TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Today at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பள்ளிக்குழந்தைகளை கடத்திச் கொன்ற கொடூரன் சுட்டுக் கொலை

Go down

பள்ளிக்குழந்தைகளை கடத்திச் கொன்ற கொடூரன் சுட்டுக் கொலை Empty பள்ளிக்குழந்தைகளை கடத்திச் கொன்ற கொடூரன் சுட்டுக் கொலை

Post by ஜனனி Wed Nov 10, 2010 10:28 am

கோவை : கோவையில், பள்ளிக்குழந்தைகள் இருவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி மோகனகிருஷ்ணன், போலீஸ் "என்கவுன்டரில்' நேற்று சுட்டுக் கொல்லப்பட்டான். விசாரணைக்காக வேனில் அழைத்துச் சென்றபோது போலீசிடம் இருந்த துப்பாக்கியை பறித்து அவன் சுட, பதிலுக்கு போலீஸ் அதிகாரிகள் சுட்டதில் சம்பவ இடத்திலேயே பலியானான். கோவை, ரங்கேகவுடர் வீதி, காத்தான் செட்டி வீதியில் வசிப்பவர் ரஞ்சித்குமார்(40); துணிக்கடை உரிமையாளர். இவரது மகள் முஸ்கன்(11), மகன் ரித்திக்(8) ஆகியோர், நகரிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். கடந்த மாதம் 29ம் தேதி காலை வாடகை வேனில் பள்ளிக்குச் செல்ல வீட்டருகே காத்திருந்தனர். அப்போது, கால்டாக்சியில் வந்து இவ்விரு குழந்தைகளையும் உடுமலை அருகேயுள்ள தீபாலப்பட்டிக்கு கடத்திய நபர்கள், சிறுமி முஸ்கனை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன்பின், குழந்தைகள் இருவரையும் அங்குள்ள பி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீரில் தள்ளி கொலை செய்தனர்.தமிழக மக்களை அதிரவைத்த இக்கொலை வழக்கில் பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த கால்டாக்சி டிரைவர் மோகன் (எ) மோகனகிருஷ்ணன்(37), இவனது கூட்டாளியான டிராக்டர் டிரைவர் மனோகரன்(23) ஆகியோரை வெரைட்டிஹால் ரோடு போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். நவ., 30க்குள் இவர்கள் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் முனைப்பில் புலன்விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சமீபத்தில் குற்றவாளிகள் இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.
இவர்களிடம் விரிவான விசாரணை நடத்த வேண்டியிருந்ததால், நான்கு நாள் "போலீஸ் கஸ்டடிக்கு' அனுமதி கோரி நேற்று முன்தினம் கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். மூன்று நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் கோபிநாத் அனுமதித்தார்.குற்றவாளிகள் மோகன் (எ) மோகனகிருஷ்ணன், மனோகரன் இருவரையும் நேற்று முன்தினம் இரவு கஸ்டடியில் எடுத்த மாநகர போலீசார், சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தனர். குழந்தைகள் கொல்லப்பட்ட இடத்துக்கு இவர்களை நேரில் அழைத்துச் சென்று, "சம்பவம் நடந்தது எப்படி?' என, விசாரிக்க திட்டமிட்ட போலீசார், நேற்று அதிகாலை 5 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து உடுமலை நோக்கி அழைத்துச் சென்றனர்.மோகனகிருஷ்ணனை ஒரு வேனிலும், மனோகரனை மற்றொரு வேனிலும் அழைத்துச் சென்றனர். மோகனகிருஷ்ணன் இருந்த வேனில் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, எஸ்.ஐ.,க்கள் முத்துமாலை, ஜோதி இருந்தனர். மனோகரன் இருந்த வேனில், இன்ஸ்பெக்டர் கனகசபாபதி தலைமையிலான போலீசார் இருந்தனர்.
இவ்விரு வேனும் கோவை - பொள்ளாச்சி ரோட்டில் சென்ற போது, ஈச்சனாரி ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. இதனால், மாற்றுப்பாதையான போத்தனூர் - செட்டிபாளையம் ரோட்டில் அழைத்துச் சென்றனர். மனோகரன் இருந்த வேன் முன்னால் செல்ல, மோகனகிருஷ்ணன் இருந்த வேன் பின் சென்று கொண்டிருந்தது.அங்குள்ள மாநகராட்சி குப்பைக்கிடங்கு அருகே சென்றபோது, மோகனகிருஷ்ணன் திடீரென எஸ்.ஐ., ஜோதியிடம் இருந்த கைத்துப்பாக்கியை பறித்து, வேன் டிரைவர் ஏட்டு அண்ணாதுரையை நோக்கி நீட்டி, "வேனை கேரளாவுக்கு ஓட்டிச்செல்...' என மிரட்ட, உடனிருந்த அதிகாரிகள் திடுக்கிட்டனர்.
நிலைமையை சமாளிக்க எஸ்.ஐ., முத்துமாலை தனது கைத்துப்பாக்கியை எடுக்க முயன்ற போது, மோகனகிருஷ்ணன் சரமாரியாக சுட்டான். ஒரு குண்டு எஸ்.ஐ., முத்துமாலையின் வயிற்றிலும், மற்றொரு குண்டு ஜோதியின் இடது கையிலும் பாய்ந்தது. போலீசார் நிலைகுலைந்ததை தொடர்ந்து, அவன் தப்பியோட முயன்றான். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, எஸ்.ஐ., முத்துமாலை ஆகியோர் சுதாரித்து துப்பாக்கியால் பதிலுக்கு சுட்டதில் மோகனகிருஷ்ணனின் நெற்றியில் இரு குண்டுகளும், மார்பில் ஒரு குண்டும் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தான். குண்டு பாய்ந்து காயமடைந்த எஸ்.ஐ.,கள் முத்துமாலை, ஜோதி ஆகியோர், கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவர்களை, போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நேரில் பார்வையிட்டு, சிகிச்சை விவரங்களை டாக்டர்களிடம் கேட்டறிந்தார். போலீசாரின் அதிரடியான இந்த, "என்கவுன்டர்' கோவை போலீசார் மற்றும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் நடவடிக்கையை பாராட்டும் விதமாக ரங்கேகவுடர் வீதி, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் ஜெயின் சமூகத்தினர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர். அதே வேளையில், போலீஸ் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் இரு பிரிவு வக்கீல்கள், கோர்ட் வளாகத்தில் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். எதிர்ப்பு தெரிவித்த வக்கீல்களுக்கு கண்டனம் தெரிவித்து, கோர்ட் முன் பொதுமக்கள் சிலரும் திரண்டு கோஷமிட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மற்றொரு குற்றவாளியான மனோகரனிடம், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 ஆண்டுக்கு பின் 2வது "என்கவுன்டர்' : கடந்த 1998ல் கோவை நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பின் போது, திருமால் வீதியிலுள்ள தனியார் கட்டடத்தில் வெடிகுண்டுகளுடன் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு அதிரடியாக நுழைந்து சோதனையிட முயன்ற போலீசார் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன.எஸ்.ஐ., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதிலும், உள்ளே பதுக்கி வைத்திருந்த குண்டுகள் வெடித்ததிலும் ஐந்து பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு பின் 2001, ஆக., 29ல் ஆர்.எஸ்.புரம், திருவேங்கடசாமி ரோட்டிலுள்ள தொழிலதிபர் வீட்டில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் நடந்தது.அவ்வீட்டில் இரவில் புகுந்து பதுங்கியிருந்த கொள்ளையர்களை பிடிக்க, அப்போதைய எஸ்.ஐ., பாலமுருகன் (தற்போது இன்ஸ்பெக்டர்) துப்பாக்கியால் சுட்டார். இதில், கொள்ளையன் கண்ணப்பன் என்பவனது காலில் குண்டு பாய்ந்து, சிகிச்சைக்கு பின் உயிர்பிழைத்தான்.கடந்த 1998க்கு பின் கோவை நகரில் 11 ஆண்டுகளாக போலீஸ், "என்கவுன்டர்' நடக்கவில்லை. நீண்டகாலத்துக்கு பின் நேற்று நடந்த, "என்கவுன்டரில்', குழந்தைகள் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மோகனகிருஷ்ணன் சுட்டு கொல்லப்பட்டுள்ளான்.
"என்கவுன்டர்' வழக்கு பதிவு : கொலை வழக்கு குற்றவாளி மோகனகிருஷ்ணன், "என்கவுன்டரில்' சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக, போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, போலீசாருடன் வேனை கடத்த முயன்றது, போலீஸ் அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.போலீஸ் கஸ்டடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து, குற்றவாளி உயிரிழந்துள்ளதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மரணபீதியில் மனோகரன் : மோகனகிருஷ்ணன், "என்கவுன்டரில்' போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட விஷயம், அவனது கூட்டாளி மனோகரனுக்கு வெகுநேரம் வரை தெரியவில்லை. காரணம், முன்னதாக வேறு ஒரு வேனில் அழைத்துச் செல்லப்பட்டான். "என்கவுன்டர்' சம்பவத்துக்கு பின், அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு திரும்ப அழைத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தான். போலீசார் பரபரப்புடன் இருப்பதை கண்ட மனோகரன், "என்ன நடந்தது?' என, அருகிலிருந்த அதிகாரிகளிடம் விசாரித்துள்ளான்.மோகனகிருஷ்ணன் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாக தெரிவித்ததும், மரணபீதியில் உறைந்து அப்படியே தரையில் அமர்ந்து தேம்பி தேம்பி அழுதுள்ளான். துப்பாக்கியுடன் தன்னை சுற்றி நின்றிருந்த போலீசாரை பார்த்து அடிக்கடி கையெடுத்து கும்பிட்டவாறே இருந்ததாக, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிரேதத்தை பெற மனைவி வருவாரா? போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கொலை குற்றவாளி மோகனகிருஷ்ணனின் உடல், கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் கஸ்டடியில் இவன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.இவனது மனைவி ஆரோக்கியமேரி கோவையில் இல்லை. கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, குழந்தையை சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு எடுத்துச் சென்றுவிட்டார். அங்கு தனியாக வசிக்கும் அவர், கணவனின் உடலை வாங்க வருவாரா, என்பது தெரியவில்லை.
மேலும் இருவர் பிடிபடுவர்? பள்ளிக் குழந்தைகளை கடத்தி கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை பிடிக்க தனிப்படை தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளது. குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டு திட்டம் வகுத்துக் கொடுத்ததாக கூறப்படும், தற்போது தலைமறைவாக உள்ள மேலும் இரு டிரைவர்களை தனிப்படையினர் தீவிரமாக தேடுகின்றனர். ஒரு சில நாட்களில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சபாஷ் போலீஸ்! கொலை குற்றவாளி மோகனகிருஷ்ணன் துப்பாக்கியால் சுட்டதில், எஸ்.ஐ., முத்துமாலையின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதைதொடர்ந்து அதிரடியாக செயல்பட்ட அவர் மற்ற இரு அதிகாரிகளையும் காப்பாற்ற, தனது கைத்துப்பாக்கியால் மோகனகிருஷ்ணனை நோக்கி சுட்டுள்ளார். அவனது நெற்றியில் இரு குண்டுகள் பாய்ந்து பலியாகியுள்ளான். எஸ்.ஐ., முத்துமாலை, தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்காவிடில், மற்ற இரு போலீஸ் அதிகாரிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்கின்றனர், போலீசார்.கொலைக்குற்றவாளி மோகனகிருஷ்ணன் செட்டிபாளையத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தை, போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின், போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் மாலை வரை முகாமிட்டு, நடந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். மோகனகிருஷ்ணன் சுட்டுக்கொல்லப்பட்ட போலீஸ் வேனின் இருக்கைகளிலும், வெளிப் புறத்திலும் ரத்தம் வழிந்தோடி படிந்திருந்தது; மேற்கூரையில் குண்டு பாய்ந்ததற்கான துவாரங்கள் காணப் பட்டன. உடனடியாக அந்த வேன், கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டது.மோகனகிருஷ்ணன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் வெளியானதும், போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவை மொபைல் போனில் தொடர்பு கொண்ட, தமிழக போலீஸ் உயரதிகாரிகள் விபரங்களை கேட்டறிந்தனர். பொதுமக்களும் போலீஸ் கமிஷனரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். கோவை ஸ்டேட் பாங்க் ரோட்டிலிருக்கும் ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்டோ டிரைவர்கள், கமிஷனருக்கு வாழ்த்து தெரிவிக்க "மலர் செண்டு'டன் கமிஷனர் அலுவலகத்துக்கு காலையில் வந்திருந்தனர்.
பொள்ளாச்சிக்கு அழைத்து சென்று மனோகரனிடம் ரகசிய விசாரணை : கோவையை சேர்ந்த துணிக்கடை அதிபர் ரஞ்சித்குமார் மகள் முஸ்கன்(11), மகன் ரித்திக்(8) ஆகியோர் கடத்திக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக கோவை கால் டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன், பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் மனோகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் மூன்று நாள் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதையடுத்து, தனிப்படை போலீசார் குற்றவாளிகள் இருவரையும் தனித்தனியாக விசாரிக்க அழைத்து சென்றனர். முக்கிய குற்றவாளி மோகனகிருஷ்ணன் போலீசாரை தாக்கி தப்பிச்செல்ல முயன்ற போது சுட்டு கொல்லப்பட்டான். இதையறிந்த தனிப்படை போலீசார் மனோகரனை, குழந்தைகளை கால்வாயில் தள்ளிய இடத்திற்கு அழைத்து செல்லாமல், பொள்ளாச்சி நகர போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தனர். பொள்ளாச்சி போலீசாரை கூட அனுமதிக்காமல் தனி அறையில் ரகசிய விசாரணை செய்தனர். ஒரு மணி நேர விசாரணைக்கு பிறகு, அறைக் கதவுகளை தனிப்படை போலீசார் திறந்தனர். அதன்பின், போலீஸ் ஸ்டேஷன் பின்பகுதியில் உள்ள கழிப்பிடத்திற்கு செல்ல அனுமதித்தனர். இந்த விஷயம் வெளியே கசிந்ததும், பொள்ளாச்சியில் இருந்து, கோவை போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மனோகரனை போலீசார் அழைத்து சென்றனர்.
என்கவுன்டரில் கொடூரன் பலி நீதித்துறை விசாரணை : கோவையில் பள்ளி குழந்தைகள் முஸ்கான், ரித்திக் கடத்திக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வேன் டிரைவர் மோகனகிருஷ்ணனை போலீசார் விசாரணைக்காக நேற்று அதிகாலை அழைத்து சென்றபோது "என்கவுண்டரில்' சுட்டு கொல்லப்பட்டான். போத்தனூர் போலீஸ் எல்லைக்குள் நடந்த இச்சம்பவம் குறித்து கோவை ஜே.எம்.எண்:7 மாஜிஸ்திரேட் தெய்வம், கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறைக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது, சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் நேரடி சாட்சியாக சேர்க்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். என்கவுன்டர் மேற்கொண்ட அதிகாரி, உடன் இருந்தவர்கள், மோகனகிருஷ்ணனின் உறவினர்களிடம் விசாரிக்கப்பட்டனர். பிரேதத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்த இடங்கள், பிரேதத்தின் நிலை, துப்பாக்கியால் சுட வேண்டிய அவசியம் ஆகியன குறித்து போலீசாரிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டது. விசாரணைக்குப் பின், மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
கொலைகாரனின் "12 நாள் வாழ்க்கை!' அக்.,29: காலை 7.50 மணிக்கு பள்ளிக் குழந்தைகள் முஸ்கன்(11), ரித்திக்(8) கால்டாக்சியில் கடத்தல். அன்றிரவே, கொலைகாரன் மோகனகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.
அக்.,30: உடுமலை அருகே வாய்காலில் சிறுமி முஸ்கன் உடல் மீட்பு; கொலைகார கூட்டாளி மனோகரனும் கைது.
நவ.,1: பல்லடம் அருகே வாய்காலில் சிறுவன் ரித்திக் உடல் மீட்பு
நவ.,3: கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் பாட்டி கமலாபாய், கோவை மத்திய சிறையில் நடந்த அடையாள அணிவகுப்பின்போது கொலையாளிளை மாஜிஸ்திரேட் முன்னிலையில் அடையாளம் காட்டினார்.
நவ.,4: கொலையாளிகள் இருவருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது, ஆவேசமடைந்த மக்கள் முட்டை வீசி கோஷமிட்டனர்.
நவ.,8: கொலையாளிகளை போலீசார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் கஸ்டடியில் எடுத்துச் சென்றனர்.
நவ.,9: விசாரணைக்கு போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்ட மோகனகிருஷ்ணன், போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பியோட முயற்சித்த போது அதிகாலை 5.30 மணிக்கு சுட்டுக்கொல்லப்பட்டான்.

எஸ்.ஐ.,யின் துணிச்சல்!* கொலை குற்றவாளி மோகனகிருஷ்ணன் துப்பாக்கியால் சுட்டதில், எஸ்.ஐ., முத்துமாலையின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதைத் தொடர்ந்து அதிரடியாக செயல்பட்ட அவர், மற்ற இரு அதிகாரிகளையும் காப்பாற்ற, தனது கைத்துப்பாக்கியால் மோகனகிருஷ்ணனை நோக்கி சுட்டுள்ளார்.
அவனது நெற்றியில் இரு குண்டுகள் பாய்ந்து பலியாகியுள்ளான். எஸ்.ஐ., முத்துமாலை, தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்காவிடில், மற்ற இரு போலீஸ் அதிகாரிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்கின்றனர், போலீசார்.
* கொலைக்குற்றவாளி மோகனகிருஷ்ணன், செட்டிபாளையத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தை, போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின், போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் மாலை வரை முகாமிட்டு, நடந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.
* மோகனகிருஷ்ணன் சுட்டுக்கொல்லப்பட்ட போலீஸ் வேனின் இருக்கைகளிலும், வெளிப்புறத்திலும் ரத்தம் வழிந்தோடி படிந்திருந்தது; மேற்கூரையில் குண்டு பாய்ந்ததற்கான துவாரங்கள் காணப்பட்டன. உடனடியாக அந்த வேன், கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டது.
* மோகனகிருஷ்ணன் சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் வெளியானதும், போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவை மொபைல் போனில் தொடர்பு கொண்ட, தமிழக போலீஸ் உயரதிகாரிகள் விவரங்களை கேட்டறிந்தனர். மேலும், பொதுமக்களும் போலீஸ் கமிஷனரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
* கோவை ஸ்டேட் பாங்க் ரோட்டிலிருக்கும் ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்டோ டிரைவர்கள், கமிஷனருக்கு வாழ்த்து தெரிவிக்க, "மலர்செண்டு'டன் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். அவர், போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் முகாமிட்டிருந்ததால், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மனைவி - மகள்களை கொன்ற கொடூரன் கைது;சந்தேக கேட்டால் சிவகங்கை அருகே விபரீதம்
» கடத்திய போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்ற மாவோயிஸ்டுகள்
» அக்காள் மகனைச் சுட்டுக் கொன்ற குவைத் இளவரசருக்கு மரண தண்டனை!
» தாயின் கண்முன்னே 3 குழந்தைகளை சுட்டுக் கொன்ற மாஜி இராணுவ வீரர்
» 379 பேரை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர் தேசிய தலைவரா? மாணவர்கள் குழப்பம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum