TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


படுக்கையை நனைக்கும் பழக்கம் ஏன்?

Go down

படுக்கையை நனைக்கும் பழக்கம் ஏன்? Empty படுக்கையை நனைக்கும் பழக்கம் ஏன்?

Post by prabhu123 Mon Nov 17, 2014 8:22 pm

படுக்கையை நனைக்கும் பழக்கம் ஏன்? 14ugcp1
தூக்கத்தின்போது தங்களையும் அறியாமல் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இன்றைய குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகிறது.
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சிறுநீர் கழிக்கும் உணர்வைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் குறைவாக இருப்பது இதற்கு ஒரு முக்கியக் காரணம்தான். என்றாலும், இன்றைய பெற்றோரின் கவனக்குறைவும், இந்தப் பிரச்சினைக்கு வழி விடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் எப்படிப் பல் துலக்க வேண்டும், உணவை எப்படிச் சிந்தாமல் சிதறாமல் சாப்பிட வேண்டும் என ஒவ்வொரு விஷயத்தையும் குழந்தைக்கு நாம்தான் கற்றுக் கொடுக்கிறோம்.
இதேபோல் இரவுத் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால், எப்படிக் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்பதைக் கற்றுத் தந்து பழக்கப்படுத்த வேண்டியதும் பெற்றோரின் கடமை.
ஆனால், இன்றுள்ள பரபரப்பான வாழ்க்கைமுறையில், பெற்றோர் இருவருமே வேலைக்குப் போகிறவர்களாக இருப்பதால், குழந்தையுடன் அவர்கள் செலவிடும் நேரம் குறைவு. அதிலும் ‘இரவில் படுக்கையை நனைக்கும் பழக்கம்’ (Nocturnal enuresis) போன்ற அவசியமான பயிற்சி முறைகளைக் கற்றுத்தருவது பெற்றோரிடம் குறைந்துகொண்டே வருகிறது. இதனால் ஐந்து வயதைத் தாண்டியும் சில குழந்தைகள் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள்.
முதல் நிலை பிரச்சினை
-------------------------------------
படுக்கப் போகும்போது அதிக அளவில் தண்ணீர், பால், காபி போன்ற திரவ உணவுகளைப் பருகிவிட்டுக் குழந்தை தூங்கச் செல்வதும், இந்தப் பிரச்சினைக்கு ஒரு காரணம்.
ஜங்க் ஃபுட் எனப்படும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகளைச் சாப்பிடும் பழக்கம், இன்றைய குழந்தைகளிடம் அதிகரித்துவருகிறது.
இதில் நார்ச்சத்து மிகவும் குறைவு. இதனால் அவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுகிறது. குடலில் இறுகிய மலம் சிறுநீர்ப் பையை அழுத்தி இரவில் படுக்கையை நனைக்க வைக்கிறது. குழந்தைப் பருவத்தில் பெற்றோர்
இருவருக்கும் இந்தப் பிரச்சினை இருந்திருந்தால், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இது ஏற்படலாம்.
இந்த மாதிரிக் காரணங்களால் ஏழு வயதுவரை இந்தப் பிரச்சினை தொடர்வதை ‘பிரைமரி எனுரெசிஸ்’ (Primary enuresis) என்று சொல்கிறார்கள்.
இதைக் குணப்படுத்தக் கீழ்காணும் வழிகள் உதவும்:
# இரவில் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே திரவ உணவு வகைகளைக் கொடுத்து முடித்துவிட வேண்டும்.
# சிறுநீர் கழித்துவிட்டு வந்து தூங்கப் பழக்கப்படுத்த வேண்டும்.
# கடிகாரத்தில் அல்லது செல்போனில் குறிப்பிட்ட இடைவெளிகளில் அலாரம் வைத்துக் குழந்தையை எழுப்பிச் சிறுநீர் கழிக்கச் செய்வதை வழக்கப்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் பெற்றோர் உடன் இருக்க வேண்டும். இல்லையென்றால், குழந்தைகள் அலாரத்தை அமர்த்திவிட்டுத் தூங்கிவிடலாம்.
# இப்போது இதற்கென்றே சில கருவிகளும் கிடைக்கின்றன.
இரண்டாம் நிலை
---------------------------
இந்தத் தடுப்பு முறைகளால் பிரச்சினை சரியாகிவிட்ட குழந்தைகள், சில வருடங்களில் திடீரென்று மீண்டும் படுக்கையை நனைக்க ஆரம்பிப்பார்கள்.
இதற்கு ‘செகண்டரி எனுரெசிஸ்’ (Secondary enuresis) என்று பெயர். இதற்கு மனம் சார்ந்த பிரச்சினைதான் அடிப்படைக் காரணமாக இருக்கும்.
வீட்டில் பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது, குழந்தைகளுக்குக் கடுமையான தண்டனை கொடுப்பது, அதிகக் கண்டிப்பு, பள்ளியில் அதிகப் பாடச்சுமை, தேர்வு பயம், ஆசிரியர் மீதான பயம், பாலியல் வன்முறை, இரவில் பேய், பிசாசு, வன்முறை மிகுந்த படங்களைப் பார்க்கும் பழக்கம் போன்ற சூழலில் வளரும்போது, அது குழந்தையின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
குழந்தைகள் தங்களுக்குள்ள பிரச்சினையை வெளியில் சொல்ல மாட்டார்கள்;
அதேவேளையில் பயத்துடன் கூடிய மனஅழுத்தம் அதிகரித்துக்கொண்டேவந்து, படுக்கையை நனைக்கும் பழக்கத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். டைப் 1 சர்க்கரை நோய் இருக்கும் குழந்தைகளுக்கும், அதிக வெட்கமும் கூச்சச் சுபாவமும் உள்ள குழந்தைகளுக்கும், கவனக்குறைவாகவும் பரபரப்பாகவும் இருக்கிற குழந்தைகளுக்கும் (Attention Deficit Hyperactivity Disease - ADHD) இந்தப் பிரச்சினை ஏற்படுவது சகஜம்.
சிறுநீரகப் பாதை அமைப்பில் மாறுதல் ஏற்பட்டாலும், நரம்பு பாதிக்கப்பட்டாலும், அங்குத் தொற்று ஏற்பட்டாலும், இந்தப் பிரச்சினை நேரலாம்.
ஆனால், இவர்களுக்குப் பகல், இரவு இரண்டு வேளைகளிலும் (Diurnal enuresis) இந்தப் பாதிப்பு இருக்கும்.
இது தவிர, தூக்கத்தில் மூச்சு திணறல், உடல் பருமன், குறட்டை, வலிப்பு போன்ற பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கும் இது ஏற்படலாம். பெரியவர்களுக்கும் இந்தப் பாதிப்பு உண்டு. ஆனால், காரணங்கள் வேறு.
நீரிழிவு நோய் உள்ளவர்களும் புராஸ்டேட் சுரப்பியில் பாதிப்பு உள்ளவர்களும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியத்தில் இருப்பார்கள்.
முதியவர்களுக்கு அவர்கள் சாப்பிடும் தூக்க மாத்திரை போன்றவற்றின் பக்கவிளைவாகவும், வயது காரணமாகவும் சிறுநீர் கழிக்கும் உணர்வைக் கட்டுப்படுத்துகிற ஆற்றல் குறைந்துவிடலாம்.
இதன் விளைவால், சில நேரம் படுக்கையிலிருந்து எழுந்து கழிப்பறைக்குச் செல்வதற்குள் சிலர் படுக்கை விரிப்பை நனைத்துவிடுவார்கள்.
இவர்களது பிரச்சினையின் தன்மையைப் பொறுத்துச் சிகிச்சையும் பயிற்சியும் கொடுத்துக் குணமாக்கலாம். ..
prabhu123
prabhu123
பண்பாளர்
பண்பாளர்

Posts : 110
Join date : 14/08/2014
Location : erode

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum