TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:48 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 11:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உலகின் மிக உயரமான மலை உச்சியான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தமிழக இளைஞர் சென்னையைச் சேர்ந்த எஸ்.சந்தோஷ்குமார் (வயது27) சாதனை படைத்துள்ளார்.

Go down

உலகின் மிக உயரமான மலை உச்சியான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தமிழக இளைஞர் சென்னையைச் சேர்ந்த எஸ்.சந்தோஷ்குமார் (வயது27) சாதனை படைத்துள்ளார். Empty உலகின் மிக உயரமான மலை உச்சியான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தமிழக இளைஞர் சென்னையைச் சேர்ந்த எஸ்.சந்தோஷ்குமார் (வயது27) சாதனை படைத்துள்ளார்.

Post by Tamil Sun Sep 29, 2013 3:22 pm

உலகின் மிக உயரமான மலை உச்சியான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தமிழக இளைஞர் சென்னையைச் சேர்ந்த எஸ்.சந்தோஷ்குமார் (வயது27) சாதனை படைத்துள்ளார். இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை சென்றடைந்ததும் கையில் எடுத்து சென்ற 'தமிழ் வாழ்க' என்ற பேனரை நெஞ்சில் ஏந்தியபடி தமிழ் வாழ்க என்று சத்தமாக முழக்கமிட்டுள்ளார்.
உலகின் மிக உயரமான மலை உச்சியான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தமிழக இளைஞர் சென்னையைச் சேர்ந்த எஸ்.சந்தோஷ்குமார் (வயது27) சாதனை படைத்துள்ளார். 1375720_691813940846137_462965682_n
இந்த சாதனையை கேட்டு அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழகமுமே பெருமை கொண்டது. இந்த சாதனை தமிழர் 'தினத்தந்தி'க்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-

எனது பூர்வீகம் புதுச்சேரி. ஆனால், சென்னையில் வளர்ந்தேன். படித்ததும் இங்குதான். எனது அப்பா சங்கரன் துபாயில் வங்கி அதிகாரியாக இருக்கிறார். அம்மா அமுதா இல்லத்தரசி. தங்கை அபிநயா துபாயில் இளங்கலை பட்டம் படித்துக் கொண்டிருக்கிறார். பிளஸ் டூ வரை சென்னையில் படித்த நான், சிங்கப்பூரில் பி.இ. (எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங்) பட்டம் பெற்றேன். எனக்கு இயல்பாகவே ஓட்டத்திலும், சைக்கிளில் நீண்டதூரம் செல்வதும் பிடிக்கும்.

சிங்கப்பூரில் உள்ள 'பார்கலேஸ் கேபிடல்' வங்கியில் திட்ட அதிகாரியாக வேலை பார்த்து வருகிறேன். அங்கிருந்தபோது வெளிநாட்டு நண்பர் ஒருவர் அறிமுகமானார். அவர் மூலம் மலை ஏற்ற பயணத்தில் ஆர்வம் ஏற்பட்டது. முதல் முதலில் அவருடன் சேர்ந்து 2006-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் கடல் மட்டத்தில் இருந்து 9188 அடி உயரத்தில் உள்ள 'ரிஞ்சானி' என்ற மலையில் ஏறினேன். மலை உச்சிக்கு செல்ல 2 நாட்கள் ஆனது.

அதையடுத்து சிங்கப்பூரில் மலையேற்ற பயணம் தொடர்பான பயிற்சி எடுத்து கொண்டேன். பிறகு 2008-ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் 19340 அடி உயரத்தில் உள்ள 'கிளிமஞ்சாரோ' என்ற சிகரத்திற்கு 6 நாட்களில் சென்றேன். இதையடுத்து எவரெஸ்ட் மலை அடிவாரத்திற்கு (பேஸ் கேம்ப்) 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் 5 பேருடன் சென்றேன்.

கடல் மட்டத்தில் இருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த அடிவாரத்திற்கு 12 நாட்களில் போய் சேர்ந்தோம். அங்கிருந்து எவரெஸ்ட் சிகரத்தை பார்த்தபோது அதன் அழகில் மயங்கினேன். அந்த பனி மலையில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்ற வேகமும் அப்போதே ஏற்பட்டது.

12 ஆயிரம் கிலோ பொருட்களுடன்...

பின்னர் திபெத் நாட்டில் உள்ள உலகத்தில் 6-வது உயரமான பனிமலையில் (26900 அடி உயரம்) ஏறினேன். இந்த மலை உச்சிக்கு செல்ல 40 நாட்கள் ஆனது. அப்போதுதான் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி விட முடியும் என்ற நம்பிக்கை துளிர்த்தது. அதைத்தொடர்ந்து கடல் மட்டத்தில் இருந்து 29035 அடி உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்கு ஆயத்தமானேன். நிறைய பணம் செலவாகும் என்பதால் விளம்பரதாரரும், உரிய பயிற்சியும் தேவைப்பட்டது. அப்பா, அம்மா, தங்கை, உறவினர்கள், நண்பர்கள் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேபாள நாட்டு தலைநகர் காத்மாண்டு போனேன். அடுத்தநாள் அங்கிருந்து இமயமலை அடிவாரத்தில் உள்ள லுக்லா கிராமத்திற்கு நான் உள்பட 7 பேர் போனோம். மற்ற 6 பேரும் ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் ஆவர். எங்களுடன் வந்த மற்றவர்களையும் சேர்த்தால் மொத்தம் 24 பேர்.

எவரெஸ்ட் போய் வர 60 நாட்கள்

எங்கள் அனைவருக்கும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, இறங்கி வருவதற்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களின் மொத்த எடை 12 ஆயிரம் கிலோ. எவரெஸ்ட் மலை அடிவாரத்திற்கு (பேஸ் கேம்ப்) இந்தப் பொருட்கள் மாடுகள், ஆட்கள், ஹெலிகாப்டர் மூலம் எடுத்து வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து நாங்கள் சாட்டிலைட் போன், சோலார் சார்ஜர், சாப்பாடு, ஆக்ஸிஜன் பாட்டில்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டோம்.

தினமும் 6 மணி நேரம் நடந்தோம். 12 நாட்களில் எவரெஸ்ட் மலை அடிவாரத்தை சென்றடைந்தோம். அதற்கு மேலே மொத்தம் 4 கேம்ப்கள் உள்ளன. பனிப்பாறைகள் அந்தப் பகுதியில் காக்காவை மட்டும் காண முடிந்தது. சில குருவிகளும் கண்ணில் தென்பட்டன. அப்போதுதான் பறவைகள் குறிப்பாக காகம் இவ்வளவு உயரத்திற்கு வருகிறதே என்று ஆச்சரியப்பட்டேன். கடுங்குளிர் வாட்டி வதைத்தது. ஆக்ஸிஜனும் குறைவாக இருந்ததால் உடல்நலம் பாதித்தது. ஆக்ஸிஜன் பாட்டில்கள் அப்போது கைகொடுத்தன. சூரியன் சுட்டெரித்ததில் எனது முகத்தில் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதிப்பது என்ற மனஉறுதியும், வேகமும் கொஞ்சமும் குறையவில்லை.

எதிர்கால லட்சியம்



எவரெஸ்ட் சிகரத்தை நெருங்க, நெருங்க மலையின் அழகு பிரமிக்க வைத்தது. நிலவும், நட்சத்திரங்களும் மிக அருகில் இருப்பதாக உணர்ந்தோம். எங்களுடன் வந்த 24 பேரில் 15 பேர் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தோம். அந்த மலை உச்சியில் ஏறியதும் தமிழன் என்ற உணர்வில் கையில் எடுத்துச் சென்ற 'தமிழ் வாழ்க' என்ற பேனரை நெஞ்சில் ஏந்தி 'தமிழ் வாழ்க' என்ற உரக்க முழக்கமிட்டேன். மற்றவர்களும் அவரவர் நாட்டின் பெயரைச் சொல்லி மகிழ்ந்தனர். எவரெஸ்ட் சிகரத்தைஏறுவதற்கு 55 நாட்கள் ஆனது. 5 நாட்களிலே கீழே இறங்கி வந்துவிட்டோம்.

ஆசியாவில் உள்ள மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் உள்பட இதுவரை 3 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களில் ஏறிவிட்டேன். இவை தவிர அண்டார்டிகா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா ஆகிய 4 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களில் ஏறி மொத்தம் 7 கண்டங்களில் உள்ள சிகரங்களிலும் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.

இவ்வாறு சந்தோஷ்குமார் கூறினார்.

சந்தோஷ்குமாரின் சாதனையை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று அவரது தாய் அமுதாவும், பாட்டி மகாலட்சுமியும் கூறினார்கள். சந்தோஷ்குமாருக்கு முன்னதாக 1997-ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த பி.சண்முகவடிவேலு என்பவர் தனது 28-வது வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 73 வயது பெண் சாதனை
» லண்டனைச் சேர்ந்த நிக்கிலீ வயது25தான். ஆனால் இதுவரை 5000 பேருடன் உறவு கொண்டு சாதனை படைத்துள்ளார்
» கனடாவின் ரொரன்டோவைச் சேர்ந்த, இரண்டு கால்களையும் இழந்த நபர் ஒருவர் கிளிமஞ்சாரே மலை உச்சிக்கு சென்று சாதனை படைத்துள்ளார்.
» கின்னஸ் சாதனை படைத்த உலகின் உயரமான பெண் நாய்!
» 30 மணிநேரம் 6 நிமிடம் தொடர்ந்து பேசி தமிழக இளைஞர் கின்னஸ் சாதனை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum