TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் (ஒரத்தநாடு)

Go down

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் (ஒரத்தநாடு) Empty என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் (ஒரத்தநாடு)

Post by Tamil Sat Mar 05, 2016 3:08 pm

தொடர்ந்து 2001, 2006, 2011 என மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெற்றவர் வைத்திலிங்கம். இவர் 2001-ல் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர். இப்போது வீட்டுவசதித் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்து வருகிறார். வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதி மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்?

2011 தேர்தல் பிரசாரத்தில், “நான் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்திருக்கிறேன். என்னால் முடிந்தவரை தொகுதி மக்களுக்குச் செய்திருக்கிறேன். மீண்டும் என்னை வெற்றிபெறச் செய்தால், நீங்கள் கேட்காமலேயே நிறையச் செய்வதற்குக் காத்திருக்கிறேன்” என்று கூறினார். என்னென்ன செய்திருக்கிறார் என்று அறிய தொகுதிக்குள் வலம் வந்தோம்.

[You must be registered and logged in to see this image.]
விவசாயிகளைக் கண்டுகொள்ளவில்லை!  

‘‘விவசாயிகள், விவசாயக் கூலித்தொழிலாளிகள் வாழ்கின்ற பகுதி. விவசாயம்தான் பிரதான தொழில். விவசாயத்தை மேம்படுத்தவும், மேட்டுப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் ஒக்கநாடு கீழையூர், அரசப்பட்டு, பருத்திக்கோட்டை, திருவோணம் ஆகிய பகுதிகளில் கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பம்பு செட்டுடன்கூடிய நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது. 

இதனால், ஆற்றுநீர் பாசனம் இல்லாத மேட்டுப்பகுதிகளுக்கு நீரேற்று நிலையம் மூலம் நீரைப்பாய்ச்சி விவசாயம் செய்தனர். 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதியைப் பெற்றது. அங்கு, இன்று ஒரு நீரேற்று நிலையம்கூட செயல்படாமல் துருப்பிடித்த நிலையில் இருக்கிறது. விவசாய அமைச்சர் என்ற முறையில் இதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்கிறார்கள் மேட்டுப் பகுதி விவசாயிகள். 

தென்னை விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை, கொப்பரை கொள்முதல் நிலையம். தேர்தல் நேரத்தில் வைத்திலிங்கம், “பாப்பநாட்டில் கொப்பரைக் கொள்முதல் நிலையத்தை அமைப்பேன்” என்று சொன்னார். சொன்னது சொன்னதாகவே இருக்கிறது, தென்னை விவசாயிகளின் கோரிக்கை அப்படியே கிடக்கிறது.   

முப்போகம் விவசாயம் செய்த விவசாயிகள் ஒருபோக விவசாயம் செய்வதற்குக்கூட தண்ணீர் இல்லாமல் திண்டாடி வருகிறார்கள். நெல் அறுவடைசெய்து அரசு நேரடி கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு சென்றால், அங்கே மூட்டைக்கு 35 ரூபாய் பிடித்துக்கொண்டுதான் கொள்முதல் செய்கிறார்கள். தொகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் இருக்கின்றன. மழைத் தண்ணீரைச் சேமித்து வைப்பதற்கு ஏதுவாகக் கதவணைகளைக் கட்டி நீரைத் தேக்கி விவசாயத்துக்குப் பயன்படும்படி செய்திருந்தால், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குச் சென்றிருக்க மாட்டார்கள் என்ற ஆதங்கக் குரல் விவசாயிகள் மத்தியில் எதிரொலிக்கிறது. 

[You must be registered and logged in to see this image.]
தி.மு.க ஆட்சியில் கல்லணைக் கால்வாய் கரைகளைப் பலப்படுத்தி, சிமென்ட் தளம் அமைத்தனர். ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அது கண்டுகொள்ளப்படாமல், தண்ணீர் வீணாவதோடு, சீராகக் கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் போய்ச் சேருவதில்லை. குருங்குளம் சர்க்கரை ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளைக்கொண்டு மின்சாரம் தயாரிக்கும் இணை மின்நிலையம் பணி தொடங்கப்பட்டது. 

இன்னும் முடிவடையாமல் அப்படியே கிடக்கிறது. காவராப்பட்டு கட்டக்குடிக்குச் செல்லும் வழியில் அசுவினி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

அதேபோன்று மழைக்காலங்களில் வேதபுரி வாய்க்காலில் மழைநீர் கரைபுரண்டு ஓடும். இதனால், அந்தப் பகுதி விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி, பெரும் சேதத்தை ஏற்படுத்தும். அதன் குறுக்கே பாலம் கட்டினால் வெள்ளச் சேதத்தைத் தடுக்கலாம் என்பது அந்தப் பகுதி விவசாயிகளின் நீண்டநாள் எதிர்பார்ப்பு. அதற்கு இப்போதுதான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இன்னும் வேலை நடைபெறவில்லை. காவிரியில் தண்ணீர் திறப்பு குறைந்துவிட்டது. விவசாயிகள் நெல்லுக்குப் பதிலாகக் காய்கறிகளைப் பயிரிட்டு வருகிறார்கள். காய்கறிகளை விற்பனை செய்யும் சந்தையை ஒரத்தநாட்டில் ஏற்படுத்தினால், நன்றாக இருக்கும் என்று விவசாயிகளின் சார்பில் கோரிக்கை வைத்தும் அமைச்சர் செவிசாய்க்கவில்லை என்கிறார்கள்.

[You must be registered and logged in to see this image.]
அடிப்படைப் பிரச்னைகளை தீர்க்கவில்லை! 

“கால்நடை பண்ணை நிலத்தில் ஒரத்தநாடு அரசு மருத்துவனை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும், அதனை சுகாதாரத்துடன் 24 மணி நேரமும் இயங்கச் செய்வேன்” என்று தேர்தல் நேரத்தில் ஒரத்தநாடு வீதிகளில் வாக்குறுதிகளை வைத்திலிங்கம் அள்ளி வீசினார். அதுபோல விரிவாக்கப் பணிகள் நடக்கவில்லை. மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை, அறுவைச்சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் இல்லை, பிணவறையில் போதுமான குளிரூட்டும் வசதி இல்லை. சுகாதாரம் கெட்டு, நோய் பரவும் அபாய நிலையில்தான் ஒரத்தநாடு அரசு மருத்துவமனை இருக்கிறது என்கிறார்கள் மருத்துவமனைக்கு வந்து செல்லும் புறநோயாளிகள்.

தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்ல வேண்டுமானால், ஒரத்தநாட்டில் 5 இடங்களில் பஸ் நிறுத்தங்கள் இருக்கின்றன. இதனால், அந்தப் பகுதி மக்கள் போக்குவரத்து நெரிசலால் மிகவும் சிரமப்படுகின்றனர். மிகவும் குறுகலான பேருந்துநிலையத்தை விரிவுபடுத்தி, பல்வேறு தடங்களிலிருந்து வந்து செல்லும் பேருந்துகளை ஒழுங்குப்படுத்தி, ஓர் இடத்தில் நின்று போகுமாறு செய்ய வேண்டும் என்பது நகரவாசிகளின் நீண்டநாள் கோரிக்கை. அமைச்சராக இருந்தும் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள் நகரவாசிகள்.

தொகுதிக்கு உட்பட்ட கோனூர் பகுதி, பொய்யுண்டார்கோட்டை ஊராட்சியில் உள்ள பிலாவடி தெரு, புதுஆற்றின் மேற்குப் பகுதியில் இருப்பதால் 2 கி.மீ சென்றுதான் பஸ் ஏற வேணடிய சூழ்நிலை இருக்கிறது. மேலும், அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள், அறுவடை செய்யும் நெல்லை 2 கி.மீ சுற்றிச் சென்றுதான் விற்பனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். தேர்தல் நேரத்தில் வாக்குக் கேட்டு வந்த வைத்திலிங்கம், “நிச்சயம் உங்களுக்கு பாலம் கட்டித்தருவேன்” என்று வாக்குறுதி அளித்தார். இதுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை.  

சந்தைப்பேட்டை பகுதி சுத்தம், சுகாதாரம் இல்லாமல் சீர்கெட்டும், சமூக விரோதச் செயல்களும் நிகழ்வதால் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ஒரத்தநாடு அரசுக் கல்லூரி, தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் இருக்கிறது. 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் தினந்தோறும் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். கல்லூரிக்குச் செல்லும் வழியில்தான் டாக்ஸி ஸ்டாண்ட் இருக்கிறது. கல்லூரி மாணவிகளைச் சிலர் ஈவ்டீஸிங் செய்வதாகப் புகார் உள்ளது. எனவே, அந்த டாக்ஸி ஸ்டாண்டை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் சாப்பில் வைக்கப்பட்டும், அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை. மாணவிகள், கிண்டல்களுக்கு இடையே கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.

[You must be registered and logged in to see this image.]
“தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அரசுப் பணிமனையைப் புதுமையாக மாற்றுவேன் எனச் சொன்னார். பேருந்துகள் வந்து செல்வதற்குப் பணிமனை வளாகத்துக்குள் தார்சாலைகள் அமைக்கப்படாமல் குண்டும், குழியுமாகக் கிடக்கிறது. பேருந்துகள் திறந்தவெளியில்தான் நிறுத்தி வைக்கப்​படுகின்றன” என்கிறார்கள் பணிமனை ஊழி​யர்கள்.

“கக்கரை, நெய்வாசல், உளூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிமனைப் பட்டா இல்லாமல் விவசாயக் கூலித்தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். குடிமனை பட்டா வழங்கவேண்டும் என்ற அவர்களின் நீண்டநாள் கோரிக்கையை அமைச்சர் இன்னும் நிறைவேற்றவில்லை. ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் வளர்ச்சி அடைந்திருக்​கிறார்கள். ரேஷன்கார்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. ஆனால், பல ஊர்களில் பகுதிநேர அங்காடிகள்தான் இயங்கி வருகின்றன. முழுநேர அங்காடிகளாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேறவில்லை” என்கிறார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

 - ஏ.ராம், க.சதீஷ்குமார், தி.கௌதீஷ், த.எழிலரசன்,  ம.அரவிந்த், 
படம்: கே.குணசீலன்



வைத்திலிங்கம் ரியாக்‌ஷன் என்ன?

வைத்திலிங்கத்தை தொடர்புகொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. அவருடைய உதவியாளர் ஆர்.காந்தியிடம் பேசி​னோம். “தொகுதி நிதியை முழுமையாகச் செலவு செய்திருக்கிறார். சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன. தொகுதிக்கு உட்பட்ட ஈச்சங்கோட்டையில் வேளாண் கல்லூரி, ஒரத்தநாட்டில் கால்நடைக் கல்லூரி, பேரூராட்சி அந்தஸ்தில் உள்ள ஒரத்த​நாட்டுக்குப் பாதாளச் சாக்கடைத் திட்டம், திருவோணத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம், கண்ணந்தங்குடியில் சிறுகன் ஏரி சீரமைப்பு, ஒக்கநாடு கீழையூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றைக் கொண்டு வந்திருக்கிறார். இது மட்டுமில்லாமல் தமது தொகுதியில் இருந்து தொகுதிக்கு நிறையப் பணிகளைச் செய்திருக்கிறார்” என்றார்.

எம்.எல்.ஏ. அலுவலகம் ரெஸ்பான்ஸ் எப்படி?

[You must be registered and logged in to see this image.]
தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை பைபாஸ் ரோட்டில் இருக்கிறது எம்.எல்.ஏ அலுவலகம். பொதுமக்களிடமிருந்து மனுக்களை வாங்குவதற்கு ஆட்களை நியமித்து இருக்கிறார் வைத்திலிங்கம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்கள் வாங்கப்படும் என்று சொல்கிறார்கள். நாம் இரண்டு நாட்கள் தொடர்ந்து 10 மணி முதல் 5 மணி வரை காத்திருந்தோம். இரண்டு நாட்களுமே அலுவலகம் திறக்கப்படவில்லை. சுற்றுவட்டார மக்கள் மனுக்கொடுக்க வேண்டுமென்றால், 5 கி.மீ தொலைவிலுள்ள வைத்திலிங்கத்தின் சொந்த ஊரான தெலுங்கன் குடிக்காடு அல்லது தஞ்சாவூரில் இருக்கும் சுற்றுலா மாளிகைக்குச் சென்றுவிடுகிறார்கள். அலுவலகம் திறந்திருக்கும்போது மனுக்களை வாங்கிக்கொள்கிறார்கள். தஞ்சாவூர் வரும்போது அவரிடம் மனு பற்றிய விவரங்களைத் தெரிவிக்கிறார்கள். 

ப்ளஸ்... மைனஸ்!

[You must be registered and logged in to see this image.]
தொகுதிக்குள் வலம் வரும்போது யாரைப் பார்த்தாலும் கையெடுத்துக் கும்பிடுவது வைத்திலிங்கத்தின் வழக்கமான பாணி. சாதாரண மனிதர்கள்கூட அவரை எளிமையாகச் சந்திக்க முடியும். கோரிக்கை மனுவை அளிக்க முடியும். கட்சிக்காரர்கள், பொதுமக்கள் யார் வந்து உதவி கேட்டாலும், கல்வி, மருத்துவம், திருமண உதவிகளைச் செய்வது. கான்ட்ராக்ட் வேலைகளில் வரும் கமிஷனை கிளை கழகச் செயலாளர் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை பிரித்துக்கொடுப்பது இவரது ப்ளஸ்.
“எம்.எல்.ஏ அலுவலகத்தில் மழைக்குக்கூட ஒதுங்கியதில்லை, பொதுமக்களிடம் மனு வாங்கியது இல்லை” என்பது இவரது மிகப் பெரிய மைனஸ்.   
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum