TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஒரு தேதி... ஒரு சேதி! இன்று - பிராங்க் சினாட்ரா

Go down

ஒரு தேதி... ஒரு சேதி! இன்று - பிராங்க் சினாட்ரா Empty ஒரு தேதி... ஒரு சேதி! இன்று - பிராங்க் சினாட்ரா

Post by அருள் Wed May 14, 2014 7:31 am

[You must be registered and logged in to see this image.]
பிராங்க் சினாட்ரா அமெரிக்காவில் 1940களில் கொடிகட்டிப் பறந்த பாடகர்.....
வாய்ப்புகள் கதவை தட்டும் - நான் அதை மிஸ் பண்ணிட்டேன் எனும் புலம்பலை கேட்டிருப்பீர்கள்? நீங்களே கூட அதை சொல்லியிருக்கலாம்!
அப்ப காசு இருந்துச்சு,இந்த இடமெல்லாம் காடா கெடந்துச்சு ! ஒரு கிரவுண் வாங்கிப் போட்டிருந்தா நான் இன்னிக்கு கோடீஸ்வரன்! எனும் நடுத்தர வயது புலம்பல்கள் ஒரு ரகம். அன்னிக்கு இன்டர்வியூவில நல்லா பண்ணியிருந்தா வேலை கிடைச்சிருக்கும, எனும் இளமைப் புலம்பல் இன்னொரு ரகம். அன்னிக்கு அப்பாவுக்கு ஒரு கார் வாங்கிக் கொடுத்திருக்கலாம், இப்போ அவரு உயிரோடு இல்லை எனும் சென்டிமென்ட் புலம்பல் இன்னொரு ரகம். எதுவானாலும் அடிநாதம் ஒன்றுதான், வாய்ப்பு வந்தபோது அதை நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை!
வாய்ப்புகள் எப்போதும் அழைப்பிதழ் கொடுத்துவிட்டு நம்மிடம் வருவதில்லை. எப்படா வாய்ப்பு வரும் என நாம்தான் தயாராக இருக்க வேண்டும். வாய்ப்பு எந்தப் பக்கமாக வந்தாலும் லபக் எனப்பிடித்துக் கொள்ள வேண்டும். ஓர் உறுமீனுக்காக காத்திருக்கும் கொக்கின் கவனம் அவசியம். மீன் வரும்போது கொக்கு தூங்கிக் கொண்டிருந்தால் அதன் அலகில் மீன் எப்போதுமே இருக்கப் போவதில்லை!
[You must be registered and logged in to see this image.]
நான் வெற்றிக்காகக் காத்திருப்பேன். ஒருநாள் அது வரும். வரும்போது அதைத் தவறவிடப்போவதில்லை என்று ஒரு மனிதர் சொன்னர். அவருடைய மனதின் உறுதியான ஒலி அது.உலகமே அவரை அறிந்து கொள்ளுமளவுக்கு பெரிய மனிதராவும் ஆனார். அவர்தான் ஆபிரகாம் லிங்கன்.
வாய்ப்பு ஓர் அருவி போல ஆக்ரோஷமான சத்ததோடு வருவதில்லை. அது ரொம்ப மெல்லிய சத்தத்தோடு கடந்து செல்லும் ஒரு மவுன நதி போலப் பாயலாம். நாம் விடும் மூச்சு போல மென்மையாய் நமக்கு முன்னால் நகரலாம். அதைக் கண்டறிய அதீத கவனம் அவசியம். இல்லையேல் வாய்ப்பு கடந்து போன பின்னும் வாய்ப்புக்காக் காத்திருப்போம்!உங்கள் லட்சியம் எதில் இருக்கிறது என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். நடிப்பு, பாட்டு, இலக்கியம், விஞ்ஞானம், மருத்துவம் என எதில் வேண்டுமானாலும் ஆர்வம் இருக்கலாம். அந்தத் துறையில் எவ்வளவு கற்க முடியுமோ அவ்வளவையும் கற்றுக்கொள்ளுங்கள். அந்தத் துறையில் நுழைவதற்கான வாய்ப்பு நள்ளிரவில் வந்து ஜன்னலைத் தட்டினாலும் சந்திக்கத் தயாராய் இருங்கள்!
வெற்றியாளர்களுக்குரிய சிறப்புத் தகுதியே இதுதான். அவர்கள் வாய்ப்புகளை வெற்றிடத்திருந்து கூட உருவாக்குவார்கள். எப்போதும் ஒரு சின்ன வாய்ப்பு கண்ணுக்குத் தெரிந்தாலும் உடனே அதை பயன்படுத்திக் கொள்ளவார்கள். அந்த வாய்ப்பை ஒரு சாதனைக்கான உயரத்துக்குக் கொண்டும் போவார்கள்.
பிராங்க் சினாட்ரா அமெரிக்காவில் 1940 களில் கொடிகட்டிப் பறந்த பாடகர்.பிற்காலத்தில் அவர் ஒரு நடிகராகவும் விருதுகளை அள்ளினார். எட்டு வயதிலேயே மேடைகளில் பாடுமளவுக்கு ஆர்வமும் திறமையும் அவருக்கு இருந்தது. ஒரு நல்ல வாய்ப்பு வராதா என எப்போதும் யோசித்துக் கொண்டிருப்பார். வாழ்க்கை அவரை ஒரு ஹோட்டலில் சர்வராக கொண்டு வந்து நிறுத்தியது. தனது கனவை அவர் கைவிடவில்லை. பயிற்சியையும் நிறுத்தவில்லை. ஒருநாள் அந்த ஹோட்டலில் உணவருந்த ஒரு பிரபல இசைக்குழு வந்தது. எல்லோரும் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தனர்.
பிராங்க் அந்த இடத்தில் ஒரு வாய்ப்பைப் பார்த்தார். தயக்கம், வெட்கம், கூச்சம் எல்லாவற்றையும் ஓரமாய் வைத்துவிட்டு, அவர்களுக்கு அருகில் சென்று பாடினார். அவர்களுக்கு அந்தப் பாடல் பிடித்துப் போயிற்று! அந்த நிகழ்வு அவருடைய வாழ்க்கையின் ஒரு முக்கியமான பாகமாகிவிட்டது!
[You must be registered and logged in to see this image.]
எப்போதும் தயாராய் இருப்பவர்கள் வாய்ப்புகள் வரும்போது இறுகப் பற்றிக் கொள்கிறார்கள். இருளில் விளக்கை எடுத்துக் கொண்டு பயணிக்கிறீர்களெனில், விளக்கில் எண்ணை இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.
வாய்ப்புகள் எப்படி இடம், பொருள், ஏவல் பார்த்து வராதோ,அதே போல வயதைப் பார்த்தும் வருவதில்லை,எந்த வயதிலும் உங்களுக்கான வாய்ப்பு வரலாம். மிகச்சின்ன வயதிலேயே கூட வரலாம். அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் என நல்ல வாய்ப்புகளை ஒதுக்கி விட்டால், பிறகு அதற்காக வருத்தப்படவும் நேரிடலாம்.
கூர்மையான தேடல் முதல் தேவை. அது கண்ணுக்குத் தெரியாத வாய்ப்புகளையும் கண்டு பிடிக்கும்.
அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமளவுக்கு திறமைசாலியாய் இருப்பது. உங்களுக்கு நடனமாட வேண்டும் எனும் விருப்பம் இருக்கலாம். அதில் திறமை இருக்கிறதா என்பதை முதலில் உணர வேண்டும். தேவையான பயிற்சிகளில் ஈடுபட்டு, ஒரு நடனக் கலைஞராக நீங்கள் உருமாற வேண்டும்.அப்போது தான் வாய்ப்பு வரும்போது அதைப்பயன்படுத்திக் கோள்ள முடியும்.
ஒரு விஷயத்தில் நூழையும் முன்பே அது உங்களுக்கானதுதானா, உங்களால் ஜெயிக்க முடியுமா எனும் விவாதங்களை உங்களுக்குள் எழுப்பி விடை கண்டுபிடிப்பது. இந்த வாய்ப்பு கஷ்டமா இருக்கே என நினைப்பவர்கள் ஒருவகை. இந்த கஷ்டத்துலயும் ஒரு வாய்ப்பு இருக்கே என நினைப்பவர்கள் தான் பாசிட்டிவ் மனநிலை கொண்டவர்கள்.
ஒரு வாய்ப்பைப் பற்றிக் கொண்டபின் அந்த வாய்ப்பை சாதனை வெற்றியாக மாற்றும் உறுதியும், வெற்றியின் மீதான வெறியும் வேண்டும். அப்போதுதான் அந்த வாய்ப்பு உங்களை வாழ வைக்கும்.
கொஞ்ச நேரம் நமது வாழ்க்கையை அலசிக் காயப்போட்டாலே பல விஷயங்கள் நமக்குப்புரியும். ஏன் ஒரு வாய்ப்பை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை?அந்த வாய்ப்பு வந்தபோது நீங்கள் அதைக் கவனித்திருக்க மாட்டீர்கள். அப்படி கவனிக்காமல் இருந்ததன் காரணம் என்ன?
நீங்கள் அந்த வாய்ப்பு வருவதைப் பார்த்தும் அலட்சியம் செய்திருக்கலாம். காரணம் ஒருவேளை அதே போன்று ஒரு முயற்சியில் தோற்ற அனுபவமாய் இருக்கலாம். அல்லது உங்கள் நண்பர்களின் பரிந்துரையாய் இருக்கலாம். அல்லது மனதுக்குள் ஓடிய நெகட்டிவ் சிந்தனைகளாய் இருக்கலாம்.
அந்த வாய்ப்பை நீங்கள் குறைந்து மதிப்பிட்டடிருக்கலாம். ரொம்ப அவசரமாகவோ அல்லது ரொம்ப மெதுவாகவோ அந்த வாய்ப்பை அணுகியிருக்கலாம். அதனால் அந்த வாய்ப்பு பறிபோய் இருக்கலாம்!
ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் அந்த வாய்ப்பை நீங்கள் வேண்டாம் என உதறியிருக்கலாம். உங்கள் மனதில் எழுந்த பயமோ, தயக்கமோ கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.
இப்படி அடுக்கடுக்காய் பல காரணங்கள் உங்கள் முன்னால் வந்து குவியும், அத்தகைய இடைஞ்சல் மனநிலைகளையெல்லாம் தூர்வாரி தூய்மையாக்க வேண்டியது ரொம்ப முக்கியம்.
ஷு விற்பனயாளர் இரண்டு பேர் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதிக்கு ஷு விற்கச் சென்றார்கள். அங்கே சென்று பார்த்த போதுதான் தெரிந்தது அவர்களுக்கு ஷு அணியும் பழக்கமே கிடையாது என்று, உடனே அவர்கள் இருவரும் தனித்தனியே தங்கள் மேலாளருக்குக் கடிதம் எழுதினார்கள். முதலாமவன் எழுதினான், நமக்கு இங்கே வேலையில்லை. இங்கை யாரும் ஷு அணிவதில்லை.
இரண்டாமவன் எழுதினான், நமக்கு பயங்கர பிஸினஸ் வாய்ப்பு இருக்கிறது. இங்கே இதுவரை யாரும் ஷு அணிந்ததில்லை!
இரண்டாமவன் வாய்ப்புகளின் வடிவங்களை அறிந்து கொண்டவன். வாய்ப்புகள் எப்போதும் ஓரே ஆடை உடுத்தி வருவதில்லை. வாய்ப்பே இல்லை என நினைக்கும் இடத்தில் இருக்கலாம், உங்களை சாதனையாளராக மாற்றும் அரிய வாய்ப்பு!
வாய்ப்புகள் நிச்சயம் வரும். வந்தே தீரும். அது வரும் போதும் அதை அறிந்து கொள்ளம் பார்வையும், பற்றிக் கொள்ளும் திறமையும், உயரப் பறக்கும் தீரமும் நம்மிடம் இருக்கட்டும்.என்னால் ஓட முடிந்தால் ஓடுவேன், நடக்க முடிந்தால் நடப்பேன், தவழத்தான் முடியுமெனில் தவழ்வேன். எப்படியானலும் முன்னோக்கி மட்டுமே என் பயணம் தொடரும் எனும் உறுதி இருக்கட்டும். அப்புறமென்ன, வெற்றிகள் உங்கள் வசம்!
வாய்ப்புகள் கதவை தட்டும் பிடித்துக்கொண்டால் வெற்றி எட்டும்,.
[You must be registered and logged in to see this link.]
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விடுதலைப்புலிகள் அமைப்பு இன்று மே 5-ம் தேதி 37-வது அகவையில் கால் பதிக்கிறது!
» அனைவரும் எதிர்பார்க்கும் உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?
» இன்று ஆகஸ்ட் 6 ம் தேதி ஜப்பானில் ஹீரோசிமா -நாகசாகி மீது அணு குண்டு வீசப்பட்ட நாள்.
» 25 பேர் கொண்ட குழுவினருடன் ஹிலாரி கிளிண்டன் இன்று டெல்லி வருகை; 20-ந் தேதி சென்னை வருகிறார்
» இந்தியாவில் செல்போன் முதன்முதலில் 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் செல்போனுக்கு 17 வயது முடிவடைந்து, இன்று 18-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum