Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 4:07 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
மந்திரி தந்திரி கேபினெட் கேமரா- பேராசிரியர் அன்பழகன்
Page 1 of 1
மந்திரி தந்திரி கேபினெட் கேமரா- பேராசிரியர் அன்பழகன்
மந்திரி தந்திரி கேபினெட் கேமரா- பேராசிரியர் அன்பழகன்
''முதல் நிலையில் நான் மனிதன், ஆண்மகன். அடுத்து நான் அன்பழகன். அதற்குப் பிறகு நான் ஒரு பகுத்தறிவாளன். நான்காவதாக நான் அண்ணாவின் தம்பி. ஐந்தாம் நிலையில் நான் கலைஞரின் நண்பன். இந்த முன்னுரிமை, வரிசை முறை எப்போதும் என்னுடன் இருக்கும். மரணம்தான் அதனை அழிக்கக் கூடும். அழிக்க முடியும்!'' என்று சொல்லிவிட்டு, வரையறுக்கத் தகுந்த வாழ்க்கை முறையில் வாழ்ந்து வருபவர் பேராசிரியர் அன்பழகன். அவரது முன் கதையைச் சுருக்கமாக எழுதுவதற்குக்கூட 30 பக்கம் தேவை!கருணாநிதியைவிட இரண்டு வயது மூத்தவர் அன்பழகன் என்பதால், ''எனக்கு இரண்டு அக்காமார்கள் உண்டு. ஆனால், அண்ணன் இல்லை. பேராசிரியரை அண்ணனாக நினைக்கிறேன்!'' என்று சொல்லி, அவரைத் தன் அருகிலேயே வைத்துக்கொண்டு இருக்கிறார். கருணாநிதியிடம் ஜனநாயக உணர்வு இருக்கிறது என்பதற்கு அன்பழகனின் இருப்பே முக்கியமான ஆதாரம். இவரிடம் ஆலோசனை பெற்ற பின்னால்தான், எந்த முடிவையும் அறிவிக்கிறார் என்று சொல்ல முடியாது. ஆனால், பேராசிரியர் தவறாக நினைத்துவிடுவாரோ என்ற பதற்றம் மட்டும் கருணாநிதிக்கு எப்போதும் இருக்கும். அந்த அளவுக்கு மரியாதை வாங்கி வைத்திருக்கிறார் அன்பழகன்!
[You must be registered and logged in to see this image.]
இந்த நட்புக்குக் காரணம், அன்பழகனும் திருவாரூருக்கு அருகில் உள்ள காட்டூரில் பிறந்தவர் என்பதால் இருக்கலாம். அவரது அப்பா கலியாணசுந்தரத்துக்குச் சொந்த ஊர் மயிலாடுதுறையாக இருந்தாலும், இந்தக் காட்டூரில் குடியிருந்தபோதுதான் அன்பழகன் பிறந்தார். காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக இருந்த கலியாணசுந்தரம், பெரியார் அந்தக் கட்சியில் இருந்து விலகியபோது அவருடன் விலகியவர். பகுத்தறிவு இயக்கத்தின் கருத்துக் களைப் பரப்புவதில் முக்கியமாக இருந்த கலியாணசுந்தரம், தனது பெயரை மணவழகர் என்று மாற்றிக்கொண்டார். தன்னுடைய மகனுக்கு ராமையா என்று பெயர் வைத்துஇருந்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குப் படிக்க வந்த ராமையாவுக்கு அதே பல்கலைக்கழகத்தில் படிக்க வந்த நாராயணசாமி என்ற மாணவன் நெருக்கமானான். இருவரும் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே பிரசாரம் செய்து வந்தார் கள். திராவிட இயக்கத்துக்குச் சம்பந்தம் இல்லாத பெயர்கள் தங்களுக்கு இருப்பதை இருவரும் மாற்றிக்கொண்டார்கள். அன்பழகனாக ஆனார் ராமையா. நாராயணசாமி என்ற மாணவன்தான் பிற்காலத்தில் பிரபலமான நாவலர் நெடுஞ்செழியன்!படித்துக்கொண்டே கொள்கைப் பிரசாரம் செய்து வந்த அன்பழகன், படித்து முடித்ததும் முழு நேர அரசியல்வாதியாக மாறவில்லை. குடும்பச் சூழ்நிலையும் உஷாரான தன்மையும்தான் இதற்குக் காரணம். தேர்தலில் பங்கேற்கும் முடிவைக் கட்சி எடுக்காத காலம் என்பதால், ஏதாவது ஒரு வேலைக்குப் போய்விட்டு, அங்கிருந்து பிரசாரங்களில் இறங்கலாம் என்று அன்பழகன் நினைத்தார். பச்சையப்பன் கல்லூரி விரிவுரையாளர் பதவிக்கு பெரியார்தான் இவரைப் பரிந்துரைத்தார். அங்கு துணைப் பேராசிரியராகவும் ஆனார். பேராசிரியராகப் பதவி உயர்வை எட்டுவதற்கு முன்னதாகவே 1957 தேர்தலில் எழும்பூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ. ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அன்பழகன். அண்ணா சட்டமன்றக் கட்சித் தலைவராக இருந்தபோது இவர் துணைத் தலைவராக இருந்தார். தி.மு.க. போட்டியிட்ட முதல் தேர்தல் அது. அவரது வீடு புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் இருக்கும். காஞ்சிபுரத்தில் குடியிருந்த பேரறிஞர் அண்ணாவுக்கு சென்னையில் தங்க வீடு இல்லாததால், அன்பழகனது வீட்டில்தான் தங்கியிருப்பார். 62 தேர்தலில் அன்பழகன் தோற்றுப் போனார். அடுத்து சட்டமன்ற மேலவைக்குப் போனார். 67 தேர்தலில் எம்.பி- யாகப் போட்டியிட்டு டெல்லி போனதால், அண்ணாவின் அமைச்சரவையில் இவரால் இடம் பெற முடியவில்லை. 71 தேர்தலில் மீண்டும் சட்டமன்றத்துக்குப் போட்டியிட்டு, கருணாநிதி முதலமைச்சராக இருக்க... இவர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அன்று முதல் தி.மு.க. அமைச்சரவையில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார் அன்பழகன். கட்சியின் பொருளாளர் பதவி வகித்த எம்.ஜி.ஆர். பிரிந்து சென்றபோது பொருளாளர் ஆனார் அன்பழகன். பொதுச் செயலாளராக இருந்த நெடுஞ்செழியன் விலகியபோது இவரே பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார். கடந்த 32 ஆண்டுகளாக தி.மு.க-வின் நிரந்தரப் பொதுச் செயலாளராக அன்பழகனே தொடர்கிறார்.
[You must be registered and logged in to see this image.]இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அவரது பொதுச் செயலாளர் நாற்காலிக்குச் சிக்கல் வந்தது. மத்திய அமைச்சராக அழகிரி ஆனதைத் தொடர்ந்து, ஸ்டாலினுக்குக் கட்சி ரீதியாக ஓர் உயர்வு கொடுத்தாக வேண்டும் என்று அவரது தரப்பினர் கோரிக்கை வைத்தார்கள். பொதுச் செயலாளர் பதவிதான் அவர்களால் குறிவைக்கப்பட்டது. 'பேராசிரிய ருக்குத் துணைத் தலைவர் பதவி கொடுத்து விட்டு, ஸ்டாலினைப் பொதுச் செயலாளர் ஆக்கலாம் என்று தலைவர் நினைத் தார். அதற்காக ஆற்காடு வீராசாமியும் துரைமுருகனும் பேராசிரியரிடம் தூது போனார்கள். இவர்கள் சொன்னதைக் கேட்டதும், 'அதை மட்டும் எதுக்குத் தரணும்?’ என்று கிண்டலாகக் கேட்டார். பேராசிரியர் கோபமாக இருப்பதை இது காட்டு வதாக தலைவர் உணர்ந்து, அந்தத் திட்டத்தைக் கைவிட்டார் பொருளா ளர் பதவி ஸ்டாலினுக்குத் தரப்பட் டது!’ என்று சொல்கிறார்கள் கட்சி யில். இதுதான் அன்பழகன் அதிக பட்ச கோபத்தைக் காட்டிய இடம். மற்றபடி கருணாநிதி எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் தலையாட்டும் மனித ராகவே அவர் வலம் வருகிறார்.
கட்சி மாவட்டச் செயலாளர் தேர்தலில் எத்தனையோ எதிர்ப்புகளுக்கு மத்தியில் நின்று வென்றார் செஞ்சி ராமச்சந்திரன். தனக்குப் பிடிக்காதவர் ஜெயித்தால், அவரது பலத்தைக் குறைத்துவிடுவார்கள். அப்படித்தான் செஞ்சியார் வசம் இருந்த மாவட்டம் இரண்டாகப் பிளக்கப்பட்டது. அந்தப் பகுதிக்கு எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மாவட்டச் செயலாளர் ஆனார். இந்தச் சம்பவம் நடந்த ஒரு வாரம் கழித்து, அந்தப் பகுதிக்கு பேராசிரியர் போனார். தன்னுடைய அதிகாரம் குறைக்கப்பட்டது குறித்து செஞ்சியார் வருத்தப்பட்டார். 'கலைஞர் இந்த மாவட்டத்தை ரெண்டாத்தான் பிரிச்சார். நானா இருந்தா நாலா பிரிச்சிருப்பேன்!’ என்றாராம் பேராசிரியர். இதே மாதிரி இன்னொரு சம்பவம்... கட்சியில் வைகோ ஓரம்கட்டப்பட்ட காலம் அது. நெய்வேலி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அன்பழகனிடம் வைகோ தனிஅறையில் ஒன்றரை மணி நேரம் தன்னுடைய மனக் குறையைக் கொட்டினார். ''நீ என்ன சொன்னாலும் ஸ்டாலின் அவரோட மகன். அவனை அவரு மடியில் தூக்கிவைப்பார். உன்னை வைக்க முடியுமா? இந்த வித்தியாசத்தை உணர்ந்தால் வேதனைகள் இல்லை!'' என்று பதில் அளித்தார் பேராசிரியர். அதாவது, தன்னளவில் எல்லாவற்றுக்கும் உறுதியான அபிப்பிராயங்கள் இருந்தாலும், ஒரு தலைமையின் கீழ் பணியாற்றுவது என்று முடிவெடுத்துவிட்டால், அதைப்பற்றி எந்த வருத்தமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவராக அன்பழகன் இருக் கிறார். இந்தப் பொறுமையும் சகிப்புத் தன்மை யும்தான் அவரை 32 ஆண்டுகளாக ஒரே பதவியில் தக்கவைத்திருக்கிறது.
'அண்ணாவுக்குப் பிறகு கலைஞர்தான் வாழும் அண்ணா!’ என்று ஆதித்தனார் பேசியபோது, பொது மேடையில் மறுத்த தைரியசாலிதான் அன்பழகன். 'முதலமைச்சர் பதவி என்பது ஒரு வேலை. அந்த வேலைக்கு வந்திருப்பதாலேயே கலைஞர், அண்ணாவாக ஆகிவிட முடியாது. கலைஞரைவிட நான் இரண்டு வயது மூத்தவன். அதனாலும் நான் அவரை அண்ணா என்று அழைக்க முடியாது. அப்படி அழைத்தால், என் மனைவியே கேலி செய்வார்கள். எனவே, நமக்கு அண்ணாதான் தலைவர். கலைஞரைத் தலைவராக அல்ல, தளபதியாகத்தான் ஏற்றுக்கொள்வேன்!’ என்று நேப்பியர் பூங்கா பொதுக்கூட்டத்தில் சொன்னவர் பேராசிரியர். அண்ணா இறந்த பிறகு நடந்த முதல் பொதுக்கூட்டம் அதுதான். அதன் பிறகு மைக் பிடித்த கருணாநிதி, 'நீங்கள் என்னைத் தலைவராக ஏற்றாலும் சரி, தளபதி யாக ஏற்றாலும் சரி... தளர் பதியாக மட்டும் ஆக்கிவிடாதீர்கள்!’ என்று சொன்னார். தன்னு டைய தோழன் நெடுஞ்செழியனா, நண்பர் கருணாநிதியா... யார் முதல்வர் பதவிக்குத் தகுதியானவர் என்ற போட்டி வந்தபோது, கருணாநிதிதான் பொருத்தமானவர் என்று தேர்ந்தெடுக்கும் தீர்க்கதரிசனமும் அன்பழகனுக் குத்தான் இருந்தது. ஆனால், அவரே இன்று ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொள்வேன், அவரது மகனும் வரலாம் என்ற அளவுக்குப் பேச ஆரம்பித்தது... அன்பழகனின் அளவுக்கு அதிகமான விரக்தியின் வெளிப்பாடுகளாகவே தெரிகின்றன. 'நல்லது நடந்தால் மகிழ்ச்சி. தப்பு நடந்தால் வருத்தம் இல்லை’ என்ற மத்தியதர மனோபாவத்துக்கு அன்பழகன் வந்து, பல ஆண்டுகள் ஆகிவிட்டதற்கு எத்தனையோ உதாரணங்களைக் காட்டலாம்!
'காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி!’ என்று எம்.ஜி.ஆர். சொல்லி வந்த காலத்தில், அவரது புகழைப் பார்த்துப் பலரும் பதில் சொல்லப் பயந்தார்கள். எம்.ஜி.ஆரையும் அண்ணாவையும் மேடையில் வைத்துக்கொண்டே, 'இப்படிச் சொல்பவர்களுக்கு தி.மு.க-வில் இடம் இல்லை!’ என்று சொல்லக் கூடிய தைரியமும் துணிச்சலும் அன்பழகனுக்கு மட்டுமே இருந்தது. ஆனால், இன்று கட்சியில் எத்தனையோ அதிகார மையங்கள் உருவாகிவிட்டன. இவை அனைத்தும்தான் கட்சியின் நிர்வாகத்தை, முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. ஆனாலும், அன்பழகனால் என்ன செய்ய முடிந்தது? வேடிக்கை பார்ப்பதைத் தவிர! பழம் பெருமைகளுக்காக மட்டுமே 'முன்னாள் கலகக்காரர்’ என்று அன்பழகனுக்குத் தாராள மாகப் பட்டங்களைத் தரலாம். இன்று அவர் அனைத்தையும் சகித்துக்கொள்ளப் பழகிக் கொண்டார். மௌனம் சம்மதத்தின் அறிகுறி என்று அப்பாவிகளும் அறிவார்கள். அன்பழகன் அறிய மாட்டாரா என்ன?
[You must be registered and logged in to see this image.]அன்பழகன் பொதுச் செயலாளராக இருந்து 'கடமை’ ஆற்றுவதைப்போலத்தான் நிதி அமைச்சராகவும் இருக்கிறார். பட்ஜெட் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், நிதி அமைச்சரையே அழைக்காமல், நிதித் துறைச் செயலாளரை வைத்து கருணாநிதியே கூட்டம் நடத்தியதும் உண்டு. அதற்கும் அன்பழகன் கவலைப்படவில்லை. அதனால்தான், நிதித் துறையின் செயல்பாடுகள் குறித்து இந்த இடத்தில் பேசவும் முடியாது. எனவேதான் அன்பழகனும் நிதித் துறை பற்றி எங்கும் பேசுவது இல்லை. எல்லாக் கூட்டத் திலும் இனமானம், தன்மானம், பகுத்தறிவு, நாத்திகம், சுயமரியாதை போன்ற வார்த்தைகளைப்பற்றியே அதிகம் பேசுவார். அன்பழகனுக்குப் பிறகு, இதைப்பற்றிப் பேசுவதற்குக்கூட யாரும் அங்கு இல்லை. இவை அனைத்துக்கும் முற்றும்!
இந்தத் தொடருக்கும்!, ஒவியம் : அரஸ்
Similar topics
» மந்திரி தந்திரி கேபினெட் கேமரா- வீரபாண்டி ஆறுமுகம்
» பேராசிரியர் அன்பழகன் டெசோ மாநாட்டில் பேசிய பேச்சுக்கள் என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது
» மகரஜோதி பற்றிய வீண் விவாதம் வேண்டாம்: தந்திரி வேண்டுகோள்
» தந்திரி எதிர்ப்பு தெரிவித்தும் கேட்பாரில்லை: குருவாயூரில் ரகசிய கேமராக்கள் அமைப்பு
» திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ . ஜெ.அன்பழகன் கைது
» பேராசிரியர் அன்பழகன் டெசோ மாநாட்டில் பேசிய பேச்சுக்கள் என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது
» மகரஜோதி பற்றிய வீண் விவாதம் வேண்டாம்: தந்திரி வேண்டுகோள்
» தந்திரி எதிர்ப்பு தெரிவித்தும் கேட்பாரில்லை: குருவாயூரில் ரகசிய கேமராக்கள் அமைப்பு
» திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ . ஜெ.அன்பழகன் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|