TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மலையாளிகளின் துரோகங்கள்-இலங்கை - சாம்ராஜ்

2 posters

Go down

மலையாளிகளின் துரோகங்கள்-இலங்கை  - சாம்ராஜ் Empty மலையாளிகளின் துரோகங்கள்-இலங்கை - சாம்ராஜ்

Post by navas Sat May 29, 2010 8:02 pm

சமீபத்தில் குங்குமம் இதழ் நேர்காணலில் மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது ”இலங்கை பிரச்சனை பற்றி என்ன கருதுகிறீர்கள்?” “எனக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது, சிங்களர் பக்கம் சரியா தமிழர் பக்கம் சரியா என்றும் எனக்கு தெரியாது. எனவே எனக்கு இலங்கை பிரச்சனை பற்றி ஒன்றும் தெரியாது.” இதுவே எம்.டி.வாசுதேவனின் பதில். இதை அறியாமை என்றும் கொள்ளலாம் அகந்தை என்றும் கொள்ளலாம்.

கால காலமாக ஈழ போராட்டத்தின் மீது மலையாளிகளுக்கு பெரும் காழ்ப்புணர்வு இருக்கிறது. வரலாற்று ரீதியாக பார்த்தால் 1920களில் சிங்களவர்கள் மலையாளிகளை தாக்கத்துவங்குகிறார்கள். மலையாளிகள் இலங்கையைவிட்டு வெளியேறுகின்றனர். வெளியேறிய மலையாளிகளின் எண்ணிக்கை சொற்பமே. ஏ.எம்.கோபாலன் போன்ற கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இந்த வெளியேற்றத்தை தடுக்கவும் மலையாளிகளை காக்கவும் முயன்றார்கள். அதில் தோல்வியும் அடைந்தார்கள் (வர்க்க பாசத்தை விட மலையாள பாசம் மேலானது அல்லவா).
நியாயமாக இந்த வரலாற்றின் அடிப்படையில் மலையாளிகள் தமிழர் போராட்டத்தை ஆதரித்திருக்க வேண்டும். ஆனால் பின்னதாக நடந்த மலையாளம் மற்றும் சிங்கள ஆளும் வர்க்க இணக்கத்தின் அடிப்படையில் எங்கே தமிழர்களுக்கு ஒரு தனி நாடு கிடைத்துவிடுமோ என்கிற வன்மத்தின் அடிப்படையிலும் ஈழப்போராட்டத்திற்கு எதிராக மலையாள உயர்மட்ட ஆளும் வர்க்க குழாம் இயங்கியது, இயங்குகிறது என்ற நம்பிக்கை எனக்கு திடமாக உண்டு.
நாம் பலவற்றை நிரூபிக்க முடியாது ஆனால் நம் உள்ளுணர்வு அறியும் இது இப்படித்தான் என. எனக்கு பலகாலம் இப்படியான உள்ளுணர்வே இருக்கிறது. ஈழத்துக்கு எதிராகவே செயல்படுவது அதைக்குலைப்பது அதுவே அவர்களின் மறைமுகத்திட்டம். இந்த போராட்டம் தொடங்கிய காலத்தில் இருந்து எத்தனை மலையாள அதிகாரிகள் ராணுவத்திலும் உளவுத்துறையிலும் உயர் மட்டத்துறையிலும் செயல்பட்டிருக்கின்றனர். இதன் பொருள் மற்ற தேசிய இன அதிகாரிகள் இப்படி நடக்கவில்லை என்பதல்ல அவர்கள் இந்திய அரசின் பிரதிநிதியாக செயல்பட்டார்கள். இதயத்தில் தனிப்பட்ட வன்மத்துடன் செயல்பட்டது இவர்கள் மாத்திரமே.
சிவசங்கரமேனனின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக இந்திய வெளியுறவுச்செயலர் பதவியில் இருக்கிறது. அவர் ஒரு நேர்காணலில் சொன்னார் “ எனக்கு இப்போது இலங்கையில் ஆண் நண்பர்களே இல்லை, இருப்பதெல்லாம் என் சிங்கள நண்பர்களின் விதவை மனைவிகள் மாத்திரமே.” இவர் எப்படி செயல்பட்டிருப்பார் ஈழப்பிரச்சனையில்?
சிவசங்கர மேனன்களும், எம்.கே.நாராயணன்களும், ஆண்டனிகளும் இன்னும் நமக்கு பெயர் தெரியாத எத்தனையோ மலையாள அதிகாரிகளும் இன்ன பிறரும் இந்தியாவின் பாத்திரத்தை தீர்மானித்தார்கள். இறுதி யுத்தத்தை நடத்தினார்கள். கால காலமாய் தமிழர்களை வெறுப்பவர்கள் அவர்களின் தலைவிதியை தீர்மானித்தால்? அதுவே நடந்த முடிந்த கோர இறுதி யுத்தம்.
இறுதி யுத்தம் முடிந்த பின்பு ஐக்கிய நாடுகள் சபை அதன் பிரதிநிதியை அனுப்பியது. அங்கும் வந்தார் ஒரு விஜய் நம்பியார் “ எல்லாம் சரியாக இருக்கிறது” என்று அறிவித்துவிட்டும் போனார். ஒரு வேளை இன்றைய மத்திய மந்திரி சசி தரூர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக வெற்றி பெற்றிருந்தால் இந்த யுத்தத்தை மூன்று வருடத்திற்கு முன்பே துவங்கி இருப்பார்.
எல்லா சிங்கள ஆளும் வர்க்க தலைவர்களும் எப்போதும் கேரளம் வருகிறார்கள். அவர்கள் பௌத்தர்களாக இருந்தாலும் குருவாயுரப்பனை தரிசிக்கிறார்கள், யாகங்கள் நடத்துகிறார்கள் மலையாள மாந்திரீகங்கள் ஈழத்தமிழர்களின் மண்டையோடுகளிலேயே நடந்தன. இறுதி யுத்தத்திற்கு பின்பு இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா கேரளத்திற்கு வந்திருந்தார் அவர் திருவனந்தபுர மன்னர் அரண்மனை உப்பரிகையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை மலையாள மனோரமா வெளியிட்டது. தன் சொந்த வீட்டில் இருப்பது போல் அமர்ந்திருந்தார் சந்திரிகா.
தமிழர் வாழ்வில் மறக்கமுடியாத 2009 ஏப்ரல் மே மாதங்களில் நான் கேரளத்தில் இருந்தேன் தமிழ்நாடு கொந்தளித்துக்கொண்டிருந்தது. கேரளத்தில் இருந்து ஈழத்திற்கு ஆதரவாக ஒரு குரல், ஒரு ஆதரவு, ஒரு முனுமுனுப்பு ஒன்றும் கிடையாது. எனக்கு தெரிந்து ஈழத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஒரே மலையாளி எழுத்தாளர் அருந்ததிராய் மட்டுமே(அவர் பாதி மலையாளி என்பதால் ஒருவேளை அப்படி இருந்திருக்கக்கூடும்). முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும் மனித உரிமை ஆர்வலருமான கிருஷ்ணய்யர் கூட எதிர்மறையாகத்தான் பேசினார்.
சி.பி.எம் என்பது ஒரு தமிழர் விரோத கட்சி என்பதை இந்த யுத்தம் ரத்தத்தின் வழி நிரூபித்தது. சி.பி.எம்மை எப்போதும் தீர்மானிப்பவர்கள் மலையாளிகள் கொஞ்சம் வங்காளிகளும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமெல்லாம் மொத்தமாக Mass Suicide செய்து கொள்ளலாம். எல்லாம் முடிந்த சாம்பல் மேட்டில் நின்று அதன் பொதுச்செயலாளர் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் சொல்கிறார் “ஈழ விஷயத்தில் நாங்கள் நடந்து கொண்ட விதம் தவறுதான் என்பதை நினைத்து வருந்துகிறோம்”
தமிழர்களை எப்போதும் நிரூபிக்க முடியாத சதிகளும், குற்றங்களும், கொடூரங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எங்கள் சாலைகள் வழியே போகின்ற டாங்கிகள் எங்களை கொல்வதற்கு இல்லை என்றார்கள். அந்த டாங்கிகளும் கொச்சி வழி கடல் ஏகின.
நான் பேசிக்கொண்டிருப்பவை அனைத்தும் உள்ளுணர்வின் தடத்தில் வரலாற்றில் இவை எல்லாம் பேசப்படாமல் அதன் புதைகுழியில் அழுந்திப்போகலாம் மக்கிப்போகலாம். யூதர்களுக்கு எழுதியது போல எவரேனும் எழுதப்போகிறார்களா இந்த சதி வரலாற்றை.
ஒரு உணர்வுள்ள தமிழன் குறைந்தபட்ச சமூக உணர்வு உடையவன் 2009 ஏப்ரல் மே நாட்களை குறைந்தபட்ச மனபிறழ்வு இல்லாமல் கடந்திருக்க முடியாது. சமூகவியல் ஆய்வாளர் தொ.பரமசிவம் ஒரு மேடையில் சொன்னார் ”தூக்கமற்ற இரவுகள் இவை” என்று. நான் வாழ்வதற்கான நம்பிக்கையின் பெரும்பகுதியை இந்த 2009 மே மாதம் பிடுங்கிவிட்டது இதற்கு பிறகும் நான் வாழ்கிறேன்.
என் ஆதர்ச மகா நடிகன் மோகன்லால் இந்திய ராணுவத்தில் கௌரவ கர்ணல் ஆகிவிட்டார். அடுத்த யுத்தத்திற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ஆண்டனி அவரையும் அனுப்புவார், லாலேட்டனின் துப்பாக்கி இந்த தமிழ் ரசிகனையும் கொல்லும்.

- சாம்ராஜ்
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

மலையாளிகளின் துரோகங்கள்-இலங்கை  - சாம்ராஜ் Empty Re: மலையாளிகளின் துரோகங்கள்-இலங்கை - சாம்ராஜ்

Post by மாலதி Sat May 29, 2010 10:40 pm

மலையாளிகளின் துரோகங்கள்-இலங்கை  - சாம்ராஜ் 28284 மலையாளிகளின் துரோகங்கள்-இலங்கை  - சாம்ராஜ் 917304 மலையாளிகளின் துரோகங்கள்-இலங்கை  - சாம்ராஜ் 135634
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum