TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பேரீச்சை வளர்த்தால்... பெருநஷ்டம் ! விவசாயிகளை அலற வைக்கும் வெளிநாட்டு மரம்!

Go down

பேரீச்சை வளர்த்தால்... பெருநஷ்டம் ! விவசாயிகளை அலற வைக்கும் வெளிநாட்டு மரம்! Empty பேரீச்சை வளர்த்தால்... பெருநஷ்டம் ! விவசாயிகளை அலற வைக்கும் வெளிநாட்டு மரம்!

Post by அருள் Tue Aug 26, 2014 7:35 am

பிரச்னை
வறட்சி, விலைவீழ்ச்சி, ஆள்பற்றாக்குறை போன்ற பல பிரச்னைகள் விவசாயத்தை வாட்டி எடுக்கும் சூழலில்... வெனிலா பீன்ஸ், பேரீச்சை, கோகோ, அகர் மரம் என மாற்றுப் பாதைகளில் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள், விவசாயிகள். ஆனால், ஒரு கட்டத்தில் இவையெல்லாம் கையைக் கடிக்கவே... பலவித சிக்கல்களில் மாட்டிக் கொள்வதோடு, பொருளாதார இழப்புக்கும் உள்ளாகிறார்கள். இவர்களில் ஒருவர்தான், ஈரோடு மாவட்டம், பொலவக்காளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம்.
பேரீச்சை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தைப் பார்த்து, கன்றுகள் வாங்கி நட்டு ஏமாந்த விஷயத்தை, நமது அலுவலகக் குரல் வழிச் சேவையில் பதிவு செய்திருந்தார், சுப்பிரமணியம். அதைத் தொடர்ந்து அவரது தோட்டம் தேடிப்போய் அவரைச் சந்தித்தோம்.
பேரீச்சை வளர்த்தால்... பெருநஷ்டம் ! விவசாயிகளை அலற வைக்கும் வெளிநாட்டு மரம்! Pv41
ஒன்பது வருஷமாகியும்...?
''2006-ம் வருஷத்துல, 'பேரீச்சை வளர்த்தா பெரும் லாபம்’னு சில பத்திரிகைகள்ல விளம்பரங்கள் வந்துச்சு. அதைப் பாத்து ஆசை வந்து, அந்த கம்பெனியைத் தேடி தர்மபுரிக்குப் போனேன். அங்க, பேரீச்சை பத்தி ரொம்ப சிலாகிச்சு சொன்னாங்க. 'வறட்சியைத் தாங்கி வளரும். எல்லா வகையான மண்ணுலயும் வரும். நட்ட அஞ்சாம் வருஷத்துல மகசூலுக்கு வந்துடும். ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு 100 கிலோ பேரீச்சை கிடைக்கும். தொடர்ந்து 100 வருஷம் வரை, வருமானம் கொடுக்கிற அமுதசுரபி’னெல்லாம் சொல்லிட்டு 'பேரீச்சையை விக்கிறதுக்கும் நாங்களே ஏற்பாடு செஞ்சு பேரீச்சை வளர்த்தால்... பெருநஷ்டம் ! விவசாயிகளை அலற வைக்கும் வெளிநாட்டு மரம்! Pv41aதர்றோம்’னும் சொன்னாங்க.
அதை நம்பி ஒரு கன்னு 65 ரூபாய்னு,175 கன்னுகளை வாங்கி, வேன் வெச்சு தோட்டத்துக்குக் கொண்டு வந்தேன். அந்த கம்பெனிக்காரங்க சொன்ன மாதிரியே,
20 அடி இடைவெளியில நட்டு, களை, உரம், பூச்சிக்கொல்லி, பாசனம்னு முறையாதான் பராமரிச்சுட்டு இருந்தேன். அஞ்சு வருஷத்துக்குள்ள மரமெல்லாம் தளதளனு வளர்ந்துச்சு. 'இன்னிக்கு பூ எடுத்துடும், நாளைக்கு பூ எடுத்துடும்’னு தினமும் குட்டிப்போட்ட பூனை மாதிரி மரங்களையே சுத்திச்சுத்தி வந்தேன். ஆனா, ஒன்பது வருஷம் ஆகியும் பூவும் பூக்கல. பிஞ்சும் பிடிக்கல. அப்படியே அத்தனை மரமும் மலடா நிக்குது. அவங்க 'பில்டப்’ கொடுத்த மாதிரி ஒண்ணுமே நடக்கல. பொறுத்துப் பார்த்துட்டு ஒரு கட்டத்துல கம்பெனிக்கு போன் போட்டேன். 'சில ஊர்கள்ல சீதோஷ்ண நிலை சரியில்லைனா காய்க்கிறதுக்கு 10 வருஷம்கூட ஆகும். அப்ப நல்ல லாபம் பார்க்கலாம். அவசரப்பட்டு மரங்களை அழிச்சுடாதீங்க’னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகிடுச்சு'' என்ற சுப்பிரமணியம், தொடர்ந்தார்.
குறி வைத்த கூன்வண்டு!
''அவங்க சொன்னதை இன்னமும் நம்பிக்கிட்டு மரங்களைப் பாதுகாத்து பராமரிச்சுட்டு இருக்கேன். இதுவரைக்கும் பூக்குற அறிகுறி தெரியல. ஆனா, இன்னொரு பிரச்னை ஆரம்பிச்சிருக்கு. சிவப்பு கூன்வண்டுகள் படையெடுத்து வந்து, மரங்கள்ல ஓட்டை போட்டு சேதப்படுத்த ஆரம்பிச்சதுல, தளதளனு இருந்த மரங்களெல்லாம் வாடி வதங்க ஆரம்பிச்சுடுச்சு. பக்கத்துல இருக்குற விவசாய ஆபீஸ்ல போய் சொன்னதுக்கு, 'விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப்பொறி வெச்சுக் கட்டுபடுத்தலாம்’னு சொன்னாங்க. பொறிகளை வெச்சுட்டு கடுமையான விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லியையும் தெளிச்சேன். ஆனாலும், பிரயோஜனமில்லை. வண்டுகள், பாதி மரங்களை அழிச்சுடுச்சு.
பேரீச்சை வளர்த்தால்... பெருநஷ்டம் ! விவசாயிகளை அலற வைக்கும் வெளிநாட்டு மரம்! Pv41b
மஞ்சள், கரும்பு, குச்சிக்கிழங்குனு ஒழுங்கா வெள்ளாமை வெச்சு, பத்துக்கு ரெண்டு பழுதில்லாம வருமானம் பாத்துட்டு இருந்தேன். அந்த நிலத்துல பேரீச்சையைப் போட்டு ஒண்ணுமில்லாம நிக்கிறேன். மத்த விவசாயிகளுக்கு இது ஒரு பாடமா இருக்கட்டுமேனுதான் இதை உங்கக்கிட்ட சொல்றேன்'' என்ற சுப்பிரமணியத்தின் பேச்சில் அக்கறை ததும்பியது!
எல்லா மரங்களையும் எரிச்சிட்டேன்!
இதே அனுபவம்தான் அப்பகுதியைச் சேர்ந்த வீரப்ப கவுண்டருக்கும். ''ஒரு ஏக்கர்ல எழுபது பேரீச்சைச் செடியை நட்டு எட்டு வருஷமாச்சு. காய்ப்பும் இல்லை... ஒரு மண்ணும் இல்லை. சிவப்பு கூன்வண்டுகளை ஒண்ணுமே செய்ய முடியல. இந்த மரங்களை அழிச்சது மட்டுமில்லாம பக்கத்துல இருந்த என்னோட தென்னந்தோப்புலயும் வண்டுகள் சேதப்படுத்த ஆரம்பிச்சிடுச்சு. விட்டா மொதலுக்கே மோசமாகிடும்னு மொத்த பேரீச்சை மரங்களையும் மெஷின் வெச்சு பிடுங்கி... பக்கத்துல இருக்குற வறட்டுக் குட்டையில போட்டு தீ வெச்சுட்டேன். பாதிக்கப்பட்ட தென்னை மரங்களையும் பிடுங்கி வெச்சிருக்கேன். அதையும் எரிச்சிடுவேன்'' என்று சோகமாகச் சொன்னார், வீரப்ப கவுண்டர்.
வறட்சியைத் தாங்கி வளராது!
பொலவக்காளிப்பாளையத்தில் மட்டுமில்லை. மற்ற பகுதிகளிலும் இதேபோன்ற பாதிப்புகளே என்பதற்கு சாட்சி சொல்கிறார்... இந்தியன் ரயில்வே பாதுகாப்புப் படையின் முன்னாள் உதவி ஆணையரும் முன்னோடி விவசாயியுமான கே. தெய்வசிகாமணி.
பேரீச்சை வளர்த்தால்... பெருநஷ்டம் ! விவசாயிகளை அலற வைக்கும் வெளிநாட்டு மரம்! Pv41c
''திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பக்கத்துல என்னோட தோட்டம் இருக்கு. 200 பேரீச்சைக் கன்னுகளை வாங்கி நட்டேன். பராமரிப்பும் சரியாத்தான் செஞ்சேன். ஆனா, ஒரு பலனும் இல்லை. 'வறட்சியைத் தாங்கி வளரும்’னு சொன்னதே தப்பு. தென்னைக்கு பாய்ச்சுறதைவிட இதுக்கு அதிக தண்ணீர் கொடுக்க வேண்டியிருக்கு. இல்லாட்டி மரம் வாடிடுது. இதுல பெரிய சிக்கலே மகரந்தச் சேர்க்கைதான். 10 பெண் மரங்களுக்கு ஒரு ஆண் மரம் இருக்கணுங்கிறாங்க. இதை வித்தியாசம் கண்டுபிடிக்கிறது பெரிய சிரமம். அதில்லாம கம்பெனிக்காரங்க கொடுக்குற கன்னுல பாதிக்குப்பாதி ஆண் மரமாத்தான் இருக்கு. இதுல இயற்கையா மகரந்தச் சேர்க்கை நடக்காது. நாமதான் ஒவ்வொரு மரத்துலயும் மகரந்தச் சேர்க்கையைச் செய்யணும். இது ரொம்ப கஷ்டமான வேலையா இருக்கு.
அறுவடை செஞ்ச பிறகு பழங்களை அப்படியே விற்பனை செய்ய முடியாது. அதைத் தனியா பக்குபவப்படுத்தித்தான் விற்பனைக்கு அனுப்ப முடியும். இதையெல்லாம்கூட சமாளிச்சுடலாம். ஆனா, பூச்சிகளை ஒண்ணுமே செய்ய முடியல. முக்கியமான விஷயம் என்னான்னா... இந்த விவசாயத் துக்கு அரசாங்க உதவிகள் எதுவுமே கிடையாது. சொட்டு நீர், பயிர்க்கடன், உரம், தொழில்நுட்ப உதவினு எதுவும் அரசு தரப்புல கிடைக்கிறதில்லை.
பேரீச்சை வளர்த்தால்... பெருநஷ்டம் ! விவசாயிகளை அலற வைக்கும் வெளிநாட்டு மரம்! Pv41d
திசு வளர்ப்பும் துன்பமே!
இப்போ, திசு வளர்ப்பு மூலம் கன்னுங்க விற்பனைக்கு வந்திருக்கு. இந்த மரங்கள்ல கிடைக்கிற பழங்களைப் பதப்படுத்த வேண்டியதில்லை. பறிச்சு அப்படியே விற்பனைக்கு அனுப்பலாம். ஆனா, விற்பனையில நிறைய சிக்கல்கள் இருக்கு. ஒரு கன்னு 60 ரூபாய்னு விதை நாத்து வாங்கி வளர்த்தாலும் சரி... 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு திசுவளர்ப்பு நாத்து வாங்கி வளர்த்தாலும் சரி... பேரீச்சை நட்டா பெருந்துன்பம்தான் வந்து சேரும். இது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஏத்த பயிர் கிடையாது. நட்ட அஞ்சு வருஷத்துலேயே அத்தனை கன்னுகளையும் நான் பிடுங்கிப் போட்டுட்டேன்'' என்று வேதனை பொங்கச் சொன்னார் தெய்வசிகாமணி.
பராமரிச்சா... லாபம்தான்!
பேரீச்சைக் கன்றுகளை விற்பனை செய்துவரும் தர்மபுரி 'சாலியா நர்சரி' உரிமையாளர் நிஜாமுதீனிடம் பேசியபோது, ''விதைகளை முளைக்க வெச்சு உருவாகுற நாத்துகள்ல மகசூல் கிடைக்க ஏழு வருஷத்துல இருந்து பத்து வருஷம் வரைகூட ஆகும். அதுவரைக்கும் பொறுமையா இருந்தா கண்டிப்பா நல்ல மகசூல் எடுத்து லாபம் பாக்கலாம். இதுல சந்தேகமே தேவையில்லை. அதேமாதிரி விற்பனை வாய்ப்பு பத்தியும் கவலைப்படவே தேவை யில்லை. இப்பகூட நல்ல டிமாண்ட்லதான் போயிட்டிருக்கு. கூன்வண்டு, ஊசிவண்டு, நோய்த் தாக்குதல் எல்லாம் எல்லா பயிர்கள்லயும் வரக்கூடியதுதான். அதுக்கு தடுப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் செஞ்சுக்கணும். சரியான முறையில வாரம் ஒரு தண்ணி கொடுத்து, பராமரிச்சா, பேரீச்சை விவ சாயம் லாபகரமானதுதான்'' என்றவரிடம்,
பேரீச்சை வளர்த்தால்... பெருநஷ்டம் ! விவசாயிகளை அலற வைக்கும் வெளிநாட்டு மரம்! Pv41e
''நீங்கள் சொல்கிற அத்தனை பராமரிப்பை செய்தும் எந்தப் பலனும் இல்லை என்பதுதானே பொலவக்காளிப்பாளையம் சுப்பிரமணியம் உள்ளிட்ட விவசாயிகளின் குற்றச்சாட்டு' என்று கேட்டோம். இதற்கு, ''சுப்பிரமணியம் தோட்டத் துக்கு எங்க கம்பெனியில இருந்து ஒரு விவசாய ஆலோசகரை அனுப்பி ஆலோசனை சொல்லியிருக்கோம். அதை சரியா கடைபிடிச்சா... அவரும் நல்ல மகசூல் எடுக்கலாம்'' என்று விடாமல் பேசியவர்,
''இப்போ நாங்க இறக்குமதி செய்து விற்பனை செய்ற திசு கல்ச்சர் கன்னுகள்ல அமோக விளைச்சல் கிடைக்கும்'' என்று அடுத்தக் கட்டத்துக்கும் அழைப்பு வைத்தார்.
இதுமட்டுமல்லாது, ''எங்கக்கிட்ட கன்னு வாங்கி நட்ட நிறைய பேர் நல்ல மகசூல் எடுத்துட்டு இருக்காங்க. அவங்க நம்பர் தர்றேன். அவங்ககிட்டயே கேளுங்க'' என்று சொல்லி சிலரின் செல்போன் எண்களையும் கொடுத்தார் நிஜாமுதீன்.
''கியாரண்டியும் இல்ல... வாரண்டியும் இல்ல''
அவர்களில் ஒருவரான, சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த குணசேகரிடம் பேசியபோதுதான் தெரிந்தது... 'தம்பி... போன் வயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு' என்கிற கதை.
''நான் ஒரு ஏக்கர்ல விதைமூலம் வளர்த்த 100 கன்னுகளை நடவு செஞ்சேன். அதுல 20 மரங்கள் ஆண் மரமாகிடுச்சு. 20 மரங்களை கூன்வண்டுகள் அழிச்சுடுச்சு. மிச்சம் 60 மரங்களைக் காப்பாத்தி வெச்சிருக்கேன். இதுல மகரந்தச் சேர்க்கையை நாமதான் செய்ய வேண்டியிருக்கு. இப்போதான் முதல் மகசூலை எடுத்திருக்கேன். மரத்துக்கு சராசரியா 30 கிலோ கிடைச்சுது. போகப்போக ஒரு மரத்துல 100 கிலோவுக்கு மேல கிடைக்கும்னு சொல்றாங்க. விற்பனை செய்றதும் கஷ்டம்தான். ஒவ்வொரு கடையா ஏறி இறங்கித்தான் விக்க வேண்டியிருக்கு. மொத்தத்துல எந்த கியாரண்டியும், வாரண்டியும் இல்லாத விவசாயம் இது'' என்று வேதனைதான் பொங்கியது குணசேகரனின் வார்த்தைகளில்!
விவசாயிகள் விழிப்பு உணர்வு இயக்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் வேளாண் துறை அதிகாரியுமான 'அக்ரி’ வேலாயுதத்திடம் இதைப் பற்றிக் கேட்டபோது, ''கன்றுகளை விற்கும் நர்சரிகளுக்கான விற்பனை உரிமம் மட்டும்தான் வேளாண்துறையினரால் வழங்கப்படுகிறது. உற்பத்திக்கான சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. விதை உற்பத்திக்கு சான்றிதழ் வழங்கும் முன்பு குறிப்பிட்ட அளவு விதைகளை வேளாண்மை அலுவலக பரிசோதனைக் கூடத்தில் முளைக்கவைத்து... முளைப்புத்திறன் குறைபாடு இன்றி இருந்தால் மட்டுமே, சான்றிதழ் வழங்கும் முறை உள்ளது. ஆனால், 'நாற்றுப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகள் காய்ப்புத்திறன் கொண்டதா?’ என்கிற பரிசோதனைகள் எல்லாம் நடத்தப்படுவதில்லை. அதற்கான வசதிகளும் செய்து தரப்படவில்லை. எனவே, விற்பனை உரிமத்தை மட்டும் வைத்துக்கொண்டு இதுபோன்ற புதுப்புது ரகங்களை கொள்ளை விலைக்கு விற்று, விவசாயிகள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள் சிலர். இப்படி, 'வெளிநாட்டு நாற்றுகளை இறக்குமதி செய்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது, முதலில் வேளாண் துறைக்கு தெரியுமா?’ என்பதே சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது. இது அரசால் தெளிவுபடுத்தப் படவேண்டிய விஷயம். நாற்றுப் பண்ணைகளையும் ஆய்வு செய்வதற்கு தனித்துறை அமைத்தால்தான் இதுபோன்ற கவர்ச்சி வியாபாரிகளிடம் இருந்து விவசாயிகளை ஓரளவாவது காப்பாற்ற முடியும்'' என்று சொன்னார்.
இப்படியெல்லாம் விவசாயிகள் ஏமாற்றப்படும் விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது, தமிழக வேளாண்மைத்துறை மற்றும் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தலையாய கடமை என்பதே விவசாயிகளின் கருத்தாக இருக்கிறது
 தொடர்புக்கு,
டாக்டர் ஆர்.எம். விஜயகுமார்,
தொலைபேசி: 0422-6611269
'அக்ரி’ வேலாயுதம்,
செல்போன்: 94437-48966
தெய்வசிகாமணி, செல்போன்: 89036-04727


கூன்வண்டுகளுக்குத் தீர்வு?
 
பிரச்னைகள் ஒரு பக்கம் இருந்தாலும்... நம்பி வளர்த்துக் கொண்டிருக்கும் பேரீச்சை மரங்களில் இருக்கும் பூச்சித் தாக்குதல்களுக்குத் தீர்வு என்ன என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறைப் பேராசிரியர் டாக்டர் பிலிப் ஸ்ரீதரிடம் கேட்டபோது, 'பேரீச்சையை தென்னைப்போல பராமரிக்க வேண்டும். காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு தாக்குதல் இதில் அதிகளவில் இருக்கும். இவ்வகை வண்டுகளைத் தோட்டத்துக்குள் நுழையும் முன்பே தடுத்து அழிக்க வேண்டும். அதனால், இவ்வகை வண்டுகளுக்கான பொறிகளை பேரீச்சை மரங்களில் கட்டாமல்... தோட்டத்தின் எல்லைப் பகுதிகளில் தகுந்த இடைவெளியில் கட்டித் தொங்கவிட வேண்டும். இதையும் மீறி மரங்களைத் தாக்கி சேதப்படுத்தும் வண்டுகளை, ஊடுருவிப் பாயும் பூச்சிக்கொல்லியை வேர்களின் வழியே கொடுத்தும் அழிக்கலாம். ஆனால், அடிக்கடி இதைச் செய்தால் பழங்கள் கசப்புத் தன்மை அடைந்துவிடும் என்பதையும் கவனத் தில் கொள்ளவேண்டும்'' என்று எச்சரித்தார்.
பேரீச்சை வளர்த்தால்... பெருநஷ்டம் ! விவசாயிகளை அலற வைக்கும் வெளிநாட்டு மரம்! Pv41g
 
சேதி கேட்டீங்களா!
தெலங்கானாவில் 101 விவசாயிகள் தற்கொலை!
புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கடன் சுமையால், 101 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேடக் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, ஊரின் தலைவருக்கு போன் போட்டு, 'என்னுடைய குழந்தைகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். என்னை, இனி உயிருடன் பார்க்க முடியாது' என்று சொல்லிவிட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
 
 
 
 
''நம்நாட்டுக்கு ஏற்ற பயிரல்ல...'' பல்கலைக்கழகத்தின் பகீர் தகவல்!
பேரீச்சை மர சாகுபடி பற்றி தமிழகத்தில் சர்ச்சை கிளம்புவது புதிதல்ல. ஏற்கெனவே 2007-ம் ஆண்டில், 'பேரீச்சை சாகுபடியில் பெருத்த லாபமா?' என்ற தலைப்பில், நவம்பர் 25, 2007 தேதியிட்ட 'பசுமை விகடன்’ இதழில் விரிவானதொரு கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அதில் பேட்டியளித்திருந்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அன்றைய துணைவேந்தர்
சி. ராமசாமி, ''பேரீச்சைக் கன்றுகளை விற்பனை செய்யும் நிஜாமுதீன் தோட்டத்தை நானும் நேரில் போய் பார்த்தேன். இதையடுத்து, பேரீச்சை சாகுபடி பற்றி முறையான ஆய்வுகள் நடத்த பல்கலைக்கழக விஞ்ஞானிகளிடம் ஏற்கெனவே கூறியிருக்கிறேன். தற்போது நீங்களும் எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளீர்கள். அந்த ஆய்வைத் துரிதப்படுத்தி விரைவில் முடிவைத் தெரிவிக்கிறோம். பேரீச்சை சாகுபடியில் இறங்கச் சொல்லி, வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் விவசாயிகளுக்கு எந்தப் பரிந்துரையையும் நாங்கள் இதுவரை செய்யவில்லை'' என்று சொல்லியிருந்தார்.
பேரீச்சை வளர்த்தால்... பெருநஷ்டம் ! விவசாயிகளை அலற வைக்கும் வெளிநாட்டு மரம்! Pv41h
'தற்போது இந்த ஆராய்ச்சி எந்த நிலையில் உள்ளது?’ என்று தெரிந்துகொள்ள, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பழப்பயிர்கள் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் ஆர்.எம். விஜயகுமாரைத் தொடர்பு கொண்டபோது, ''பேரீச்சை பழ சாகுபடி குறித்த ஆராய்ச்சிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் முழுதிருப்தி அளிப்பதாக அமையவில்லை. குறிப்பாக, நமது தட்பவெட்ப நிலைக்கு உகந்த பயிராக அது இல்லை என்பது நிரூபணம் ஆகியதால், அதுகுறித்த ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் தொடரவில்லை. பல்கலைக்கழகம் பேரீச்சை விவசாயம் குறித்த எந்தப் பரிந்துரையையும் இதுவரை செய்யவில்லை'' என்று சொன்னார்.
பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர். எம்.மகேஷ்வரனைத் தொடர்பு கொண்டு பேரீச்சை ஆய்வு குறித்து பேசியபோது, ''2003-2004-ம் ஆண்டு கோயம்புத்தூர், திருச்சி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட 7  பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்களில் தலா 10 பேரீச்சைக் கன்றுகளை நடவு செய்து ஆராய்ச்சி செய்தோம். முதல் கட்ட ஆராய்ச்சியிலேயே, பேரீச்சை மரங்கள் நம் நாட்டு தட்பவெட்பச் சூழலுக்கு ஏற்றதல்ல என்கிற முடிவுகள் வந்தன. இதனால், மேற்கொண்டு ஆராய்ச்சியைத் தொடரவில்லை. பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொண்டு கேட்கும் விவசாயிகளுக்கு பேரீச்சையை சாகுபடி செய்ய வேண்டாம் என்றுதான் ஆலோசனை வழங்கி வருகிறோம்'' என்று சொன்னார்.
ஆக, ஆராய்ச்சி முடிவுகள் தெளிவாகிவிட்ட பிறகு, கேட்கும் விவசாயிகளுக்கு மட்டும் தகவலைச் சொல்லிக் கொண்டிருப்பதாக கூறுவது சரியல்ல, அரசாங்கமும் பல்கலைக்கழகமும் உடனடியாக பேரீச்சை விவசாயம் பற்றி விரிவானதொரு அறிக்கையை வெளியிட வேண்டும்
-விகடன்-
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum