TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பலவீனர்களிடமும் கருணை செய்யுங்கள்

Go down

பலவீனர்களிடமும் கருணை செய்யுங்கள் Empty பலவீனர்களிடமும் கருணை செய்யுங்கள்

Post by Tamil Sat Jan 09, 2010 7:06 pm

பலவீனர்களிடமும் கருணை செய்யுங்கள் Tblanmegamnews_69594973326
ஒரு
செல்வந்தரின் வீட்டில் மிகப்பெரிய விருந்து நடக்க இருந்தது. அவரது
வீட்டில் ஏராளமான பாத்திரங்கள் இருந்தன. அதில் ஒன்றான தங்கப்பாத்திரம்
செல்வந்தரை அழைத்து, ""நான் ஒளியாய் பிரகாசிக்கிறேன். என் மதிப்போ
மிகப்பெரிது. நான் எல்லாவற்றையும் சரியாய் செய்கிறவன். என் அழகும், என்
ஜொலிப்பும் மற்ற எல்லோரைக் காட்டிலும் மிஞ்சியது. உம்மைப்போன்ற எஜமானர்
களின் கவுரவத்தை பொன் பாத்திரமாகிய நானே காப்பாற்றுவேன்,'' என்றது. அந்த
பாத்திரத்திற்கு பதில் ஏதும் சொல்லாமல் செல்வந்தர், அதை தாண்டிச்
சென்றார். அப்போது ஒடுக்கமான, ஆனால் உயரமான ஒரு வெள்ளிப் பாத்திரத்தை அவர்
பார்த்தார். அந்த பாத்திரம் அவரிடம், ""என் அன்பார்ந்த எஜமானே! நான்
உம்மையே சேவிப்பேன். உமக்கும், உம் விருந்தினர்களுக்கும் திராட்சை ரசத்தை
ஊற்றித் தருவேன். நீர் உண்ணும்போது என்னைப் பார்த்துப் பார்த்து
பெருமைப்படலாம். என் மீது செதுக்கப் பட்டிருக்கும் சிற்ப வேலை, எவ்வளவு
அழகு என்பதை இங்கு வரும் எல்லோரும் புகழப்போகிறார்கள். நான் உமக்கு
நிச்சயமாக பாராட்டுதலை பெற்றுத் தருவேன்,'' என்றது. அதையும் தாண்டிச்
சென்றார் செல்வந்தர். இப்போது, ஒரு வெண்கல பாத்திரம் அவரை மறித்தது. அது
கண்ணாடி போல மினுமினுத்தது.
""எஜமானே! நான் மஞ்சள் நிறமாக மிகுந்த
பளபளப்புடன் அமர்ந்திருக்கிறேன். என்னைத் தட்டினால் ஓசை எழும். அது இனிய
இசையாக இருக்கும். என்னையே இந்த விருந்திற்கு பயன்படுத்துங்கள்,'' என்று
கேட்டது.
அதற்கும் செல்வந்தர் பதில் சொல்லவில்லை. இதையடுத்து,
பளிங்கு பாத்திரம், மர பாத்திரம் ஆகியவற்றையெல்லாம் செல்வந்தர்
பார்த்தார். அவையும் தங்கள் சிறப்புகளை எடுத்துக்கூறின. ஆனால்,
எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு செல்வந்தர், களிமண் பாத்திரத்தின் அருகில்
வந்தார். அதை பரிவோடு பார்த்தார். அது ஏக்கத்துடன் அவரைப் பார்த்தது.
எதுவும் பேசவில்லை. செல்வந்தர் அந்த பாத்திரத்தை எடுத்து சென்று மேஜையில்
வைத்தார்.
""உன்னைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன். உன்னை என்
உபயோகத்திற்கு வைத்துக் கொள்வேன். பெருமை பாராட்டிக் கொள்ளும்
பாத்திரங்கள் எனக்குத் தேவையில்லை. அலமாரியில் அலங்காரமாக வைக்கவே அவை
பயன்படும். உன்னையே நான் விருந்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறேன்,''
என்று சொல்லி அந்த பாத்திரத்தை மென்மையாகத் தூக்கி சுத்தம் செய்து, உணவை
நிரப்பினார். ""பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில்
பலவீனமானவைகளை தெரிந்து கொண்டான். உள்ளவைகளை அவமாக்கும்படி உலகத்தின்
இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன்
தெரிந்து கொண்டார்,'' என்று பைபிளில் ஒரு வசனம் வருகிறது. இதன் கருத்து
என்னவென்றால், பலவீனர்களையும், பின் தங்கியவர்களையும், அற்பம் என நினைத்து
ஒதுக்கப்படும் கல்வி அறிவில்லாதவர்களையும், ஏழைகளையும் நாம் நேசிக்க
வேண்டும் என்பதே! பலவீனர்களை இனியேனும் உதாசீனப்படுத்தாதீர்கள்.
அன்பிற்கு மகத்துவம் அதிகம்
ஓரல்
ராபர்ட்ஸ் என்ற போதகர், இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள் பற்றி பிரசங்கம்
செய்வார். ஒவ்வொருநாளும் தன்னை நாடி வந்த மக்களுக்காக, மனதுருகி
ஜெபிப்பார். ஒருநாள் கூட்டம் அதிகமாக இருந்ததால், எல்லோருக்காகவும் ஜெபம்
செய்து முடித்ததும், களைப்பு அதிகமாகிவிட்டது. அவர் தனது காரில் ஏற
சென்றபோது, வயதான பெண்மணி அவரை இடைமறித்து, ""ஐயா! எனக்கு கடுமையான வியாதி
இருக்கிறது. நீங்கள் தொட்டாலே எனக்கு குணமாகிவிடும். எனக்காக ஒருசில
நிமிடங்கள் மட்டும் ஜெபம் செய்யுங்களேன்!'' என்று கேட்டுக் கொண்டார்.
ராபர்ட்ஸ்
அவரிடம், ""அம்மா! என்னுடைய நேரம் முடிந்துவிட்டது. நூற்றுக்கணக்கான
பேருக்கான நான் ஜெபித்தபோது, நீங்கள் ஏன் வரவில்லை? நான் போகிறேன்,''
என்று சொல்லி காருக்குள் ஏற முற்பட்டார்.
அந்த மூதாட்டி அவரைத்
தடுக்க, ராபர்ட்ஸுக்கு கோபம் அதிகமாகிவிட்டது. அந்த மூதாட்டியை
தள்ளிவிட்டு காரில் சென்று விட்டார். அடுத்தநாள் கூட்டம் ஆரம்பித்தபோது
அந்த மூதாட்டி மேடையில் ஏறினார்.
""அன்புள்ள மக்களே! நேற்று நான்
இந்த போதகரிடம் எனக்காக ஜெபிக்கும்படி வேண்டிக் கொண்டேன். தனது நேரம்
முடிந்துவிட்டதால், அவர் என்னை ஆசிர்வதிக்க மறுத்துவிட்டார். என்னை
கீழேயும் தள்ளிவிட்டார். ஆனாலும், எனக்கு நோய் குணமாகிவிட்டது. அவரது
கைபட்டதே அதற்கு காரணம் என்பதை நம்புகிறேன்,'' என்றார். போதகருக்கு
கண்ணீர் பெருகியது. அப்போது, ஆண்டவர் அவருடன் பேசுவது போல் தோன்றியது.
""நான்
உனக்குக் கொடுத்த வரத்தினால் நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்
அந்தப் பெண்ணுக்கு நோய் குணமாகி அற்புதம் நிகழ்ந்துவிட்டது. ஆனால், நீ
அன்புடன் நடந்து கொள்ளாததால், இந்த அற்புதத்தில் உனக்கு பங்கோ, பலனோ
இல்லை,'' என்று அவருக்குள் ஒரு குரல் ஒலித்தது. அதை கிறிஸ்துவின் குரலாகவே
அவர் கருதினார். அன்பில்லாத சேவையால் எந்த பலனும் இல்லை. தேவனின்
பிள்ளைகளான நாம் பிறருக்கு எதைச் செய்தாலும், அன்பையும் குழைத்து செய்ய
வேண்டும்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum