TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


காங்கிரஸ் க்கு ஏன் ஒட்டு போட கூடாது

Go down

காங்கிரஸ் க்கு  ஏன்  ஒட்டு போட கூடாது  Empty காங்கிரஸ் க்கு ஏன் ஒட்டு போட கூடாது

Post by ஜனனி Sat Feb 26, 2011 8:56 pm

ரசியல்கட்சிகளின் பேரங்கள் சுறுசுறுப்பாக
நடந்துவருகின்றன. அரசியல் கட்சிகளின் இரண்டாம்கட்ட, மூன்றாம்கட்டத்
தலைவர்கள் கோடிகளைத் தயாரித்துக்கொண்டுள்ளனர். அடிமட்டத் தொண்டர்கள்
“சாலைகள் எல்லாம் டாஸ்மாக் நோக்கி” என அடுத்த இரண்டு மாதங்களுக்கான கனவில்
உள்ளனர். தன்மானத்தமிழர்களோ ஓட்டுக்கு 500
கிடைக்குமோ? 1000 கிடைக்குமோ? என சிந்தித்துக்கொண்டுள்ளனர். இச்சம்பவங்கள்
ஒவ்வொரு தேர்தலின்போதும் நாம் சந்திப்பவைதான். தேர்தல் அரசியலில் நேரடியாக
ஈடுபடும் கட்சிகள் ஒட்டுக்காக காங்கிரஸ் க்கு  ஏன்  ஒட்டு போட கூடாது  Congress-handஉழைப்பதைவிட
தேர்தல் அரசியலில் நேரடியாக ஈடுபடாத சமுதாய அமைப்புகளான பெரியாரிய
இயக்கங்களும் தமிழ்த்தேசிய அமைப்பு களும் தேர்தலை எதிர்நோக்கி மிகவும்
துடிப்பாகக் காத்திருக்கின்றனர். முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குக்
காரணமான காங்கிரசை வீழ்த்தியே தீருவோம்! இனப்படுகொலைகளுக்கு உடந்தையான
இனத்துரோகி கருணாநிதியை வீழ்த்தியே தீருவோம்! என்று முழங்கி களமிறங்கத்
தயாராகின்றனர்.

கருணாநிதி ஆண்டால் நாடு முன்னேறும் என்றோ,
ஜெயலலிதா ஆண்டால் நாடு முன்னேறும் என்றோ எந்தத் தலைமையையும், எந்தத்
தத்துவத்தையும் நம்பி மக்கள் ஓட்டுப்போடுவதில்லை. சராசரி மக்கள் யாரும்
பாமரத் தன்மையுடன் இல்லை. யார் அதிகமாகத் தருகிறார்களோ அவர்களுக்கே ஓட்டு
என சரியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் பெரியாரியம், மார்க்சியம்,
அம்பேத்காரியம் என எல்லாவகையான தத்துவங்களையும் அறிந்தவர்களாகக்
காட்டிக்கொண்டு, சமுதாயத்துக்கு உழைப்பதாக எண்ணிக்கொண்டு, தேர்தல்
அரசியலில் நிலைப்பாடு எடுத்து உண்மையாகவே கடுமையான உழைப்பைக்கொடுக்கும்
சமுதாய இயக்கங்களின் தொண்டர் களுக்காக சிலவற்றைச் சொல்லவிரும்புகிறேன்.

ஈழத்தில் இனஅழிப்புக்குக் காரணமான
காங்கிரசை ஒழிப்போம் என்ற ஒற்றைமுழக்கத்தை ஈழப் பிரச்சனை களுக்காக மட்டுமே
அமைப்பு நடத்துகின்றவர்கள் பேசலாம். தவறில்லை. முள்ளிவாய்க்கால்
இனப்படுகொலைக் காலத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது ஒரு கோபத்தின்
வெளிப்பாடாக – வக்கற்றுப்போன நம்மால் முடிந்த எதிர்ப்பை பதிவு
செய்யும்விதமாக காங்கிரசை எதிர்த்து ஜெயலலிதாவைக்கூட ஆதரித்தோம். அன்றைய
நிலையில் அதையும் நமக்குநாமே நியாயப்படுத்திக்கொண்டோம். ஆனால் தொடர்ந்து
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் ஈழச்சிக்கலை அடிப்படையாக வைத்து
அணுகவேண்டுமா? என யோசிக்க வேண்டும். அதுவும் சட்டமன்றத் தேர்தலில்
தோல்வியடைந்துவிட்டால் காங்கிரஸ் ஒழிந்துவிடுமா? அப்படி தோல்வி அடைந்தாலும்
ஈழத்தமிழனுக்கு அதனால் விடிவு கிடைக்குமா? குறைந்தபட்சம் என்ன முன்னேற்றம்
கிடைக்கும் என்று ஏதாவது ஒரு உத்திரவாதத்தையாவது நாம் சொல்லமுடியுமா?

தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் முகாம்களில்
ஒருநபருக்கு மாதம் 400 ரூபாயும், 10 கிலோ அரிசியும் தரப்படு கிறது. இதை
வைத்து ஒருவன் வாழமுடியுமா? குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 1000 ரூபாய் வழங்க
வேண்டும். அரிசி மட்டுமல்லாமல் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து சமையல்
பொருட்களும் இலவசமாக வழங்க வேண்டும். இங்குள்ள திபெத் அகதிகளுக்கு இணையாக
மருத்துவ வசதி, கல்வி வசதி, இருப்பிட வசதிகள் வழங்கப்படவேண்டும்.
செங்கல்பட்டு முகாமை நிரந்தரமாக மூடவேண்டும் என்பது போன்ற சாதாரண,
அடிப்படையான கோரிக்கைகளையாவது இந்தக் காங்கிரஸ் ஒழிப்பு முழக்கம்
நிறைவேற்றுமா?

இன அழிப்பு தற்செயலாக நடந்த ஒரு
காரியமல்ல. பல ஆண்டுகளாக மிகவும் சரியாகத் திட்டமிடப்பட்டு பலநாட்டு
உதவியுடன் நடத்தப்பட்ட கொடூரம். முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் போது
அதிகாரத்தில் இருந்தவன் இராஜபக்ஷே. ஆனால் ரணில் விக்ரமசிங்கே
காலத்திலிருந்தே அதற்கு முன்பிருந்தே புலிகளின் சர்வதேச ஆதரவுக்கரங்கள்
திட்டமிட்டுமுடக்கப்பட்டன. சர்வதேச நாடுகளின் ஈழத்திற்கான ஆதரவு ரணில்
விக்ரமசிங்கேவின் தந்திர நடவடிக்கைகளால் முறியடிக்கப்பட்டன. அமைதியாக,
சிரித்துக்கொண்டே ஈரத் துணியைப் போட்டு கழுத்தறுத்தவன் ரணில்விக்ரமசிங்கே.
அவன் போட்டுத்தந்த பாதையில் வெற்றிபெற்றவன் இராஜபக்ஷே.

இராஜபக்ஷே ஆட்சிக்கு முன்பே
இந்தியதேசியமுதலாளிகள் இலங்கைத்தீவு முழுவதையும் தங்களின் சுரண்டல்
வேட்டைக்காகப் பயன்படுத்தத் தொடங்கினர். 1932 லேயே பெரியார் தமது இலங்கைப்
பேருரையில்

“இந்த லங்கையில் இருந்து கொண்டு இந்திய
தேசாபிமானம் பேசும் தேசீய வீரர்களைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்,
அவர்கள் ஏறக்குறைய அத்தனை பேருக்கும் 100க்கு 90 பேர் இந்தியா முதலிய
தேசத்தில் இருந்து வந்து இலங்கை தேசத்தை சுரண்டிக் கொண்டு போக
இருக்கிறவர்களும் அவர்களுக்கு உதவியாளர் களாய் – அடிமைகளாய் இருப்பவர்களும்
ஆகும்.

லேவாதேவிகாரர்கள் பெரிதும் மாதம் 100க்கு
12 வரை வட்டி வாங்கி ஏழை மக்களையும் இலங்கைவாசிகளையும் பாப்பராக்கி கொள்ளை
கொண்டு போக வந்தவர்களும், விவசாயக் காரர் பெரிதும் இலங்கை பூமிகளை ஏராளமாய்
கைப்பற்றி விவசாயம் செய்து கூலிகள் வயிற்றில் அடித்து பொருள் சேர்த்து
கொள்ளை கொண்டு போக வந்தவர்களும், வியாபாரிகள் கொள்ளை லாபம் அடித்து இலங்கை
செல்வத்தை கொள்ளை கொண்டு போக வந்தவர்களும், உத்தியோகஸ்தர்கள் இலங்கை
ஆக்ஷியில் வந்து புகுந்து இலங்கையர்களின் அனுபவத்தில் மண்ணைப் போட்டு பணம்
சுரண்டிக் கொண்டிருக்கும் படித்த கூட்டத்தாரும் ஆணவம் பிடித்த வன்னெஞ்ச
பார்ப்பனர்களுமாகக் கூடிக் கொண்டு இந்திய தேசாபிமானக் கூப்பாடு
போடுகின்றார்கள்.”

என்று கூறியுள்ளார். 1932 லேயே இந்திய தேசிய முதலாளிகள் ஈழத்தைத் தங்களது சுரண்டல்காடாக வைத்திருந்தனர்.

ராஜபக்ஷே காலத்தில் அம்பந்தோட்டா
துறைமுகம், ஏ 9 நெடுஞ்சாலை ஆகிய திட்டங்களில் மட்டும் 1.5 பில்லின் டாலர்
அளவுக்கு சீனா முதலீடு செய்துள்ளது. சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற
பெயரில் 1000 ஏக்கர் நிலம் சீனாவுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

மன்னார்வளைகுடாவில் எண்ணெய்க் கொள்ளையில்
கெய்ர்ன் இண்டியா என்ற இங்கிலாந்து கம்பெனியும், மற்றுமொரு ஜப்பான்
கம்பெனியும் கூட்டுச்சேர்ந்துள்ளன. இந்தியாவைப் போலவே இலங்கையும்
பன்னாட்டுச் சுரண்டலுக்கு ஆளானது.

இந்தியா தேசியச் சுரண்டல் நிறுவனங்களான
Power Grid Corporation of India Ltd (PGCIL), National Thermal Power
Corporation (NTPC), L&T, Lanka India Oil Corporation (Lanka IOC),
Cairn India Pvt Ltd, Lanka Ashok Leyland, and Mphasis,Gujarat Ambuja,
Asian Paints, Larsen & Toubro, Tata Infotech, Aptech Ltd, Bengal
Waterproof Ltd, Calcutta, Shri Ishar Group, Indore, Nilkamal Plastics,
Mumbai, Gujarat Glass Ltd, a subsidiary of the Piramal Group, NIIT,
Apollo Hospital, Ansal Housing Construction Ltd, Mahindra British
Telecom, CEAT, Taj Hotels போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள்
ஈழத்தையும், இலங்கையையும் கொள்ளையடித்துவருகின்றன.

உலக வங்கியும், சர்வதேச வளர்ச்சி
நிறுவனமும் (IDA) கடந்த 2005 இலிருந்து 2009 வரை இலங்கையில் 75
திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அத்திட்டங்களின் மதிப்பு 4509.86
மில்லியன் டாலர்களாகும். 30 ஆண்டுகளில் திருப்பிச்செலுத்தும் விதியுடன்
உலகவங்கி இந்நிதியை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதில் 2009 ஆம் ஆண்டு
இறுதியில் மட்டும்1012.83 மில்லியன் டாலரை உலகவங்கி கொடுத்துள்ளது.

இந்தியாவின் எல் அண்ட் டி நிறுவனம்
கொழும்புவில் 246 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிகப்பெரிய வணிகம் மற்றும்
குடியிருப்பு வளாகத்தைக் கட்டுகிறது. இலங்கை முழுவதும் சுமார் 45 ஆயிரம்
குடியிருப்புகளைக் கட்டித்தரும் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளது.

லங்கா அசோக் லைலேண்ட் நிறுவனம் இலங்கை
அரசுக்கு 1300 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. வடக்கு, கிழக்கு
மாகாணங்களில் கட்டுமானப்பொருட்களை விநியோகிக்கும் துறையிலும், சரக்குப்
போக்கு வரத்துத் துறையிலும் நேரடியாக இறங்கியுள்ளது.

500 மில்லியன் டாலர் செலவில் உலகவங்கி
மற்றும் சர்வதேச வளர்ச்சிக்குழும உதவியுடன் தமிழ் நாட்டிலிருந்து
இலங்கைக்கு கடல்வழியே மின்சாரம் கொண்டுசெல்லும் திட்டம்
நிறைவேற்றப்படஉள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மின்உற்பத்தி
நிறுவனமான பவர் க்ரிட் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா 500 மில்லியன் டாலர்
முதலீட்டில் இலங்கையில் 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டமொன்றைச்
செயல்படுத்த உள்ளது.

2008 ஆம் ஆண்டில் மட்டும்889 மில்லியன்
டாலர் அளவுக்கு இலங்கையில் அந்நியநேரடி முதலீடு குவிந்துள்ளது. இதில்
இந்திய நிறுவனங்கள் அந்த ஆண்டில் மட்டும் இலங்கையில் செய்த முதலீடு 126
மில்லியன் டாலர்களாகும்.

இலங்கையில் சுரண்டலைத் தொடர்ந்துள்ள பல
பன்னாட்டு நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புக்களில் பார்ப்பனர்களே
நிர்வாகிகளாக ஆதிக்கம் செலுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக எல் அண்ட் டி
(Larsen & Toubro Limited) என்ற பன்னாட்டு நிறுவனத்தின் பொறியியல்
மற்றும் கட்டுமானத்துறையின் இயக்குநராகவும், தலைவராகவும் பதவிவகிப்பவர்
கிருஸ்ணமூர்த்தி வெங்கட்ரமணன் என்ற பார்ப்பனர். இவர் டெல்லி ஐ.ஐ.டியின்
கெமிக்கல் என்ஜினியரிங் மாணவர். அதன் இன்னொரு இயக்குநர் கொடியாலம்
வாசுதேவன் ரங்கசாமி என்ற பார்ப்பனர். சென்னை ஐ.ஐ.டி யில் படித்தவர்.

அதுபோலவே மன்னார் வளைகுடாவில் எண்ணெய்க்
கொளளையில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான கெய்ர்ன்
இண்டியா (Cairn India) நிறுவனத்தின் செயலாளர் நீர்ஜா ஷர்மா என்ற
பார்ப்பனர்.

2005 ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ்
ஆட்சிக்காலங்களில் மட்டும் இத்தகைய இந்திய நிறுவனங்கள் இலங்கையில்
நுழையவில்லை. இலங்கையில் இந்தியதேசியக் கொள்ளையர்கள் நுழையக் கதவு திறந்து
விட்டதே பி.ஜேஇபி ஆட்சிதான். பி.ஜே.பியின் தலைவரான அடல் பிகாரி வாஜ்பாய்
நாடறிந்த பார்ப்பனர்.

பார்ப்பன வாஜ்பேயியால் இலங்கைக்கு
கொள்ளையடிக்கச் சென்ற இந்திய தேசிய வணிகர்கள் அனைவரும் பனியா – மார்வாடிக்
கும்பலைச் சேர்ந்தவர்கள் தான். ஃபிக்கி என்ற இந்தியத் தொழில் வர்த்தகக்
கழகத்தில் ஆதிக்கம் செலுத்துவதும் பனியா – மார்வாடிக்கும்பல்தான்.

1998 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் நாள்
இந்தியா – இலங்கைக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
The Indo Sri Lanka Free Trade Agreement (ISFTA) என்ற அந்த ஒப்பந்தம் 2000
ஆம் ஆண்டு மார்ச் முதல் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த
ஒப்பந்தத்திற்குப் பிறகுதான் இந்திய நிறுவனங்கள் மிக அதிகமான முதலீட்டை
இலங்கையில் குவித்தன. இந்தியா – இலங்கை இடையே 4200 பொருட்களுக்கு வரி இல்லா
வர்த்தகம் அனுமதிக்கப்பட்டது.

ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு இலங்கையில்
வர்த்தகங்களைப் பெருக்குவதிலும், இலங்கைக்கு ஏற்றுமதி செய்ததிலும் பி.ஜே.பி
வாஜ்பாய் ஆட்சிக்காலம் முடியும் வரையும் அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு
வரையும் இந்தியாவே முதல் இடத்தில் இருந்தது. தற்போதைய புள்ளிவிபரங்கள்
கிடைக்கவில்லை.

உலகில் 24 நாடுகளில் இருந்து இலங்கை அரசு
பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்தது. அந்நாடு களைவிட இந்தியா இலங்கைக்குச்
செய்த ஏற்றுமதி, 2002 ஆம் ஆண்டு 834.7 மில்லியன் டாலர், இது ஒட்டு மொத்த
வணிகத்தில் 13.81 ரூ . 2003 ஆம் ஆண்டு 1076.2 மில்லியன் டாலர். அதாவது
16.50 ரூ . 2004 ஆம் ஆண்டு 1357.9 மில்லியன் டாலர். அதாவது 17.25ரூ. இதன்
தொடர்ச்சிதான் 2010 ஜூன் மாதம் கொழும்புவில் நடைபெற்ற FICCI-IIFA Global
Business Forum என்ற இந்திய தொழில் – வர்த்தகக் கழகத்தின் விழா.

எப்படி ரணில் விக்ரம சிங்கேயின்
அடித்தளத்தில் ராஜபக்ஷே இனத்தை அழித்தானோ அதே போலவே வாஜ்பாயின் காலத்தில்
இலங்கைக்குள் பெருமளவில் நுழைந்த இந்திய தேசிய முதலைகள் வணிகரீதியாக
இந்தியாவின் இன்னொரு மாநிலமாக இலங்கையை மாற்ற முனைந்தனர். வாஜ்பாயை
அடுத்துவந்த காங்கிரசையும் இயக்குவது அதே பார்ப்பன – இந்திய தேசிய –
பன்னாட்டு வணிக நலன்கள்தான். உள்ளூர் திருடன் போதென்று, உலகத் திருடனான
உலகவங்கியும், சர்வதேச வளர்ச்சிக் குழுமமும், அவர்களுக்குப் போட்டித்
திருடர்களான சீனா, ஜப்பான் நாடுகளும் ஒட்டுமொத்த இலங்கையைச் சூறையாடக்
களமிறங்கியுள்ளன.

இப்படி சீனா – ஜப்பான் – இந்தியா –
அமெரிக்கா – உலகவங்கி போன்றவற்றின் ஆடுகளமாக இலங்கை மாறியுள்ளது. இதில்
வெல்லப்போவது யார்? இலங்கையா? சர்வதேச நாடுகளின் வணிகவெறியா? சர்வதேச
நாடுகளின் எல்லைவிரிவாக்க வெறியா? இக்கடும் போட்டியில் சிக்கிச் சீரழியும்
நம் தமிழினமா? என்பதைக் காலம் சொல்லட்டும். ஆனால் நம் கண்முன்னே வந்துவிட்ட
தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலின் வெற்றி, தோல்விகள் மேற்கண்ட இக்கட்டான
சர்வதேசச்சிக்கலில் எந்தவிதமான மாற்றத்தையும் உருவாக்காது – உருவாக்க
முடியாது என்பதை அனைவரும் அறிவோம்.

இந்த சட்டமன்றத் தேர்தலோடு காங்கிரஸ்
அழிந்தாலோ, அடுத்த பாராளுமன்றத் தேர்தலோடு காங்கிரசும், பி.ஜே.பியும்,
கம்யூனிஸ்ட்டும் அழிந்து முழுக்க முழுக்க மாநிலக்கட்சிகளின் ஆதிக்கத்தில்
பாராளுமன்றம் ஒன்று – மத்தியஅரசொன்று உருவானால்கூட இலங்கையையும்,
இந்தியாவையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பார்ப்பன – இந்திய தேசிய –
பன்னாட்டு நிறுவனங்கள் தமது நலன்களைக் காப்பதில் வெற்றிபெறவே செய்வார்கள்.
இந்தியாவில் ஏற்கனவே ஏற்பட்ட பல தற்காலிக அரசாங்கங்கள் – குறுகிய கால
மாநிலக் கட்சிகளின் அரசாங்கங் களின் திட்டங்களையும் செயல்பாடுகளை விரிவாக
ஆராய்ந்தால் இவை குறித்த உண்மைகள் புரியும். மக்களுக்கு இந்த உண்மைகளைப்
புரியவைப்போம். காங்கிரசையும், கருணாநிதியையும் தோற்கடிக்க வேண்டும் என்பது
மிகவும் மேலோட்டமான பார்வை. இவர்கள் வெறும் எடுபிடிகள். தோற்கடிக்க
வேண்டியவர்கள் தற்போதய நம் சக்திக்கு அப்பாற்பட்டவர்கள். நமக்கிருக்கும்
ஆற்றலை சரியாகப் பயன்படுத்த வேண்டும். நிழலோடு சண்டை போட்டு நேரத்தை
வீணாக்குவதைவிட நிஜத்தை, ஈழவிடுதலையின் உண்மையான தடையை மக்களுக்குப்
புரியவைப்போம். உணர்ச்சி அடிப்படையில் மக்களை திரட்டாமல் உண்மையைச்
சொல்லித் திரட்டுவோம்.

இந்தத் தேர்தலில் கருணாநிதியை விரட்ட
ஜெயலலிதா. அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவை விரட்ட மு.க ஸ்டாலின். அப்புறம்
அவரை விரட்ட விஜயகாந்த். இதுதான் நமது அரசியல்கடமையா? அல்லக்கைகளை மாற்றும்
தேர்தல் அரசியல் போதும், ஆதிக்கவாதிகளை மாற்றும் அரசியலை நோக்கிப் போவோம்.
ஆதிக்கங்களை மாற்றும் அரசியலை நோக்கிப் போவோம். பெரியார் அத்தகைய
அரசியலையே நடத்தினார்.

பெரியார் அரசியலுக்கு வந்த காலத்தில்
அரசியலில் காங்கிரசில் ஆதிக்கவாதிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும்
பார்ப்பனர்களே. அகில இந்திய அளவிலும், சென்னை மாகாண அளவிலும் இராஜகோபாலாச்
சாரியார், சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், பிரகாசம் போன்ற
பார்ப்பனர்களும் காந்தி, நேரு போன்ற பார்ப்பன அடிமைகளும் அரசியல்வாதிகளாக
இருந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிராக
பார்ப்பனநலன்களை முன்வைத்து அரசியல் நடத்திய காலத்தில் பார்ப்பனரல்லாத
மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்காக அப்போதைய தேர்தல் அரசியலில்
பெரியார்நிலைப்பாடு எடுத்தார். அதுவும் ஆட்சியில் இருந்தது பிரிட்டிஷ்
அரசு. தற்போதய காங்கிரஸ் அரசைவிட, பி.ஜே.பி அரசைவிட மனிதாபிமானம் அதிகமாகக்
உள்ளவர்களால் ஆளப்பட்ட அரசு. அந்த பிரிட்டிஷ் அரசைக்கொண்டு குறைந்த அளவு
அதிகாரங்களைக் கொண்ட மாகாண அரசைக் கொண்டு அரசியலிலும், அரசாங்கத்திலும்,
நீதிமன்றங்களிலும் பார்ப்பனரல்லா தாருக்கு உரிய பிரதிநிதித்துவம்
கிடைக்கச்செய்தார். அப்போது தேர்தல் நிலைப்பாடு எடுக்கும் போதும் சமுதாய
நலன்களை முன்வைத்து, பார்ப்பனரல்லாதார் விடுதலையை நோக்கி அரசியலை
இயக்கினார். இதோ குடி அரசில் தனது அரசியல் நிலைப்பாடுகள் பற்றி
எழுதுகிறார்.

காங்கிரசுக்கு ஏன் ஓட்டு செய்யக்கூடாது?

1. அதற்கு கொள்கை இல்லை

2. அது ஒரு சமூகம் தவிர மற்ற சமூக முன்னேற்றத்தைத் தடுக்கவே வேலை செய்கிறது.

3. வருணாச்சிரமம் சம்மந்தப்பட்ட பழைய முறைகளை புதுப்பிக்கவே வேலை செய்கிறது.

4. அதனிடத்தில் ஒரு காலத்திலாவது நாணயம் இருந்ததில்லை.

5. அதில் சமய சஞ்சீவிகளும், காலிகளும், வருணாச்சிரமிகளுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

6. அதன் தலைவர்கள் சொல்லுகின்ற காரியங்கள் எதுவும் அனுபவ சாத்தியமானதல்ல.

7. அதனால் இதுவரை ஒரு பலனும் ஏற்பட்டதில்லை.

8. அது ராஜபக்தி – சர்க்கார் பக்தி பிரமாணம் செய்து ராஜாவை சர்க்காரை கவிழ்த்து விடுகிறேன் என்று பொய் சொல்லுகிறது.

9. ஓட்டு செய்துவிட்டு பின்னால் முட்டாள் தனமாக ஏமாந்து போனோமே என்று விசனப்படப் போகிறீர்கள்.

ஜஸ்டிஸ் கட்சிக்கு ஏன் ஓட்டு செய்ய வேண்டும்?

1. அது சமூக முன்னேற்றத்தையும் மக்கள் சமத்துவத்தையும் கொள்கையாய் கொண்டு பாடுபடுகிறது.

2. வருணாச்சிரம முறையை மாற்றி மக்களை சுயமரியாதையுடன் வாழ வேலை செய்து கொண்டு வருகிறது.

3. ஆரம்பகாலம் முதல் இதுவரை நாணயமாகவும் குறிப்பிட்ட கொள்கையில் ஏமாறாமலும் வேலைசெய்து வந்திருக்கிறது.

4. தீண்டாமையை படிப்படியாய் ஒழித்துக் கொண்டுவருகிறது.

5. சகல மக்களுக்கும் அரசியலில் பிரதிநிதித்துவம் வழங்கி இருக்கிறது.

6. ஜனங்களை அது ஒரு நாளும் ஏமாற்றவில்லை.

7. பொட்டுக்கட்டுவதை ஒழித்தது, கோவில்
தாசி முறையை ஒழித்தது, விபசாரத்தை ஒழித்தது, கல்வியை அதிகரித்தது, கட்டாயக்
கல்வி ஏற்படுத்திற்று, ஆஸ்பத்திரிகளை அதிகப் படுத்தியது, தமிழ்
வைத்தியத்தை பிரபலமாக்கியது, சுங்கத்தை எடுத்தது, குடியானவர்களுக்கு இனாம்
பூமி சட்டம் ஏற்படுத்திற்று, 100க்கு 12 வரி குறைத்தது, மலையாள குடிவார
மசோதா செய்தது, விவசாயிகளுக்கு கடன் உதவச் செய்தது, அதிக தூரம் ரோட்டுகள்
ஏற்படுத்திற்று, பாலங்கள் ஏராளமாய் கட்டிற்று, புதிய வரிகளைத் தடுத்து
வந்திருக்கிறது, சம்பளங்களை குறைத்துக் கொண்டது.

8. அது ராஜபக்தி – சர்க்கார் பக்தி பிரமாணம் செய்து ராஜாவை சர்க்காரை கவிழ்த்து விடுகிறேன் என்று பொய் சொல்லவில்லை.

9. ஓட்டு செய்துவிட்டு பின்னால் முட்டாள்தனமாக ஏமாந்து போனோமே என்று விசனப்பட மாட்டீர்கள்.

குடி அரசு – வேண்டுகோள் – 17.01.1937

ஒரு கட்சியை ஆதரிப்பதற்கும்,
எதிர்ப்பதற்கும் பெரியார் கடைபிடிக்கும் அடிப்படைகளை நாம் மிகக் கவன மாகப்
பார்க்கவேண்டும். ஏற்கனவே கெட்டிப்பட்டுப் போயிருக்கும் சமுதாயத்தில் –
உருவாகிக்கொடிருக்கும் இந்திய தேசிய ஒருங்கிணைப்புச் சூழலில்
சுயராஜ்ஜியத்தைவிட சுயமரியாதைக்கும், நாட்டுவிடுதலையைவிட பார்ப்பனரல்லாதார்
விடுதலைக்கு முக்கியத்துவமும் கொடுத்து அந்த அடிப்படையில், அவர்
விரும்பியதைச் சாதிக்கமுடியும் என்ற உறுதியான நிலையில் தேர்தல் அரசியலில்
நிலைப்பாடு எடுக்கிறார். விடுதலைக்குப் பிறகு ஜவஹர்லால் நேருவின்
காலத்திலும் அதற்குப் பிந்தைய காலத்திலும் ஒரு அரசாங்கத்தை உருவாக்கும்
இடத்திலும், தன்னையும் மீறி உருவாகிவிட்ட ஒரு மாற்று அரசைக்கூட தன்
கொள்கைகளுக்கு ஏற்றபடி மாற்றி வேலை வாங்கும் இடத்திலும் பெரியார்
இருந்தார். அதிகார மய்யங்களைக் கேள்விக்குள்ளாக்கும் சக்திபடைத்த பெரியார்
ஒரு நடைமுறைத் தந்திரமாக தேர்தலைக் கையாண்டார்.

அதிகார மய்யங்கள் எவை என்றே
புரிந்துகொள்ளாத – ஆதிக்கச் சக்திகள் எவை என்றே தெரிந்து கொள்ளாத –
தெரிந்தாலும் அந்த ஆதிக்கங்களைக் கேள்விக்குள்ளாக்கும் நோக்கில் சிறுசிறு
நடவடிக்கைகளைக்கூட தொடங்காத நாம், பெரியாரைப் போல தேர்தல் அரசியலில்
கலப்பது உரிய பலன் அளிக்காது. அதுவும் பெரியார் காலத்தில்
பிரிட்டிஷ்காரர்களுக்கு இருந்த சர்வதேச நெருக்கடிகள், அப்போதைய சர்வதேச
அரசியல் சூழல், இந்தியா என்ற ஒரு நாடு முழுமையாக உருவாகாத சூழல், விடுதலை
பெற்ற பிறகு இந்தியா என ஒரு நாடு உருவானபிறகும் கூட பிரிவினைவாதத் தடைச்
சட்டம் இல்லாத காலம், அந்தச் சட்டத்திற்குப் பிறகும் தனித்
தமிழ்நாட்டுக்காகப் போராட முடிந்த பெரியாரின் பலம் இவற்றையெல்லாம் கணக்கில்
கொண்டு பெரியாரின் பணிகளைக் கணிக்கவேண்டும்.

தேர்தல் அரசியலில் நிலைப்பாடு எடுத்த
காலத்திலும் அரசாங்கங்களைப் பற்றியும், அரசாங்கங்கள் உருவாகும் விதம், அவை
பயன்படும் விதம், அரசியல் கட்சிகளின் நிலை ஆகியவை பற்றி ஒரு தெளிவான பார்வை
அவருக்கு இருந்தது. இதுபற்றி குடி அரசில்,

“படித்த கூட்டத்தினர்க்கு ஏழைமக்களிடம்
எள்ளளவும் அனுதாபம் இருப்பதில்லை. அவர்கள் எப்பொழுதும் பட்டம் பதவி
முதலியவைகளைப் பெற்று அச்செல்வாக்கைக் கொண்டு ஏழைமக்களின் இரத்தத்தை
உறிஞ்சி, தாங்கள் மாத்திரம் சௌக்கியமாக வாழ்வதிலேயே குறிப்பாய்
இருப்பவர்கள். இவர்களைப் போலவேதான் பணக்காரர்களும், ஏழை மக்கள் பால்
சிறிதும் இரக்கமில்லாமல் தமது நன்மைக்கான காரியங்களிலேயே கவனத்தைச்
செலுத்தி வருகின்றவர்களா யிருக்கின்றார்கள். இந்தப் படித்தவர்களுடைய
தயவும், பணக்காரர்களுடைய தயவும் இன்றேல் அரசாங்கமும் நாட்டில் தங்கள்
விருப்பப்படி ஆண்டு கொண்டிருக்க முடியாது. ஆகையால் இவ்விரு
கூட்டாத்தாரையும் திருப்தி செய்விக்க வேண்டிய நிர்ப்பந்தம் எப்பொழுதுமே
அரசாங்கத்திற்கு உண்டு. ஆகையால் அரசாங்கத்தார், படித்தவர்கள், பணக்காரர்கள்
ஆகியவர்களின் செல்வாக்கும், ஆதிக்கமும் மேலும் மேலும் வளர்ச்சியடைவதற்குத்
தகுந்த முறையில் ‘சுயராஜ்யம்’ என்னும் பெயரினால் அரசியல் சீர்திருத்தம்
வழங்கி வருகின்றனர்.

இந்தச் சீர்திருத்தத்தின் மூலம்
கிடைக்கும் லாபங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் விஷயமாக
படித்தவர்களுக்குள்ளும், பணக்காரர்களுக்குள்ளும் உண்டாகியிருக்கும்
கட்சிகள் பல. இக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தல்களில் வெற்றிபெறும்
பொருட்டுச் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் பல, பிராமணர் கட்சி, அல்லாதார் கட்சி,
முஸ்லீம்கட்சி, சீக்கியர் கட்சி, தாழ்த்தப் பட்டோர் கட்சி, கிறிஸ்தவர்
கட்சி என வகுப்பின் பேராலும் மதத்தின் பேராலும் உண்டாகியிருக்கும் கட்சிகள்
பல. இக்கட்சிகளில் பிராமணருக்குள் காங்கிரஸ் பிராமணர், மிதவாதப் பிராமணர்,
சுதேசிப் பிராமணர், சனாதன தருமப் பிராமணர் எனப் பல்வேறு கட்சிகள்
இருக்கின்றன. பிராமணரல்லாதார்க்குள்ளும் இதுபோலவே, தேசீய
பார்ப்பனரல்லாதார், சுயேச்சைப் பார்ப்பனரல்லாதார் எனப் பல வகைக் கட்சிகள்
இருக்கின்றன. முஸ்லீம்களுக்குள்ளேயும், மௌலானா ஷெளகத் அலி கட்சி, சர்.
முகமது இக்பால் கட்சி, மௌலானா ஹசரத் மோகினி கட்சி, தேசீய முஸ்லிம் கட்சி
எனப்பல பிரிவுகளிருக்கின்றன. தாழ்த்தப்பட்டவர்களுக்குள், திருவாளர்கள்
அம்பேட்கார், சீனிவாசன் கட்சி, திருவாளர்கள் மூஞ்சே ராஜா ஒப்பந்தக் கட்சி
எனப் பிரிவுகளிருக்கின்றன. இவ்வாறே ஒவ்வொரு வகுப்புக் கட்சிக்குள்ளும்
உட்பிரிவுக் கட்சிகள் பல இருந்து வருகின்றன. இப்பிரிவுகளும் கட்சிகளும்
தோன்றியிருப்பதன் நோக்கம், சீர்திருத்தத்தில் பட்டம் பதவிபெறுவதையன்றி
வேறில்லை யென்பதில் ஐயமில்லை.

இந்தக் கட்சிகளில் ஒன்றேனும் அரசியல்
திட்டத்தில் மதப் பாதுகாப்பும், பணக்கார நிலச்சுவான்தார் பாதுகாப்பும்
இருக்கக் கூடாது என்பது பற்றிப் போராடாத ஒரு காரணத்தைக் கொண்டே இவையெல்லாம்
படித்தவர்களின் நன்மைக்காகவும், பணக்காரர்களின் ஆதிக்கத் திற்காகவும்
சிருஷ்டிக்கப்பட்ட கட்சிகளேயொழிய ஏழைமக்களின் நன்மைக்காகச் சிருஷ்டிக்கப்
பட்டவைகள் அல்லவென்பதை உணரலாம்.

இன்றும் அரசியல் காரணமாகவும், மதம்
காரணமாகவும் தேசத்தில் ஒரு வகுப்போடு ஒரு வகுப்பும், ஒரு மதத்தோடு ஒரு
மதமும் சதா கலகம் விளைத்துக் கொண்டிருப்பதைத் தடுப்பதற்கான முயற்சிகளை
எந்தக் கட்சியினரும் செய்ய முன் வரவில்லை. இவ்விஷயத்தில் யாரும் கவலை
கொண்டிருக்கிறார்கள் என்று கூடச் சொல்ல முடியவில்லை.

ஆகவே உண்மையில் இது போன்ற வகுப்புக்
கலகங்களும், மதச் சண்டைகளும் ஒழிய வேண்டுமானால் மதப்பாதுகாப்பும், ஜாதி
நாகரிகப் பாதுகாப்பும், நிலச்சுவான்தார், பணக்காரர் களுக்குப் பாதுகாப்பும்
உள்ள அரசியல் சீர்திருத்தத்தால் ஒழியுமா? என்றுதான் கேட்கிறோம்.

ஏழைமக்களின் வறுமையைப் போக்குவதற்கு
முயலாமலும், கவலை கொள்ளாமலும், ஜாதிமதச் சண்டைகளை ஒழித்துச் சமாதானத்தை
உண்டாக்க வழி தேடாமலும் இருந்து கொண்டு, வீணே “ஐக்கிய ஆட்சி” “மாகாண
சுயாட்சி” “குடியேற்ற நாட்டு ஆட்சி” “சுயராஜ்யம்” என்று பட்டம்
பதவிகளுக்காக வேண்டிக் கூச்சலிடும் அரசியல் கட்சிகளால் நாட்டுக்கு என்ன
நன்மையுண்டாகு மென்று கேட்கிறோம்.

ஆகையால் பொது ஜனங்கள், எந்த அரசியல்
கட்சிக்காரர்களை நம்பினாலும் நன்மை யடையப் போவதில்லை யென்பது நிச்சயம்.
ஜாதிப் பிரிவுகளுக்கும், உயர்வு தாழ்வுகளுக்கும் ஏழை பணக்காரத்
தன்மைகளுக்கும் காரணமாக இருக்கும் மதத்திற்கு ஆதரவளிக்கும் எக்கட்சி
யினாலும் நாட்டுக்குக் கடுகளவும் நன்மை செய்ய முடியாது என்று எச்சரிக்கை
செய்கின்றோம்.

குடி அரசு – தலையங்கம் – 10.07.1932

1932 லேயே பெரியார் கூறிய, “
மதப்பாதுகாப்பும், ஜாதி நாகரீகப் பாதுகாப்பும், நிலச்சுவான்தார், பணக்காரர்
களுக்குப் பாதுகாப்பும் உள்ள அரசியல் சீர்திருத்தம்” தானே தற்போதும்
இருக்கிறது. ஒரு கூடுதல் சுமை. அப்போது பிரிட்டிஷ்காரன் மட்டும் வியாபாரம்
செய்தான். தற்போது இந்தியாவில் 127 நாடுகள் சுரண்டலை நடத்துகின்றன.
ஒட்டுப்போடச்சொல்லிக்கொண்டிருந்த அதே காலத்தில் சமுதாயப்புரட்சி நோக்கியும்
அரசியல் புரட்சி நோக்கியும் மக்களைத் தயாரித்தார் பெரியார்.

அரசியலில் யாரை ஆதரித்தாலும் யாரை
எதிர்த்தாலும் எந்தவகையிலும் சிறு மாற்றங்களைக்கூடச் செய்யமுடியாத நிலையில்
இருக்கும் நாம் – பெரியார் காலத்தைவிட கூடுதலான – கூடுதல் பலம்கொண்ட எதிரி
களைக் கொண்டுள்ள நாம் பெரியாரைப் போலவே, அவரது காலத்தைப் போலவே தேர்தல்
அரசியலில் பணி யாற்றுவது என்பது நம்மைச்சுற்றியுள்ள சிக்கல்களை நாம் சரியாக
அடையாளம் காணவில்லை என்பதையே காட்டுகிறது.

சர்வதேச அளவிலும் பெரியார் காலத்தைவிட
வித்தியாசமான மாற்றங்கள் உருவாகியுள்ளன. இந்தியாவில் உலகவங்கியின்
ஆதிக்கம், சர்வதேச நிதியங்கள் – பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் –
பன்னாட்டு நிறுவனங்களை நிர்வகிக்கும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் – உலகமயம் –
தாராளமயம் என எதிர்ப்புகள் புதிய பரிணாமங்களோடு வருகின்றன.

127 நாடுகளின் சுரண்டல் காடான இந்தியாவில்
எந்த அரசியல் கட்சியும் பன்னாட்டு நிறுவனங்களின் வணிக நோக்கங்களை மீறி,
வணிகநலன்களை மீறி எதையும் செய்துவிடமுடியாது. வெள்ளையர்களின் காலத்தில்
சுதேசியம் பேசிய காங்கிரசோ, 1997 இல் கூட சுதேசியம் பேசிய பாரதிய ஜனதாவோ,
நந்திகிராம் புகழ் கம்யூனிஸ்ட்களோ யார் ஆண்டாலும், “இந்திரன் மாறினாலும்
இந்திராணி மாறமாட்டா” என்பது போல பார்ப்பன – இந்திய தேசிய –
பன்னாட்டுக்கூட்டுக்கொள்ளை தவிர்க்கமுடியாதது.

1991 இல் நரசிம்மராவ் என்ற காங்கிரஸ்
பார்ப்பனரின் ஆட்சிக்காலத்தில் உலகவங்கியுடனான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
காட் – டங்கல் – ட்ரிப்ஸ் என புதிய புதிய சொற்கள் நம்மைக் கட்டுப்படுத்தத்
தொடங்கின.

இந்தியாவில் தற்போது 2010 டிசம்பர் மாதம்
வரையிலான அந்நிய நேரடி முதலீடு ஆறு இலட்சத்து இருபத்து ஐயாயிரத்து
அறுநூற்றிப் பதினோரு 6,25,611 கோடி ஆகும். 1991 இல் வெறும் 408 கோடியாக
இருந்த அந்நிய நேரடி முதலீடு பி.ஜே.பி ஆட்சி நிலையாக வரும் வரை சிறுக
சிறுகவே உயர்ந்தது. பாரதிய ஜனதா ஆட்சிக்காலத்தில் அந்நிய முதலீடு பல மடங்கு
அதிகமாக உயர்ந்தது.

1998 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத்
தேர்தலில் பி.ஜே.பி தனது தேர்தல் வாக்குறுதியிலேயே “ அந்நிய நேரடி
முதலீடுகள் இல்லாமல் நாட்டில் எதுவும் செய்ய முடியாது” என அறிவித்தது.
வெற்றியும் பெற்றது. 1998 ஆம் நிதியாண்டில் 13548 கோடி அந்நிய முதலீட்டைப்
பெற்றது.

1999 ஆம் ஆண்டு Foreign Investment
Implementation Authority (FIIA) என்ற அந்நிய முதலீட்டு அமலாக்கப் பிரிவை
உருவாக்கியது. வளர்ந்த நாடுகள் இந்தியாவில் தொழில்தொடங்க இருந்த சிறு சிறு
தடைகள்கூட – சிறு சிறு நடைமுறைச் சிக்கல்களைக்கூட களைந்து தங்கு தடையற்ற
அனுமதி, தாராள அனுமதிகளைப் பெற்றுத்தர வசதியாக இந்த அமைப்பை உருவாக்கியது
பி.ஜே.பி யின் பார்ப்பன வாஜ்பாய் அரசாங்கமாகும்.

1998 முதல் 2004 வரையிலான பி.ஜே.பி
ஆட்சிக்காலத்தில் மொத்தமாக இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட அந்நிய நேரடி
முதலீடு 1,01,257 கோடிகளாகும். அதன் பிறகு 2010 டிசம்பர் வரை சொல்லப்படும்
6,25,611 கோடியும், முதலீடு செய்த நேரத்தில் முதன் முறையாக போடப்பட்ட தொகை
மட்டுமே. இந்தியாவில் அனுமதி பெறும்போது தொடக்கக் காலத்தில் செய்யப்பட்ட
முதலீடுகளின் கூட்டுத்தொகை மட்டுமே. ஆனால் தற்போது இந்தியாவில் அனுமதி
பெற்ற நிறுவனங்கள் அனைத்துமே அடுத்தகட்டமாக பல ஆயிரங்கோடிகளை மறுமுதலீடு
செய்திருக்கின்றன. அவை பற்றிய குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. அதுபோல
என். ஆர்.ஐ க்களின் முதலீட்டுத் தொகைகளும் தெரியவில்லை.

அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா உலக
அளவில் மூன்றாம் இடத்தை வகிக்கிறது. இந்தியாவில் முதலீடு செய்த நாடுகளின்
முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா ஆகும். 127 நாடுகள் செய்துள்ள
ஒட்டுமொத்த முதலீடுகளில் அமெரிக்காவின் பங்கு மட்டும் 30ரூ ஆகும்.

உலகவங்கி இந்தியாவில் சாலைவசதிகளுக்கான
திட்டங்களுக்காக மட்டுமே 3 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் கொடுத்துள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்கு உலகவங்கியும், சர்வதேச நிதிநிறுவனங்களும்,
வளர்ச்சிக் குழுமங்களும் கொடுத்துள்ள கடனை எழுதிப் பார்க்கத் தெரியவில்லை.

இவ்வாறு இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களை
இந்தியாவில் முதலீடு செய்து தொழில் நடத்திக் கொண்டிருக்கும் அந்நிய
பன்னாட்டு முன்னணி 500 நிறுவனங்களும், இன்ஃபோசிஸ், விப்ரோ, டி.வி.எஸ்
பார்ப்பனக் கம்பெனிகளும், ரிலையன்ஸ், எல் அண் டி, மால்கோ, பால்கோக்களை
உள்ளடக்கிய வேதாந்தா, டாட்டா, பிர்லா, ஜிண்டால் போன்ற இந்திய தேசிய
சுரண்டல் நிறுவனங்களும் உலக வங்கிகளும் இந்நிறுவனங் களின் சுரண்டலுக்கு
ஏஜெண்ட்டுகளாக தொல்காப்பியக் காலத்திலிருந்தே மாமா வேலை பார்க்கும்
பார்ப்பனர் களும் தங்கள் கூட்டுக்கொள்ளைக்கு ஆதரவான ஒரு அரசாங்கத்தைத்தான்
எப்போதும் விரும்புவார்கள்.

கார்ப்பரேட் கம்பெனிகளிடம் தேர்தல்
நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை தேர்தல் நிதியாகப் பெற்று அதைச்
செலவழித்து வெற்றிபெறும் அரசியல் கட்சிகள் இவர்களின் கொள்ளைய
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆந்திராவில் ஜெகனின் "வெடி'க்கு காங்கிரஸ் உடையுமா?
» வயிற்றுப்புண்ணால் அவதிப்படுவோருக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது. ஏன்? எதற்கு?
» 65 ஆண்டு கால காங்கிரஸ் ஆதிக்கம் தூக்கி எறியப்பட்டுள்ளது. 60 இடங்களைக் கூட காங்கிரஸ் கைப்பற்றுமா
» பார்க்கக் கூடாது என நினைக்கின்ற இணைய பக்கங்களை உங்கள் பிள்ளைகள் உலாவரக் கூடாது என நீங்கள் நினைக்கின்ற பக்கங்களை தடுப்பதற்கு விரும்புகிறீர்களா.?
» மானிட்டர்ல ஒட்டு மஞ்சல் ஸ்டிக்கர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum