TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மிஸ்டர் கழுகு: தி.மு.க. ஊழல் விரைவில் ரிலீஸ்!

Go down

மிஸ்டர் கழுகு: தி.மு.க. ஊழல் விரைவில் ரிலீஸ்! Empty மிஸ்டர் கழுகு: தி.மு.க. ஊழல் விரைவில் ரிலீஸ்!

Post by மாலதி Wed Jan 29, 2014 3:09 pm

மதுரையில் இருந்து பறந்து வந்தார் கழுகார்!
 ''தி.மு.க-வைப் பொறுத்தவரை மதுரைதான் மையப் புள்ளியாக இப்போது மாறி இருக்கிறது. மு.க.அழகிரி கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தன்னுடைய அடுத்த கட்டச் செயல்பாடுகள் பற்றி வரும் 30-ம் தேதி தனது முடிவை அறிவிப்பதாகச் சொல்லியிருக்கிறார் அழகிரி. என்ன நடக்குமோ என்று கருணாநிதி பதற்றத்தில் இருக்கிறார்!'' என்று ஆரம்பித்தார் கழுகார்.
''அழகிரியைக் கட்சியை விட்டு நீக்குவதற்கான முஸ்தீபுகள் தொடங்கிவிட்டன என்று சில வாரங்களுக்கு முன்பு சொல்லியிருந்தீரே?'' என்று ஞாபகப்படுத்தினோம்.
''மன்னன், முபாரக் மந்திரி உள்ளிட்ட ஐந்து பேரை நீக்கும்போதே அழகிரியையும் நீக்கியாக வேண்டும் என்று ஸ்டாலின் சொன்னதாக நான் சொல்லியிருந்தேன். ஆனால், அழகிரியை விட்டுவிட்டு மற்ற ஐந்து பேரை மட்டும் கருணாநிதி நீக்கினார். இதனால் கோபம் ஆன ஸ்டாலின், 'இதுவரை தேதி கொடுத்த நிகழ்ச்சிகளில் மட்டும்தான் பங்கேற்பேன். புதிய நிகழ்ச்சிகளுக்கு தேதி தரமாட்டேன்’ என்று சொன்னாராம். அதனால், கனிமொழி நடத்திய பொங்கல் விழாவில் கலந்துகொள்வதையும் தவிர்த்தார் என்பதுவரை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அதன் பிறகு அழகிரி தனது சகாக்களுடன் ஹாங்காங் போனார். இந்த நிலையில் அடுத்த ஐந்து பேரை நீக்குவதற்கான முஸ்தீபுகள் தொடங்கியது. மதுரை மாவட்டத் துணைச் செயலாளர் எம்.எல்.ராஜ், கொட்டாம்பட்டி ஒன்றியச் செயலாளர் துரை.ராஜேந்திரன், மாவட்ட விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ.வெள்ளையன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் பி.அசோக்குமார், மேலூர் ஒன்றிய ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ஏ.முத்துவேல் ஆகிய ஐந்து பேரை 23-ம் தேதி நீக்கி கையெழுத்துப் போட்டார் கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன்.
[You must be registered and logged in to see this image.]
இவர்களை நீக்குவதற்கான முக்கியமான காரணம், மாவட்டச் செயலாளர் மூர்த்தி மீது மேலூர் முத்துவேல் கொடுத்த அதிர்ச்சியான புகார்தான். 'என்னை சாதியைச் சொல்லித் திட்டினார் மூர்த்தி’ என்று வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தாராம் முத்துவேல். 'கட்சிப் பிரச்னையை சாதிப் பிரச்னையாகக் காட்டுகிறார்கள். அப்படி எந்த சம்பவமும் நடக்கவே இல்லை. முத்துவேலை சிலர் தூண்டுகிறார்கள்’ என்று ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார் மூர்த்தி. முத்துவேலை யாரெல்லாம் தூண்டினார்கள் என்பதைப் பார்த்து அவர்கள் அனைவரையும் நீக்கிவிட்டார்கள். 23-ம் தேதி இரவுதான் ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்தார் அழகிரி. 24-ம் தேதி காலையில் 'முரசொலி’ நாளிதழில் கட்டம் கட்டி ஒழுங்கு நடவடிக்கை செய்தி வெளியானது. ஹாங்காங்கில் இருந்து அழகிரி வருகிறார் என்றதுமே கருணாநிதி பயந்தது உண்மை. விமானநிலையத்தில் இருந்து நேராக கோபாலபுரம் வரப்போகிறார் என்று சொல்லப்பட்டதால் பீதி கிளம்பியது. அன்று காலை 'முரசொலி’யைப் பார்த்ததும் ஜிவ்வென்று எகிறியது அழகிரியின் கோபம். நீலாங்கரையில் இருந்து கோபாலபுரம் வந்து குதித்தார்!''
''காட்சிகளை வர்ணியும்!''
''கருணாநிதி தூங்கும் அறைக்குள் நுழைந்தாராம் அழகிரி. பொதுவாக கருணாநிதி தூங்கும் அறையைப் பூட்டுவது இல்லை. அவரால் வந்து கதவைத் திறக்க முடியாது என்பதால் சும்மாதான் சாத்தி வைத்திருப்பார்கள். படாரென திறந்து சென்றுள்ளார் அழகிரி. 'யாரு...’ என்று கேட்டுள்ளார் கருணாநிதி. அதற்குப் பதில் சொல்லாமல், 'உங்க மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க?’ என்று பொரிய ஆரம்பித்தார் அழகிரி. 'முதல்ல அஞ்சு பேரை நீக்குனீங்க, அப்புறமா அஞ்சு பேரை நீக்கினீங்க? என்ன நினைச்சுக்கிட்டு இப்படிப் பண்றீங்க? நான் வெளியூர்ல இருக்கேன்னு தெரிஞ்சே இப்படிச் செய்தீங்களா?’ என்று கேட்க, 'உட்காருப்பா...’ என்று தழுதழுத்துள்ளார் கருணாநிதி. 'நான் உட்கார வரல’ என்று அழகிரி சொன்னதும், 'மாவட்டச் செயலாளர் மேல பி.சி.ஆர். ஆக்ட்ல கேஸ் கொடுக்கிறது சரியா?’ என்றாராம் கருணாநிதி. 'ஏன். கொடுத்தா என்ன தப்பு? அவரு அப்படி நடந்துகிட்டா பாதிக்கப்பட்டவங்க கேஸ் கொடுக்கத்தானே செய்வாங்க?’ என்று திருப்பிக் கேட்டுள்ளார் அழகிரி. 'எனக்கு என்ன மரியாதை இருக்கு இந்தக் கட்சியில? நான் என்ன பூஜ்யமா? என்னை யாரு மதிக்கிறா?’ என்று அழகிரி கேட்க, 'நீ யாரை மதிச்சே?’ என்று கருணாநிதி கேட்டிருக்கிறார்.
'அந்த அம்மாகூட நம்ம கட்சிக்காரங்க மேல பி.சி.ஆர். ஆக்ட்டுல கேஸ் போடல. ஆனா உங்க ஆளுங்க போடுறாங்க. இது என்ன நியாயம்?’ என்று கருணாநிதி கேட்க, 'இது நான் வளர்த்த கட்சி. நான் கஷ்டப்பட்டு பாடுபட்ட கட்சி. என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது’ என்று கர்ஜித்துள்ளார் அழகிரி. 'அதுதான் தெரியுதே... உன்னோடு இருந்தவங்கதானே விலகி போயிருக்காங்க?’ என்று கருணாநிதி கேட்க, 'யாரு துரோகம் பண்ணிட்டு போனாலும் எனக்குக் கவலை இல்லை’ என்று அழகிரி சொல்ல... 'இப்ப உன்னோட யாரு இருக்கா?’ என்று கருணாநிதி கேட்டுள்ளார். 'அறிவாலயத்துல ரூம் கொடுத்தேனே... அங்க உட்கார்ந்து கட்சி வேலை பார்த்தாயா?’ என்று கருணாநிதி கேட்க, 'நான் கட்சி வளர்க்கிறதெல்லாம் உங்களுக்கு என்ன தெரியும்? மீட்டிங் பேசுறது, ஊர் சுத்துறதுனாதான் கட்சி வளர்க்கிறதுன்னு அர்த்தமா? உட்கார்ந்த இடத்துலயே முடுக்கிவிட்டு கட்சியை வளர்க்கக் கூடாதா?’ என்று சொல்லச் சொல்ல கருணாநிதிக்கு கோபம் எகிறியது!''
''அப்புறம்?''
''ஒரு கட்டத்தில், 'ஸ்டாலின்தான் அடுத்த தலைவர்ன்னு இன்னைக்கே அறிவிச்சிடுவேன்’ என்று டென்ஷனில் கத்தி இருக்கிறார் கருணாநிதி. அதன் பிறகு அழகிரி கோபத்தால் கொந்தளித்து அலற ஆரம்பித்துள்ளார். 'அப்படின்னா என்னை என்ன கட்சியை விட்டு நீக்கிடுவீங்களா... என்னை நீக்கிட்டு கட்சி நடத்திடுவீங்களா’ என்று சொல்லிவிட்டு அழகிரி கீழே இறங்கும்போது, ஏதோ சத்தம் கேட்டுள்ளது. அதன் பிறகு சிலர் உள்ளே போனார்களாம். 'என்னைக் காப்பாற்ற யாரும் தேவையில்லை... கோபால்சாமியை கட்சியை விட்டு நீக்கப்பட்டபோது தென் மாவட்டத்துல கட்சியைக் காப்பாத்திக் கொடுன்னு கெஞ்சுன மாதிரி அப்புறமா என்னிடம் வந்து கெஞ்சுவீங்க’ என்று சொல்லியபடியே காரில் ஏறி இருக்கிறார். தன்னிடம் நேருக்கு நேராகவே அழகிரி கோபத்தால் சொன்ன, அச்சில் ஏற்ற முடியாத அந்த வார்த்தைகள் கருணாநிதி மனதை வெம்பவைத்தன. 'இனிமேல் இங்கு அழகிரி இருந்தால் கட்சிக்கு நல்லதல்ல...’ என்று சொல்ல ஆரம்பித்தார் கருணாநிதி. அன்பழகனுக்கு போனைப் போட்டு வரச்சொன்னார். வீரமணியை வரச்சொன்னார். 'இதுக்கு மேல அவமானப்பட முடியாது. அழகிரியை நீக்கிடுவோம்’ என்று கருணாநிதி சொல்ல... அறிக்கை தயார் ஆனது!''
''அப்படியா?''
''பி.சி.ஆர். ஆக்ட் பற்றி இதில் குறிப்பிட்டே அறிக்கை தயார் ஆனது. கருணாநிதிக்கும் அழகிரிக்கும் நடந்த மோதலின்போது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளும் இந்த அறிக்கையில் ஆரம்பத்தில் சுட்டிக்காட்டப்பட்டதாம். ஆனால், வீரமணிதான் அதையெல்லாம் நீக்கிவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். தன்னை கட்சியை விட்டு நீக்குவார்கள் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார் அழகிரி. நீக்கி கையெழுத்துப் போட்டுவிட்டார் அன்பழகன் என்று தெரிந்ததும், 'டீசல் காசும் டி.ஏ-வும் கொடுத்தால், அன்பழகன் யாரையும் நீக்கிவிடுவார்’ என்றாராம் அழகிரி. அப்போது வீரமணி இருந்தார் என்றும் அழகிரிக்குத் தகவல் போனது. 'கறுப்புச் சட்டை போட்டவங்க அதிகமா வர ஆரம்பிச்ச பிறகுதான் கட்சியே இழவு வீடு மாதிரி ஆனது. தலைவரை கைதுசெய்தபோது, அது சரின்னு சொன்னவரு வீரமணி. தி.மு.க. ஆட்சி போனபோது இந்த நாட்டுக்கு விடுதலை கிடைச்சிருச்சுன்னு சொன்னவரு வீரமணி. அவர் ஒரு கறுப்பு துரோகி’ என்று சொன்னாராம். இப்படி சகட்டுமேனிக்கு அனைவரையும் திட்டித் தீர்த்துள்ளார் அழகிரி!''
''ம்!''
''மதுரையில் இந்த செய்தி பரவியது. ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தார்கள். 'என்னை நீக்கிவிட்டதால் சந்தோஷப்படுறாங்க. இவன் தொலைஞ்சான்னு நினைக்கிறாங்க. ஆனா, நான் யாருன்னு தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னால காண்பிப்பேன். நான் சொல்லப்போறதுதான் தேர்தல் முடிவையே தீர்மானிக்கும்’ என்று ஒருவரிடம் சொல்லியிருக்கிறார். 'ஸ்டாலினைச் சுற்றிலும் இருப்பவர்கள் இதுவரை என்னென்ன செய்துள்ளார்கள் என்பது எனக்குத் தெரியும். அந்த முறைகேடுகளை வெளிப்படுத்துவேன்’ என்று சொன்னதாகவும் சொல்கிறார்கள். 'ஸ்டாலினைச் சுற்றி இப்போது அ.தி.மு.க-வினர்தான் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் இந்தக் கட்சியை கைப்பற்றிவிட்டார்கள்’ என்றாராம்.''
''துரைமுருகனைச் சந்தித்துள்ளாரே அழகிரி?''
''அழகிரிக்கு அனுசரணையாக பேசினாராம் துரைமுருகன். அதனால்தான் அவரைச் சந்தித்தாராம். 'இவ்வளவு விஷயத்துக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன்தான் காரணம். அவரிடம் இருந்த சுகாதாரத் துறையை பறித்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கொடுக்க வைத்தேன். அதில் இருந்தே என்னைப் பற்றி கடுப்பாக இருந்தார். அவர்தான் அனைத்துக்கும் காரணம்’ என்றாராம் அழகிரி. 'ஒரு வாரம் காத்திருங்கள். எந்த அறிவிப்பும் செய்ய வேண்டாம். தலைவர் அனைத்தையும் மறந்து மன்னிப்பார்’ என்ற தொனியில் சொன்னாராம் துரைமுருகன்!''
''வேறு சமாதான முயற்சிகள் நடந்ததா?''
''கருணாநிதியின் மகள் செல்வியும் மருமகன் செல்வமும் இதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். இருவரும் ஸ்டாலின் வீட்டுக்குப் போனதாகவும், இவர்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்ட ஸ்டாலின், 'ஏதாவது பேசி சமாதானம் செய்வதற்காக நீங்க வந்தால், அதைப் பற்றி பேச நான் தயார் இல்லை’ என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டாராம். அவர்கள் மனவேதனையுடன் திரும்பியதாகச் சொல்கிறார்கள். அழகிரி பிறந்தநாளான 30-ம் தேதி வரை பொறுத்திருப்போம்!'' என்று சொல்லி இடைவெளிவிட்ட கழுகார், அடுத்து தொடங்கினார்.
''கூட்டணி பேச்சுவார்த்தைகளில் நடந்துள்ள முன்னேற்றங்களைச் சொல்கிறேன்!
ம.தி.மு.க. அலுவலகத்துக்கு பி.ஜே.பி. பிரதிநிதிகள் சென்றதை விரிவாக கடந்த முறை சொல்லியிருந்தேன். இவை 23-ம் தேதி அன்று நடந்தவை. அன்று முரளிதர் ராவ் வரவில்லை. அதனால் 25-ம் தேதி அவர் சென்னை வந்து ம.தி.மு.க. அலுவலகத்துக்குச் சென்றார். 'மோடி கொடுத்த திடீர் அசைன்மென்ட் காரணமாக 23-ம் தேதி கூறியபடி உங்களைப் பார்க்க எங்கள் டீமோடு வர முடியவில்லை’ கூறிவிட்டு, பரஸ்பர நல விசாரிப்புகளோடு அந்தச் சந்திப்புத் தொடங்கியது. தமிழகம் மட்டுமல்லாது, அகில இந்திய அரசியல் நிலவரங்களையும் இருவரும் பேசியிருக்கிறார்கள். பிப்ரவரி 8-ம் தேதி மோடியின் சென்னை பொதுக்கூட்டம் ஏற்பாடுகள் குறித்து வைகோவிடம் முரளிதர் ராவ் சொன்னாராம். 'அந்தக் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்க வேண்டும்’ என்றாராம். வைகோ சம்மதித்தார்.
[You must be registered and logged in to see this image.]
மறுநாள் 26-ம் தேதி வைகோ தலைமையில் ம.தி.மு.க. நிர்வாகிகள் தி.நகரில் உள்ள பி.ஜே.பி. தலைமை நிலையமான கமலாலயத்துக்குச் சென்றனர். காரில் இருந்து இறங்கியவுடன் வைகோவை கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் மோகன்ராஜுலு வரவேற்றார். பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், டாக்டர் தமிழிசை, வானதி சீனிவாசன் ஆகியோர் வைகோவை முரளிதர் ராவ் இருந்த கூட்ட அரங்கத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே இரண்டு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் அரை மணிநேரம் பேசினர். மோடியின் சென்னை மாநாடு ஏற்பாடுகள் குறித்து அதிகம் விவாதித்தனர். பி.ஜே.பி. தலைமை அலுவலகத்தில் இருந்த தமிழ்த்தாய் சிலைக்கு முன்னால் இரண்டு டீமைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் ஒன்றாக நின்று குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். 'மோடி கலந்துகொள்ளும் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியைவிட சென்னை மாநாடு மிகவும் பிரமாண்டமாக அமையும்’ என்று வைகோ சொன்னாராம்!''
''தொகுதிகள் எத்தனை, என்னென்ன தொகுதிகள் என்று பேசப்பட்டதா?''
''இல்லை! 'கூட்டணிக்குள் யார் யார் வருகிறார்கள் என்று இறுதியாகத் தெரிந்த பிறகு பேசிக்கொள்ளலாம்’ என்று வைகோ சொல்லிவிட்டாராம்!''
''வைகோவை தாயகத்தில் சந்தித்த முரளிதர் ராவ், 'பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை’ என்று சொல்லியிருக்கிறாரே?''
''இரண்டு கட்சிகளுக்கும் ஷாக் கொடுப்பதற்காகத்தான் இப்படிச் சொன்னாராம் முரளிதர் ராவ். மோடியும், 'எத்தனை வாரங்களாகத்தான் பேசுவீர்கள்?’ என்றும் கேட்டதாகச் சொல்கிறார்கள். மோடி கூட்டத்தின் மேடையில் உட்கார இருக்கும் ஆட்கள் பற்றி இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே பாதுகாப்பு காரணங்களுக்காக சொல்லியாக வேண்டும். ஆனால், பிப்ரவரி 8-ம் தேதி கூட்டத்தை வைத்துக்கொண்டு இன்னும் மேடை ஏறுபவர்கள் யார் யார் என்று தெரியாமல் இருக்கிறோமே என்றும் பி.ஜே.பி. தலைவர்களுக்கு வருத்தம். அதனால்தான், முரளிதர் ராவ் இப்படிச் சொன்னாராம். அவர் சொன்னது அந்த இரண்டு கட்சி தலைமையிடமும் சஞ்சலம் ஏற்படுத்திவிட்டதாம்!''
''அப்படியா?''
''இந்தப் பேட்டிக்குப் பிறகு முரளிதர் ராவிடம் பேசியிருக்கிறார் அன்புமணி. 'உங்களுக்கான மரியாதை நிச்சயம் கிடைக்கும். தேவையான தொகுதிகளைப் பேசி வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றாராம் முரளிதர். பா.ம.க. தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது. அதேபோல், முரளிதர் ராவை சுதீஷ் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். 'மாநாடு முடியும் வரை காத்திருக்கச் சொல்லி இருக்கிறோமே?’ என்றாராம் சுதீஷ். காங்கிரஸுடன் கூட்டணி என்று செய்தி பரவிவருகிறது அல்லவா. அதனால்தான் இப்படி பேசினாராம் முரளிதர் ராவ்!''
''காங்கிரஸ், தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா?''
''மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், தே.மு.தி.க. கூட்டணி வருகிறதா என்பதைப் பேசுவதற்கு முன்னதாக திடீர் திருப்பம் ஒன்று. மாநிலங்களவைத் தேர்தல் நடக்க இருக்கிறது அல்லவா? இதில் பதவிக் காலம் முடிபவர்களில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனும் ஒருவர். அவருக்கு இந்தத் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் பிறந்துள்ளது. விஜயகாந்த் ஆதரித்தால் நாம் ஜெயிக்கலாம் என்று நினைக்கிறார் வாசன். இந்தத் தகவல் விஜயகாந்த் கவனத்துக்குப் போனது. 'மூப்பனார் என்மீது அதிக அன்பு காட்டினார். அவரது மகன் ஜி.கே.வாசன் தேர்தலில் நின்றால் நிச்சயம் ஆதரிப்பேன்’ என்றாராம் விஜயகாந்த். தே.மு.தி.க., காங்கிரஸ் இரண்டும் கூட்டினால் 26 வாக்குகள் கிடைக்கும். தி.மு.க. வேட்பாளரான திருச்சி சிவாவும் 26 வாக்குகள் வாங்குவார். எனவே இருவருக்கும் சமமான வாக்குகள்தான் கிடைக்கும். எப்படியாவது தி.மு.க-வை வாபஸ் வாங்க வைக்க முடியுமா என்று பார்க்கச் சொன்னார்கள். அப்படியானால், இது நாடாளுமன்றத் தேர்தலுக்கான மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சியாக அமையும் என்று சிலர் நினைத்தார்கள். 'ஜி.கே.வாசனை ஆதரிக்கிறேன் என்பதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை ஆதரிப்போம் என்று நினைக்க வேண்டாம். அது வேறு, இது வேறு’ என்று சொல்லிவிட்டாராம் விஜயகாந்த்!''
''எஸ்கேப் ஆகிக்கொண்டே இருக்கிறாரே கேப்டன்?''
[You must be registered and logged in to see this image.]
''கல்யாண வீட்டில் நடந்த எஸ்கேப்பைப் பாரும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளரான முகமது யூசுப் மகள் திருமணம் 26-ம் தேதி சென்னையில் நடந்தது. அழைப்பிதழை தொல்.திருமாவளவனோடு சென்று  விஜயகாந்த்துக்குக் கொடுத்திருந்தனர். திருமணத்துக்கு முந்தைய நாளே திருமாவளவனுக்கு போன் செய்த விஜயகாந்த், 'என்னால் திருமண விழாவுக்கு வர முடியாது. சுதீஷ் கலந்துகொள்வார்’ என்பதைச் சொல்லிவிட்டாராம். மணமக்களை வாழ்த்திப் பேசும் படலம் முடிந்து, ஸ்டாலின், கனிமொழி எல்லாம் வந்துபோன பிறகுதான், சுதீஷ் வந்தாராம்.''
''அப்படியா?''
''முன்னதாக மணமக்களை வாழ்த்தி திருமாவளவன் பேசுகையில், 'தி.மு.க. கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. எங்கள் கூட்டணிக்கு வலுசேர்க்க வேண்டும் என்று விஜயகாந்த்தை நான் அழைக்கவில்லை. சாதி, மத அரசியலுக்கு துணைபோகாதீர்கள் என்றுதான் விஜயகாந்த், வைகோ மற்றும் கம்யூனிஸ்ட்களையும் அழைத்தேன்’ என்று பேசினாராம். இதை வைத்துப் பார்த்தால், அங்கும் எந்த சிக்னலும் காட்டவில்லை என்றே தெரிகிறது!'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.
படங்கள்: ஜெ.வேங்கடராஜ், ஆ.முத்துகுமார்
 ''அந்த மாதிரி மறுபடி நடக்கணுமா?''
[You must be registered and logged in to see this image.]
'பத்ம பூஷன்’ விருது கிடைத்ததற்காக நடிகர் கமல்​ஹாசன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். நிருபர் ஒருவர், ''இப்போதும் வேட்டி கட்டிய தமிழர்தான் பிரதமராக வரவேண்டும் என்ற கருத்தில் உறுதியாக உள்ளீர்களா?'' என்றார். ''நான் கண்கள் கலங்கி விரக்தியான மனநிலையில் இந்த இடத்தில் இதற்கு முன்பு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினேன். அதுபோல இன்னொரு பத்திரிகையாளர் சந்திப்பை நான் நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?'' என்று கேட்டு சூழ்நிலையைச் சமாளித்தார். 'விஸ்வரூபம்’ இரண்டாம் பாகம் வேலைகள் முடிவதற்கு இன்னும் இரண்டரை மாதங்கள் ஆகுமாம்!
 ''தமிழகத்தில் ஒபாமாவுக்கு ஓட்டுரிமை!''
[You must be registered and logged in to see this image.]தஞ்சையில் அ.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கக் நாள் கூட்டம் நடந்தது. அந்தக் கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர் நிர்மலா பெரியசாமியின் பேச்சு ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.
''தமிழகத்தை மட்டுமல்ல... இந்தியாவையும் அம்மாதான் ஆட்சி செய்வார்கள். வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது என்பதை மாற்றி தெற்கை வாழ வைப¢பவராக அம்மா திகழ¢வார். அதனால்தான் அம்மா பிரதமராக வேண்டும் என¢கிறோம். அம்மாவுக்கு ஏழு மொழிகள் தெரியும். அம்மா பேசிவிட்டுத் திரும்பி பார்த்தாலே அது ஒரு ஸ்டைல். அவங்க அழகுக்கு ஏதாவது ஈடாகுமா? அம்மா பிரதமரானால் இலங்கைகூட நம்மைப் பார்த்து பயப்படத் தொடங்கிவிடும். ஒபாமா கூட அம்மாவை வந்து பார்த்து, 'நானும் இந்தியா வந்துவிடுகிறேன். தமிழகத்தில் எனக்கு ஓட்டுரிமை தாருங்கள்’ என்று கேட்பார்'' என்றதும் கூட்டத்தில் கலகலப்பு.  
 ''பெண்களுக்கு வணக்கம் வையுங்கள்!''
[You must be registered and logged in to see this image.]
கிருஷ்ணகிரியில் மகளிர் அரசியல் எழுச்சி மாநாட்டை டாக்டர் ராமதாஸ் நடத்தினார். இந்தக் கூட்டத்துக்கு முதலில் ஆண்கள் அதிகம் வந்து உட்கார்ந்துவிட்டார்கள். அதன் பிறகு, பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். இதைக் கவனித்த டாக்டர் ராமதாஸ், ''இன்னும் பெண்கள் அதிக அளவில் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்தவுடன் ஆண்கள் எழுந்து அவர்களுக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு பின்னால் போய்விடுங்கள். இது பெண்களுக்கான மாநாடு. அவர்கள் கையில்தான் எல்லாமே இருக்கிறது. வணக்கம் வைத்துவிட்டுத்தான் பின்னால் போக வேண்டும்'' என்று சொல்லி கலகலப்பூட்டினார்.
[You must be registered and logged in to see this image.]சின்னதுரை உருண்ட கதை!
 அ.தி.மு.க-வின் ராஜ்யசபா வேட்பளர் பட்டியலில் இருந்து திடீரென கழற்றிவிடப்பட்டவர், தூத்துக்குடி என்.சின்னதுரை. வேட்பாளர் பட்டியல் மட்டுமின்றி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும்கூட தூக்கிவீசப்​பட்டிருக்கிறார்.
''மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராக இருந்தபோது, மாவட்ட பஞ்சாயத்து நிதியை, விதியை மீறி பொதுப்பணித் துறைக்கு ஒதுக்கினார் என்றும் வேண்டும் என்றே ஒரே வேலைக்கு இரண்டு தடவை நிதி ஒதுக்கினார் என்றும்  குற்றச்சாட்டு எழுந்தது. இரண்டு கோடி ரூபாய் வரை முறை கேடு நடந்ததாகக் கூறப்பட்டது. ஆனாலும், அனைத்தையும் தனது மேல்மட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி அமுக்கிவிட்டார். இந்த நிலையில் சண்முகநாதனுக்கும் சின்னதுரைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட, முடங்கி கிடந்த முறைகேடுகள் உயிர் பெற்றன. இந்த தகவல் அறிந்ததும்தான் சின்னதுரை தூக்கிவீசப்பட்டிருக்கிறார்'' என்றனர்.
சின்னதுரையோ, ''குற்றசாட்டுக்கள் எதற்​குமே ஆதாரங்கள் கிடையாது. என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் சிலர் பிரச்னையை உருவாக்குறாங்க. அம்மாவிடம் ஆதாரங்களைக் காட்டி நிரூபிப்பேன்'' என்று சொல்லி வருகிறாராம்!


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum