TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் பி.பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி)

Go down

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் பி.பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி) Empty என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் பி.பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி)

Post by Tamil Sat Mar 05, 2016 3:28 pm

2014 நாடாளுமன்றத் தேர்தலில் 39-ல் 37 தொகுதிகளை அ.தி.மு.க கைப்பற்றியது. இரண்டில் மட்டுமே தோல்வி. கிருஷ்ணகிரி தொகுதியில் அ.தி.மு.க வென்றபோதும் அங்கே அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமியின் பதவி பறிபோனது. கன்னியாகுமரியில் தோற்றதால் பச்சைமாலின் தலை உருண்டது. தர்மபுரியில் தோற்றதால் அமைச்சர் பி.பழனியப்பனின் பதவி பறிபோயிருக்க வேண்டும். ஆனால் போகவில்லை. அதுதான் பழனியப்பனின் டெக்னிக். அரசியலில் காட்டும் தன் திறமையை, தன்னைத் தேர்வு செய்த பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குப் பயன்படுத்தியிருக்கிறாரா? இந்த இதழில், ‘என்ன செய்தார் எம்.எல்.ஏ.’... உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன்.
[You must be registered and logged in to see this image.]
[size]
‘அம்மாவுக்கு விசுவாசமாக இருப்பேன்’ எனச் சொல்லும் பழனியப்பன், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி மக்களுக்கு விசுவாசமாக இருக்கிறாரா? சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டாரா? ஒரு பருந்துப் பார்வையில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியை வலம் வந்தோம்...

அது போன தேர்தல்... இது இந்தத் தேர்தல்!

இந்த நான்கரை ஆண்டுகளில் அவரை தொகுதிப் பக்கம் அடிக்கடி பார்க்க முடியவில்லை. இப்போது தேர்தல் நெருங்கி வருவதால், பல ஊர்களில் இப்போதுதான் முதல் முறையாக அவருடைய பாதம்படுகிறது. தர்மபுரி இளவரசன் - திவ்யா காதல் விவகாரத்தால் நடந்த கலவரத்தில்  குடிசைகள் கொளுத்தப்பட்டன. அ.தி.மு.க-வினர் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டார்கள். தமிழகத்தையே அதிர வைத்த அந்தச் சம்பவத்தில் தொகுதியின் எம்.எல்.ஏ என்ற முறையில், பழனியப்பன் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல்கூடச் சொல்லவில்லை. பிரச்னையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராமல் விட்டுவிட்டார். அந்த ‘வெற்றிடத்தை’ பா.ம.க சரியாகப் பயன்படுத்திக்கொண்டது. நாடாளுமன்றத் தேர்தலில் எல்லா இடங்களிலும் அறுதிப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற அ.தி.மு.க., தர்மபுரியை கோட்டைவிட்டது. காரணம், தர்மபுரி  கலவரத்தில் பழனியப்பனின் அணுகுமுறை சரியில்லாததுதான் என்று கட்சிக்குள்ளேயே பலர்  பொங்கித் தீர்க்கிறார்கள்.
[/size]
[You must be registered and logged in to see this image.]
[size]
வாணியாறு இடதுபுற கால்வாய்த் திட்டம்!

பழனியப்பன் வாக்குறுதியாக அறிவித்ததில் முக்கியமானது இந்த வாணியாறு இடதுபுற கால்வாய்த் திட்டம். இந்தத் திட்டம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகால கோரிக்கை. வாணியாறு அணையிலிருந்து கால்வாய் மூலமாக  தென்கரைக் கோட்டை, ராமாயன அள்ளி, கர்த்தானூர், குருபர அள்ளி, தாதனூர், பசுவாபுரம், வகுத்துப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான பாசன வசதியை ஏற்படுத்தித் தருவதுதான் இந்த வாணியாறு இடதுபுற கால்வாய்த் திட்டம். இந்தத் திட்டத்துக்கான வாக்குறுதியை தர்மபுரிக்கு வாக்குசேகரிக்க வந்த ஜெயலலிதாவே அறிவித்தார். ஆனால், கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கிறது, இந்தத் திட்டம். வாணியாறு கால்வாய்த் திட்டம் பற்றி பழனியப்பனிடம் பொதுமக்கள் கேட்க, ‘‘அந்தத் திட்டம் ஆய்வில் இருக்கிறது. அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள். கூடிய விரைவில் நிறைவேற்றப்படும்’’ என்று சொல்லி இருக்கிறார். வாணியாறு அணையிலிருந்து எருமியாம்பட்டியிலிருந்து புதுப்பட்டி வரையிலும், எலவடையிலிருந்து மொரப்பூர் வரையிலும் கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டுவருவதாக கொடுத்த வாக்குறுதியும் ‘தோண்டப்படாத கால்வாய்’ ஆக மறைந்தே கிடக்கிறது. கடத்தூரை ஒன்றியமாக அறிவித்து பல நாட்கள் ஆகிறது. ஆனால், அதற்கான கூடுதல் கட்டடங்கள் கட்டப்படவில்லை. அரசு ரீதியான நடவடிக்கைகள் எதுவுமே இல்லை என்கிறார்கள்.
[/size]
[You must be registered and logged in to see this image.]
[size]
அரூர் டு அயோத்திப்பட்டினம் சாலை! 

அரூரில் இருந்து அயோத்திப்​பட்டினம் வரை செல்லும் சாலை தொடர்பான பிரச்னை பூதாகரமாகியிருக்கிறது. கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில், இந்தச் சாலை மிகவும் மோசமாக இருக்கிறது என்று சொல்லி, அப்போத்தைய மாநில ஜெயலலிதா பேரவைச் செயலாளரான நயினார் நாகேந்திரனை அழைத்துவந்து பெரிய போராட்டம் நடத்தினார், அப்போது தர்மபுரி மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளரான பழனியப்பன். ‘எனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்தால், முதல் வேலையாக இந்தச் சாலையை சரிசெய்வேன்’ என்றும்  முழங்கினார் பழனியப்பன். முழங்கியதோடு சரி. பெங்களூரில் இருந்து சேலம் செல்லும் கனரக வாகனங்கள் சுங்கக் கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக, இந்தச் சாலையைப் பயன்படுத்துகிறார்கள். அமைச்சர் ஊருக்கு அருகிலேயே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சட்டவிரோதமாகச் சென்று கொண்டிருக்கின்றன. அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள கிராமத்து மக்கள் சேலத்துக்கு செல்ல பிரதான சாலையே அதுதான். அந்தச் சாலையில் பயணிக்க முடியாமல், எல்லோரும் பல கி.மீ சுற்றிக்கொண்டு செல்கிறார்கள். தினசரி விபத்துகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இந்தச் சாலை பிரச்னை, தொகுதி முழுக்க தீவிரமெடுத்து உள்ளது. சில நாட்களுக்குமுன் சாமியாபுரம் கூட்டுரோட்டுக்கு பகுதி நேர நியாயவிலைக் கடையைத் திறக்க வந்த பழனியப்பனிடம், சாலை பிரச்னை பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு, ‘‘இது, நினைச்ச உடனே செய்து முடிக்கிற வேலை இல்லை’’ என்று பதில் சொன்னாராம் பழனியப்பன்.

அதேபோல, ‘‘எ.பள்ளிப்பட்டியில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி வரை உள்ள சாலை, பை-பாஸ் ஆக மாற்றப்படும். சேலம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பாப்பிரெட்டிப்பட்டி வழியாக வந்துபோக வழி செய்கிறேன்’’ என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், பாபிரெட்டிப்பட்டிக்கு வந்துகொண் டிருந்த தனியார் பேருந்துகளில் பாதி நிறுத்தப்பட்டதுதான் மிச்சம். பை-பாஸ் சாலை அமைக்கப்படவில்லை. பஸ்ஸும் வரவில்லை என்று கோபப்படுகிறார்கள் தொகுதிவாசிகள். ‘பாப்பிரெட்டிப் பட்டிக்கும் வெங்கசமுத்திரத்துக்கும் இடையில் இணைப்புப் பாலம் அமைத்துத் தருகிறேன்’ என்று சொன்னார். அதுவும் இன்னும் செய்து தரப்படவில்லை.
[/size]
[You must be registered and logged in to see this image.]
[size]
வழி இல்லாத வாடகைக் கட்டடங்கள்! 

பாபிரெட்டிப்பட்டி ஓர் அமைச்சரின் தொகுதி என்று வரையறுக்கும் வகையில் எந்தத் திட்டமும் பளிச்சிடவில்லை. இங்குள்ள நீதிமன்றம், ஆரம்ப காலத்திலிருந்தே வாடகைக் கட்டடத்தில்தான். அதற்கென தனியாக இடம் வாங்கி கட்டடம் கட்ட வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை. காவல் நிலையத்துக்கும் சொந்தக் கட்டடம் இல்லை. சர்க்கரை ஆலை அலுவலகமும் வாடகைக் கட்டடத்தில்தான் உள்ளது. இப்படி அரசு அலுவலகக் கட்டடங்கள் அனைத்தும் அந்தோ பரிதாபத்தில்தான் இருக்கின்றன. நீதிமன்றக் கட்டடம் கேட்டு வக்கீல்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. பாப்பிரெட்டிப் பட்டியில் 90 லட்சம் ரூபாய் மதிப்பில் தீயணைப்புத் துறை அலுவலகம் அமைக்கப்படும் என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார். அதுவும் அறிவிப்போடு நிற்கிறது. 
[/size]
[You must be registered and logged in to see this image.]
[size]
தரமற்ற கல்லூரிக் கட்டடம்!

இந்தத் தொகுதிக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் உருப்படியான திட்டம் கலை அறிவியல் கல்லூரிதான். பாப்பிரெட்டிப்பட்டியில் பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கடந்த 12-06-2015 அன்று முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார். திறக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையில், கல்லூரிக் கட்டடங் களின் சுவர்கள் டார்டாராக விரிசல் அடைந் துள்ளன. ஒருநாள், வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போதே மேற்கூரை விழுந்திருக்கிறது. தினமும் ஏதேனும் ஒரு சுவர் விரிசலடைகிறது. அதைப் பூசி மறைக்கிறார்கள். மாணவர்கள் அச்சத்தோடுதான் வகுப்பறைக்குள் உட்கார்ந்திருக்கிறார்கள். உயர்கல்வித் துறை அமைச்சரின் சொந்தத் தொகுதியில், அவருடைய வீட்டிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்லூரியின் லட்சணம் இது. அந்தக் கல்லூரியை கட்டிய ஒப்பந்தக்காரர்தான் அமைச்சருடைய வீட்டையும் கட்டினாராம். அமைச்சர் வீடு பக்காவாக கட்டப்பட்டு இருக்கிறது. ஆயிரக் கணக்கான மாணவர்கள் பயிலும் கல்லூரி கட்டடம் ஏனோதானோவென்று தரமற்றதாகக் கட்டப்பட்டு உள்ளதாக மக்கள் வெடிக்கிறார்கள். 

ஒகேனக்கல் குடிநீர் இல்லை!

ஃப்ளூரைடு கலந்த குடிநீரைக் குடித்து பல இன்னல்களுக்கும் நோய்களுக்கும் ஆளான தர்மபுரி மக்களுக்கு இப்போது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்தான் ஒரே நம்பிக்கை. இந்தத் திட்டத்துக்கான அஸ்திவாரத்தைப் போட்டது தி.மு.க-தான் என்றாலும், திட்டத்தை நிறைவுசெய்து திறந்து வைத்தது அ.தி.மு.க-தான். அரைகுறையாகத் திட்டத்தை நிறைவேற்றிவிட்டு, இப்போது அதைச் சொல்லி ஓட்டு கேட்க வருகிறார்கள்.  பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பல ஊர்கள் இன்னும் ஒகேனக்கல் தணணீரைப் பார்க்கவும் இல்லை, பருகவும் இல்லை. அமைச்சரின் சொந்த ஊரான மோளையானூருக்கே ஒகேனக்கல் தண்ணீர் வரவில்லை என்று மக்கள் கண்ணைக் கசக்குகிறார்கள்.
[/size]
[You must be registered and logged in to see this image.]
[size]
ரயில்வே இணைப்புப் பாதை!

மொரப்பூரிலிருந்து தர்மபுரி வரை ரயில்வே இணைப்புப் பாதை ஏற்படுத்திவிட்டால், அது பெரிய அளவில் உபயோகமாக இருக்கும். வணிகரீதியாகவும் இந்த இணைப்புத் திட்டம் பெரும் பயன்தரும்.

‘நான் வெற்றி பெற்றால் மொரப்பூர் டு தர்மபுரி ரயில்வே இணைப்புப் பாதை அமைக்கப்படும்’ என்றார் பழனியப்பன். ஆனால், இதுவரை அதற்கான குறைந்தபட்ச முயற்சிகளைக்கூட அவர் எடுக்கவில்லை என்கிறார்கள். 

கடந்த தேர்தலின்போது அள்ளிவீசிய வாக்குறுதிகளை, வெற்றிபெற்றவுடன் மறந்துவிட்டு, அதே வாக்குறுதிகளை மீண்டும் அள்ளிவீச தயாராகிவருகிறார் பழனியப்பன்.

 - எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: க.தனசேகரன், எம்.விஜயகுமார்

[/size]

[size]
ப்ளஸ்-மைனஸ்..!
[/size]
[You must be registered and logged in to see this image.]
[size]
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியைப் பொறுத்தவரை இரண்டு கல்லூரிகள் கொண்டுவந்ததும் இன்னொரு பாலிடெக்னிக் கல்லூரியை அறிவித்திருப்பதும்தான் பழனியப்பனுக்கு இருக்கும் ப்ளஸ்.

இவ்வளவு நாட்களாக இல்லாமல், ‘தேர்தல் நேரத்தில் மனு வாங்குகிறேன்’ என்ற பெயரில் வருகிறார். ஏதாவது நிகழ்ச்சிக்கு வரும் நேரத்தில் மக்கள் பிரச்னைகளைச் சொன்னால், ‘இது உடனேயே தீர்க்கக்கூடிய பிரச்னை இல்லை’ என்று முகத்தில் அடித்தார்போல் பேசுகிறார் என்பது மைனஸ்.

எம்.எல்.ஏ. அலுவலகம் ரெஸ்பான்ஸ் எப்படி?
[/size]
[You must be registered and logged in to see this image.]
[size]
எம்.எல்.ஏ அலுவலகம் ரெஸ்பான்ஸ் எப்படி என்பதை அறிய பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிவாசியாக உருமாறினோம். ‘நீதிமன்றக் கட்டடம் வேண்டும்’ என்ற வேண்டுகோளைத் தாங்கிய மனு ஒன்றை தயாரித்துக்கொண்டு பாப்பிரெட்டிப்பட்டியில் இருக்கும் எம்.எல்.ஏ அலுவலகத்துக்குச் சென்றோம். அலுவலகம் பூட்டிக்கிடந்தது. அருகில் உள்ள கடைக்காரர்களிடம் விசாரித்தால், ‘‘இங்கயெல்லாம் அவர் வரமாட்டாரு. பக்கத்துலதான் அவர் ஊரு இருக்கு. போய் கட்சிக்காரவங்களைக் கேளுங்க’’ என்றார்கள். எம்.எல்.ஏ அலுவலகத்தை இதுவரை பழனியப்பன் உபயோகப்படுத்தவே இல்லையாம். மின் கட்டணம்கூட கட்டாமல் ஃபியூஸை பிடுங்கப்போகும் கடைசி நேரத்தில் கட்டணத்தைக் கட்டித்தான் கரன்ட்டை மீட்டார்களாம்.

பழனியப்பன் ரியாக்‌ஷன் என்ன?


‘காலையில் தினமும் கண்விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா’ பழனியப்பனின் ரிங் டோனில்கூட அம்மா மயம். அவரிடம் பேசினோம். ‘‘650 கிராமங்களுக்குச் சென்று மக்கள் குறைகளைக் கேட்டு மனுக்கள் வாங்கியுள்ளேன். தர்மபுரி யூனியனில் ஒரு பொறியியல் கல்லூரியும், பாப்பிரெட்டிப்பட்டியில் கலை அறிவியல் கல்லூரியும், கட்டி முடிக்கப்பட்டு மாணவர்கள் பயின்று வருகிறார்கள். கடத்தூர் யூனியனுக்கு ஒரு பாலிடெக்னிக் கல்லூரி அறிவிக்கப்பட்டு உள்ளது. 20 உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாச்சாத்தி மலை உள்ளிட்ட பல இடங்களுக்கு சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. கடத்தூரை யூனியனாக மாற்றியிருக்கிறோம். கிராம தன்னிறைவு திட்டத்தின் கீழ் 15 திருமண மண்டபங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன. திருப்பத்தூர் டு சேலம் நான்கு வழிச் சாலை அமைப்பதற்கு வேலைகள் நடந்துவருகின்றன. பல கிராமங்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. 12 கால்நடை மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. இப்படி நிறைய செய்திருக்கிறோம். இன்னும் பல பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன” என்றார்.[/size]
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - எம்.எல்.ஏ. மு.கருணாநிதி - திருவாரூர்
» என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் (ஒரத்தநாடு)
» என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் நத்தம் விசுவநாதன் - நத்தம்
» என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி (எடப்பாடி)
» என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - ஜவாஹிருல்லா (ராமநாதபுரம்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum