TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வெளிச்சத்துக்கு வராத சந்திப்பு இரகசியங்கள்

2 posters

Go down

வெளிச்சத்துக்கு வராத சந்திப்பு இரகசியங்கள் Empty வெளிச்சத்துக்கு வராத சந்திப்பு இரகசியங்கள்

Post by மாலதி Thu Mar 03, 2011 7:53 am

இலங்கை அரசாங்கம் அனுப்பிய உயர்நிலைப்பிரதிநிதிகள் குழு ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூனை சந்தித்துவிட்டு ஜெனிவாகிளம்பியுள்ளது.

இலங்கை அரசாங்கம் உச்சக்கட்டசர்வதேச அழுத்தங்களைச் சந்திக்கின்றநிலையில்தான்- எதிர்பாராத இந்தச்சந்திப்பு நிகழ்ந்தது.

இந்தச்சந்திப்புஎதற்காகநடந்தது? இதில் பேசப்பட்டவிடயங்கள் என்ன
எடுக்கப்பட்ட முடிவுகள் என்னஎல்லாமே மர்மமாகத்தான் உள்ளது. அதற்குக்காரணம்
இது அதிஉச்ச இரகசியம் பேணப்பட்ட ஒரு சந்திப்பு என்பதுதான்.

இலங்கை அரசின் வெளிவிவகாரச் செயலர் றொமேஷ் ஜெயசிங்கவும் சட்டமா அதிபர்
மொகான்பீரிஸும் கொழும்பில் இருந்துபுறப்பட்டுச் சென்று நியுயோர்க்கை
அடைந்தவரை இதுபற்றி வெளியே மூச்சுக்கூடவிடவில்லை.

பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேராகூட அதை அறிந்திருக்கவில்லை
என்கிறது ஒரு தகவல். அதனால் தான் அப்படியான சந்திப்புத்திட்டங்கள் ஏதும்
கிடையாது என்று அவர் கூறியிருந்தார்.
ஆனால் உச்ச இரகசியம் பேணப்பட்ட இந்தச் சந்திப்புத் தொடர்பான தகவல்களை
வெளிப்படுத்தவிரும்பாமல் அவர்அப்படிக்கூறியிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலித கொஹன்ன
ஊடாகவே வழக்கமாக இலங்கை அரசுக்கான ஐ.நாவின் தகவல்கள் பரிமாறப்படும்.

ஆனால் இம்முறை நேரடியாகவே கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சைத்தொடர்புகொண்டு, இலங்கை அரசுடன் பேசவிரும்பும் தகவலைத் தெரிவித்துள்ளது.

இதனால் தான் வெளிவிவகாரச் செயலரும், சட்டமா அதிபரும் இரகசியமாக- நியுயோர்க் அனுப்பிவைக்கப்பட்டனர்.

அவர்கள் நியுயோர்க் சென்றடைந்த பின்னர், சந்திப்புத் தொடர்பாக பாலிதகொஹன்னவின் அலுவலகத்துக்கு ஐ.நாவில் இருந்துதகவல் அனுப்பப்பட்டது.

பாலித கொஹன்னவுடன் ஐ.நாவுக்கான பதில் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மேஜர்ஜெனரல் சவீந்திரசில்வாவும் இந்தச்சந்திப்பில் கலந்துகொண்டார்.

எல்லாமே இரகசியமாகப் பேணப்பட்டபோதிலும் இன்னர்சிற்றிபிரஸ் அதைமோப்பம் பிடித்துக்கொண்டது.

நாளை சந்திப்பு நடக்கவுள்ளது என்று அது கடந்த செவ்வாயன்று செய்தி
வெளியிட்டது. ஆனால் அதை பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா
நிராகரித்தார்.

அவர் அப்படிக் கூறியிருந்த போதும் மறுநாள் இன்னர்சிற்றிபிரஸ் சொன்னது
போலவே சந்திப்புநடந்தது. அந்த இரகசியச் சந்திப்பின் படங்களையும்
இன்னர்சிற்றிபிரஸ் செய்தியாக வெளியிட அதுபரகசியமானது.

ஆனாலும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட உண்மையான விடயங்கள் பல வெளிவரவில்லை
என்பதே உண்மை. ஏனென்றால் ஐ.நாவும் சரி இலங்கை அரசும் சரி இந்தச்
சந்திப்புத்தொடர்பாக வெளியிடுகின்ற செய்திகள் ஒன்றுக் கொன்று
முரண்படுவதாகவே உள்ளன.

இன்னர் சிற்றி பிரஸ் படங்களுடன் சந்திப்பை அம்பலப்படுத்திய பின்னர்,
உடனடியாகவே இலங்கை அரசின் சார்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை
வெளியிட்டது.

சட்டமா அதிபரும், வெளிவிவகாரச்செயலரும் சட்டஆலோசனைக்காக
நியுயோர்க்சென்றிருந்தனர் என்றும் அப்போதே ஐ.நா பொதுச்செயலரை
சந்தித்துப்பேசியதாகவும் அந்த அறிக்கை கூறியது.

ஏதோ போன வழியில் அவரைக் கண்டு பேசியது போல அமைந்திருந்தது அந்த
அறிக்கையின் சாரம். ஆனால் இந்தச் சந்திப்பு முன்னரேதிட்டமிட்டு
நடத்தப்பட்ட ஒன்று.

இந்தவிடயத்தில் ஐ .நா. பொதுச் செயலரின் அழைப்பின் பேரிலேயே இலங்கை அரசு
தமது பிரதிநிதிகளை அனுப்பியதாக செய்தியை வெளியானால் அதுதரக்குறைவாக
அமைந்துவிடும் என்று அரசாங்கம் நினைத்திருக்கலாம். அல்லது
இந்தச்சந்திப்பின் உண்மைப்பரிமாணங்கள் வெளிவருவதைத்தடுக்க அது
விரும்பியிருக்கலாம்.

அடுத்து இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்று இலங்கை அரசாங்கம்
தெளிவாகக் கூறவில்லை. சட்டம் சார்ந்த விடயங்கள் குறித்துப் பேசப்பட்டது
போன்று மேலோட்டமாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஆனால், ஐ.நாபொதுச்செயலரின் பேச்சாளார் மார்ட்டின் நெவ்ஸ்கி, இலங்கையில்
போருக்குப் பிந்தியமீள்கட்டுமானப்பணிகள் தொடர்பாகவே
ஆராயப்பட்டதாகக்கூறியிருந்தார்.

இங்கேயும் இருதரப்பும் முரண்பாடானதும், குழப்பமானதுமான தகவல்களையே வெளியிட்டன.

அதேவேளை இப்போது கிடைக்கும் தகவல்கள், இந்தச்சந்திப்பின் அடிப்படை நோக்கம்
ஐ.நா நிபுணர்கள் குழுமற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாகக்
கலந்துரையாடுவதே என்று கூறுகின்றன.

ஐ.நா நிபுணர்கள் குழு இலங்கை வருவதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை.
வேண்டுமானால் அவர்கள் வந்து நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்சாட்சியம்
அளிக்கலாம்- அதற்கு அப்பால் விசாரணை செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று
கூறியிருந்தது அரசாங்கம். இதன் காரணமாக இதுவரை அந்தக் குழு இலங்கை
வரவில்லை.

ஆனால் ஐ.நா. பொதுச் செயலரோ நிபுணர் குழு இலங்கை செல்லும், அதற்கு வழி
பிறந்துவிட்டது, அங்கு செல்வது பற்றி ஆராய்கிறது என்றெல்லாம் அவ்வப்போது
கூறி வந்தார். ஆனாலும் அப்படி
எதுவும் நடக்கவில்லை.

இந்தக்கட்டத்தில் ஐ.நாநிபுணர் குழுவின் பணிக்காலம் முடிவுக்கட்டத்தை
அடைந்துள்ளது. இந்தவாரம் அதன் அறிக்கை கையளிக்கப்படலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிக்கையை ஐ.நா பொதுச் செயலர் பகிரங்கப்படுத்துவாரா என்பது முக்கியமான கேள்வி.

அதே வேளைஇந்த அறிக்கை ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா. மனித உரிமைகள்
பேரவையின் 16வது கூட்டத்தொடரிலும் சமர்ப்பிக்கப்படுவதற்கான வாய்ப்புகள்
உள்ளன.

இந்த நிலையில்தான் ஐ.நா. பொதுச் செயலர் இலங்கை அரச பிரதிநிதிகளைப்
பேச்சுக்கு அழைத்திருந்தார். இலங்கை அரசாங்கத்தை இராஜதந்திரவழிகளில்
மிரட்டுவதற்காக அவர் இந்த அழைப்பை விடுத்தாரா அல்லது வேறேதாவது நோக்கங்கள்
இருந்ததா என்பது மர்மமாகவே உள்ளது.

ஆனாலும் அரசாங்கம் அனுப்பியகுழு, நல்லிணக்க ஆணைக்குழு போற்றதக்கவகையில் செயற்படுவதாக ஐ.நா. பொதுச்செயலரிடம் கூறியிருக்கிறது.

பான்கீ மூனை நம்பவைக்கும் அளவுக்கு அது நடந்து கொண்டிருப்பதாக ஊடகச்
செய்திகள் கசிகின்றன. இந்த நிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு
ஐ.நா. பொதுச் செயலர்முக்கியத்துவம் கொடுக்கப்போகிறாரா அல்லது தாம்
நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கைக்கு முக்கியம் அளிக்கப்போகிறாரா என்பது
சந்தேகமாகவே உள்ளது.

இந்தச் சந்திப்பின் மூலம் இலங்கை அரசு தமக்கு ச்சார்பானநிலை
ஒன்றைஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பது
விரைவிலேயே தெரிந்துவிடும்.

அதேவேளை, இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட முக்கியமான மூவர்பற்றிய
சர்ச்சைகளும் தொடர்கின்றன. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற
போர்க்குற்றங்களில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்படும் மேஜர்
ஜெனரல் சவீந்திரசில்வாவும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளார்.
அவருடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்வழக்கை எதிர்கொள்ளும்நிலையில் உள்ள பாலிதகொஹன்னவும் ஐ.நா. பொதுச்செயலரைச் சந்தித்தார்.

போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நாவின்உத்தரவாதத்தின் பேரில் சரணடைய முன் வந்த
புலிகளுக்குப்பாதுகாப்பு அளிக்கத்தவறிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள
ஐ.நாபொதுச் செயலரின்தலைமை அதிகாரியான விஜய்நம்பியாரும் இந்தச் சந்திப்பில்
கூடவே இருந்துள்ளார்.
இவர் மீதும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்ச்சைகள் நிரம்பிய மனிதர்கள் மத்தியில் ஐ.நா. பொதுச் செயலர் இந்தச் சந்திப்பை நிகழ்த்தியுள்ளார்.
அதுவும் கூட சர்ச்சைகளும், சந்தேகங்களும்நிறைந்தஒன்றாகவேஇருந்துள்ளது.

இந்தச் சந்திப்புயாருக்கு ஆதாயம் தேடுவதற்காக நடத்தப்பட்டது என்பது
இன்னமும் தெளிவாகவில்லை. இலங்கை அரசுடன் முட்டிமோதி வந்த ஐ.நா.
பொதுச்செயலர்- தான் பணிந்து போவதற்காக இந்தச் சந்திப்பை
நிகழ்த்தியிருக்கலாம். அல்லது இலங்கை அரசை மிரளவைக்கவும் அவர் இப்படியான
சந்திப்பை நடத்தியிருக்கலாம்.

இப்போது இந்தச் சந்திப்புத் தொடர்பான பல இரகசியங்கள்
மறைக்கப்பட்டிருந்தாலும் அதுவிரைவிலேயே வெளிச்சத்துக்கு வரும் என்பதில்
சந்தேகம் இல்லை.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

வெளிச்சத்துக்கு வராத சந்திப்பு இரகசியங்கள் Empty Re: வெளிச்சத்துக்கு வராத சந்திப்பு இரகசியங்கள்

Post by Tamil Thu Mar 03, 2011 2:03 pm

நல்லது நடந்தால் சரி 028
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum