TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - காடுவெட்டி குரு (ஜெயங்கொண்டம்)

Go down

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - காடுவெட்டி குரு (ஜெயங்கொண்டம்) Empty என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - காடுவெட்டி குரு (ஜெயங்கொண்டம்)

Post by Tamil Sat Mar 05, 2016 3:22 pm

பா.ம.க-வின் முக்கியப் புள்ளி குருநாதன் என்கிற குரு. பளிச்சென சொல்ல வேண்டும் என்றால், காடுவெட்டி குரு. அவரது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி.
[You must be registered and logged in to see this image.]
1986-ல் காடுவெட்டியில் தி.மு.க-வின் கிளைச் செயலாளராக இருந்தவர் இவர். வன்னியர் சங்கத்தை விரிவுபடுத்துவதற்காக எம்.கே.ராஜேந்திரன், விரபோக.மதியழகன் ஆகியோர் குருவை ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கத்தில் இணைத்தனர். பின்பு படிப்படியாக செயற்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளர் என உயர்ந்தார். பின்பு, வன்னியர் சங்கத் தலைவராக பதவி உயர்வு பெற்றார். 2001-ல் அ.தி.மு.க கூட்டணியில் ஆண்டிமடத்தில் பா.ம.க. சார்பில் நிறுத்தப்பட்டு, முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். அதற்கு பிறகு நடந்த 2006 சட்டமன்றத் தேர்தல், 2009 நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்திலும் தோல்வி. மீண்டும் 2011 ஜெயங்கொண்டத்தில் தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்றார். தற்போது ஜெயங்கொண்டத்தின் சட்டமன்ற உறுப்பினர்.
[You must be registered and logged in to see this image.]
‘‘உங்கள் வீட்டுப் பிள்ளை. கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து நிற்கும் ஒரே பிள்ளை. நீங்கள் படும் கஷ்ட நஷ்டங்களை நன்கு அறிந்த பிள்ளை. குருவை வெற்றி பெறவைத்தால் அரசு கலைக் கல்லூரிகளே இல்லாத ஜெயங்கொண்டத்தில் கல்லூரி வரும். பல வருடங்களாகக் கிடப்பில் போடப் பட்டிருக்கும் என்.எல்.சி நிலக்கரி திட்டம் நிறைவேறும். அனைத்து சாதியினரும் ஒற்றுமையாக வாழ வழி வகை செய்யப்படும்’’ என்று பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க  அடங்கிய கூட்டணியின் பிரசாரக் கூட்டங்​களில் பேசினார் குரு. கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறிவிட்டனவா என்று அறிந்துகொள்ள தொகுதிக்குள் வலம்வந்தோம்.

ஜெயங்கொண்டம் பகுதி மக்களிடம் பேசினோம். ‘‘இந்த ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் வன்னியர்களும், தலித்களும் சம அளவில் இருக்கிறார்கள். செங்குந்த முதலியார் 20 சதவிகிதம், உடையார், செட்டியார்கள் என பல சாதிகள் நிறைந்த பொதுத் தொகுதி. 2001 காலகட்டத்தில் ஆண்டிமடத்தில் எம்.எல்.ஏ-வாக நின்று வெற்றிபெற்றார் குரு. அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெறமுடியாது என்று ஜெயங்கொண்டத்தில் 2006-ல் நின்றார். ஆனால், தோல்வியைத் தழுவினார். மீண்டும் 2011-ல் தி.மு.க-வின் கூட்டணியில் வெற்றி பெற்றார். அவர் வெற்றிபெற்று நான்கரை ஆண்டுகளில் வெறும் சொற்ப நாட்கள்தான்  சட்டமன்றத்துக்கே சென்றுள்ளார். ஜெயங்கொண்டத்தில் முடங்கிக் கிடக்கும் திட்டங்களைப் பற்றி சட்டமன்றத்தில் எடுத்துப்பேச ஆளில்லை.

[You must be registered and logged in to see this image.]
எங்கள் தொகுதியில் குரு சொன்ன தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த ஒரு திட்டத்தையாவது செயல்படுத்தி​ உள்ளாரா என்றால், அதுவும் இல்லை. எங்கள் பகுதி குறைகளை சட்டமன்றத்தில் பேசி அதற்்கான தீர்வுகளைக் காணவேண்டும் என்பதால்தான் இவரை ஓட்டு போட்டு சட்ட​மன்றத்துக்கு அனுப்பிவைத்​தோம். ஆனால், இவர் அவருடைய சொந்தப் பகை, கட்சிப் பகைகளை மனதில் வைத்துக்கொண்டு சட்டமன்றத்துக்கு சரிவரச் செல்வதில்லை. அங்குதான் செல்லவில்லை என்றால், எம்.எல்.ஏ அலுவலகத்துக்கும் வருவதில்லை. அலுவலகம் இரண்டு வருடங்களாகப் பூட்டியே கிடக்கிறது. 

எங்கள் ஊர் படிப்பறிவில் பின்தங்கி இருக்கிறது. கல்லூரி படிப்புக்காக மாணவர்கள் அரியலூர், கும்பகோணம், தஞ்சாவூர் என்று பல ஊர்களுக்குச் சென்று படித்துவருகிறார்கள். ‘‘என்னை வெற்றி பெறச் செய்தால் இந்த நிலைமையை மாற்றிக் காட்டுவேன்’’ என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், செய்யவில்லை. 

கங்கைகொண்ட சோழபுரம் கோயில் எங்களுக்குச் சொந்தமானது என்று குரு அடிக்கடிச் சொல்வார். ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரி  தூர்வாரப்படும் என்று சொன்னார். ஆனால், அவர் வெற்றி பெற்றபிறகு இதைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை’’ என்று குமுறத் தொடங்கினர்.

[You must be registered and logged in to see this image.]
கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் பேசினோம். ‘‘இங்கு முக்கியப் பிரச்னையே ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டம்தான். இந்தத் திட்டத்துக்காக 1991-ம் ஆண்டு 10 ஆயிரத்து 500 ஏக்கருக்கு மேல் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மக்களுக்குப் பணமும் கிடைக்காமல் நிலமும் கிடைக்காமல் மக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். வழக்கை விசாரித்து 2008-ம் ஆண்டு, ஒரு மாதத்துக்குள் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், அரசு கொடுக்கவில்லை. ஒரே விஷயத்துக்காக 11 ஆயிரம் வழக்குகளைப் போட்டுவிட்டு 16 ஆண்டுகளாகத் தீர்வுக்காகக் காத்திருக்கிறார்கள் மக்கள்.
[You must be registered and logged in to see this image.]
கல்லூரி எங்கே? பொன்னேரி தூர்வாரப்படவில்லை. இங்குள்ள அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை. டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாமல் அடிப்படை வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். மருத்துவத் தேவைகளுக்காக பலர் தஞ்சைக்குச் செல்கிறார்கள். அவசரச் சிகிச்சை கிடைக்காமல் போகும் வழியிலேயே இறந்துபோகிறார்கள். இவர், தனது கட்சி சார்ந்த கூட்டத்துக்கு மட்டும்தான் வீட்டைவிட்டு வெளியே வருகிறார். இவர் அறிவித்த பல திட்டங்களில் ஒரு திட்டத்தையும் முடிக்கவில்லை. ரேஷன் கடை, சுடுகாடு, சிறு சிறு பில்டிங் வேலைகளைத்தான் எடுத்துச்செய்தார். இவற்றை வார்டு கவுன்சிலர்களே செய்வார்கள். இதற்கு எதற்கு எம்.எல்.ஏ.? ஒரே ஒரு நல்ல விஷயம். பெரிய அளவில் சாதிக் கலவரங்கள் நடக்கவில்லை. அதேபோல அதிகாரிகளின் நடவடிக்கைகளில் இவர் குறுக்கிடுவது இல்லை’’ என்றனர்.
- எம்.திலீபன், ஏ.ராம், கே.குணசீலன், க.சதீஷ்குமார், த.எழிலரசன், மு.ஜெயராஜ், சு.அகிலாண்டேஸ்வரி


ப்ளஸ்... மைனஸ்!
[You must be registered and logged in to see this image.]
தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகச் செலவு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் எம்.எல்.ஏ-வாக வந்த பிறகு காவல் துறையும், அதிகாரிகளும் அச்சத்தில் இருந்துள்ளனர். ஆனால், இவர் ஒரு முறைகூட சிபாரிசுக்காகவும் பிரச்னைகாகவும் எந்த அதிகாரிகளிடமும் குறுக்கீடு செய்யவில்லை. அதுமட்டு​மில்லாமல் வன்னியர்களால் எந்தப் பகுதியிலும் சாதிக் கலவரம் நடந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் என்பது ப்ளஸ்.

மைனஸ்


எம்.எல்.ஏ-வை அலுவலகத்தில் மட்டுமில்லாமல், வீட்டிலும் பார்க்க முடிவதில்லை. மக்கள் பிரச்னைகளைப் பற்றி கண்டுகொள்வதே இல்லை. பா.ம.க-வினர் சார்பில் கூட்டம் நடந்தால் மட்டுமே, இவரைப் பார்க்க முடியும் என்பது இவரது மைனஸ்.



எம்.எல்.ஏ. அலுவலகம் ரெஸ்பான்ஸ் எப்படி?
[You must be registered and logged in to see this image.]
ஜெயங்கொண்டத்தில் பா.ம.க-வுக்கு என தனி அலுவலகம் இல்லை. அடி பள்ளத்தில் உள்ள அரசு சட்டமன்ற அலுவலகத்தைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். குரு பதவி ஏற்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவேதான் மக்களிடம் மனுக்களைப் பெற்றுள்ளார். இரண்டு வருடங்களாக எம்.எல்.ஏ அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. அலுவலகத்துக்கு பெரும்பாலும் அவர் வருவது இல்லை. மக்கள் பிரச்னைகளை அதிகாரிகளிடம்தான் மக்கள் முறையிடுகிறார்கள். பிரச்னைகளை யாரிடம் சொன்னால் எம்.எல்.ஏ-விடம் போகும் என்று விசாரித்தோம். பா.ம.க-வின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வைத்திலிங்கத்தைக் கைகாட்டினார்கள். 10 மனுக்கள் கொடுத்தால் ஒன்று, இரண்டு மட்டும்தான் நிறைவேறும் என்கின்றனர் மக்கள்.


ரியாக்‌ஷன் என்ன?

குருவிடம் தகவலைச் சொல்லிப் பேசினோம். குருவின் சார்பாக பா.ம.க-வின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வைத்திலிங்கம் நம்மிடம் பேசினார்.

‘‘50 ரேஷன் கடைகள், 60-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்டியுள்ளோம். தொகுதியில் உள்ள மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆர்.ஓ சிஸ்டம் அமைத்துக்கொடுத்துள்ளோம். 30 கிராமங்களுக்கு ரோடு போட்டுக்கொடுத்துள்ளோம். ஐந்தாண்டுகளில் 25 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் மற்றும் உதவித்தொகை வழங்கியுள்ளோம். எம்.எல்.ஏ அலுவலகம் நகர்ப்புறத்தைவிட்டு வெளியில் உள்ளதால் மக்கள் யாரும் வருவதில்லை. 

ஆளும் கட்சியினரை எதிர்த்து எதிர்க் கட்சிகளே அரசியல் செய்ய முடியாத நிலையில், எங்களைப் போன்ற கட்சிகள் என்ன செய்யமுடியும்? எங்களுடைய சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதனை செய்துள்ளோம்’’ என்று முடித்துக்கொண்டார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum