Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:13 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
அழகிரியும் திமுகவும் (தேர்தல் ஸ்பெஷல்)
Page 1 of 1
அழகிரியும் திமுகவும் (தேர்தல் ஸ்பெஷல்)
இந்தியாவில் ஒருவர் மத்திய அமைச்சராகப்
பணிபுரிய அடிப்படையாகத் தேவைப்படுவது கொஞ்சம் ஆங்கில அறிவு தான். இதுவரை
தமிழ்நாட்டிலிருந்து எவ்வளவோ பேர் எம்.பி.ஆக, எம்.எல்.ஏ-வாகச்
சென்றிருக்கிறார்கள். அவர்களில் சிலர் வெறும் பட்லர் இங்கிலீஸை வைத்து
ஒப்பேற்றியவர்கள் தான். பிற மாநிலத்திலிருந்து வருவோர் ஹிந்தியை வைத்துச்
சமாளிப்பதும் உண்டு.
ஆனால்
ஆங்கிலமும் தெரியாமல், ஹிந்தியும் தெரியாமல் கலைஞருக்கு மகன் என்ற ஒரே
தகுதியுடன் அழகிரி மத்திய அமைச்சராக்கப் பட்டார். அதன் விளைவு, திராவிட
இயக்கத்தின் அடிநாதமாகிய ‘ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்’ கேலிக்குரியதாக
ஆகியதுதான். தனக்கேயுரிய நியாயங்களை அப்போது கொண்டிருந்த, பலரின்
தியாகத்தால் நடத்தப்பட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கேவலப்படுத்தியது
தான் அழகிரி அரசியலுக்கு வந்து செய்த மாபெரும் தவறு.
ஏன் இது நிகழ்ந்தது என்று
பார்த்தால், அதன் காரணமாக முன் நிற்பது தா.கிருட்டிணன் கொலையும், சன்.டிவி
ஊழியர்கள் கொலையும், குடும்பச் சண்டையும் தான்.
தா.கிருட்டிணன் கொலைவழக்கில்
குற்றவாளியாகவே சேர்க்கப்பட்டார் அழகிரி. சன் டிவி அலுவலகத் தாக்குதலிலும்
மாறன் சகோதரர்களால் நேரடியாகவே ரவுடி என குற்றம் சாட்டப்பட்டார். இந்த
வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக அரசியல் பாதுகாப்பு வேண்டி
எம்.பி.ஆக்கப்பட்டார் அழகிரி. மாறன் பிரதர்ஸின் அதிகாரத்தைக் குறைக்கும்
முகமாக மத்தியில் அமைச்சராகவும் ஆக்கப்பட்டார் அழகிரி.
தொடர்ந்து 12 வருடம் தமிழ்
மீடியத்திலேயே படித்து வந்த என்னைப்போன்றவர்கள், கல்லூரியில் ஒன்று/இரண்டு
வருடத்திற்குள்ளாகவே ஆங்கிலம் கற்றுத் தேர்ந்திருக்கிறோம். கூலி வேலைக்கு
மும்பை செல்லும் பல தமிழர்கள் ஒரு மாதத்திற்குள் ஹிந்தி பேசுவதையும்
கண்டிருக்கிறோம். (உண்மையில் ஆங்கிலத்தை விட, ஹிந்தி எளிது..வாக்கிய
அமைப்பு தமிழ் போன்றே இருப்பதால்!)
ஆனால் நாட்டின் அமைச்சர்
பொறுப்பையே கொடுத்தும் தன்னைத் தகுதிப் படுத்திக்கொள்ளத் தவறியதன் மூலம்
’தமிழர்கள் தற்குறிகள்’ என்ற ஹிந்தி வாலாக்களின் கருத்தை உறுதிப்படுத்தும்
விதமாகவே நடந்து கொண்டார் அழகிரி. அஞ்சாநெஞ்சன் என்ற அடைமொழியோடு போனவர்
தொடைநடுங்கியாக வந்து சேர்ந்தார். ஆங்கிலத்தில் ஒன்று சொல்வார்கள்
‘Survival of the Fittest!'. அதன் அர்த்தமாவது அழகிரிக்கு இப்போது
புரிந்திருக்கும்.
உண்மையில்
தான் ஒரு திறமையான நிர்வாகி என அழகிரி நிரூபிக்க நல்லவொரு வாய்ப்பைக்
கலைஞர் கொடுத்தார். இன்னும் அந்த வாய்ப்பு இருக்கவே செய்கிறது. ஆனால்
தமிழக அரசியலிலேயே கண்ணாக அழகிரி இருப்பது தான் பிரச்சினையே.
ஸ்டாலின் கட்சிக்காக ஆற்றிய
பணிகளையும், அனுபவித்த சிறைவாசத்தையும் ஒப்பிடும்போது அழகிரிக்கு
கொடுக்கப்படும் முக்கியத்துவம் ரொம்பவே அதிகம் தான். இதை நல்லமுறையில்
உபயோகித்து, டெல்லியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதே அழகிரிக்கும்
திமுகவிற்கும் நல்லது.
டெல்லியில் பட்ட அவமானம்,
கனிமொழி & கோ மீதான கடுப்பு, ஸ்டாலின் துணை முதல்வர் நாற்காலியைக்
கைப்பற்றியது போன்ற காரணங்களால் கடுப்பில் இருக்கிறார் அழகிரி. கலைஞரும்
எதனாலோ அழகிரியைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேங்கிறார். எனவே வருகின்ற
தேர்தலில் அழகிரியின் ஒத்துழைப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பது அரசியல்
வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
2001ல் அழகிரி ஒத்துழைக்காத
காரணத்தாலேயே பி.டி.ஆர் போன்ற பெரும் தலைகளே தோற்றார்கள். அதுவே அதிமுக
ஆட்சிக்கு வரவும் உதவியது. இந்த முறையும் அழகிரி முறுக்கிக் கொண்டு
நின்றால், திமுகவிற்குப் பெரும் பின்னடைவே ஏற்படும்.
அழகிரியின் இத்தகைய போக்கு தொடர்ந்தால், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்
ஜெ-ஜானகி என இரு அணியாகப் பிரிந்து, ஒரு தேர்தலில் அடிவாங்கித்
திருந்தியது போலவே கலைஞர் காலத்திற்குப் பின் திமுகவிற்கும் நடக்கும்.
அப்போது ஜானகியை விடவும் மோசமாக, ஸ்டாலின் - மாறன் கூட்டணியால் காலி
செய்யப்படுவார் அழகிரி.
அழகிரியிடம்
உள்ள நல்ல பழக்கம், தொண்டர்களுடன் நெருங்கிப் பழகும் எளிய குணம். அதுதான்
இத்தனை குறைபாடுகளுடன் இருந்தாலும் அவரை தொண்டர்கள் விரும்புவதற்கான
காரணம்.
மக்கள் மத்தியில் தனக்கிருக்கும் ரவுடி இமேஜையும் ‘செயல்படாத அமைச்சர்’
இமேஜையும் மாற்றினால் மட்டுமே அழகிரிக்கு அரசியலில் வாழ்வுண்டு. உணர்வாரா?
பணிபுரிய அடிப்படையாகத் தேவைப்படுவது கொஞ்சம் ஆங்கில அறிவு தான். இதுவரை
தமிழ்நாட்டிலிருந்து எவ்வளவோ பேர் எம்.பி.ஆக, எம்.எல்.ஏ-வாகச்
சென்றிருக்கிறார்கள். அவர்களில் சிலர் வெறும் பட்லர் இங்கிலீஸை வைத்து
ஒப்பேற்றியவர்கள் தான். பிற மாநிலத்திலிருந்து வருவோர் ஹிந்தியை வைத்துச்
சமாளிப்பதும் உண்டு.
ஆனால்
ஆங்கிலமும் தெரியாமல், ஹிந்தியும் தெரியாமல் கலைஞருக்கு மகன் என்ற ஒரே
தகுதியுடன் அழகிரி மத்திய அமைச்சராக்கப் பட்டார். அதன் விளைவு, திராவிட
இயக்கத்தின் அடிநாதமாகிய ‘ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்’ கேலிக்குரியதாக
ஆகியதுதான். தனக்கேயுரிய நியாயங்களை அப்போது கொண்டிருந்த, பலரின்
தியாகத்தால் நடத்தப்பட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கேவலப்படுத்தியது
தான் அழகிரி அரசியலுக்கு வந்து செய்த மாபெரும் தவறு.
ஏன் இது நிகழ்ந்தது என்று
பார்த்தால், அதன் காரணமாக முன் நிற்பது தா.கிருட்டிணன் கொலையும், சன்.டிவி
ஊழியர்கள் கொலையும், குடும்பச் சண்டையும் தான்.
தா.கிருட்டிணன் கொலைவழக்கில்
குற்றவாளியாகவே சேர்க்கப்பட்டார் அழகிரி. சன் டிவி அலுவலகத் தாக்குதலிலும்
மாறன் சகோதரர்களால் நேரடியாகவே ரவுடி என குற்றம் சாட்டப்பட்டார். இந்த
வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக அரசியல் பாதுகாப்பு வேண்டி
எம்.பி.ஆக்கப்பட்டார் அழகிரி. மாறன் பிரதர்ஸின் அதிகாரத்தைக் குறைக்கும்
முகமாக மத்தியில் அமைச்சராகவும் ஆக்கப்பட்டார் அழகிரி.
தொடர்ந்து 12 வருடம் தமிழ்
மீடியத்திலேயே படித்து வந்த என்னைப்போன்றவர்கள், கல்லூரியில் ஒன்று/இரண்டு
வருடத்திற்குள்ளாகவே ஆங்கிலம் கற்றுத் தேர்ந்திருக்கிறோம். கூலி வேலைக்கு
மும்பை செல்லும் பல தமிழர்கள் ஒரு மாதத்திற்குள் ஹிந்தி பேசுவதையும்
கண்டிருக்கிறோம். (உண்மையில் ஆங்கிலத்தை விட, ஹிந்தி எளிது..வாக்கிய
அமைப்பு தமிழ் போன்றே இருப்பதால்!)
ஆனால் நாட்டின் அமைச்சர்
பொறுப்பையே கொடுத்தும் தன்னைத் தகுதிப் படுத்திக்கொள்ளத் தவறியதன் மூலம்
’தமிழர்கள் தற்குறிகள்’ என்ற ஹிந்தி வாலாக்களின் கருத்தை உறுதிப்படுத்தும்
விதமாகவே நடந்து கொண்டார் அழகிரி. அஞ்சாநெஞ்சன் என்ற அடைமொழியோடு போனவர்
தொடைநடுங்கியாக வந்து சேர்ந்தார். ஆங்கிலத்தில் ஒன்று சொல்வார்கள்
‘Survival of the Fittest!'. அதன் அர்த்தமாவது அழகிரிக்கு இப்போது
புரிந்திருக்கும்.
உண்மையில்
தான் ஒரு திறமையான நிர்வாகி என அழகிரி நிரூபிக்க நல்லவொரு வாய்ப்பைக்
கலைஞர் கொடுத்தார். இன்னும் அந்த வாய்ப்பு இருக்கவே செய்கிறது. ஆனால்
தமிழக அரசியலிலேயே கண்ணாக அழகிரி இருப்பது தான் பிரச்சினையே.
ஸ்டாலின் கட்சிக்காக ஆற்றிய
பணிகளையும், அனுபவித்த சிறைவாசத்தையும் ஒப்பிடும்போது அழகிரிக்கு
கொடுக்கப்படும் முக்கியத்துவம் ரொம்பவே அதிகம் தான். இதை நல்லமுறையில்
உபயோகித்து, டெல்லியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதே அழகிரிக்கும்
திமுகவிற்கும் நல்லது.
டெல்லியில் பட்ட அவமானம்,
கனிமொழி & கோ மீதான கடுப்பு, ஸ்டாலின் துணை முதல்வர் நாற்காலியைக்
கைப்பற்றியது போன்ற காரணங்களால் கடுப்பில் இருக்கிறார் அழகிரி. கலைஞரும்
எதனாலோ அழகிரியைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேங்கிறார். எனவே வருகின்ற
தேர்தலில் அழகிரியின் ஒத்துழைப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பது அரசியல்
வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
2001ல் அழகிரி ஒத்துழைக்காத
காரணத்தாலேயே பி.டி.ஆர் போன்ற பெரும் தலைகளே தோற்றார்கள். அதுவே அதிமுக
ஆட்சிக்கு வரவும் உதவியது. இந்த முறையும் அழகிரி முறுக்கிக் கொண்டு
நின்றால், திமுகவிற்குப் பெரும் பின்னடைவே ஏற்படும்.
அழகிரியின் இத்தகைய போக்கு தொடர்ந்தால், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்
ஜெ-ஜானகி என இரு அணியாகப் பிரிந்து, ஒரு தேர்தலில் அடிவாங்கித்
திருந்தியது போலவே கலைஞர் காலத்திற்குப் பின் திமுகவிற்கும் நடக்கும்.
அப்போது ஜானகியை விடவும் மோசமாக, ஸ்டாலின் - மாறன் கூட்டணியால் காலி
செய்யப்படுவார் அழகிரி.
அழகிரியிடம்
உள்ள நல்ல பழக்கம், தொண்டர்களுடன் நெருங்கிப் பழகும் எளிய குணம். அதுதான்
இத்தனை குறைபாடுகளுடன் இருந்தாலும் அவரை தொண்டர்கள் விரும்புவதற்கான
காரணம்.
மக்கள் மத்தியில் தனக்கிருக்கும் ரவுடி இமேஜையும் ‘செயல்படாத அமைச்சர்’
இமேஜையும் மாற்றினால் மட்டுமே அழகிரிக்கு அரசியலில் வாழ்வுண்டு. உணர்வாரா?
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» இலங்கை செல்லும் குழுவில் திமுகவும் இடம்பெறாது: கருணாநிதி
» தினமணி நாளிதழுக்கு இந்திய தேர்தல் தலைமை ஆணையர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மாநில தேர்தல் ஆணையர் இவர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் கூட தெரியவில்லையா?
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» மோடியின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படாது: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்...
» தேர்தல் கமிஷன் நடவடிக்கை சிறப்பு : மாஜி தேர்தல் அதிகாரி அதிரடி பேட்டி
» தினமணி நாளிதழுக்கு இந்திய தேர்தல் தலைமை ஆணையர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மாநில தேர்தல் ஆணையர் இவர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் கூட தெரியவில்லையா?
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» மோடியின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படாது: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்...
» தேர்தல் கமிஷன் நடவடிக்கை சிறப்பு : மாஜி தேர்தல் அதிகாரி அதிரடி பேட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|