TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:04 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:17 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:09 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:26 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am

» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm

» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm

» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:23 am


கவிதையா அது என்ன,தமிழ் கவிதை சுவைத்துப் பாருங்கள் அது தேனாய் இனிக்கும்.

2 posters

Go down

கவிதையா அது என்ன,தமிழ் கவிதை சுவைத்துப் பாருங்கள் அது தேனாய் இனிக்கும். Empty கவிதையா அது என்ன,தமிழ் கவிதை சுவைத்துப் பாருங்கள் அது தேனாய் இனிக்கும்.

Post by sakthy Sun Aug 19, 2012 7:03 am

கவிதையா அது என்ன,தமிழ் கவிதை சுவைத்துப் பாருங்கள் அது தேனாய் இனிக்கும்.

அப்பபா ஒரே வெய்யில் என அலுத்துக் கொண்ட நான்,வழமையான ஆறு மணித் தூக்கத்தை ஐந்து மணித்தியாலாங்களாக குறைத்துக் கொண்டு கவிதை படிக்க ஆரம்பித்தேன்.கல்யாணம் பண்ணி இருந்தால் பக்கத்தில் படுக்கும் மனைவியின் தொண தொணப்பே கவிதையாகி இருந்திருக்கும். கல்யாணத்திற்கு விளம்பரம் செய்வதாக கற்பனை செய்யாதீர்கள். அதைக் கவனிக்க என் பெற்றோர்கள் இருக்கவே இருக்கிறார்கள். ஆனால் என் தங்கை மட்டும் அமெரிக்கப் பெண்ணை கட்டிக்கோ என்று No,சொல்லி விட்டாள்.கிடைத்த இந்த ஓய்வில் நேற்று படித்த கவிதை பற்றி சொல்கிறேன்.

எந்த மொழியிலும் இல்லாத வகையில் தமிழில் முத்தமிழ் சிறப்போங்கி நிற்கிறது.இதில் இலக்கியத் தமிழில் கவிதை இலக்கியம் படைப்பிலக்கியமாக பாமரன் முதல் படித்தவன் வரை சிந்தனையில் குளித்து,நீரில் தலைக் குளித்து தலை முடியில் நீர் சொட்ட சொட்ட வரும் பெண்ணைப் போல்,இலக்கியத் தமிழ் கவிதைத் தேனை சொட்டும்.
யாப்பு இலக்கண விதிகளுக்கு உடபட்டு ஓசை நயங்களுடன் உருவாகும் ஆசிரியப்பா,வெண்பா போன்றவை மரபுக்கவிதைக்குள் அடங்கினாலும் பாவும் செய்யுளும் சிறிது மாறுபடுகிறது.மரபுக் கவிதையில் கவிஞர்களும் புலவர்களும் கருத்து,உணர்ச்சி,கற்பனை,வடிவம் என்பவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பர்.இதற்கு நேர்மாறாக இலக்கண வரம்பை மீறி உணர்ச்சியை மையமாக்கி வரும் புதுக் கவிதையிலும் கருத்து உணர்ச்சி அனைத்தும் இருந்த போதிலும்,அவை அனைத்து மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் இலகு தமிழில் இருப்பதைக் காணலாம்.இலக்கண வரைமுறைக்கு உட்படாது புதுக் கவிதை இருந்தாலும் கூட யாப்பிலக்கணத்தை மீறாது கவிதை படைக்கும் கவிஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.யாப்பிலக்கணத்திற்கு அடிப்படை சந்தமும் (Rhythm) தொடையுமாகும்(Rhyme) .இதை மறவாது கவிதை தந்தால் இனிக்காமல் கசக்குமா?

மரபுக் கவிதையிலும் புதுக் கவிதையிலும் இணைந்து செயல் பட்டவர்களில் பாரதியார் தொட்டு இன்றைய வைரமுத்து வரை சொல்லலாம். புதுக் கவிதைகளை குறிப்பிட்டு சொல்லப் போனால் அப்துல் ரகுமான்,வைரமுத்து,சிற்பி, அறிவுமதி,வாலி என பலரைக் குறிப்பிடலாம்.இது தவிர சந்தக் கவிதையாக இசைக் கவிதைகள் இசை பாடும். ஆனாலும் கவிதைக்கு உள்ள சிறப்பு என்னவெனில், உரை நடையில் நீண்டு வளரும் பெரு விருட்சம்,ஒரே கவிதைக்குள் அடக்கப்பட்டு விடும். இதனால் தான் ஆரம்பகால சங்ககால நூல்களும் பின்னர் வந்தவையும் 19 ம் நூற்றாண்டு வரை செய்யுள் வடிவிலேயே இருந்தன.
மரபுக் கவிதைகள் மெல்ல புதிய வடிவிற்கு விலக ஆரம்பித்த காலத்தில் ஆங்கிலக் கவிதைகளும் புதிய வடிவமைப்புடன் புதிய உருவெடுத்தன.இதற்கு வால்ட் விற்மன் வித்திட்டார் என சொல்லலாம்.

நன்நூல் கவிதை பற்றி என்ன சொல்கிறது...
சொல்லால் பொருட்கிட னாக உணர்வின்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் .

ஆனால் தருமியின் பாட்டிற்கு நக்கீரன் சொன்ன பதில் உங்களுக்குத் தெரியும். யாப்பிலக்கணம் மரபுக் கவிதைக்கு முதுகெலும்பு.இருப்பினும் இலக்கணக் குற்றம் நிகழ்ந்தாலும் மன்னிப்பு உண்டு. பொருட் குற்றம் அறவே கூடாது என்பது நக்கீரன் வாதம். அதனால் தானோ என்னவோ தொல்காப்பியர் இப்படிக் கூறுகிறார்.
காரிகை கற்றுக் கவிபாடு வதினும்
பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே.
குற்றம் காண பலர் வருவார்கள்.ஆனாலும் புதுக் கவிதைக்கு மன்னிப்பு உண்டு.

இது சிற்பியின் கவிதை.......
பாதை முள்
படுக்கை முள்
இருக்கை முள்
வாழ்க்கை முள்
ஆன மனிதர்களைப் பார்த்துச்
சிலிர்த்துக் கொண்டது
முள்ளம்பன்றி...
ஓ.. இவர்களுக்குத் தெரியாதா
முள்ளும் ஓர்
ஆயுதம் என்று .

கற்பனையில் உண்மையை நாசுக்காக வைக்கிறார் ஈரோடு தமிழன்பன்.
ஏழைகள் வீட்டிலிருந்து
புகை
வருவதால் அவர்கள்
சமைக்கிறார்கள் என்று
அர்த்தம் இல்லை
அந்தப் புகை அவர்கள்
எரியும் மனத்திலிருந்தும்
எழுந்து வரலாம்.

ஒரு கவிஞன் தன் ஆதங்கத்தை, உணர்வை வெளியிடுகிறான் நான் படித்த இந்தக் கவிதை மூலம்.
வங்கக் கடல் மீது
தங்கத் தமிழ் மகனை
சிங்களத்து வெறிநாய்
சங்கறுத்துக் கொல்கிறது
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
வலைவீசி மீன்பிடிக்க
அலைமீது சென்றவனின்
தலைமீது குண்டுவீசும்
கொலைச் செயலும் நடக்கிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

இதை விட காசி ஆனந்தனின் இந்தக் கவிதை இப்படித் தொடருகிறது...
வண்ணத் தமிழ்க்கன்னி வாய்திறந்து பேசுகிறாள்...
மண்ணிற் பிறந்து மணிக்கவிதை பாடிவரும்
பூங்குயிலே உன்னைப் புகழ்வதற்கு நான் யாரோ?
ஏங்கும் இளவஞ்சி எப்படியோ பேச்சுரைப்பாள்?
காத லுருகிவரும் காலத்தில் வாய்மழலை
பாதிவரும் மீதி பதுங்கிவிடு மென்பார்கள்!
ஆனாலும் பொல்லாத ஆசையினால் நானொருத்தி
ஏனோ புதுவிதமாய் இன்று புலம்புகிறேன்!
இதைவிட இப்படி கவி பாடுகிறான் காசி ஆனந்தன்.அதனால் தானோ அவன் உணர்ச்சிக் கவிஞனானான்.
தமிழே ! உயிரே ! வணக்கம் !
தாய்பிள்ளை உறவம்மா
உனக்கும் எனக்கும் !
அமிழ்தே ! நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில்
கசக்கும் ! புளிக்கும் !
இந்த மேத்தாவின் கவிதை அரசியல் பேசுகிறது.
அந்நியர் எங்களைச்
சுரண்டிய போது
ஆவேசப்பட்டோம்
இப்போது
சொந்த தேசத்தார்
சுரண்டுகிறபோது
சும்மாயிருக்கின்றோம்
காரணம்
சொந்தமல்லவோ சுரண்டுகிறது.
பாரதியின் இந்தப் பாடலும்,
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங் கேபெண்
இளைப்பில்லை காண்என்று கும்மியடி .
பாரதிதாசனின் இந்தக் கவிதையும் மரபுக் கவிதைகளாக தேனை ஊற்றி, உணர்ச்சித் துடிப்புடன் தருகிறது
நடவு செய்த தோழர் கூலி
நால ணாவை ஏற்பதும்
உடலு ழைப்பி லாத செல்வர்
உலகை யாண்டு லாவலும்
கடவு ளாணை என்று ரைத்த
கயவர் கூட்ட மீதிலே
கடவுள் என்ற கட்ட றுத்துத்
தொழிலு ளாரை ஏவுவோம் . .
புதுக் கவிதை சிறிது மாற்றம் பெற்று பல ஹைக்கூ கவிதைகளை தருகிறது. இது வினோதனின் ஹைக்கூ. வளைந்த வானமது
எழுந்து போகிறது,
ஆம் அவள் பிரிகிறாள் !
இல்லை இல்லை...
என்னை - என்
உயிரிலிருந்து பிரிக்கிறாள் !
வேறொரு ஹக்கூ இப்படி சொல்கிறது..... இருக்கும் போது கஞ்சி ஊற்ற மறந்தவன்,இறந்த பின் பால் ஊற்றுகிறான்---மயானத்தில்.

கவிதை படிக்க கசக்குமா எனக்கு...........சக்தி.

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 25/09/2010

Back to top Go down

கவிதையா அது என்ன,தமிழ் கவிதை சுவைத்துப் பாருங்கள் அது தேனாய் இனிக்கும். Empty Re: கவிதையா அது என்ன,தமிழ் கவிதை சுவைத்துப் பாருங்கள் அது தேனாய் இனிக்கும்.

Post by ஜனனி Sun Aug 19, 2012 8:54 am

கவிதையும் உங்களின் விவரிப்பும் அருமை கவிதையா அது என்ன,தமிழ் கவிதை சுவைத்துப் பாருங்கள் அது தேனாய் இனிக்கும். 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கொஞ்சம் தமிழ்,கொஞ்சும் தமிழ்,இனிக்கும் தமிழ்,இரசிக்கும் தமிழ்.தமிழ் என்ன சொல்கிறது? சிந்தனை களம் என்றால் என்ன?
» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
» முள்ளிவாய்க்கால் சாட்சியம் - கட்டாயம் பார்க்கவும்.. எம் இனத்திற்கு நேர்ந்த கொடுமையை பாருங்கள்.. தமிழ் தொலைக்காட்சியில் இது முதல் முறை.ஜி தமிழ் தொலைகாட்சி..
» தமிழ் வருடங்கள் 60 அவை இதுதான் பாருங்கள்
» தமிழ் வாழ்கிறதாம் - பகலவன் கவிதை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum