TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:48 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 11:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழகத்தை கவர்ந்துள்ள 4 முக்கிய வி.ஐ.பி., தொகுதி நிலவரம்

Go down

தமிழகத்தை கவர்ந்துள்ள 4 முக்கிய வி.ஐ.பி., தொகுதி நிலவரம் Empty தமிழகத்தை கவர்ந்துள்ள 4 முக்கிய வி.ஐ.பி., தொகுதி நிலவரம்

Post by mmani Sun Apr 10, 2011 9:49 am

தமிழகம் முழுவதும் அனைவரது கவனத்தையும் நான்கு தொகுதிகள் கவர்ந்துள்ளன.
முதல்வர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர், எதிர்க்கட்சித் தலைவர்
ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கம், துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும்
கொளத்தூர், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம்
ஆகிய தொகுதிகளில், வெற்றி யாருக்கு கிடைக்கும்? ஆறாவது முறையாக முதல்வராக
பதவி ஏற்க வேண்டும் என்ற ஆசையில், சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில்
போட்டியிடுகிறார் முதல்வர் கருணாநிதி. முதல்வர் தொகுதி என்ற வி.ஐ.பி.,
அந்தஸ்தை பெற்றுள்ள இந்த தொகுதியில் பிரச்னைகள் ஏராளம். பெரும்பான்மை
இடங்களில் வெற்றி பெற்றால் முதல்வர் என்ற பிரசாரத்துடன், ஸ்ரீரங்கம்
தொகுதியில் களம் இறங்கியுள்ளார் ஜெயலலிதா. அவரை தோற்கடித்தே தீர வேண்டும்
என்ற தீவிரத்துடன் களம் இறங்கியுள்ளது. தி.மு.க.,
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின் தான் முதல்வர் என்ற
பிரசாரத்துடன் கொளத்தூர் களைகட்டியுள்ளது. சுலபமாக வெற்றி பெற்று விடலாம்
என்ற எண்ணத்துடன் இந்த தொகுதியை தேர்ந்தெடுத்தார் ஸ்டாலின். தொகுதிக்கு
புதியவர் என்றாலும், அறிமுகமே தேவையில்லை என்ற அளவுக்கு பிரபலமான சைதை
துரைசாமி, இந்த தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் களம் இறங்கியதும் நிலைமை
மாறி விட்டது. தனி ஆளாக கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற விஜயகாந்த், இந்த
முறை தொகுதி மாறி ரிஷிவந்தியத்தில் போட்டியிடுகிறார். அவரது கட்சியின்
அரசியல் எதிர்காலம், இந்த தொகுதியில் அவர் வெற்றியின் மூலம் தான்
நிர்ணயிக்கப்பட உள்ளது. பல தரப்பட்ட எதிர்ப்புகளை சமாளித்து, இந்த
தொகுதியில் விஜயகாந்த் களம் இறங்கியுள்ளார்.
அ.தி.மு.க.,வுக்கு சொர்க்கவாசல் திறக்குமா? ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் தொகுதி என்பது திருச்சி மாநகராட்சியில் ஆறு வார்டுகள்,
அந்தநல்லூர், மணிகண்டம் ஆகிய இரண்டு யூனியன்கள், மணப்பாறை யூனியனில் 10
கிராம பஞ்சாயத்துகள் என மொத்தம் இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 827
ஓட்டுக்கள் உள்ளன. உலகமறிந்த ஆன்மிக தலமான ஸ்ரீரங்கத்தை தனது பூர்வீகம்
என்று கூறி களமிறங்கியுள்ள ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க., சார்பில்
ஆனந்த் (29) என்ற கிளைச் செயலர் நிறுத்தப்பட்டுள்ளார். இவர்கள் தவிர
ஐ.ஜே.கே., சார்பில் தமிழரசி என்ற பெண் உள்ளிட்ட 21 பேர் வேட்பாளர்களாக
களத்தில் உள்ளனர். ஸ்ரீரங்கம் தொகுதியை பொறுத்தவரை முத்தரையர்களை
பெரும்பான்மையாக உள்ளனர். அவர்கள் எப்போதும் அ.தி.மு.க.,வுக்கு
சாதகமானவர்களாவே இருந்துள்ளனர். ஆனால் இம்முறை தி.மு.க., சார்பில்
போட்டியிடும் வேட்பாளர் முத்தரையர் சமுதாய இளைஞர் என்பதால், அவருக்கு
ஆதரவாக முத்தரையர் தி.மு.க.,வுக்கு ஓட்டளிப்பர் என்று அக்கட்சியினர்
மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதேபோல் பிரசாரத்திலும் தி.மு.க.,
வேட்பாளர் ஆனந்த் இள வட்டங்களுடன் பட்டையை கிளப்பி வருகிறார். அதேசமயம்
அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தான்
திருச்சியில் முத்தரையர் சிலை வைக்கப்பட்டது என்பதையும் தொகுதி மக்கள்
மறக்காமல் உள்ளனர் என்பதை அ.தி.மு.க.,வினர் நினைவூட்டுகின்றனர்.
முத்தரையர் சமுதாயத்தில் முக்கிய நபராக விளங்கும் ஆர்.விஸ்வநாதன்
ஆரம்பித்துள்ள சிங்கத்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் ஸ்ரீரங்கம்
தொகுதியில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. அதேசமயம் தி.மு.க., சார்பில்
போட்டியிடும் ஆனந்துக்கு ஆதரவு கொடுப்போம் என்றும் சொல்லவில்லை. தி.மு.க.,
வேட்பாளர் ஆனந்துக்காக தேர்தல் பணியில் களமிறங்கியுள்ளவர்கள் போதிய
அனுபவம் இல்லாதவர்கள். ஆனால், அ.தி.மு.க., சார்பில் களம்
இறக்கப்பட்டுள்ளவர்கள் தேர்தல் பணியில் கரை கண்டவர்கள். தி.மு.க.,
வேட்பாளர் ஆனந்த் பணத்தை வாரி இறைத்தும் அது மக்களுக்கு முழுமையாக
சென்றடைந் ததா என்று தெரியவில்லை. தி.மு.க.,வுக்கு நலத்திட்டங்கள் "கை'
கொடுக்கும் என்றால், அ.தி.மு.க.,வுக்கு தி.மு.க., ஆட்சியில் நடந்த
ஊழல்கள், அமைச்சர்களின் அட்டகாசங்கள் உள்ளிட்ட பலவும் பலமான விஷயங்களாக
உள்ளது. இதையெல்லாம் விட கடந்த எம்.பி., தேர்தலில் திருச்சி எம்.பி.,
தொகுதியில் ஐந்து சட்டசபை ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலையில் இருந்த
தி.மு.க.,வை, பின்னுக்கு தள்ளி அ.தி.மு.க., வேட்பாளர் 20 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக இருந்த ஸ்ரீரங்கம்
தொகுதி ஜெயலலிதாவையா கைவிடும் என்று கண்ணோட்டத்தில் அ.தி.மு.க.,வினர்
தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.
தொடர்ந்து ஓடுமா ஆழித்தேர்? திருவாரூர்
திருவாரூர் தொகுதி 131 கிராமங்களை உள்ளடக்கியது. இத்தொகுதியில்
திருவாரூர், கூத்தாநல்லூர் நகராட்சிகள், கொரடாச்சேரி பேரூராட்சி
அடங்கியுள்ளது. பிரதான தொழில் விவசாயம். இங்கு பிரசித்திப் பெற்ற தியாகராஜ
சுவாமி கோவில், கமலாலய குளம் உள்ளது. திருவாரூர் தொகுதியில் தி.மு.க.,-
கம்யூனிஸ்ட் கட்சிகள் பலம் பொருந்தியதாக உள்ளன. கடந்த 1967 முதல் நடந்த 10
பொதுத் தேர்தலில் மா.கம்யூ., 1967, 1980, 1984, 1989, 1991 ஆகிய ஐந்து
முறையும், தி.மு.க., 1971, 1977, 1996, 2001, 2006 ஆகிய ஐந்து முறையும்
வெற்றி பெற்று வந்துள்ளது. திருவாரூர் 44 ஆண்டுகளுக்கு பின் பொது
தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் 72 கால அரசியல் வாழ்க்கையில்
இருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, முதல் முறையாக தனது சொந்த ஊர்
தொகுதியில் போட்டியிடுகிறார். எதிரணியில் அ.தி.மு.க.,வில் கள்ளர்
சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலர் குடவாசல்
ராஜேந்திரன் களம் இறக்கப்பட்டுள்ளார்.
தொகுதியை பொருத்தவரை வெற்றியை நிர்ணயிக்கும் அளவில் வெள்ளாளர்கள்,
ஆதிதிராவிடர்கள் உள்ளனர். ஆனால் கள்ளர்கள் சமூகத்தினர் ஒருங்கிணைந்து
செயல்பட்டு வருவதால் வெற்றியை நிர்ணயிக்கும் நிலையில் உள்ளனர். ஐந்து முறை
முதல்வராக இருந்த தலைவர் கருணாநிதி தனது சொந்த ஊரான திருவாரூருக்கு நீண்ட
காலங்களுக்கு பின் தான் அரசு மருத்துவக் கல்லூரி, மத்திய பல்கலைக் கழகத்தை
கொண்டு வந்தார். ஆனால் புதிய பஸ் நிலையம், நான்கு வழிச்சாலை போன்றவை
கோரிக்கையாகவே உள்ளன. திருவாரூர் நகரை பொருத்தவரை பாதாள சாக்கடைத்
திட்டத்தால் மூன்று ஆண்டுகளாக பட்ட வேதனை, போக்குவரத்து நெரிசலில் தடுக்க
புதிய வழி, வேலைவாய்ப்பு, கல்வி உருவாக்குவதற்கான திட்டம்,
ஆக்கிரமிப்புகள் அகற்றாமை, மடப்புரத்தில் பாலம் அமைக்காதது போன்றவை நகர
மக்களின் பெரிய குறைபாடுகளாக உள்ளன.
கடந்த 2006 தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் பலம் மிக்க கூட்டணியில்
அமைச்சராக இருந்த மதிவாணன் போட்டியிட்டு 76 ஆயிரத்து 901 ஓட்டுகள்
பெற்றார். அ.தி.மு.க.,வில் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்ட தங்கமணி
49 ஆயிரத்து 968 ஓட்டுகள் பெற்றுள்ளார். அ.தி.மு.க., வேட்பாளர் கள்ளர்
சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தொகுதியில் உள்ள கள்ளர் இன மக்களை ஒன்று
திரட்டுவதன் மூலமும், கூட்டணி கட்சிகளின் பலத்திலும் வெற்றி பெற
முயற்சித்து வருகின்றனர். அதனால் தான் தி.மு.க., தலைவர் கருணாநிதி வேட்பு
மனு தாக்கல் செய்த போது மிக அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி என்கிற
நிலை தற்போது மாறி, சற்று நெருக்கடியான நிலையும் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க.,வில் தந்தைக்காக மகள் செல்வி மட்டுமே வீடுகள் தோறும் சென்று
ஓட்டு கேட்டு வருகிறார். மக்கள் குறைகளை தெரிவித்தாலும் சமாதானம் செய்து,
தந்தைக்கு ஆதரவை பெருக்கி வருகிறார். தி.மு.க., கட்சி நிர்வாகிகளும் சரி,
வெளியூரில் இருந்து வரும் தலைவர்களும் சரி, ஏதோ பெயரளவில் தான் பிரசாரம்
செய்கின்றனர். மூத்த அரசியல்வாதி, தி.மு.க.,வின் தலைவர், முதல்வர்
வேட்பாளர் என்பதைவிட, மண்ணின் மைந்தர் என்ற பாசத்தின் காரணமாக, திருவாரூர்
சொந்தங்கள் வெற்றி பெற செய்துவிடுவர் என்று தி.மு.க., வினர் நம்புகின்றனர்.
அரசியல் ரிஷி யோகம் யாருக்கு? ரிஷிவந்தியம்
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் காங்., வேட்பாளர்
சிவராஜ், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இறுதி கட்ட "கவனிப்பு'களால் மட்டுமே வெற்றி நிர்ணயிக்கப்படும் நிலை உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி, தமிழக மக்கள் அனைவரும்
உற்று நோக்கும் தொகுதியாக மாறியுள்ளது. இங்கு, காங்., சிவராஜ் கடந்த 1984,
1996, 2001, 2006 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 15
ஆண்டுகளுக்கும் மேலாக எம்.எல்.ஏ.,வாக உள்ளார். கடந்த ஜனவரி மாத
கணக்கீட்டின்படி 1 லட்சத்து 5 ஆயிரத்து 471 ஆண்கள், 98 ஆயிரத்து 983
பெண்கள், 15 திருநங்கைகள் உட்பட 2 லட்சத்து 4 ஆயிரத்து 469 வாக்காளர்கள்
உள்ளனர். தி.மு.க.,விற்கு 18 சதவீத ஓட்டுகளும், அ.தி.மு.க.,விற்கு 26
சதவீதம், காங்கிரஸ் 21 சதவீதம், தே.மு.தி.க.,விற்கு 14 சதவீதம்,
பா.ம.க.,விற்கு 7 சதவீதம், வி.சி.,க்கு 6 சதவீதம், கம்யூ.,விற்கு 2
சதவீதம், இதர கட்சிகளுக்கு 6 சதவீதம் ஓட்டு உள்ளது. கடந்த சட்டசபை,
லோக்சபா தேர்தல்களில் சராசரியாக 22 ஆயிரம் ஓட்டுகள் தே.மு.தி.க.,விற்கு
கிடைத்துள்ளது. இந்த ஓட்டுகள் மாறப் போவதில்லை. அ.தி.மு.க., மற்றும்
கம்யூ., கட்சிகளுக்கு உள்ள ஓட்டுகள், தி.மு.க., மீதான அதிருப்தி ஓட்டுகள்,
எம்.பி., ஆதிசங்கர் மற்றும் சிவராஜ் இடையே இருந்த பிரச்னைகள் தனக்கு
சாதகமாக இருக்கும் என கருதி தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இங்கு
போட்டியிடுகிறார். ஆரம்பத்தில் எம்.பி., ஆதிசங்கர் சில உள்ளடி வேலைகளை
செய்வதாக புகார் எழுந்தது. முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின்
தலையிட்டதால் ஆதிசங்கர், தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார். காங்.,
தரப்பில் கவனிப்பு பலமாக இருந்ததால், எப்படியும் விஜயகாந்தை தோற்கடிக்க
வேண்டுமென தேர்தல் களத்தில் தீவிரமாக உள்ளனர்.
தே.மு.தி.க., தரப்பிலும் அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி முக்கிய
நிர்வாகிகள் தேர்தல் பணியில் தீவிரமாக உள்ளனர். முக்கிய நிர்வாகிகள்
இருக்குமளவிற்கு, தொண்டர்கள் இல்லை. தே.மு.தி.க., தொண்டர்கள் தான்
அதிகளவில் பணிபுரிகின்றனர். நடிகர்களை பார்க்க வரும் கூட்டத்தால் எதையும்
கணிக்க முடியாது என்றாலும், இரு தரப்பிலும் போட்டி பிரசாரம் செய்வதால்,
தொகுதியில் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மேலும் காங்.,
எம்.எல்.ஏ., மீது ஊழல் புகார்கள் எதுவும் இல்லாததால் தைரியமாக ஓட்டு
கேட்கிறார். விஜயகாந்த் வெற்றி பெற்றால் தொகுதி பக்கம் வரமாட்டார் என
கூறி, வேட்பாளர் வீட்டு விலாசத்தைக் கூறி பிரசாரம் செய்கின்றனர். "சிவராஜ்
சென்னையில் தான் அதிக நாட்கள் உள்ளார். நாங்கள் வெற்றி பெற்றால் அலுவலகம்
திறந்து தொகுதியில் செய்ய வேண்டிய பணிகளை கவனிப்போம்' என,
தே.மு.தி.க.,வினரும் கூறுகின்றனர். தொகுதியில் சில இடங்களில்
தே.மு.தி.க.,விற்கு சாதகமாகவும், சில இடங்களில் காங்கிரசிற்கும் ஆதரவு
உள்ளது. மாற்றம் தேவை என நடுநிலை வாக்காளர்கள் முடிவு செய்து ஓட்டளித்தால்
மட்டுமே விஜயகாந்த் சிக்கலின்றி வெற்றி பெற முடியும். இறுதி கட்ட
"கவனிப்பு'களுக்கு வாக்காளர்கள் மயங்கினால் வெற்றி தோல்வியை அது தான்
நிர்ணயம் செய்யும். இரு தரப்பிலும் கடும் போட்டி இருப்பதால், யார் வெற்றி
பெற்றாலும் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியாது என்ற
கருத்தும் நிலவுகிறது.
இங்கே மீன் பிடிக்கப்போவது யார்? கொளத்தூர்
வி.ஐ.பி., தொகுதியாகிவிட்ட புதிய சட்டசபை தொகுதியான சென்னை கொளத்தூர்
தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு
இடையே நடக்கும் மும்முனைப் போட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பகுஜன்
சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங், தி.மு.க., வேட்பாளராக துணை முதல்வர்
ஸ்டாலின், அ.தி.மு.க., சார்பில் சைதை துரைசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஆசியாவிலேயே பெரிய தொகுதியான வில்லிவாக்கம் மற்றும் புரசைவாக்கம்
தொகுதிகளில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய தொகுதியாக கொளத்தூர் உருவாகி
உள்ளது. இத்தொகுதி சாலை, போக்குவரத்து, குடியிருப்புகள், தனியார் வியாபார
நிறுவனங்கள் என பரவலான அடிப்படை வசதிகளுடன் நல்ல வளர்ச்சி
பெற்றிருந்தாலும், மாநில அரசு தரப்பிலான கல்விக்கூடங்கள், வேலை
வாய்ப்புகள் குறிப்பிடும்படியாக இல்லை. கடந்த காலங்களில் தி.மு.க.,
கூட்டணியைச் சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர்களின் "அடாவடி' நடவடிக்கையால்
அவர்கள் மீது பெரும் பான்மை மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அது
தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. இத்தொகுதியில் 1 லட்சத்து
98 ஆயிரத்து 018 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெரும்பான்மையானவர்கள்
அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். ரயில்வே மற்றும்
தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், சுய தொழில் செய்வோரின்
கணிசமான ஓட்டுகள் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும். துணை முதல்வர் ஸ்டாலின்
மற்றும் மனித நேய அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி ஆகியோருக்கு கட்சி,
பொது வாழ்க்கை ரீதியிலான புகழ், செல்வாக்கு ஆகியவை உள்ளன.
கொளத்தூர் 62வது வட்டத்தில் உள்ள சில பகுதிகள் மற்றும் கொளத்தூர்
காலனி, கண்ணகி நகர், அஞ்சுகம் நகர், அம்பேத்கர் நகர், ராஜிவ் காந்தி நகர்,
செந்தில் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் நீடிக்கும் குடிநீர் மற்றும் பாதாள
சாக்கடை பிரச்னைகள் கண்டு கொள்ளப்படாமலே உள்ளது. அவற்றை சீரமைக்க போதிய
அதிகாரிகளும் இல்லை. பாதாள சாக்கடை பிரச்னையால் மேற்கண்ட பல நகர்
பகுதிகளின் நிலை மழைக்காலத்தில் மிக மோசமாகி விடுகிறது. மின்சாரப்
பற்றாக்குறை காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் துணை மின் நிலையம் அமைக்க
அனுமதி கிடைத்து இடமும் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், இன்று வரை துணை மின்
நிலையமும் அமைக்கப்படவில்லை. கொளத்தூரில் அமைக்கப்பட்ட நூறாவது உழவர்
சந்தை திறக்கப்படாமலே குப்பை மேடாகி உள்ளது. மக்களின் பாதுகாப்பிற்கான
கொளத்தூர் போலீஸ் நிலையம் நகருக்கு ஒதுக்குப்புறமாக வில்லிவாக்கம் ரயில்
நிலையம் அருகே உள்ளது. இதனால் நகரின் மையப்பகுதியில் வழிப்பறி, பூட்டு
உடைத்து கொள்ளை, கட்டப்பஞ்சாயத்துகளின் அரங்கேற்றம் தலைவிரித்தாடுவதாக
மக்கள் பலத்த குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். தொகுதிக்குள் இப்படி பல
பிரச்னைகள் இருந்தாலும் அவற்றை தேர்தலுக்குப்பின் சீரமைப்போம் என்று உறுதி
அளித்து, துணை முதல்வரின் வெற் றிக்காக அவரது மனைவி துர்கா, மக்களை அணுகி
ஓட்டு சேகரித்து வருகிறார். திறந்த ஜீப்பில் ஸ்டாலின் தொகுதியில் வலம்
வந்துள்ளார். அ. தி.மு.க., கூட்டணி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினரும்,
ஆளும் கட்சியினரை எதிர்த்து தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஐ.ஜே.கே., மற்றும் சுயேச்சை வேட்பாளர்களால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை என்ற
நிலையே நீடிக்கிறது.
"சைதை துரைசாமி வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் தொகுதியின்
முன்னேற்றத்திற்கு உதவுவார், தொகுதியில் இலவச ஐ.ஏ.எஸ்., அகடமி உட்பட பல
நல்ல திட்டங்களை செயல்படுத்துவார்' என்ற நம்பிக்கை இந்த தொகுதியில்
உள்ளது. தொகுதி முழுவதும் நடந்தே சென்று ஓட்டு கேட்ட ஒரே வேட்பாளர் இவர்
தான். தொகுதிக்கு புதியவர் என்றாலும் அறிமுகமே தேவையில்லை என்ற அளவிற்கு
இவரை தொகுதி மக்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். இவருக்காக நன்கு படித்த,
பெரும் இளைஞர் படையே வேலை செய்கிறது கூடுதல் பிளஸ் பாயின்ட். கடைசி நேர
"வேலை'யைநம்பி இந்த தொகுதியில் தி.மு.க., இருக்கிறது. அதை முறியடிக்க
எல்லா வியூகங்ளையும் அ.தி.மு.க.,வும் தயாராக வைத்துள்ளது. "சுலபமாக வெற்றி
பெற்று விடலாம்' என்ற நம்பிக்கையுடன் இந்த தொகுதிக்கு மாறி வந்த
ஸ்டாலினுக்கு, சைதை துரைசாமி பெரும் சிக்கலை ஏற்படுத்தி விட்டார் என்பதே
உண்மை.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum