TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கல்விக் கொள்ளைக்கு சவுக்கடி கொடுத்த கட்டண நிர்ணயம்!

Go down

கல்விக் கொள்ளைக்கு சவுக்கடி கொடுத்த கட்டண நிர்ணயம்! Empty கல்விக் கொள்ளைக்கு சவுக்கடி கொடுத்த கட்டண நிர்ணயம்!

Post by rose Thu May 13, 2010 5:39 pm

கல்விக் கொள்ளைக்கு சவுக்கடி கொடுத்த கட்டண நிர்ணயம்! Mk-stalin-with-childrenசங்க
என்ற படத்தில் ஒரு வசனம் வரும்… ‘டொனேஷன், டெர்ம் பீஸ், ட்யூஷன், அதிலும்
ஸ்பெஷல் ட்யூஷன்… என புடுங்கறான் புடுங்கறான் புடுங்கிகிட்டே இருக்கான்
புடுங்கி’ என்பார் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையில் பாதிக்கப்பட்ட
ஒரு தந்தை. அந்த வசனத்துக்கு திரையரங்கில் கிடைத்த கைத்தட்டலே, மக்களின்
நொந்த மனதுக்கு சாட்சி.
கல்வியை உச்சலாபம் வைத்து விற்கும் இழிபிறவிகளை விட மோசமான ஜென்மங்கள்
உலகில் யாரும் இருப்பார்களா என்று கேட்டால், இல்லையென்றே சொல்வேன். ஔவை
சொன்ன இழிகுலத்தோர் வேறு யாருமல்ல… இவர்கள்தான்.
திருட்டு அரசியல்வாதிகள், போலிச் சாமியார்கள், நாட்டை ஏய்க்கும்
தொழிலதிபர்கள்… இவர்களுக்கெல்லாம் மேலான ஒரு மோசடிக் கும்பல் உண்டென்றால்
அது கல்வியை விற்கும் தனியார் பள்ளிகள் மற்றும் அவற்றை நடத்தும் மோசடி
ட்ரஸ்ட்கள்தான்.
வகுப்பறைக்குள் நுழைந்ததிலிருந்து பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் ஒரு
நாளில் அல்லது வாரத்தில் நிச்சயம் ஒரு முறை ஏதாவது ஒரு காரணம் சொல்லி பணம்
கறந்துவிடும் பள்ளிகள் ஏராளம். இந்த தனியார் பள்ளிக்கூட தூண்களில்
சாய்ந்து நின்றால்கூட காசு கொடுங்க என்று கையில் பிரம்போடு நிற்பார்கள்
போலிருக்கிறது. அப்படி ஒரு கொள்ளை, கட்டணம் என்ற பெயரில் பல ஆண்டுகளாக
நடந்து வருகிறது.
புரசைவாக்கத்தில் ஒரு பள்ளியில் ப்ரீ கேஜி அட்மிஷனுக்கு ரூ 50 ஆயிரம்
நன்கொடை தந்தால்தான் உண்டு. சேத்பட்டில் உள்ள அந்த புகழ்பெற்ற பள்ளியில்
ரூ ஒன்று முதல் 3 லட்சம் வரை நன்கொடை தர வேண்டும். இங்கெல்லாம் சாமானியன்
வீட்டுப் பிள்ளை படிக்கவே முடியாது.
புறநகர்ப் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் அடிக்கும் கொள்ளை சொல்லி
மாளாது. இங்கெல்லாம் கௌரவத்துக்காக பிள்ளைகளைச் சேர்க்கும்
நடுத்தரவாசிகள்தான் பலியாடுகள்.
எத்தனையோ ஆண்டுகள் எத்தனையோ தனி நபர்கள், அமைப்புகள் முறையிட்டும்
தனியார் பள்ளிகளின் கட்டணங்கள் முறைப்படுத்தப்படாமலேயே இருந்தன. ஆனால்
திமுக அரசு சற்றுத் துணிந்து இந்தக் கொள்ளைக்கு ஒரு கடிவாளம் போட்டுள்ளது.
நீதிபதி கே கோவிந்தராஜன் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து தனியார்
பள்ளிகளுக்கு கட்டணங்களை நிர்ணயித்துள்ளது. இதுகூட சற்று அதிகமான கட்டணம்
என்றாலும், இதற்கு முன் அடிக்கப்பட்ட கொள்ளையோடு ஒப்பிட்டால் எவ்வளவோ
பரவாயில்லை எனும் அளவு நியாயமான கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது. இந்த
கட்டண நிர்ணயம் மற்றும் அதில் அரசு காட்டிய உறுதி நிச்சயம் தனியார் பள்ளி
முதலாளிகளுக்கு பெரிய இடியாகத்தான் இருந்திருக்கும்.
இந்​தக் கட்​ட​ணங்​களை தமிழகத அரசு ஏதோ குத்துமதிப்பாக
நிர்ணயிக்கவில்லை. மிகப்பெரிய ஆய்வுக்குப் பிறகு அறி​வி​யல்​பூர்​வ​மாக,​​
ஒவ்​வொரு பள்​ளிக்​கு​மா​கத் தீர்​மா​னிக்​கப்​பட்​டவை என்பது
குறிப்பிடத்தக்கது.
துணை முதல்வர் ஸ்டாலின் வார்த்தையில் சொல்வதென்றால், “ஒவ்​வொரு
பள்​ளி​யும் கொண்​டி​ருக்​கும் இடத்​தின் பரப்​ப​ளவு,​​ கட்​ட​டங்​க​ளின்
அளவு,​​ உள்​கட்​ட​மைப்பு வசதி,​​ தள​வாட வச​தி​கள்,​​ ஆய்​வுக்​கூ​டம்,​​
நூல​கம்,​​ பணி​யா​ளர்,​​ ஆசி​ரி​யர்​கள் எண்​ணிக்கை ஆகி​ய​வற்​றைக்
குறித்து அந்​தந்​தப் பள்​ளி​யி​ட​மி​ருந்து தக​வல் பெற்று
அளிக்​கு​மாறு,​​ தமி​ழ​கத்​தின் அனைத்து மாவட்​டங்​க​ளி​லும் உள்ள
முதன்மை கல்வி அலு​வ​ல​ருக்கு ஒரு படிவத்தை நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி
வழங்​கி​யது.
இந்​தப் படி​வங்​களை 10,934 பள்​ளி​கள் பூர்த்தி செய்து தந்​தன.​ 701
பள்​ளி​கள் இப்​ப​டி​வங்​களை இது​வரை பூர்த்தி செய்து தரவே இல்லை.​ ஆனால்
அதற்காக அப்படியே விட்டுவிடாமல், படிவங்கள் தராத பள்ளிகள் பற்றியும்
விசாரித்து, அவற்றின் தரம், தேவைக்கேற்ப ஓராண்டுக்கான கட்டணங்களை
நிர்ணயித்துள்ளது அரசு. பள்ளியை நடத்தும் தாளாளருக்கு எவ்வளவு லாபம்
என்பதையும் நிர்ணயித்து, அதை கட்டணத்துடன் சேர்த்துள்ளது அரசு. நிச்சயமாய்
இந்தக் கட்டண விகிதப்படி வசூலித்தால் பள்ளியை நடத்துபவருக்கு எந்த
நஷ்டமும் வராது.
அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்கள் விவரம் இது: அதி​க​பட்​ச​மாக மேனி​லைப்
பள்​ளி​யில் ரூ.​ 11,000,​ உயர்​நி​லைப் பள்​ளி​க​ளுக்கு ரூ.​ 9
ஆயி​ரம்,​​ நடு​நி​லைப் பள்​ளி​க​ளுக்கு ரூ.​ 8 ஆயி​ரம்,​​ தொடக்​கப்
பள்​ளி​க​ளுக்கு ரூ.​ 5 ஆயி​ரம்,​​ கிரா​மத் தொடக்​கப்​பள்​ளிக்கு
ரூ.3,500 எனக் கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்டு
அறி​விக்​கப்​பட்​டள்ளது.​..”
அரசு கலர் டிவி கொடுத்தபோது கூட மக்கள் இத்தனை மகிழ்ச்சி அடைந்திருக்க
மாட்டார்கள். அந்த அளவு பெற்றோரை நிம்மதிப் பெருமூச்சுவிடவைத்துள்ளது இந்த
அறிவிப்பு.
ஆனால் இந்த கட்டணங்களை வழக்கம்போலவே ஏற்க மறுத்து நீதிமன்றத்துக்குப்
போனார்கள், தன்னிச்சையாக சுரண்டிக் கொழுத்த தனியார் பள்ளி நிர்வாகிகள்.
தீர விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று, அந்த மனுக்களை தள்ளுபடி செய்து,
தமிழக அரசின் கட்டண விகிதம் சரியானதுதான் என்று தீர்ப்பளித்தனர். இது
மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
ஆனால் இந்த நேரத்தில்தான் தாங்கள் எப்பேர்ப்பட்ட அயோக்கியர்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளனர் தனியார் பள்ளி தாளாளர்கள்.
இனி நீதிமன்றத்தை நம்பப்போவதில்லையாம்… அரசியல் ரீதியாக இந்தப் பிரச்சினையைச் சந்திப்பார்களாம்.
அதெப்படி அரசியல் ரீதியாகச் சந்திப்பார்கள்? இதோ தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் ஒரு பகுதி:
“எங்கள் அமைப்பில் உறுப்பினராக உள்ள 11 ஆயிரம் தனியார் பள்ளிகளில்
குறைந்தபட்சம் 5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களின்
குடும்பம் என கணக்கிட்டால் கிட்டத்தட்ட 50 லட்சம் ஓட்டுக்கள் தேறும்.
சட்டசபை தேர்தலில் எந்த கட்சி எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற
தேர்தல் வாக்குறுதி அளிக்க முன் வருகிறதோ அந்த கட்சிக்குதான் இந்த
ஓட்டுகள் என முடிவெடுத்துள்ளோம். தனியார் பள்ளிகள் தங்கள் இஷ்டப்படி
செயல்பட்டுக் கொள்ள அனுமதி தர வேண்டும். அரசு தலையிடக் கூடாது என்பதே
எங்களின் ஒட்டு மொத்த கோரிக்கை.
முதல்வர் கருணாநிதிக்கு எங்கள் நிலைமை இப்போது நன்கு புரியும். அவர் இப்போது உதவி செய்வார் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்….”
-போலிச் சாமியார்கள் கூட கிட்டே நெருங்க முடியாது. அத்தனை அயோக்கியத்தனமாக கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறார்கள் இந்தக் கயவர்கள்.
நாங்கள் கல்விச்சேவை செய்கிறோம் என்று கூறிக் கொண்டுதான் இவர்கள்
பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் ஆரம்பித்த பிறகுதான் தங்கள்
வியாபார முகத்தைக் காட்டுகிறார்கள்.
இப்போது கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதே, இந்​தப் பள்ளி​கள் கொடுத்த
வரவு,​​ செலவு, எதிர்கால தேவை போன்ற கணக்​கீடு​க​ளின்
அடிப்​ப​டை​யில்​தான்.​ ஆனால் அதை இப்போது ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.
காரணம் ரொம்ப சிம்பிள்… பல்​வேறு தலைப்​பு​க​ளின் கீழ் அடிக்கும் மறைமுகக்
கொள்ளை இதனால் பாதிக்கப்பட்டு விட்டது என்பதே.
பிரி கேஜிக்கும் எல்கேஜிக்கும் கூட கம்ப்யூட்டர் கட்டணம், நூலகக்
கட்டணம், ஸ்போர்ட்ஸ் கட்டணம், நீச்சல் கட்டணம் என தினுசுதினுசாகக்
கொள்ளையடித்ததை இனி தொடர முடியாதே என்ற ஆத்திரத்தில், இப்போது தேர்தல்
அரசியலைக் கையிலெடுத்துள்ளன இந்த அறிவிலிகள்.
கல்வி என்பது வாழ்க்கையின் அடிப்படை ஆதாரங்களுள் ஒன்று. அதில் அரசின்
கட்டுப்பாடுகள் இருந்தே தீர வேண்டும். இப்போதுதான் அரசு சரியான முடிவையும்
எடுத்துள்ளது.
இதற்கெல்லாம் தங்களால் கட்டுப்பட முடியாது எனக் கருதினால்,​​ தங்​கள் பள்​ளி​களை அர​சிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்​கிக்​கொள்வதுதானே…
அதை விட்டுவிட்டு தேர்தலில் பார்த்துக் கொள்கிறோம் என்று மிரட்டும்
அளவுக்கு இந்த கல்வி நிறுவன முதலாளிகள் சவால் விடுகிறார்கள் என்றால்,
இந்தப் பள்ளிகளை கட்டாயமாக அவர்களிடமிருந்து பறித்து அரசின்
வசப்படுத்துவதுதான் ஒரே வழி. அரசு இந்த விஷயத்தில் துணிந்து களமிறங்கலாம்.
நீதிமன்றத்தின் உத்தரவும் அதற்கு ஏதுவாகவே உள்ளது.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நியாயமான கட்டணங்களை, அந்தந்தப் பள்ளிகளின்
முன்பு பெரிதாக அச்சிட்டு ஒட்டச் செய்வதோடு, இவை சரியாக
அமல்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆராய தனி குழு ஒன்றையும் அமைக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு நமது பாராட்டுதல்களைத் தெரிவித்துக்
கொள்கிறோம். குறிப்பாக துணை முதல்வர் ஸ்டாலினின் முனைப்பும் பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அதில் செய்த உதவிகளும் மெச்சத்
தக்கவை.
கல்வித் துறையில் நடந்த பெரும் கொள்ளைக்கு தடைபோட்டிருக்கும் அரசு,
தனியார் பள்ளி முதலாளிகள் சிலரின் வெத்து வேட்டு அரசியல்
மிரட்டல்களுக்குப் பணியாமல், அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினால்
நிஜமாகவே தலைமுறை தாண்டியும் நன்றி சொல்வார்கள் தமிழ் மக்கள்!
rose
rose
பண்பாளர்
பண்பாளர்

Posts : 95
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வடக்கில் இந்திய பாணியில் வாக்குக் கொள்ளைக்கு முயற்சி
» கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் நீதிபதி ரவிராஜபாண்டியன் ராஜிநாமா ?
» கல்விக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவரை இரு வாரங்களுக்குள் நியமிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்
» பார்வதியம்மாள் இலங்கை சென்றது அரசியல் பிழைப்புவாதிகளுக்கு சரியான சவுக்கடி – சீமான்
» மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்: ஜெ., ஆவேசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum