TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தி.மு.க. தேர்தலில் தானாக தோற்கும்: மு.க.அழகிரி பேட்டி DMK Losing the election: Interview with MK Alagiri

Go down

தி.மு.க. தேர்தலில் தானாக தோற்கும்: மு.க.அழகிரி பேட்டி DMK Losing the election: Interview with MK Alagiri Empty தி.மு.க. தேர்தலில் தானாக தோற்கும்: மு.க.அழகிரி பேட்டி DMK Losing the election: Interview with MK Alagiri

Post by piraba Sun Jan 26, 2014 7:49 am

தி.மு.க. தேர்தலில் தானாக தோற்கும்: மு.க.அழகிரி பேட்டி DMK Losing the election: Interview with MK Alagiri 1620635_719507828068712_1696552573_n

DMK Losing the election: Interview with MK Alagiri


தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்து வந்த மு.க.அழகிரி எம்.பி. கட்சியில் இருந்து நேற்று தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மு.க.அழகிரி எம்.பி. அளித்த பேட்டி விவரம் வருமாறு:–
கட்சியில் இருந்து என்னை ஏன் என்று நீக்கினார்கள் என்றே எனக்கு தெரியவில்லை. நான் ஹாங்காங் சென்றேன். அந்த தகவலை கட்சி தலைமைக்கு தெரிவிக்கவில்லை. அதனால்கூட என்னை நீக்கி இருக்கலாம். தி.மு.க.வில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை.
மதுரையில் சிலர் மீது சாதியை சொல்லி வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவத்திற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். ஒருவர் சாதியை சொல்லி திட்டியது உண்மை என்றால், அவர் புகார் செய்ய வழி இருக்கும்போது புகார்தான் செய்வார். உங்களை திட்டினால் சும்மா இருப்பீர்களா?.
என்னை கட்சியில் இருந்து நீக்கியபின் எனது ஆதரவாளர்கள், தொண்டர்கள் அதிக பலத்துடன் இருக்கிறார்கள். என் நிலைப்பாடு குறித்து வருகிற 30–ந்தேதி மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நடக்கும் பிறந்தநாள் விழாவில் தெரிவிப்பேன்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வந்து தொண்டர்களை சந்தித்து பேசுவேன். அதுவரை அமைதியாக இருக்கவும் அறிவுறுத்தி உள்ளேன். தி.மு.க.வில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
எனது ஆதரவாளர்கள் மீது மட்டும்தான் சஸ்பெண்ட் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இது ஏன் என்று எனக்கு புரியவும் இல்லை. தெரியவும் இல்லை.
இதுபற்றி நான் தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினேன். ஆனால் அவர் எனக்கு இது தொடர்பாக எதுவுமே சொல்லவில்லை. ஆனால் நான் பேசி விட்டு சென்ற உடன் என்னை நீக்கி இருக்கிறார்கள்.
மு.க.ஸ்டாலினை நான் தலைவராக ஏற்க மாட்டேன் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். அவரை ஒரு போதும் தலைவராக ஏற்க மாட்டேன்.
என் மீதும், என் ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தப் பிறகு ஸ்டாலின் தலைமையை நாங்கள் ஏன் ஏற்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளால் நாங்கள் துவண்டு விடமாட்டோம். முன்பை விட ஏழை மக்களுக்கு அதிக அளவில் உதவிகள் செய்யப்படும்.
தி.மு.க.வுக்காக உழைத்த தொண்டர்களை எந்த அடிப்படையும் இல்லாமல் நீக்கியுள்ளனர். இது சரியானது தானா என்றுதான் நியாயம் கேட்டேன். நான் நியாயம் கேட்கக் கூடாதா? அதற்காக என்னையும் நீக்கி உள்ளனர்.
தலைவரிடம் பேச எனக்கு உரிமை இல்லையா? நான் உரத்தக் குரலில் பேசவேக் கூடாதா? அப்படியானால் தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை என்றுதானே அர்த்தம்.
நான் சொல்வதை கேட்காத தலைவர், ஸ்டாலின் சொல்வதைத்தான் கேட்கிறார். தலைவரும், பொதுச் செயலாளரும் ஸ்டாலின் சொல்வதைத் தான் செய்கிறார்கள்.
எனக்கு தென்மண்டல அமைப்பாளர் பதவியைக் கொடுத்துள்ளனர். ஆனால் என்னிடம் எதுவுமே கேட்பது இல்லை. என்னை கலந்து ஆலோசிக்காமலே தென் மாவட்ட தி.மு.க. பற்றி முடிவு எடுத்தால் என்ன அர்த்தம்?
எனக்கும் ஸ்டாலினுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை. கட்சி ரீதியாகத்தான் பிரச்சினை உள்ளது.
ஸ்டாலின் பதவிக்கு ஆசைப்படுபவர். ஆனால் நான் அப்படி அல்ல. ஒரு போதும் பதவிக்காக கவலைப்பட்டதே இல்லை. மீண்டும் தலைவரை உடனடியாக சந்திக்கும் திட்டம் இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. கட்சியில் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை.
அப்படி இருக்கும் போது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? ஒரு போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். அதுபோல விளக்கக் கடிதம் எதுவும் தலைமைக்கு அனுப்பமாட்டேன்.
என்னை நீக்கியதால் தி.மு.க. மீதான குடும்ப அரசியல் என்ற பழி துடைக்கப்பட்டுள்ளதாக வீரமணி கூறியுள்ளார். அவர் ஒரு அரசியல் வியாபாரி. எங்கே ஆதாயம் கிடைக்கிறதோ அங்கே போய் சேர்ந்து விடுவார்.
கருணாநிதி முதல்வரானதும் தி.மு.க.வை புகழ்ந்தார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் சமூக நீதி காத்த வீராங்கனை என்றார். ஆதாயம் கிடைக்கும் இடத்துக்கு ஏற்ப மாறி, மாறி பேசுவார்.
கட்சியில் இருந்து நான் சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பது இது இரண்டாவது முறை. அந்த அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. இதற்காக நான் என் தொண்டர்களை ஒரு போதும் கைவிட்டு விடமாட்டேன்.
ஸ்டாலின் இப்போது தி.மு.க. தலைவர் மாதிரி செயல்பட ஆரம்பித்து விட்டார். அவருக்கு கட்சியில் பொருளாளர் பதவியை கொடுத்திருக்கிறார்கள். அவர் அதை மட்டும்தான் செய்ய வேண்டும்.
ஆனால் மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்கிறார். இதனால் தி.மு.க.வின் சொத்தை சிலர் அபகரிக்க முயற்சி செய்வது போல எனக்கு தோன்றுகிறது.
தி.மு.க. தலைவரை யாரோ ‘‘பிளாக்மெயில்’’ செய்கிறார்களா? என்று எனக்கு தெரியவில்லை. ஸ்டாலினை பொருத்தவரை அவர் பதவிக்காக எதையும் செய்வார். இப்போதும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.
நான் நியாயத்துக்காக போராடுவேன். 30–ந்தேதி என் ஆதரவாளர்கள் நடத்தும் விழாவில் பங்கேற்பேன். அப்போது நான் எல்லாவற்றையும் சொல்வேன்.
என்னை நீக்கிய பிறகு தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் என்று சொல்கிறார்கள். அப்படி கூட்டணி ஏற்பட்டால் இரு கட்சிகளுக்குமே லாபம் ஏற்பட போவதில்லை. தே.மு.தி.க.வை நம்பி தி.மு.க. வெற்றி பெற முடியாது.
அ.தி.மு.க.வினர் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று இப்போதே பணிகளை தொடங்கி விட்டனர். இதற்கான எல்லா முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபடுவார்கள்.
என் மீதான நடவடிக்கை எனக்கு இன்னமும் ஆச்சரியமாக உள்ளது. தலைவர் ஒப்புதல் இல்லாமல் கூட இது நடந்து இருக்கலாமோ என்று நினைக்கிறேன். கட்சிக்காக நான் செய்த பங்களிப்பு எல்லோருக்கும் தெரியும். எனக்கு எப்போதுமே கருணாநிதிதான் தலைவர். அவர் இல்லாத தி.மு.க.வை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
இவ்வாறு மு.க.அழகிரி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று மு.க.அழகிரி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தி.மு.க.வில் ஜனநாயகம் செத்து விட்டது. நியாயத்துக்காக போராடியதற்காக தி.மு.க.வில் இருந்து நீக்கி விட்டார்கள். ‘வருங்காலமே’ என்று சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
தி.மு.க.வுக்கு போட்டி வேட்பாளர்கள் தேவை இல்லை. தி.மு.க. தானாகவே தோற்கும். கட்சியில் இருந்த முறை கேடுகளை எடுத்து கூற முற்பட்டது நான் செய்த தவறு.
தி.மு.க.வில் நடந்து இருக்கும் ஊழலுக்கான ஆதாரங்களை மதுரையில் வெளியிடுவேன். மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்.
இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.


[You must be registered and logged in to see this link.]
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தி.மு.க., தலைவர் பதவிக்கு போட்டி: மத்திய அமைச்சர் அழகிரி பரபரப்பு பேட்டி
» தேர்தல் வியூகம் எப்படி?மு.க. அழகிரி பேட்டி
» பாராளுமன்ற தேர்தலில் மு.க.அழகிரி மீண்டும் மதுரையில் போட்டியிட தயாரா?: செல்லூர் ராஜூ சவால்...
» விரும்பத்தகாத வார்த்தைகளால் மு.க.அழகிரி பேசினார்: கருணாநிதி பேட்டி.
» தே.மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைக்க கூடாது: மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum