TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பலரது வாழ்க்கைக்குக் காட்டுகிறார் வழி!''கண்களில் இல்லை ஒளி...

Go down

பலரது வாழ்க்கைக்குக் காட்டுகிறார் வழி!''கண்களில் இல்லை ஒளி...  Empty பலரது வாழ்க்கைக்குக் காட்டுகிறார் வழி!''கண்களில் இல்லை ஒளி...

Post by logu Sun Jun 16, 2013 1:48 pm

ஒரு சாதனை தந்தையின் கதை
''விரக்தி... எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையையும் ஒருமுறையாவது எட்டிப் பார்த்துச் செல்லும் கசப்பு பக்கம். விரக்தியின் உச்சத்தில் மூலையில் ஒதுங்கிவிட்டால், சமூகத்தில் ஒதுக்கப்பட்டுவிடுவோம். அதனை எதிர்த்து எதிர் நீச்சல் போட வேண்டும். அதற்கு என் அப்பாவே வாழ்வியல் சாட்சி'' என்று சொல்லும்போதே கண்ணீர் தத்தளிக்கிறது பிரவீன்குமாருக்கு.
நாகர்கோவில் நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது பேராசிரியர் சுரேஷ்குமாரின் இல்லம். சிறு வயதிலேயே பார்வையை இழந்தவர், இன்று சாதனை மனிதராக, குடும்பத் தலைவனாக, காதல் மனைவிக்கு ஏற்ற கணவனாக, பல ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாய் சிகரமாய் உயர்ந்திருக்கிறார். ஒரு மாலைப்பொழுதில் சுரேஷ்குமார் குடும்பத்தைச் சந்தித்தோம்.
பலரது வாழ்க்கைக்குக் காட்டுகிறார் வழி!''கண்களில் இல்லை ஒளி...  Praveenkumar_1
கல்லூரி பேராசிரியராக இருக்கும் முத்த மகன் பிரவீன்குமார் தன் தந்தையைப் பற்றி சொல்லத் தொடங்கினார். ''அப்பா பிறந்த ஊரு, தக்கலை பக்கத்தில் இருக்கிற பூவஞ்சான் பிரம்பு. எங்கப்பா பிறந்தப்ப சாதாரண குழந்தைங்க மாதிரிதான் இருந்தாங்க. ஐந்தாவது வயதில் பார்வை படிப்படியா குறைய ஆரம்பிச்சது. ஒரு கட்டத்தில் முழு பார்வையும் போயிடுச்சு. இந்தியாவில் எங்க அப்பாவைக் காட்டாத ஹாஸ்பிட்டலே இல்லை. கடைசியா ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்திருந்த ஒரு டாக்டர், அப்பாவோட கண்ணை டெஸ்ட் பண்ணிட்டு, 'ரெட்டினா முழுமையா பாதிச்சுடுச்சு. இனிமே பார்வைத் திரும்பாது’னு சொல்லிருக்காரு. இதைக் கேட்ட எங்க தாத்தா சுகுமாரன் தம்பி இடிஞ்சுபோயிட்டாரு. ஆறு வயசே ஆன எங்க அப்பா, அப்பவே தாத்தாவுக்கு ஆறுதல் சொல்லிருக்காரு.
அப்ப அப்பா மனசில் இருந்ததெல்லாம் படிக்கணும் என்கிற மோகம் மட்டும்தான். 4-ம் வகுக்கு வரைக்கும் ஆசிரியர் ஒருத்தர் வீட்டுக்கே வந்து அப்பாவுக்கு சொல்லிக் கொடுத்திருக்காரு. பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளிக்கூடத்தில் சேர்ந்து அப்பா படிச்சிருக்காரு. நேரடி கல்வி கற்காதவர்கள், 12-ம் வகுப்புத் தேர்வு எழுதும் வசதி அப்ப தமிழகத்தில் இல்லை. இதற்காகவே போபால் போய் தங்கி, அங்கே டெஸ்ட் எழுதிருக்காரு அப்பா. வாழ்வில் கல்வியின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு விதைச்சது அப்பாவின் கடின உழைப்புதான்.
பலரது வாழ்க்கைக்குக் காட்டுகிறார் வழி!''கண்களில் இல்லை ஒளி...  Praveenkumar_2எங்கப்பா எம்.ஏ. ஆங்கிலம் படிச்சதும், நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி காலேஜில் விரிவுரையாளர் வேலை கிடைச்சுது. அங்கே பணியில் இருக்கும்போதே டாக்டரேட் முடிச்சாங்க. என் அப்பா என் வாழ்வின் பாடம்னு சொல்றதே அவரோட திருமணத்தை வைச்சுதான்'' என்று என்று பிரவீன்குமார் நிறுத்த... தொடர்ந்தார் மீடியா துறையில் இருக்கும் அவரது தம்பி அய்யப்பதாஸ்.
''நாகர்கோவில் பக்கத்தில் இருக்கிற சுங்கான்கடையில் உள்ள அய்யப்பா மகளிர் கல்லூரியில்தான் எங்க அம்மா படிச்சாங்க. அம்மா படிச்சதும் ஆங்கில இலக்கியம்தான். அந்தக் கல்லூரிக்கு ஒருமுறை சிறப்பு விருந்தினரா அப்பா போயிருக்காங்க. அப்பாவோட ஆங்கிலப் பேச்சாற்றால், விசாலமான கண்ணோட்டம் எல்லாம் என் அம்மாவை ரொம்பவே கவர்ந்துடுச்சு. பொதுவா காதலுக்குத்தான் கண் இல்லைனு சொல்வாங்க. ஆனா, கண்ணே தெரியாத என் அப்பா மீது அம்மாவுக்கு வந்த காதலுக்கு ஆயிரம் சல்யூட் கொடுக்கலாம்.
ஆரம்பத்தில் அம்மா காதலை வெளிப்படுத்தினப்பகூட, அப்பா தயக்கம்தான் காட்டிருக்காங்க. ஒரு கட்டத்தில் அம்மாவின் அழுத்தமான காதல், அப்பாவையும் ஈர்த்திருக்கு. ரெண்டு குடும்பத்துக்குள்ளும் ஓரளவு பரிட்சயம் இருந்ததால, சிக்கல் இல்லை. ஆனா, அம்மாகிட்ட அவங்க அம்மா அப்பா ஒரே ஒரு நிபந்தனை போட்டாங்க. 'இது கண்மூடித்தனமா வந்த காதலாகூட இருக்கலாம். அதை முதல்ல நம்ம சோதிக்கணும். மூணு வருஷம் இதே மாதிரி அன்போட உங்க காதல் நீடிச்சதுன்னா, திருமணம் செஞ்சு வைக்குறோம்’னு சொல்லிருக்காங்க.
அந்தக் காலக்கட்டத்துக்குள்ள அன்பு பல்கி பெருகிப்போச்சு. ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தா, நல்லா இருக்கும்னு இரு வீட்டு சம்மதத்தோட கல்யாணமும் பண்ணிகிட்டாங்க. ஒரு காதல் கணவனாக என் அம்மாவை அவர் கண்ணா இருந்து பார்த்துகிறாரு.
எங்க வாழ்க்கைக்கு அஸ்திவாரமே அப்பாவோட வாழ்க்கைதான். பார்வை இல்லைனு அவர் சோர்ந்து போயிடலை. விடாமுயற்சி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு மூணும்தான் எங்க அப்பா எங்களுக்கு கத்துக்கொடுத்த வேத மந்திரம். தமிழக அரசின் சிறந்த ஊழியர் விருது, அமெரிக்க பயோகிராஃபியின் சார்பில் மேன் ஆஃப் தி இயர் 2000 விருது, மத்திய அரசின் வியத்தகு சாதனையாளர் விருதுனு பல விருதுகளையும் அப்பா வாங்கி குவிச்சுருக்காங்க.
பலரது வாழ்க்கைக்குக் காட்டுகிறார் வழி!''கண்களில் இல்லை ஒளி...  Praveenkumar_3
இதோ... இப்ப அப்பா ஓய்வுபெற்று வீட்டில் இருக்காங்க. இப்பவும் எம்.ஃபில். ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியா இருக்காங்க. அப்பாவோட வழிகாட்டுதலில் நிறைய பேரு டாக்டரேட் பட்டம் வாங்கிருக்காங்க. எங்களை வளர்த்தது, படிக்க வெச்சது என ஒவ்வொரு விஷயத்திலும் அப்பா தனித்துவம் நிரம்பியவர்தான்.
சின்ன வயசுல பொருட்காட்சி போகும்போது எங்களை பொருட்காட்சி கூட்டிட்டுப் போவாரு. அப்பா கையை இறுக பிடிச்சுகிட்டே ராட்டினம் எல்லாம் சுத்துவோம். அந்த சமயத்தில் குழந்தையாய் மாறி அப்பா குதூகலிக்குற காட்சிகள் இப்பவும் நெஞ்சில் இருக்கு. அதே நேரத்தில் கண்டிக்க வேண்டிய விஷயத்தில் கண்டிப்பாவும் இருப்பாங்க. மனிதாபிமானத்தையும் தனி மனித ஒழுக்கத்தையும் என்னுள் விதைச்சது அப்பாதான்'' என்று தழுதழுத்தார்.
சுரேஷ்குமாரின் மனைவி ஸ்ரீலதாவிடம் பேசினோம். ''குழந்தைங்க கிட்டேயும் என் மேலேயும் அவங்க காட்டுற பாசத்துக்கு அளவே கிடையாது. பார்வை இல்லைனு முடங்கிப் போயிடாம, அவரு தன்னம்பிக்கையோட வாழ்ந்தது என் பதின்பருவத்தில் ரொம்பவும் ஈர்த்துச்சு. இன்னிக்கு வரைக்கும் அன்னிக்கு எடுத்த முடிவு தப்போனு நினைச்சது இல்லை. அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கேன். என் குழந்தைகள் அத்தனை சந்தோஷமா இருக்காங்க. எம்.ஏ இங்கிலீஸ் படிச்ச நான் முயற்சி பண்ணியிருந்தா காலேஜில் வேலைக்குப் போயிருப்பேன். ஆனா, என் வீட்டுக்காரர் பக்கத்திலேயே இருக்குற சந்தோஷத்தை வேறு எது தந்திட முடியும்? எனக்காகவும் அவரோட குழந்தைகளுக்காகவுமே வாழ்ந்துட்டு இருக்காங்க.
இவங்களுக்கு நியூஸ் பேப்பர், புக்ஸ்னு படிச்சு கொடுக்கவே ஒரு ரீடரை வேலைக்கு வெச்சுருக்கோம். வாசிக்கும்போது குழந்தைகளும் கூட இருக்கணும்னு அவங்க அப்போ சொன்னாங்க. அதோட விளைவா... இன்னைக்கு என் குழந்தைகள் ஆங்கில உச்சரிப்பில் அவ்வளவு அசத்துறாங்க. இப்படி அவங்க சின்ன சின்னதா சொல்ற ஒவ்வொரு விஷயத்துக்குப் பின்னாடியும் பசங்களைப் பற்றிய சிந்தனை ஒளிஞ்சுருக்கும்'' என்றார் ஆச்சர்யம் தாங்காமல்.
ஒரு சாதனைத் தந்தையாய் வெற்றியின் விளிம்பில் பேச முடியாமல் கண்கள் பனிக்க நம்மை எதிர்கொண்ட சுரேஷ்குமாருக்கு வாழ்த்துக்கள் சொல்லி விடைபெற்றோம்.
என்.சுவாமிநாதன்
படங்கள்: ரா.ராம்குமார்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» காஷ்மீர் வெள்ளத்தில் பலரது உயிரை காப்பாற்ற உதவிய வாட்ஸ் ஆப்
» பாரிஸ் சூப்பர் மார்க்கெட் தீவிரவாத தாக்குதல்: பலரது உயிரைக் காப்பாற்றிய இஸ்லாமியர்
» தீவிரவாதியிடமிருந்து பலரது உயிரை காப்பாற்றிய இஸ்லாமிய இளைஞருக்கு பதக்கம் மற்றும் பிரெஞ்சு குடியுரிமை
» தேதியும் இல்லை; தியேட்டரும் இல்லை : ‘பிரியாணி’யில் நடக்கும் கடைசிக்கட்ட களேபரங்கள்!
» தேர்வு நேரத்தில் மின் தடை இல்லை: ஜெனரேட்டர் தயாராக இருந்தும் "யூஸ்' இல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum