‘விஜயகாந்த் முடிவின் பின்னணி என்ன?” என்ற கேள்வியைப் போட்டோம். 
‘‘பின்னணியில் நடந்ததில் அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. அதனால்தான், இந்த முடிவுக்கு விஜயகாந்த் தள்ளப்பட்டார்” என்றபடி சொல்ல ஆரம்பித்தார்.
‘‘மூன்று கூட்டணிகளுடன் விஜயகாந்த் பேச்சுவார்த்தை நடத்தினார். மூன்று பேரிடமும் அவர் வைத்த கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. ஒவ்வொன்றாகச் சொல்கிறேன். முதலில் தி.மு.க கூட்டணியில் 104 இடங்கள், துணை முதல்வர் பதவி, அமைச்சரவையில் இடம், உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவிகித இடங்கள் என்று கோரிக்கை வைத்தார். ‘கடந்த முறை அ.தி.மு.க கொடுத்த 41 சீட் தருகிறோம்’ என்று தி.மு.க சொன்னது. இறுதியில் 50 வரைக்கும் தர தி.மு.க ஒப்புக்கொண்டது. அதற்கு மேல் ஏறவில்லை. 55 என்று கருணாநிதி முடிப்பார் என எதிர்பார்த்தார்கள். மற்ற கோரிக்கைகளான துணை முதல்வர், அமைச்சரவையில் இடம் ஆகியவைப் பற்றிப் பேசவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் 20 சதவிகிதம் தரலாம் என்று சொன்னார்கள். தி.மு.க இறங்கி வரவில்லை என்ற கோபம் இருந்தது விஜயகாந்த்துக்கு. அதனால்தான் பி.ஜே.பி-யுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.”
‘‘அங்கு என்ன கோரிக்கை வைத்தார்?”
‘‘பி.ஜே.பி கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கச் சொன்னார். 150 இடங்கள் தரவேண்டும் என்றார். சுதீஷுக்கு ராஜ்யசபா எம்.பி சீட் கேட்டார். பிரேமலதாவுக்கு மத்திய பொறுப்பு கேட்டார் என்று பி.ஜே.பி தரப்பினர் சொல்கிறார்கள். இவை எதையும் 
பி.ஜே.பி ஏற்கவில்லை. ‘நாங்கள் முதலமைச்சர் வேட்பாளர் என்று விஜயகாந்த்தை அறிவிக்க மாட்டோம். அந்த வாக்குறுதியை அவருக்குத் தரவில்லை’ என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சொன்னார். இதுவும் விஜயகாந்த்துக்கு பின்னடைவு ஆனது.”
‘‘மக்கள் நலக் கூட்டணியில் என்ன நடந்தது?”
‘‘வைகோ உள்ளிட்ட தலைவர்கள் அவரைப் போய் பார்த்தார்கள். அது அனைவருக்கும் தெரியும். இரண்டு வாரங்களுக்கு முன் விஜயகாந்த் அனுப்பி, வைகோவைச் சந்திக்க ஒருவர் வந்துள்ளார். ‘கேப்டனை முதலமைச்சர் வேட்பாளராக நீங்கள் அறிவிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். ‘மற்ற தலைவர்களுடன் பேசிவிட்டுச் சொல்கிறேன்’ என்றார் வைகோ. ஆனால் அவரிடம் இருந்து, இது சம்பந்தமாக எந்தத் தகவலும் விஜயகாந்த்துக்கு வந்து சேரவில்லை. 120 தொகுதிகள் கொடுக்கலாம் என்று மட்டுமே அந்தத் தலைவர்கள் நினைத்து இருந்தார்களாம். இப்படி முதலமைச்சர் வேட்பாளர், துணை முதல்வர் என்ற எந்தக் கோரிக்கையும் நிறைவேறாத நிலையில் விஜயகாந்த் இந்த முடிவை எடுத்துள்ளார்” என்ற கழுகார் அடுத்த மேட்டருக்கு தாவினார்.

[You must be registered and logged in to see this image.]
‘‘தொடர்ந்து காஞ்சி மாவட்டம்தான் தலைப்புச் செய்தி ஆகிக்கொண்டிருக்கிறது கவனித்தீரா?’’ 
‘‘தே.மு.தி.க., தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க கட்சியினரின் மாநாடுகள் தொடர்ந்து காஞ்சி மாவட்டத்தில் நடந்ததைச் சொல்கிறீரா?’’
‘‘அதைச் சொல்லவில்லை. காஞ்சியில் இன்னொரு அதிரடியும் நடந்ததாகச் சொல்கிறார்கள். மார்ச் 2-ம் தேதி, காஞ்சி சங்கர மடத்துக்குள் பரபரப்பு தொற்றிக்கொண்டது. மடத்துக்குள் முக்கியமானவர்களைத் தவிர, மற்றவர்கள் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மேல் அனுமதிக்கப் படவில்லை. பீடாதிபதிகளுக்கு நெருக்கமானவர்கள், ‘ஏதோ நடக்கப்போகிறது… ஆனால், அது என்ன’ என்பது தெரியாமல், நீண்ட நேரம் காத்துக் கிடந்தனர். அப்போது, மடத்தை நோக்கி ஒரு கார் வந்தது. ஜெயேந்திரர், விஜயேந்திரரின் காவி நிற இன்னோவா கார்கள் மட்டும் நிறுத்தப்படும் இடம் வரை, அந்த கார் வந்தது. மடத்துக் காவலர்கள் அதைத் தடுக்கவில்லை. பவ்யமாக வணங்கி வழிவிட்டனர். காரில் இருந்து இறங்கியவர்கள் இரண்டு பெண்கள். அவர்களை நேரில் பார்த்தவர்களுக்கு அப்போது​தான் மடத்தைச் சூழ்ந்திருந்த இனம்புரியாத பரபரப்புக்கு அர்த்தம் புரிந்தது. காரில் இருந்து இறங்கியவர்கள், சசிகலாவும் இளவரசியும் என்கிறார்கள். ஏறத்தாழ 15 ஆண்டுகள் கழித்து சங்கர மடத்துக்குள் காலடி எடுத்துவைக்கிறாராம் சசிகலா. இதற்குமுன் 2001-ம் ஆண்டு செப்டம்​பர் மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை, சங்கரமடம் வந்திருந்தார் சசிகலா. அதன்பிறகு, 2016 மார்ச் 2-ம் தேதி வந்துள்ளார் என்கிறார்கள்.’’

‘‘அப்படியா?’’
‘‘போயஸ் கார்டனுக்கும் சங்கரமடத்துக்கும் இடையில் ஏகப்பட்ட மோதல்கள். 2004-ம் ஆண்டு சங்கரராமன் கொலை… அதே ஆண்டில் வந்த, தீபாவளி நாளன்று ஜெயேந்திரர் கைது… அந்த வழக்கில் அவருடைய விடுதலை… அதை எதிர்த்து ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு செய்த மேல் முறையீடு என்று இரண்டு அதிகார மையங்களுக்கும் இடையில் பனிப்போர் உச்சத்தில் நடந்து கொண்டிருந்தது. இவை அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திடீரென சங்கரமடத்தைத் தேடி வந்துள்ளது போயஸ் கார்டன் என்றால், அது சாதாரண விஷயமா?’’
‘‘புரிகிறது!’’
‘‘இதுபற்றி விசாரித்தபோது, ‘ஜெயலலிதா மீது ஜெயேந்திரருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை தாள முடியாத ஆத்திரம் இருந்தது. ஜெயலலிதாவை ஆட்சியில் இருந்து அகற்றி பழிவாங்க நினைத்தார். அதற்காகப் பல திசைகளில் தனது பரிபாலனங்களை அனுப்பிப் பேசினார்… செயல்பட்டார். இப்போது, மத்திய அரசும் ஜெயேந்திரருக்கு ஆதரவான பி.ஜே.பி-யின் கையில் இருப்பதால், ஜெயேந்திரரின் முயற்சிகள் அனைத்தும் வீரியமாக விஸ்வரூபம் எடுத்தன’ என்று சொல்கிறார்கள். அதில் ஒன்றுதான், ‘தி.மு.க – பி.ஜே.பி கூட்டணி அமைய வேண்டும்’ என்று சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டது. ஆனால், அதை கருணாநிதி விரும்பவில்லை. அதனால்தான் அவர் வேகமாக காங்கிரஸுடன் கைகோத்தார். உடனே, தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி ட்விட்டரில் கருத்துத் தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, ‘காங்கிரஸின் சூழ்ச்சிக்கு கருணாநிதி பலியாகி​விட்டார்’ என்றார். அதாவது கருணாநிதி நல்லவர்; காங்கிரஸ் தீயது என்ற அர்த்தத்தில் இருந்தது அந்தப் பதிவு. சுப்பிரமணியன் சுவாமியின் நடவடிக்கைகளுக்கு அப்போது பின்னால் இருந்து தூபம் போட்டுக் கொண்​டிருந்தவர் ஜெயேந்திரர்​ தரப்பினர்தான். இதுபோல, பிராமணர்கள் மத்தியிலும் ஜெயேந்திரர் தரப்பினர் அ.தி.மு.க-வுக்கு எதிரான பல வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். இதை யடுத்துத்தான் ஜெயேந்திரரை சமாதானப்​படுத்துவதற்காக சசிகலாவும் இளவரசியும் வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதையே சிலர் சசிகலா வரவில்லை, ஜெயலலிதாவின் தூதர் ஒருவர் வந்தார் என்றும் சொல்கிறார்கள்.”
‘‘ஜெயலலிதா மீது அவ்வளவு ஆத்திரமாக இருந்த ஜெயேந்திரர் சசிகலா வந்து சமாதானம் பேசினால் சாந்தமடைந்து விடுவாரா?”
‘‘ஏன் மோதல் என்று நினைத்து வரச்சொல்லி இருக்கலாம்” என்ற கழுகார் அடுத்த மேட்டருக்கு வந்தார்.

[You must be registered and logged in to see this image.]
‘‘இதுவும் ஒரு மடம் சம்பந்தமான செய்திதான். ஒரு சாமியாருக்கு பெருமாளின் பெயரைக்கொண்ட ஓர் உதவியாளர் இருந்தார். அந்த உதவியாளரிடம் ஏதோ சிடி இருக்கிறதாம். அந்த சி.டி-யை காவல் துறையில் இருந்து ஓய்வுபெற்ற ஒருவரிடம் இந்த பெருமாள் பெயர்க்காரர் கொடுத்துள்ளார். இருவரும் சேர்ந்து ரகசியமாக அந்தச் சாமியாரை மிரட்டத் தொடங்கி உள்ளனர். இதில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், போலீஸ் உதவியை நாடுவதைத் தவிர சாமியாருக்கு வேறு வழியில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆலோசகராக இருக்கும் பெண்மணியிடம் இந்த அசைன்​மென்ட்டை அவர்கள் ஒப்படைத்தனர். களத்தில் இறங்கியது டீம். அந்த ஓய்வுபெற்ற போலீஸ்காரரைச் சுற்றிவளைத்து, ‘தொலைத்துக்​கட்டிவிடுவோம்’ என்று மிரட்டியதுடன், அந்தரங்க சி.டி-யை பறிமுதல் செய்துவிட்டார் களாம். அத்துடன் இந்த சி.டி யார் மூலம் கிடைத்தது என்பதையும் அவர் வாயிலிருந்தே வரவழைத்துத் தெரிந்துகொண்டனர். அந்தத் தகவலை உடனடியாக சாமியாருக்குத் தெரிவித்து, அவருடைய உதவியாளரை மடத்தில் இருந்து துரத்திவிட்டனர். இந்த விவகாரத்தில் சாமியாருக்கு கொஞ்சம் நிம்மதி. ஆனால், அவருக்கும் மடத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் களுக்கும் இன்னும் உதறல் இருக்கிறது. இந்த விவகாரங்களை எல்லாம், இவர்கள் ‘பப்ளிக்’ ஆக்கிவிட்டால் தங்களுக்குச் சிக்கலாகும் என்று கருதுகின்றனர். அதனால், வெளியேற்றப்பட்ட உதவியாளரை தற்போது, ரகசியமாக ஓரிடத்தில் பிடித்துவைத்துள்ளனர். அவரிடம், ‘உன்னை ஒன்றும் செய்யமாட்டோம். ஆனால், யாரிடமும் எதுவும் உளறிவிட வேண்டாம்’ என்று மிரட்டலும் கெஞ்சலுமாக இருக்கின்றனர். இந்த விவகாரம்தான் இப்போது மடத்தின் நிம்மதியைக் கெடுத்துக்கொண்டிருக்​கிறது” என்று சொல்லி​விட்டுப் பறந்தார் கழுகார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum