TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:48 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 11:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கரன்சி கல்லூரிகளின் தில்லுமுல்லு 1 - புரோக்கர்கள் பிடியில் மூச்சுத் திணறும் மாணவர்கள்

Go down

கரன்சி கல்லூரிகளின் தில்லுமுல்லு 1 - புரோக்கர்கள் பிடியில் மூச்சுத் திணறும் மாணவர்கள்  Empty கரன்சி கல்லூரிகளின் தில்லுமுல்லு 1 - புரோக்கர்கள் பிடியில் மூச்சுத் திணறும் மாணவர்கள்

Post by அருள் Mon Jul 08, 2013 2:44 pm

ஊரெங்கும் புரோக்கர்கள், தீவிர சோதனைக்குப் பின் இருட்டு அறைக்குள் ஆரம்பிக்கிறது பேரம். வருடத்துக்கு 3 ஆயிரம் கோடி சர்வ சாதாரண​மாகப் புழங்கும் பிசினஸ் இது. ஏதோ கடத்தல் பிசினஸ் என்று நினைத்துவிட வேண்டாம். பொறியியல் கல்லூரி அட்மிஷன் இப்படித்தான் நடக்கிறது. 
 
கேரள மாநிலம், கண்ணூரைச் சேர்ந்தவர் தீபக். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொறி​யியல் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். சில மாதங்களுக்கு முன்பு ராசிபுரம் அருகே பைக்கில் சென்ற தீபக் மீது, கார் ஒன்று மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்பது விசாரணைக்குப் பிறகுதான் தெரியவந்தது. அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையில் நடந்த மோதலில், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் காரை ஏற்றிக் கொலைசெய்ததாக போலீஸ் காரணம் சொன்னது. ஆனால், அதே கல்லூரியில் படிக்கும் சக மாணவர்களோ, 'மாணவர்கள் சேர்க்கையில் கமிஷன் வாங்குவதில் ஏற்பட்ட மோதலில்தான், இந்தக் கொலை நடந்துள்ளது’ என்று அதிரவைக்கும் தகவலைச் சொன்னார்கள்.
 
[You must be registered and logged in to see this image.]
 
அதாவது கல்வியில் குவியும் கரன்சி, கொலை வரைக்கும் போய்விட்டது. பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் முழுவீச்சில் நடந்துவருகிறது. மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று தங்களுக்குப் பிடித்த கல்லூரியைத் தேர்வுசெய்து வருகிறார்கள். அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ஓர் ஆண்டுக் கட்டணம் 40 ஆயிரம் ரூபாய். தனியார் கல்லூரி​களில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 70 ஆயிரம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் தனியார் பொறியியல் கல்லூரிகளில் லட்சங்களில் அல்லவா பணம் விளையாடுகிறது. பொறியியல் கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்க எப்படி எல்லாம் மோசடிகள் நடக்கின்றன என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டவே இந்தக் கட்டுரை.
 
சென்னையில் உள்ள ஒரு பிரபல பொறியியல் கல்லூரி அது. இங்கே தங்கள் பிள்ளைகள் படிப்பதாக வெளியில் சொல்வதையே பெற்றோர்கள் பெருமையாக நினைப்பார்கள். இங்கே சீட் வாங்குவது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. கல்லூரியின் சேர்மன், செகரெட்டரி என நீங்கள் யாரையும் நேராக சந்திக்கவே முடியாது. அந்தக் கல்லூரியில் அட்மிஷனுக்கு என்ற ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பார். அவரைச் சந்திக்க பெற்றோரும் மாணவரும் செல்வதற்கு முன்பாக, முழுமையாகச் சோதனை செய்வார்கள். செல்போன், வாட்ச், பேனா உட்பட உங்களிடம் இருக்கும் அத்தனை பொருட்களையும் வாங்கிவைத்துக் கொண்டுதான் உள்ளே அனுமதிப்பார்கள். அதிக வெளிச்சம் இல்லாத அறையாக அது இருக்கும். உள்ளே நடக்கும் எதையும் அவர்கள் எதைவைத்தும் பதிவுசெய்துவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுதான் இதற்குக் காரணம்.
 
[You must be registered and logged in to see this image.]
 
மாணவனின் மதிப்பெண் குறையக் குறைய, டொனேஷன் அதிகமாகும். டொனேஷன் 15 லட்சத்தில் தொடங்கி, படிப்படியாகக் குறைப்பார்கள். அதிகபட்சம் ஒரு நிமிடத்துக்குள் பேச்சுவார்த்தை முடிந்துவிடும். பேசுபவர்களின் சாமர்த்தியத்தைப் பொறுத்து, டொனேஷன் நிர்ணயமாகும். அழுக்கான ஒரு துண்டுச் சீட்டில், பென்சிலில் சம்பந்தமே இல்லாமல் எதையோ கிறுக்கிக் கொடுப்பார்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு போய், அவர்கள் கைகாட்டும் ஒருவரைச் சந்திக்க வேண்டும்.
 
கிறுக்கப்பட்டச் சீட்டைப் பார்த்ததும், 'ஏழு லட்சம் கொடுங்க சார்...’ என்று அட்மிஷன் அதிகாரி நிர்ணயித்த தொகையைச் சரியாகக் கேட்பார். ஏழு லட்சத்தைக் கட்டிய பிறகு, அங்கே இன்னொரு துண்டு சீட்டு வழங்கப்படும். அந்த சீட்டை எடுத்துக்கொண்டு, கல்லூரி கேஷியரிடம் போனால், அங்கே அரசு நிர்ணயித்த தொகையை கல்லூரி கட்டணமாக வாங்கிக்கொண்டு உங்களுக்கு ரசீது கொடுப்பார்கள். தவிர, மெஸ் பீஸ், பஸ் பீஸ் என்று வருடத்துக்கு 35 ஆயிரத்தில் இருந்து, 75 ஆயிரம் வரை வசூலிக்கப்படும். கல்லூரிக்கு அருகிலேயே வீடு இருந்தாலும் கல்லூரி பஸ்ஸைப் பயன்படுத்தியாக வேண்டும். அதே போல, காலை, மதிய உணவு கண்டிப்பாக கல்லூரியில் கொடுப்பதைத்தான் சாப்பிட வேண்டும் என்பது இங்கே எழுதப்படாத விதி. அதாவது மக்களின் கல்வித் தேவையை வைத்துக் கட்டாயப்படுத்திக் காசு பறிக்கின்றன இந்தக் கல்வி நிறுவனங்கள்.
 
[You must be registered and logged in to see this image.]
 
நாமக்கல், சேலம், கோவை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் படிக்கிறார்கள். புதிய மாணவர்களைச் சேர்க்க இங்கே புரோக்கர்களாகச் செயல்படுவதே அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள்தான். கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள், அவர்கள் பகுதியைச் சேர்ந்த மாணவர்களைப் பேசி அழைத்துவர வேண்டும். அப்படி ஒரு மாணவனைக் கொண்டுவந்து சேர்த்தால், சீனியர் மாணவனுக்கு கல்லூரி நிர்வாகம் 20 ஆயிரம் ரூபாய் வரை கமிஷன் கொடுக்கிறதாம். நாமக்கல் மாவட்டத்தில் இதைப் பல மாணவர்கள் பிசினஸாகவே செய்கிறார்கள். கேரள மாநிலத்தில் இருந்து அட்மிஷனுக்காக ஒரு மாணவன் நாமக்கல் வந்திருக்கிறான். அவனை இங்கு அழைத்து வந்தது யார்? என்று இரண்டு சீனியர் மாணவர்கள் மத்தியில் மோதல் கிளம்பியது. அதாவது பேட்டை தாதாக்களைப் போல இவர்கள் மோதிக்கொண்டார்கள். அந்த மோதலின் உச்சகட்டம்தான், கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட சம்பவம்.  பைக்கில் சென்ற மாணவனை, மற்ற மூன்று மாணவர்கள் கார் ஏற்றிக் கொலைசெய்த பயங்​கரத்தை, விபத்து, கோஷ்டித் தகராறு என்று சொல்லி மழுப்பி மறைத்துவிட முடியாது.  பேராசை பிடித்த ஒருசில கல்வித் தந்தைகளின் கஜானாவில் குவிப்பதற்காக நடந்த கொலை இது. சென்னை புறநகரில் சில மாதங்களுக்கு முன்னால் இப்படிப்பட்ட புரோக்கர்கள் துப்பாக்கி வைத்துக்கொண்டு சுட்டுக்கொண்ட காட்சியையும் பார்த்தோம்.
 
கேரளாவில் இருந்து நாமக்​கல்லுக்குப் படிக்கவந்த ஒரு மாணவன், நான்கு வருடங்களாகத் தொடர்ந்து மாணவர்களை சேர்த்துவிடும் ஏஜென்ட் ஆக செயல்பட்டு வந்துள்ளான். கடந்த ஆண்டு மட்டும் அந்த மாணவன், 17 மாணவர்களைச் சேர்த்து​விட்டதால், கல்லூரி நிர்வாகம் அந்த மாணவனுக்கு புதிய கார் ஒன்றை வாங்கிக்கொடுத்துள்ளது. இப்படி ஏஜென்ட் ஆக செயல்பட்ட மாணவர்கள் பலர், படிப்பு முடிந்த பிறகும் கேரளாவுக்குத் திரும்பாமல், நாமக்கல் மாவட்டத்திலேயே தங்கிவிட்டனர். நாமக்கல், ராசிபுரம், சேலம் என்று பல பகுதிகளிலும் எஜுகேஷன் கன்சல்டன்சி ஏஜென்சி என்ற பெயரில் தொடங்கி, அட்மிஷனுக்கு மாணவர்களை சட்டபூர்வமாகவே பிடித்துத் தரத் தொடங்கிவிட்டனர்.  வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஒரு மாணவனுக்குப் பொறியியல் கல்லூரியில் சேர்க்க, மாணவர்களிடம் 20 ஆயிரமும், கல்லூரித் தரப்பில் 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் வரையிலும் வாங்குகிறார்கள் இந்த புரோக்கர்கள்.
 
[You must be registered and logged in to see this image.]
 
ஒரு காலத்தில் சமூக அமைப்புகளும், கிறிஸ்தவ நிறுவனங்களும் கல்லூரிகளை ஆரம்பித்தார்கள். அன்று அவர்கள் தேவைக்கான கட்டணங்களை வாங்கினார்கள். ஆனால் இன்று பல மடங்கு அதிகமாக வசூல்செய்வதாக பொதுமக்கள் சொல்​கிறார்கள். இதற்குக் காரணம், இன்று கல்வி என்பது வர்த்தகம். அதனால்தான் டெண்டர் எடுக்கத் துடிதுடிப்பதுபோல மாணவர்களைப் பிடிக்கவும் அலைகிறார்கள்.
 
- தில்லுமுல்லு தொடரும்
[You must be registered and logged in to see this image.]
 
 
- ஜூனியர் விகடன்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» யாழ் பல்கலைக்கழத்தின் 293 மாணவர்கள் இராணுவத்தினரின் பிடியில்!
» தீண்டாமையின் பிடியில் சிக்கிய பள்ளி மாணவர்கள்: தினமும் ஒன்பது கி.மீ., நடந்து செல்லும் அவலம்
» ஐ.பி.எல். சூதாட்டம்: டோனி-ரெய்னாவின் தொடர்பை அம்பலமாக்கிய சென்னை புரோக்கர்கள்..
» தமிழகத்திலுள்ள பல் மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல்.
» சென்னையிலுள்ள 3 கல்லூரிகளின் அங்கீகாரங்களை ரத்துசெய்ய பரிந்துரை-

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum