TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அறிவாலயத்தின் ஓடு கூட அழகிரிக்குக் கிடைக்காது!

Go down

அறிவாலயத்தின் ஓடு கூட அழகிரிக்குக் கிடைக்காது! Empty அறிவாலயத்தின் ஓடு கூட அழகிரிக்குக் கிடைக்காது!

Post by ஜனனி Fri Jan 24, 2014 6:40 pm

ப.திருமாவேலன்
ஓவியம்: ஹாசிப்கான்
அண்ணா தலைமை தாங்கிய கழகத்தில், கருணாநிதிக்கும் ஈ.வெ.கி.சம்பத்துக்கும் தனி மனிதத் தாக்குதல் நடந்துகொண்டு இருந்தபோது நடந்த ஒரு சம்பவம் இது...
''இது நம்முடைய கட்சி, நமக்குள் சண்டை போடாமல் வேறு யாருடன் சண்டை போடுவது?'' என்று ஒருவர் கேட்டார். ''சொந்த வீடு என்பதற்காக, கரியை வைத்துக் கிறுக்க முடியுமா?'' என்று கேட்டார் நாஞ்சில் மனோகரன்.
ஆண்டுகள் எத்தனையோ உருண்டுவிட்டன. இதோ மீண்டும், அழகிரி - ஸ்டாலின் மோதல் படலம்!
கட்டிப்பிடித்து உருண்டபடி கோபாலபுரம் வீட்டை மட்டுமல்ல, அண்ணா அறிவாலயத்தையும் அசிங்கம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் அண்ணனும் தம்பியும். இவர்கள் இருவருக்கும் கருணாநிதி தனது வாழ்நாளில் எத்தனை தடவை சமாதானம் செய்துவைத்திருப்பார் என்ற கணக்கு நம்மிடமும் இல்லை; அவரிடமும் இருக்காது. ஆனால், அசிங்கத்துக்கு எண்ணிக்கை அவசியம் இல்லை!
ட்சி, இப்போது கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின் கையில்தான் இருக்கிறது. அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஸ்டாலின் தலைமையை மனதளவில் ஏற்க மறுத்தவர்கள்கூட மறைந்துவிட்டார்கள். அல்லது தங்களை மறைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். எனவே, இப்போது இருப்பது அண்ணாவின் தி.மு.க-வும் அல்ல. கருணாநிதியின் தி.மு.க-வும் அல்ல. ஸ்டாலின் தி.மு.க.! இதற்கு விதிவிலக்கானவர்கள் பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன்... என்று ஒன்றிரண்டு பேரைத்தான் சொல்லலாம். மற்றவர்கள் அனைவரும் 'ஸ்’ தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள்தான் மாவட்டச் செயலாளர்களாக இருக்கிறார்கள். வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் இவர்களுக்குத்தான் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும். சட்டமன்றத் தேர்தலில் வென்றால், அமைச்சர்களாக ஆகப்போகிறவர்களும் அவர்கள்தான். அதற்கேற்ப தலைமைக் கழகத்தையும், கட்சியின் அதிகாரபூர்வமான இதழான 'முரசொலி’யையும், 'கலைஞர் டி.வி-’யையும் தனது ஆளுகைக்குள் ஸ்டாலின் கொண்டுவந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. கருணாநிதியின் மகன் என்பதற்காக மட்டும்தான் இளைஞர் அணிச் செயலாளர் பதவி ஸ்டாலினுக்குத் தரப்பட்டது.
[You must be registered and logged in to see this image.]
எம்.எல்.ஏ-வாகவும் அதனால்தான் ஆனார். மேயர் ஆக்கப்படக்கூட அதுதான் காரணம். ஆனால், மேயர் ஆக்கப்பட்டதுமே, கருணாநிதிக்கு அடுத்து தி.மு.க-வில் ஸ்டாலின்தான் என்று முடிவானது. இதுதான் அழகிரியை உஷ்ணம் ஆக்கியது.
2001-ம் ஆண்டு முதல் தன்னுடைய அஸ்திரத்தைத் தொடர்ந்து ஸ்டாலின் மீது எறிவதை அழகிரி வழக்கமாக வைத்திருந்தார். இதன் அடிப்படையில் பார்த்தால், ஸ்டாலின் - அழகிரி மோதல் 14 ஆண்டுகளாகத் தொடர்கிறது.
அழகிரி மனதில் அனல் கிளம்ப ஆரம்பித்தபோதே, கருணாநிதி முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். மாறாக அவரை சாந்தப்படுத்த சில சலுகைகளை வழங்கினார். தென்மண்டல அமைப்புச் செயலாளர் ஆக்கினார். எம்.பி. தேர்தலில் நிறுத்தினார். அமைச்சராகவும் ஆக்கினார்.
ஒருவருக்கு எத்தனை பதவிகள்கூடத் தரலாம். ஆனால் பதவியை வாங்கியவர், செயல்பட வேண்டாமா? பதவியைக் கொடுத்த கருணாநிதியே செயல்பட்டுக்கொண்டால் போதுமா? இங்கே 'செயல்’ என்று சொல்வது கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபடுவதும், தொகுதியை வளப்படுத்துவதும் தனக்குக் கிடைத்த அமைச்சர் பதவி மூலமாக நாட்டுக்கு நன்மை செய்வதுமே. ஆனால், 'பொட்டு’ சுரேஷ், 'அட்டாக்’ பாண்டி பாணியிலான 'செயல்’களை அழகிரி ஊக்கப்படுத்தியதால்தான், தென் மண்டலமே அவரிடம் இருந்து கழன்றது.
திண்டுக்கல் பெரியசாமி, நெல்லை கருப்பசாமிப் பாண்டியன், சாத்தூர் ராமச்சந்திரன், தேனி மூக்கையா, மதுரை மூர்த்தி, மதுரை தளபதி ஆகிய மாவட்டச் செயலாளர்கள் அனைவருமே அழகிரிக்கு சலாம் போட்டுக்கொண்டு இருந்தவர்கள்தான். அவர்கள் ஸ்டாலின் தலைமையை ஏற்றுக்கொண்டு அவர் பின்னால் அணிசேர என்ன காரணம்? அழகிரியின் பங்களா பாலிட்டிக்ஸ்!
மெகா சோபாக்களில் உட்கார்ந்துகொண்டு ஜனவரி முதல் தேதியும், 30-ம் தேதியும் மக்களையும் கட்சிக்காரர்களையும் பார்த்தால் போதும் என்று நினைத்ததும், தன்னைச் சுற்றி அச்சுறுத்தலுக்கு அடையாளமான ஆட்களை வைத்துக்கொண்டு வலம் வந்ததும்தான் பலரையும் பயமுறுத்தி, அவரை அந்நியம் ஆக்கியது.
ஒருகட்டத்தில், 'நீ மதுரையில் இருக்க வேண்டாம், சென்னைக்கு வந்துவிடு’ என்று கருணாநிதியே கதறியபோதும், அழகிரி அதனைக் கேட்கவில்லை. பாடிய வாயும் ஆடிய காலும் சும்மா இருக்காது என்பதை மெய்ப்பிப்பதற்காகவே, மதுரையில் வலம் வந்தார். அந்தக்காலப் பண்ணையார்கள், 'நான் வந்தேன்... தொலைச்சுப்புடுவேன்’ என்பது மாதிரி மிரட்டிக்கொண்டு இருந்தார். உணர்ச்சிகரமான வசனத்தை நான்காவது முறை கேட்கும்போது காமெடியாக இருக்கும் என்பதைப் போலவே, 'நான் யாரென்று காட்டுவேன்’, 'அடுத்து என்னுடைய விஸ்வரூபம் பார்க்கலாம்’ என்று அவர் விடும் சீற்றங்கள், சிணுங்கல்களாக மாறின.
ஏ.ஆர்.சந்திரன், பாலகுருராஜன், நாகேஷ், தேவ், சேதுராமன், 'பொட்டு’ சுரேஷ், மன்னன் என்று ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொருவர் உட்கார்ந்து ஆட்சி செலுத்தினார்களே தவிர, அழகிரிக்கு யாரேனும் நல்லது செய்தார்களா? இவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிரடி மனிதர்கள்தான் வளர்ந்தார்கள்.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகி மதுரையில் இருந்து திருச்சி சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்ட போலீஸ் வாகனத்துக்குப் பின்னால் அநாதையாக பைக்கில் அலைந்த சமயநல்லூர் கதிரவனை, அழகிரி அறிவாரா? ஸ்டாலின் படத்தைப் போடாமல் தைரியமாக போஸ்டர்கள் ஒட்டிவந்த சத்திரப்பட்டிக்காரர், தன் மகனுக்கு எப்படியாவது பொறியியல் கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுத்துவிடுவார் என்று அலைந்தபோது ஏமாற்றப்பட்டார் என்பது அழகிரிக்குத் தெரியுமா? உண்மையான விசுவாசிகள் லாபம் அடையவில்லை. லாபம் அடைந்தவர்களோ... வியாபாரிகள்!
அனைத்து மாவட்டச் செயலாளர்களும் சுற்றியிருந்தபோது, தென்மண்டல அமைப்புச் செயலாளராக அழகிரி செயல்படவில்லை. இன்று எல்லோரும் பறந்துபோன பிறகு, தன்னை 'ஆக்டிவ்’ ஆகக் காட்டிக்கொள்ள விரும்புகிறார். அதிகாரம் பொருந்திய அமைச்சர் பொறுப்பு கையில் இருந்தபோது, மதுரைக்கு எதுவும் இல்லை. ஆனால், இப்போது கிளைக் கழகங்களில் மலையளவு மாற்றங்களைச் செய்துகாட்டத் துடிக்கிறார். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் அழகிரி இருக்கிறார்!
[You must be registered and logged in to see this image.]இந்தப் பூச்சாண்டியை இப்படியே தொடரவிடுவது கருணாநிதிக்கும் நல்லதல்ல; கட்சிக்கும் நல்லதல்ல. அதிகாரம் பொருந்திய ஆளும் கட்சியாக இருக்கும்போது இத்தகைய நாடகங்கள், பொழுதுபோக்கப் பயன்படலாம். ஆனால், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத நிலையில், இவை இன்னும் மோசமான சரிவுக்கும் சறுக்கலுக்கும்தான் வழிவகுக்கும்!
கட்சியில் மாற்றுத் தலைவர்கள் உருவாகும் முன்பே ஒழிக்கப்பட்டார்கள் என்பதும் உண்மைதான். அதே சமயம் ஸ்டாலின் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். ஆனால், தரப்பட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தாததுடன், அவற்றை உதாசீனப்படுத்தியவர் அழகிரி. 'கருணாநிதியின் மூத்த மகன் என்பதால், தி.மு.க. தலைமை தனக்கு வந்தாக வேண்டும்’ என்று அழகிரி நினைத்தால், அது அபத்தம். அந்த அடிப்படையில் கோபாலபுரம் வீடு கிடைக்குமே தவிர, அறிவாலயத்தின் ஓடுகூட கிடைக்காது. ஆனால், அந்த வீடும் அவருக்குக் கிடைக்காது என்று உணர்த்தப்பட்ட பிறகுமா, அழகிரி இன்னும் நம்பிக்கையுடன் வலம் வருகிறார்?
அழகிரிக்கு எதார்த்தம் உணர்த்த வேண்டியது கருணாநிதிதான். கஷ்ட காலத்தில் எல்லாம் கட்சியை வளர்க்க கருணாநிதியுடன், அவரது குடும்பமும் துடித்தது. 'நான் எப்போது போனாலும் என்னிடம் கழகத்தின் வளர்ச்சியைப் பற்றித்தான் கேட்பார் கருணாநிதியின் தாய் அஞ்சுகம்’ என்று அண்ணா எழுதியிருக்கிறார். இந்திராவின் எமர்ஜென்சியை எதிர்த்து ஒரே குடும்பத்தில் மாமனும் மருமகனும் ஓர் ஆண்டு காலம் சிறையில் இருந்ததும் கருணாநிதி குடும்பத்தில்தான். கட்சி வென்றால் அதில் பலன் காணப் பலரும் வரும்போது, தோற்கும் போது பழி சுமப்பதும் கருணாநிதி குடும்பம்தான்.
இப்போது அந்தக் குடும்பத்துக்கு ஒரு கடமை இருக்கிறது. சொந்தச் சண்டையால் கழகத்தைக் கறைப்படுத்த அனுமதிக்காதீர்கள். பாகப்பிரிவினையைப் பக்குவமாகப் பாருங்கள். சொத்தைப் பாதியாகப் பிரித்துக்கொள்ளலாம். ஆனால், சொந்தத் தகப்பனை பாதியாகப் பிரிக்க முடியாது. அது உயிர். கட்சியும் அதுவே!
- ஆனந்த விகடனிலிருந்து...
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum