TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மொமைல் கேமரா மூலம் அழகாய் படம் எடுக்க குறிப்புகள்

Go down

மொமைல் கேமரா மூலம் அழகாய் படம் எடுக்க குறிப்புகள் Empty மொமைல் கேமரா மூலம் அழகாய் படம் எடுக்க குறிப்புகள்

Post by அருள் Sat Jun 05, 2010 2:36 pm

மொமைல் கேமரா மூலம் அழகாய் படம் எடுக்க குறிப்புகள் Camera-phone-photosமுதன்முறை
டெக்னிகல் இடுகை. ரொம்ப பேசாம நேரா விடயத்திற்கு செல்வோம். நம்மில் பலர்
புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் அதிகம் இருந்தாலும், தன்னிடம் சொந்தமாக ஒரு
டிஜிட்டல் கேமரா இருக்காது. எனினும், முயன்ற அளவு திருப்திகரமான
புகைப்படங்களை நம் அலைபேசியில் உள்ள கேமரா மூலம் சுட முடியும். அதற்கான
சில சின்ன சின்ன வழிமுறைகள்.
வெளிச்சம் தேவை:

மொமைல் கேமரா மூலம் அழகாய் படம் எடுக்க குறிப்புகள் 3711415374_06e94310e3

பல அலைபேசிகளில் உள்ள கேமராக்களில் ஃப்ளாஷ் இல்லாத்தால் புகைப்படங்கள்
இருளான சூழலில் சுடுவது கடினம் தான். அலைபேசிகளில் உள்ள கேமரா
பொருத்தமட்டில் வெளிச்சம் ஒரு பெரிய பிரச்சனையாகவே உள்ளது. படம் எடுக்கும்
போது நீங்கக் எடுக்க போகும் பொருள் (subject) குறைந்தபட்சம் வெளிச்சம்
தெளிவாக இருக்க வேண்டும். பளீச் என மின்ன வேண்டாம். அதே சமயம் இருளாகவும்
இருந்து விடக் கூடாது. நம் கண்கள் போல் அல்ல கேமராக்கள். ஆக, நமக்கு
தெரியும் ஒளி கேமராவிற்கு தெரியாது. பல வெளிச்சங்களில் புகைப்படம்
எடுத்துப் பாருங்கள். பிறகு ஒளி அளவின் தேவைப் பற்றி அறிய முடியும்.
விளக்குகளும் பயன்படுத்துங்கள். சரியான அளவினான ஒளியுடன் கூடிய விளக்குகள்
subject மீது ஒளிக்கச் செய்து படங்கள் எடுக்கலாம். subject-இன் பின்புறம்
உள்ள வெளிச்சம் subject மீது உள்ள வெளிச்சத்தை விட குறைவாக இருக்க
வேண்டும். இதில் அதிக கவனம் தேவை.

அசையாத நிலை அவசியம்:
மொமைல் கேமரா மூலம் அழகாய் படம் எடுக்க குறிப்புகள் Blur

ஒவ்வொரு கேமராவிற்கும் உள்ள பண்பு நலன்களில் shutter speed முக்கியமானது.
ஷட்டர் ஸ்பீட் என்பது, கேமரா ஒளியினை தன் உள்ளே ஊடுறுவ அனுமத்திக்கும்
காலம் என்பதனை குறிக்கும். ஒரு தரமான கேமரா என்றால் குறைந்த பட்சம் 1/200
வினாடி கால அவகாசம் மட்டுமே ஒளி உள்ளே செல்ல அனுமத்திக்கும். இதனால்,
அசையும் பொருளினை படம் எடுத்தாலும், அது நிற்பது போலவே காட்சி அளிக்கும்.
அலைபேசியில் உள்ள கேமராக்களில் ஷட்டர் ஸ்பீட் அதிகமாகவே இருக்கும்.
வெளிச்சம் குறைவான சூழலில் இது இன்னும் அதிகமாக் இருக்கும். எனவே, முடிந்த
வரை நீங்கள் எடுக்க போகும் subject எந்த காரனத்தாலும் அசையாமல்
பார்த்துக்கொள்ளுங்கள். கையில் பிடித்து படம் எடுக்கும் போது சில சமயம் கை
நடுங்கும். நடுங்காவிட்டாலும், 'க்ளிக்' செய்யும் போது கண்டிப்பாக
அசையும். அதனால், அனைத்து கேமராக்களிலும் டைமர் (timer) எனும் வசதி
தரப்பட்டிருக்கும். அதில் 5 வினாடி (உதாரனமாக்) அமைத்துவிட்டு, 'க்ளிக்'
செய்துவிட்டு நிலையான இடத்தில் சப்ஜக்ட் நோக்கி வைத்து விடுங்கள். 10
வினாடிகளில் தானாக 'க்ளிக்' செய்துக்கொள்ளும். subject-ம் கேமராவும்
அசையாத பட்சத்தில், தெளிவான படம் கிடைப்பது உறுதி.

Zoom வேண்டவே வேண்டாம்:
மொமைல் கேமரா மூலம் அழகாய் படம் எடுக்க குறிப்புகள் Digzoom


subject உங்கள் படத்தில் எவ்வளவு அருகில் வேண்டுமோ அவ்வளவு அருகில்
சென்று படம் எடுங்கள். Zoom என்பது தூரத்தில் உள்ள நமது subject அருகில்
சென்று எடுப்பது போன்ற உணர்வினைத் தரவே பயன்பட்டாலும், அதில் இரண்டு வகை
உள்ளது. ஒன்று- ஆப்டிக்கல் ஜூம்: இது, ஒரு ஜோடி லென்ஸ் தனக்குள் இருக்கும்
தூரத்தை அதிகப்படுத்தி, தொலைவில் உள்ள பொருளினை அருகில் இருப்பது போல்
காட்டும். இதனால், படம் எடுக்கும் போது zoom செய்யப்பட்ட ஒளி மட்டுமே
கேமரா உள்ளே செல்கிறது. இரண்டாம் வகை: டிஜிட்டல் ஜூம்: இது, தொலைவில்
இருக்கும் பொருளை தொலைவிலேயே படம் எடுத்து, அதை pixel enlargement
செய்யும். அதாவது, ஒரு பிக்ஸலில் உள்ள விவரம் (definition) ஒன்றிற்க்கு
மேற்பட்ட பிக்ஸல் தேவைப்படும் விதம் பெரிதாக்கி கொள்ளும். இதனால்,
படத்தின் துள்ளியம் குறைகிறது. அலைபேசிகளில், டிஜிட்டல் ஜூம் எனப்படும்
அம்சம் மட்டுமே காணப் படுகிறது( சமீபத்தில் ஸ்பைஸ் மொபைல் ஆப்டிகல் ஜூம்
வசதியுடன் அலைப் பேசியினை அறிமுகப்படுத்தி உள்ளது). எனவே, டிஜிட்டல் ஜூம்
வசதியினை முடிந்த வரை தவிர்த்து பொருளின் அருகில் சென்று படம் எடுங்கள்.
"என்னய்யா..? அப்புறம் எதுக்கு இந்த டிஜிட்டல் ஜூம்னு ஒன்னு இருக்கு'
என்றால், அதன் அவசியம் தவிர்க்க முடியாத சில சமயங்களில் தேவையே படுகிறது.
உதாரணத்திற்கு, தொலைவில் உள்ள பொருளினை படம் எடுக்கப் போகிறீர்கள் என
வைத்துக் கொள்வோம். அந்த பொருள் எதிர் வீட்டில் உள்ள உங்கள் காதலி என்
வைத்துகொள்வோம்(சும்மா வைத்துகொள்வோம்). அவள் அவளது அறையில் இருக்கிறாள்,
நீங்கள் உங்கள் ஜன்னலில் இருந்து படம் எடுக்கிறீர்கள். இருவர்
வீட்டிற்கும் இடையில் உள்ள திறந்த வெளியினால், ஆதவன் உங்கள் காதலியின்
பிரகாசத்தை குறைத்துவிடுவான். அப்போது, இந்த ஜூம் வேறு வழி இல்லாமல்
பயன்படுத்தியே தீர வேண்டும். ஜன்னல் வரை ஜூம் செயவதால், இடையில் உள்ள
வெளிச்சம் காணாமல் போகும், இதனால் கேமரா தானாகவே வெளிச்சம் அதிகப்படுத்தி,
காதிலையை அவர் இருப்பது போல் பிரகாசமாகவே காட்டும்( ஐடியா தவறான வழியில்
பயன்படுத்தப்பட்டால் கம்பெனி பொறுப்பல்ல!). தவிர்க்க முடியாத சூழல் தவிர
முடிந்த வரை ஜூம் வசதி வேண்டவே வேண்டாம்.

Automatic தவிர்த்துவிடுங்கள்:
மொமைல் கேமரா மூலம் அழகாய் படம் எடுக்க குறிப்புகள் Wb

டிஜிட்டல் கேமராக்களில்ஆட்டோ எனும் வசதி தரப்பட்டிருக்கும். இது, "white
balance" எனும் வசதியின் கீழ் இருக்கும். white balance என்பது நீங்கள்
படம் எடுக்கப் போகும் பொருளினை, நிறம் மாற்றாம் இல்லாமல் எடுக்கவே. இதை
auto modeல் வைத்து விட்டு அதன் பயனே தெரியாமல் படம் எடுக்காதீர்கள்.
நீங்கள் இருக்கும் சூழல், விளக்கின் நிறம் பொருத்து பொருளின் நிறம் மாறி
தோன்றும். இதனால், நீங்கள் white balance பயன்படுத்தி உண்மையான நிறம்
அல்லது, வேண்டிய நிறத்தில் படம் எடுக்கலாம். இருளில் கூட அதாவது தேவையற்ற
புள்ளிகள் (grains) ஏதும் கூட இல்லாமல் படம் எடுக்க முடியும். அதுவும்
இல்லாமல், mood-ற்கு தகுந்தவாறும் நிறம், தோற்றம் மாற்றி அமைக்கலாம்.
இதில் பல ஆய்விகளை நீங்களே நடத்திக் கொள்ளுங்கள். மிகவும் பயனுள்ளதாகவும்,
சுவாரசியமாகவும் இருக்கும்.

அதிகபட்ச resolution:

உங்கள் கேமராவில் உள்ள அதிகபட்ச ரெசொல்யூஷன் செட் செய்யுங்கள்.
பிறகாலத்தில் எடிட் செய்வதற்கு உதவியாக இருக்கும். படத்தின்
விவரமும்(definition) அதிகமாகவும், துள்ளியமாகவும் இருப்பதால், படத்தில்
மாற்றங்கள் செய்யும் போது ஏற்படும் விவர நட்டம் (reduced definition)
குறைவாகவும், வேண்டாத பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படாமலும் இருக்கும். ஒரு
2 megapixel கேமராவின் அதிகபட்ச resolution 1600 பிக்ஸல் அகலமும், 1200
பிக்ஸல் உயரமும் இருக்கும். இதனை, 1600x1200(அகலம்xஉயரம்) என்ற முறையின்
கீழ் குறிக்கப்படும்.

ஒரே பொருள், பல முறை:

ஒரு பொருளை படம் எடுக்கும் போது, ஒரு முறை எடுத்து, அது திருப்திகரமாய்
இருந்தாலும் மேலும் பல முறை சுட்டுக் கொள்ளுங்கள். அலைபேசியில் உள்ள
திரையில் தோன்றும் பிரகாசம், கனிணி திரையில் தெரியாது. எனவே, அலைபேசியின்
திரையினைப் பார்த்து ஏமார்ந்து விடாதீர்கள். பல படங்கள் எடுப்பதன் மூலம்,
கனிணியில் அனைத்தையும் பார்த்து, அவற்றில் இருந்து ஒன்று தேர்ந்தெடுக்க
வசதியாக இருக்கும். ஃபில்ம் ரோல் தேவை இல்லாததால், தேவையற்ற படங்களை
பின்னர் அழித்து விட்டு, நினைவினை மீள பெற முடியும். எனவே, சிக்கனம்
பார்க்காமல் சுட்டுத் தள்ளுங்கள்.

மற்றும், கேமரா லென்ஸினை அவ்வபோது சுத்தம் செய்துக்கொள்ளுங்கள்.
மூக்குகண்ணாடி துடைக்கப் பயன்படும் துனி, காது குடையும் காட்டன்
பட்(cotton bud) ஆகியவை கேமராவினை துடைக்க சிறந்த பொருட்கள்.THANKS:http://dareone.blogspot.com
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மொமைல் கேமரா மூலம் அழகாய் படம் எடுக்க குறிப்புகள்
» ஜேம்ஸ்பாண்ட் பாணியில் கேமரா பொருத்தப்பட்ட வாட்ச் மூலம் நோயாளிகளை ஆபாச படம் எடுத்த டாக்டர் அதிரடி கைது.
» ப்ளாஷ் இல்லாமல் துல்லியமாக படம் எடுக்கும் புதிய டிஜிட்டல் கேமரா!
» சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வாக்கு சாவடிகளை கேமரா மூலம் கண்காணிக்க அதிகாரி உத்தரவு!!
» VLC மீடியா பிளேயர் மூலம் வீடியோவில் இருந்து Snapshot எடுக்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum