TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மறக்கமுடியாத மனிதர்கள் - லெப்டினண்ட் மாலதி.

4 posters

Go down

மறக்கமுடியாத மனிதர்கள் - லெப்டினண்ட் மாலதி. Empty மறக்கமுடியாத மனிதர்கள் - லெப்டினண்ட் மாலதி.

Post by sakthy Tue Oct 16, 2012 4:08 pm

மறக்கமுடியாத மனிதர்கள் - ஈழத் தமிழிச்சி இரண்டாம் லெப்டினண்ட் மாலதி.

வாழ்க்கையின் முக்கிய நாளொன்றான நேற்றைய தினம், என் மனதில் வந்த ஒரு பெயர் மாலதி. என் மனதில் வந்த மாலதிகள் மூன்று. சில தினங்களுக்கு முன்னர் நான் எழுதிய நரித்தமிழர்கள் கட்டுரையில் எல்லாக் கேள்விகளுக்கும் இல்லை என்று சொல்லி, தன் தமிழுணர்வை வெளிப் படுத்திய இந்த இணைய மாலதி ஒருவர்,மூன்று தலை முறைக்கு முன் பல கனவுகளுடன் சென்று,இந்த மூன்றாவது தலைமுறையிலும்,கனவு நிறைவேறாமலேயே,மியன்மார் தெருவில் இட்லி கூவி விற்றுக் கொண்டிருக்கும் இளம் பெண்,மனத்தில் கவலகளுடனும்,முகத்தில் அழகாக புன்னகைத்துக் கொண்டும், வியாபாரத்தில் கண்ணாக,தன் குடும்பத்தைக் காப்பாற்றும் நோக்குடன் இருக்கும், மியன்மார் மாலதி,மூன்றாவது மாலதி மறக்க முடியாத பெண்ணாக நினைவில் நிற்கும், இரண்டாவது லெப்டினண்ட் மாலதி. இந்த மாலதியைப் பற்றியே சொல்ல வருகிறேன்.

எல்லாப் பெண் குழந்தைகள் போலவும் பல கனவுகளுடன், தன் தோழிகளுடன் சுற்றித் திரிந்த மாலதியின் கனவுகள் ஒரு நாள் வெடித்து சிதறியது. சிங்களத்தின் அடக்குமுறை,அப்பாவி மக்களை மானபங்கப் படுத்தி,கொன்று போட்ட இனக் கலவரம்,சிங்களத்தின் கல்விப் பாகுபாடு என்று எல்லாம் தடைக்கல்லாகி கனவுகளை அழித்தது.இது அவளை மட்டுமல்ல,அனைத்து தமிழ் பெண்களினதும் மட்டுமல்ல,மொத்த ஈழத் தமிழர்களின் கனவுகளையும் சின்னாபின்னமாக்கியது. அவளின் கனவுகள் சிந்தனையாக மாறியது.அதற்கு மாற்று சிந்தனையானது, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடும் தமிழ் உணர்வும்,போராட்டமும். முடிவு தன்னை இணைத்துக் கொண்டு, தான் கண்ட கனவுகள், என் தங்கைகளுக்காவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தலைவரின் பின் சென்றாள்.

ஒரு நாள், அவள் அதற்கு விடிவு வந்து விட்டது என மகிழ்வடைந்த வேளை,அது முன்னைய நிலையை விட மோசமாக, ஈழத் தமிழர்களை உறைய வைத்தது.வேலியே பயிரை மேய்ந்தது போல்,சமாதனம் செய்ய வந்த இந்தியப் சமாதானப் படையினால், தமிழ் சகோதரிகள் ,கண்ணீருடனும்,கதறலுடனும் சீரழித்த காட்சிகள்,கொல்லப்பட்ட ,கொடுமைப்படுத்தப்பட்ட காட்சிகள் அவளை மீண்டும் கலங்க வைத்தது.தலைமைக்குக் கட்டுப்பட்ட இயக்கம்,பொறுமையுடன் காத்திருந்தாள்.அதற்கு காலமும் வந்தது.

தமிழ் ஈழம் மன்னாரை சேர்ந்த,சகாயதேவி பேதிருப்பிள்ளை,(1967 சனவரி 01 – வீரச்சாவு 1987 ஒக்ரோபர் 10 ) என்ற இரண்டாம் லெப்டினண்ட் மாலதி,ஈழ விடுதலைப் போரில் முதல் பெண் வீராங்கனையாக சிறப்பிக்கப்பட்டு,மாலதி படையணியும் உருவாக்கப்பட்டது. எத்தனையோ மாவீரர்களும் வீராங்கனைகளும் விடுதலைப் போரில் உயிர் துறந்தாலும்,அவர்களின் உயிருக்கு பரிசாக தமிழ் ஈழம் விரைவில் உருவாகும் என்ற நம்பிக்கையுடன்,ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, அனைத்து உலக தமிழர்களும் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு காத்திருக்கிறார்கள்.

மாவிரர்களின் நினைவிடங்கள்,கல்லறைகள் அனைத்தையும் சிங்களம் நிர்மூலமாக்கினாலும் கூட, அவற்றிற்கு உயிர் கொடுத்து நினைவில் நிற்க வைக்க வேண்டியது, நாடு வேறுபாடுகள் இல்லாமல்,அனைத்து தமிழர்களின் கடமையுமாகும்.

பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்; பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள்; இதற்கு மேல் அவளால் முடியாது என்றும் பெண்களைப் போதைப் பொருளாகவும் பார்த்து, ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்தை ஆழமாக கொண்டே மனித சமூக அமைப்புக்கு சவால் விட்டவர்கள் ஈழத்து தமிழிச்சிகள். ஆரியர் வருகைக்கு முன் தமிழர் வாழ்வியலில்,கலாச்சாரத்தில் பெண்களுக்கே முதல் இடம் கொடுக்கப்பட்டு இருந்தும்,ஆரியர் வருகையால் அனைத்துமே மாற்றப்பட்டன.வீராங்கனைகளாக இருந்த தமிழ்ப் பெண்களை ஆரிய சித்தாந்தம் வீட்டுக்குள் அடைத்து அடிமைகளாக போதைப் பொருளாக்கியது.

பெண்ணுக்கு மதிப்பும், கௌரவமும் வழங்கப்பட்டு வந்த தமிழர் வாழ்வில்,வஞ்சகமாக ஆன்மீக தத்துவங்களை புகுத்தி, போரில் புறமுதுகு காட்டாத வீரத் தமிழர்களை, தமிழ் நாடுகளை ஆரியர்கள் அடிபணிய வைத்தார்கள். அதுதான் தமிழ்மக்களின், தமிழ்ப் பெண்களின் வாழ்வுக்கு அஸ்தமனமாயிற்று. அவர்கள் போட்ட விதைதான் பெண்ணடிமை, சீதனம், சாதிமுறை, குலதொழில் என்பன.ஆரியர்களின் மனுதர்ம சாஸ்திரம் பெண்களுக்கு எதிராக சமூக நீதிகளை அதிகரிக்க செய்து,சாதியம், அடிமைத்தனம் போன்றவற்றை ஆழப்பதித்து, வரதட்சனை, இரத்த உறவு திருமணம், கொடுமை, சித்திரவதை, உயிர் நீப்பு,குழந்தைத் திருமணம் என இன்றும் தொடர்கிறது.(சமீபத்தில் 15 வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்ட கருத்தை நினைத்துப் பாருங்கள்.)இந்த வேறுபாடுகளும் அடிமைத்தனமும், தமிழ் நாடு என்று மட்டும் இல்லாது,ஈழத் தமிழர்களிடமும், ஒட்டுமொத்த தமிழர்களிடமும் திணிக்கப்பட்டன.

அவை மெல்ல உடைக்கப் பட்டாலும்,ஈழப் போராட்டங்களில் உச்சம் பெற்றது. போராளிகளாக மட்டுமன்றி,படை அணிகளை தலைமை வகித்து நடத்தி செல்லும் உயர்ந்த பொறுப்புக்கும் பதில் சொன்னார்கள். உலகின் சரி பாதி மக்கள் தொகையைக் கொண்ட பெண்கள் ஏன் வீட்டுக்குள் இருக்க வேண்டும்,விடுதலைப் போராட்டங்களிலும் கலந்து கொள்ளக் கூடாது என்ற கருத்தை பெண்களிடம் விதைத்து, விடுதலைப் போரில் பங்கு கொள்ள வைத்தவர் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள். விடுதலைப் போராட்டத்தில் பெண்களையும் அணி சேர்ப்பதினூடாகப் படிப்படியாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையையும், தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம் என்ற தேசியத் தலைவரின் எண்ணம், பெண் புலிகள் என்ற தோற்றமாயிற்று.
ஆணும், பெண்ணும் சமமான ஆற்றல்களுடனேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உடற் கூற்றியல் நிபுணர்களது, கூற்றுக்கு பெண் புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கிறார்கள், என பெண் போராளிகள் பற்றி தலைவர் பிரபாகரன் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.

அக்டோபர் 10 தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாகவும், 2 ஆம் லெப்டினன்ட் மாலதியின் நினைவு நாளாகவும் தமிழர்கள் நினைவு கொள்கிறார்கள். இந்த தினத்தில்,அதிகாரப் போக்கினாலும், ஆக்கிரமிப்பாளர்களின் ஆயுத வெறியினாலும், நசுக்கப்பட்ட தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க, இளைய பெண் தலைமுறை சுதந்திர வேட்கை கொண்டு விடுதலைக்காக ஆயுதக் கருவிகளை மீண்டும் கையிலேந்த வைக்கப் போகிறதா, என்ற கேள்வி எழத் தொடங்கி உள்ளது.தொடர்ந்து வரும் கலாச்சார சீரழிவுகளும்,அடக்குமுறையும் அதற்கு வித்திடக் கூடும் என்பதை, இராணுவத்தை எதிர்த்து எழுந்த சமீபத்தைய வன்னி மக்களின் எழுச்சி காட்டுகிறது.

2ஆம் லெப். மாலதி 17 ஆண்டுகளுக்கு முன் அந்த இலட்சியக் கனவோடுதான் வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அந்த நடுராத்திரியில் வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். இந்திய இராணுவம், தமிழ் பெண்களுக்கு இழைத்த அநீதி இன்னமும் தமிழர் மனங்களில் ஆறாத காயமாகவுள்ளது. 1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதி தாக்குதல். புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி, 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது.

2ம் லெப்டினன் அனிதா சித்திராதேவி தம்பிராசா 19.09.1970 – வீரச்சாவு 28.11.1988. இவர் தென் தமிழீழத்தின் வீரச்சாவடைந்த முதலாவது பெண் போராளியாவார். இவரைப் போல்,மட்டக்களப்பில் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த அன்னை பூபதிக்கும்(3.11.1932 – 19.04.1988),இனப் படுகொலைக்கு எதிராக தீக்குளித்து தியாகியான முத்துக்குமார்,மூவர் மரண தண்டனைக்கு எதிராக தீக்குளித்து உயிரிழந்த செங்கொடிக்கும், ஈழப் போரில் வித்தாகிய அனைத்து மாவீரர்களுக்கும்,வீர தமிழிச்சிகளுக்கும், எனது வீர வணக்கங்களுடன்,அந்த மாவீரர்களின் தியாகமும், இனப்படுகொலயில் கொல்லப்பட்ட தமிழர்களின் இரத்தமும் வீணாகாது என்பதும், அதற்கு சிங்களம் ஒரு நாள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதையும் நாம் நினைவில் கொள்வோம்.

அது போல் தமிழ் நாட்டின் இருண்ட வரலாறு போல், ஈழ வரலாறும் இருண்ட வரலாறாக சரித்திரத்தில் எழுதப்பட்டுவிடக் கூடாது, என்பதை ஒவ்வொரு தமிழனும் நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும்.

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

மறக்கமுடியாத மனிதர்கள் - லெப்டினண்ட் மாலதி. Empty Re: மறக்கமுடியாத மனிதர்கள் - லெப்டினண்ட் மாலதி.

Post by அருள் Tue Oct 16, 2012 7:33 pm

கண்டிப்பாக ....சிந்தனை களத்தின் சார்பாக வீர வணக்கம் [You must be registered and logged in to see this image.]
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மறக்கமுடியாத மனிதர்கள் - லெப்டினண்ட் மாலதி. Empty Re: மறக்கமுடியாத மனிதர்கள் - லெப்டினண்ட் மாலதி.

Post by மாலதி Wed Oct 17, 2012 6:30 am

AARUL wrote:கண்டிப்பாக ....சிந்தனை களத்தின் சார்பாக வீர வணக்கம் [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மறக்கமுடியாத மனிதர்கள் - லெப்டினண்ட் மாலதி. Empty Re: மறக்கமுடியாத மனிதர்கள் - லெப்டினண்ட் மாலதி.

Post by ஜனனி Wed Oct 17, 2012 7:31 pm

malathi wrote:
AARUL wrote:கண்டிப்பாக ....சிந்தனை களத்தின் சார்பாக வீர வணக்கம் [You must be registered and logged in to see this image.]
024 024 024 024 024
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

மறக்கமுடியாத மனிதர்கள் - லெப்டினண்ட் மாலதி. Empty Re: மறக்கமுடியாத மனிதர்கள் - லெப்டினண்ட் மாலதி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஈழத்து மண்ணில் அன்றே பூத்தவள் அவள்; மாலதி!
» கைமாறிய கனவுகளோடு களங்காணும் 2ம் லெப் மாலதி படையணி......
» தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி
» "ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி 25 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள்"
»  முட்டையிடும் சீன மனிதர்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum