TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆடு வளர்ப்பு:

3 posters

Go down

ஆடு வளர்ப்பு: Empty ஆடு வளர்ப்பு:

Post by Tamil Tue Sep 03, 2013 3:12 pm

ஆடு வளர்ப்பு:

''ஆண்டுக்கு ஒரு தடவை பொலிக் கிடாவை மாத்தணும்!''
தகவல்: பசுமை விகடன் 

பொட்டனேரியில் உள்ள, 'மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலைய'த்தின் உதவிப் பேராசிரியர் ந. பாரதி, வெள்ளாட்டு இனங்கள் மற்றும் இனவிருத்தி முறைகளைப் பற்றி விளக்கும்போது, ''வெள்ளாடுகளை, 'ஏழைகளோட பசு’னுதான் சொல்லணும். சிறு-குறு விவசாயிக, நிலமில்லாத விவசாயிங்களுக்குப் பொருளாதார ரீதியா கை கொடுக்குறது வெள்ளாடுகதான். குணத்தை வெச்சும், வெளித் தோற்றத்தை வெச்சும் அந்தந்தப் பகுதிகள்ல சுலபமா அடையாளம் கண்டுபிடிக்கக் கூடிய வகைகளைத்தான் இனம்னு சொல்றோம். ஒவ்வொரு பகுதிகள்லயும் இருக்கற ஆடுகளுக்கு... ஓரொரு இனப்பெயர் இருக்கும். தமிழ்நாட்டுல இருக்கற இனங்களைப் பத்திப் பார்ப்போம்.
ஆடு வளர்ப்பு: 1234742_559595334076504_929569739_n
சிப்பாய் நடை போடும் கன்னி!

கன்னி ரக ஆடு... கரிசல் மண், குன்றுகள் அதிகமா இருக்கற பகுதிகள்ல இருக்கும். நல்லா உயரமா இருக்கும். கிடா ஆடு 50 கிலோவும், பெட்டை ஆடு 30 கிலோவும் எடை இருக்கும். ரெண்டுக்குமே கொம்பு இருக்கும். உடம்பு கருப்பு நிறத்துலயும், தலையில முன்பக்கமா ரெண்டு வெள்ளைக் கோடுகளும் இருக்கும். காதுகள்லயும் ரெண்டு வெள்ளைக் கோடுகள் நல்லா தெரியும். வயித்தோட அடிப்பகுதி, கால் குளம்பின் மேல்பகுதி வெள்ளையா இருக்கும். இந்த இன ஆடுகள் மந்தையா நடந்து போறப்ப, கால் அசைவுகளைப் பாத்தா... பட்டாளத்து சிப்பாய்ங்க வரிசையா போற மாதிரி இருக்கும். இந்த இனத்தை 'பால் கன்னி’னு சொல்வாங்க. வெள்ளை நிறத்துக்குப் பதிலா... செந்நிறம் அதிகமா இருந்தா 'செங்கன்னி’னு சொல்லுவாங்க. கன்னி ஆடுகள் ஒரு ஈத்துல ரெண்டு குட்டியிலிருந்து நாலு குட்டிகள் வரை ஈனும்.

இந்த ஆடுக தமிழ்நாட்டோட தென்பகுதிகள்ல... குறிப்பா, விருதுநகர் மாவட்டத்துல சாத்தூர், சிவகாசி தாலூகா, தூத்துக்குடி மாவட்டத்துல கோவில்பட்டி, விளாத்திகுளம் தாலூகா பகுதிகள்ல அதிகமா இருக்கும். கோவில்பட்டியில ஒவ்வொரு திங்கட்கிழமையும் வாரச் சந்தை கூடும். கன்னி ஆடுகளை வாங்க நினைக்குறவங்க இங்க வாங்கிக்கலாம்.

கடலோரத்துக்கு ஏத்த கொடி!

இதை 'போரை ஆடு’னும் சொல்வாங்க. நல்ல உயரம், நீண்ட கழுத்து, உயரமான கால், ஒல்லியான உடம்பு இதுதான் கொடி ஆட்டோட அடையாளம். இந்த ரகத்துல பெட்டைக்கும் கொம்பு இருக்கும். இந்த ஆடுகள் ரெண்டு நிறத்துல இருக்கும். வெள்ளை நிறத்துல கருப்பு மையை அள்ளி தெளிச்சது போல இருக்குற ஆடுகளை, 'கரும்போரை’ அல்லது 'புல்லைபோரை’னும்... வெள்ளை நிறத்துல செந்நிறம் கலந்து இருந்தா 'செம்போரை’னும் சொல்வாங்க. 100 செ.மீ உயரம் வரை இருக்கும். எடையைப் பொறுத்தவரைக்கும் கிடா 47 கிலோவிலிருந்து 70 கிலோ வரையும் இருக்கும். பெட்டை 32 கிலோ வரை இருக்கும். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பகுதிகள்லயும் அதையட்டிய ராமநாதபுரம் பகுதியிலயும் பரவலா இருக்கற இந்த இனம், கடலோர மாவட்டங்களுக்கு ஏத்த இனம்!

சேலம் கருப்பு!

இதை, 'வரை ஆடு’னும் சொல்லுவாங்க. சேலம் மாவட்டத்துல ஓமலூர், மேச்சேரி பகுதிகள்ல அதிகமா வளர்க்கறாங்க (மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில், 'வரை ஆடு’ எனும் பெயரில் வேறு ஒரு இனமும் உண்டு- ழிவீறீணீரீவீக்ஷீவீ ஜிணீலீக்ஷீ). இந்த ஆடு உடம்பு முழுக்க கருப்பு நிறத்துல இருக்கும். கொம்புகள் பின்பக்கமா நல்லா வளைஞ்சு இருக்கும். இது ஈத்துக்கு ஒரு குட்டி மட்டும்தான் ஈனும்.

பள்ளை ஆடு!

இந்த ஆடுகள், குட்டையா இருக்கும். 'குள்ள ஆடு’, 'சீனி ஆடு’னும் சொல்வாங்க. சின்னக்கொம்பும், மூழிக்காதும் இதோட அடையாளம். குட்டிகள் பிறக்கும்போது கால் குட்டையாவும் உடம்பு அகலமாவும் இருக்கும். இந்த இனம் தமிழகத்தில் வட மாவட்டங்களில் பரவலா இருக்கு.

மோளை ஆடு!

நடுத்தர உயரத்துல, நல்ல சதைப் பிடிப்போட, சுத்தமான வெள்ளை நிறத்துல இந்த ஆடுகள் இருக்கும். ஈத்துக்கு ரெண்டு முதல் நாலு குட்டிகள் வரை ஈனும். 30 கிலோ முதல்
36 கிலோ வரை எடை இருக்கும். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் பகுதியில இந்த வகை ஆடுகள் அதிகளவு இருக்கு.

இப்ப சொன்ன இந்த அஞ்சு ரகமும்... தமிழ்நாட்டைச் சேர்ந்த இனங்கள்தான். இது இல்லாம... ஜமுனாபாரி, தலைச்சேரி மாதிரியான வெளி மாநில இனங்களையும் வளர்க்கலாம். எந்த இனங்களையும் சேராத ஆடுகளும் இருக்கு. அதை பொதுவா 'நாட்டு ஆடு’னு சொல்வாங்க.

இனவிருத்தி இப்படித்தான்!

வெள்ளாடுகளைப் பொறுத்தவரை பெட்டை 6 மாசத்திலும், கிடா 8 மாசத்திலும் பருவத்துக்கு வரும். ஆனா, பெட்டையை 10 மாசத்துல இருந்து 15 மாசத்துக்குப் பிறகும், கிடாவை 18 மாசத்துக்குப் பிறகும்தான் இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்தணும்.
19 நாள் முதல் 21 நாள் வரைக்கும் ஆடுகளோட சினைப் பருவம் இருக்கும். அடிக்கடி கத்தும், வாலை வேகமா அசைக்கும், சரியா தீவனம் எடுக்காது, மத்த ஆடுக மேல தாவும். இந்த மாதிரியான அறிகுறிகள் தெரிஞ்சா... ஆடுகள் சினைக்குத் தயாராயிடுச்சுனு அர்த்தம். அறிகுறி தெரிஞ்ச 24 மணி நேரத்துக்குள்ள பொலிக் கிடாயுடன் சேர்த்துடணும். சினை பிடிச்ச பிறகு, குட்டி போடுற வரைக்குமான சினைக்காலம் 146 முதல் 151 நாட்கள். குட்டி போட்ட பிறகு, மூணு மாசம் வரைக்கும் பாலூட்டும். அதுக்குப் பிறகுதான் அடுத்த சினைக்கு விடணும். 

கிடா தேர்வில் கவனம்!

கிடாக்களைப் பொறுத்தவரைக்கும் நல்ல தரமான 'பொலிச்சல்’ உள்ள கிடாயா இருந்தாத்தான், நல்லத் தரமானக் குட்டிகள் கிடைக்கும். ஒரு பொலிக் கிடாவை 'மந்தையில பாதி’னு சொல்லலாம். நல்ல பாரம்பரியமான, பால் அதிகமா கொடுக்குற தாய் ஆட்டோட குட்டிகள்ல, நல்ல உடல் வளர்ச்சியுள்ள 6 வயசுள்ள கிடா குட்டிகளைத்தான் பொலிக் கிடாயா தேர்வு செய்யணும். அதிக குட்டி போடுற தாயோட குட்டிகளை பொலிக் கிடாயா தேர்ந்தெடுத்தா... இன்னும் சிறப்பா இருக்கும்.

சிலர், மந்தையில இருக்கற எல்லா ஆடுகளுக்கும் ஒரே கிடாவைப் பயன்படுத்துவாங்க. அப்படி செஞ்சா, இனப்பெருக்கம் சரியா இருக்காது. 20 முதல் 30 ஆட்டுக்கு ஒரு கிடாங்கிற கணக்குல தான் பொலிக் கிடாவைப் பயன்படுத்தனும். பொலிக் கிடாவை வருஷத்துக்கு ஒரு தரம் மாத்திடணும். அடுத்தக் கிடாவை வெளிய இருந்துதான் கொண்டு வரணும். பெரிய மந்தைகள வெச்சுருக்கற விவசாயிகள், தங்களுக்குள்ள கிடாக்களை மாத்திக்கலாம்.

ஆடுகளைக் கழிக்க வேண்டும்!

ஒவ்வொரு வருஷமும்... 10% முதல் 20% வரைக்கும் மந்தையில தேவையில்லாத ஆடுகளைக் கழிச்சிடணும். பிறக்கற குட்டிக, இந்தக் கழிவு ஆடுகளோட எண்ணிக்கையை ஈடுகட்டும். அதனால் மொத்த எண்ணிக்கை பாதிக்காது. சரி, எந்தெந்த ஆடுகள கழிக்கணும்?ங்கற கேள்வி உங்களுக்கு நிச்சயம் வரும். அதாவது, குட்டிகளோட எடை வழக்கத்தைவிட கம்மியா இருந்தா... அந்த குட்டிகளோட தாய் ஆட்டை கழிச்சுடணும். சினை நிக்காத ஆடுகள், இனவிருத்திக்கான தகுதி இல்லாதவை, குணப்படுத்த முடியாத காயம், ஊனம் இருக்கற ஆடுகள், பல் இல்லாதவை, மரபியல் சார்ந்த நோய் இருக்கற ஆடுகள்னு லாபம் கொடுக்க முடியாத ஆடுகளை அப்பப்போ கழிச்சுடணும்'' என்று விளக்கமாக பேசினார் பாரதி.

தொடர்புக்கு,
மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலையம், 
தொலைபேசி: 04298-262023
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆடு வளர்ப்பு: Empty Re: ஆடு வளர்ப்பு:

Post by ஜனனி Fri Nov 08, 2013 8:21 am

hmmm hmmm hmmm hmmm
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஆடு வளர்ப்பு: Empty Re: ஆடு வளர்ப்பு:

Post by மாலதி Mon Nov 25, 2013 10:03 pm

அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஆடு வளர்ப்பு: Empty Re: ஆடு வளர்ப்பு:

Post by மாலதி Wed Dec 04, 2013 8:24 pm

ஆடு வளர்ப்பு: G10
தலசேரி இன பெட்டை ஆடு-குட்டியுடன்

 வான்கோழி, காடை, ஈமு என வகை வகையாக இறைச்சிகள் இருந்தாலும், நாட்டுக்கோழிக் கறிக்கும் வெள்ளாட்டுக் கறிக்கும் உள்ள மவுசு குறைவதேயில்லை. எப்போதுமே சந்தையில் அவற்றுக்கான கிராக்கி உச்சத்தில்தான். அவற்றின் விலையே இதற்கு சாட்சி. அதனால்தான் விவசாயத்தோடு சேர்த்து, ஆடு, கோழி என வளர்க்கும் பழக்கம் தொன்று தொட்டே தொடர்கிறது.

ஆரம்ப காலங்களில் நாட்டு ஆடுகள், நாட்டுக் கோழிகள் என்று இருந்ததெல்லாம் காலமாற்றத்திற்கு ஏற்ப கலப்பினங்களாக உருவெடுத்துவிட்டன. இத்தகைய கலப்பினங்கள் இருவகைகளில் உருவாக்கப்படுகின்றன.

ஆராய்ச்சிக் கூடங்களில் வெளிநாட்டு இனங்களோடு உள்நாட்டு இனங்களைக் கலப்பு செய்து வளர்ச்சி ஊக்கிகளை செலுத்தி அதிக இறைச்சி, கொழுப்புடன் கூடிய ஆடு, கோழி ரகங்களை உருவாக்குவது ஒரு விதம். இதற்கென சில கட்டுப்பாடுகள் உண்டு. பலவித சோதனைகளுக்குப் பிறகே இவை சந்தைப் பயன்பாட்டுக்கு வரும். இவற்றுக்குத் தனியாக பெயர்கூட வைப்பார்கள்.


ஆடு வளர்ப்பு: G4
ஆடுகள் தீவனமெடுக்கும் காட்சி
அடுத்து… விவசாயிகளே நாட்டின் வேறு பகுதிகளை, மாநிலங்களைச் சேர்ந்த நாட்டு இனங்களை வாங்கி இயற்கையான முறையில் கலப்பு செய்து, புதிய ரகங்களை உருவாக்கிக் கொள்வது இன்னொரு விதம். இதற்குக் கட்டுப்பாடுகள் கிடையாது. மரபணு சோதனைகளோ, வேறு பிரச்சனைகளோ கிடையாது.

கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள பலரும் பெருபாலும் இரண்டாவதான சிக்கலில்லாத இயற்கை முறையையே அதிகம் கடைப்பிடிக்கிறார்கள். குறிப்பாக தலைச்சேரி, ஜமுனாபாரி, சிரோஹி போன்ற வெளி மாநில ஆடுகளோடு நம் மாநில வெள்ளாடுகளைக் கலப்பு செய்து அதன் மூலம் நல்ல தரமான ஆடுகளை உற்பத்தி செய்து பலரும் லாபம் பார்க்கிறார்கள்.

பிறக்கும் போதே அதிக எடை சாதாரணமாக கொடி ஆட்டுக்குட்டி பிறக்குற போது ஒன்றரைக் கிலோ தான் எடை இருக்கும். எட்டு மாசத்துல தான் பதினைஞ்சு கிலோ எடைக்கு வரும். இதுவே கலப்புக் குட்டிகள்னா… பிறக்குறப்பவே ரெண்டரை கிலோ இருக்கும். நாலு மாசத்துலயே பத்து கிலோவுக்கு மேல எடை வந்துடும். எட்டு மாசத்துல முப்பது கிலோ வரைக்கும் கூட வந்துடும். 

ஆடு வளர்ப்பு: Pregnant+Doe
சினைஆடு-தீவனம் எடுத்துக்கொள்ளும் காட்சி
பொதுவா பத்து பன்னெண்டு கிலோ இருக்கிற ஆட்டுக்கு 2,000 ரூபாயில் இருந்து 2,500 ரூபா வரைக்கும் விலை கிடைக்கும். கொறஞ்சது ஆறு மாசமாவது கொடி ஆட்டை வளர்த்தாதான் அந்த விலை கிடைக்கும். ஆனா, கலப்பின ஆட்டுக்கு நாலு மாசத்திலேயே இந்த விலை கிடைக்கும்’ என்று ஆடு வளர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

1 ஆட்டுக்கு 15 சதுரடி!

வளர்ந்த ஒரு ஆட்டுக்கு பதினைந்து சதுர அடி இடம் தேவைப்படும். நாம் வளர்க்க எண்ணும் ஆடுகளுக்கேற்ற அளவில் பட்டி அமைத்துக் கொள்ளலாம். செம்மறி ஆடாக இருந்தால், நைலான் வலையிலேயே பட்டி அமைக்கலாம். வெள்ளாடுகளுக்கு கம்பி வலை அல்லது சுவர் மூலமாகத்தான் அமைக்க வேண்டும்.

பட்டிக்குள் கிடாக்கள், குட்டிகள், சினை ஆடுகள், வளரும் ஆடுகள் என தனித்தனியாகப் பிரித்து அடைத்து வைப்பதற்காக தனித்தனிக் கொட்டகைகள் அமைக்க வேண்டும்.

ஆடு வளர்ப்பு: Jamunapari_pettai
இனம்: ஜமுனாபாரி (பெட்டைஆடு)
தண்ணீர் கவனம்!

காலை ஒன்பது மணி அளவில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு, கொட்டகைகளை சுத்தம் செய்துவிட வேண்டும். பதினோரு மணி அளவில் ஆடுகளுக்கு அடர் தீவனம் கொடுக்க வேண்டும். பின் கடலைப் பிண்ணாக்கு ஊறவைத்த தண்ணீர் கொடுக்க வேண்டும். தோட்டங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரைக் குடிக்கவிட்டால் நோய்கள் தொற்ற வாய்ப்பு இருக்கிறது. அதனால் தண்ணீர் சுத்தமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

வெயில் நேரத்தில் மேய்ச்சல் வேண்டாம்

வெயில் அதிகமாக அடிக்கும் மதிய நேரத்தில் ஆடுகளை மேய விடும் போது சோர்ந்து விடும். அந்த நேரங்களில் பட்டியில் அடைத்து விட்டு வேலிமசால், முயல் மசால், கோ-4, மாதிரியான பசுந்தீவனங்களை நறுக்கிப் போட வேண்டும். தினமும் வேறு வேறு தீவனங்களை மாற்றி மாற்றிக் கொடுப்பது நல்லது. பகல் மூன்று மணிக்குப் பிறகு  ஐந்தரை மணிவரை மேய்ச்சலுக்கு அனுப்பலாம்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பருவத்துக்கும் போட வேண்டிய தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டு வர வேண்டும்.

இரண்டு வருடத்தில் மூன்று ஈற்று எட்டு மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் பெட்டை ஆடுகள் பருவத்துக்கு வந்து விடும். அந்த சமயத்தில் நல்ல தரமான கிடாக்களோடு சேர்த்து விட வேண்டும். ஆட்டுக்கு சினைப் பருவம் ஐந்து மாதங்கள். குட்டி போட்ட இரண்டு மூன்று மாதங்களில் அடுத்த பருவத்திற்குத் தயாராகிவிடும்.

எட்டு மாதத்திற்கு ஒருமுறை குட்டி ஈனுவதால், சராசரியாக இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டி ஈனும். ஒரு ஈற்றுக்கு இரண்டுக் குட்டிகள் கிடைக்கும். நாற்பது நாட்கள் வரை குட்டிகளை தாய் ஆட்டிடம் பால் குடிக்க விட்டு பிறகு பிரித்துவிட வேண்டும். அப்போதுதான் தாய் ஆடு சீக்கிரம் பருவத்திற்கு வரும்.

ஆடு வளர்ப்பு: G6
சிரோஹி இன கிடாய்
ஆடு வளர்ப்பு: G7
ஜமுனாபாரி இன பெட்டை ஆடு
ஆடு வளர்ப்பு: G8
தலசேரி இன பெட்டை ஆடு

கீழே காணப்படுபவை ஆடுகளுக்காக வளர்க்கப்படும் தீவன வகைகள்:தீவனசோளம், மக்காச்சோளம், வேலிமசால், சீமைபுல் போன்றவை. 

ஆடு வளர்ப்பு: G13 
ஆடு வளர்ப்பு: G14
ஆடு வளர்ப்பு: G15


நிறையிருந்தால் பாராட்டுங்கள்.. குறையிருந்தால் குறிப்பிட்டுச் சொல்ல உங்களைத் தவிர யார் இருக்கமுடியும்? தயவுசெய்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கு இடவும்..


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஆடு வளர்ப்பு: Empty Re: ஆடு வளர்ப்பு:

Post by மாலதி Wed Dec 04, 2013 8:25 pm

மேட்டூர்: இரட்டிப்பு பலன் தருவதால், பரண் மேல் ஆடுகள் வளர்க்கும் முறை கிராமப்புறங்களில் அதிகரித்து வருகிறது.
கிராமபுறம் மற்றும் மலையடிவார பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர், விவசாயத் தொழிலுடன் மாடு, ஆடு மற்றும் கோழிகள் வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். இவர்கள், கால்நடைகளை மலையடிவார பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு வளர்த்தனர்.
ஆட்டு இறைச்சிக்கான தேவை அதிகரித்துள்ளதால், ஆடு வளர்ப்பதை பகுதிநேர தொழிலாக செய்த விவசாயிகள், தற்போது, முழுநேர தொழிலாக மாற்றியுள்ளனர். மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகளை, சமீபகாலமாக பரண் மேல் விட்டு, பாதுகாப்பாக வளர்க்க துவங்கியுள்ளனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகாவில் பெரும்பாலான கிராமங்கள் மலையடிவாரத்தில் உள்ளது. அப்பகுதி விவசாயிகளிடையே, பரண் மேல் ஆடு வளர்க்கும் முறை அதிகரித்து வருகிறது. மேட்டூர் அடுத்த, தார்க்காடு கிராமத்தில் பெரிய அளவில் பரண் அமைத்து, இரு ஆண்டுகளாக வெள்ளாடு வளர்க்கும் விவசாயி செந்தில்குமார் கூறியதாவது:
அதிக அளவில் லாபம் கிடைத்து விடும், என நினைத்து, முன் அனுபவம் இன்றி இந்த தொழிலுக்கு வந்தவர்கள் பலர் நஷ்டத்தையே சந்தித்துள்ளனர். பரண் மீதான ஆடு வளர்ப்பு, தாமதமாக லாபம் கொடுக்கும் தொழில். தற்போது, பரணில், 75 ஆடுகள் வளர்க்கிறேன். லாபம் கிடைக்க வேண்டுமென்றால், பருவமழை கை கொடுக்க வேண்டும். ஆடுகளை தாக்கும் நோய்களை கண்டறிந்து, உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இயற்கை கை கொடுக்காவிட்டால், நஷ்டத்தை சந்திக்கவும் தயாராக இருக்க வேண்டும்.
எங்கள் நிலத்தில் கோ-4, குதிரை மசால்,வேலி மசால் புல் வகைகளை சுழற்சி முறையில் வளர்த்து, ஆடுகளுக்கு தீவனமாக வழங்குகிறோம். வெள்ளாடுகள், 60 முதல், 70 கிலோ வரை வளரும். ஆனால், 25 கிலோ எடை அளவு வளர்ந்ததும் விற்பனை செய்து விட வேண்டும்.
ஆடுகளின் கழிவுகள், ஒரு டிராக்டர், மூவாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு ஆண்டில் கிடைக்கும் ஆடுகளின் கழிவுகளை கொண்டு, பராமரிப்பு செலவை சமாளித்து விடலாம். இதன் மூலம் இரட்டிப்பு வருவாய் ஈட்ட முடியும். போதிய விவசாய நிலம், தண்ணீர் வசதி, அனுபவம் இருந்தால், பரண் மேல் ஆடு வளர்ப்பதில் வருவாய் ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஆடு வளர்ப்பு: Empty Re: ஆடு வளர்ப்பு:

Post by மாலதி Wed Dec 04, 2013 8:26 pm

ஆடு வளர்ப்பு பண்ணை தொடங்க வங்கிகளில் கடன் பெறுவதற்கான வழிமுறைகள்


ஆடு வளர்ப்பு: Goats1
    தமிழகத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமி தான். கர்நாடக அரசின் நடவடிக்கைகளால், காவிரிப் பாசன பகுதிகளும் கூட, சமீபத்திய ஆண்டுகளில் தண்ணீர்ப் பற்றாக்குறையில் தத்தளிக்கின்றன. இதனால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு ஆடு வளர்ப்பு கை கொடுக்கும் என்று வழிகாட்டியிருக்கிறது திருச்சி வேளாண் கண்காட்சி.
  புதிய தலைமுறை சார்பில் திருச்சியில் நடத்தப்படும் வேளாண் கண்காட்சியில் விவசாயிகளின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்தவற்றில் ஒன்று ஆடு வளர்ப்பு. தலைச்சேரி, தென் ஆப்பிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட போயர் ஆகிய ரக ஆடுகள் வளர்ப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஒரு ஏக்கர் நிலத்தில் 300 ஆடுகள் வரை வளர்க்கலாம். நிலத்தின் ஒரு பகுதியில் ஆடுகளுக்கான பட்டியை உருவாக்கிவிட்டு, மற்றொரு பகுதியில் ஆடுகளுக்கான பசுந்தீவனத்தை பயிரிடலாம். 3 லட்ச ரூபாய் முதலீட்டில் ஆடு வளர்ப்பு பண்ணை தொடங்கினால், ஆண்டுதோறும் 5 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறலாம் என இந்த கண்காட்சியில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
"விளக்கம் நம்பிக்கை தந்தது":ஆடு வளர்ப்பு பண்ணை தொடங்க வங்கிகளில் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் தரப்பட்டது. ஆடு வளர்ப்பு குறித்து கண்காட்சியில் தரப்பட்ட தகவல்கள் பயனுள்ளதாக இருந்ததாகவும், விரைவில் ஆடு வளர்க்கும் பண்ணை தொடங்கப் போவதாகவும் அதனைப் பார்வையிட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
வங்கிகளில் கடன் பெறலாம்: தமிழகத்தில், கோவை, திருப்பூர், தாராபுரம், கோவில்பட்டி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே ஆடு வளர்ப்பு தொழில் லாபகரமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
  தற்போது, தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற காவிரிப் பாசன பகுதிகளிலும் தண்ணீர்த் தட்டுப்பாடு தாண்டவமாடுவதால் ஆடு வளர்ப்பது விவசாயிகளுக்கு கைகொடுக்கும் சிறந்த தொழிலாக இருக்கும் என கண்காட்சியை பார்வையிட்ட பலரும் கருத்து தெரிவித்தனர். இன்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆடு வளர்ப்பது குறித்து கண்காட்சியில் விளக்கம் பெற்றுச் சென்றனர்.
                               -இணைய செய்தியாளர் - s.குருஜி


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஆடு வளர்ப்பு: Empty Re: ஆடு வளர்ப்பு:

Post by மாலதி Wed Dec 04, 2013 8:27 pm

ஆடு வளர்ப்பு: Images

ஒரு தலைச்சேரி ஆடு 2வருஷத்தில் மூணு தடவை குட்டி போடும். ஒரு தடவைக்கு முதல்குட்டி வரை போடும். ஒரு குட்டிபிறக்கும் போதே கிலோவுக்கு குறையாமல் இருக்கும். மூணே மாசத்தில் அது 20 கிலோவாக வளர்ந்திடும். அடர்த்தியான பால் ஒரு நாளைக்கு லிட்டர் வரை கிடைக்கும். முழு வளர்ச்சியடைந்த கிடா வருஷம் முடிஞ்சா 50 முதல் 60 கிலோ வரை கூட எடை வரும். இறைச்சின்னு பார்த்தீங்கன்னா சாதாரண ஆடு ஒரு வருஷம் தாண்டினாலே கறியாக்கினால் வேக்காடு சரியா கிடைக்காது. ஆனாதலைச்சேரியைப் பொறுத்தவரை வருஷம் வளர்ந்த ஆட்டுக்கறி கூட படு ஸ்மூத்தா இருக்கும். சீக்கிரம் வெந்தும் விடும். அதனால இப்பவெல்லாம் தலைச்சேரி ஆடுகளுக்குத்தான் செம கிராக்கி!
-ஆடுகளைப் பற்றி பேச ஆரம்பித்தால் போதும் பெரிய விரிவுரையே நடத்துகிறார் அப்பாஸ். 

கோவை குனியமுத்தூரில்குறிஞ்சி காலனியில்குறிஞ்சி ஆட்டுப் பண்ணை நடத்தும் இளைஞர். பண்ணை என்றதும் ஏதோ ஏழெட்டு ஏக்கரில் ஆயிரக்கணக்கான ஆடுகளை வைத்து பெரிய அளவில்வியாபாரம் நடத்துகிறார் என்று எண்ணி விடாதீர்கள். வெறும் ஏழு சென்ட் வசிப்பிடத்தில் தன் குடும்பத்துக்கும் ஒரு வீடு அமைத்துக் கொண்டுஎஞ்சியுள்ள பகுதியில் சிறிய ஆட்டுப்பட்டியை உருவாக்கிக் கொண்டு சுயமாகத் தொழில் நடத்துகிறார். சொன்னால் நம்ப மாட்டீர்கள். இவரது சொற்ப இடத்தில் தலைச்சேரி மட்டுமல்லவால்குரும்பை,உஸ்மேனியாபதிசிரோய் என்று ஆடுகளில் லேட்டஸ்ட் ரகங்கள் எத்தனை உண்டோஅத்தனையும் இருக்கின்றன. தினம்தோறும் 20, 30ஆடுகள் புதிதாக வருகிறது என்றால் அதே அளவுக்கான ஆடுகள் வெளியாட்கள் விலை கொடுத்து வாங்கிச் சென்றபடி இருக்கிறார்கள்.
சின்ன வயசுல ஹாபியாகத்தான் ஆடு வளர்த்தறதுல ஈடுபட்டேன். இப்ப அதுவே தமிழ்நாடு முழுக்க மட்டுமல்லமற்ற மாநிலங்களுக்கும் சப்ளை செய்யக்கூடிய வியாபாரமா மாறிடுச்சு. சொன்னா ஆச்சர்யப்படுவீங்க. ஒரு ஆள் ஒரு தலைச்சேரி ஆடு செனையில வாங்கி வச்சு வளர்த்தார்ன்னா ஆறே மாசத்துல அது ஆறாகிஒரு வருஷத்தில் அதுவே முப்பத்தாறாகி இரண்டு வருஷத்தில் நூற்றுக்கணக்கில் பெருக்கம் செய்யக் கூடிய தொழில் இது. இறைச்சி கணக்குல ஒரு கிலோ ரூ. 250 கணக்கிட்டு மொத்த வியாபாரிக்கு கொடுத்தா கூட ஒரு ஆடு ஆறாயிரம் முதல் பத்தாயிரம் ரூபா வரை கூட விலை போகும். நூறு ஆடு கணக்குப் போட்டு பாருங்க பத்து இலட்சம் ரூபா. இரண்டு வருஷத்துல முதலீடு லட்சம் கழிச்சா கூட மீதி அஞ்சு இலட்சம் சுளையா கிடைக்கும்!” என்று நம்பிக்கை ததும்பப் பேசுகிறார். பொதுவாக ஆடுகள் வளர்ப்பு என்றால் குதிரை மசால் தழைஇளம் புற்கள்செடி கொடிகள்தான் போடணும். அதற்கு நிறைய செலவு பிடிக்கும். பசுந்தழைகள் வறட்சி காலத்தில் கிடைப்பது கடினம் என்று நினைக்கிறார்கள். இதற்கு அவசியமேயில்லை என்கிறார் அப்பாஸ்.ஆடுகளைப் பொறுத்தவரை நாம் எதை சாப்பிடக் கொடுத்துப் பழக்குகிறோமோ அதற்குத் தானாகவே பழகி விடும். பருத்திக் கொட்டை,புண்ணாக்குஅரிசிபருப்புவைக்கோல்வாழை மட்டை கழிவுகள்னு எதைவேண்ணா சாப்பிட்டு வளரும். அதிலும் நாங்கள் பண்ணையில் வைத்திருக்கிற ரகங்கள் எங்கு இருந்தாலும் அந்தச் சூழ்நிலைக்கேற்ப கொடுப்பதைச் சாப்பிட்டு வளரக்கூடிய ரகங்கள்!” என்றும் விளக்கினார் அப்பாஸ்.



 ஆடுகளில் வால் குரும்பை வருஷத்தில் 100 கிலோ வரை எடை வரும். தவிர அதன் முடி 12 அங்குலம் வரை வளருமாம். இந்த முடி கம்பளி நெய்தலுக்கு நல்ல விலை போகிறது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்த ரகத்திற்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். எங்கு வளர்த்தாலும் நோய்நொடிகள் அண்டாதாம். இதன் குட்டிகள் ஒரு மாதத்திலேயே முப்பது கிலோ வரை வளரக் கூடியவை. ஊர் ஊராக மேய்ச்சலுக்குக் கொண்டு சென்று பட்டி போட்டு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இதை வளர்த்து கோடீஸ்வரர்கள் ஆன கதைகள் உண்டாம்.
இந்த ஆடுகள் பட்டி போடும் இடத்தில் புழுக்கைகள் பெரிய அளவு இயற்கை உரமாகப் பயன்படுவதால் விவசாயிகள் பட்டி போடுவதற்குத் தனியாகப் பணமும் கொடுப்பதால்இதன் மூலம் உபரி வருமானமும் கிடைக்கிறது.
சிறுவகை என்று ஒரு ரகம். ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்டவை. வருஷத்துக்கு ஒரே குட்டி போடும். அபூர்வமாக குட்டிகள் போடும். 3மாசத்தில் 30 கிலோ எடை வந்து விடும். ஒரு வருஷத்தில் அறுபது கிலோ எடையை எட்டி விடும். ஆடு வளர்ப்பில் பிஸினஸுக்கு எது சரியோ அதையே தற்போது விரும்புகிறார்கள். ஆனால் விவசாயப் பெருமக்களுக்கு இது எட்டுவதில்லை. ஆடுகள் மூலம் அவர்களை ஈர்ப்பதும்அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதையுமே எனது இலட்சியமாகக் கொண்டு இயங்கி வருகிறேன்!” என்கிறார் அப்பாஸ்

அப்பாஸுடன் பேச :- 7667643724, 9865711155, 9944623619


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஆடு வளர்ப்பு: Empty Re: ஆடு வளர்ப்பு:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum