TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வித்யாசாகரின் பத்து புத்தகங்களின் வெளியீட்டு விழா!!

Go down

வித்யாசாகரின் பத்து புத்தகங்களின் வெளியீட்டு விழா!! Empty வித்யாசாகரின் பத்து புத்தகங்களின் வெளியீட்டு விழா!!

Post by mmani Sun May 01, 2011 4:35 pm

வித்யாசாகரின் பத்து புத்தகங்களின் வெளியீட்டு விழா!! Book-release-21


தேசம் நமக்காக என்ன செய்தது
என்பதைவிட தேசத்திற்காக நாம் என்ன செய்தோம்?
என்றக் கேள்வியை இனி மாற்றி, நாம் தான் நம் தேசத்திடம்; தமிழராகிய எங்களுக்கு என்ன செய்தாய் என் தேசமே? என்றுக் கேட்கவேண்டும் போல்!!


அத்தனை
இந்தியா மீதான தேசபக்தி நம் ரத்தத்தில் முழுதுமாய் ஊறிப் போய்,
வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று சொல்லச் சொல்ல உடல் சிலிர்த்துத் தான்
கொள்கிறது. அசையும் அந்த மூவர்ணக் கொடிக்கு முன், பக்தியோடு நிற்கும்
மனதையும் தனை மீறி கைகளை வானம் நோக்கி உயர்த்திக் கொள்ளும் மனநிலையிலேயுமே
தமிழர்களாகிய நாம் வளர்க்கப் பட்டிருக்கிறோம்.
அங்ஙனம்,
உடல் சிலிர்த்து, மயிர்கால் கூச்செரிந்து, நம்மோடு சேர்ந்து, நம்
உணர்வெல்லாம் நிறைந்து 'வந்தேமாதரம்' என்று சொன்னதோ என்னவோ; காரணம், அப்படி
எண்ணுமளவிற்கு பாரத தேசத்தின் பற்றினால் உணர்வு பீறிட்டெழும் அரங்கமாக
விளங்கியது குவைத்தின் அந்த "கார்மல் பள்ளிக்கூட அரங்கம்".
சற்றேறக்
குறைய பத்துக் குழந்தைகள்; காந்தியாக, நேருவாக, சுபாஷ் சந்திர போஸாக,
இந்திராவாக, ஜான்சிராணி லட்சுமிபாயாக, கிருஷ்ணனாக, கண்ணகியாக, கண்ணனாக,
பாரத் மாதாவாக என்று வந்து கண்முன்னே ஜாதிமதமெனும் பாகுபாடற்ற ஒரு
பாரம்பரிய ஒற்றுமையினை நிலைநிறுத்திச் சென்றார்கள். மனிதருக்கும்
கடவுளுக்குமிடையே, மனிதருக்கு முழுமையாகப் புரியாமலுள்ள ஒரு சமன்பாடு அந்த
மேடையில் புரியவந்தது.
என்
பொதுநல பார்வை நீங்கி, சுயநல சந்தோசமாக; விழா மேடையில் ஒரு பெரிய
மகிழ்ச்சியளிக்கக் கூடிய இன்னொரு நிகழ்வும் நடந்து என் கண்களை பூத்துப்
போகச் செய்தது.
வித்யாசாகரின் பத்து புத்தகங்களின் வெளியீட்டு விழா!! Book-release-14

அந்த
ஒரு நிமிட கனம் என் பிறப்பின் பயனையும்; பிள்ளையை பெற்றதன் பயனையும்
அடையும் தருவாயாக இருந்தது அந்த கணம். என் பத்து புத்தகங்களை அந்த ஒரு
மேடையில் வெளியிட்டதில் எத்தனை மகிழ்ந்திருப்பேனோத் தெரியவில்லை; அதைக்
கடந்தும் கண்ணனாக வேடமிட்டு மேடையேறி மகன் முகில்வண்ணன் நிற்க, கூட்டம்
அவனின் சிரிப்பையும் நடையையும் விளையாட்டையும் குறும்புப் பார்வையையும்,
செல்லம்மாவின் அலங்கரிப்பையும் பார்த்து ஓ-வென்று குரலெழுப்ப; என்ன
செய்வானோ அவன் என்றிருந்த நேரம் பார்த்து 'எல்லோருக்கும் வணக்கம்' என்று
காற்றுப் புல்லாங்குழலுக்குள் நுழைந்து வெளியே வரு-மிசையாய் வந்தது அவன்
குரலும். பின் 'ஹே...' என்றவன் வாயில் கைவைத்துச் சிரிக்க; மக்கள் ஓ-வென்று
ஆரவாரம் செய்து கைதட்டி ஆச்சார்ய விழி திறக்கச் செய்த அந்த இரண்டு வயது
குழந்தைக்கு இறைவன் தந்த பேற்றினை எண்ணி உளம் குளிர்ந்துப் போனேன்.
வித்யாசாகரின் பத்து புத்தகங்களின் வெளியீட்டு விழா!! Book-release-16

அதன்
தொடக்கமாக மற்றொரு குழந்தை கண்ணகியாக மேடையேறி வந்து சொன்ன ஒரு தொடர்
வசனத்திற்கு; அரங்கத்தில் தட்டாத கைகள் கைகளேயல்ல என்று சொல்லும்விதம்,
ஒவ்வொரு குழந்தைகளும் வந்து, தன் பெற்றோர் அவர்களின் மீது காட்டும்
அன்பினை, அக்கறையினை, மேடையில் தோலுரித்துப் போட்டனர்.
கடைசியாக
- பாரத மாதா வருகிறார் என்று சொல்ல; மேடையில் அவரை தேடும் கண்களுக்கு
வெற்றிடம் மட்டுமே தெரிய; பின்னே இருந்து வந்தார் பாருங்கள் பாரதமாதவாக
அந்த சிறுமியொருவர்; வார்த்தையே இல்லை அந்த தருணத்தை வர்ணிக்க; காரணம்
அவருக்குப் பின்னே ஐயா விட்டுக் கட்டி மஸ்தான் அவர்கள்வேறு கையை மேலே
தூக்கித் தூக்கி 'பாரத மாதாக்கி ஜெய்; 'பாரத மாதாக்கி ஜெய்; 'பாரத மாதாக்கி
ஜெய் என்று முழங்க அந்த குழந்தை வெள்ளை சேலையில் மேடையேறி அத்தனை
பிள்ளைகளுக்கு மத்தியில் சென்று நின்றதுதான் தாமதம், ஐயா பிரான்சிஸ்
அவர்கள் உடனே ஒளிப் பெருக்கியினை வாங்கி "ஒரு தாய் மக்கள் நாமென்போம்;
ஒன்றே எங்கள் குலமென்போம்; தலைவன் ஒருவன் தானென்போம், சமரசம் எங்கள்
வாழ்வென்போம்" என்று பாட;
வித்யாசாகரின் பத்து புத்தகங்களின் வெளியீட்டு விழா!! 161


சிறப்பு
அழைப்பினை ஏற்று வந்திருந்த இந்திய தூதரிலிருந்து, தமிழகத்திலிருந்து
வந்திருந்த லயோலா கல்லுரி முனைவர் சாரோன், இயக்குனர் தம்பி ராமையா, நடிகர்
கலைவாணி புகழ் 'விமல்' வரை, இதர குவைத்தின் சிறப்பு விருந்தினர்கள்
அத்தனைப் பேரும் எழுந்து நின்று ஒட்டுமொத்த இந்தியராய் சிலிர்த்துப்
போனார்கள்.
ப்போது
தான் எனக்குத் தோன்றியது இத்தனை தேசப் பற்றோடு; ஒவ்வொரு முறை 'இந்தியா'
எனும் போதெல்லாம்; கத்தி ஆரவாரமிட்டு 'இதிய தூதர் மேடையேறிப் பேசிய ஒவ்வொரு
வரிக்கும் கைதட்டி, நம்மை இத்தனை ஆழமாக பற்றுக் கொள்ளும் இந்தியர்
ஆக்கியதன் முயற்சியில் தான்; 'தமிழர் இன ஒற்றுமையும், தமிழர் சார்ந்த பற்றும் மறைக்கவோ மறக்கவோப் பட்டிருக்கிறது' என்று.
அப்போது
மீண்டும் நினைத்தேன்; ஏ பாரதத் தாயே!!!!! என் இந்திய தேசமே!!!!!!! இத்தனை
உனக்காக கூச்சல் போடும் எம் மக்களுக்காய் என் செய்தாய் என் தேசமே? மாறாக
எம் உறவுகளை கொன்று வீழ்தினாயோ??? என்று எண்ணுகையில் உள்ளே இந்திய
தேசத்திற்கென உணர்வு பூண்டிருந்த நரம்புகள் ஒவ்வொன்றாய் அறுந்து,
இதயத்திற்குள் ரத்தமாய் சொட்டிப் போனது.
இருப்பினும்,
இவைகளை கடந்து; இந்திய தூதர் திரு. அஜய் மல்கோத்ரா அவர்கள் பேசுகையில்;
அவர் ஊட்டியில் படித்து வளர்ந்ததாகவும், ஒரு வயதில் பேசிய முதல்வார்த்தை
அம்மா என்றும், இரண்டு வயதில் எழுதிய முதல் எழுத்து தமிழ் என்றும் அவருடைய
அம்மா அடிக்கடி அவரிடம் சொல்வதாகவும் சொல்லி எல்லோரையும் பூரித்துப் போக
வைத்தார்.
வித்யாசாகரின் பத்து புத்தகங்களின் வெளியீட்டு விழா!! 19அது
தவிர, குவைத் வாழ் மக்களின் நலனுக்கான திட்டமாக; குவைத்தில் அரசு முறை
தவறி வசிக்கும் இந்தியர்களை உடனே எந்த விசாரிப்புமின்றி இரண்டு மாத
காலத்திற்குள் தாயகம் அனுப்பி வைக்கும் இவ்வேளையில், அதற்கான முழு
செலவையும், ஏறக்குறைய நூறு பேருக்கேனும் குறைந்தது இந்திய தூதரகம்
எடுத்துக் கொள்ளும் என்று சொல்லி, மேலும் தேசப் பற்று நிறைந்த உங்களை நான்
மதிக்கிறேன், ஒவ்வொரு முறை இந்திய இன்னல்களுற்றப் போதும் பெரிதாய்
உதவியவர்கள் நீங்கள், உங்களுக்கு இந்நேரத்தில் எந்த உதவியையும் என்னால்
இயன்றவரை செய்யக் காத்திருக்கிறேன்" என்று சொல்ல எல்லோரையும் அறியாமலே,
எல்லோருக்கும் அவர் பாரத தாயின் சிறந்த குடிமகனாகவே மெச்சப் பட்டுப்
போனார்.
அடுத்து
வந்த சாரோன் பேசுகையில், திரைத் துறையில் உள்ளவர்கள் நம் பண்பினையும்
மரபினையும் தரம் குறையாவண்ணம் காத்திடல் வேண்டும் என்பது குறித்தும்,
தமிழராய் நாம் தலை நிமிர்ந்திடல் வேண்டும் என்றும்; அங்ஙனம் நாம் உயர்வாக
இருப்பின், தமிழர் தமிழராய் வாழ்வின், ஒற்றுமை மேலோங்கின், நமக்கான தமிழ்
தேசம் மலரும், ஈழம் மலரும்' என்று கூறி பலத்த கைதட்டல்களோடு அமர்ந்தார்.
அவரின் புலமை, பொருமை, நிறைகுடம் தலும்பாது எனும் நம்பிக்கைக்கு சான்றாக
அவரின் கூச்சலற்ற குழப்பமற்ற பேச்சும் புன்னகையும்; சாட்சியாக நின்றது.
அடுத்து
வந்த 'கலவாணி' திரைப்படத்தின் கதாநாயகன் விமல் அவர்கள் பேசுகையில்; அவரின்
மீதான ரசிகர்களின் ஈர்ப்பை மேலும் அதிகப் படுத்திக் கொள்ளும் விதமாக
மூன்று படத்தின் வெற்றிக் களிப்பின்றி, துளியும் கதாநாயகனெனும் கர்வமின்றி,
எந்த அவசியமற்ற ஆரவாரமுமின்றி, மிக தன்னடக்கத்தோடும் எளிமையோடும் பேசி,
பிறகு எல்லோரும் கேட்ட சில கேள்விகளுக்கு மிக பொருத்தமாக நிதானமாக சிரித்த
முகத்தோடு பதிலளித்து, கூத்துப் பட்டறை பற்றியும் அவரின் குரு பற்றியும்
சொல்லி;
கடைசியாக
"அவரவர் செய்யும் தொழிலில் அவரவர் நல்லவராக இருந்தால் போதும்; அந்த
தொழிலில் அவர் நிச்சயம் நட்சத்திரம் போல் மின்னுவாரென்று" அவர் குரு
அவருக்குச் சொல்லிக் கொடுத்ததை நமக்கும் நட்போடு பகிர்ந்து; பின், அவரும்
அங்ஙனம் இருக்க முயல்வதாகவும்; நீங்களும் அங்ஙனம் இருக்க முயலுங்கள்
என்றும் 'ஒரு உயர்ந்த எண்ணத்தின் விதையினை எல்லோர் மனத்தினிலும் மிக
லாவகமாக தூவி அதேநேரம், மிக இயல்பாக 'நான் நல்லவனாக இருக்க முயன்றதால் தான்
இன்று நான் நன்றாக இருக்கிறேன், நீங்களும் முயலுங்கள் நன்றாக வருவீர்கள்
என்று சொல்லியமர -
அந்த
வாய் இன்னும்கொஞ்சம் ஏதேனும் பேசிடாதா, அந்த முகத்தை இன்னும் கொஞ்ச
நேரத்திற்கு கண்டுக் கொண்டே இருக்க மாட்டோமா என்றொரு ஆசை எல்லோருக்குள்ளுமே
வரத் துவங்கியது.
அடுத்து
வந்த இந்திரலோகத்தில் நா. அழகப்பன் திரைப்படத்தின் இயக்குனர் தம்பி ராமையா
பேச வந்தபோது - வருத்தம் எல்லோருக்குள்ளும் உண்டு, அவைகளை கடந்து சிரிக்க
முயல்வோம் என்று சொல்லி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார். இருபது வருட
உழைப்பே எனை உங்கள் முன் கொண்டு வந்து நிற்க வைத்துள்ளது, நீங்களும்
உழைத்தால் வெற்றி உண்களுக்கும் நிச்சயம் உண்டு என்று கூறியதோடு நில்லாமல் -
திரை
துறை என்றாலே; எல்லோரையும் தவறாக பார்க்கும் பார்வையை நீங்கள் எல்லோரும்
மாற்றிக் கொள்ளவேண்டும், காரணம் உங்களில் அதிகம் பேர் எண்ணுவது போல
திரைத்துறையில் உள்ள மொத்த பேருமே தவறல்ல.
இந்த
இருபது வருடத்தில் நான் சந்திக்காத பிரபலங்களோ; அழகிய பெண் நட்சத்திரங்களோ
அல்ல; ஆயினும் என் மனைவியைத் தவிர இதுவரை யாரையும் நான் தொட்டது கூட
கிடையாது' என்று கூறி எல்லோரையும் நெகிழவும், அதோடு நல்ல நோக்கு கொள்ளவும்
செய்தார். ஆக, அவரின் வெள்ளை மனசும் அவரின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய
காரணமென்பது மேடையின் கீழ் அமர்ந்து அவர் பேசக் கேட்ட எங்களுக்கு நன்றாகவே
புரிந்தது.
வித்யாசாகரின் பத்து புத்தகங்களின் வெளியீட்டு விழா!! 201

இடையே விழா நடத்தும் 'குவைத் தமிழோசைக்கு'
கொடையளித்து வெற்றிக்குப் பின் நின்ற முதன்மை கொடையாளி TVS கார்கோ
நிறுவனர் பேசுகையில், அம்பானி உருவான கதையும், அவரின் உழைப்பும்
நேர்த்தியான பார்வையும் சிந்தனையுமே அவரை உலக பார்வையில் அம்பாணியாக்கி
நிறுத்தியது என்றும், நாமும் முயற்சித்தால், நல்லவர்களாக நம்மை நாம்
செம்மைப் படுத்திக் கொண்டால்; நாமும் வல்லவர்களாக திகழலாம் வையகத்தில்
என்றும் தனது அனுபவ பாடத்தை வந்தோருக்கு அளிக்கும் ஆர்வததோடு பேசி
அமர்ந்தார். அவரின் நல்ல மனசும், உண்மையை மறைக்காது நடக்கும்
நல்நடத்தையும், கடவுளின் மீது கொண்ட பற்றும் தான் அவரை இத்தனை பெரிய
கொடையாளி ஆக்கியதென்பதற்கு அவர் பேச்சும் ஒரு சான்றாக அவருக்கு; மேடையிலும்
துணை நின்றது.
தவிர,
விழா நடந்த விதம் என்பது, நம்மை கலைகளினால் மெய்மறக்க செய்ததென்பது
இரண்டாம் பட்சமென்றேக் கூறலாம் போல். காரணம், அத்தகு, வெளிநாட்டில் தான்
வசிக்கிறோமா, வெளிநாட்டில் தான் நம் தமிழன் இத்தனை செய்கிறானா என்று
எண்ணுமாறு தன் அமைவுகளை பண்பு மாறாமல் செய்து காட்டியதிந்த
"ஐம்பெருங்காப்பிய விழா எடுத்த இவ்வமைப்பு.
ஆரம்பிக்கையிலேயே,
வாசலில் இனிப்பும் சந்தனமும் விபூதியும் கொடுத்து இரு கவிதாயினிகள் அழகிய
சேலையில் நின்று வரவேற்க, மேடைக்கு வந்ததும் குத்துவிளக்கேற்றி,
பாரதனாட்டியத்தோடு விழா துவங்க, பின் சிறார்களின் நடனத்தோடும் மனதை கொள்ளை
கொண்டுபோகும் ரசிக்கத் தக்கப் பாடல்களோடும், புத்தக வெளியீடும், விழா மலர்
வெளியீடும், கவியரங்கமும், நாட்டியமும் என ஆடல்பாடலுமென விமரிசையாக
நடந்தேறியது இப்பெரு விழா.
வித்யாசாகரின் பத்து புத்தகங்களின் வெளியீட்டு விழா!! Book-release-3நம்
பத்து புத்தகங்களை ஒவ்வொரு கட்டாக பிரித்து, இந்திய தூதர் திரு. அஜய்
மல்கோத்ரா அவர்கள் வெளியிட நான்கு இதர படைப்புக்களை திரு. இலக்கியப் புயல்
சாரோன் செந்தில்குமார் அவர்களும், மூன்று இதர படைப்புக்களை தமிழ் திரைப்பட
இயக்குனர் மற்றும் நடிகருமான திரு. தம்பி ராமையா அவர்களும், மூன்று இதர
படைப்புகளை பசங்க மற்றும் கலவாணி திரைப்படங்களின் புகழ் கதாநாயகன் திரு.
விமல் அவர்களும் பெற்று விழாவினை சிறப்பித்தனர்.
பாடல்களை
மனதின் ஆழம்வரை தன் குரலால் தொட்டுவிடும் கணேசன், கங்கேஷ்வரன், ராணி மோகன்
மற்றும் பாசத்திற்குரிய குழந்தை தெரசாவும் அசத்தலாக பாடி வந்தோரை
மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தனர். அதிலும் பறை.. பறை.. என வரும் 'தென்றல்'
திரைப்படத்தின் பாடலை ரா.பார்த்திபன் பாடுவதாக நடித்துக் காட்டியது போலவே,
'அதே வீரியத்தோடு பாடகர் கணேசன் பாட; அரங்கம் சற்று கூடுதலாக உணர்ச்சிவயப்
பட்டு பாட்டின் வேகத்தை உடம்பெல்லாம் புகுத்திக் கொண்டே இருக்கும் என்று
சொல்லுமளவிற்கு மிக சிறப்பான பாடல்களும் மேடையில் பாடப் பட்டன.
விழாவின்
முத்தாய்ப்பாக கவியரங்கம் அமைந்தது. திரு. இலக்கியப் புயல் சாரோன்
அவர்கள், தலைமை ஏற்க, கவிஞர் திரு. கருங்குளம் சிவமணி, திரு. கவிசேகரன்,
திரு.சாதிக் பாட்சா, திருமதி.பாரதிக் கண்ணம்மா, திருமதி. தேவி ரவி மற்றும்
திரு. கவிப் பிரியன் எனும் இல. கார்த்திக்கேயன் போன்றோர் கலந்துக் கொண்டு
மிக சிறப்பான கவிதைகளை பாடி உள்ளத்தை உணர்வுகளால் உருக்கி எடுத்தனர்.
ஒரு
கவியரங்கத்திற்கு குவைத் அரங்கம் இத்தனை மதிப்பை தந்து அமைதியாக
அமர்ந்துக் கேட்டதெனில்; அது இக்கவியரங்கமாகவே இருக்கும் என்று
சொல்லுமளவில் ஆறு பேருமே மிக சிறப்பான கவிதைகளைப் பாடி விழாவிற்கு
மிகுந்ததொரு இலக்கிய பலம் சேர்த்தனர்.
தவிர,
விழாவின் ஒவ்வொரு அசைவையும் தன் கவிதைத் திறத்தினால் சந்தம் மாறாது
கோர்த்த கவி மாலை ஒன்று ஆங்காங்கே கழன்று கழன்று வீழ்வதைபோல் கவி மலர்களால்
தூவி தூவி தன் தொகுப்புரையினையும் மிக சிறப்பாக வழங்கினார் நம்
பாசத்திற்குரிய கவிஞர் திரு. அபுதாகிர் அவர்கள்.
மத்தியில்
பெரும் நன்றிக்குரிய குவைத் தமிழோசை மன்றத்தின், தலைவர் திரு. உ.கு.
சிவகுமார், இணை செயலாளர் திரு. அபுதாகிர், பொருளாளர். திரு. அசிஸ் போன்றோர்
சேர்ந்து, 'விழாவிற்கு வருகை புரிந்து சிறப்பித்த விருந்தினர்களுக்கும்
இதர கொடையாளிகளுக்கும் நினைவுப் பேழைகளை வழங்கி, பொன்னாடை போர்த்தி
கௌரவிக்கச் செய்தனர்.
உடன்,
விழா தலைவர் திரு அலாவுதீன் அவர்களும் சிறப்புரையாற்ற, முன்னாள்
பொறுப்பாளர் ஐயா திரு. விட்டுக் கட்டி மஸ்தான் அவர்கள் நன்றியுரை வாசிக்க
விழா இனிதாக நிறைவுற்றது.
வித்யாசாகரின் பத்து புத்தகங்களின் வெளியீட்டு விழா!! Book-release-7விழாவிற்குப்
பின்னே உழைத்த முகங்கள் அரங்கத்தின் வெளிச்சமாகவும் வெற்றியாகவும்
வெளியில் தெரியாமல் ஆங்காங்கே வந்தோரின் முகத் திரளில் சந்தோசமாக மின்னிக்
கிடந்தன.
விழா
முடிந்து, கூட்டம் களைந்து, வளாகம் விட்டு வெளியேறுகையில்; வழியில்
கிடந்த வெளிச்சத்தின் நுனியில் கற்றைகளாகப் புறப்பட்ட இருட்டு வாசல்
கடந்து, மெல்ல மெல்ல மேலெழுந்து, வெற்றிடம் பரவி, வானம் வரை அப்பிக் கிடந்தது.
காற்றில்,
இருட்டில்; தன் பயணம் நோக்கி கடந்துப் போகும் மேகத்தினைப் போல்,
எல்லோரும், தன்னைத் தானே ஓர் இந்தியனாகவும், தமிழனாகவும் ஒருவாறு
அவரவருக்குப் புரிந்தாற்போல் அவரவர் அவரவரை எண்ணிக் கொண்டு மெச்சிதலோடு
வெளியேறினர்.
நானும்
வெளியேறி வாசலில் இருந்த விளம்பரப் பலகையிலிருந்து உள்ளே நடந்த விழாவின்
கடைசிப் புள்ளிவரை தீர அலசி, வந்திருந்த எல்லோரைப் பற்றியும் ஆலோசித்துப்
பார்த்தேன், வெளியே செல்லும் மனிதர்களை பார்த்தேன், இதுவரை சந்தித்த அதிக
பேரை நினைவுற்றேன், என்றோ படித்த நம் தமிழர் வரலாற்றினையும் நினைத்துக்
கொண்டேன், "மனிதராக இருக்க முயன்ற நாம் தமிழராக இல்லையோ? தமிழராக
இருந்திருப்பின், அத்தனை தமிழர்கள் அன்று கொடியவர்களால் அனாதைகளாகக்
கொள்ளப்பட்டிருக்க மாட்டார்களோ" என்று தோன்றியது.
ஏதோ
நாம் பேசும் 'மிச்ச மீதி இருக்கும் தமிழ் மட்டுமே' நம்மை தமிழராய்
அடையாளம் காட்டி, எஞ்சிய இனத்தவரிடமிருந்து' வாழுமளவிற்கு நம்மை காத்துக்
கொள்கிறது போல்' என்றெண்ணி, விரைவாய் தமிழோடு கலந்துப் பேசும் ஆங்கிலத்தை;
இறக்கத் தின்ற மருந்தென' மறக்கத் துணிந்தேன்!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum