TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிரபாகரனை படைகள் நெருங்கிக் கொண்டிருந்ததால் நாராயணனை

Go down

பிரபாகரனை படைகள் நெருங்கிக் கொண்டிருந்ததால் நாராயணனை Empty பிரபாகரனை படைகள் நெருங்கிக் கொண்டிருந்ததால் நாராயணனை

Post by Tamil Sun Jan 24, 2010 8:43 pm

இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் அவரது
பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ளார். அவரை மேற்கு வங்க மாநிலத்தின்
ஆளுநராகப் பணியில் இருத்துவதற்கு காங்கிரஸ் தலைமை தீர்மானித்து பணி
நியமனம் வழங்கி விட்டது.

மன்மோகன் சிங்கிற்கு நெருக்கமானவரான
நாராயணனை பதவியில் இருந்து அகற்றுவதற்கு மத்திய அரசை தூண்டியது எது என்ற
விபரங்கள் இப்போது மெல்லக் கசிய தொடங்கியுள்ளன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் இருக்கின்றன என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அதில்,
முதலாவது காரணம், தற்போதைய உள்துறை அமைச்சரும் தமிழ் நாட்டுக்காரருமான
ப.சிதம்பரத்துடன் நாராயணனுக்கு உறவுகள் நன்றாக இல்லை என்பது.

மும்பையில்
பாகிஸ்தான் ஆதரவு ஆயுதப் படையினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து நிதி
அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.

பதவியேற்றதுமே
இந்திய வெளியக உளவுப் பிரிவான ‘றோ’வின் தலைவரும், புலனாய்வுத் துறைத்
தலைவரும் தனக்கு நேரடியாக அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை தேசிய
பாதுகாப்பு ஆலோசகருக்கு சிதம்பரம் தெளிவுபடுத்தி விட்டார்.
முன்னதாக, அந்த அறிக்கைகள் அனைத்தும் நாராயணனிடமே சமர்ப்பிக்கப்பட்டு வந்தன.
அவற்றின் அடிப்படையில் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள
பாதுகாப்புச் சூழ்நிலைகள் குறித்து அவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு
விளக்குவார். அவ்வாறு செய்வது நாராயணனுக்கு இலகுவானதாகவும் வசதியானதாகவும்
இருந்தது.

இந்த நிலையில், தான் விரும்பியபடி விடயங்கள்
நடக்கவில்லை என்ற உடனேயே தேசிய தீவிரவாத எதிர்ப்பு நிலையம் [National
Counter Terrorism Centre-NCTC] என்ற புதிய அமைப்பு ஒன்றை
உருவாக்குவதற்கான முன்மொழிவுகளை சிதம்பரம் வைத்தார்.

நாராயணனுக்கு விடுக்கப்பட்ட முதல் எச்சரிக்கை இதுதான்.

அந்த
முன்மொழிவுகளை எதிர்த்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வாதிடுவதற்கு
முயன்றார். ஆனால், சிதம்பரம் தனது அடிகளை உறுதியாக எடுத்து வைத்தார்.

அத்துடன்,
நாட்டின் உள்ளகப் பாதுகாப்புக்குத் தானே பொறுப்பு என்றால், அதற்குத்
தேவையான, பொருத்தமான சாதனங்கள் அனைத்தையும் உருவாக்கிக் கொள்ளும்
சுதந்திரம் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை பிரதமர் மன்மோகன் சிங்கிடம்
சிதம்பரம் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

தேசிய தொழில்நுட்ப
ஆராய்ச்சி நிறுவனம் [National Technical Research Organisation],
புலனாய்வுக் கூட்டுக் குழு [Joint Intelligence Committee], வான் பயணங்கள்
தொடர்பான ஆய்வு மையம் [Aviation Research Centre], ஆய்வு மற்றும்
ஆராய்ச்சிப் பிரிவு [RAW] ஆகிய அனைத்தும் சிதம்பரம் ஏற்படுத்திய புதிய
அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டன.
இந்த நகர்வுகள் எல்லாம் நாராயணனுக்கு வேலை இல்லாத நிலையை ஏற்படுத்தியதுடன் அவரது அதிகாரங்களையும் பெருமளவில் குறைத்தன.

சிதம்பரம்
- நாராயணன் இடையிலான இந்தப் பிணக்குகள் எல்லாம், தெலுங்கானா
பிரச்சினைகளைக் கையாள்வதற்காக காங்கிரஸ் கட்சியால் சிதம்பரம்
நியமிக்கப்பட்டதற்குப் பின்னர் வெளிச்சத்துக்கு வந்தன.


பிரபாகரனை படைகள் நெருங்கிக் கொண்டிருந்ததால் நாராயணனை Chidambaram_4315e

தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று கேட்டு
தெலுங்கானா ராஜ்ட்ர சமித்தி தலைவர் ரி.ஆர்.சந்திரசேகர ராவ் [Telangana
Rashtra Samiti president T R Chandrasekhara Rao] காலவரையறை அற்ற உண்ணா
நிலைப் போராட்டம் நடத்தினார்.
இதனையொட்டி கடந்த நவம்பர், டிசெம்பர் மாதங்களில் கர்நாடக மாநிலத்தில்
பெரும் வன்முறைகள் வெடித்தன. இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் நாராயணன்
சர்ச்சைக்குரிய தகவல்களை அரசுக்கு வழங்கினார்.

பிரச்சினை தொடர்பாக
ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக புதுடில்லியில் இருந்து
ஹைதராபாத்திற்கு அனுப்பப்பட்ட புலனாய்வுத் துறை மூத்த அதிகாரியின்
முடிவுகளில் நாராயணன் மிகக் காத்திரமாகச் செல்வாக்குச் செலுத்தினார் என்று
சொல்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

நாராயணனின் தகவல்களின்
அடிப்படையில், தெலுங்கான தனி மாநிலம் உருவாக்கப்படும் என்று டிசெம்பர்
6ஆம் நாள் பின்னிரவில் சிதம்பரம் அறிவித்தார்.

நாராயணனின் காய்
நகர்த்தலில் விழுந்த சிதம்பரம் அதற்கான விளைவை அடுத்த நாளே எதிர்கொண்டார்.
எதிர்க் கட்சிகள் அவரைத் தும்புபறக்க விளாசி விமர்சித்தன. அதேசமயத்தில்
தெலுங்கானா பிரச்சினையும் மேலும் தீவிரமடைந்தது.
நாராயணனின் நீக்கத்துக்கான அடுத்த காரணம், 26/11 மும்பைத் தாக்குதல்
தொடர்பாக அவர் பாகிஸ்தான் போஸ்ட் [Pakistan post] பத்திரிகைக்குக் கொடுத்த
பேட்டி.
பாகிஸ்தானுடன் எந்தவிதமான பேச்சுக்களையும் மீளத் தொடங்குவதை தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் என்ற ரீதியில் தான் மறுப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பில் அரசியல் பார்வை வேறானதாக இருந்தது.
பயங்கரவாதம் தொடர்பான விடயங்களைத் தீர்த்துக் கொள்வது மற்றும் இரு
நாடுகள் இடையில் அமைதியை ஏற்படுத்துவது என்பன தொடர்பில் பேச்சுக்களை
நடத்துமாறு அமெரிக்காவால் இந்தியாவுக்கு ஆலோசனையும் அழுத்தமும்
கொடுக்கப்படுகிறது.

நாராயணனின் ஆலோசனைகள் இந்த விடயத்தில்
புறக்கணிக்கப்பட்டதுடன், ஷாம் எல்-ஷேக்கில் [Sharm el-Sheikh] கூட்டறிக்கை
ஒன்றிலும் கையெழுத்திட்டார் பிரதமர் மன்மோகன் சிங்.

இந்தச்
சமயத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும், 26/11 மும்பைத் தாக்குதலின்
பின்னர் அதிகாரத்தில் தொடர்ந்து இருந்து வந்த ஒரே நபர் நாராயணன்தான்.
தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்குப் பொறுப்பேற்று அப்போதைய மத்திய
உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல் [Shivraj Patil], மகாராஷ்ரா முதல்வர்
விலாஸ்ராவோ தேஷ்முக் [Vilasrao Deshmukh] ஆகியோர் பதவி விலகி இருந்தனர்.
அந்தச் சமயத்திலேயே நாராயணனும் வெளியேற்றப்பட்டு இருக்க வேண்டும்.
எனினும் மன்மோகன் சிங்குடன் அவருக்கு இருந்த நெருக்கம் அவரைக்
காப்பாற்றியது.

நாராயணனின் இரத்தத்தை உறிஞ்ச அப்போதே பல தரப்புக்களும் காத்துக் கொண்டிருந்த போதும் மன்மோகன் சிங் ஏன் அவரைக் காப்பாற்றினார்?

தமிழ்நாடு
முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.கருணாநிதிக்கு
நெருக்கமானவர் நாராயணன் என்பதே அதற்குக் காரணம் என்கின்றன அரசியல்
வட்டாரங்கள்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்து
கொண்டிருந்த, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சிறிலங்காப் படைகள்
நெருங்கிக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில் நாராயணனை அகற்ற மன்மோகன் சிங்
விருப்பப்படவில்லை.

ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழ் நாடு
அரசு எந்த விதப் பிரச்சினைகளையும் எழுப்பக்கூடாது என்பதில் மன்மோகன் சிங்
மிகக் கவனமாக இருந்தார். அதனாலேயே அன்று நாராயணனின் தலை தப்பியது.

சிதம்பரம்
உருவாக்கிய புதிய அமைப்பு எல்லா அதிகாரங்களையும் தனது கைகளில் எடுத்துக்
கொண்டுள்ள நிலையில் இனி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியின்
முக்கியத்துவம் குறைந்துவிடும் என்கின்றன புதுடில்லி வட்டாரங்கள்.
ஆனால், வெளிவிவகாரத் துறையின் கொள்கை வகுப்பிற்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக அவர்களின் பதவி அமையும்.
இனிவரும் காலங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி என்பது ஒரு
இராஜதந்திர வகிபாகத்தை மட்டுமே கொண்டிருக்கும் என்று புதுடில்லி
வட்டாரங்கள் கூறுகின்றன. அதற்கு மேலும் தேவைப்பட்டாலும், அதற்கான
வரையறைகள் வேறாக இருக்கும்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'செக்' வைக்க மேற்கு வங்கத்தின் தற்போதைய கவர்னரான எம் கே நாராயணனை தமிழகத்துக்கு கவர்னராக கொண்டு வரப்போகிறது
» தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது.இதைத் தொடர்ந்து பிரபல ஜவுளி மற்றும் நகைக்கடை நிறுவனங்கள் தீபாவளி விளம்பரங்கள் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
» பிரபாகரனை வெறுத்தவர்கள் கூட, இந்தப் படத்தைப் பார்த்து அனுதாபப்படுகின்றனர், கோபப்படுகின்றனர்.
» கேணல் கடாபி மரணம்! குதூகலிக்கும் கிளர்ச்சிப் படைகள்!!
» இந்தியா எல்லைக்குள் சீனாப் படைகள் நுழைந்ததால் பதற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum