TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


டிசம்பர் 21, 2012ல் நடக்கப் போவது என்ன? – பகுதி : 2

Go down

டிசம்பர் 21, 2012ல் நடக்கப் போவது என்ன? – பகுதி : 2 Empty டிசம்பர் 21, 2012ல் நடக்கப் போவது என்ன? – பகுதி : 2

Post by ஜனனி Wed Dec 19, 2012 8:21 pm

டிசம்பர் 21, 2012ல் நடக்கப் போவது என்ன? – பகுதி : 2

”’மாயன்’
என அழைக்கப்படும் மக்கள் வேறு யாருமல்லர். நம் இதிகாச, புராணங்களில்
குறிப்பிடப்படும் ’மயன்’ வழி வந்தவர்கள்தான். அவன் தேவச் சிற்பி என்றும்
அழைக்கப்பட்டான். அவனைப் பற்றிய குறிப்புகள் தொன்மையான இராமாயணத்தில்
வருகின்றன. பின்னால் வந்த மகாபாரதத்திலும் வருகின்றன. ’பஞ்ச பாண்டவர்கள்’
தங்குவதற்காக அழ்கிய மாளிகையைக் கட்டியவன் மயன் தான். மயன் முதலாம்
தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்தவன். கப்பல் கட்டுவது குறித்து மரக்கலச்
செந்நூல், அணுவைப் பற்றிச் சொல்லும் அணுவியல், வானசாஸ்திரம் பற்றிச்
சொல்லும் சூரிய சித்தாந்தம், பிரணவவேதம் போன்ற பல நூல்களை இயற்றியவன்.
சிலப்பதிகாரத்தில் கூட அவனைப் பற்றிய குறிப்பு உள்ளது.


நுண்வினைக் கம்மியர் காணா மரபின;
துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு
மயன் விதித்துக் கொடுத்த மரபின

- என்று
அது குறிப்பிடுகிறது. மேலும் கோவலன் கண்ணகி சயனிப்பதற்கான கட்டிலைப் பற்றிய
குறிப்பில் இளங்கோ, “மயன் விதித்தன்ன மணிக்கால் அமளி” என்று
குறிப்பிட்டுள்ளார். ’மயன்’ பற்றி பண்டை மக்கள் அறிந்திருந்தார்கள் என்பது
இதன் மூலம் தெளிவாகிறது. மயன் இன மக்கள் இன்று உலகின் பல இடங்களில் வசித்து
வருகிறார்கள். குமரிக் கண்டம் கடல் கோளினால் அழிந்து விட்டாலும்,
ஆஸ்திரேலியாவில், ஹவாயில், தென் அமெரிக்காவில் மெக்ஸிகோவில், பெருவில்
உலகின் இன்னும் பல நாடுகளில் அந்த இனத்து மக்கள் வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறார்கள். இவர்களுடைய கலாசாரத்திற்கும் நம்முடைய கலாசாரத்திற்கும்
தொடர்பு உள்ளது. அந்த நாட்டு இலக்கியங்களுக்கும் நமது தொன்மையான
இலக்கியங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. நான் நியூ மெக்சிகோவிற்குப் போய்
Mayonic Culture குறித்து ஆராய்ச்சி செய்திருக்கிறேன். அங்கு பல கோடி
’மயன்’ இன மக்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்”


- மேற்கண்ட
கருத்தினைச் சொன்னவர் பத்மபூஷன் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி அவர்கள்.
இவர் குமரியில் 133 அடி உயர வள்ளுவர் சிலையை உருவாக்கிய பெருமையுடையவர்.
சென்னை வள்ளுவர் கோட்டம், பூம்புகார் மணிமண்டபம், காரைக்குடி தமிழ்த்தாய்
கோயில், டெல்லி மலை மந்திர் சுவாமிநாத சுவாமி கோயில் உட்பட பல்வேறு
கலைப்படைப்புகளைத் தந்தவர். இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, லண்டன்,
ஜப்பான், சிங்கப்பூர், மலேஷியா, ஆஸ்திரேலியா, பிஜி, ஹவாய், ஸ்ரீ லங்கா
போன்ற உலகின் பல பகுதிகளிலும் பல்வேறு ஆலயங்களை, கலைப்படைப்புகளை
உருவாக்கிய பெருமைக்குரியவர். 40க்கும் மேற்பட்ட நூல்களை
எழுதியிருக்கிறார். சில்ப குரு, துளசி சம்மான், கலைமாமணி, சில்பகலாநிதி,
தென்னக மயன், வாஸ்து வியாசன், பத்மபூஷன் உட்பட பல்வேறு விருதுகள் பெற்றவர்.


[You must be registered and logged in to see this image.] பத்மபூஷன் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி

ஸ்தபதியாரை நான் தென்றல்நேர்காணலுக்காக 2009ம் ஆண்டில் சந்தித்தேன் (அந்த நேர்காணலை “இங்கே”வாசிக்கலாம்)
நேர்காணல் முடிந்ததும் பல விஷயங்களைப் பற்றி பொதுவாகப் பேசிக்
கொண்டிருந்தோம். அப்போது தான் மாயன் காலண்டர் பற்றி அவரிடம் கேட்டேன்.
மாயன் நாகரிகம் ஆராய்ச்சி செய்து பல கட்டுரைகள், நூல்கள் எழுதியிருப்பதாக
ஸ்தபதி சொன்னார். அதோடு ‘மயன்’ பற்றிய பல விவரங்களையும் பகிர்ந்து
கொண்டார்.


”மயன் பெரும்
விஞ்ஞானி. தற்போது ஆலயங்களில் தக்ஷிணாமூர்த்தி என்றும், தென்னவன், ஆலமர்
செல்வன் என்றும் அழைக்கப்படும் அவன், பண்டைய நாளில் மயன் என்று
அழைக்கப்பட்டான். அவனே அறிவின் முதல்வன். பிராகிருத மொழியைச்
செம்மைப்படுத்தி தமிழாக்கித் தந்தவன். மயனின் ஆதிகாலப் பெயர் மயாசுரன்
என்பது. ஆனால் அவன் அசுரன் அல்ல. அரசன். அரசனை அசுரன் ஆக்கி விட்டார்கள்.
ரட்சிப்பவனை ராட்சசன் ஆக்கி விட்டார்கள். ராட்சசன் என்றால் அரக்கன் அல்ல.
மயாசுரன் என்பவன் பாதாளத்தில் வாழ்பவனாக புராணங்களில்
குறிப்பிடப்படுகிறார். ’பாதாள உலகம்’ என்பது நமது பூமிக்கு நேர் கீழே
இருப்பது. நாம் வசிக்கும் இடத்திற்கு நேர் கீழே 180 டிகிரியில் பார்த்தால்
வரும் இடம் கிட்டத்தட்ட தென் அமெரிக்கா, பெரு மற்றும் அதையொட்டி உள்ள கடல்
பகுதிகள். அங்கெல்லாம் மாயன் இன மக்கள் வாழ்ந்தார்கள். இன்னமும்
வாழ்கிறார்கள். இதெல்லாம் கால வேறுபாட்டால் நிகழ்ந்த குழப்பங்கள். அவன்
எழுதிய ஆதி சமஸ்கிருத நூலின் பெயர் ‘சூரிய சித்தாந்தம்’ பாஸ்கராச்சார்யா
எழுதியதெல்லாம் பிற்காலத்தது.” என்றார்.


[You must be registered and logged in to see this image.] மயன்

மேலும் அவர்,
“’ஐந்திறம்’ என்ற நூலை மயன் எழுதியிருக்கிறான். சப்த வேதம், காந்த வேதம்,
நாட்டிய வேதம், ஸ்தாபத்ய வேதம், பிரணவ வேதம் என்று ஐந்து வேதங்களாக,
ஐந்தமிழ்களாக நமது கலைமரபு இருக்கிறது. இயல், இசை, நடம், சிற்பம், கட்டிடம்
ஆகிய ஐந்து தமிழ்களுக்கு இலக்கணம் கூறும் நூல் தான் ஐந்திறம். அது நமது
தொன்மையான நூல். தொல்காப்பியத்திற்கு பாயிரம் வழங்கிய பெரும்பரனார்
‘ஐந்திறம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஐந்திறம்
காலத்தால் தொல்காப்பியத்திற்கு முந்தியது. மயனால் உருவாக்கப்பட்டது.
அந்நூலைத் தேடி ஆய்ந்து நான் பதிப்பித்தேன். அதில் உள்ள விஞ்ஞான
சூத்திரங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கி நூலாக
வெளியிட்டிருக்கிறேன். சிற்ப சாஸ்திரத்திற்கு அடிப்படை நூல் அது.” என்றார்.


[You must be registered and logged in to see this image.] பண்டைய தமிழ் ஓலைச்சுவடியில் மயன் பெயர்

அவர் பேசப் பேச எனக்கு ஆச்சரியம். அதே சமயம் பல விஷயங்களை நம்ப முடியவும் இல்லை.

நீங்கள் மயன் நாகரிகப் பகுதிகளுக்குச் சென்று செய்த ஆராய்ச்சிகள் பற்றிச் சொல்லுங்கள் என்றேன்.

[You must be registered and logged in to see this image.] மாயன் கடவுள்

மயன்
பகுதிகளில் மட்டுமல்ல; உலகின் பல பகுதிகளுக்குச் சென்று நான் பலவித
ஆராய்ச்சிகளைச் செய்திருக்கிறேன். பல புத்தகங்களை எழுதியிருக்கிறேன். எனது
வாழ்க்கையே அதற்குத் தான் செலவிட்டுள்ளேன். நம்கலை மரபுகள் அனைத்தும் தாளக்
கணக்கை அடிப்படையாகக் கொண்டவையாகும். கணக்கின் அடிப்படையில் தான் இந்தப்
பிரபஞ்சம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கான கருவி ’தாளம்’ தான்.
சிற்பமும் கட்டிடடமும் பஞ்ச பூதங்களை, ஒலியை, ஒளியை, காலத்தை அடிப்படையாகக்
கொண்டது. அதாவது இடங்காலக் கணக்கை அடிப்படையாகக் கொண்டது. இந்த பிரபஞ்சம்
அணுக்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. சரி, அது எந்த வடிவத்தில் இருக்கிறது
என்றால் அது தான் Cube. முச்சதுரம் என்று தமிழில் அதற்குப் பெயர். அதைப்
பற்றி ’சதுரவியல்’ கூறுகிறது. அணுக்கள் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, பின்
வட்டப்பாதையில் செல்கின்றன. இதற்கு spin theory என்று பெயர்.


இந்த உலகில்
அனைத்தும் அழிந்து போனாலும் எஞ்சியிருப்பது empty space. space என்றால்
energy என்று பொருள். அதவாது absolute energy எஞ்சியிருக்கும். இந்த
absolute energyயைத் தான் நாம் சுவாசிக்கிறோம். காற்றை அல்ல.
பிரம்மத்திலிருந்து வாயு உண்டானது. வாயுவிலிருந்து மற்ற பஞ்ச பூதங்கள்
தோன்றின. பின்னர் உயிரினங்கள். இதைப் பற்றி எல்லாம் சித்தர்கள்
இலக்கியத்தில் கூறியிருக்கிறார்கள். ’ஆதியில் ஐந்துமாகி, அநாதியில்
நான்குமாகி, ஜோதியில் மூன்றுமாகி, அறுபத்துள் இரண்டுமாகி, மீதியில்
ஒன்றாகி’ என்று இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது அனைத்துமே
வேதங்களிலும் இருக்கிறது. உள்ளம் என்பது தான் space. உள்ளமே மூலமாகி,
உணர்வுறும் கோளமாகி, உள்ளமே ஊக்கமாகி, உள்ளமே உணர்வுமாகி, உள்ளமே வழியும்
காட்டி என்றெல்லாம் நம் பழைய பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. siddha
literature is a vedic literature. ’ இது போன்ற சித்தர் பாடல்களையெல்லாம்
மக்கள் படிக்க வேண்டும். ஆனால் இன்று எதை எதையோ பொழுது போக்கிற்காகக்
படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் தொன்மையானது, நமது கலாசாரத்தைக்
குறிப்பது. ஆனால் இதிலெல்லாம் யாருக்கும் அக்கறையில்லை” என்றார்.


சரி, மாயன்
காலண்டர் படி 2012ல் உலகம் அழிந்து விடும் என்று சொல்கிறார்களே அது உண்மையா
என்று கேட்டேன். (அப்போது இப்போது உள்ளது போல உலக அழிவு பற்றி பரபரப்புகள்
ஏதுமில்லை. இருந்தாலும் எனக்கிருந்த தனிப்பட்ட ஆர்வத்தால் அவரிடம் அது
பற்றிக் கேட்டேன்)


ஸ்தபதி சிரித்தார்.

”மாயன் காலண்டர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று கேட்டார்.

”எனக்கு
எதுவும் தெரியாது. 2012, டிசம்பர் மாதத்தில், ஒரு குறிப்பிட்ட தேதியில்
மாயன் காலண்டர் முடிவடைகிறது. அதனால் அன்று உலகம் அழிந்து விடும் என்று
சிலர் கருத்து சொல்கிறார்கள். அதைத் தான் உங்களிடம் கேட்கிறேன்” என்றேன்.


”முதலில் மாயன்கள் இடத்துக்குச் சென்று நான் செய்த ஆராய்ச்சிகளைப் பற்றிச் சொல்கிறேன். உங்களுக்கு ’மச்சு பிச்சு’ தெரியுமா?”

நான் ‘அச்சு பிச்சு’ போல் விழித்தேன்.

(தொடர்கிறேன்)

- அரவிந்த்

மாயன் நாகரிகம் பற்றிய மேல் விவரங்களுக்கு : [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» டிசம்பர் 21, 2012ல் நடக்கப் போவது என்ன?பகுதி 1
» டிசம்பர் 21, 2012ல் நடக்கப் போவது என்ன? – பகுதி : 3
» ஜீமெயில் அக்கொண்டினை இழந்தால், பிளாக்கரையும் இழப்பீர்கள்! செய்ய போவது என்ன?
» உலகம் டிசம்பர் 21 ல் அழிகிறது.இது பற்றி நாசா என்ன சொல்கிறது?
» டிசம்பர் 6 நினைவலைகள் என்ற பெயரில் இந்தியாவையே மிரட்டி வரும் இஸ்லாமியர்கள் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் ???

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum