Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 4:56 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
30 வகை வேர்க்கடலை சமையல் ...
Page 1 of 1
30 வகை வேர்க்கடலை சமையல் ...
வேர்க்கடலை - எள்ளுப் பொடி
தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - ஒரு கப், வெள்ளை எள் - கால் கப், வறுத்த காய்ந்த மிளகாய் - 2, உப்பு, பெருங்காயத்தூள் - தேவையான அளவு.செய்முறை: கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
சாதத்துடன் இந்தப் பொடியைக் கலந்து சாப்பிடலாம். தோசை, இட்லிக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
வேர்க்கடலை பக்கோடா
தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை, அரிசி மாவு - தலா அரை கப், கடலை மாவு - ஒரு கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: கடலை மாவுடன் அரிசி மாவு, நெய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து வேர்க்கடலை சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் பிசைந்த மாவை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
ருசியில் அசத்தும் இந்த பக்கோடா.
வேர்க்கடலை சட்னி
தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - ஒரு கப், தனியா, சீரகம், எண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு.செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய், தனியா, சீரகத்தைப் போட்டு வறுக்கவும். நன்றாக ஆறியதும், வறுத்த வேர்க்கடலை, உப்பு சேர்த்து அரைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும்.
தோசைக்கு ஏற்ற அற்புதமான சட்னி ரெடி!
வேர்க்கடலை சிக்கி
தேவையானவை: சர்க்கரை, வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - தலா ஒரு கப், ரோஸ் எசன்ஸ் - அரை டீஸ்பூன்.செய்முறை: அடுப்பில் கடாயை காய வைத்து, அதில் சர்க்கரையைப் போட்டு வறுக்கவும். சர்க்கரை இளகி பழுப்பு நிறமாக வரும்போது, வேர்க்கடலை சேர்த்து ஒரு கிளறு கிளறவும். இதில் எசன்ஸ் சேர்த்து இறக்கி, தட்டில் கொட்டி, சப்பாத்தி குழவியால்
சமப்படுத்தவும்.துண்டுகள் போட்டு சாப்பிடவும்.
வேர்க்கடலை கட்லெட்
தேவையானவை: வறுத்த வேர்க்கடலைப் பொடி - ஒரு கப், துருவிய பனீர் - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு, மிளகாய்தூள் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: சிறிதளவு வேர்க்கடலைப் பொடியை தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள பொடி, துருவிய பனீர், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சைச் சாறு, மிளகாய்த்தூள் போட்டு, தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். இதில் சிறு உருண்டை எடுத்து கட்லெட் வடிவத்தில் செய்து கொள்ளவும். தனியாக வைத்துள்ள வேர்க்கடலைப் பொடியில் புரட்டி தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பி பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.
தக்காளி சாசுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
வேர்க்கடலை-சோயா மசாலா சப்பாத்தி
தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை மாவு (மிக்ஸியில் மாவாக்கிக் கொள்ளவும்), கோதுமை மாவு - தலா ஒரு கப், சோயா மாவு - கால் கப், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் (அ) நெய் - தேவையான அளவு.செய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தில் எல்லா மாவுகளையும் போட்டு, உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, கெட்டியாகப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற விடவும். இதை சிறிய அளவு உருண்டை யாக உருட்டி, சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளவும். தோசைக் கல் காய்ந்ததும், சிறிதளவு எண்ணெய் (அ) நெய் விட்டு, அதில் சப்பாத்திகளைப் போட்டு சுட்டெடுக்கவும்.
வேர்க்கடலை குணுக்கு
தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - ஒரு கப், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சரிசி - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: வேர்க்கடலை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சரிசி, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் ஆகியற்றை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெயைக் காய வைக்கவும். அரைத்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
வேர்க்கடலை-அவல்-பேபிகார்ன் சுண்டல்
தேவையானவை: வேர்க்கடலை - ஒரு கப், ஊற வைத்த கெட்டி அவல், பேபிகார்ன் துண்டுகள் - தலா கால் கப், கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், மாங்காய்த் துண்டுகள், தேங்காய்த் துண்டுகள் - தலா 2 டேபிள்ஸ்பூன், சோம்பு, பச்சை மிளகாய் துண்டுகள் - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: வேர்க்கடலையையும் பேபிகார்னையும் கையினால் மசியும் பதத்தில் வேக வைத்துக் கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு, மாங்காய்த் துண்டு, தேங்காய்த் துண்டு, சோம்பு ஆகியவற்றை கலந்து கொள்ளவும். எண்ணெயில் கடுகு, பச்சைமிளகாய் தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
வேர்க்கடலை கார சமோசா
தேவையானவை: வேர்க்கடலைப் பொடி - ஒரு கப், வேக வைத்து, தோல் உரித்து, மசித்த உருளைக்கிழங்கு - அரை கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், மைதா - 2 கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.வேர்க்கடலை வடை
தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலைப் பொடி - ஒரு கப், கடலைப்பருப்பு - கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: கடலைப்பருப்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் வேர்க்கடலைப் பொடி, வெங்காயத் துண்டுகள், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். இதிலிருந்து மாவை எடுத்து சிறு உருண்டைகளாக செய்து உள்ளங்கையில் வைத்து வடைகளாகத் தட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் வடைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக் கவும்.
வேர்க்கடலை இனிப்பு சமோசா
தேவையானவை: மைதா, வேக வைத்து கரகரப்பாக அரைத்த வேர்க்கடலை - தலா ஒரு கப், வெல்லத்தூள், தேங்காய் துருவல் - தலா அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: மைதா மாவில் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற விடவும். இதை சிறிய அப்பளங்களாக இட்டு, பாதியாக வெட்டி கூம்பு போல் செய்து கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, அதில் வெல்லத்தூளைப் போட்டு கரையவிட்டு வடிகட்டவும். மறுபடியும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். லேசாக உருட்டும் பதத்தில் வந்ததும் அதில் வேர்க்கடலைப் பொடி, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறி, சிறிது நேரம் ஆற விடவும். ஏற்கெனவே செய்து வைத்திருக்கும் மைதா கூம்பில் சிறிது வேர்க்கடலை - வெல்லக் கலவையை வைத்து அடைத்து மூடி, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
வேர்க்கடலை-ஜவ்வரிசி கிச்சடி
தேவையானவை: வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலைப் பொடி - ஒரு கப், ஜவ்வரிசி - அரை கப், வேக வைத்த உருளைக்கிழங்கு - 1 (நறுக்கிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் - 2 (நறுக்கிக் கொள்ளவும்), எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை போடவும். வேக வைத்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் துண்டுகளைப் போட்டு, சிறிது நேரம் வதக்கவும். பிறகு இதில் ஊற வைத்த ஜவ்வரிசி, உப்பு சேர்த்து, 5 நிமிடம் கிளறவும். வேர்க்கடலைப் பொடி சேர்த்துக் கிளறி, கீழே இறக்கும்போது கொத்தமல்லி தூவி எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.
வேர்க்கடலை வெஜிடபிள் சாலட்
தேவையானவை: ஊற வைத்து வேக வைத்த வேர்க்கடலை - ஒரு கப், பொடியாக நறுக்கிய வாழைத் தண்டு, வெள்ளரித் துண்டுகள், கேரட் துண்டுகள் - தலா கால் கப், தக்காளி துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு, கடுகு, உப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டீஸ்பூன்.செய்முறை: கடுகு, எண்ணெய், கொத்தமல்லி நீங்கலாக கொடுத்துள்ள மற்ற எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து கொள்ளவும். எண்ணெயில் கடுகு தாளித்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
Re: 30 வகை வேர்க்கடலை சமையல் ...
வேர்க்கடலை சுகியன்
தேவையானவை: வறுத்த வேர்க்கடலைப் பொடி - ஒரு கப், கோதுமை மாவு - 2 கப், வெல்லப் பொடி - கால் கப், தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவில் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, கொதித்ததும் அதில் வெல்லத்தைப் போட்டு கரைய விடவும். இதில் வேர்க்கடலைப் பொடி, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறி, கீழே இறக்கி நன்றாக ஆற விடவும். இதை சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும். இந்த உருண்டைகளை கரைத்து வைத்துள்ள கோதுமை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
செய்முறை: எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, தண்ணீர் விட்டு, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவிலிருந்து சிறிது எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு, உள்ளங்கை அளவுக்குத் தட்டி எண்ணெ யில் பொரித்தெடுக்கவும்.
கரகரப்பாகவும் டேஸ்டியாகவும் இருக்கும் இந்த தட்டை.
செய்முறை: கொத்தமல்லியுடன் தக்காளி சாறு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு அல்லது சீரகம் தாளிக்கவும். இதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு கேரட் சேர்த்து வதக்கி, வேர்க் கடலை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, இஞ்சி - பூண்டு விழுது, அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி - தக்காளி சாறை ஊற்றி நன் றாக கொதிக்க விடவும். கரம் மசாலாத்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்க வும்.
வறுத்து பொடிக்க: கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3.
செய்முறை: வறுக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். புளியை கெட்டியாகக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு 3 நிமிடம் வதக்கி, பிறகு புளியைக் கரைத்து விட்டு கொதிக்க விடவும். புளி வாசனை போனதும் தேங்காய் துருவல், வறுத்து அரைத்த பொடியைப் போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து, வேக வைத்த வேர்க்கடலை, உப்பு சேர்த்து, கொதித்ததும் இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து கொட்டி கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.
இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்... இட்லி, அடை, சப்பாத்தி, தோசைக்கும் ஏற்ற சைட் டிஷ்.
செய்முறை: பாலில் வேர்க்கடலையை 15 நிமிடம் ஊற வைத்து, தேங்காய் துரு வல் சேர்த்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் அரைத்த விழுதைப் போட்டு சர்க்கரை சேர்த்துக் கிளறி, ஏலக்காய்த்தூள் தூவி, கெட்டியாகக் கிளறவும். பிறகு நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி சமப்படுத்தி, சிறிது ஆறியதும் துண்டுகள் போடவும்.
எளிதில் செய்யக்கூடிய சுவையான பர்ஃபி இது.
தேவையானவை: வறுத்த வேர்க்கடலைப் பொடி - ஒரு கப், கோதுமை மாவு - 2 கப், வெல்லப் பொடி - கால் கப், தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவில் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, கொதித்ததும் அதில் வெல்லத்தைப் போட்டு கரைய விடவும். இதில் வேர்க்கடலைப் பொடி, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறி, கீழே இறக்கி நன்றாக ஆற விடவும். இதை சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும். இந்த உருண்டைகளை கரைத்து வைத்துள்ள கோதுமை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
வேர்க்கடலை - பொட்டுக்கடலை தட்டை
தேவையானவை: வேர்க்கடலை மாவு (வேர்க்கடலையை வறுத்து, தோல் நீக்கி, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்) - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - 4 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, தண்ணீர் விட்டு, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவிலிருந்து சிறிது எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு, உள்ளங்கை அளவுக்குத் தட்டி எண்ணெ யில் பொரித்தெடுக்கவும்.
கரகரப்பாகவும் டேஸ்டியாகவும் இருக்கும் இந்த தட்டை.
வேர்க்கடலை-தக்காளி கிரேவி
தேவையானவை: வேக வைத்த வேர்க்கடலை - ஒரு கப், தக்காளி சாறு - முக்கால் கப், கொத்தமல்லி - ஒரு கட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட் - தலா கால் கப், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - காரத்துக்கேற்ப, இஞ்சி-பூண்டு விழுது, கடுகு (அ) சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: கொத்தமல்லியுடன் தக்காளி சாறு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு அல்லது சீரகம் தாளிக்கவும். இதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு கேரட் சேர்த்து வதக்கி, வேர்க் கடலை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, இஞ்சி - பூண்டு விழுது, அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி - தக்காளி சாறை ஊற்றி நன் றாக கொதிக்க விடவும். கரம் மசாலாத்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்க வும்.
வேர்க்கடலை-சின்ன வெங்காயம் புளிப்புக் கூட்டு
தேவையானவை: வேக வைத்த வேர்க்கடலை - ஒரு கப், சாம்பார் வெங்காயம் - ஒன்றரை கப், புளி - எலுமிச்சை அளவு (ஊற வைக்கவும்), தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.வறுத்து பொடிக்க: கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3.
செய்முறை: வறுக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். புளியை கெட்டியாகக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு 3 நிமிடம் வதக்கி, பிறகு புளியைக் கரைத்து விட்டு கொதிக்க விடவும். புளி வாசனை போனதும் தேங்காய் துருவல், வறுத்து அரைத்த பொடியைப் போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து, வேக வைத்த வேர்க்கடலை, உப்பு சேர்த்து, கொதித்ததும் இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து கொட்டி கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.
இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்... இட்லி, அடை, சப்பாத்தி, தோசைக்கும் ஏற்ற சைட் டிஷ்.
வேர்க்கடலை-தேங்காய் பர்ஃபி
தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை, தேங்காய் துருவல் - தலா ஒரு கப், பால், சர்க்கரை - தலா 2 கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - தேவையான அளவு.செய்முறை: பாலில் வேர்க்கடலையை 15 நிமிடம் ஊற வைத்து, தேங்காய் துரு வல் சேர்த்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் அரைத்த விழுதைப் போட்டு சர்க்கரை சேர்த்துக் கிளறி, ஏலக்காய்த்தூள் தூவி, கெட்டியாகக் கிளறவும். பிறகு நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி சமப்படுத்தி, சிறிது ஆறியதும் துண்டுகள் போடவும்.
எளிதில் செய்யக்கூடிய சுவையான பர்ஃபி இது.
Re: 30 வகை வேர்க்கடலை சமையல் ...
வேர்க்கடலை பொடிமாஸ்
தேவையானவை: வேக வைத்த வேர்க்கடலை - 2 கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, எலுமிச்சைச் சாறு, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேக வைத்த வேர்க் கடலையை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகைப் போட்டு, வெடித்ததும் வேக வைத்து பொடித்த வேர்க்கடலை, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள், உப்பு போட்டு, மூன்று நிமிடங்கள் கிளறவும். அடுப்பிலிருந்து இறக்கும்போது எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.
செய்முறை: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, மிளகாய் சேர்த்து அரைத்து, வேர்க்கடலை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் பட்டாணி, உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். நன்றாக ஆறியதும், நீள துண்டுகளாக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
செய்முறை: கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும். பிறகு இதில் தேவையான தண்ணீர் விட்டு, உப்பை போட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் தேங்காய் துருவல், வேர்க்கடலை ரவை, கோதுமை ரவையைப் போட்டு 2 நிமிடம் கிளறவும். சிறிது நேரம் ஆறியதும், கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்.
சூடாக சாப்பிட... சூப்பராக இருக்கும் இந்தக் கொழுக்கட்டை!
செய்முறை: கோதுமை மாவில் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். வேர்க்கடலை விழுதுடன், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். கோதுமை மாவை சிறிய பூரிகளாக இட்டு, நடுவில் சிறிதளவு வேர்க்கடலை விழுதை வைத்து மூடி, மறுபடியும் லேசாக இடவும். எண்ணெயைக் காய வைத்து, அதில் செய்து வைத்துள்ள பூரிகளைப் பொரித்தெடுக்கவும்.
அருமையான ருசியுடன் இருக்கும் இந்த பூரி.
செய்முறை: வேர்க்கடலையை வேக வைத்து கெட்டியாக அரைத்து, வாழைப்பழத்தை மசித்து இதனுடன் சேர்த்து, நெய் விட்டு நன்றாகப் பிசையவும். இதை உருண்டைகளாக செய்து காயும் எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். சர்க்கரையை கம்பி பாகு வைத்து இறக்கி, அதில் உருண்டைகளை ஊற வைத்து பரிமாறவும்.
தேவையானவை: வேக வைத்த வேர்க்கடலை - 2 கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, எலுமிச்சைச் சாறு, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேக வைத்த வேர்க் கடலையை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகைப் போட்டு, வெடித்ததும் வேக வைத்து பொடித்த வேர்க்கடலை, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள், உப்பு போட்டு, மூன்று நிமிடங்கள் கிளறவும். அடுப்பிலிருந்து இறக்கும்போது எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.
வேர்க்கடலை-வெஜிடபிள் ஃபிங்கர் ஃப்ரை
தேவையானவை: வேக வைத்த வேர்க்கடலை - 2 கப், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா கால் கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி கலவை - கால் கப், காய்ந்த மிளகாய் - 4, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, மிளகாய் சேர்த்து அரைத்து, வேர்க்கடலை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் பட்டாணி, உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். நன்றாக ஆறியதும், நீள துண்டுகளாக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
வேர்க்கடலை ரவை-கோதுமை ரவை பிடி கொழுக்கட்டை
தேவையானவை: வேர்க்கடலை ரவை - ஒரு கப் (வேர்க்கடலையை ரவை போல பொடித்துக் கொள்ளவும்), கோதுமை ரவை - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் - 3, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும். பிறகு இதில் தேவையான தண்ணீர் விட்டு, உப்பை போட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் தேங்காய் துருவல், வேர்க்கடலை ரவை, கோதுமை ரவையைப் போட்டு 2 நிமிடம் கிளறவும். சிறிது நேரம் ஆறியதும், கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்.
சூடாக சாப்பிட... சூப்பராக இருக்கும் இந்தக் கொழுக்கட்டை!
வேர்க்கடலை பூரி
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், வேக வைத்து, அரைத்த வேர்க்கடலை விழுது - அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: கோதுமை மாவில் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். வேர்க்கடலை விழுதுடன், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். கோதுமை மாவை சிறிய பூரிகளாக இட்டு, நடுவில் சிறிதளவு வேர்க்கடலை விழுதை வைத்து மூடி, மறுபடியும் லேசாக இடவும். எண்ணெயைக் காய வைத்து, அதில் செய்து வைத்துள்ள பூரிகளைப் பொரித்தெடுக்கவும்.
அருமையான ருசியுடன் இருக்கும் இந்த பூரி.
வேர்க்கடலை ஸ்பெஷல் ஜாமூன்
தேவையானவை: வேர்க்கடலை - ஒரு கப், நன்கு பழுத்த வாழைப் பழம் - 1, சர்க்கரை - ஒரு கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண் ணெய் - தேவையான அளவு.செய்முறை: வேர்க்கடலையை வேக வைத்து கெட்டியாக அரைத்து, வாழைப்பழத்தை மசித்து இதனுடன் சேர்த்து, நெய் விட்டு நன்றாகப் பிசையவும். இதை உருண்டைகளாக செய்து காயும் எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். சர்க்கரையை கம்பி பாகு வைத்து இறக்கி, அதில் உருண்டைகளை ஊற வைத்து பரிமாறவும்.
Re: 30 வகை வேர்க்கடலை சமையல் ...
வேர்க்கடலை - கார்ன் கபாப்
தேவையானவை: வேகவைத்து கரகரப்பாக அரைத்த வேர்க்கடலை - 2 கப், வேக வைத்து துருவிய உருளைக்கிழங்கு - அரை கப், பச்சை மிளகாய் துண்டுகள், இஞ்சித் துருவல் - தலா 2 டீஸ்பூன், பேபிகார்ன் - 10, மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பேபிகார்ன், எண்ணெயைத் தவிர, மற்ற எல்லா பொருட்களையும் நன்றாகக் கலந்து கொள்ளவும். இதை சிலிண்டர் வடிவத்தில் செய்து ஒரு கார்னின் பாதி வரை மூடவும். தோசைக்கல்லை காய வைத்து, அதில் செய்து வைத்துள்ள மசாலா கார்னை போட்டு, இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும்.
வித்தியாசமான டேஸ்ட்டில் இருக்கும் இந்த டிபன், மாலை நேரத்துக்கு உகந்தது.
செய்முறை: வேர்க்கடலை, பூண்டு இரண்டையும் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதில், சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். பாஸ்தாவை கொதிக்கும் தண்ணீரில் 5 முதல் 8 நிமிடம் வேக விடவும். தண்ணீரை வடிகட்டி குழாயின் அடியில் பிடித்து குளிர்ந்த நீரில் அலசி, சிறிது நேரம் ஆற விடவும். பிசைந்து வைத்துள்ள வேர்க்கடலை கலவையிலிருந்து சிறிது எடுத்து ஒவ்வொரு பாஸ்தாவிலும் அடைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தை வறுத்து, வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகள், தக்காளி துண்டுகள் சேர்த்து வதக்கி, பாஸ்தாக்களை சேர்த்து, உப்பு, கரம் மசாலாத்தூள் போட்டு,- 5 நிமிடம் நன்றாகக் கிளறி இறக்கவும்.
செய்முறை: புளியில் 4 கப் தண்ணீர் விட்டு, 10 நிமிடம் ஊற விடவும். பிறகு நன்றாகக் கரைத்து வடிகட்டி, அதில் அவலை 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து, ஊறிய அவல், உப்பு போட்டு 3 நிமிடம் கிளறவும். பிறகு வேர்க்கடலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
புளிப்பு - கார சுவையில் அருமையாக இருக்கும் இந்த உப்புமா.
செய்முறை: எல்லா பருப்புகளையும் நன்றாக வேக விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து நறுக்கிய காய்கறிகள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, சேர்த்து வெந்த பருப்பை கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
செய்முறை: எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, தேவையான தண்ணீர் விட்டு, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் பிழிந்து, பொன்னிறமாக எடுக்க வும்.
செய்முறை: அரிசி வகைகள், வேர்க்கடலை இரண்டையும் தனித் தனியாக ஊற வைத்து ஒன்றாக சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். காய்களை சிறிது எண்ணெயில் வதக்கி, மாவில் கலந்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
பணியாரக் குழியில் நெய் ஊற்றி, அதில் கலந்த மாவை ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு பொன்னிறமாக எடுக்கவும்.
செய்முறை: வேர்க்கடலை உள்ளிட்ட பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊற வைத்து, உப்பு, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், இஞ்சித் துருவல், கொத்தமல்லி, பெருங்காயத்தூள் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதை இட்லி மாவுடன் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, மிளகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்துக் கொட்டி கலக்கவும்.
இட்லி தட்டில் மாவை ஊற்றி, வெந்ததும் இறக்கவும். மாவு புளித்து விட்டாலும் இப்படி செய்து கொடுங்கள். தட்டில் ஒரு இட்லியும் மிஞ்சாது.
தேவையானவை: வேகவைத்து கரகரப்பாக அரைத்த வேர்க்கடலை - 2 கப், வேக வைத்து துருவிய உருளைக்கிழங்கு - அரை கப், பச்சை மிளகாய் துண்டுகள், இஞ்சித் துருவல் - தலா 2 டீஸ்பூன், பேபிகார்ன் - 10, மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பேபிகார்ன், எண்ணெயைத் தவிர, மற்ற எல்லா பொருட்களையும் நன்றாகக் கலந்து கொள்ளவும். இதை சிலிண்டர் வடிவத்தில் செய்து ஒரு கார்னின் பாதி வரை மூடவும். தோசைக்கல்லை காய வைத்து, அதில் செய்து வைத்துள்ள மசாலா கார்னை போட்டு, இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும்.
வித்தியாசமான டேஸ்ட்டில் இருக்கும் இந்த டிபன், மாலை நேரத்துக்கு உகந்தது.
வேர்க்கடலை-பாஸ்தா மசாலா
தேவையானவை: வறுத்த வேர்க்கடலை - ஒரு கப், பாஸ்தா - ஒரு பாக்கெட், தக்காளி துண்டுகள், வெங்காய துண்டுகள் - தலா கால் கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 4 பல், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: வேர்க்கடலை, பூண்டு இரண்டையும் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதில், சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். பாஸ்தாவை கொதிக்கும் தண்ணீரில் 5 முதல் 8 நிமிடம் வேக விடவும். தண்ணீரை வடிகட்டி குழாயின் அடியில் பிடித்து குளிர்ந்த நீரில் அலசி, சிறிது நேரம் ஆற விடவும். பிசைந்து வைத்துள்ள வேர்க்கடலை கலவையிலிருந்து சிறிது எடுத்து ஒவ்வொரு பாஸ்தாவிலும் அடைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தை வறுத்து, வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகள், தக்காளி துண்டுகள் சேர்த்து வதக்கி, பாஸ்தாக்களை சேர்த்து, உப்பு, கரம் மசாலாத்தூள் போட்டு,- 5 நிமிடம் நன்றாகக் கிளறி இறக்கவும்.
வேர்க்கடலை-அவல் புளி உப்புமா
தேவையானவை: வறுத்த வேர்க்கடலை - ஒரு கப், கெட்டி அவல் - 2 கப், புளி - எலுமிச்சைச் அளவு, காய்ந்த மிளகாய் - 3, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: புளியில் 4 கப் தண்ணீர் விட்டு, 10 நிமிடம் ஊற விடவும். பிறகு நன்றாகக் கரைத்து வடிகட்டி, அதில் அவலை 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து, ஊறிய அவல், உப்பு போட்டு 3 நிமிடம் கிளறவும். பிறகு வேர்க்கடலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
புளிப்பு - கார சுவையில் அருமையாக இருக்கும் இந்த உப்புமா.
வேர்க்கடலை பருப்பு மசாலா
தேவையானவை: ஊற வைத்த வேர்க்கடலை, ஊற வைத்த ராஜ்மா, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், வெள்ளை உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா அரை கப், துண்டுகளாக்கிய பச்சை மிளகாய் - 3, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - காரத்துக்கு ஏற்ப, கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: எல்லா பருப்புகளையும் நன்றாக வேக விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து நறுக்கிய காய்கறிகள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, சேர்த்து வெந்த பருப்பை கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
வேர்க்கடலை முறுக்கு
தேவையானவை: வறுத்து, அரைத்த வேர்க்கடலை மாவு - ஒரு கப், வறுத்து, பொடித்த பயத்தம்பருப்பு மாவு - அரை கப், பொட்டுக்கடலை மாவு - ஒரு கப், பெருங்காயத்தூள் - சிறிதளவு, வெள்ளை எள் - அரை டீஸ்பூன். நெய் - 3 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, தேவையான தண்ணீர் விட்டு, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் பிழிந்து, பொன்னிறமாக எடுக்க வும்.
வேர்க்கடலை கார பணியாரம்
தேவையானவை: சிவப்பு அரிசி, பச்சரிசி - தலா ஒரு கப், வேர்க்கடலை - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கேரட், கோஸ் - தலா 4 கப், பச்சை மிளகாய் - 2 (நறுக்கிக் கொள்ளவும்), உப்பு, பெருங்காயத்தூள், நெய் - தேவையான அளவு.செய்முறை: அரிசி வகைகள், வேர்க்கடலை இரண்டையும் தனித் தனியாக ஊற வைத்து ஒன்றாக சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். காய்களை சிறிது எண்ணெயில் வதக்கி, மாவில் கலந்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
பணியாரக் குழியில் நெய் ஊற்றி, அதில் கலந்த மாவை ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு பொன்னிறமாக எடுக்கவும்.
வேர்க்கடலை பருப்பு இட்லி
தேவையானவை: வேர்க்கடலை - அரை கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து - கால் கப், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், இட்லி மாவு - 3 கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, உப்பு, பெருங்காயத்தூள், எண்ணெய் - தேவையான அளவு, கடுகு, மிளகு, உளுத்தம்பருப்பு (தாளிக்க), சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்.செய்முறை: வேர்க்கடலை உள்ளிட்ட பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊற வைத்து, உப்பு, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், இஞ்சித் துருவல், கொத்தமல்லி, பெருங்காயத்தூள் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதை இட்லி மாவுடன் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, மிளகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்துக் கொட்டி கலக்கவும்.
இட்லி தட்டில் மாவை ஊற்றி, வெந்ததும் இறக்கவும். மாவு புளித்து விட்டாலும் இப்படி செய்து கொடுங்கள். தட்டில் ஒரு இட்லியும் மிஞ்சாது.
Similar topics
» கிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மா
» சமையல் குறிப்புகள் 30 வகை கேரள சமையல் !
» 30 நாள் 30 வகை சமையல்,30 வகை கர்நாடகா சமையல் -
» பிராமணர் சமையல்
» 30 வகை கிராமிய சமையல்
» சமையல் குறிப்புகள் 30 வகை கேரள சமையல் !
» 30 நாள் 30 வகை சமையல்,30 வகை கர்நாடகா சமையல் -
» பிராமணர் சமையல்
» 30 வகை கிராமிய சமையல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|