TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சீன டராக்கன் நீர்முழ்கி கப்பலின். இலங்கை வருகையும் சுற்றிவழைக்கப்படும் இந்தியாவும்

Go down

சீன டராக்கன் நீர்முழ்கி கப்பலின். இலங்கை வருகையும் சுற்றிவழைக்கப்படும் இந்தியாவும் Empty சீன டராக்கன் நீர்முழ்கி கப்பலின். இலங்கை வருகையும் சுற்றிவழைக்கப்படும் இந்தியாவும்

Post by அருள் Mon Sep 29, 2014 7:25 am

சீன டராக்கன் நீர்முழ்கி கப்பலின். இலங்கை வருகையும் சுற்றிவழைக்கப்படும்
இந்தியாவும்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இலங்கை வந்திருந்த போது ,அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக சீனக் கடற்படையின் நீர் மூழ்கி ஆதரவு விநியோக போர் போர்க் கப்பல் ஒன்றும், அதிநவீன நீர் மூழ்கி கப்பல் ஒன்றும் கொழும்பு துறைமுகத்துக்கு வந்திருந்ததாக கூறப்படும் விவகாரம் சர்ச்சையாக மாறியிருக்கிறது.
சீன ஜனாதிபதி கொழும்பு வர முன்னரே இந்த போர் கப்பல்கள் கொழும்புக்கு வந்து சேர்ந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீன ஜனாதிபதி கொழும்பை விட்டு புறப்பட்ட பின்னர் தான் இவையும் கிளம்பிச் சென்றனவாம்.சீன ஜனாதிபதி வந்திருந்த போதே இந்த நீர் மூழ்கியின் வருகை குறித்து இணைய ஊடகங்களில் தகவல் வெளிவந்தன.

ஆனால் அதனை இலங்கை கடற்படையினர் உறுதிப்படுத்தவில்லை. எனினும் கொழும்பு துறைமுகத்தில் சீனாவினால் கட்டப்பட்ட கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தில் இந்த இரண்டு போர் கப்பல்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக சர்ச்சை உருவாகியுள்ளன.
[You must be registered and logged in to see this image.]
அதுபற்றிய ஒளிப்படங்கள் கூட வெளியாகியுள்ளன. எனினும் கொழும்புக்கோ ,திருகோணமலைக்கோ வரும் வெளிநாட்டு போர் கப்பல்கள் பற்றிய பதிவுகளை மறைக்காமல் உடனுக்குடன் வெளியிட்டு வரும் இலங்கைக் கடற்படை சீனாவின் முக்கியமான நீர் மூழ்கி கப்பல், விநியோக போர்க் கப்பல் ஆகியவற்றின் வருகை தொடர்பில் எதுவும் கூறவில்லை.

சீன போர் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்து சேரும் வரை அது பற்றிய தகவல் இலங்கை கடற்படைக்கு கூட தெரியாது என்றும் கூறப்பட்டது. இது எந்தளவுக்கு உண்மை என்ற கேள்வி இருந்தாலும் சீன ஜனாதிபதிக்கான பாதுகாப்பு திட்டங்களை இலங்கையும் கூட முழுமையாக அறிந்திருக்காது என்பதில் சந்தேகமில்லை.

முக்கியமான தலைவர்களுக்கு வெளிநாடுகளில் ,வெளியில் தெரியாத பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமே.

எனினும் கொழும்பு துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி கப்பல் தரித்து நின்ற விவகாரம் அதற்கு அப்பாற் பட்டதாக பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் 500 மில்லியன் டொலர் செலவில் கொழும்புத் துறைமுகத்தில் சீனா கட்டிக்கொடுத்த கொள்களன் இறங்கு துறை ,சீன போர் கப்பல் தரித்திருப்பதற்கு வசதியாகிவிட்டது.

இந்த கொள்கலன் இறங்குதுறையின் 85 சத வீத உரிமை சீனாவுக்கே உள்ளது எஞ்சிய 15 சதவீதம் மட்டுமே இலங்கைக்கு சொந்தம்.எனவே இந்த இறங்கு துறைமுகத்தில் சீன போர் கப்பலகளால் எந்தச் சிக்கலுமின்றி தரித்து நிற்கமுடியும்.

இங்கு மட்டுமல்ல ஹம்பாந்தோட்டையிலும் இதே கதிதான். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் எக்சிம் வங்கியின் 808 மில்லியன் டொலர் கடனுதவியில் இரண்டாவது கட்ட கொள்கலன் முனையம் புதிதாக அமைக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தில் ஏழு இறங்குதுறை மேடைகள் அமைக்கப்படயுள்ளன.இவற்றில் நான்கு இறங்கு துறை மேடைகள் 35 ஆண்டுகளுக்கு சீனாவின் வசமே இருக்கப் போகிறது. இதன் வருமானத்தில் 53 சதவீதம் சீனாவுக்கும் ,47 சதவீதம் இலங்கைக்கும் பகிரப்படும்.சீனா ஜனாதிபதியின் வருகையின் போது செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை இது.

கொழும்பில் அமைக்கப்படவுள்ள துறைமுக நகரத்தில் கூட 20 ஹெக்ரெயர் நிலம் முற்றிலும் சீனாவுக்கே சொந்தமாகப் போகின்றது. மேலும் 88 ஹெக்ரெயர் நிலம் 99 வருட குத்தகைக்கு சீனாவுக்கு வழங்கப்படவுள்ளது.

இவையெல்லாமே சீனாவின் பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு வசதியான விடயங்கள்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா அமைத்த போது அதில் எந்த பாதுகாப்பு நலனும் கிடையாது என்றும் ,முற்றிலும் வர்த்தக நோக்கம் கொண்டது என்றும் சீனாவும்,இலங்கை அரசும் கூறின.

அதுபோலவே கொழும்பு சர்வதேச கொள்கலன் முனைய கட்டுமானத்தின் போதும் கூறப்பட்டது. ஆனால் கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில் சீன போர்க்கப்பல்கள் வந்து தரித்து நின்றுவிட்டுச் சென்ற விவகாரத்தில் இருநாடுகளுமே வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. அதாவது இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லையென்றால் பகிரங்கமாகவே இரு நாட்டு அரசாங்கங்களும் கூறியிருக்க முடியும்.

இந்த விவகாரம் சர்ச்சையாக எழுந்த பின்னர் தான் சீனா வாய் திறந்தது.

அதுவும் கடந்த 25 ஆம் திகதி பெங்ஜிங்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ,சீனா தேசிய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் மூத்த கேர்ணல் ஜெங் யன் செங்கிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய பின்னரே ,சீன நீர் மூழ்கி கொழும்பு துறைமுகம் சென்றது என்பதை சீனா ஒப்புக்கொண்டது.

ஆனால் இலங்கை இன்னும் இதனை ஒப்புக்கொள்ளவில்லை.

சீன ஜனாதிபதி கொழும்பு வருவதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே கடந்த 7 ஆம் திகதி கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது சீன கடற்படையின் 861 ஆம் இலக்க போர்க்கப்பலும் 329வது இலக்க நீர்மூழ்கியும் ,கடந்த 13ம் திகதியே இங்கிருந்து புறப்பட்டு சென்றன.

சீன ஜனாதிபதியின் பயணத்துடன் இவற்றின் கொழும்புக்கான பயணம் முடிந்து விடப் போவதில்லை.

இந்த சீன போர்க் கப்பல்கள் மீண்டும் வரும் ஒக்டோபர் மாதமும் ,நவம்பர் மாதமும் கொழும்பு வரவுள்ளதாகவும், அதற்கு ஏற்கனவே ஒப்புதல்கள் வழங்கப்பட்டுவிட்டதாகவும் கூட தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கொழும்புக்கு வந்தது சீனா கடற்படையின் சாங்செங் 2 (changzheng) ,என்ற 091 ரக ஹன் வகை அணு சக்தி நீர்மூழ்கியே (091 han class nuclear powered submarine) என்று இணையத்தளம் ஒன்று படத்துடன் செய்தி வெயியிட்டிருந்தது.

சீன கடற்படையின் வடகடல் கப்பல் பிரிவைச் சேர்ந்த சாங்செங் 2 நீர் மூழ்கி c801 ரகத்தை சேர்ந்த கப்பல்களுக்கு எதிராக ஏவுகணை தாக்கியது என்பதும் 80 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் ,இந்த நீர் மூழ்கி சீன கடற்படையால் அண்மைக்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை என்று சீன செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.உண்மையில் கொழும்பு துறைமுகத்திற்கு

வந்தது சொங் (song ) வகையைச் 039 வகையை சேர்ந்த மரபுசார் நீர்மூழ்கியே என்று அந்த செய்தி ’கூறுகிறது.

இதனுடன் கொழும்பு துறைமுகத்திற்கு வந்த போர் கப்பல் ,வடக்க கப்பல் படையில் உள்ள நீர் மூழ்கி மீட்புக் கப்பலான சங்சிங்டாவோ (changxingdao)தான் என்றும் அந்த தகவல்கள் கூறுகிறது.

அதுமட்டுமன்றி இந்திய பெருங்கடலில் உள்ள நாடு ஒன்றுக்கு ,சீன நீர் மூழ்கி வெளிப்படையாக பயணத்தை மேற்கொண்டுள்ளதும் இதுவே முதன் முறையாகும் என்கிறது வெளிநாடுகளில் இருந்து சீனர்களால் இயக்கப்படும் டோவெய் நியூஸ் என்ற இணையதளம்.

கொழும்புக்கு வந்த நீர் மூழ்கியின் முழு பெயர் பெருஞ்சுவர் இல.329 (great wall no.329) ஆகும்.இவை நேட்டோ நாடுகளால் சொய் வகை (song class) என்று அழைக்கப்படுகின்றது.சீனாவின் இரண்டாம் தலைமுறை மரபுசார் நீர் மூழ்கியான இவை சீனாவினால் சொந்தமாக வடிவமைத்து கட்டப்பட்டது.

இந்த நீர் மூழ்கி 74.90 மீற்றர் நீளத்தையும் டீசல் இலத்திரனியல் இயந்திரத்தையும், ,60 கடற்படையினர் இதில் பணியாற்றுகின்றனர். கிலோ வகையை (kilo class) சேர்ந்த 039 பி வகை type 039A வகை மற்றும் 39 B type 039 B மரபுசார் நீர் மூழ்கிகளை அண்மைய ஆண்டுகளில் சீனக் கடற்படை,பெற்றுள்ள போதிலும் 039 வகை நீர் மூழ்கிகளே இன்னமும் சீன நீர் மூழ்கிப் படையின் முக்கிய அங்கமாக இருந்து வருகின்றது. இது தெற்காசியாவில் ஆயுதப் போட்டியை அதிகரிப்பதற்காக சீனாவின் முயற்சி என்பதில் சந்தேகமில்லை.

அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு விட்டு திரும்பிய சீன அதிபர் ஷி ஜின்பின் பிராந்திய போரை எதிர்கொள்ள சீன படையினர் தயாராக இருக்கவேண்டும் என எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார்.

அதற்கு முன்னர் தான் சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தது. இதன் மூலம் இலங்கையில் சீன ஆதிக்கம் உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாக இந்தியா கவலை கொள்ள தொடங்கியிருக்கின்றது. இலங்கை மட்டுமன்றி பங்களாதேஷையும், மாலைதீவையும் கூட வளைத்துப் போட்டுள்ளது சீனா.

பங்களாதேஷில் சிட்டகொங் துறைமுகத்தை அபிவிருத்திசெய்து அதனை தன் கைக்குள் போடும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ள சீனா, எல்லை மோதலை கொண்டிராத பங்களாதேஷிற்கு சொங் வகையைச் சேர்ந்த நான்கு நீரை்மூழ்கிகளை வழங்கப்போகிறது.

சீனா நீர் மூழ்கிகளின் பலத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கின்றது.8 அணு சக்தி தாக்குதல் நீர்மூழ்கிகள் ,51 மரபுசார் தாக்குதல் நீர்மூழ்கிகள் ,6 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கொண்ட அணுசக்தி நீர் மூழ்கிகள் இருக்கின்றன.

இந்தியாவிடம் ஒரேயொரு அணுசக்தி நீர் மூழ்கி உள்ளிட்ட 14 நீர்மூழ்கிகள் தான் இருக்கின்றன.எனவே இந்தியா தனது நீண்ட கடற்பகுதியை காப்பாற்றிக் கொள்வதற்கு ரஷ்யாவிடம் இருந்து நீர்மூழ்கிகளை அவசரமாக பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

ஆனால் இது தாமதமான முடிவாக தெரிகிறது. ஏனென்றால் இதற்கு முன்னர் சீன நீர்மூழ்கிகள் இந்திய பெருங்கடலில் வெளிப்படையாக நடமாடவில்லை. இந்தியாவுக்கு அருகே சீன நீர்மூழ்கிகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டதாகவும் இலங்கையும் அதற்கு ஒத்துழைப்பதாகவும் முன்னர் இந்தியா குற்றம்சாட்டியிருந்தது.

இப்பொழுது நிலைமை தலைகீழாக மாறியிருக்கின்றது.சீன நீர்மூழ்கிகள் அதிகார பூர்வமாகவே இந்திய பெருங்கடலில் மட்டுமன்றி இலங்கையிலும் சஞ்சாரம் செய்ய தொடங்கியுள்ளன.

இது இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்க விரிவாக்கம் என்ற குற்றச்சாட்டை சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் மூத்த கேர்ணல் ஜெங்யன் செங் நிராகரிக்கின்றார்.

சீன நீர் மூழ்கி ,கொழும்பு சென்றது உண்மை தான் அது ஏடன் வளைகுடாவில் சோமாலியா அருகே கடற் கொள்ளையர்களிடம் இருந்து கப்பல்களுக்கு பாதுகாப்பளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. விநியோக தேவைக்காக கொழும்பு சென்றது.

இவ்வாறான தேவைகளுக்கு அருகில் உள்ள துறைமுகங்களுக்கு கப்பல்கள் செல்வது வழக்கமே என்று அவர் நியாயப்படுத்தினார்.

சீன நீர்மூழ்கிகள் விநியோகத் தேவைக்காகவே கொழும்பு வந்தது உண்மை என்றால் ஏன் அதை மறைக்க வேண்டும்?

ஏனைய நாட்டு போர் கப்பல்கள் கொழும்பு வரும் போதெல்லாம் பெரும் வரவேற்பு அளிக்கப்படுவது போலவே வெளிப்படையாக வரவேற்பை அளித்திருக்கலாம்.அது தான் வெளிபடையான அணுகுமுறை.

ஆனால் சீனா தனது நோக்கத்தை மறைப்பதற்கு சோமாலிய கடற்கொள்ளையர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றது.

இது இந்தியாவிற்கு எழுந்துள்ள மிகப் பெரிய பாதுகாப்பு சவால்.

மோடி அரசாங்கம் ஒருபுறத்தில் சீனாவுடன் கைகுலுக்கிக் கொண்டாலும், இந்தியாவை சுற்றிவளைப்பதில் சீனா குறியோடு இருக்கிறது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

சுபத்ரா
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum