TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மிஸ்டர் கழுகு: ஈழத்தாய் இமேஜ்!

Go down

மிஸ்டர் கழுகு: ஈழத்தாய் இமேஜ்! Empty மிஸ்டர் கழுகு: ஈழத்தாய் இமேஜ்!

Post by Tamil Fri Mar 04, 2016 6:34 pm

கூட்டணி ஏற்பாடுகளில் என்ன நடக்கிறது என்பதைச் சொல்லும்!” – கழுகார் தலை தெரிந்ததும் கொக்கி போட்டோம்.
[You must be registered and logged in to see this image.]‘‘இன்னும் கலங்கலாகத்தான் இருக்கிறது. ஆனால், எந்தத் திசையை நோக்கிப் போகும் என்பது மட்டும் லேசாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. தி.மு.க கூட்டணிக்கு விஜயகாந்த் வருவது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. 50 தொகுதிகளா, 55 தொகுதிகளா என்பது இன்னமும் முடிவாகவில்லை. இந்த எண்ணிக்கையைவிட உள்ளாட்சித் தேர்தல் பற்றித்தான் கேள்விகளால் துளைக்கிறாராம் விஜயகாந்த்.


எழுதித் தருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், 25 சதவிகித இடங்கள் வரை தரலாம் என்றும் தி.மு.க தரப்பு சொல்லி இருக்கிறது. இவை அனைத்தும் மேலோட்டமாக நடக்கும் பேச்சுவார்த்தைகள்தான். ‘இது தேய்பிறை… வளர்பிறை வந்தபிறகு முடிவெடுத்துக்கொள்ளலாம்’ என்று விஜயகாந்த் சொல்லி வருகிறார். அவரது கட்சி மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள் இப்போதே தி.மு.க பிரமுகர்களிடம் தங்களது நட்பை புதுப்பிக்க ஆரம்பித்து உள்ளார்கள்.”
‘‘ஆனாலும் பி.ஜே.பி படையெடுப்பு தொடர்கிறதே?”
‘‘ஆமாம். அவர்கள் எப்படியாவது விஜயகாந்த்தை தங்கள் கூட்டணிக்குக் கொண்டுவரத் துடிக்கிறார்கள். விஜயகாந்த் வராவிட்டால் தேர்தலைச் சந்திப்பதே சிக்கலாக இருக்கும் என்று பி.ஜே.பி நினைக்கிறது. விஜயகாந்த் பிடியே கொடுக்கவில்லை. ‘உங்களுக்கு இப்போதுதான் என்னைத் தெரிகிறதா? ஜெயலலிதா கூட்டணி கிடையாது என்று சொன்னபிறகு என்னிடம் வருகிறீர்களா? நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தே.மு.தி.க-வை மதித்தீர்களா?, ஜெயலலிதாவை பார்க்க மோடியும் அருண்ஜெட்லியும் வருவார்கள்… என்னைப் பார்க்க ஜவடேகர்தான் வருவாரா?… என்றெல்லாம் விஜயகாந்த் கேட்கும் எந்தக் கேள்விகளுக்கும் பி.ஜே.பி தரப்பால் பதில் சொல்ல முடியவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் இறுதிக்கட்ட நகர்வுகள் இருக்கும்!”
‘‘ம்’’
‘‘கடந்த வாரம் ஜவடேகர் வந்தார். அப்போது தனியார் ஹோட்டலில் தங்கி இருந்தார். அவர் சரத்குமாரின் வீட்டுக்குப்போய் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது ஹோட்டலுக்குக் கீழே பத்திரிகையாளர்கள் காத்திருந்தார்கள். அவர் யாருக்கும் தெரியாமல் ஹோட்டலின் பின்வாசல் வழியாகப் போய்விட்டார். ‘ஒரு மத்திய அமைச்சர் இப்படி நடந்துகொள்ளலாமா?’ என்று பத்திரிகையாளர்கள் அப்போதே பாய்ந்தார்கள். 3-ம் தேதி மீண்டும் தமிழகம் வந்தார் ஜவடேகர். விமானநிலையத்தில் இருந்து பயணிகள் வெளியில் வரும் பாதையில் வராமல், உள்ளே செல்லும் பாதை வழியாக வெளியில் வந்தார். ஜவடேகர் சென்னைக்கு வந்ததே மாநிலத் தலைவரான தமிழிசைக்குத் தெரியாதாம்.”

[You must be registered and logged in to see this image.]
‘‘இதில் என்ன ரகசியம் வேண்டி இருக்கிறது?”
‘‘கடந்த முறை ஜவடேகர் சென்னை வந்து விஜயகாந்த்தை சந்தித்தபோது பத்திரிகையாளர்களிடம் ‘மத்திய அரசு அளித்த வெள்ள நிவாரண நிதியைத்தான் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் தமிழக அரசு தந்தது. மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் ஸ்டாம்ப் ஒட்டி தங்கள் திட்டம்போல சொல்லிக்கொள்கிறார்கள்’ எனச் சொன்னார். இதை ஜெயலலிதா எதிர்பார்க்கவில்லை. இப்படி பேசியதை டெல்லி பி.ஜே.பி தலைமையும் ரசிக்கவில்லை. அதனால்தான், இந்த முறை மீடியாவினர் தம் வாயை கிளறிவிடக் கூடாது என்பதற்காக ரகசியமாக வந்து சென்றாராம். கார்த்தி சிதம்பரம் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் கிளப்பியது அ.தி.மு.க. அதாவது, ஜவடேகர் கொளுத்திவிட்டுப் போன இரண்டு நாட்களிலேயே இப்படி கொதிப்பைக் காட்டி நாடாளுமன்றத்தை முடக்கியது. அ.தி.மு.க. பி.ஜே.பி-யும் தன் பங்குக்குச் சும்மா இருக்கவில்லை. ‘தமிழக மின் உற்பத்தியை மேம்படுத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் ஜெயலலிதா முன்வரவில்லை’ என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தன் பங்குக்குச் சீண்டினார். இவரும் தமிழக தேர்தல் பி.ஜே.பி பொறுப்பாளர்களில் ஒருவர். இப்படி நடக்கும் விஷயங்களை எல்லாம் பார்க்கும்போது அ.தி.மு.க-வுடன் பி.ஜே.பி சேராது என்பதுதான் சொல்லப்படும் செய்தி.’’
‘‘அப்படியானால், தே.மு.தி.க-வுடன் பி.ஜே.பி பேச்சுவார்த்தை தொடருமா?’’
‘‘ஒரு பக்கம் அதுவும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இரண்டாவது முறை ஜவடேகர் வந்தபோது, விஜயகாந்த்தை சந்திக்க முயன்றார். ‘சொந்தத் தொகுதியில் வேலை இருக்கிறது’ எனச் சொல்லி விஜயகாந்த் கிளம்பிப் போய்விட்டார். போகிற வழியில் சந்திக்கலாம் எனக் கேட்டிருக்கிறார்கள். அதன்பிறகுதான் அனைகை முருகேசன் எம்.எல்.ஏ-வுக்குச் சொந்தமான இடத்தில் வைத்து சந்திப்பு நடந்திருக்கிறது. அப்போதும் விஜயகாந்த் பிடி கொடுக்காமல் பேசியிருக்கிறார். இதற்குப் பின்னால், ஒரு காரணம் சொல்லப்படுகிறது. மச்சான் சுதீஷுக்கு, ‘ராஜ்ய சபா எம்.பி பதவி தந்து தனிப் பொறுப்புடன் கூடிய மத்திய அமைச்சர் பதவியைத் தாருங்கள்’ எனக் கோரிக்கை வைத்திருக்கிறார் விஜயகாந்த். அதோடு, ‘மனைவி பிரேமலதாவுக்கு அமைச்சர் பதவிக்கு சமமான வாரியப் பதவி ஒன்றை அளிக்க வேண்டும்’ எனவும் சொன்னாராம் விஜயகாந்த். இதை பி.ஜே.பி-யின் அகில இந்திய தலைவர் அமித்ஷாவிடம் சொல்லியிருக்கிறார்கள் தமிழக பொறுப்பாளர்கள். 
இன்னொரு மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு எம்.பி தேர்வு செய்ய முடியாது எனச் சொன்னாராம் அமித்ஷா. அதோடு, ‘தே.மு.தி.க தரப்பு கேட்டதை எல்லாம் கொடுத்தால் எத்தனை சீட் ஜெயிப்போம்’ எனக் கேள்வியை எழுப்பினார் அமித்ஷா. ‘50 சீட்டுகள் வரையில் ஜெயிக்கலாம்’ எனச் சொல்லியிருக்கிறார்கள். ‘அப்படி 50 சீட்டுகள் ஜெயிக்க முடியும் என்றால், அந்த 50 எம்.எல்.ஏ-க்களை வைத்தே ராஜ்ய சபா எம்.பி ஆகலாமே’ எனச் சொன்னாராம் அமித்ஷா. இந்த நிலையில்தான் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. அதனால்தானோ என்னவோ, தி.மு.க பக்கம் விஜயகாந்த் கிரீன் சிக்னல் காட்டத் தொடங்கிவிட்டாராம். ரிஷிவந்தியத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், ‘சீட்டுக்காக பேரம் பேசவில்லை’ எனச் சொல்லியிருக்கிறார்.’’

[You must be registered and logged in to see this image.]
‘‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் விடுதலை மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறதே?’’
‘‘அரசியல்தான் காரணம். ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவர்களில் முதலில் நளினியின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் தூக்குத் தண்டனையை, 2014-ல் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது உச்ச நீதிமன்றம். அந்த நேரத்தில் இவர்கள் 7 பேரையும் மொத்தமாக தமிழக அரசு விடுதலை செய்யும் என்று கெத்தாக அறிவித்தார் ஜெயலலிதா. ‘நாங்கள் 7 பேரையும் விடுதலை செய்யப் போகிறோம். அதுபற்றி மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு தனது கருத்தைத் தெரிவித்தாலும் சரி… தெரிவிக்கவில்லை என்றாலும் சரி… நாங்கள் இவர்களை விடுதலை செய்வோம்’ என்று தமிழக சட்டசபையில் அறிவித்தார் ஜெயலலிதா. 
உடனே விவகாரம் உச்ச நீதிமன்றம் போனது. இந்த விவகாரத்தில், மத்திய அரசின் அனுமதியைப் பெறாமல், மாநில அரசு 7 பேரையும் விடுதலை செய்ய முடியுமா? என்பதை முக்கியப் பிரச்னையாக்கியது மத்திய அரசு. இதில் 7 பேரின் விடுதலை பின்னால் தள்ளப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்ற 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 7 கேள்விகளை எழுப்பி, அதற்கு விடை தருமாறு உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள்கொண்ட அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது. அதே நேரத்தில், அரசியலமைப்புச் சட்டம் 161-ன்படி மாநில அரசு, இந்த 7 பேரையும் விடுதலை செய்தால், அதை யாரும் தடுக்க முடியாது. மாநில ஆளுநர், மத்திய அரசு மட்டுமல்ல… நீதிமன்றங்கள்கூட அதைத் தடுக்க முடியாது.
அதனால்தான், தன்னை 161-வது பிரிவைப் பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி தமிழக அரசுக்கு ஏற்கெனவே மனு அனுப்பி இருந்தார். அதில், இதுவரை தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் அது தொடர்பாக வழக்கும் தாக்கல் செய்துள்ளார். 
ஆனால், இதுவரை தமிழக அரசு அந்தச் சட்டப்பிரிவைப் பற்றி யோசிக்காமல், சிக்கல் நிறைந்த 435-வது பிரிவை வைத்துக்கொண்டே ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், திடீரென்று 7 பேரை விடுதலை செய்வதாகச் சொல்லி மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. இப்படி ஈழத்தாய் இமேஜை ஜெயலலிதா எடுப்பதற்குக் காரணமே தேர்தல்தான். ‘அரசியல் லாபம் தேடும் செயல்’ என ராமதாஸ் அறிக்கைவிட்டிருக்கிறார். ஆனால், ஜெயலலிதா எதைப் பற்றியும் கவலைப்படாமல் காய்கள் நகர்த்தி வருகிறார். இந்த ‘மூவ்’க்குக் காரணமும் உண்டு. தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு ஜெயலலிதா வைத்த செக்தான் 7 பேர் விடுதலை முடிவு. இதனால், தி.மு.க – காங்கிரஸ் கட்சிகள் மட்டுமல்ல… வைகோவும் அதிர்ச்சியில் இருக்கிறார். தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு செக் வைப்பதோடு ஈழ ஆதரவாளர்களின் ஓட்டுகளையும் அறுவடை செய்ய முடிவு எடுத்துத்தான் இப்படியொரு அதிர்ச்சி வைத்தியத்தை ஜெயலலிதா கொடுத்தார். ஒருவேளை, ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மத்திய அரசு 7 பேரையும் விடுதலை செய்தால், அது இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு சாதகங்களை உருவாக்கும். அதேநேரத்தில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு எதிர்மறையான நிலையை எடுத்து, 7 பேரையும் விடுதலை செய்ய அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தால், அதுவும் ஜெயலலிதாவுக்கு சாதகம்தான். மத்திய அரசின் மீது பழியைப் போடலாம்.’’

[You must be registered and logged in to see this image.]
‘‘தேர்தல் நேரத்தில்கூட அமைச்சர்களை பந்தாடுகிறாரே, ஜெயலலிதா?”
‘‘ரமணாவின் பதவி பறிக்கப்பட்ட சில நாட்களிலேயே சின்னையாவின் பதவியும் பறிபோயிருக்கிறது. இது இன்னும் தொடருமாம். ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன் ஆகியோரின் தீவிர விசுவாசிகள் மீதும் நடவடிக்கைகள் ஏற்கெனவே பாய்ந்தன. ஐவர் அணியினர் மட்டும் அல்ல… அனைத்து அமைச்சர்களும் பயத்தில்தான் இருக்கிறார்கள். இந்த ஐவர் அணியை நம்பி சீட் கேட்டு முதலீடு பண்ணியவர்கள் அனைவரும் பீதியில் இருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பதவி, அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இதனை புதுக்கோட்டை ஏரியாவில் கொத்தமங்கலம், அரையப்பட்டி, மரமடக்கி உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க-வினர் பலர், பட்டாசு வெடித்துக் கொண்டாடியிருக்கிறார்கள். பதவி பறிப்புக்கு முந்தைய வாரம்தான் தேர்தல் பிரசார வாகனத்தை ஜெயலலிதாவிடம் இருந்து விஜயபாஸ்கர் பவ்யமாக வாங்கினார். வாங்கிய கையோடு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவை பிரமாண்டமாக அசத்தியவரிடமிருந்துதான் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் புதுக்கோட்டை கறம்பக்குடி ஒன்றியத் தலைவர் கெங்கையம்மாளையும், அவரது கணவர் சொக்கலிங்கத்தையும் அமைச்சர் விஜயபாஸ்கர் சாதிப் பெயர் சொல்லித் திட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து முத்தரையர் சமூகத்தினர் கோபம், அ.தி.மு.க தலைமை மீது அதிகரித்தது. இதன்பிறகு முத்தரையர் சங்கத்தினரை கனிமொழி சந்தித்தார். முத்தரையர் ஓட்டுக்கள் சிதறும் என்பதால்தான், இப்போது விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது.’’
‘‘ம்’’
‘‘ஓ.பி.எஸ்., அவரது மகன் ரவீந்திரநாத்குமாருடன் மிக நெருக்கமாக இருப்பதால், அவர் மீதான சர்ச்சைகளை நீர்த்துப்போகச் செய்தவர் விஜயபாஸ்கர். இதற்குப் பிரதிபலனாக அவர் மீது எந்தப் புகாரும் கார்டன் கதவைத் தட்டாமல் போனதற்கு ஓ.பன்னீர்செல்வம், சேகர் ரெட்டி, ஐ.ஏ.எஸ் அதிகாரி ராமமோகன ராவ் ஆகியோர்தான் காரணமாம். ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்து வரும் தாம்பரம் நகர்மன்றத் தலைவர் கரிகாலனுக்கும் விஜயபாஸ்கருக்கும் நெருக்கம் அதிகமாம். ‘விஜயபாஸ்கர் தம்பி உதயகுமாரை, கரிகாலனின் தாம்பரம் அலுவலகத்தில் அடிக்கடி பார்க்கலாம். இவர் ஓ.பி.எஸ் மற்றும் விஜயபாஸ்கர் இருவரின் துறைகளிலும் தனி சாம்ராஜ்யமே நடத்தி வந்துள்ளார். இந்த மூவர் கூட்டணியில் கார்டனில் இருக்கும் முக்கியப் பிரமுகர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளார்’ எனச் சொல்கிறார்கள். ஆக, எந்த நேரத்திலும் விஜயபாஸ்கரின் அமைச்சர் பதவிக்கு பங்கம் வரலாம்’’ என்றபடி எழுந்த கழுகார், ‘‘விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கிற 11 தொகுதிகளுக்கு நான் சொல்கிறவர்களுக்குதான் சீட் கிடைக்கும் என வெளிப்படையாகவே சொல்லி வருகிறார் முன்னாள் அமைச்சர் பொன்முடி. முன்னாள் எம்.எல்.ஏ புஷ்பராஜுக்கு சீட் தரக் கூடாது என்பதில் பொன்முடி உறுதியாக இருக்கிறாராம். இப்படித்தான் எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தூத்துக்குடி பெரியசாமி போன்ற பெரிய தலைகள் எல்லாம் மற்றவர்களுக்கு சீட் கிடைத்துவிடாதபடி உறுதியாக இருக்கிறார்களாம்’’ என்றபடியே ஜூட் விட்டார்.
படங்கள்: வீ.நாகமணி, தி.ஹரிஹரன்




‘‘ஏய் பேச்சை நிறுத்து’’ அ.தி.மு.க. மேடையில் எதிர்க் குரல்
தே.மு.தி.க., தி.மு.க., பா.ம.க என எதிர்க் கட்சிகள் எல்லாம் காஞ்சிபுரத்தில் மாநாடு நடத்தி தங்கள் பலத்தைக் காட்டிவிட்டன. ஆளும் கட்சியான அ.தி.மு.க சும்மா இருக்குமா? உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியதற்காக ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து மகளிர் அணியை திரட்டி, கூட்டம் போட்டனர். ஆட்கள் இல்லாததால், காற்று வாங்கியது கூட்டம். பல இடங்களில் இருந்தும் ஆட்கள் திரட்டப்பட்டிருந்தனர். 
இதற்காகத் தனியார் கல்லூரிகளில் இருந்து பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அப்படி வந்தவர்கள், பொட்டலத்தைப் பிரித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ‘பிரியாணி போடுவதாகச் சொல்லி தக்காளி சாதம்தான் கொடுத்தாங்க’ என முணுமுணுப்புகள் கேட்டன. வந்து இறங்கிய மகளிர் அணியினருக்கு அம்மா குடிநீர் பாட்டில் ஒன்றும், பிஸ்கட் பாக்கெட் ஒன்றும் கொடுத்து அனுப்பிக்கொண்டிருந்தனர். இதற்காக ஆயிரக்கணக்கான அம்மா குடிநீர் பாட்டில்களைக் கொண்டு வந்திருந்தார்கள். ‘‘மேடைக்கு அருகே உள்ளவங்களெல்லாம் தயவுசெய்து, மேடைக்கு எதிரே போடப்பட்ட சேரில் வந்து உட்காரவும்… காவல் துறையினர்(!) அவர்களை அழைத்து வந்து மேடைக்கு எதிரே உட்கார வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என மைக்கில் சொல்லிக்கொண்டிருந்தார் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சோமசுந்தரம்.

[You must be registered and logged in to see this image.]
சமீபத்தில் தே.மு.தி.க-வில் இருந்து அ.தி.மு.க-வுக்குத் தாவிய முன்னாள் எம்.எல்.ஏ அருண் சுப்பிரமணியன் தனது உரையை ஒரு புத்தகமாகவே தயார்செய்து வந்திருந்தார். ‘ஓ.பன்னீர்செல்வத்தை, ‘ஜீரோ பன்னீர்செல்வம்’ என்று பிரேமலதா சொன்னார். அப்படி பேசிய நாக்கை, கழகத்தின் தொண்டர்கள் அறுத்துவிடுவார்கள். அம்மா ஆட்சியில் எந்த அமைச்சரும், ஒரு கிளைக் கழகச் செயலாளரைக்கூட தவறு செய்யவிட மாட்டார்கள். அப்படிச் செய்தால், உடனே கட்சிப் பொறுப்பில் இருந்து அம்மா தூக்கி எறிவார். 
தனிமனித ஒழுக்கம் சரி இல்லை என்பதால் பி.வி.ரமணா, ‘அம்மாவால் தூக்கி எறியப்பட்டார் என்று உங்களுக்குத் தெரியுமா?’ என பேசிக்கொண்டிருந்தபோது மேடையில் இருந்தவர்கள் எல்லாம் அதிர்ந்தார்கள். ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ ‘ஏய்’ என அதட்டினார். மேடை சலசலப்பானது. ‘அவரை முடிக்கச் சொல்லுங்க’ என மேடையில் இருந்த அமைச்சர்கள் வளர்மதி, எடப்பாடி பழனிச்சாமி, வைத்திலிங்கம் எல்லாம் பதறினார்கள். 
ஆனால், அருண் சுப்பிரமணியன் பேசிக்கொண்டே போனார். ‘மாஃபா’ பாண்டியராஜன் அவரது முதுகில் தட்டி முடித்துக்கொள்ளச் சொன்னார். ஆனாலும் தொடர்ந்தார். உத்திரமேரூர் எம்.எல்.ஏ கணேசன், அருண் சுப்பிரமணியன் அருகில் போய் நின்று அவரின் கை மீது அழுத்திப் பேச்சை நிறுத்தும்படி சொன்னார். ஆனாலும், அருண் சுப்பிரமணியன் தொடர்ந்தார். கோகுல இந்திரா அவர் அருகில் போய் பேச்சை, முடிக்கச் சொன்ன பிறகுதான் பேச்சை முடித்தார். 
அதன்பிறகு மேடையில் இருந்தவர்கள் அருண் சுப்பிரமணியத்தை வறுத்து எடுத்தார்கள்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum