TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Today at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழ் இலக்கிய ஜாம்பவான் ஜெயகாந்தன் காலமானார்: அவரைப் பற்றிய ஆவணப்பட வீடியோ இணைப்பு

Go down

தமிழ் இலக்கிய ஜாம்பவான் ஜெயகாந்தன் காலமானார்: அவரைப் பற்றிய ஆவணப்பட வீடியோ இணைப்பு Empty தமிழ் இலக்கிய ஜாம்பவான் ஜெயகாந்தன் காலமானார்: அவரைப் பற்றிய ஆவணப்பட வீடியோ இணைப்பு

Post by ஜனனி Thu Apr 09, 2015 6:43 am

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, நவீன தமிழ் இலக்கியத்தின் பிதாமகரான ஜெயகாந்தன் உடல் நலக் குறைவால் நேற்றிரவு 9 மணிக்கு காலமானார். 81 வயதான ஜெயகாந்தனின் ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு கலை இலக்கியப் பிரமுகர்கள் நேரில் சென்றும் சமூக வலை தளங்களின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சமூக விமர்சனத்துடன் கூடிய தனது செறிவான எழுத்துகளால் ஆயிரக்கணக்கான இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழின் ஆகச்சிறந்த படைப்பாளியான ஜெயகாந்தன் இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருது, சாகித்திய அகாதமி, பத்ம பூஷண் என்று பல விருதுகளைப் பெற்றவர்.
தமிழ் இலக்கிய ஜாம்பவான் ஜெயகாந்தன் காலமானார்: அவரைப் பற்றிய ஆவணப்பட வீடியோ இணைப்பு 11130101_973291786023647_3801577542893777314_n
ஏப்ரல் 24, 1934 -ம் ஆண்டு கடலூரில் எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்த ஜெயகாந்தன், சிறு பிராயத்திலேயே பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் என்று பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பயணித்த ஜெயகாந்தன், தான் செயல்பட்ட கட்சிகளின் மீதான தனது கறாரான விமர்சனத்தையும் முன்வைக்கத் தவறாதவர்.

1950 களிலிருந்து தனது இலக்கியப் பிரவேசத்தைத் தொடங்கிய ஜெயகாந்தனின் ’அக்கினிபிரவேசம்’ என்ற சிறுகதை தமிழ்ச்சூழலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய ஒரு படைப்பு, ஒரு ’நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் என்று காலத்தால் அழியாத பல காத்திரமான படைப்புகளைத் தந்த இவர், இலக்கியம் மட்டுமின்றி உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான், போன்ற கலைத்தன்மை வாய்ந்த திரைப்படங்களையும் இயக்கியவர். இதில் உன்னைப் போல் ஒருவனுக்காக சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றவர்.

சமூகத்தில் எழுத்தாளர்களுக்கென்று ஒரு தனி மரியாதையை உருவாக்கித் தந்த ஜெயகாந்தன். சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து தனது இலக்கியப் படைப்புக்களுக்கான கச்சாப் பொருளைப் பெற்றவர். இது குறித்து அவர் ஒரு நேர்காணலில் கூறுகையில் “நான் பிழைப்புக்காக என்னென்ன செய்திருக்கிறேன் என்றொரு நினைவுப் பட்டியல் போட்டால்… மளிகைக் கடைப் பையன், ஒரு டாக்டரின் பை தூக்கும் உத்தியோகம், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரை சென்டிரல் சினிமாவில் ’வேலைக்காரி’ சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் எஞ்சினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது….ஃபுரூஃப் ரீடர், பத்திரிக்கை உதவி ஆசிரியர்… “ என்று நீளும் இந்தப் பட்டியலின் வழி அவரது வாழ்வின் தரிசனத்தைப் புரிந்து கொள்ள முடியும்.  

தீவிரமாக எழுதிக் கொண்டிருந்த இவர் கடந்த 25 வருடங்களாக எதுவும் எழுதவில்லை. அதைப் பற்றி கேட்கையில் ”எழுத்து என்ன தோசையா தினமும் சுட்டு போடறதுக்கு” என்று எள்ளலுடன் கூடிய அர்த்தமுள்ள பதிலைத் தந்தவர். இந்த வெளிப்படைத் தன்மைக்காகவே பலராலும் விமர்சனத்துக்கு உள்ளானவர்.

இவரைப் பற்றி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கூறுகையில் "பாரதியார் வாழ்ந்த காலங்களில் கௌரவிக்கப்பட்டதில்லை. லியோ டால்ஸ்டாய் (ரஷ்ய எழுத்தாளர்) நோபல் பெறாதவர். ஜோர்ஜ் லூயிஸ் போர்ஹே நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டவர். விருதும் கௌரவமும் சரியான நேரத்தில், சரியான நபருக்கு, சரியான அமைப்புகளால் வழங்கப்படுவது ஒரு போதும் நிகழ்வதில்லை. அதற்காக விருதுகளால் மட்டுமே எழுத்தாளர்கள் கௌரவம் அடைவதுமில்லை. ஜெயகாந்தன் எல்லா விருதுகளுக்கும் தகுதியானவர். எல்லா விருதுகளைத் தாண்டியும் மிகுந்த ஆளுமையும் உயர்வும், தனித்துவமும் கொண்டவர்."

ஜெயகாந்தனின் கவிதை வரிகளே இந்த நாளில் இந்தக் கட்டுரைக்கு பொருத்தமான முடிவாக இருக்க முடியும்.

”வாழ்வதன் முன்னம் நான் செத்திருந்தேன் செத்ததன் பின்னாலும் வாழ்ந்திருப்பேன்............”
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பெருந்தலைவர் காமராஜ் காமராஜரின் 111வது பிறந்த நாளையொட்டி அவரைப் பற்றிய 111 தகவல்கள்
» தமிழ் படங்களில் கூட பாத்திருக்க முடியாத மிகவும் கொடூரமான சண்டைகாட்சி (வீடியோ இணைப்பு)
» மூன்றுஅமைச்சர்களும் ரசித்து பார்த்த செக்ஸ் வீடியோ இதுதான் !! (வீடியோ இணைப்பு)
» இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கும் இரசாயன ஆயுதங்கள் பற்றிய ஆவணப்பட குற்றச்சாட்டு!
» கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் நாமல் ராஜபக்சவுடன் கும்மாளம் போட்ட நடிகை அசின் வீடியோ வெளியாகியது (வீடியோ இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum