TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மிஸ்டர் கழுகு: நேர்காணலில் நடந்த அதிகார யுத்தம்!

Go down

மிஸ்டர் கழுகு: நேர்காணலில் நடந்த அதிகார யுத்தம்! Empty மிஸ்டர் கழுகு: நேர்காணலில் நடந்த அதிகார யுத்தம்!

Post by Tamil Tue Mar 08, 2016 9:53 pm

அ.தி.மு.க-வில் நெக்ஸ்ட்…

‘‘என்ன நடக்கிறது அ.தி.மு.க-வில்?” என்ற கேள்வியை நம்மைப் பார்த்து கழுகார் கேட்டார். ‘‘அதைச் சொல்வதற்காகத்தானே உமக்காகக் காத்திருந்தோம்” என்றோம்.

சிரித்தபடியே ஆரம்பித்த கழுகார், ‘‘அ.தி.மு.க-வில் அடுத்த அதிகார மையம் யார்? என்ற போட்டி வந்து​விட்டது” என்றார்.




‘‘அடுத்த அதிகார மையம் என்றாலே சசிகலாதானே? இதில் என்ன சந்தேகம்?”

[You must be registered and logged in to see this image.]‘‘நீர் சொல்கிறீர். ஆனால் அவர்களுக்குப் பல சந்தேகங்கள் வந்துவிட்டன. ஐவர் அணியாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அ.தி.மு.க-வின் அடுத்த வி.வி.ஐ.பி-களாக வளர்ந்துவிடக் கூடாது என்று மன்னார்குடி குடும்பத்தினர் நினைக்கிறார்கள். எனவே, அவர்களைத் தட்டிவைக்கும் காரியங்கள் எல்லா வகையிலும் நடக்க ஆரம்பித்துள்ளன. பன்னீர், நத்தம் ஆகியோரின் நிழல்கள் சிலரிடம் இருந்து பதவிகளைப் பறித்ததும் இதன் பின்னணியில்தான். சிலரது வீடுகளில் ரெய்டுகள் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் மனசு வைத்தால் நமக்கு சீட் கிடைக்கும் என்ற நப்பாசையில் பலரும் அவர்களைச் சந்தித்து வந்தார்கள். அதையும் மன்னார்குடி குடும்பத்தினர் விரும்பவில்லை.”

‘‘என்ன காரணம்?”

‘‘நாளைக்குக் கட்சிக்குள் ஏதாவது பிரச்னை வந்தால், இவர்களுக்குப் பின்னால் யாரும் போய்விடக் கூடாது அல்லவா? ஒரு காலத்தில் பண்ருட்டி, திருநாவுக்கரசு, முத்துச்சாமி, கண்ணப்பன் என்று உருவானார்கள் அல்லவா? நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க என்று சொன்னார்கள் அல்லவா? அந்த மாதிரியான சூழ்நிலை வந்துவிடக் கூடாது என்பதால், இப்பவே உஷாராக இருக்கிறார்களாம். முடிந்த அளவு இந்த ஐந்து பேரையும் ஒதுக்கி வைத்துக் காரியங்கள் பார்க்கச் சொல்லி இருக்கிறார்கள். தொண்டர்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிய வேண்டும் என்றும் அவர்கள், இவர்கள் ஐவரையும் ஒதுக்க வேண்டும் என்றும் மன்னார்குடி குடும்பத்தினர் நினைக்கிறார்கள்.”

‘‘ஓஹோ!”

‘‘அ.தி.மு.க சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 26 ஆயிரத்து 174 பேர் மனுக் கொடுத்து இருந்தார்கள். அதில் 7 ஆயிரத்து 936 பேர் ஜெயலலிதாவுக்காக மனுச் செய்திருந்தனர். இவர்களில் ஐந்து பேரை மட்டும் போயஸ் கார்டனுக்கு கடந்த 6-ம் தேதி திடீரென்று அழைத்து நேர்காணல் நடத்தினார் ஜெயலலிதா. இதுபோன்ற நேரங்களில்  ஐவர் குழுவினர் உடன் இருப்பார்கள். ஆனால், இந்தத் தடவை அவர்களுக்கு அழைப்பே இல்லை. இப்படி நேர்காணல் நடப்பதுகூட அவர்களுக்குத் தெரியாது என்கிறார்கள். கட்சியின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியில் இந்தத் தகவல் வெளியான பிறகுதான் நேர்காணல் தகவல் ஐவர் அணியினருக்குத் தெரிய வந்ததாம்!”
[You must be registered and logged in to see this image.]

‘‘நேர்காணலின்போது யார் யார் இருந்தார்கள்?’’
[size]

‘‘ஜெயலலிதாதான் நேர்காணல் நடத்தினார். அவைத்தலைவர் மதுசூதனன், எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன், சிறுபான்மை பிரிவுத் தலைவர் ஜஸ்டின் செல்வராஜ் ஆகியோர் அப்போது உடன் இருந்தார்கள். இவர்கள் அனைவரும் கட்சியின் ஆட்சி மன்றக் குழுவில் இருக்கிறார்கள். ஆட்சி மன்றக் குழுவில் உள்ள பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் வேணு​கோபால் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பி அவர்களையும் வரவழைத்திருக்க வேண்டும். இவர்கள் மூவரையும் அழைக்கவில்லை. தேர்தல் பிரிவுச் செயலாளராக இருக்கிறார் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன். அவரையே அழைக்கவில்லை.”
[/size]
‘‘யாரை நேர்காணல் கண்டார் ஜெயலலிதா?”
[size]

‘‘தலைமை நிலையப் பேச்சாளர் நூர்ஜகான், மாவட்டச் செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், வெற்றிவேல், ஊத்தங்கரை எம்.எல்.ஏ மனோரஞ்சிதம், சென்னை துணை மேயர் பெஞ்சமின் ஆகியோர்தான் ஜெயலலிதாவால் நேர்காணல் செய்யப்பட்டவர்கள்.’’

‘‘இவர்களுக்கு சீட் கிடைக்குமா?’’

‘‘நிச்சயமாகக் கிடைக்கும் என்கிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தல் நேர்காணலின்போது, ரமணாவை மட்டுமே அழைத்து நேர்காணல் செய்தார் ஜெயலலிதா. அவருக்கு சீட்டும் கிடைத்தது. மந்திரியாகவும் ஆக்கப்பட்டார். கடந்த தேர்தலின்போது பெரம்பூர் தொகுதிதான் வெற்றிவேலுக்கு ஒதுக்கப்பட்டது. பின்னர், அந்தத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்​பட்டதால், ஆர்.கே.நகர் தொகுதிக்கு மாறினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஊத்தங்கரை தனித் தொகுதி எம்.எல்.ஏ மனோரஞ்சிதம் மீண்டும் அதே தொகுதியில் நிறுத்தப்படுவார். தாம்பரத்தில் சிட்லபாக்கம் ராஜேந்திரன், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் நூர்ஜகான், மதுரவாயல் தொகுதியில் சென்னை துணைமேயர் பெஞ்சமின் ஆகியோர் நிறுத்தப்படுவார்கள் என்கிறார்கள். யார் வேட்பாளர்களோ, அவர்களைத்தான் அழைத்துப் பேசினார் என்கிறார்கள்!”
[/size]
 [You must be registered and logged in to see this image.]
[size]
‘‘இந்த நேர்காணல் தொடர்ந்து நடக்குமா?’’

‘‘அ.தி.மு.க-வில் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. அ.தி.மு.க தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஜெயலலிதா முன்னிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களாகப் போட்டியிட விருப்பமனு செய்திருந்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது’ என்று சொல்லி இருக்கிறார்கள். தொடர்ந்து நடக்கும் என்று சொல்லவில்லை. சும்மா ஒப்புக்கு ஐந்து பேரைப் பார்த்து முடித்துவிட்டார் ஜெயலலிதா. இனி நேர்காணலுக்கு வாய்ப்பு இல்லை என்று சொல்கிறார்கள். இப்போது, மாவட்டச் செயலாளர்கள் கொடுத்த பரிந்துரைகள், உளவுத்துறை கொடுத்த லிஸ்ட் அடிப்படையில் வேட்பாளர்கள் பட்டியல் ரெடியாகி வருகிறது.’’

‘‘இந்தத் தடவை வேட்பாளர்கள் தேர்வு எப்படி இருக்கும்?’’

‘‘ஐவர் அணிக்கே அல்வா என்று ஆனபிறகு, மற்ற அமைச்சர்களுக்கும் சீட் கிடைக்கும் என்பதே சந்தேகம்தான். ‘சீட் தராவிட்டால் பரவாயில்லை. இப்படியே ஒதுங்கிவிடலாம்’ என்ற எண்ணமும் பல அமைச்சர்களிடம் வரத் தொடங்கி இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க தரப்பில் இடைத்தேர்தல்போல மாவட்டம் வாரியாக அமைச்சர்களுக்கு தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்து வெற்றியைக் கொண்டு வாருங்கள் என்று கட்டளை போடவும் தலைமை தயாராகி வருகிறது. முழுக்க முழுக்கப் புதுமுகங்களுக்கு வாய்ப்பு என்கிறார்கள். அதிலும், பெண்களுக்கு 50 சதவிகிதத்துக்கு மேல் இடம் தரப்படுமாம்’’ என்ற கழுகாரிடம், ‘‘விஜயகாந்த் கட்சியில் என்ன நடக்கிறது?” என்று கேட்டோம்.

சிரித்தபடியே சொல்ல ஆரம்பித்தார் கழுகார்!

‘‘ஹீரோ நடத்தும் கட்சியில் நடப்பது எல்லாம் காமெடிதான். தி.மு.க-வுக்கும் பி.ஜே.பி-க்கும் மக்கள் நலக் கூட்​டணிக்கும் அவர் தண்ணி காட்டிக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சுப் பேசுவதாகக் கட்சியின் முக்கிய நிர்வாகி​களே புலம்புகிறார்கள்.  நேர்​காணலின் போது விஜயகாந்த் ஒவ்வொருவரிடமும், ‘உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும்?’ என்ற கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டாராம். அவர்கள் சொன்ன தொகையை, ‘உடனே கட்சியில் கட்டுங்கள்’ என்று சொல்லி விட்டாராம். ‘நாம் தனியாகத்தான் நிற்கப் போகிறோம். ஒருவேளை கூட்டணி அமைந்தால், தேர்தல் முடிந்த பிறகு சீட் கிடைக்காதவர்களுக்கு அந்தப் பணம் திருப்பித் தரப்படும்’ என்று உறுதியும் கொடுக்கிறாராம். அவரது வாக்குறுதியை நம்பி, ரூ.25 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.50 லட்சம் என்று பலர் பணம் கட்டி வருகிறார்கள். 234 தொகுதிகளுக்கும் இப்படி வசூல் வேட்டை நடக்கிறது.’’
[/size]
[You must be registered and logged in to see this image.]
[size]
‘‘விஜயகாந்த் திருப்பதி போனதாகவும், அவரோடு சென்ற பிரேம​லதாவும் சுதீஷும் டெல்லி போய்​விட்டார்கள் என்றும் சொல்கிறார்​களே?”

‘‘திருப்பதிக்கு இவர்கள் இருவரோடு போனதாகவும், அங்கிருந்து ஹைதராபாத் சென்று, பின்னர் டெல்லிக்கு பிரேமலதாவும் சுதீஷும் போனார்கள் என்றும் தகவல் பரவியது. ஆனால், விஜயகாந்த் எங்கும் செல்லவில்லை. இது, பி.ஜே.பி-யினர் கிளப்பிவிட்ட வதந்தி என்று தே.மு.தி.க-வினர் சொல்கிறார்கள். சந்திப்பு நடந்ததாகச் சொல்லப்படும் அந்த நேரத்தில், ‘பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் உள்ள தனது துறை அலுவலகத்தில்தான் இருந்தார். அவரை இவர்கள் சந்திக்கவில்லை. அமித்ஷா, பி.ஜே.பி தலைமை அலுவலகத்தில் இருந்தார். அவருக்குத் தமிழ்நாட்டில் இருந்து எந்த அபாயின்மென்ட்டும் இல்லை. அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன் ஆகிய இருவரையும் வரச் சொல்வதாக இருந்தது. ஆனால், வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். செவ்வாய்க் கிழமைதான் பொன்னார் டெல்லி வருகிறார்’ என்று சொன்னார்கள்.” 
‘‘ மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளாரே டிராஃபிக் ராமசாமி?’’


‘‘இவர் ஏற்கெனவே தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அழைப்பின் பேரில் அவரைப் போய்ச் சந்தித்தார். அப்போது விஜயகாந்த்திடம், ‘தே.மு.தி.க. பி.ஜே.பி அணிக்கு வரவேண்டும் அல்லது தனித்து நிற்க வேண்டும். தி.மு.க அணிக்குப் போகவே கூடாது’ என்று சொல்லி வந்தார். 7-ம் தேதி பொன்னாரைச் சந்தித்து பி.ஜே.பி கூட்டணியில் தே.மு.தி.க., த.மா.கா இடம்பெற வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுப்பேன். நீங்களும் முயற்சிக்க வேண்டும் என்று சொல்லி வந்தேன்’ என்று சொல்கிறார். ஜெயலலிதா நிற்கும் தொகுதியில் அவரை எதிர்த்து பொது வேட்பாளராக களம் இறங்க பி.ஜே.பி ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அப்போது வைத்தாராம்.’’

‘‘தே.மு.தி.க எப்போது அறிவிக்கும்?”

‘‘10-ம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தே.மு.தி.க மகளிர் மாநாடு நடக்கிறது. அதில், பிரேமலதா பேசுகிறார். அப்போது தெரிய வரலாம்!” என்றபடி பறந்தார் கழுகார்.
[/size]

[size]
சீட் கிடைக்க வேண்டுமா? விருது ‘வாங்குங்கள்’!
தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக ஒரு கும்பல் அ.தி.மு.க-வில் சீட்டுக்குப் பணம் கட்டியிருப்பவர்களிடம், “நீங்கள் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கொடுங்கள். கவர்னர் மகன், ‘தமிழகத்தில் 100 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது’ கொடுக்க உள்ளார். அந்த விருதை, உங்களுக்கு வாங்கித் தருகிறோம். அந்த விருது, உங்களுக்குக் கிடைத்தால் ஜெ. உங்களுக்கு சீட் வழங்கிவிடுவார். கவர்னர் மகனின் செல்வாக்கு அப்படி” என்று பலரிடமும் பணத்தைக் கறந்து வருகிறார்களாம்.
[/size]
[You must be registered and logged in to see this image.]
[size]
சீட் ரெடி… நீலாங்கரை பங்களாவுக்கு வாங்க!
அ.தி.மு.க பொதுச்செயலாளர், முதல்வர் ஜெயலலிதா ஒரு பக்கம் வேட்பாளர்களைத் தேர்வுசெய்ய… நேர்காணல் நடத்த இன்னொரு பக்கம், அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒரு கோஷ்டி சீட் வாங்கித் தருகிறோம் என்று வசூல் வேட்டையில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தக்காராக இருப்பவர் ரவிச்சந்திரன். சமீபத்தில் ஆண்டாள் கோயிலில் புதிதாக அமைக்கப்பட்ட தங்க விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதில், சசிகலாவும் கலந்துகொண்டார். கோயில் தக்கார் என்ற முறையில் சசிகலாவின் அறிமுகம் கிடைக்க, அதைவைத்து ஒரு திட்டம் தீட்டியுள்ளார். ரவிச்சந்திரனின் உறவினரான சிவகாசி அ.தி.மு.க தொகுதிச் செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான சிவக்குமார் மற்றும் சிவகாசி பகுதியில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி, இப்போது திருப்பரங்குன்றம் டி.எஸ்.பி-யாக உள்ள ராமசாமி, ஒரு இன்ஸ்பெக்டர் ஆகியோர் அடங்கிய டீம் சென்னை அருகே நீலாங்கரையில் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்துள்ளது.


பிறகு, விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளை போனில் அழைத்து, சீட் என்று பல லட்சங்களை வசூலித்துள்​ளனர். விஷயமறிந்த உளவுத்துறை போலீஸார் அதிரடியாக பங்களாவுக்குள் நுழைந்து அனைவரையும் கைதுசெய்தனர். சிவகாசி சிவக்குமார் கட்சியில் இருந்து நீக்கப்​பட்டுள்ளார். நீலாங்கரை பங்களாவுக்குச் சென்ற விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பீதியில் உறைந்துபோய் உள்ளனர்.[/size]
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum