TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி (எடப்பாடி)

Go down

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி (எடப்பாடி) Empty என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி (எடப்பாடி)

Post by Tamil Sat Mar 05, 2016 3:23 pm

‘சக்கரை மூட்டை இருக்கா?’, ‘சக்கரை மூட்டை இருக்கா?’ என்று கூவியவாறு சர்க்கரை மூட்டைகளை வாங்கிக் கொண்டிருந்தவர்... பங்காளியோடு வாய்க்கால் வரப்புச்சண்டையில் ஈடுபட்டு, இருவரைக் கொலைசெய்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக இருந்தவர்... காவல் துறைக்குப் பயந்து மேற்குத்தொடர்ச்சி மலையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்... அது எல்லாம் ஒரு காலம். இன்றைக்கு, போலீஸ் பாதுகாப்போடு, சிவப்பு விளக்குச் சுழலும் சொகுசுக் காரில் வலம் வருகிறார். அவர்தான், தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி. எம்.எல்.ஏ-வாக அவர் தேர்வுசெய்யப்பட்டது, சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி சட்டமன்றத் தொகுதி. ஒரு நகராட்சி (எடப்பாடி), ஐந்து பேரூராட்சிகள் (கொங்கணாபுரம், பூலாம்பட்டி, ஜலகண்டாபுரம், வனவாசி, நங்கவள்ளி), மற்றும் 29 ஊராட்சிகள் இந்தத் தொகுதியில் உள்ளன. மொத்த மக்கள்தொகை மூன்றரை லட்சம்.
[You must be registered and logged in to see this image.]
இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வான பழனிச்சாமி, அமைச்சராக இருப்பதால் வி.ஐ.பி தொகுதியாக இது கணிக்கப்படுகிறது. இவர், தன் தொகுதியை எப்படி வைத்திருக்கிறார்? என்ன ‘சாதனைகளை’ செய்திருக்கிறார் என்று பார்ப்ப தற்காக, தொகுதி முழுவதும் ஒரு விசிட் அடித்தோம்.
இலவுகாத்த கிளி போல...

முதலில் நாம் சென்ற இடம் கொங்கணாபுரம். டீக்கடையில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த ஒரு விவசாயியிடம் பேச்சுக்கொடுத்தோம். மனிதர் மளமளவென்று பேச ஆரம்பித்தார். ‘‘திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் கிளை இங்கேதான் இருக்கு. இந்தச் சங்கத்தின் மூலம் வாரத்துக்கு ஐந்து நாட்கள் பருத்தி டெண்டர் விடப்படுகிறது. இதில், எடப்பாடி தொகுதியில் இருந்தும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இருந்தும் பருத்தி விவசாயிகளும் நூற்பாலை உரிமையாளர்களும் கலந்துகொள்வார்கள். வாரத்துக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் பருத்தி விற்பனை நடக்கிறது. ஆனால், இங்கே, அரசு நூற்பாலையே இல்லை. அதனால், தனியார் நூற்பாலை உரிமையாளர்கள் பேசி வைத்துக்கொண்டு, விவசாயிகளுக்கு பருத்திக்கான உரிய விலை கொடுக்காமல் அடிமட்ட விலைக்கு டெண்டரில் பருத்தியைக் கேட்குறார்கள்.

இதைக் கண்டித்து அடிக்கடி போராட்டங்கள் நடத்தியிருக்​கிறோம். ‘நான் வெற்றி பெற்றால், கொங்கணாபுரத்தில் அரசு நூற்பாலை கொண்டு வருவேன்’னு 2011 சட்டமன்றத் தேர்தலில் பழனிச்சாமி வாக்குறுதி கொடுத்தார். பஞ்சுக்கான நியாயமான விலை கொடுத்து அரசு பெற்றுக்கொள்ளும் என்றும் சொன்னார். அதை நம்பி நாங்களும் அவருக்கு ஓட்டு போட்டோம். வெற்றிப் பெற்று அவர் அமைச்சரானார். அமைச்சர் ஆனதால் கூடுதல் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், இலவு காத்த கிளி போல நான்கரை வருடங்களாகக் காத்துக்கிடக்கிறோம். அவரும் வரவில்லை. அரசு நூற்பாலையும் வரவில்லை” என்று வருத்தத்துடன் சொன்னார்.

வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக வந்தால் கொங்கணாபுரத்துக்கு கட்டாயம் காவல்​நிலையமும் பஸ் நிலையமும் கொண்டு வருவதாக வாக்களித்தார். காவல்நிலையம் வரவே இல்லை. பஸ் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இரண்டுவழி சாலையாக இருக்கும் ஓமலூர் டு சங்ககிரி மெயின் ரோட்டை நான்கு வழி சாலையாக மாற்றி ரோட்டை செப்பனிட்டு தருவதாகச் சொன்னார். செய்யவில்லை.

 இது பெங்களூரு, ஓசூர், கிருஷ்ணகிரியில் இருந்து வரும் பேருந்துகள் கேரளாவுக்கும் தமிழகத்தின் தென் பகுதிக்கும் செல்லும் பிரதான சாலை. இது குண்டும் குழியுமாக இருக்கிறது. நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தும் சொந்தத் தொகுதியில் உள்ள சாலை இப்படி மோசமாக இருக்கலாமா என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

[You must be registered and logged in to see this image.]
எடப்பாடி தூர் வாரப்படாத சரபங்கா...

எடப்பாடி தொகுதி மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது சரபங்கா ஆறு. அங்கே ஆடுமேய்த்துக்கொண்டிருந்த ஒருவரிடம் பேசினோம். ‘‘ஒரு காலத்தில் இந்த ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடும். ஏற்காடு மலையில் உருவாகி ஓமலூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, எடப்பாடி நகராட்சிக்குள் புகுந்து சங்ககிரி சென்று அன்னமார்கோவில் என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது. இந்த ஆற்றின் மூலம் எடப்பாடி தொகுதியில் மட்டும் 30 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். மழைக்காலத்தில் தண்ணீர் வரத்து இருக்கும். இங்கே, பல தடுப்பணைகள் இருக்கின்றன. மரம் செடி புதர்களால் அடைந்துகிடக்கும் இந்த ஆற்றைச் செப்பனிட்டுத்தருவதாக பழனிச்சாமி வாக்குறுதி கொடுத்தார். ஆனால், அதை நிறைவேற்றவே இல்லை. ஆற்றில் தண்ணீர் தேங்குவதும் குறைந்துவிட்டது’’ என்றார். 

தொழிலாளர்கள் தலையில் துண்டு!

எடப்பாடி, துண்டுகளுக்குப் பிரபலம். திருப்பூருக்கு அடுத்தபடியாக இங்கு தான் அதிக அளவு துண்டுகள் நெய்யப்படுகின்றன. சில காலமாக, சாயக்கழிவுப் பிரச்னையால் தொழில் சற்று நலிந்துள்ளது. எடப்பாடியில் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையமும் ஜவுளி பூங்காவும் கொண்டு வருவதாகக் கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசார மேடையில் பழனிச்சாமி முழங்கினார். ஆனால், இன்று வரை அதைச் செய்யவில்லை. “பழனிச்சாமி, எங்கள் தலை மீது துண்டு போட்டு விட்டார்’’ என்கிறார்கள் தறித் தொழி​லாளர்கள். அதே நேரம், பழனிச்சாமி செய்த உருப்படியான காரியம், எடப்​பாடிக்கு கலைக்கல்லூரி கொண்டு வந்ததுதான் என்கிறார்கள் தொகுதி மக்கள். 

கனவாகிய சுற்றுலாத்தலம்!

அடுத்து நாம் ஆஜரானது பூலாம் பட்டியில். இங்கு காவிரியின் தடுப்பணை இருப்பதால், நீர் நிறைந்து கோடைக் காலத்தில் அந்தப் பகுதியே அழகாகக் காட்சி தரும். சுற்றிலும் வயல்வெளிகள். பச்சைப் பசேல் என்று இருப்பதால், சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கிறது. எப்போதும், சில்லென்று காற்று வீசும். அவ்வப்போது, வெளிநாட்டுப் பறவைகள் வந்து போகும். இங்கு, விசைப்படகு சவாரியும் உண்டு. தினமும் 500-க்கும் மேற்பட்ட மக்கள் விசைப்படகுகளில் பயணிப்பார்கள். 

இங்கு, கைலாசநாதர் திருத்தலமும் உண்டு. சுடச்சுட பொறித்த மீன்கள் கிடைக்கும். வாரத்தில் குறைந்தது 2000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். ஆனால் அவர்கள், காவிரியில் பாதுகாப்பாகக் குளிக்க வசதியில்லை. தங்கும் விடுதிகளோ, பூங்காவோ கிடையாது. பூலாம்பட்டியை சுற்றுலாத்தலமாக மாற்றுவேன் என்று கடந்த தேர்தலில் பழனிச்சாமி வாக்குறுதி அளித்தார். அவர் எதையுமே செய்ய வில்லை என்பதை நேரில் கண்டோம்.

[You must be registered and logged in to see this image.]
புதிய வழித்தடங்களில் பேருந்துகள்

நாம், ஜலகண்டாபுரத்துக்குச் சென்ற​போது அங்கே ஆசிரியர் ஒருவரை சந்தித்தோம். ‘‘ஜலகண்டாபுரம் டவுனில் இருந்து வரும் கழிவு நீர் மொத்தமும் கட்நாயக்கன்பட்டி ஏரியில் தேங்குகிறது. ஏரியைச் சுற்றி 3 கி.மீ சுற்றளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. சுற்றியுள்ள கிராமங்களில் அடிக்கடி கொடிய நோய்கள் வந்து பலர் மரணம் அடைகிறார்கள். ஏரியைத் தூய்மைப்படுத்துவதாக பழனிச்சாமி வாக்களித்தார். ஆனால், சொன்னதோடு சரி. ஜலகண்டாபுரத்தில் மின்மயானம் அமைத்துத் தருவதாகச் சொன்னார். அதை நிறைவேற்றி உள்ளார். ஜலகண்டாபுரத்தில் இருந்து ஈரோடு, கோவை, திருச்சி மற்றும் சென்னை, பெங்களூருக்கு புதிய வழித்தடங்களில் ஒன்பது பேருந்துகள் விடப்பட்டிருக்கின்றன. இது பழனிச்சாமியின் முயற்சி’’ என்கிறார்கள். 

வனவாசியில் இருந்த ஒரு பெரியவர், ‘‘வனவாசியில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்களும், ஏழை வன்னியர் இன மக்களும் அதிகம் வசிக்கிறார்கள். சோரை, சமுட்டியூர் போன்ற கிராமங்களுக்கு  ஓட்டு கேட்க வந்தபோது கிராமத்தில் உள்ளவர்களுக்குத் தொகுப்பு வீடுகள் கட்டி தருவதாக உறுதியளித்தார். ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் ஒரு தொகுப்பு வீடுகூட கட்டித்தரவில்லை. 

70 ஆண்டுகால கனவுத்திட்டம்!


நங்கவள்ளி பேரூராட்சி, மேட்டூர் தொகுதியின் எல்லையில் உள்ளது. தானாதியூர் - மூலக்காடு நீரேற்றுத் திட்டம் என்பது 70 ஆண்டுகாலக் கனவுத்திட்டம். அதை நிறைவேற்றுவதாக பழனிச்சாமி உறுதியளித்தார். சேலம் பிரசாரத்துக்கு ஜெயலலிதா வந்தபோது, அவர் வாயாலேயே அதைச் சொல்லவும் வைத்தார். இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், குறைந்தது 2 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். வெற்றிபெற்ற பிறகு இதைப் பற்றி அவர் வாய் திறக்கவே இல்லை. நங்கவள்ளியில் கலைக் கல்லூரி கொண்டு வருவேன் என்ற வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை” என்றனர் அந்தப் பகுதி மக்கள்.

[You must be registered and logged in to see this image.]
ஓரம்கட்டப்பட்ட சொந்தக்கட்சியினர்!

எடப்பாடி பழனிச்சாமி மீது பொதுமக்களை விட, அதிக கோபத்தில் இருப்பவர்கள் சொந்தக் கட்சிக்காரர்கள். இவர் எம்.எல்.ஏ ஆவதற்கு உழைத்த அனைவரையும் ஓரங்கட்டிவிட்டார். எடப்பாடி முன்னாள் எம்.எல்.ஏ-வும், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளருமான ஐ.கணேசன், மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர் சுரேஷ், எடப்பாடி முன்னாள் ஒன்றியச் செயலாளர் முனுசாமி என அதிருப்தியாளர்களின் பட்டியல் நீள்கிறது.

“தொகுதிக்குள் விடப்படும் கான்ராக்ட் வேலைகளை, அந்தந்த யூனியனில் டெண்டர் விட்டு கட்சிக்காரர்களுக்கு சலுகை காட்டுவது தான் தமிழகம் முழுவதும் வழக்கத்தில் இருக்கிறது. ஆனால், தன் கட்சிக்காரர்கள் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக, எந்த வேலைக்கான டெண்டர் விடுவதாக இருந்தாலும், சென்னையிலேயே தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கொடுத்துவிடுகிறார்’’ என்று கொதிக்கிறார்கள், கட்சிக்காரர்கள். 

-வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன், எம். விஜயகுமார்



ப்ளஸ்... மைனஸ்...  

தொகுதிக்குள் அடாவடித்தனம். கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றில் அமைச்சர் நேரடியாகத் தலையிடுவதில்லை. அவரைச் சார்ந்தவர்களும் ஓரளவுக்கு அடக்கி வாசிக்கிறார்கள். தொகுதியின் சில பகுதிகளில் ‘பளபள’ தார் சாலைகள் போடப்பட்டுள்ளன. தொகுதிக்குள் சிறு சிறு வேலைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் பாசிட்டிவாக பார்க்கிறார்கள் என்பது அவரது ப்ளஸ்.

[You must be registered and logged in to see this image.]
வெற்றிபெற்ற பிறகு பல கிராமங்களுக்கு நன்றி சொல்லக்கூட அவர் வரவில்லை. அமைச்சரை பார்ப்பது குதிரை கொம்பு. விசைத்தறியும், விவசாயமுமே பிரதான தொழில்கள். இந்தத் தொழில்களைச் சார்ந்து வாழும் மக்களை அவர் கண்டுகொள்ளவில்லை என்பது பெரும் குமுறலாக இருக்கிறது. பிரதான பகுதிகளில் தார் சாலைகள் போடப்பட்டு இருந்தாலும், பல குக்கிராமங்களுக்கு சாலை வசதிகள் இல்லை. பேருந்து வசதியும் இல்லை என்பதெல்லாம் இவருக்கு மைனஸ்.

எம்.எல்.ஏ., அலுவலகம் ரெஸ்பான்ஸ் எப்படி?

சட்டமன்ற அலுவலகம் எடப்பாடி டவுன் அருகிலே இருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் ஆட்சியில் ஒரே ஒரு முறைதான் தன் அலுவலகத்துக்கு அவர் வந்துள்ளார். எடப்பாடி நகராட்சித் தலைவர் கதிரேசன், நகரச் செயலாளர் ராமன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் தான் அலுவலகம் இருக்கிறது. தட்டுமுட்டுச் சாமான்களைப் போட்டு வைக்கும் குடோனாகத்தான் இதை அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு, மனுக்கொடுப்பதற்காக அந்த அலுவலகத்துக்குச் செல்வதையே மக்கள் நிறுத்திவிட்டனர்.

[You must be registered and logged in to see this image.]
எடப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 3 வருடங்களுக்கு முன்பு தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் மூன்று மாணவிகளுக்கு  கால்கள் துண்டாகிவிட்டன. அதில், மாதையன் என்பவரின் மகள் மகா (எ) மகேஸ்வரியும் ஒருவர். மாதையனிடம் பேசினோம். “அப்போது என் மகள் 7-ம் வகுப்பு படித்தாள். தற்போது 10 வகுப்பு படிக்கிறாள். அமைச்சரைப் பார்க்க என் மகளை கூட்டிக்கொண்டு பலமுறை அவரது அலுவலகத்துக்குச் சென்றேன். அது எப்போதும் பூட்டியே கிடந்தது. அமைச்சரின் வீட்டுக்குச் சென்றேன். சேலத்தில் உள்ள வீட்டில் போய் பார்க்குமாறு அமைச்சரின் அண்ணன் சொன்னார். அங்கும் பலமுறை சென்றேன். அமைச்சரைப் பார்த்து மனுக் கொடுத்தபோது அதை, ‘தாசில்தாரிடம் கொடு’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்’’ என்று கண்ணீருடன் சொன்னார். 

ரியாக்‌ஷன் என்ன?

சேலத்தில் உள்ள அமைச்சரின் வீட்டுக்குச் சென்றோம். வீட்டில் அவர் இல்லை. எனவே, அவரது செல்போனில் தொடர்பு கொண்டோம். அமைச்சரின் செல்போனை அவரது பி.ஏ., கார்த்திக் தான் எடுத்தார். விவரத்தைச் சொல்லி அமைச்சரிடம் கொடுங்கள் என்றதற்கு, ‘‘பத்திரிக்கையாளர்களை நேரில் தான் அமைச்சர் பார்ப்பார். போனில் பேச மாட்டார்’’ என்றார். ‘சரி அமைச்சர் எங்கிருக்கிறார்?’ என்றதற்கு, ‘‘அவர் சென்னையில் இருக்கிறார். சென்னைக்கு வாருங்கள்’’ என்றார். ஒரு தகவல் கேட்பதற்கு சேலத்தில் இருந்து சென்னைக்கு வர முடியுமா? என்றதற்கு, ‘‘ஸாரி பிரதர். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது’’ என்றார். “தொகுதி மக்கள் அமைச்சரைப் பார்க்க வேண்டும் என்றால் சென்னைக்கு வர முடியுமா?” என்று கேட்டதற்கு, ‘‘பொதுமக்களிடம் அமைச்சர் செல்போனிலேயே பேசுவார். பத்திரிகையாளர்களிடம் மட்டும் தான் செல்போனில் பேச மாட்டார்’’ என்றார். 

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒரு முறைகூட அமைச்சரை நம்மால் தொடர்புகொள்ள முடியவில்லை.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் பி.பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி)
» என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - எம்.எல்.ஏ. மு.கருணாநிதி - திருவாரூர்
» என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் (ஒரத்தநாடு)
» என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் நத்தம் விசுவநாதன் - நத்தம்
» என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - சரத்குமார் (தென்காசி)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum