TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழகத்தில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் உணவு வழங்க புதிய திட்டம்

Go down

தமிழகத்தில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் உணவு வழங்க புதிய திட்டம் Empty தமிழகத்தில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் உணவு வழங்க புதிய திட்டம்

Post by மாலதி Thu Jul 31, 2014 7:17 am

சென்னை, ஜூலை.30-
தமிழகத்தில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் உணவு வழங்க புதிய திட்டம் 8b63f605-f760-4437-920b-063dc1f762b3_S_secvpf
நீண்ட தூர ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு விற்பனை செய்வதற்காக ஒரு சில ரெயில்களில் ‘உணவு தயாரிக்கும் ரெயில் பெட்டி’ இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த பெட்டிகளில் ரெயில் ஓடிக்கொண்டிருக்கும் போதே உணவுகள் தயாரித்து, பயணிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை விரும்பாத பயணிகள் ரெயில் நிற்கும் ரெயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். 

ஆனால் சமீப காலமாக இவற்றில் தரம் குறைவு, விலை அதிகம் என்பதால் பயணிகள் இவற்றை விரும்புவதில்லை. இதனால் பயணிகள் பயணிக்கும் முன்பே தங்கள் வீடுகளில் இருந்து உணவு பொருட்களை எடுத்து வந்து சாப்பிடுகின்றனர். பயணத்தின் போது ஒரு வேளை சாப்பாடு என்றால் வீட்டில் இருந்து கொண்டுவரமுடியும். ஆனால் நீண்ட தூர ரெயில்களில் நாள் கணக்கில் பயணம் செய்யும் பயணிகள் வீடுகளில் இருந்து சாப்பாடு கொண்டு வரமுடியாது என்பதால் அவர்களின் நிலை தான் பரிதாபமாக உள்ளது. 

இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்துக்கும் பயணிகள் தரப்பில் மாற்று ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று ரெயில்வே நிர்வாகம் புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- 

வடமாநிலங்களில் பெரும்பாலான ரெயில்கள் செல்லும் பாதையில் உள்ள பெரிய நகரங்களில் உள்ள ஓட்டல்களின் பட்டியல் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஓட்டல்களில் இருந்து தேவையான உணவுகளை குறிப்பிட்ட ரெயில் நிலையத்திற்கு கொண்டு தருவதற்கு இணையதள முகவரிகளை அளித்துள்ளன. அந்த முகவரிக்கு லேப்-டாப் அல்லது செல்போனில் எஸ்.எம்.எஸ். மற்றும் தொலைபேசி மூலம் தங்களுடைய டிக்கெட்டின் பி.என்.ஆர். எண்ணுடன் தேவைப்படும் உணவு வகைகள் குறித்து ஒரு மணிநேரத்தில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்பு வரை தகவல் தரும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த முறை வடமாநிலங்களில் குறிப்பாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய பகுதிகளில் இயக்கப்படும் ரெயில் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு சற்று கூடுதலான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப வடமாநிலம், தென்மாநிலம், குஜராத், சைனீஸ் மற்றும் ஜெயின் உணவுகள் தரமான வகையில், சூடான உணவுகளை வினியோகிக்கின்றனர். 

சிலநேரங்களில் ரெயில் காலதாமதமாக வருவதாக இருந்தால் பயணிகள் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட ஓட்டல்களுக்கு தகவல் தெரிவித்தால், ரெயில் வரும் நேரத்தில் சூடான உணவுகளை வழங்குகின்றனர். இதற்காக நாடு முழுவதும் 170 ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு உணவு வழங்குவதற்காக 300 ஓட்டல்களில் ரெயில்வே நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் தினசரி 8 ஆயிரம் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

பெரும்பாலான உணவுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சராசரியாக மொத்த கட்டணத்தில் 20 சதவீதம் கமிஷன் பெறப்படுகிறது. தெற்கு ரெயில்வேயை பொருத்தவரையில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், குருவாயூர், அனந்தபுரி, நெல்லை, முத்துநகர், ராமேஸ்வரம், வைகை, பல்லவன் போன்ற ரெயில்களில் இந்த திட்டம் மூலம் பயணிகளுக்கு தரமான உணவு வழங்கும் முறை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது. 

மலைக்கோட்டை ரெயில் சென்னையிலும், திருச்சியிலும் இரவு நேரத்தில் புறப்படுவதால் இந்த ரெயிலில் இந்த திட்டம் அறிமுகப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறைவாகவே இருக்கிறது. அறிமுகப்படுத்த வாய்ப்புள்ள அனைத்து ரெயில்களிலும் இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து முறையான உத்தரவுகள் ரெயில்வே துறையிலிருந்து பெறப்படவில்லை. உத்தரவு பெற்ற உடன் திட்டம் உடனடியாக தொடங் கப்படும், அதற்கு தயார் நிலையில் இருக்கிறோம். 

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இனி 1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார், தயிர் சாதம்: தமிழகத்தில் புதிய திட்டம்
» 56 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்
» தமிழகத்தில் கன மழைக்கு 10 பேர் பலி: நிவாரண உதவிகள் வழங்க அரசு உத்தரவு
» மண்டபம் அகதி முகாமில் பசியால் அலறும் குழந்தைகள்! உணவு வழங்க மறுத்த அதிகாரிகள்
» தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த பின்னரும் இலவச கலர் "டிவி' வழங்க திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum