TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிதைக்கு தலைவர் தீ வைத்தபோது எங்கள் நெஞ்சங்களும் கனன்று எழுந்தன..

Go down

அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிதைக்கு தலைவர் தீ வைத்தபோது எங்கள் நெஞ்சங்களும் கனன்று எழுந்தன.. Empty அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிதைக்கு தலைவர் தீ வைத்தபோது எங்கள் நெஞ்சங்களும் கனன்று எழுந்தன..

Post by mmani Sun Oct 06, 2013 7:29 am

அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிதைக்கு தலைவர் தீ வைத்தபோது எங்கள் நெஞ்சங்களும் கனன்று எழுந்தன..
அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிதைக்கு தலைவர் தீ வைத்தபோது எங்கள் நெஞ்சங்களும் கனன்று எழுந்தன.. 1384137_10153335399590637_995148962_n
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கூட்டுச் சதியால் படுகொலை செய்ய முனைந்த பொழுது, கொள்கை வலி நின்று நஞ்சருந்தி வீரச்சாவடைந்த மூத்த தளபதிகள் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவு தொடர்பான உண்மைகளை ஆதாரமாக வைத்து எழுதப்பட்ட ஒரு ஆக்கம் இது!

திலீபனின் உயிரிழப்பு விடுதலைப் புலிகளிடத்தும், யாழ் மக்களிடத்தும் மாறாத சோகத்தை ஏற்படுத்தியருந்த நிலையில், இவ்வியக்கம் அடுத்ததொரு சோகத்தையும் சந்திக்க நேர்ந்தது.

கசப்பு மருந்தாக இடைக்கால நிர்வாக சபைத் தலைவர் தேர்வு இருந்தாலும், கெட்டதில் நல்லதைத் தேடுவது என்ற அடிப்படையில் விடுதலைப்புலிகள் நிலைப்பாடு இருந்தது.

சென்னையில் இருந்த அவர்களது அலுவலகத்தை முற்றும் முழுதாகக் காலி செய்து கொண்டு யாழ்ப்பாணம் வரும் முடிவுடன் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 17 பேர் படகில் இலங்கையிலிருந்து கிளம்பினர். அவர்களின் பயணம் இந்திய அமைதிப்படைத் தலைவர்களுக்கும் இந்தியத் தூதுவருக்கும் தெரிவிக்கப்பட்டே நடந்தது.

இந்நிலையில், சிங்களக் கடற்படை, குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டோர் சென்ற படகைச் சுற்றி வளைத்தது. அவர்கள் ஆயுதம் கடத்துவதாகக் கூறி கைது செய்ததாகவும் அறிவித்தது. இந்த செய்தி, விடுதலைப் புலிகள் மத்தியிலும் யாழ்ப்பாண மக்கள் மத்தியிலும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது!

சிங்களக் கடற்படையினரால் ஆயுதம் கடத்துவதாகக் கூறி, படகைச் சுற்றி வளைத்துக் கைது செய்யப்பட்ட குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டோர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அமைதிப்படைத் தலைவருக்கும், இந்திய தூதுவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று அவர்கள் சொன்னதை சிங்களக் கடற்படையினர் சட்டை செய்வதாக இல்லை.

அவர்கள் அனைவரும் பலாலி ராணுவ முகாமுக்குக் கொண்டுவரப்பட்டு, காவலில் வைக்கப்பட்டனர். அவர்களுக்கு விலங்கு பூட்ட வேண்டும் என்று சிங்களத் தளபதி வலியுறுத்தினார். ஆனால் அம்முடிவை அமைதிப்படை ஏற்கவில்லை.

கைதானவர்களில் புலேந்திரன் இருப்பதை அடையாளம் கண்ட இலங்கை கடற்படை பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்தது. காரணம், ஏப்ரல் 1987-இல் திருகோணமலையில் நடைபெற்ற வாகனத் தகர்ப்பு சம்பவத்தில் சிங்களர்கள் இறந்ததையொட்டி, விடுதலைப்புலிகளின் திருகோணமலை தளபதி புலேந்திரன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. எனவே அவரையும் மற்றவர்களையும் கொழும்புவுக்குக் கொண்டு செல்ல இலங்கை கடற்படை விரும்பியது. பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலியும் அவர்களை உடனே கொழும்பு கொண்டு வரும்படி உத்தரவிட்டார்.

இதுகுறித்து அறிந்ததும் மாத்தையா, இந்திய அமைதிப்படைத் தளபதிகளிடம் பேசினார். ""அனைத்துப் போராளிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் கைது செய்வது - ஒப்பந்த மீறலாகும். அவர்கள் ஆயுதம் எதுவும் கடத்தவில்லை. தங்கள் பாதுகாப்புக்கு என்று துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். இதுவும் கூடத் தளபதிகளுக்கு அனுமதிக்கப்பட்ட சலுகைதான். இந்த நிலையில் அவர்களை விடுவிப்பது அமைதிப்படையின் பொறுப்பாகும்' என்று வாதிட்டார்.

அமைதிப்படையினரும் சிங்களக் கடற்படையினர் செய்தது சரியில்லை என்று கூறி, அவர்களை விடுவிக்க முயற்சி எடுக்கிறோம் என்று உறுதி கூறினர். இது குறித்து பழ.நெடுமாறன் எழுதியுள்ள நூலில், மாத்தையா தன்னிடம் சொன்ன தகவல்களைப் பதிவு செய்துள்ளார். அதில் மாத்தையா சொல்கிறார்:

"நானும் நடேசனும் ராணுவ முகாமுக்குச் சென்று எங்களது தோழர்களைப் பார்த்தோம். அவர்கள் யாரும் எதைப்பற்றியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்பு எல்லாரையும் வீடியோ படம் எடுத்தோம். அவரவர் தம் குடும்பத்தினருக்குக் கடிதம் எழுதிக் கொடுத்தார்கள்.

புலேந்திரன் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், "எல்லாச் சோதனைகளிலும் வென்றிருக்கிறேன். இதிலும் நிச்சயமாக வெல்வேன். இல்லாவிட்டால் லட்சியத்திற்காகச் சாவேன்' என்று எழுதியிருந்தார்.

குமரப்பா தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், "அவர் எப்போதும் விரும்பிப் படிக்கும் பாடல் ஒன்றை நினைவுப்படுத்தி' எழுதியிருந்தார்.

கரன் என்ற தோழர் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், "மகனை ஒரு மாலுமியாக' ஆக்குமாறு குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களது விருப்பங்களை எழுதிக் கொடுத்தனர்.

இதற்கிடையில், இந்திய அமைதிப்படை இவர்களுக்கு உணவு கொண்டு வந்தது. அவ்வுணவை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். எனவே, அவர்களுக்கு வெளியே இருந்து உணவு வரவழைத்துக் கொடுத்தேன்.

பின்னர் மேஜர் ஹர்கிரத் சிங்கைச் சந்தித்தேன். அவர் நியாயங்களை உணர்ந்து பேசினார். ஆனாலும் இந்தியத் தூதுவர் தீட்சித்திடம் இருந்து வந்த செய்தியை அவர் தெரிவித்தார். "இடைக்கால அரசை விடுதலைப்புலிகள் ஒப்புக் கொண்டால், அனைவரையும் விடுதலை செய்வதாக தீட்சித் கூறுகிறார்' என்று அவர் தெரிவித்தார்.

எங்களை நிர்ப்பந்தப்படுத்தி இடைக்கால அரசை ஏற்கவைக்க முயலுகிறார்கள் என்பது புரிந்தது. நிபந்தனை என்றால் அது தேவையில்லை. ஒப்பந்தப்படி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. பொதுமன்னிப்பு வழங்கிய நிலையில் கைது நடவடிக்கை அத்துமீறல் என்று சொல்லவேண்டும் என்று வலியுறுத்தினோம். எங்கள் வசமுள்ள சிங்களக் கைதிகள் 8 பேரையும் விடுதலை செய்கிறோம். பதிலுக்கு எங்கள் தோழர்களை விடுதலை செய்யுங்கள்' என்று கேட்டோம்.

இதற்கும் அவர்கள் தரப்பிலிருந்து சரியான பதில் இல்லை. இதன்பின் பிரபாகரன் என் மூலம், ஹர்கிரத் சிங்கிற்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

"எமது பிராந்தியத் தளபதிகளையும் மற்றும் முக்கிய உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா ஆயுதப்படையினர் கைது செய்து காவலில் வைத்திருப்பது இந்திய - இலங்கை உடன்படிக்கையின் அடிப்படை அம்சத்தையே மீறுவதாக அமைகிறது.

உடன்படிக்கையின்படி இலங்கைக் குடியரசுத் தலைவர் எமக்குப் பொதுமன்னிப்பு வழங்கியிருக்கிறார். இந்திய அரசு எமக்குப் பாதுகாப்பு தருவதென உறுதிமொழி அளித்துள்ளது.

இப்பொழுது சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் எமது வீரர்கள் எந்தவொரு குற்றச் செயலையும் செய்யவில்லை. அவர்கள் தென்னிந்தியாவிலுள்ள விடுதலைப் புலிகள் அலுவலகத்திலிருந்த ஆவணங்களையும் புத்தகங்களையும் இங்கு கொண்டு வருவதற்காகச் சென்றனர். ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இது தொடர்பாக இந்தியக் கடற்படையினரிடம் உதவி கோரியிருந்தோம். ஆனால் அவர்கள் இவ்விஷயத்தில் எதுவித முடிவும் எடுக்காத நிலையில், எமது சொந்தப்படகில் ஆவணங்களையும் புத்தகங்களையும் கொண்டுவரத் தீர்மானித்தோம்.

எமது தளபதிகள் சொந்தப் பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை மட்டும் வைத்திருந்தனர். இப்பொழுது எமது தளபதிகளும் முக்கிய உறுப்பினர்களும் பலாலி விமான தளத்தில் அமைதிப்படையின் மேற்பார்வையுடன் ஸ்ரீலங்கா ராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அமைதிப்படையினர் இவர்களுடைய பாதுகாப்பிற்கு உறுதியளிக்கவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இவர்களை ஸ்ரீலங்கா ராணுவம் கொழும்பு கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது.

ஸ்ரீலங்கா படையினர் அவர்களை பலாத்காரமாகக் கொழும்புக்குக் கொண்டு செல்ல முயன்றால், அவர்கள் சயனைட் அருந்தி தம்மைத்தாமே அழித்துக் கொள்வார்கள். இவ்விதமான துர்ப்பாக்கிய சம்பவம் நிகழுமானால் அதனால் எழக்கூடிய பாரதூரமான விளைவுகளுக்கு இந்திய அமைதிப் படையே பொறுப்பேற்க வேண்டும்.

எமது தளபதிகளும், முக்கிய உறுப்பினர்களும் இறக்க நேரிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் யுத்த நிறுத்தத்தைத் தொடரப்போவதில்லை. தமிழ்ப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்திய அமைதிப்படையினருக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம். அமைதியையும், இன ஒற்றுமையையும் நிலைநாட்டுவதில் உறுதிகொண்டிருக்கும் இந்திய அரசும், இந்திய அமைதிப் படையினரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எமது உறுப்பினர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய ஆவன செய்யவேண்டும்'' என்று அந்தக் கடிதத்தில் வேண்டுகோள் விடப்பட்டிருந்தது.

இக்கடிதத்தை ஹர்கிரத் சிங்கிடம் சேர்த்தபோது அவருடன் பிரிகேடியர் ஃபெர்னாண்டஸ் மற்றும் மொழிபெயர்ப்பாளர் பெரியசாமி இருந்தனர்.

நிலைமை அவர்களுக்குக் கவலையளித்தது. இவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது ஹெலிகாப்டர் ஆயத்த நிலையில் இருந்தது. இதுகுறித்து கேட்டபோது, பயிற்சிக்காக அவ்வாறு செய்வதாகக் கூறப்பட்டது.

நான் கோபமுற்று, "எங்கள் தோழர்களை இங்கிருந்து கொழும்பு கொண்டு போனால், அடுத்த முறை அவர்களது உடல்களை எடுத்துச் செல்லவே வருவேன்' என்று கூறினேன். தீபிந்தர்சிங் தில்லிக்குச் செய்தி அனுப்பினார். தில்லியில் ஜெயவர்த்தனாவின் செல்வாக்கே கொடிகட்டிப் பறந்தது.

மறுநாள் பகல் இரண்டு மணியளவில் 17 தோழர்களுக்கு இந்திய அமைதிப்படை அளித்த பாதுகாப்பு விலக்கப்பட்ட நிலையில், ஸ்ரீலங்கா படையினர் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். இது என்ன மாற்றம் என்று வினவியபோது, பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றிருந்த லெப்.கர்னல் பிரார், "இப் பிரச்னையில் நாங்கள் தலையிடக்கூடாதென தில்லியிலிருந்து ஆணை வந்துள்ளது' என்றார்.

அதற்குமேல் ஹர்கிரத் சிங்கால் எதையும் செய்யமுடியவில்லை.

மாலை 5 மணிக்கு சிங்கள வீரர்கள் புலிகள் இருந்த அறையின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைய முயன்றபோது, 17 புலிகளும் சயனைட் குப்பிகளைக் கடித்தனர். சில விநாடிகளில் 12 பேர் உயிர்கள் பிரிந்தன. எஞ்சிய 5 பேரும் எப்படியோ பிழைத்துக் கொண்டனர். மறுநாள் மாலை 4 மணியளவில் 12 பேர் உடல்களும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டன' இவ்வாறு மாத்தையா குறிப்பிட்டிருந்தார்.

மாத்தையாவிடம் ஒப்படைக்கப்பட்ட தளபதிகள் புலேந்திரன், குமரப்பா மற்றும் முக்கிய உறுப்பினர்களான அப்துல்லா, ரகு, தவக்குமார், நளன், அன்பழகன், பழனி, ஆனந்தகுமார், ரெஜினால்ட், கரன், மிரேஷ் ஆகியோரின் உடல்களில் மிக மோசமான இரத்தக் காயங்களுடன் இருவர் உடல்கள் இருந்தன.

அவை குமரப்பா, புலேந்திரன், உடல்கள்தான். ஏராளமான காயங்கள். அவர்கள் உயிர்போன பின்னும் சிங்கள வெறியர்களின் ஆத்திரம் தீரவில்லை. கொத்திக் குதறிப் போட்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து மாத்தையா, பழ. நெடுமாறனிடம் மேலும் கூறியதாவது:

"12 தோழர்களின் உடல்களைப் பார்த்த எங்கள் தலைவர் பிரபாகரன் கலங்கினார். இளம் வயதிலிருந்து அவர்களோடு பழக்கம். துக்கம் மேலோங்க அது வெஞ்சினமாக மாறிற்று. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிதைக்கு எங்கள் தலைவர் தீ வைத்தபோது எங்கள் நெஞ்சங்களும் கனன்று எழுந்தன. இனி எங்களையும், எங்கள் மக்களையும் பாதுகாக்க இந்திய அமைதிப் படையை நம்பிப் பயனில்லை. நாங்கள் ஆயுதம் தூக்கினோம். 

எங்கள் பாதுகாப்புக்காகத்தான் இவ்வாறு செய்தோம். இரு அரசுகளும் எங்களை அழிப்பது என்று முடிவெடுத்தபோது நாங்கள் மானமுடன் வாழவும் சாகவும் ஒரே வழி போராட்டம்தான். அடிமைகளாகக் கொல்லப்படுவதைவிடப் போராடி இறப்பது எவ்வளவோ மேல் என உறுதி பூண்டோம்'' என்றார்.

ஜெயவர்த்தனா விரும்பியது இதைத்தான். இந்திரா அம்மையார் பயிற்சி கொடுத்தார். ஆயுதம் கொடுத்தார். எனவே இந்திராவை எதிரியாகக் கருதினார் ஜெயவர்த்தனா. ஆனால் பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் மாற்றுக் கருத்துக்கிடையே நட்பு பூண்டார்; ஒப்பந்தம் போட்டார். தான் செய்ய வேண்டிய வேலையை இந்தியப் படையிடம் தள்ளிவிட்டார். இந்திரா காந்தியின் மொழியில் சொல்வது என்றால் ஜெயவர்த்தனா என்கிற கிழட்டுக் குள்ளநரியின் ராஜதந்திரம் வென்றுவிட்டது.

இந்தச் சம்பவம் என்பது தற்செயல் அல்ல. "செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து இலங்கை கடற்படை, இந்தியக் கப்பல் படையுடன் சேர்ந்து ரோந்து சுற்றப் போகிறோம்' என்று தீட்சித், ஹர்கிரத் சிங்கிடம் செப்டம்பர் 11 அன்று கூறியதை இங்கே நினைவில் கொள்வது தகும்.

அதுமட்டுமின்றி 17 புலிகளை, சிங்களக் கடற்படையினர் சுற்றி வளைத்தபோது, அந்தச் செய்தியை ஹர்கிரத் சிங், தீட்சித்திடம் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அப்போது அவர் சிறிய விடுமுறையில் இந்தியாவில் இருந்தார். இதைக்கேட்டபோது தீட்சித் சொன்னது, "நான் கொழும்பு திரும்பியதும் இதுகுறித்து உயர்ந்த பட்ச நடவடிக்கை எடுக்கிறேன்' என்பதாகும்.

அக்டோபர் 3-ஆம் தேதி லெப். ஜெனரல் தீபிந்தர் சிங் சென்னையிலிருந்து கொழும்பு சென்றார். அங்கு அவரும் தூதுவர் தீட்சித்தும் ஜெயவர்த்தனாவைச் சந்தித்து வற்புறுத்தியும் எதுவும் நடக்கவில்லை. மாறாக, ஹர்கிரத் சிங்கை திருகோணமலைக்கு உடனே சென்று அங்கு பாதுகாப்பைப் பலப்படுத்த உத்தரவிட்டார்.

புலேந்திரன் கைதால் அங்கு பிரச்னை எழும் என்ற கணிப்பில் பிறந்த உத்தரவு அது. மறுநாள் தீபிந்தர் சிங் கொழும்பிலிருந்து திருகோணமலை வந்து ஹர்கிரத் சிங்கிடம், "இலங்கை அரசு 17 பேரையும் விடுவிக்க மறுக்கிறது' என்று கூறியதாக அவர் தனது நூலில் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, இதே சம்பவத்தை தீட்சித் தான் எழுதிய நூலில் வேறு விதமாக எழுதியிருப்பதாக ஹர்கிரத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தீட்சித் கூறியிருப்பதாவது, "பலாலி விமான தளத்தில் போராளிகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கச் சொன்னதாகவும், அக்டோபர் 2,3-ல் இதுகுறித்து மேஜர் எதுவும் பேசவில்லை என்றும், அன்றாடம் எழுதும் ‘ரஹழ் க்ண்ஹழ்ஹ்’-ல் இதுகுறித்து எழுதவில்லை' என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே தீபிந்தர் சிங் அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டு, போராளிகளை எக்காரணம் கொண்டும் கொழும்புக்கு அனுப்பக் கூடாது என்று சொன்னதாகவும், தான் தில்லியில் இருப்பதாகவும் தெரிவித்ததாக அந்நூலில் எழுதியுள்ளதாக ஹர்கிரத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகார் குறித்து ஹர்கிரத் சிங் தனது நூலில் மேலும் கூறுகையில், "ராஜதந்திர அலுவல் முறையில் ஏற்பட்ட தோல்வியால் இவ்வாறு திசை திருப்பப்படுகிறது. 17 போராளிகளைப் பாதுகாக்கவில்லை என்பது சரியல்ல. நான் எனது மேல் அதிகாரியிடம் போராளிகள் கொழும்பு செல்வதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினேன். அதுமட்டுமின்றி இந்தியத் தூதுவர் உடனே கொழும்பு சென்று, இலங்கை அரசுத் தரப்பில், உயர்மட்டத்தில் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட தகவல்களில் முரண்பாடுகள் உண்டென்றாலும் ஈழத்தமிழர் பிரச்னையில் "இந்திய மேலிடத்தின்' பொதுவான அணுகுமுறை என்னவென்பது இதன்மூலம் புரிய வரும்.

எம்.ஜி.ஆர். வெளியிட்ட அஞ்சலி!

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஈழத் தமிழ் மக்களின் போராட்டங்களைப் பற்றிய அக்கறையுடன் இருந்தார் என்பதற்கு ஓர் உதாரணம் திலீபன் மறைவுக்கு அவர், விடுத்த இரங்கல் செய்தியாகும்.

அவரது இரங்கல் செய்தியில், "திலீபன் அவர்கள் இந்திய அரசுக்கு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து பட்டினிப் போர் தொடங்கி 12 நாட்கள் ஒரு சொட்டு நீர் கூட குடிக்காமல் 26.9.87-இல் மடிந்து போனார் என்பதை அறிந்து வருந்துகிறேன். எனது சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவிக்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று புலேந்திரன், குமரப்பா மரணத்துக்கும் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து அறிக்கை வெளியிட்டார். அவ்வறிக்கையில், ""தங்களால் கைது செய்யப்பட்ட 17 விடுதலைப் புலிகளையும் இலங்கைக் கடற்படை இந்திய அமைதிப் படையிடம் ஒப்படைத்து இருக்குமானால் அவர்களுள் 12 பேர் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்கள். வன்முறைகளும் வெடித்து இருக்காது.

இந்திய-இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் இடைக்கால அரசு ஒன்று ஏற்பட வேண்டிய நேரத்தில் வன்முறைகள் வெடித்ததும், அதில் இந்திய அமைதிப் படையும் விடுதலைப் புலிகளும் இறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதும் கவலைக்குரியது.

இந்தக் கடினமான பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு காணத் தொடர்ந்து முயற்சி மேற்கொள்வேன். தமிழக அரசு இதுபற்றி எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு தருமாறு தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்'' (11.10.1987 செய்தித்தாள்கள்) என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்த அறிக்கை இந்திய அரசைச் சங்கடத்தில் ஆழ்த்தியது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பன்னிரண்டுகோடி மக்களுக்கு ஒரு தலைவர் அது எங்கள் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்தான்!
»  'எங்கள் கனவு! எங்கள் பள்ளி !!'. ஊ. ஒ. தொ. பள்ளி, வயலூர் அகரம்.
»  'எங்கள் கனவு! எங்கள் பள்ளி !!'. ஊ. ஒ. தொ. பள்ளி, வயலூர் அகரம்.
» 72விநாடிகளுக்குள் சிறிலங்கா மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வைத்த மேற்குலக நாடுகள்
» ரோபோ வந்தாச்சு.... ஆடைகளை துவைக்கும், அயர்ன் பண்ணும், அடுக்கி வைக்கும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum