TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விளைபொருட்களை எல்லாம் 'விலை பொருள்' ஆக்குங்கள்'' ===================================== 'மதிப்புக்கூட்டும்' ஓர் ஆதர்ச தம்பதி!

Go down

விளைபொருட்களை எல்லாம் 'விலை பொருள்' ஆக்குங்கள்'' =====================================  'மதிப்புக்கூட்டும்' ஓர் ஆதர்ச தம்பதி! Empty விளைபொருட்களை எல்லாம் 'விலை பொருள்' ஆக்குங்கள்'' ===================================== 'மதிப்புக்கூட்டும்' ஓர் ஆதர்ச தம்பதி!

Post by அருள் Wed Sep 04, 2013 7:44 am

விளைபொருட்களை எல்லாம் 'விலை பொருள்' ஆக்குங்கள்''
=====================================

'மதிப்புக்கூட்டும்' ஓர் ஆதர்ச தம்பதி!
விளைபொருட்களை எல்லாம் 'விலை பொருள்' ஆக்குங்கள்'' =====================================  'மதிப்புக்கூட்டும்' ஓர் ஆதர்ச தம்பதி! 1185774_163384993855968_1322214321_n
''ஆத்திரம்-அவசரத்துக்கு ஓடி வர அக்கம்பக்கம் ஆட்கள் யாரும் கிடையாது; மின்சாரம், தொலைபேசி கிடையாது; திரும்பிய பக்கமெல்லாம் வெறும் பாறை, புதர் இவை மட்டும்தான். இப்படிப்பட்ட பகுதியில் இந்த இடத்தை நாங்கள் வாங்கியபோது... எங்களைப் பார்த்து நிறைய பேர் கிண்டல் செய்தார்கள். 'உங்களுக்கு ஏதும் கிறுக்கு பிடித்துவிட்டதா?' என்று நேரடியாகவே சிலர் கேட்டார்கள். ஆனால், 'இந்த மண்ணை மாற்ற முடியும்... இங்கே வாழ முடியும்' என்று என் மனைவி ஜூலி உறுதியாக நம்பினாள்.

அதைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் பதினான்கு ஆண்டுகள் பாடுபட்டதற்கான பலனாக... இன்று நெல், ராகி, தக்காளி, வெண்டை, பருத்தி, மாம்பழம் என்று விளைந்து செழித்துக் கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தை மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம். மாட்டுச்சாணம், அதன் சிறுநீர் இவைதான் எங்கள் பயிர்களுக்கான டானிக். இதற்காகவே நாலஞ்சு பசுமாடுகளை வளர்க்குறோம்''

- நம் கண்களுக்கும் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சியபடி பேசுகிறார் விவேக். 

விதைப்புக்கும் அறுப்புக்கும் நடுவில் உழைப்புச் சக்கரத்தை வேகமாகச் சுழற்றிக் கொண்டிருக்கும் இந்தத் தம்பதியின் வெற்றிக் கதையைக் கேட்டால்... 'அம்மாடியோவ்' என்று ஆச்சர்யத்தின் விளிம்புக்குச் செல்லாமல் இருக்க முடியாது உங்களால்!

மௌனம் பேசியதே...!

பொருளாதாரம் படித்தவர் விவேக். சமூகவியல் படித்தவர் ஜூலி. காதலால் கட்டுண்டு திருமணம் புரிந்த இத்தம்பதி, நவநாகரிக டெல்லியில் வாழ்க்கையை ஓட்டத் துவங்கியது. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் அந்த வாழ்க்கை நகர மறுத்துவிட்டது. ஆம், புகை கக்கும் கார்கள், மரணத்துக்குத் தோரணம் கட்டும் 'துரித உணவு', சக மனிதன் மேல் பற்றில்லாத சூழல் என்று நரகத்தனமாகிவிட்ட நகர நாகரிகம் இவர்களை ரொம்பவே உரசிப் பார்க்க... மௌனம் உரக்க பேசும் வனம் நோக்கி பயணப் பட்டிருக்கிறார்கள். இறுதியாக இவர்கள் வந்து சேர்ந்த இடம்... கர்நாடக மாநிலம் நுகூ (ழிuரீu) அணையை ஒட்டிய ஹல்சூர். 'இனி, இயற்கை விவசாயம்தான் வாழ்க்கை' என்று மண்ணின் மீது சத்தியம் செய்துவிட்டு, கையில் தூக்கிய மண்வெட்டி... இன்று வரை இயங்கிக் கொண்டே இருக்க... வெற்றிக் கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டே இருக்கிறது.

'ஆற்று நிறைய தண்ணீர் இருந்தாலும், அள்ளிதான் குடிக்க வேண்டும்!'

சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டல்பேட் எனும் சிறுநகரிலிருந்து ஐம்பத்தி இரண்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது ஹல்சூர். இங்கு நுகூ அணையைத் தொட்டபடி சுமார் நாற்பத்தைந்து ஏக்கர் நிலத்தில் நெல், ராகி, தக்காளி, வெண்டை, பருத்தி, மா, தென்னை என்று முப்பது வகையான பயிர்களை கடுகளவு ரசாயனம் கூட பட்டுவிடாமல் பக்குவமாக சாகுபடி செய்து கொண்டிருக்கிறது, விவேக்-ஜூலி தம்பதி.



அணையிலிருந்து வெள்ளம் போல நீர் ஓடி வந்தாலும், பாதிப் பயிர்களுக்கு சொட்டுநீர் மீதிப் பயிர்களுக்கு தெளிப்புநீர் என்று தண்ணீரை சிக்கனமாகவே பயன்படுத்துகிறார்கள். கோடையில் நீர்வரத்து குறைந்து விடுவதோடு, மின்வெட்டும் அடிக்கடி வந்து சேர்ந்து படுத்தி எடுத்துவிடும் பகுதி இது. அதனால், கிடைக்கும் நான்கைந்து மணி நேர மின்சாரத்தைப் பயன்படுத்தியே.... அத்தனை பயிர்களுக்கும் சுழற்சி அடிப்படையில் நீர் பாய்ச்சி விடுவார்களாம்.

விளை பொருளெல்லாம் விலை பொருளாக...!

விளைவிக்கும் பொருட்களில் பெரும்பாலானவற்றை மதிப்புக் கூட்டிய பொருட்களாக மாற்றி விற்பதுதான் இவர்களின் வெற்றிப்பாட்டை!

மாங்காய், தக்காளி, பூண்டு, வெங்காயம் என்று பல பொருட்கள் ஊறுகாய்களாக மாறுகின்றன; கரும்பு, ஆலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே வெல்லமாக மாறுகிறது; நெல், இங்கேயே அரிசியாகி கடைகளுக்குச் செல்கிறது. பால், பால்கோவாவாக... பாலாடைக் கட்டியாக மாறுகிறது; தேங்காய், எண்ணெயாக வடிவெடுக்கிறது!

''இப்படி எல்லாவற்றையும் மதிப்புக்கூட்டி, நேரடியாக விற்பனை செய்வதால், எங்கள் உழைப்பு கொஞ்சமும் வீணாகாமல் வருமானமாக திரும்பி வந்து கொண்டே இருக்கிறது.

நெல்லை அப்படியே விற்றால், கிலோவுக்கு பன்னிரண்டு ரூபாய்தான் கிடைக்கும். ஆனால், அரிசியாக விற்கும்போது கிலோ நாற்பது ரூபாய்.

சூரியகாந்தி விதை ஒரு கிலோ 25 ரூபாய். எண்ணெயாக விற்கும்போது ஒரு லிட்டர் அறுபத்தைந்து ரூபாய்.

ராகியின் விலை கிலோ 16 ரூபாய். மால்ட் தயாரித்து விற்றால், கிலோ அறுபத்தைந்து ரூபாய்.

கரும்பு கிலோ 2 ரூபாய். வெல்லமாக மாற்றும்போது கிலோ நாற்பது ரூபாய்.

பால் ஒரு லிட்டர் இருபது ரூபாய். பாலாடைக் கட்டியாக (சீஸ்) விற்கும்போது கிலோ ஆயிரம் ரூபாய்.

எலுமிச்சை, நெல்லி, கேரட், பீட்ரூட் என அனைத்தும் ஊறுகாய், ஜாம் என்று பல வடிவங்களாக உருமாறுகின்றன.

இயற்கை முறையில் விளைந்த பருத்தியை நூலாக்கி, வீட்டிலேயே இயற்கை சாயம் கொடுத்து விற்பனை செய்கிறோம். இந்தச் சாயத்தையும் பழங்கள் மற்றும்காய்கறிகளிலிருந்து எடுத்துக் கொள்கிறோம். உதாரணமாக... மாதுளம் பழத்தின் மேற்புறத் தோலில் இருந்து மஞ்சள் மற்றும் ரோஸ் நிற சாயங்களை உருவாக்குகிறோம். இயற்கைப் பருத்தி மற்றும் இயற்கைச் சாயத்துடன் உருவாகும் எங்களின் நூலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

நம்முடைய விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது, கூடுதலாக 30% முதல் 40% வரை லாபம் பார்க்க முடியும்'' என்று மகிழ்ச்சி பொங்கிய விவேக், தொடர்ந்தார்.

அரசையே அசரவைத்த இயற்கை..!

''ரசாயனப் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதில் உடலுக்கு எவ்வளவு கேடு ஏற்படுகிறதோ... அதே அளவுக்கான கேடு, நாம் உடுத்தும் துணியிலும் இருக்கிறது. ஒரு வெள்ளைச் சட்டைக்கு குறைந்தது நூற்றி ஐம்பது கிராம் ரசாயனப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுகிறது (சட்டையைத் தயாரிக்கத் தேவையான பஞ்சை உற்பத்தி செய்வதற்கு). இதிலிருந்து, பருத்தி விவசாயம் எந்தளவுக்கு ரசாயனத்தால் சீரழிந்து கிடக்கிறது என யோசித்துப் பாருங்கள்?'' என்று சமூக அக்கறையோடு கேட்ட விவேக், கேள்வி எழுப்புவதோடு நின்றுவிடவில்லை. அப்பகுதியில் உள்ள சுமார் நூற்றைம்பது விவசாயிகளை ஒருங்கிணைத்து, 'இயற்கை விவசாயிகள் சங்கம்' என்ற ஒன்றை ஏற்படுத்தி, அவர்களையும் இயற்கைப் பாதையில் பயணிக்க வைத்திருக்கிறார்.



''எங்கள் தோட்டத்தில் இயற்கை முறையில் விளையும் தானியங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றின் தரத்தைப் பார்த்த பின், இந்தப் பகுதி விவசாயிகள் தாங்களாகவே எங்களிடம் வந்து, 'இயற்கை விவசாயத்தைக் கற்றுத் தரச் சொன்னார்கள். இதையடுத்து, அவர்களை ஒருங்கிணைத்தோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சங்கம் மூலமாக இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பூமி, ரசாயனக் கொடுமையில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதோடு, கர்நாடக அரசின் கவனத்தையும் இயற்கை விவசாயம் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. இயற்கை விவசாயத்தின் மேன்மையைப் புரிந்துகொண்ட கர்நாடக மாநில அரசு, நூறு கோடி ரூபாயை இயற்கை விவசாய மேம்பாட்டுக்காக ஒதுக்கியிருக்கிறது. ஆண்டுதோறும் ஒதுக்கப்படவிருக்கும் இந்த நிதியைப் பயன்படுத்தி, கர்நாடக மாநிலம் முழுமையும் இயற்கை விவசாய பூமியாக மாற வேண்டும் என்பதுதான் எங்கள் கனவு'' என்று சிரிக்கும் விவேக்,

''இந்த நாற்பத்தைந்து ஏக்கரும் இயற்கை விவசாயத்தில் கொடிகட்டி பறந்து, பலருக்கும் வழிகாட்டியாக மாறியதில், என் மனைவியின் உழைப்பும் அளவிட முடியாதது'' என்றபடியே ஜூலியை நோக்கி கை நீட்டினார்.

களை பறித்தல் முதல் காளை வளர்ப்பு வரை அனைத்து வேலைகளையும் செய்யும் ஜூலி, விதவிதமான மூலிகைத் தாவரங்களைப் பயிரிட்டிருப்பதுடன், மூலிகை வைத்தியத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார்.

''தமிழ்நாடு அருமையான விவசாய பூமி. அந்த மண்ணில் விளையும் பொருட்களுக்கு ஏற்ற மாதிரியான உணவுப் பழக்கத்தை இயற்கையே கொடுத்திருக்கிறது. ஆனால், அதைப் புரிந்துகொள்ளாமல், சம்பந்தமே இல்லாத பயிர்களையெல்லாம் விளைவிக்க முயற்சிப்பது, அதையும் ரசாயன அடிப்படையில செய்வது என்று தடம் மாறி போய்க் கொண்டிருக்கிறார்கள் பல விவசாயிகள்.

விவசாயம் ஒரு தொழில் இல்லை. வாழ்க்கை, கலாச்சாரம் எல்லாமும் அதுதான். இதை ஏன் புரிந்துகொள்ள நாம் மறுக்கவேண்டும். அரிசியை பாலீஷ் செய்து சாப்பிடுவதில் ஆரம்பித்து, மரபணு மாற்று விதை ஆராய்ச்சிக்கு இடம் கொடுப்பது வரை அனைத்துவித தவறான செயல்களுக்கும் தமிழகம் துணைபோவது... இயற்கைக்கு நாம் செய்யும் துரோகம்தான். இரண்டு ஏக்கர் பூமி இருந்தாலே இன்று ராஜா மாதிரி வாழலாம். இயற்கை முறையில் விவசாயத்தை செய்யும்போது நீங்கள் ராஜாவுக்கே ராஜாதான். பூச்சி, நோய் என்று எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. அப்படியே பாதித்தாலும் அதை நோயாகப் பாக்காதீர்கள். பயிர் தன்னுடைய வலுவை கொஞ்சம் இழந்துவிட்டதாக நினைத்து, அதற்கு வலுவை ஊட்டுங்கள். அதற்காகத்தான் இருக்கிறது. பசுஞ்சாணம். அதற்கு நிகரான பூச்சிக் கொல்லி எதுவுமில்லை. அதை வைத்து பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் எல்லாம் தயாரித்துப் பயன்படுத்தலாம்'' என்று ஒரு விரிவுரையாளராக பேசிய ஜூலி,

''பருத்தியில் பூச்சித் தாக்குதலைத் தவிர்க்க அதற்கு நடுவில் வெண்டைச் செடியை சிறிய அளவுல பயிரிட்டாலே போதும். பருத்தியைத் தாக்க நினைக்கும் பூச்சிகள் வெண்டையைச் சூழ்ந்துகொண்டுவிடும். அதை எளிதாக நாம் அகற்றிவிடமுடியும்'' என்று போகிறபோக்கில் ஒரு தொழில்நுட்பத்தையும் சொல்லிவிட்டு,

''இங்கே விளையும் பொருட்களில் 20% எங்களின் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுகிறது. 70% விற்பனைக்குப் போகிறது. மீதி 10% யானை, காட்டெருமை, பன்றி, பறவைகள் என்று வனவிலங்குகளுக்காக விட்டு விடுகிறோம். ஏன் என்றால்... இது விலங்குகளின் பூமி. நாம்தான் இங்கே வந்து ஆக்கிரமித்துக் குடியிருக்கிறோம். அதனால், அவர்களுடைய பங்கினை கொடுக்க வேண்டாமா?'' என்று உயிர் தர்மம் பேசி வியக்க வைத்தார்!

விளைவிப்பதோடு நின்றுவிடாமல், (விலை) மதிப்பையும் கூட்டும்போதுதான்... பெருவெற்றி என்பதை நடைமுறையில் சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கும் உதாரணத் தம்பதியை வியந்தபடியே விடைபெற்றோம்!

பேர் சொல்லும் பிள்ளைகள்!

விவேக்-ஜூலி தம்பதிக்கு கபீர், ஆஸாத் என்று இரண்டு மகன்கள். இருவரின் பள்ளிக்கூடமே... அவர்களுடைய நாற்பத்தைந்து ஏக்கர் தோட்டம்தான். ஆம், அடிப்படை எழுத்துக்களையும், சில பல வார்த்தைகளையும் தெரிந்து கொள்வதற்காக தொடக்கப் பள்ளி வரை சென்றதோடு சரி, மற்றதெல்லாமே வீட்டிலும் தோட்டத்திலும்தான். அதிகாலையில் எழுபவர்களுக்கு வயல் வேலையோடு பல துறை பற்றிய அறிவையும் கொடுக்கிறார்கள் அப்பா-அம்மா இருவரும். இப்போது கல்லூரி வயதைத் தொட்டுக்கொண்டிருக்கும் கபீர்-ஆஸாத் இருவருக்குமே கோழித்தீவன தயாரிப்பு துவங்கி இன்டர்-நெட் வரை அத்தனையும் அத்துப்படி. இந்த இருவரும் சேர்ந்தே நாற்பத்தைந்து ஏக்கர் நிலத்துக்கும் வேலியை உருவாக்கி இருக்கிறார்கள். டிராக்டரை கழற்றி மாட்டுகிறார்கள். இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் வரும் யானை, காட்டுப்பன்றிகளை விரட்ட காவல் இருக்கிறார்கள்.

நன்றி - சத்தியானந்தன் சுப்பிரமணியன் பானுமதி & விகடன்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விளைபொருட்களை எல்லாம் 'விலை பொருள்' ஆக்குங்கள்''
» 'மதிப்புக்கூட்டும்' ஓர் ஆதர்ச தம்பதி!
» ஏற்றுமதி, இறக்குமதியில் நடந்த ஊழல் தான் உணவு பொருள் விலை உயர்வுக்கு காரணம்
» சச்சினை ஆஸ்திரேலியா பிரதமர் ஆக்குங்கள்: ஹைடன் ஆவேசம்
» இயற்கை எரிவாயு விலை கணிசமாக அதிகரிப்பு : பெட்ரோல் விலை அதிகரிப்புக்கு முன்னோட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum