TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - எம்.எல்.ஏ. டி.ஜெயக்குமார் (ராயபுரம்)

Go down

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - எம்.எல்.ஏ. டி.ஜெயக்குமார் (ராயபுரம்) Empty என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - எம்.எல்.ஏ. டி.ஜெயக்குமார் (ராயபுரம்)

Post by Tamil Sat Mar 05, 2016 3:30 pm

1996-ம் ஆண்டு அ.தி.மு.க-வுக்கு எதிர்ப்பு அலை வீசியபோது நடந்த தேர்தலைத் தவிர, 1991, 2001, 2006, 2011 ஆகிய தேர்தல்களில் அவர், ‘ஜெய’க்குமார்தான். தற்போது 4-வது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். 20 வருடங்களாக ராயபுரத்தை கையில் வைத்திருக்கும் ஜெயக்குமார் அமைச்சர், சபாநாயகர் பதவிகளை வகித்தவர். 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது சபாநாயகர் ஆக்கப்பட்டார். அதை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.
[You must be registered and logged in to see this image.]
அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவை தவிர, வேறு யாருடைய பிறந்தநாளையும் பிரமாண்டமாக கொண்டாடுவது இல்லை. 2012-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி தனது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடினார் ஜெயக்குமார். இந்த ஆர்ப்பாட்ட பிறந்தநாள் கார்டனை உறுத்தியது. மேலிடத்தால் டம்மியாக்கப்பட்டார். அடுத்த 10 நாட்கள் கழித்து சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் ஜெயக்குமார். பிறகு. ஜெயக்குமாரின் அரசியல் கிராஃப் ஏறி இறங்கியது இருக்கட்டும். அவரைத் தேர்வுசெய்த ராயபுரம் எப்படி இருக்கிறது? என்ன செய்தார் எம்.எல்.ஏ ஜெயக்குமார்? 

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம், தி.மு.க தொடங்கப்பட்ட ராபின்சன் பூங்கா, அறிவகம், பழமையான ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ஆங்கிலேயர் காலத்திய செயின்ட் பீட்டர்ஸ் சர்ச்... என அடையாளங்களைத் தாங்கி நிற்கிறது ராயபுரம் தொகுதி. 2011 தேர்தல் பிரசாரத்தின்போது, ‘‘நான் எம்.எல்.ஏ-வாக இருந்து தொகுதிக்கு நிறைய செய்துள்ளேன். இன்னும் தொகுதியில் என்னென்ன பணிகள் செய்ய வேண்டியுள்ளது என்பது எனக்குத் தெரியும். மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப திட்டப் பணிகளைச் செய்து, தொகுதியை மேலும் மேம்படுத்துவேன்” என்று சொன்னார் ஜெயக்குமார். சொன்னதைச் செய்கிறாரா?

[You must be registered and logged in to see this image.]
தொகுதிக்கு வருகிறாரா ஜெயக்குமார்? 

அசல் ராயபுரம் தொகுதிவாசியாக இருந்த ஜெயக்குமார், அமைச்சரானபிறகு பட்டினப்பாக்கத்துக்கு தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார். இப்போதும் அங்குதான் வசித்து வருகிறார். 20 ஆண்டுகளாகத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பதால் தொகுதியின் சந்து, பொந்துகள் எல்லாம் அவருக்கு அத்துப்படி. தொகுதிக்குள் வலம் வரும்போது, காரில் இருந்து இறங்காமல், கண்ணாடியை மட்டும் இறக்கி விட்டுக்கொண்டு, கட்சிக்காரர்களிடம் பேசிவிட்டு, வணக்கம் வைத்துவிட்டுக் கிளம்பிவிடுவார் என்கின்றனர். இதுதான் அவர் தொகுதிக்குள் வலம்வரும் ‘பாணி’. இப்போது பதவிகள், பொறுப்புகள் இல்லாமல் டம்மியாக இருப்பதால் தொகுதிக்குள் நடக்கும் கட்சிக்காரர்கள் வீட்டுத் திருமணங்கள், முக்கியப் பிரமுகர்களின் குடும்ப விழாக்களில் தவறாமல் ஆஜராகி விடுவார் என்கிறார்கள். கட்சிக்காரர்கள் திருமணங்களில் திடீரென மைக் பிடித்து பாட்டுப்பாடுவதையும் அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

ராயபுரம் ரயில் முனையம்

பெருமைக்குரிய ராயபுரம் ரயில் நிலையத்தை எழும்பூருக்கு இணையான ஒரு ரயில் முனையமாக மாற்ற வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இதுகுறித்து அ.தி.மு.க தேர்தல் அறிக்கையிலும் சொல்லப்பட்டுள்ளது. முதலில் சாத்தியமில்லை என்று மறுத்து வந்த ரயில்வே துறை, பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கையை அடுத்து, சாத்தியம் குறித்து ஆய்வுசெய்தது. பெரிய முனையமாக மாற்ற கூடுதல் நிலம் தேவைப்படுவதால், ஸ்டான்லி மருத்துவமனைக்குச் சொந்தமான நிலம் தேவை என்று ரயில்வே துறை சார்பில் மாநில அரசிடம் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்வரிடம் பேசி, கோரிக்கையை நிறைவேற்ற ஜெயக்குமார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர்.

[You must be registered and logged in to see this image.]
போஜராஜன் நகர் சுரங்கப்பாதை!

கண்ணன் தெரு பென்சில் பேக்டரி அருகில் ரயில்வே லெவல் கிராஸிங் இருக்கிறது. இந்த கிராஸிங்கிற்கு அந்த பக்கம் மின்ட் மார்டன் சிட்டி, சீனிவாசபுரம், போஜராஜன் நகர், பிஸ்மில்லா நகர், பென்சில் பேக்டரி, கீரை தோட்டம் ஏரியாக்கள் இருக்கின்றன. இங்கே மட்டும் 7 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன.  இந்த ஏரியாக்களை சுற்றிலும் ரயில்வே பாதைகள்தான். நாலாபுறமும் தண்டவாளங்கள் சூழ்ந்து தீவு போல இருக்கிறது. 

அதனால் அந்த பகுதியினர் வெளியே வரவும் உள்ளே போகவும் ஒரே ரயில்வே கேட்தான் உண்டு. ரயில்கள் வந்து போவதால் அடிக்கடி ரயில்வே கேட் பூட்டப்பட்டுவிடும். குறுக்கே ரயில்கள் நிற்க.. பூட்டப்பட்ட கேட்டை தாண்டி மக்கள் வெளியே செல்லவும் உள்ளே வரவும் முடியாமல் தினமும் அல்லாடுகிறார்கள். ஒரு முறை கேட் போட்டு விட்டால், பல மணி நேரத்துக்கு அந்த வழியே இருபுறமும் போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறது. பள்ளி, மருத்துவமனைக்குச் செல்பவர்கள் அன்றாடம் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இங்கே சுரங்கப்பாதை கட்ட வேண்டும் என்பது பல வருட கோரிக்கை. ‘நான் வெற்றி பெற்றால் சுரங்கப்பாதை கொண்டு வருவேன்’ என தேர்தலில் வாக்குறுதியும் கொடுத்தார் ஜெயக்குமார். ஏன் இந்த சுரங்கப்பாதையில் ஜெயக்குமாரின் காரும் சிக்கிக்கொண்டு அவர் இறங்கி கேட்டை தாண்டி போன சம்பங்கள் எல்லாம் நடந்திருக்கிறது. ‘‘அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஒருவழியாக சுரங்கப்பாதை கட்டப்படும் என அறிவித்தது மாநகராட்சி. இதற்காக பேனர்கள், போஸ்டர்கள், பத்திரிகைகளில் விளம்பரங்கள் என தடபுடலாக கொண்டாடினார் ஜெயக்குமார். ஆனால் ஒரு துரும்புக்கூட கிள்ளிப் போடவில்லை. ‘அடுத்த மாதம் வேலை தொடங்கிவிடும். கொச்சியில் இருந்து இயந்திரம் வர தாமதம் ஆகிறது’ என ஒவ்வொரு வருடம் சொல்லிக் கொண்டே போனாரே தவிர ஒரு வேலையும் உருப்படியாக நடக்கவில்லை. இந்த ரயில்வே கேட்டை ஒட்டியே ஆர்.கே.நகர் தொகுதி ஆரம்பமாகிறது.  முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதி இது. ரயில்வே கேட் மூடப்பட்டால் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் வாகனங்கள் போக முடியாத அளவுக்கு ரோடு பிளாக் ஆகி நிற்கும். இவர் முனைப்புடன் செயல்படாததால் அவரின் தலைவி தொகுதிக்கும் தலைவலிதான்’’ என்றார்கள் அந்த பகுதியினர்.

[You must be registered and logged in to see this image.]
ஸ்டான்லி சுரங்கப்பாதை!

ஸ்டான்லி சுரங்கப்பாதை தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதன் பணிகள் முடிவடைந்து நீண்டநாட்கள் ஆனபிறகும் பயன்பாட்டுக்கு வரவில்லை. எதிர்க்கட்சியினர், அமைபுகள் எல்லாம் போராட்டம் நடத்தியபிறகுதான் அதனைத் திறக்க ஜெயக்குமார் நடவடிக்கை எடுத்தார். புதிதாக கட்டப்பட்ட சுரங்கப்பாதையை சரிவர பராமரிக்காததால், அதன் பக்கவாட்டுச் சுவர்களில் நீர்க்கசிவு ஏற்பட்டு சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சறுக்கி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். சுரங்கப்பாதையை சரிசெய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தியும்கூட ஜெயக்குமார் கண்டுகொள்ள வில்லை.  

மீனவர்கள் நலனிலும் அக்கறையில்லை!

ஜெயக்குமார் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். மீன்களைப் பதப்படுத்துவதற்காக ஒரு ஐஸ் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். அதனை இன்றளவும் நிறைவேற்றவில்லை. குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வசதிசெய்து கொடுப்பதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார். பல பகுதிகளில் குடிநீர் இணைப்பு கிடைக்க உதவியிருக்கிறார். ஆனால், சில பகுதிகளில் லாரிகளில்தான் குடிநீர் விநியோகம் நடக்கிறது. அதையும் குடத்துக்கு 1 ரூபாய் கொடுத்துத்தான் வாங்கவேண்டிருக்கிறது என தொகுதிவாசிகள் சொல்கிறார்கள்.

[You must be registered and logged in to see this image.]
குறைகளைத் தீர்ப்பதில்லை!

தொகுதியில் 48-வது வார்டுக்கு உட்பட்ட பார்த்தசாரதி தெருவில் உள்ள குடிசைமாற்று வாரியத்தால் பழைய வீடுகளுக்குப் பதில் புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதுவும் சட்டசபையில் முதல்வர் அறிவித்த திட்டங்களில் ஒன்று என்கின்றனர். 51-வது வட்டத்தில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் உள்ளன. இவை 1979-ம் ஆண்டு கட்டப்பட்டவை. 30 ஆண்டுகளுக்குப் பிறகு குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, புதிய வீடுகள் கட்டித் தரப்பட வேண்டுமாம். ஆனால், இங்கிருக்கும் 800 வீடுகள் மோசமான நிலையில் உள்ளன. சீரமைக்கக்கோரி ஜெயக்குமாரிடம் மனுக்கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தொகுதியில் உள்ள பொதுச் சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் நேரத்துக்கு வருவதில்லை. 

52-வது வட்டத்தில் உள்ள பொதுச் சுகாதார நிலையத்தை மூடுவதற்கு முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது. முதல் கட்டமாக, சுகாதார நிலையத்துக்கு டாக்டர்கள் வருவது குறைந்துள்ளது என்கின்றனர். துப்புரவுத் தொழிலாளர்களும் இங்கு அதிகம் வசிக்கின்றனர். இந்த வட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானம் சமூகவிரோதிகள் கூடாரமாக மாறி வருகிறது. அதைச் சரிசெய்யும்படி அவரிடம் பலமுறை புகார் கொடுத்தும் கவனிக்கவில்லை என்று கூறுகின்றனர். தொகுதியில் உள்ள பார்த்தசாரதி தெரு  நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் தருவதாக ஜெயகுமார் வாக்குறுதி அளித்தார். தொகுதி நிதியில் இருந்து மாற்று இடத்தில் வசதிகள் செய்து தருவதாகவும் கூறினார். ஆனால், வாக்குறுதி அளித்தபடி அதனை நிறைவேற்றவில்லை என்கின்றனர். 

‘ராயபுரம் தொகுதி உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என தொகுதி எல்லையில் போர்டு வைத்து அதில் ஜெயக்குமார் பெயர் எழுதினால் மட்டும் போதும் என நினைத்துவிட்டார் போலும். 

- கே.பாலசுப்பிரமணி, ஜெ.விக்னேஷ், தே.அசோக்குமார், பா.அபிரக்‌ஷன்
படம்: ஆ.முத்துக்குமார்



ப்ளஸ், மைனஸ்
[You must be registered and logged in to see this image.]
ராயபுரம் தொகுதி பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார். தொகுதியில் உள்ள முக்கிய பிரதிநிதிகளை அடிக்கடி சந்திக்கிறார். கட்சி நிர்வாகிகளிடமும் இணக்கமான உறவைக் கொண்டிருக்​கிறார். தொகுதிக்குள் அடிக்கடி வலம் வருகிறார் என்பது ப்ளஸ். 

மனுக்களை மின்னல் வேகத்தில் வாங்குவதில் ஆர்வம் காட்டும் ஜெயக்குமார், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதில்லை என்பதுதான் அவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு. கட்சியில் டம்மியாக்கப்​பட்ட பிறகு அவரது கோரிக்கைகளை அரசுத் தரப்பில் நிறைவேற்றாததே இதற்குக் காரணம் என்கின்றனர்.

எம்.எல்.ஏ. அலுவலக ரெஸ்பான்ஸ் எப்படி?
[You must be registered and logged in to see this image.]
ராபின்சன் பூங்கா அருகில் உள்ள மெட்ரோ வாட்டர் அலுவலக வளாகத்துக்குள் இருக்கிறது எம்.எல்.ஏ. அலுவலகம். மனுக்கள் வாங்குவதற்கு ஆட்களை ஜெயக்குமார் நியமித்துள்ளார். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அலுவலகம் திறந்திருக்கிறது. ரேஷன் கார்டு கேட்டு அவரிடம் மனுக்கொடுப்பதற்காகப் பொதுமக்களில் ஒருவராகச் சென்றோம். அலுவலகத்தில் இருந்தவர்கள் நமது பெயர், தொலைபேசி எண்ணை குறித்துக்கொண்டு, ‘அண்ணன் வரும்போது கூப்பிடுகிறோம். அவரிடமே மனுவைக் கொடுங்கள்’ என்றனர். ‘அவர்தான் உரிய அலுவலகத்துக்கு ஃபார்வேர்ட் செய்வார்’ என்றனர். பொதுமக்கள் எல்லோருக்கும் இதுதான் பதிலாக இருக்கிறது. சொன்னபடி நம்மை அழைத்து ஜெயக்குமாரே பேசினார். ‘மனு கொண்டு வாருங்கள். உணவு பொருள் வழங்கல் துறைக்கு ஃபார்வர்ட் செய்கிறேன்’ என்றார். வாரத்தில் சில நாட்கள் மட்டும் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை, மக்களிடம் மனுக்கள் வாங்குவார் என்றனர். மற்றபடி அவரைத் தேடிப்போய் பார்க்க வேண்டும் என்றால், பட்டினப்பாக்கத்தில் அவர் வீட்டுக்குத்தான் போக வேண்டும் என்கின்றனர்.

ஜெயக்குமார் ரியாக்‌ஷன் என்ன?

‘‘தொகுதியில் பல்வேறு நலத் திட்டப் பணிகள் அம்மாவின் உத்தரவுப்படி நடந்து வருகிறது. தொகுதி நிதியில் மாநகராட்சிப் பள்ளிக்கூடங்களில் கழிவறைக் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை செய்து உள்ளேன். போஜராஜன் நகர் சுரங்கப்பாதை என்பது இந்தப் பகுதியின் 50 ஆண்டுகாலக் கனவு. அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். டெண்டர் விடப்பட்டுவிட்டது. கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன. (பணிகள் நடக்கவில்லை என்பதுதான் உண்மை) நான் கடந்த முறை எம்.எல்.ஏ-வாக இருந்தபோது செய்த பணிகளால்தான் இந்த முறை ராயபுரம் மழை, வெள்ளத்தால் அவ்வளவாகப் பாதிக்கப்படவில்லை. தொடர் மழையால் சாலைகள் மட்டும் சேதம் அடைந்துள்ளன. அதை விரைவில் சரிசெய்துவிடுவோம். மக்களுக்குக் குறைகள் இல்லாமல் எல்லாப் பணிகளையும் செய்து வருகிறோம்” என்றார் ஜெயக்குமார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum