TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஜெயலலிதா மீதான பழிவாங்கல்-நீதிபதி குங்கா உண்மையானவரா? உண்மை என்ன? -நேற்றைய தொடர்ச்சி-

Go down

ஜெயலலிதா மீதான பழிவாங்கல்-நீதிபதி குங்கா உண்மையானவரா? உண்மை என்ன? -நேற்றைய தொடர்ச்சி- Empty ஜெயலலிதா மீதான பழிவாங்கல்-நீதிபதி குங்கா உண்மையானவரா? உண்மை என்ன? -நேற்றைய தொடர்ச்சி-

Post by sakthy Wed Oct 01, 2014 8:42 pm

ஜெயலலிதா மீதான பழிவாங்கல்-நீதிபதி குங்கா உண்மையானவரா?

நேற்றைய வேண்டுகோள் ஒன்றில் இணையங்கள்,ஊடகங்கள் சில அரசியல் வெறுப்புணர்ச்சி ,பழிவாங்கல், அரசியல் ஆதாயம் போன்றவற்றுக்காக பொய்யான செய்திகளை வெளியிடுவதால், உண்மையான செய்திகளை நாகரீகமாக முறையில் பதிவிடவும் என்று கூறி இருந்தேன்.
இது ஒரு ஆய்வே தவிர பொய்யான செய்தி அல்ல.

ஜெயலலிதா மீது தண்டனை விதிக்கப்பட்ட விதமும்,அதன் பிறகு அவருக்கு நடக்கும் நிகழ்வுகளும் -

சுப்ரமணிய குன்ஹா என்கிற ஒருமித்த சக்தி ஒன்றைப்பற்றி,நேற்றைய செய்தி ஒன்றின் மூலம் தெரிய வருகிறது.

ஏதோ ஒரு கோர்ட்டில் பதிவாளராக ( கவனிக்கவும் -நீதிபதியாக அல்ல பதிவாளராக ) பணி செய்துகொண்டிருந்தவர்10 மாதங்களுக்கு முன்னர் இந்த வழக்கை -எப்படியாவது-விரைவில் முடிக்க வேண்டும் என்கிற உத்திரவுடன் (?) அனுப்பப்படுகிறார்.

அதன் பிறகு வழக்கு புதிய வேகத்துடன், வித்தியாசமான அணுகுமுறையுடன் முன்னேறுகிறது – முடிகிறது….!!!

பொதுவாக, கிரிமினல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்படுவது குறித்து – சுப்ரீம் கோர்ட் சில நடைமுறைகளை அறிவித்திருக்கிறது.

வழக்கு விசாரணகள் முடிந்த பிறகு, ஒரு நாள் குறித்து, குற்றம் சாட்டப்பட்டவரை நேரடியாக கோர்ட்டுக்கு வரவழைத்து - அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்கள் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபிக்கப்பட்டு விட்டன என்றும், அந்த கோர்ட்
அவரை “குற்றவாளி” என்று தீர்மானிப்பதாகவும் அறிவித்து விட்டு, தீர்ப்பு கூற மற்றொரு நாளைக் குறித்து, தனக்கு விதிக்கப்படும் தண்டனை பற்றி குற்றவாளி ஏதேனும் கூற விரும்பினால், கூறலாம் -கோர்ட் அதை அனுமதிக்கிறது என்று கூற வேண்டும்.

பின்னர் குற்றவாளி தண்டனை பற்றிய தனது வேண்டுகோளை முன்வைக்கலாம். அதன் பின்னர் அடுத்த நாளில், அல்லது குறிப்பிடப்படும்` வேறோரு நாளில் தண்டனையை அறிவிக்க வேண்டும். இது தான் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ள நடைமுறை.

இந்த வழக்கில் இந்த நடைமுறை சுத்தமாக மீறப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு கோர்ட்டுக்கு வரவழைக்கப்பட்டவர் மாலை 5.30 மணி வரை அங்கேயே தங்க வைக்கப்பட்டு, அதன் பின்னர் அன்றே – தண்டனையை நிறைவேற்றும் சடங்கு முடிகிறது.

அதாவது சனிக்கிழமை முகூர்த்தம் குறித்து, (மறுநாள் ஞாயிறு – அப்பீலுக்குப் போக முடியாது – அதன் பிறகும் ஒருவாரம் தொடர்ச்சியாக தசரா விடுமுறை) நேரடியாக
சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

ஒரு மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் - முதலமைச்சராக கோர்ட்டுக்கு வருபவர், தண்டனை விதிக்கப்பட்டு நேரடியாக சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார் என்றால் - தனது அரசியல் சட்ட பொறுப்புக்களை பின் ஒப்படைக்க கால அவகாசம் கொடுக்க வேண்டாமா ? நாள் கணக்கில் இல்லாவிடிலும் குறைந்த பட்சம் ஒரு 2 மணி நேரமாவது தன் சகாக்களிடம் மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ய அனுமதியளிக்க வேண்டாமா …?

தண்டனையை விதித்த பிறகு, நீங்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளவும், உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெறவும் வசதியாக உங்களுக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கப்படுகிறது - என்று சொல்லி இருந்தால் – கோர்ட்டின் பாரபட்சமின்மையை புரிந்து கொள்ள முடியும் …?

இந்த அணுகுமுறை இல்லாமல்  போனது ஏன் …? சட்டத்தில் இதற்கு நிச்சயம் இடம் இருக்கிறது -ஆனால் ஆணை இடுபவர் மனதில் இல்லாமல் போனது ஏன் ….?

சரி – சிறைக்குச் சென்ற பிறகும் ஏன் இத்தனை கெடுபிடிகள்…? முதலமைச்சர் பொறுப்பில் இருந்தவரை நேரடியாக காராக்கிருகத்துக்கு கொண்டு வந்து விட்டார்கள் – அவர் பார்த்துக்கொண்டு வந்த பல பொறுப்புகள் பாதியில் இருக்கும். அதனை முழுமையாகச்
செய்ய ஆலோசனை பெற ஒரு மாநிலத்தின் தலைமைச்செயலாளர் வந்தால், அவரை பார்க்க அனுமதிக்க மறுத்தது ஏன் …?

ஒரு நாள் முழுவதும், கிட்டத்தட்ட 7 மணி நேரம், ஒரு மாநிலத்தின் தலைமைச்செயலரையும், ஆலோசகரையும் – சிறை வாசலில் நிற்கவைத்து திருப்பி அனுப்பி – அவமதித்தது ஏன் …?

சரி – மறுநாள் ஜாமீனுக்கு பெட்டிஷன் கொடுத்தால், அதற்கடுத்த நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சொல்லி விட்டு, மறுநாள் விசாரணைக்கு வந்தால் – மீண்டும் அடுத்த வாரம் தான் விசாரணை என்று சொன்னது என்ன காரணத்தால்….?

அரசாங்க வக்கீலுக்கு உரிய நேரத்தில் அனுமதி உத்தரவு கொடுக்காதது ஏன்…? இது கவனக்குறைவா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா….?

தனியாக ஒரு வக்கீல் நியமிக்கப்படாத நேரங்களில், கோர்ட்டில் வழக்கமாகச் செயல்படும் state govt.standing counsel தானாகவே இந்த வழக்கிலும் சேர்த்துக்கொள்ளப் படுவது தான் மரபு. இல்லையென்றால், அட்வகேட் ஜெனரலுக்கு தகவல் போகும். உரிய நேரத்தில் யாராவது ஒரு அரசு வக்கீல் அனுப்பப்படுவார்…அது இங்கே நடக்காதது ஏன் …?

மீண்டும் பதிவாளரைப் பார்த்து விசேஷ அனுமதி கோரி, அரசு வக்கீலுக்கும் ஆணை வந்து, கோர்ட் கூடினால் - வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலே - அடுத்த வாரம் ரெகுலர் கோர்ட் விசாரிக்கும் என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்……

முக்கியமான வழக்கு – ரெகுலர் கோர்ட் தான் விசாரிக்க வேண்டும் என்பது கோர்ட்டுக்கு வரும் முன்பு தெரியாதா ? அல்லது பதிவாளருக்குத்தான் தெரியாதா ?

முன்னதாகவே தலைமை நீதிபதியிடம் கலந்து ஆலோசனை செய்திருக்க மாட்டார்களா ..?

ஏன் எல்லாரையும் வரவழைத்து அவமானப்படுத்த வேண்டும் …?
ஏன் டென்ஷனை, பரபரப்பை அதிகரிக்க வேண்டும்….?

எல்லாருக்கும் இன்று வெளியே வந்து விடுவார் என்கிற எதிர்பார்ப்பை உண்டு பண்ணி விட்டு, பின்னர் மீண்டும் தள்ளிப் போடுவதன் பின்னணி என்ன ….? வேறு எங்கிருந்தாவது உத்திரவு எதாவது எதிர்பார்க்கப்படுகிறதா …?

இப்படி மாற்றி, மாற்றி இழுத்தடித்தால் – ஏற்கெனவே கொதித்துப் போயிருக்கும் கட்சித் தொண்டர்களிடம் இது டென்ஷனை அதிகரிக்காதா ?
அல்லது வன்முறையைத் தூண்ட வேண்டும் என்பது தான் உத்தேசமா…?
வன்முறையைத் தூண்டி ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முயற்சியா?

இரண்டு மாநிலங்களுக்கிடையே ஏற்கெனவே ஏகப்பட்ட பிரச்சினைகள். காவிரி நீர் சம்பந்தமாக தகராறுகள்…. கோர்ட் வழக்குகள். கர்நாடகா அரசுக்கு தமிழ்நாட்டின் மீதும், சிறையில் இருக்கும் செல்வி ஜெயலலிதா மீதும் ஏகப்பட்ட காழ்ப்புணர்ச்சி….

இந்த நிலையில் – உணர்வுகளுடன் விளையாடும் இத்தகைய செயல்கள் இயல்பானவை தானா ?

கர்னாடகா அரசில் அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வெறுப்பு…. காங்கிரஸ் தலைமைக்கு சொல்லோணா வெறுப்பு …

சு.சு.வின் மறைமுக சித்து வேலைகள் தொடர்கின்றன…. இத்தனையையும் வாய் திறவாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது பாஜக தலைமை … ஏன்?

காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை என்று மாறி மாறி தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் - அம்மா போனால் – திண்ணை நமக்குத்தான் என்று ஆவலுடன் காத்துக் கிடக்கிறது தமிழக பாஜக.
இவர்கள் அத்தனை பேரும், தனித்தனியாகவும், கூட்டாகச் சேர்ந்தும் செய்வது -
‘அப்பட்டமான பழிவாங்கல்’ அல்லாமல் வேறென்ன…..???

குற்றவாளியா இல்லையா என்பது வேறு பிரச்சனை. நடந்தவை எல்லாம் சட்டப்படி நடந்தனவா? நீதியின் படி நடந்தனவா? மனச்சாட்சியின்படி-ஒன்று இருந்தால்- நடந்ததா? இப்படிப் பல கேள்விகள் நடு நிலையாளர்கள் மனத்தில்  எழவே செய்கிறது.

அதே சமயம் நக்கீரன் கோபாலின் பிரச்சனை, கருணாநிதி கைது,வேண்டாதவர்கள் மீதான பழிவாங்கள், நளினி போன்றவர்கள் மீதான கருணையற்ற செயல், ஈழத் தமிழர்கள் முகாம்களில் நடக்கும் பொலீசாரின் அராஜகச் செயல்களைக் கண்டு கொள்ளாதது, முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்பு,குற்றமற்ற வயதான நெடுமாறனை சிறையில் தள்ளியது இப்படி எத்தனையோ அருவருத்தக்க செயல்கள் இருந்தாலும், நடு நிலை என வரும் போது கேட்க வேண்டியவை பல உள்ளன.

இருந்தாலும் தாத்தா வாயை திறக்கவில்லையே!


Last edited by sakthy on Thu Oct 02, 2014 1:12 pm; edited 1 time in total
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

ஜெயலலிதா மீதான பழிவாங்கல்-நீதிபதி குங்கா உண்மையானவரா? உண்மை என்ன? -நேற்றைய தொடர்ச்சி- Empty Re: ஜெயலலிதா மீதான பழிவாங்கல்-நீதிபதி குங்கா உண்மையானவரா? உண்மை என்ன? -நேற்றைய தொடர்ச்சி-

Post by sakthy Thu Oct 02, 2014 1:10 pm

கர்னாடகா அரசு பழி தீர்த்துக்கொள்கிறது என்று நான் சொல்வதற்கு மிக வலுவான காரணம் ஒன்று இருக்கிறது.

நடுநிலையோடு நடந்து கொள்ள கர்னாடகா அரசு நினைத்திருந்தால் – அது ஜாமீன் மனுவை எதிர்த்திருக்கக் கூடாது.
ஜாமீன் பெறுவது என்பது தண்டனை பெற்றவர்களுக்கு சட்டம் அளிக்கும் ஒரு உரிமை. அதை உரிய முறையில் கேட்டுப்பெற எல்லா குற்றவாளிகளுக்கும் உரிமை உண்டு.

சாதாரணமாக எல்லா வழக்குகளிலும் அரசு தரப்பு ஜாமீன் மனுவை எதிர்ப்பதில்லை -

குற்றவாளிகள் சாட்சியத்தை கலைத்து விடக்கூடிய வாய்ப்பு இருக்கும் போதும், ஜாமீனில் விட்டால் தப்பியோடி விடுவார் என்று கருதப்படும்போதும், மிகக்கொடிய (கொலை, சதி போன்ற) குற்றங்களில் சம்பந்தப்பட்டிருக்கும்போதும் தான் ஜாமீன் கோரிக்கையை அரசு தரப்பு எதிர்க்கும்.

- இந்த காரணங்கள் எதுவுமே, ஜெயலலிதா அவர்களின் வழக்கில்
பொருந்தாது. 18 ஆண்டுகளில் கலைக்காத சாட்சியங்களையா
அவர் புதிதாகக் கலைக்ககூடும்…? மேலும், ஆவணங்கள் அனைத்தும்
ஏற்கெனவே நீதிமன்றத்தின் கஸ்டடியில் தான் இருக்கின்றன.
மேலும், உயர்நீதி மன்ற அப்பீலில் ஆவணங்களும், வக்கீல்களின்
வாதங்களும் மட்டுமே இடம் பெறும்.

- எனவே கர்னாடகா அரசு மிகுந்த காழ்ப்புணர்ச்சியோடு, பழி தீர்த்துக் கொள்ளூம் விதத்தில் தான் ஜாமீன் மனுவை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது என்பது வெளிப்படை. வக்கீல் பவானி சிங் செயல்பட்டது கர்னாடகா அரசின் உத்திரவின்படி தான்.

ஜெயலலிதா அவர்களுக்கும், கர்னாடகா அரசுக்கும் சொந்தப்பகை
எதுவுமில்லை. காவிரிப் பிரச்சினை தான் அவர்களது இடையே
உள்ள பகைக்கு காரணம். காவிரி நீர் வழக்கு தமிழ் நாட்டின் பிரச்சினை.
எனவே, இந்த கோணத்தில் பார்த்தால், தமிழ் நாட்டு மக்களை
தண்டிக்க வாய்ப்பில்லாத சமயத்தில் ஜெயலலிதா அவர்கள் மாட்டினார் – அவர்கள் பழி தீர்த்துக்கொள்கிறார்கள்….

வழக்கின் நியாயம், தண்டனையின் நியாயம் – எப்படி இருந்தாலும்,
கர்னாடகா செய்தது ஒரு பழிவாங்கும் செயல்தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. (காங்கிரஸ் தலைமையும், காங்கிரஸ் ஆட்சியும் என்பதும் ஒரு காரணம்….)
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடுமையான தண்டனை: நீதிபதி குன்கா விளக்கம்
» ஜெயலலிதா அவர்களுக்கு நிகழ்வது அப்பட்டமான பழிவாங்கல் -தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பு அமெரிக்கவில் இருந்து மோடிக்குக் கடிதம்.
» சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் - அதிரும் உண்மை.....
» தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்க. ''28, 29'' . 9 . 2012 ஆகிய இரண்டு நாட்கள் நடந்த தீர்ப்பாயத்தின் முடிவில் நீதிபதி அவர்கள் வழங்கிய உத்தரவு ...
» ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி நியமனம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum