TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

Post by அருள் Mon Sep 30, 2013 9:33 pm

எனக்குத் திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு சிறுநீரை அடக்க முடியாத நிலைஉண்டாகி விட்டது. சிரித்தால், தும்மினால், இருமினால் கூட சிறுநீர்கசிகிறது. சிகிச்சை உண்டா? - பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

நிறைய பெண்களுக்கு இப்பிரச்சினை இருக்கிறது.பிரதான காரணம் இரத்த சோகை. உலக அளவில் இந்தியப் பெண்கள்தான் இரத்தசோகையால் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சிக்குறிப்பு ஒன்று. வெளி வேலை, வீட்டுப் பொறுப்பு என இரட்டைச் சுமைசுமக்கிற பெண்கள் பெரும்பாலும் அதற்கேற்ற சரிவிகித உணவை உட்கொள்வதில்லை.மீந்து போன உணவு, முதல் நாள் சமைத்ததை சாப்பிடுவது என உடம்பைப்பாழாக்கிக் கொள்கிறார்கள். இரத்த சோகையைக் குணப்பபடுத்திக் கொண்டாலேஇப்பிரச்சினை சரியாகும். ஈஸ்னோஃபிலியா இருந்தாலும் இப்படி இருக்கலாம்.அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை தவிர சிறுநீரகத்தசை நார்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கும் இப்படி இருக்கலாம். எனவேஉங்களுக்கு எதனால் இப்படியிருக்கிறது என்பதை நேரில் பார்த்துதான் சரியானசிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.

அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

Post by அருள் Mon Sep 30, 2013 9:34 pm

என் வயது 26. திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. புது மணப் பெண்ணாக வந்தஎனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. என் கணவர் என்னை நெருங்குவதே இல்லை. காரணம் எனது சிறுத்த மார்பகங்கள். அவரது கோபம் வேறு விஷயங்களில் வெடிக்கிறது.முதலிரவோடு முடிந்து போன என் தாம்பத்திய வாழ்க்கையை மலர வைக்க முடியுமா? மார்பக வளர்ச்சிக்கு சிகிச்சை ஏதும் உண்டா? - டி.சுஜா, திருச்சி.

மனைவியையே ஒதுக்கும் அளவுக்குஇது அப்படியொன்றும் பெரிய பிரச்சினையில்லை. உங்கள் கணவரின் காட்டுமிராண்டித்தனமான மனப்பான்மையின் வெளிப்பாடே இது. மார்பகங்களின் அளவு என்பதுபரம்பரை வாகு, உடலமைப்பு, சாப்பிடுகிறஉணவு எனப் பல விஷயங்களைப் பொறுத்துஅமைவது. நாட்டு மருந்துக் கடைகளில் அமுக்கராக் கிழங்கு சூரணம் என்றுகிடைக்கும். அதை வாங்கி நெய்யில் குழைத்து தினம் சாப்பிடவும். பொட்டுக்கடலையைப்பொடித்து, சர்க்கரையும், சூடானநெய்யும் சேர்த்து தினம் மூன்று வேளைகள் கொஞ்சம் சாப்பிடவும். அதிலுள்ள ஈஸ்ட்மார்பக வளர்ச்சிக்கு உதவும். திராட்சை சாப்பிடுவதை தினசரி பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். பாதாம், அக்ரூட், பேரிச்சம்பழம்மாதிரி உலர் பழங்களை தினம் கொஞ்சம் சாப்பிடவும். நல்லகெட்டியான தயிர் தினம் ஒரு கப் சாப்பிடவும். இரவில் பால் ஒரு டம்ளர் குடிக்கவும்.முட்டையை அதன் மஞ்சள் கருவுடன் சேர்த்து சாப்பிடவும். வைட்டமின்ஈ கிரிம் என மருந்துக் கடைகளில் கேட்டு வாங்கி, மார்பகங்களில் கீழிருந்துமேலாகத் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊறிக் குளிக்கவும். இதெல்லாம்உங்கள் திருப்திக்காக. கணவரிடம் பக்குவமாகப் பேசுங்கள். மார்பக அழகோ, அளவோகாலத்துக்கும் அப்படியே இருக்கப் போவதில்லை. நம் உடலில் உள்ள வியர்வைசுரப்பியை மாதிரி அதுவும் ஒரு வகை சுரப்பி அவ்வளவுதான். அதைப் பெரிதுபடுத்தி நிகழ் கால சந்தோஷத்தை மறக்க வேண்டாம் எனப் பேசுங்கள்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

Post by அருள் Mon Sep 30, 2013 9:34 pm

எனக்குத் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. என் வயது 27. என் கணவருக்கு விதைப்பை ஒன்றுமட்டும் உள்ளது. முதலில் இரண்டுமேஇல்லையாம். பிறகு ஆபரேஷன் செய்து ஒன்று மட்டும் உள்ளது. மற்ற ஒன்று அந்த இடத்தில் இல்லை.மருத்துவர்களோ குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். சித்த மருத்துவத்தில் எனக்குக் குழந்தை பாக்கியம் உண்டாக்க வழி ஏதேனும் உண்டா? -எஸ். கவிதா, ஊர் வெளியிட விரும்பவில்லை.

உங்கள் கணவருக்குஇரண்டு விதைப் பைகளுமே இருந்து, அவை இரண்டுமே இறங்கியிருந்தால் அல்லதுஒன்று மேலும், ஒன்று கீழும் இருந்திருந்தாலும் கூட குழந்தை பிறக்க வைக்கஏதேனும் முயற்சிகள் செய்யலாம். ஆனால் அவருக்கு இரண்டுமே இல்லாமலிருந்து, பிறகுஒன்று இறக்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதனால்அவருக்கு உங்களைக் கருத்தரிக்க வைக்கிற ஆற்றல் இருக்காது. செயற்கை மருத்துவமுறைகளும் பலனளிக்கும் என்று சொல்வதற்கில்லை. மன உளைச்சலும், பண விரயமும்தான்அதில் அதிகம். எனவே நீங்கள் இன்னும் காலம் தாழ்த்தாமல் உடனே ஒருகுழந்தையை தத்தெடுத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்குங்கள். அதிலும் உறவுக்குள்தத்து எடுக்க வேண்டாம். அது பின்னாளில் உங்களுக்குப் பல பிரச்சினைகளைத்தர வாய்ப்புண்டு. வெளியிலிருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து அதற்குமுகவரியும், வாழ்க்கையும் கொடுங்கள்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

Post by அருள் Mon Sep 30, 2013 9:36 pm

என் வயது 29. எனக்கு இரண்டு மார்பகங்களும் பெரியதாக உள்ளன. நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கிற கொடி வேலித் தைலம் உபயோகித்தால் இப்பிரச்சினைசரியாகும் என்கிறார்களே, அதுசரியா? மேலும் எனக்குக் கல்யாணமாகி, குழந்தை இல்லை. குழந்தைஉண்டானால் இப்பிரச்சினையால் பால் சுரப்புக்கு ஏதேனும் பிரச்சினைகள் வருமா? -பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி மார்பகங்களின்அமைப்பு என்பது பரம்பரைத் தன்மை, உடல்வாகு போன்றவற்றைப் பொறுத்தது.அதைப் பற்றிய வருத்தம் உங்களுக்கு வேண்டாம். குழந்தை உண்டாகி, அதற்குத்தாய்ப்பால் கொடுத்தாலே, இப்பிரச்சினை ஓரளவு சரியாகும். பல பெண்களும்பயப்படுகிற மாதிரி மார்பக அளவுக்கும், தாய்ப்பால்சுரப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மார்பக அளவைப் பொறுத்துதாய்ப்பாலின் சுரப்பு கூடவோ, குறையவோசெய்யாது. தினம் குளிப்பதற்கு சோப்பைத் தவிர்த்து, பயத்தம் பருப்புமாவைத் தேய்த்துக் குளித்து வாருங்கள். அதற்கு மார்பக சதைகளை ஓரளவுக்குறைக்கிற சக்தி உண்டு. மற்றபடி உடற்பயிற்சி, யோகாபோன்றவை மூலம்தான் இப்படிப்பட்ட பிரச்சினைகளை சரியாக்கமுடியும். தகுந்த யோகாசன நிபுணரிடம் கலந்தாலோசித்து சரியான ஆசனங்களைச் செய்யஆரம்பியுங்கள். தினம் மூன்று கிலோமீட்டர் தூரம் நடப்பதும் நல்லது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

Post by அருள் Mon Sep 30, 2013 9:37 pm

என்வயது 40. குழந்தை பாக்கியம் இல்லை. மூன்று வருடங்களுக்கு முன் என்கர்ப்பப்பையில் கட்டி வந்து கர்ப்பப்பையை அகற்றிவிட்டோம். என் கணவருக்கு வயது 55. இந்த வயதிலும் என்னுடன் உறவு கொள்ள விரும்புகிறார். அதனால் என் உடல் நிலை பாதிக்குமா? -வி. காளியம்மா, உத்தமசோழபுரம்.

கர்ப்பப்பையை அகற்றி விட்டதால் இனி உங்களுக்குக்குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பு இருக்காது. மற்றபடி நீங்கள், உங்கள்கணவருடன் விரும்புகிற வரை உறவு கொள்ளலாம். செக்ஸ் உறவு என்பது தம்பதியருக்குள்உண்டாகிற இயற்கையான எதிர்பார்ப்பு தான். அதற்கு வயதோ, வேறு விஷயங்களோதடையாக இருக்கத் தேவையில்லை. மனசுதான் முக்கியம். உங்கள் கணவர் மனத்தளவில்இளமையாகவே இருப்பதாகத் தெரிகிறது. எனவே உறவுக்கு நீங்கள் உடன்படுவதில்தவறில்லை. இது உங்கள் இருவரின் உடல் நலத்தையும் எந்த வகையிலும்பாதிக்காது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

Post by அருள் Mon Sep 30, 2013 9:38 pm

என் வயது 24. திருமணமாகி மூன்றரை வருடங்கள் ஆகிறது. மாதவிடாய் முறையாகஇல்லை. எல்லா சோதனைகளும் செய்தாகி விட்டது. மருந்துகள் எடுத்துக் கொண்டேன். சில மாதங்களுக்கு முன் இரண்டு மாதங்கள் சரியாக 28 நாட்களில் மாதவிலக்கு வந்தது.மருத்துவர் குழந்தை நிற்க மருந்து கொடுத்தார். அந்த மாதமே கருவுற்றேன். இரண்டு மாதங்களில் அபார்ஷன் ஆகிவிட்டது. ஒரு முறைடி.என்.சியும் செய்து விட்டேன். ஹார்மோன் டெஸ்ட் நார்மல். மீண்டும் நான்குமாதங்களாக மாதவிலக்கு வரவில்லை. மாத விடாய் சரியாகி, எனக்குக் குழந்தை பாக்கியம்கிடைக்குமா? -சரஸ்வதி, பாண்டிச்சேரி.

நீங்கள் குறிப்பிட்டுள்ளவிவரங்களை வைத்துப் பார்க்கும் போது உங்களுக்கு சினை முட்டைசினைக்கும் தன்மை குறைவாக இருப்பது தெரிகிறது. மாதவிடாய் முறையாக சிலமருந்துகளை உட்கொள்ள வேண்டும். கொள்ளு வேக வைத்த தண்ணீரை வாரம் இரண்டு முறைகள்தவறாமல் குடிக்கவும். வாழைத் தண்டு வேக வைத்த தண்ணீரில் கொஞ்சம் தனியாதூளும், கொஞ்சம்சீரகத் தூளும் சேர்த்துக் குடிக்கலாம். பயத்தம் பருப்பும், வாழைத்தண்டும் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடவும். சமையலில் புதினாஅடிக்கடி சேர்ப்பதுடன், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், தனியா தினமுமேசேர்த்துக் கொள்ளவும். தினம் ஒரு பெரிய நெல்லிக் காய் சாப்பிடவும். மாதவிலக்குஒழுங்காக வந்தால், முதல் மூன்று நாட்கள் கொள்ளு வேக வைத்த தண்ணீரைஇரண்டு வேளைகள் கட்டாயம் குடிக்க வேண் டும். சினை முட்டை வந்தால்தான்மாதவிலக்கு வரும். இதற்கிடையில் உங்கள் கணவருக்கும் விந்தணுச் சோதனைசெய்யவும். அவருக்கேதும் குறைபாடுகள் இருந்தாலும்கூட அபார்ஷன் ஆகும். மேற்சொன்னவற்றைஎல்லாம் தாமதிக்காமல் செய்யவும். பயம் வேண்டாம். சரியாகும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

Post by அருள் Mon Sep 30, 2013 9:40 pm

என் வயது 18. வயதுக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிறது. வயதுக்குவந்த பிறகு மூன்று, நான்குமாதங்களுக்கு மாதவிலக்குமுறையாக வந்தது. அதன் பிறகு மூன்று முதல் ஆறு மாதங்கள் கழித்து வரும். ஆனால் பதினைந்து நாட்கள்முதல் ஒரு மாதம் வரை இரத்தப் போக்கு இருக்கும். அதன் பிறகு எனக்கு எழுந்திருக்கக் கூட முடியாத அளவுக்கு உடம்பு மோசமாகி விடும். பிறகுமருத்துவமனைக்கு அழைத்துச் சென்று போக்கை நிறுத்துவார்கள். அதன் பிறகு ஒன்றிரண்டு மாதங்கள் சரியாக வரும். மீண்டும் ஐந்தாறு மாதங்களுக்கு வராது.இப்போதைக்கு எனக்கு விலக்கு வந்து ஏழு, எட்டு மாதங்கள்ஆகிறது. மாத விடாய் வரும் என நினைத்தாலே பயமாக இருக்கிறது. இதற்காக நான் பார்க்காத வைத்தியமில்லை. இது இப்படியேதான் தொடருமா? சிகிச்சையே கிடையாதா? -பெயர் வெளியிட விரும்பாத பெரம்பலூர் வாசகி.

நீங்கள் முதல்வேலையாக பெல்விக் ஸ்கேன் எடுக்க வேண்டும். அதில் எந்தத் தவறும் இல்லை.கர்ப்பப்பையில் கட்டியோ, புண்களோ உள்ளனவா, கர்ப்பப்பை எப்படியிருக்கிறதுஎன்பதைத் தெரிந்து கொள்ளவே இந்த ஸ்கேன். மனித உடலிலிருந்துஇரத்தமானது எந்த வழியிலும் அளவுக்கதிகமாக வெளியேறக் கூடாது. இதுஇரத்த சோகையில் கொண்டு போய் விடும். மாதவிடாயின் போதான உதிரப் போக்கும் அப்படித்தான்.நீங்கள் உடனடியாக மருத்துவரைப் பாருங்கள். எதைத் தின்றால் பித்தம்தெளியும் என்ற நிலையில் மருத்துவர்களை மாற்றிக் கொண்டே இருக்காதீர்கள்.ஒரே மருத்துவரிடம் பொறுமையாக சிகிச்சையைத் தொடருங்கள். கர்ப்பப்பைதொடர்பான பிரச்சினைகள் உடனடியாக சரியாகாது. கொஞ்சம் நாட்கள் ஆகும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

Post by அருள் Mon Sep 30, 2013 9:41 pm

என் மகளுக்கு வயது எட்டுதான் ஆகிறது. அதற்குள் மார்பகங்கள் டீன் ஏஜ் பெண்ணுக்குள்ள மாதிரியான வளர்ச்சியுடன் காணப்படுகிறது. தர்மசங்கடமாகஇருக்கிறது. மற்றவர்கள் பார்வையில் இருந்து அவளைக் காப்பாற்றுவதும், சிலரதுகேள்விக்கு பதில் சொல்வதும் எனக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அவளது மார்பக வளர்ச்சியைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தில் ஏதேனும்சிகிச்சை உண்டா? -டி. ஆனந்தி, சென்னை.

நீங்கள் கவலைப்படுகிறஅளவுக்கு இது பெரிய பிரச்சினை இல்லை. உங்கள் மகளின் உடலில் ஹார்மோன்வளர்ச்சி வேகமாக இருக்கிறது. பெண்கள் பூப்பெய்தும் பருவம் இன்னும் நான்கைந்துஆண்டுகளில் ஏழு, எட்டு வயதாகக் குறையும் என்று அமெரிக்க ஆராய்ச்சிஒன்று தெரிவிக்கிறது. பால்ய பருவம் என்பது குறைந்து வருவதன் அறிகுறியேஇது. சாப்பாடு, அவர்களது செயல்பாடுகள் எனப் பல விஷயங்களால் இப்படிநடக்கலாம். உடல் வளர்ச்சியை வைத்துப் பார்க்கும் போது உங்கள் மகளும் சீக்கிரமேவயதுக்கு வரலாம். அவளது மார்பக வளர்ச்சியைக் குறைக்க நினைக்காதீர்கள்.அது இயற்கை. அதை ஒரு பெரிய விஷயமாக்கி அவளிடம் பேசாதீர்கள்.அதே சமயம் பிறரது பார்வையிலிருந்து தற்காத்துக் கொள்ள நாகரீகமான, உடலைமறைக்கும் உடைகளை அணியக் கற்றுக் கொடுங்கள்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

Post by அருள் Mon Sep 30, 2013 9:42 pm

என் வயது 21. நான் நல்ல நிறமாக இருப்பேன். என் முகத்தில் உதடுகளுக்கு மேல்ரோம வளர்ச்சி அதிகமிருக்கிறது. பார்ப்பவர்கள் எல்லாம் கிண்டல் செய்கிறார்கள். மஞ்சள் உபயோகித்தும் பலனில்லை. வேறு என்ன தீர்வு? -பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

உங்களுக்கு மாதவிலக்குசுழற்சி சரியாக இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஹார்மோன் கோளாறுகள்இருந்தாலும் இப்படி ரோம வளர்ச்சி இருக்கும். ஒரு வெற்றிலை, ஐந்து மிளகு, மூன்றுபற்கள் பூண்டு சேர்த்து வாரம் ஒரு முறை வெறும் வயிற்றில் காலையில்சாப்பிட்டு வரவும். இது உங்கள் மாத விலக்கு சுழற்சியைம் சரியாக்கும்.ரோம வளர்ச்சியையும் குறைக்கும். சிலருக்குத் திருமணத்துக்கு முன்புவரை இருக்கிற ரோம வளர்ச்சி, திருமணத்துக்குப் பிறகு உடலில் நிகழ்கிற ஹார்மோன் மாறுதல்களால் குறையும். உங்களுக்கும் அப்படி நடக்கலாம். பயத்தம் பருப்புமற்றும் கஸ்தூரி மஞ்சளை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். சாதாரணமஞ்சள் மாதிரி இல்லாமல் மரத் துண்டு மாதிரி இருக்கும்) அரைத்து முகத்தில்தடவி, சிறிதுநேரம் காய விட்டுக் கழுவவும். வாரம் மூன்று முறைகள் இப்படிச்செய்யவும். மீதி நாட்களில் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சம் சாறு கலந்துமுகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்.கூடவே திரெடிங் செய்து வரலாம். இவையெல்லாம் ரோம வளர்ச்சியைப் படிப்படியாகக் கட்டுப்படுத்தும். கவலை வேண்டாம்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

Post by அருள் Mon Sep 30, 2013 9:43 pm

நான் ரொம்பவும் கட்டுப்பாடான குடும்பத்தில் வளர்ந்தவள். சமீபத்தில்தான்எனக்குத் திருமணமானது. என் கணவர் உறவு கொள்கிற நேரத்தில் ஆபாசமானபுத்தகங்களையும், படங்களையும்காட்டி அதிலுள்ளது போல என்னைசம்மதிக்கக் கட்டாயப்படுத்துகிறார். என் மனம் அவற்றுக் கெல்லாம் இடம் தர மறுக்கிறது. இதனால் எங்கள்தாம்பத்திய வாழ்வில் விரிசல் விழுமோ என்று கூட பயப்படுகிறேன். தீர்வு சொல்லுங்கள். -எம்.எஃப்., திருச்சி.

தன் மனைவியைத்திருப்திப்படுத்த முடியுமோ, முடியாதோ என்ற பயத்திலும், தன் ஆண்மையைமனைவிக்கு நிரூபிக்கவும் நினைத்துப் பல ஆண்கள் இப்படிப்பட்ட செயல்களில்ஈடுபடுகிறார்கள். இப்படியெல்லாம் செய்தால்தான் அவர்களுக்கு உறவு சாத்தியம்என்று தவறான ஒரு அபிப்ராயம் உண்டு. கணவர் நல்ல மன நிலையில் இருக்கிறபோது இது பற்றி அவரிடம் பக்குவமாகப் பேசுங்கள். இப்படிப்பட்ட விஷயங்கள்இல்லாமலும் அவரால் உங்களுடன் உறவில் நல்லபடியாக ஈடுபட முடியும் என்றுநம்பிக்கை கொடுங்கள். தேவைப்பட்டால் அவரை கவுன்சலிங் அழைத்துச் செல்லலாம்.அவர்கள் உங்கள் கணவரின் அனாவசிய குழப்பங்களையும், பயத்தையும் போக்கி, சகஜமாகமாற்றுவார்கள். பொறுமையாகத்தான் இப்பிரச்சினையைக் கையாளவேண்டும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

Post by அருள் Mon Sep 30, 2013 9:43 pm

எனக்குத் திருமணமாகி எட்டு மாதங்கள் ஆகிறது. இன்னும் குழந்தை தங்கவில்லை.மாதவிலக்கு நாட்கள் தவிர மற்ற எல்லா நாட்களும் உறவு கொண்டும் கருதங்குவதில்லை. உறவு முடிந்ததும், விந்தணுக்கள்உடனே வெளியேறி விடுகின்றன. அக்கம்பக்கத்தில் எல்லாரும் துக்கம் விசாரிக்க ஆரம் பித்துவிட்டார்கள். என்னகோளாறாக இருக்கும்? என்னசிகிச்சை வேண்டும்? -சி. மங்கையர்க்கரசி, ஆத்தூர்.

பொதுவாகத் திருமணமாகி, ஒன்றிரண்டு வருடங்கள் வரை குழந்தை இல்லாமல் இருப்பது பெரிய விஷயமில்லை. அதன்பிறகும் கரு தங்கா விட்டால்தான் மருத்துவப் பரிசோதனை அவசியம். அதற்குள்கிளம்புகிற அக்கம் பக்கத்தாரது விமர்சனங்களைப் பொருட்படுத்தாதீர்கள்.விஞ்ஞான ரிதியாகப் பார்த்தால் விந்தணு என்பது வெளியேறுவதுஇயற்கை. மனித உடலின் மிகச் சிறிய செல் ஆணின் விந்தணு. உறவின் போதுசிலதுதான் கருக் குழாய் வழியே கருப்பைக்குப் போகும். சிலது போனாலும், போகாவிட்டாலும் வெளியேறவே செய்யும். எனவே இதற்கும், நீங்கள் கருத்தரிக்காததற்கும்தொடர்பில்லை. அரைகுறை விஷயங்களைக் கேள்விப்பட்டு அனாவசியமாகக்குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். கருத்தரிக்க தினசரி உறவு என்பதும்அனாவசியம். மாதத்தின் எல்லா நாட்களிலும் பெண்ணின் உடலில் கருமுட்டைஉருவாவதில்லை. மாதவிலக்கானதிலிருந்து முதல் பத்து நாட்களைத் தவிர்த்து, அடுத்தபத்து நாட்களில் உறவு கொள்ளலாம். அதற்கடுத்த பத்து நாட்களையும்தவிர்க்கலாம். இடைப்பட்ட நாட்கள்தான் கருத்தரிக்க உகந்தவை. தினசரிஉறவு கொண்டால்தான், அதுவும் பல முறைகள் உறவில் ஈடுபட்டால்தான் கருத்தரிக்கும்போல என்பது பலரது தவறான அபிப்ராயம். நீங்கள் இன்னும் ஆறு மாதங்கள்காத்திருந்து பார்க்கலாம். அதன் பிறகும் கரு தங்கா விட்டால் மருத்துவரைக்கலந்தாலோசிக்கவும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

Post by அருள் Mon Sep 30, 2013 9:45 pm

என் வயது 26. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்தது.சுகப்பிரசவம். அதன் பிறகு என் கணவர் என்னை நெருங்குவதே இல்லை. உறவின் போது பிறப்புறுப்பு ரொம்பவும் தளர்ந்து விட்டதாகக் காரணம் சொல்கிறார்.எனக்கு மட்டும்தான் இப்படியா? இதைசரிசெய்ய வாய்ப்பேஇல்லையா? - எல்.டி., சென்னை.

பெண்ணின் உடம்புஎன்பது கர்ப்பம் தரிப்பதற்கும், குழந்தை பெறுவதற்கும் முன்பிருந்த அதேநிலையில் காலத்துக்கும் இருக்காது. பெண்பித்தர்கள்தான் இப்படியெல்லாம் காரணம்சொல்லி மனைவியை விட்டு விலகியிருப்பார்கள். தன் பெண் பித்தை மறைக்க இப்படிமனைவி மேல் குறை சொல்கிற கணவர்களில் உங்களவரும் ஒருவராக இருக்கிறார்.அந்தக் காலத்தில் எல்லாம் பெரும் பாலும் சுகப்பிரசவம்தான். எல்லாப்பெண்களுக்கும் இந்தத் தளர்வு இருக்கும். ஆனால் இதையெல்லாம் காரணம் காட்டிமனைவியை விட்டு, விலகியதாக நாம் எந்த ஆணைப் பற்றியும் கேள்விப் பட்டதில்லை.இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள். பிரசவித்த பெண்கள் எல்லாரும் சந்திக்கிறபிரச்சினைதான் இது. உங்களுக்குப் பிரசவம் பார்த்த மருத்துவரை அணுகுங்கள்.அவர் உங்களுக்கான விவரங்களை விளக்கமாகச் சொல்வார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

Post by அருள் Mon Sep 30, 2013 9:47 pm

என் மனைவிக்கு பிரபல டாக்டரிடம் சிசேரியன் செய்த பிறகு, காப்பர் டி போடப்பட்டது. அதுபோட்டு ஒரே மாதத்தில் உள்ளே போய் விட்டது. அது கருப்பையின் ஒரு ஓரத்தில் இருப்பதாகச் சொல்லி மறுமுறை குழந்தை பிறக்கும் போது எடுத்துவிடலாம் என்றார்கள். இரண்டு ஆண்டுகள் ஆகிறது. வேறு ஏதேனும் பாதிப்பு உண்டா? இதனால் கருத்தரிக்க ஏதேனும் கால தாமதம் ஆகுமா? -எஸ். கண்ணன், குலமங்கலம்.

முதல் வேலையாகஉங்கள் மனைவிக்கு ஸ்கேன் செய்யுங்கள். அதன் மூலம்தான் அது எங்கே இருக்கிறதுஎன சரியாகத் தெரிந்து கொள்ளமுடியும். வெறும் கருவிகளைக் கொண்டே எடுத்துவிட முடியுமா அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படுமா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். என்ன ஆனாலும் இப்படி காப்பர் டி உள்ளுக்குள் புதைந்திருக்கக்கூடாது. அது எந்த நிலையில், எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப்பொறுத்துதான்உங்கள் மனைவி கருத்தரித்து, சிசேரியன் செய்கிற போது எடுக்கமுடியுமாஎன்பதையும் முடிவுசெய்ய முடியும். காப்பர் டி ஏடாகூடமான இடத்தில்இருக்கிற பட்சத்தில்உங்கள் மனைவி கருத்தரிப்பதில் பிரச்சினைகள் வரலாம்.அப்படியே கருத்தரித்தாலும், காப்பர்டி இருக்கிற நிலையின் காரண மாக, குழந்தைஉருவாகிற வடிவமே மாறிப் போகக் கூடும். குழந்தை வளர்ந்து சுழலும் போதுஅதைக் குத்தலாம். இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளதால், உடனடியாகஸ்கேன் செய்து அதை அகற்றி விடுவது நல்லது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

Post by அருள் Mon Sep 30, 2013 9:48 pm

எனக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. கணவர் அன்பானவர். உறவுக்கு என்னை நெருங்கியதுமே அவருக்கு விந்து வெளியேறி விடுகிறது. பிறகு அவ்வளவுதான்.திருப்தியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். குழந்தையும் இல்லை. இந்தப் பிரச்சினை சரியாகி, எனக்கு சராசரி தாம்பத்திய வாழ்க்கைகிடைக்குமா? குழந்தை பாக்கியம் கிடைக்குமா? -விஜயலட்சுமி, நாகர்கோயில்.

நிறைய ஆண்களிடம் காணப்படுகிறபிரச்சினைதான் இது. உடலளவில் அவர்களுக்குக் குறையே இருக்காது. மனத்தளவில்தன் மனைவியைத் தன்னால் திருப்திப்படுத்த முடியுமா என்கிற கவலையின்விளைவாகவே இப்படி இருப்பார்கள். இவர்களுக்குத் தேவை கவுன்சலிங். தாழ்வுமனப்பான்மையை விரட்ட, முதலில் அவரை ஒரு சைக்காலஜிஸ்ட்டிடம் (சைக்யாட்ரிஸ்ட்அல்ல) அழைத்துச் செல்லுங்கள். அவருக்கு என்ன பிரச்சினை எனத்தெரிந்து, அதற்கேற்பகவுன்சலிங் கொடுப்பார்கள். பிறகு மருத்துவ சிகிச்சைதேவைப்பட்டால், அதற்கான மருத்துவரையும், மருந்துகளையும் பரிந்துரைப்பார்கள். இது முதல் கட்டசிகிச்சை. அடுத்துஉங்கள் கணவருக்கு விந்தணுச் சோதனை செய்ய வேண்டும். அதில் உயிரணுக்கள்எப்படியிருக்கின்றன எனத் தெரிந்துகொண்டு, அதற்கேற்பசிகிச்சை அளித்தால் கருத்தரிக்க முடியும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

Post by அருள் Mon Sep 30, 2013 9:49 pm

என் வயது 22. திருமணமாகி 13 மாதங்கள் ஆகின்றன. குழந்தை பிறந்துநான்கு மாதங்கள் ஆகின்றன. ஒரு பக்க மார்பில் குழந்தை சரியாகப் பால்குடிக்காததால், அந்தப் பக்க மார்பகம் சிறியதாகி விட்டது. தாய்ப்பால் சுரப்பும்எனக்குக் குறைவாக இருக்கிறது. சிறியதாகி விட்ட மார்பகத்தை சரி செய்யவும், தாய்ப்பால் அதிகம் சுரக்கவும் ஆலோசனைகள் சொல்வீர்களா? -ஏ. சாந்தி, ஊர் வெளியிட விரும்பவில்லை.

நீங்கள் அசைவம்சாப்பிடுகிறவராக இருந்தால் பால் சுறா அதிகம் சேர்த்துக் கொள்ளவும். வாரம்ஒரு முறை மதியத்தில் ஆட்டுக் கறியும், மீனும்சாப்பிடவும். சைவம் சாப்பிடுகிறவராக இருந்தால், பிஞ்சுக்காய்கறிகள் நிறைய சேர்த்துக் கொள்ளவும்.கறிவேப்பிலை பவுடர் கால் டீஸ்ன் தினமும் சாதத்தில் சேர்த்துப் பிசைந்துசாப்பிடவும். தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடவும். மூன்று டம்ளர் பால் குடிக்கவும்.மார்பகங்களின் அளவு பெரிதாகவோ, சிறிதாகவோ இருப்பது என்பது இயற்கை.அதை மருந்து, மாத்திரைகளால் நீங்கள் எது வும் செய்ய முடியாது. தாய்ப்பால்ஊட்டும் காலங்களில் இப்படி இருப்பவை, பிறகுஒரு கட்டத்துக்குப் பிறகு தாய்ப் பாலை நிறுத்திய பிறகு சம அளவுக்குவரலாம். கவலை வேண்டாம்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

Post by அருள் Mon Sep 30, 2013 9:50 pm

என்வயது 36.காப்பர்டி போட்டு ஐந்து வருடங்கள் ஆகின்றன. சமீபத்தில் வேறு ஒருபிரச்சினைக்காக மருத்துவரை சந்தித்த போது, காப்பர் டி உள்ளேபுதைந்திருக்கிற மாதிரித் தெரிவதாகச் சொன்னார். அதை அறுவைசெய்துதான் எடுக்க முடியுமா? வேறு வழி உண்டா? இது ஆபத்தானதா? எத்தனை வருடங்களுக்கொருமுறை காப்பர்டியை மாற்ற வேண்டும்? -சி. ஈஸ்வாp, அந்தியூர்.

காப்பர்டியில்நிறைய வகைகள் உள்ளன. தரத்தைப் பொறுத்து, அவற்றை வருடத் திற்கொரு முறையோ அல்லதுஇரண்டு, மூன்று வருடங்களுக்கொரு முறையோ மாற்றிக்கொள்ளலாம். காப்பர் டி போட்டுக் கொண்ட சில பெண்களுக்கு இரத்தப் போக்கு திடீரென அதிகமிருக்கும். அப்படியிருந்தால், அதை எடுத்து விட்டு, சில நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடி போடுவார்கள். நீங்கள் பல வருடங்களாக அதைக் கண்டுகொள்ளாமலேயே விட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது.ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் அது இருக்கும் இடம் சரியாகத் தெரியும். மேலோட்டமாக இருந்தால், அறுவை சிகிச்சையின்றி, அதை எடுத்து விடுவார்கள். ரொம்பவும் ஆழமாக இருந்தால் அறுவை தேவைப் படலாம். அதை உங்களைப் பரிசோதித்தமருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும். மருத்துவரிடம் தாமதிக்காமல் ஆலோசனை பெறுங்கள். இதை எடுத்து விட்டு, மூன்று மாதங்கள் இடைவெளி தரவும். பிறகு உங்கள் உடல்நிலையைப் பொறுத்து மீண்டும் வேறு பொருத்திக்கொள்ளலாம். எல்லாவற்றையும் விட, உங்கள் கணவரை ஆணுறை உபயோகிக்கச் சொல்வதுயாருக்கும், எந்த பாதிப்பும் இல்லாத எளிய கருத்தடை முறை.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

Post by அருள் Mon Sep 30, 2013 9:51 pm

என் கணவருக்கு வயது 40. அவருக்கு சர்க்கரை நோய்இருக்கிறது. உறவின் போது முன்பிருந்த ஈடுபாடு அவரிடம் இல்லை. சர்க்கரை நோய் என்பது உறவின் மூலம் பரவவாய்ப்புண்டா? -கே. நீலா, சென்னை.

உறவின் மூலம்சர்க்கரை பரவாது. பயம் வேண்டாம். சர்க்கரையால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்குஉறவில் ஈடுபாடு குறைவது சகஜமே. மனம் மற்றும் உணவுக் கட்டுப்பாடு இரண்டும்தான் சர்க்கரை நோய்க்கான சிகிச்சைகள். நீரிழிவுநோய்க்கு நிரந்தரத்தீர்வு கிடையாது. நீரிழிவு நோயாளிகள் தினம் இரண்டு முதல் ஒன்பது கிலோமீட்டர் வரை நடக்க வேண்டும். கலோரி குறைவான உணவுகளையே சாப்பிட வேண்டும்.தினம் ஒரு வேளை கோதுமை உணவு அவசியம். கீரையும், காய்கறிகளும் தினசரிஉணவில் கணிசமாக இருக்க வேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும் போது வெட்கப்படாமல் சர்க்கரை இல்லாத பானங்களையே கேட்டுக் குடிக்கவும். செயற்கை இனிப்புகூடவேண்டாம். இவை தவிர பிரத்யேகமாக மருந்துகளே தேவையில்லை. சர்க்கரையைக்கட்டுப்பாட்டில் வைத்திருக்க வென்றே சில யோகாசனங்கள் உள்ளன. அவற்றையும்தினம் செய்யலாம். இப்படியெல்லாம் மனம் மற்றும் உணவுக் கட்டுப்பாட்டைக்கடைப்பிடித்தால், செக்ஸ் உறவும் இயல்பாக இருக்கும். நூறு வயதுவரை ஆரோக்கியமாகவும் வாழலாம்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

Post by அருள் Mon Sep 30, 2013 9:51 pm

நான் ஒரு கல்லூரி மாணவி. எனக்குப் பின்பக்க சதைகள் மிகவும் பெருத்துப் போய்அசிங்கமாகக் காணப்படுகிறது. பலரும் கிண்டல் செய்கிறார்கள். சாப்பாட்டைக் கூடக் குறைத்து விட்டேன். உடல் இளைக்கும் மாத்திரைகள் சாப்பிட்டும்பின்பக்கச் சதைகள் குறைவதாகத் தெரியவில்லை. இம்மாதிரி பின்பக்க சதைகள் அதிகமிருந்தால், செக்ஸ் உணர்ச்சிகள் அதிகமிருக்கும்என என் தோழிகள் கிண்டல் செய்கிறார்கள். என்ன செய்வது?

உடல் இளைக்கும்மருந்துகள், சாப்பாட்டை நிறுத்துதல் போன்றவையெல்லாம் ஆபத்தில்தான்முடியுமே தவிர, நீங்கள் எதிர்பார்க்கிற பலனைத் தராது. உடலின் எந்தஇடத்துச் சதையையும் குறைக்க உடற்பயிற்சி ஒன்று தான் சரியான வழி. நீங்கள்இடுப்பு, தொடைகள், கால்கள்போன்றவற்றுடன் தொடர்புடைய உடற்பயிற்சிகளைச்செய்து வர வேண்டும். முடிந்தால் ஏதேனும் ஜிம்மில் சேர்ந்துபயிற்சிகளை ஆரம்பியுங்கள். பொதுவாகவே இந்தியப் பெண்களுக்கு இடுப்பெலும்புகொஞ்சம் அகலம். உங்களுக்கு ஒருவேளை பிறவியிலேயே அப்படித்தான் என்றால்சரியாக்குவது சிரமம். திடீரென உடல் பெருத்து அப்படி ஆகியிருக்கிறதுஎன்றால் உடற்பயிற்சி தீர்வளிக்கும். பின்பக்க சதை பெருத்திருப்பதற்கும், செக்ஸ்உணர்ச்சியின் அளவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.தோழிகளின் பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளாதீர்கள். பொறுமை இருந்தால்கட்டாயம் பலன் காண்பீர்கள்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

Post by அருள் Mon Sep 30, 2013 9:52 pm

என் வயது 18.வயதுக்கு வந்து நான்காண்டுகள் ஆகிறது.வெள்ளைப்போக்கு அதிகமிருக்கிறது. தவிர, டி.வி,சினிமாக்களில் நெருக்கமானஉடலுறவுக் காட்சிகளைப் பார்க்கும் போது அந்தரங்க உறுப்பில் கசிவுஇருக்கிறது. இந்த மாற்றங்கள் எனக்குள் பயத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.தீர்வு உண்டா?

வெள்ளைப் படுதல் என்பது சாதாரணமானஒரு விஷயம்தான். அது உங்கள் உள்ளாடையை நனைக்கும் அளவுக்கோ, அரிப்புடனோ, எரிச்சலுடனோஇருந்தால், தொற்றுக் கிருமியின் தாக்குதல் என நினைத்துக் கொள்ளலாம். அப்போது மருத்துவப்பரிசோதனை அவசியம். பருவ வயதில் உணர்ச்சிகளின் உந்துதால் செக்ஸ் தொடர்பானகாட்சிகளைப் பார்த்தாலோ, படித்தாலோஅந்தரங்க உறுப்பில் கசிவு இருக்கும். அதுவும் சகஜமான ஒன்றுதான்.நீங்கள் பயப்படுகிற அளவுக்கு அது நோயோ, பிரச்சினையோஇல்லை. இயல்பாக இருங்கள்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

Post by Muthumohamed Mon Sep 30, 2013 10:56 pm

அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு நல்ல இருக்கு நல்ல இருக்கு நல்ல இருக்கு நல்ல இருக்கு நல்ல இருக்கு 
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum